Jump to content

தலைவனுன்னா... இப்படி இருடா..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

969986_456307734464795_275349760_n.jpg

 

தலைவனுன்னா…

மக்கள் விட்டு

எட்ட நின்று..

குளிரூட்டி வாகனத்தில்

தான் மகிழ்ந்திருந்து..

வெயில் காய்ந்த

புழுதி குளித்த

வியர்வை வழிந்தோடும்

மக்கள் முன்..

கசங்காத வெள்ளை வேட்டி

மேடை

தரிசனம் தந்து..

வலு விழந்த

வாழ்விழந்த சொந்தங்கள் முன்..

நாலு வார்த்தை

நயவஞ்சகமாய் உதிர்த்து…

எதிரி தாழ் பணிந்து

சூழ்ச்சி மகுடம் சூடி…

கேட்ட கேள்வி

நேரிடைப் பதில் இன்றி

மேவிப் பேசி..

வாய்கிழிய

தத்துவம் பேசி…

புத்திசீவித்தனம் என்று

தலைக்கன

ரவுடீசம் செய்து

நடப்பவனல்ல..!

 

தானைக்கும்

தலைவன்…

தமிழர் தரணிக்கும் பரணிக்கும்

சொந்தக்காரன்

தமிழர் தளபதி…

தகுதி விகுதி

என்றின்றி…

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்விற்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி நெடுக்கு...........

Link to comment
Share on other sites

எதோ ஒரு உணர்வு படத்தை பார்க்கும்போது எழுத  மறுக்குது.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனாக உருவாகியவர்களுக்கும்

உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கும் இடையில் 

நிறைய வித்தியாசம் உண்டு.

 

எவ்வளவு படித்தாலும் மக்களோடு மக்களாக இருந்து 

போராடுபவன் தான்  தலைவன்

 

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே உங்கள் தாழ்மையான கருத்துக்களுக்கு..!

Link to comment
Share on other sites

969986_456307734464795_275349760_n.jpg

 

 

தானைக்கும்

தலைவன்…

தமிழர் தரணிக்கும் பரணிக்கும்

சொந்தக்காரன்

தமிழர் தளபதி…

தகுதி விகுதி

என்றின்றி…

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

 

 

அழகிய வரிகள், நன்றி கவிதைக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அலை அக்கா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வாழும் காலத்தில், எம்முடன் வாழ்ந்த ஒரு தலைவன். வரலாற்றுக்காலத்திலும் இனிவரும் காலத்திலும் இவர்போல் இனியொருதர் இனிப்பிறப்பார் இல்லையென, எதிரிகளாலும் சொல்லப்பட்ட தலைவன். பொத்திப்பாதுