Jump to content

மாபெரும் மன்னனாக திகழ்ந்த ராவணன்... மண்டோதரியின் துரோகத்தால் ராமரிடம் வீழ்ந்தான்! -


Recommended Posts

மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். -

மாபெரும் மன்னன்

அதில், ராவணன் இலங்கையின் பெரும்பகுதியை ஆண்ட மாபெரும் மன்னனாக திகழ்ந்துள்ளான். மிகச் சிறந்த எழுத்தாளனாக திழ்ந்துள்ளான். நிறையநூல்களை எழுதியுள்ளான். தனது நாட்டில் பல சுரங்கப் பாதைகளை அமைத்து போர்க் கலையிலும் மன்னனாக திகழ்ந்தவன் ராவணன்.

பிறன் மனைவியைக் கவர்ந்ததால் வீழ்ந்தான்

ஆனால் ராமரின் மனைவி சீதையைக் கவர்ந்து வந்து சிறை வைத்ததால் வீழ்ந்தான் ராவணன்.

மண்டோதரி செய்த துரோகம்

ராமருக்கு எதிரான போரிலும் கூட ராவணனே வென்றிருப்பான். காரணம், போரில் அவனைத் தோற்கடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் மனைவி மண்டோதரியும், தம்பி விபீஷணனும் சேர்ந்து செய்த துரோகத்தால்தான் ராவணன் தோற்க நேரிட்டது.

போர்த் தந்திரங்களை போட்டுக் கொடுத்தனர்

மண்டோதரியும், விபீஷணனும் ராமர் பக்கம் சாய்ந்து, ராவணனின் போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததால்தான் ராவணன் தோற்க நேரிட்டது.

-

விபீஷணனை மணந்த மண்டோதரி

மண்டோதரி, விபீஷணனின் சதியால், ராவணன் வீழ்த்தப்பட்டான். அதன் பின்னர் ராமரின் அறிவுரைப்படி மண்டோதரியை, விபீஷணன் மணந்தான் என்று ராமாயனம் கூறுகிறது.

மிகப் பெரிய சாம்ராஜ்யம்

ராவணன் வைத்திருந்த சாம்ராஜ்யம் மிகப் பெரியது. இன்றைய நுவரேலியா, பதுல்லா, பொலனருவா, அனுராதபுரா, கண்டி, மொனரகுலா, மாத்தளை, சிலாவ் ஆகிய பிரதேசங்களையும் ராவணன் கட்டியாண்டான்.

-

ராவணன் மிகுந்த நாகரீகம் மிகுந்தவனாகவும் இருந்தான். சிறந்த கலாச்சாரத்தை உடையதாக தனது நாட்டை வைத்திருந்தான். ஆனால் ராமரின் படையெடுப்பால் அந்த நாகரீகமும், கலாச்சாரமும் அழிந்து போனதாக தனது நூலில் கூறுகிறார் உபயசேகரா. -

சிகிரியாவில் வாசம் செய்த ராவணன்

கொழும்பிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிகிரியாவில்தான் ராவணன் வசித்து வந்துள்ளான். மிகவும் புத்திசாலித்தனமும், அறிவும் மிக்க யக்ஷா பழங்குடியைச் சேர்ந்தவன் ராவணன்.

ராவணன் பெயரில் ஊர்கள்

ராவணன் மீதுள்ள அன்பின் காரணமாக இலங்கையின் பல ஊர்களுக்கு அவனது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ராவண எல்லா, ராவணா கோட்டை, ராவணா கண்டா, ராவணா தேஷ் என அவை பல இடங்களில் இருந்தன.

ராவணன் பெயரில் ஊர்கள்

ராவணன் மீதுள்ள அன்பின் காரணமாக இலங்கையின் பல ஊர்களுக்கு அவனது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ராவண எல்லா, ராவணா கோட்டை, ராவணா கண்டா, ராவணா தேஷ் என அவை பல இடங்களில் இருந்தன.

-

அனுராதபுரத்தில் தனது பெற்றோர் நினைவாக கோவில் கட்டி வழிபட்டவன் ராவணன். இந்தக் கோவிலை போர்ச்சுகீசியர்கள் படையெடுப்பின்போது இடித்துத் தள்ளி விட்டனர். -

இதே நூலில் ராமரையும் புகழ்ந்துள்ளார் உபயசேகரா. அதில், ராமர் மரியாதைத்குரியவராக, கண்ணியம் மிக்கவராக இருந்துள்ளார். ராவணன் மாதிரி படை பலத்தைக் கொண்டவராக அப்போது ராமர் இல்லை. மேலும் பெரும் பணக்காரராகவும் அவர் அப்போது இல்லை. உண்மையே வெல்லும் என்ற மிகப் பெரிய நம்பிக்கை மட்டுமே அவரிடம் இருந்தது. இதுவே அவரது வெற்றிக்குக் காரணம். -

ஆனால் சகலகலாவல்லவன் ராவணன்

ஆனால் மறுபக்கம் மாபெரும் வீரனாக, மிகப் பெரிய படைகளுடன் கூடியவனாக, செல்வம், செல்வாக்கு மிக்கவனாக ராவணன் திகழ்ந்துள்ளான். சகல திறமைகளையும் பெற்ற வல்லவனாக திகழ்ந்தான் ராவணன்.

-

மாவீரன்

வீரர்களில் இவன் மாவீரனாக திகழ்ந்தான். ஜோதிடத்தில் நிபுணனாக இருந்தான். அறிவாளிகளில் மேம்பட்ட அறிவாளியாக திகழ்ந்தான். மருத்துவம் தெரிந்த வித்தகனும் கூட. மாபெரும் இசைக் கலைஞனாகவும் திகழ்ந்தவன் ராவணன்.

-

ராவணனின் கொடியே இலங்கையின் முதல் கொடி

ராவணன் வைத்திருந்த கொடிதான் இலங்கையின் முதல் கொடி என்பது உபயசேகராவின் கூற்று.

சிறந்த கட்டடக் கலை

ராவணன் காலத்தில் கட்டடக் கலை சிறந்து விளங்கியது. மரத்தால் ஆன பல கட்டடங்களை அக்காலத்தில் எழுப்பினார்களாம். எங்கு பார்த்தாலும் அப்போது மர வீடுகள்தானாம். இதனால்தான் ஹனுமனால் எளிதாக இலங்கையை தீவைத்து எரிக்க முடிந்ததாம்.

போரில் சாகவில்லை ராவணன்

ராமருடன் நடந்த போரின்போது ராவணன் போரில் உயிர் துறக்கவில்லை. மாறாக, விஷம் தடவிய அம்பு அவன் மீது பாய்ந்தால் அவன் மயக்கமடைந்தான்.

ராவணனின் படையில் இருந்த வீரர்கள்தான் உலகிலேயே தலைக் கவசம் பொருத்தி போரில் ஈடுபட்ட முதல் வீரர்கள் ஆவர்.

ராவணன் காலத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு கொடூரமான தண்டனை தரப்பட்டது. அதாவது உயிரோடு வைத்துப் புதைத்து விடுவார்களாம்.

அதேபோல ராவணன் படையினர் பயன்படுத்திய வெடிகுண்டுகளில் நல்ல பாம்பின் விஷம் கலந்திருக்குமாம். -

Thatstamil

Link to comment
Share on other sites

எனது அறிவுக்கு எட்டியவகையில் மண்டோதரி ஓர் சிறந்தபதிவிரதை . இராவணன் செய்த தவறுகளை கண்டித்திருக்கின்றாள் . விபீசணன் சிறந்த நீதிமான் . நீதிசாஸ்திரங்களை கற்று கைதேர்ந்தவன் .அவனும் இரவணனது செய்கையை கண்டித்திருக்கின்றான் . ஏன் கும்பகர்ணனும் இதில் அடக்கமே . ஆயினும் கும்பகர்ணன் அண்ணன் மீதுள்ள பாசத்தினால் போரிட்டு வீரமரணம் அடைகின்றான் . தற்ஸ்ரமில் சொல்வதைவிட்டு இதற்கு வரலாற்றுரீதியான ஆவணங்களைத் தந்தால் நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த  இராமாயணத்தில் இப்படிக் கூறி இருக்கு சுண்டல்

Link to comment
Share on other sites

இராமாயணத்தின் உண்மைத்தன்மைக்கு நிறுவக்கூடிய அறிவியல் சான்று எதுவும் இல்லை.. அதனால் கோம்சின் கேள்விக்கு விடை கிடையாது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் சைவன். சிவனை வழிபட்டவன். நாம் தமிழர்கள்.. சைவர்கள். சிந்துவெளி சிவ வழிபாட்டின் முதலிடம் என்று சொல்லப்படுகிறது. அங்கு ஆதித் தமிழ் புழக்கத்தில் இருந்ததாக அண்மைய அகழ்வாராய்ச்சிகள் கூட கூறி நிற்கின்றன. அது தமிழகம் வரை நீண்டிருந்தது. தமிழகமும்.. இன்றைய இலங்கைத் தீவும் பூமித்தகடுகளின் நகர்வினால் பிரிந்து தனித்தீவுகளானாலும்.. தமிழர்கள் இங்கும் அங்கும் வாழ்ந்திருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

 

இராவணன்.. தமிழ் மன்னனாக இருந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி அவன் இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்டாலும் திருமலையை அண்மித்தே தனது தலைநகரை வைத்திருந்திருக்கிறான்.

 

இராமன்.. வைஸ்ணவ வழியில் சூரிய குலத்தில் வந்தவன் என்று சொல்லப்பட்டாலும் அவன் இன்றைய பாகுபாட்டின் கீழ் ஓர் ஆரியன். அவன் நில விஸ்தரிப்புக்காக தமிழ் மன்னனான இராவணனை அதுவும் சிவ பக்தனை தேடி அழிக்க முற்பட்டிருக்கிறான். இதன் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு புனை கதையே சீதையின் கடத்தல்..!

 

சீதையின் தீக்குளிப்பு என்பது அவளின் கற்புக்கருதியல்ல. அவள் ஒரு சிவ பக்தனிடம் வசப்பட்டிருந்தவள் என்ற வகையில் அவள் மீது தீர்க்கப்பட்ட மதவெறி.

 

இராவணன்.. சைவ நீதி வழி நின்ற ஒருவன். அவன் சிறந்த தமிழ் மன்னன். அவனின் சிறப்பை சீரழிக்க.. வான்மீகி என்ற ஆரியனும்.. அதன் பின்னர் கம்பனும்.. நம்மேல் திணித்தவையே இராமாயணத்தின் மிச்ச இட்டுக்கட்டுகைகள். இப்போ சிங்களவர்கள் இலங்கைத் தீவின் பூர்வ குடிகள் தாம் என்று சொல்ல இராவணனுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர்.

 

ஆனாலும் இராமாயணம்... அது கொண்டுள்ள.. புவியியல் சமூகவியல் உண்மைகளை வடிக்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு இதிகாசப்படைப்பு என்பதில் ஐயமில்லை. இதற்குள் நிறைய தமிழர் வரலாறு உருமாற்றி எழுதப்பட்டுள்ளது..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை எங்கள் தேசிய தலைவரையும் இந்திய ஹிந்திய பயங்கரவாதிகளின் கால்வருட.. பயங்கரவாதின்னு சொல்லி எம்மவர்கள் புறக்கணிப்பார்கள். மன்மோகன் சிங்கை வழிபடுவார்கள்.

 

ஆனாலும்.. தேசிய தலைவரை வேறு எங்காவது நல்ல வீரனுன்னு புகழ்ந்து போற்றுவார்கள்.

 

தாய்லாந்தில் இராவணனுக்கு கோவில் கட்டி மக்கள் வழிபடுவது போல.!

 

Phu_Yak.jpg

 

In the age of the Ramayana epic written by Valmiki, Ravana was the most powerful Tamil King of Lankapuri.

 

http://en.wikipedia.org/wiki/Ravana

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

COLLECTIE_TROPENMUSEUM_Reli%C3%ABf_op_de

 

Queen Mandodari and the women of Lanka mourning the death of Ravana. Bas-relief of 9th century Prambanan temple, Java, Indonesia

 

Ravana was married to Mandodari, the daughter of the celestial architect Maya, Dhanyamalini, and a third wife. He had seven sons from his three wives:

 

இராவாணனின் 3வது மனைவியான மண்டோதரி.. ஆட்சி அதிகாரம் மீது ஆசை கொண்டு.. ஆரிய இராமனுடனான போரில்.. தமிழ் மன்னனான இராவணனை காட்டிக் கொடுத்திருக்கலாம். :icon_idea:

Link to comment
Share on other sites

அதான் சிங்கள எழுத்தாளர் எழுதிய கிங் ஒப் லங்கா நூலை வாங்கி படிச்சா தெரிஞ்சுக்கலாம் கோம்ஸ் அண்ணா ...

மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசாவில் இருந்து இலங்கைக்கு வந்த வந்தேறு குடிகளுக்கு, ஆரியத்தின் தேவை, முள்ளி வாய்க்காலோடு முடிவுக்கு வந்து விட்டது!

 

அதன் அடுத்த தேவை, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு அடையாளத் தேடலாகும்!

 

இங்கே தான் சிவபக்தனான ராவணன் தேவைப் படுகின்றான் !

 

இராவணனில் தொங்குவதன் மூலம், தாங்கள் இலங்கையின் மூத்த குடிகள் என்று நிறுவ முடிவதுடன், ஒரிசாவில் இருந்து துரத்தப்பட்டு வந்தவர்கள் என்ற அடையாளமும் மறக்கப்படலாம்!

 

மண்டோதரியின் மீது சேறு பூசுவதற்கான காரணம், மண்டோதரியின் ஆரிய மூலமாக இருக்கலாம்!

 

அது தவிரவும், நாங்களும் தமிழரும் ஒன்றுக்குள் ஒன்றே என உலகத்துக்குக் காட்டுவதற்காகவும், இராவணனை முன்னிலைப்படுத்தலாம்!

 

காலப்போக்கில், சிங்களத்தின் 'இராவண முன்னிலைப்படுத்தலின்' நோக்கம் தெரியவரும்! :o   

Link to comment
Share on other sites

மகாவம்சத்தையே மாற்றி எழுதி சரித்திரம் படைக்கும் சிங்களம், இந்துக்களின் சரித்திரத்தையும் மாற்றி எழுத முனைகிறதா? இன்னும் சில காலம் இவர்கள் ஆட்சி நிலைக்குமானானால், அனாகரீக தர்மபால சொல்ல புத்தர்பிரான் இராமாயணம் எழுதினார் என்பதாக பிள்ளைகள் பாடம் படிக்கும்.

 

கம்பராமாயணம்/யுத்த காண்டம்/மண்டோதரி புலம்புறு படலம்

 

உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கிறேன் எனப் புலம்பினாள் மண்டோதரி கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவதில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன் எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்களைத் துறந்து, துயரத்தை ஏற்றாள்; கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி! ராவணனின் மனைவி என்பதால் மாற்றுக் குறையவில்லை அவள்!

 

ஏங்கி எழுந்து, அவன் பொன் தழைத்த பொரு அரு மார்பினைத் தன் தழைக் கைகளால் தழுவி, தனி நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத் தான மங்கையரும், தவப் பாலவர், ஆன மங்கையரும், அருங் கற்புடை மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30

 

இராவணனையும் மண்டோ தரியையும் முறைப்படி ஈமத்தில் ஏற்றி, உரிய கடன்களை வீடணன் செய்தல்

பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை, வன்னி கூவி, வரன்முறையால், மறை சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து, இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31

கடன்கள் செய்து முடித்து, கணவனோடு உடைந்து போன மயன் மகளோடு உடன் அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32

மற்றையோர்க்கும் உரிய கடன்களை வீடணன் இயற்றி, இராமனை வந்தடைதல்

 

http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போர்த் தந்திரங்களை போட்டுக் கொடுத்தனர் மண்டோதரியும், விபீஷணனும் ராமர் பக்கம் சாய்ந்து, ராவணனின் போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததால்தான் ராவணன் தோற்க நேரிட்டது
மற்றவன் காட்டிக்கொடுத்துதான் சிறந்த வீரன்மார் எல்லாம் தோல்வியை தழுவினார்கள் என சொல்வார்கள்...காட்டிகோடுப்பவனையையும் வெற்றி கொள்பவன் தான் உண்மையான் போராளி...:D
Link to comment
Share on other sites

இராவணனின் காலத்திலேயே...சகோதர யுத்தம்....தமிழன் காலை தமிழன் வாரிவிடல்  :)
எங்களுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கென்று இதுவே சாட்சி...

Link to comment
Share on other sites

அதான் சிங்கள எழுத்தாளர் எழுதிய கிங் ஒப் லங்கா நூலை வாங்கி படிச்சா தெரிஞ்சுக்கலாம் கோம்ஸ் அண்ணா ...

மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். -

 

 

புத்தகத்தை வாங்கி கோவுக்கு அநுப்பிவிடு பிள்ளை

Link to comment
Share on other sites

மகாவம்சத்தையே மாற்றி எழுதி சரித்திரம் படைக்கும் சிங்களம், இந்துக்களின் சரித்திரத்தையும் மாற்றி எழுத முனைகிறதா? இன்னும் சில காலம் இவர்கள் ஆட்சி நிலைக்குமானானால், அனாகரீக தர்மபால சொல்ல புத்தர்பிரான் இராமாயணம் எழுதினார் என்பதாக பிள்ளைகள் பாடம் படிக்கும்.

 

கம்பராமாயணம்/யுத்த காண்டம்/மண்டோதரி புலம்புறு படலம்

 

உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கிறேன் எனப் புலம்பினாள் மண்டோதரி கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவதில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன் எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்களைத் துறந்து, துயரத்தை ஏற்றாள்; கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி! ராவணனின் மனைவி என்பதால் மாற்றுக் குறையவில்லை அவள்!

 

ஏங்கி எழுந்து, அவன் பொன் தழைத்த பொரு அரு மார்பினைத் தன் தழைக் கைகளால் தழுவி, தனி நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத் தான மங்கையரும், தவப் பாலவர், ஆன மங்கையரும், அருங் கற்புடை மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30

 

இராவணனையும் மண்டோ தரியையும் முறைப்படி ஈமத்தில் ஏற்றி, உரிய கடன்களை வீடணன் செய்தல்

பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை, வன்னி கூவி, வரன்முறையால், மறை சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து, இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31

கடன்கள் செய்து முடித்து, கணவனோடு உடைந்து போன மயன் மகளோடு உடன் அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32

மற்றையோர்க்கும் உரிய கடன்களை வீடணன் இயற்றி, இராமனை வந்தடைதல்

 

http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

 

இது வடநாட்டில் இருந்த ஒரு கர்ண பரம்பரை கதை. வால்மீகி காவியமாக படைத்த பின்ன்ர் அருமையான கர்ணபரம்பரை கதை வலுவிழந்து அழிந்து போய்விட்டது. வால்மீகிக்கு இன்றைய தேவையை உணர முடியாது. அவர் மீது குற்றம் இல்லை. ஆனால் அத்தகைய ஆழுமையான காவியம் ஒன்று முழுவதாக உண்மைகள் கலந்திருந்த்திருக்க கூடிய கர்ண பரம்பரை கதையை அழித்துவிட்டது.  மிச்சம் எதிலும்(கம்ப ராமாயணம், துளசிதாசர் இராமாயணம்) பிரயோசனம் கிடையாது.

 

இராமன் காலத்தில் குதிரைகள் கூட இருக்கவில்லை. (கதையில் வரும் அஸ்வமேத யாகம் இட்டுக்கட்டு)இலங்கையில் இருந்து அயோத்தி போய் பெண்ணை ஒருவன் திருடினால், அவன் முளைப் பிசகில்லாத அரசனாக இருந்திருக்க முடியாது. அயோத்தி போய் போர் தொடுத்து சீதையை கொண்டு வந்திருந்தான் என்றால் அதில் கொஞ்சம் உண்மை இருக்கலாம். சூர்ப்பனகை அலையக்க காடிலை என்று அயோத்தி போனவள் என்பது வால்மீகியின் நல்ல கற்பனை மட்டுமே. சீதை ஒருக்காலும் இலனகையில் இருக்கவில்லையாயின்(சிறை அல்ல -அந்த நேரம் ராவணன் தான் ஆண்டான்) சீதா எலிய என்ற பெயர் பொருள் இல்லாதது. சீதை போரின் முன்னால் இருந்தவளாகத்தான் இருக்கலாம். சீதையால் இலங்கை அழிந்தாயின் அந்த பெயரை போரின் பின்னர் யாரும் வைக்கமாட்டர்கள்.  போர் வென்றவுடன் வைக்கப்பட்ட பெயராயின் அங்கு இராமரின் பெயரில் அதையும் விட பெரிய நகரம் இருந்திருக்க வேண்டும்.

 

கிந்திய கூட்டம் எதையாவது தெளியத்தொடங்கினால் புதை பொருள் ஆராச்சிகளை ஒழுங்காக செய்யத் தொடங்கும். அதன் பின்னர் ஏதாவது ஆதாரம் வெளிவரும்.  குறைந்த பட்சம் ராமன் ஏன் வந்தான் என்பது கண்டு பிடிக்க முடியும்.

 

Link to comment
Share on other sites

அதான் சிங்கள எழுத்தாளர் எழுதிய கிங் ஒப் லங்கா நூலை வாங்கி படிச்சா தெரிஞ்சுக்கலாம் கோம்ஸ் அண்ணா ... மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். -

 

எனது கேள்வியானது இதற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது உள்ளனவா என்பதுவே. வெறும் ஊகங்களிலும் , புனைவுகளிலும் புனையப்பட்ட  ஓர்  இதிகாசத்தில் இப்படி இப்படியெல்லாம் நடந்தது என்று எழுதவேண்டிய தேவை ஏன் மிராண்டா உபயசேகராவுக்கு இப்பொழுது ஏற்பட்டது ????? சரி ..... அவர்தான் எழுதினார் . இதை வெளியிட்ட இணயத்தின் பொறுப்பின்மையை என்னவென்று சொல்ல ? நிகழ்கால அரசியலையும் , இதிகாசம் என்ற போர்வையில் ஒரு வலாற்றுப் பிறள்வையுமே இந்த இணைப்பிலே என்னால் காணக்கூடியதாக இருக்கின்றது . இது ஒருவித முதுகுசொறிதலே .   இப்படியான ஓர் வரலாற்றுத் தவறையா நாம் வருங்காலத்தவருக்கு விடப்போகின்றோம் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் என வரும்போது தனது எழுத்துக்கள் எப்படியும் சாதாரண  மக்களுடைய

மனதில் இடம்பிடிக்க வேண்டும் இது தான் அவர்களுடைய நிலைப்பாடு.

 

இதற்காக அவர்கள் மக்களுக்கு அவ்வப்போது எது பிடிக்கும் என உளவறிந்து தான் 

தங்கள் படைப்புக்களைத் தருகின்றார்கள்.

உண்மை பொய் என்பதற்கப்பால் வாசகர்களைக் கவர்வதிலும்

அவர்களை உள்வாங்கி படைப்புக்களுடன் பயணிக்கச் செய்வதும்  எழுத்தாளர்களின் திறமை.

 

அந்தக்காலத்தில் வால்மீகி இந்தக்காலத்தில் உபயசேகர :D    

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.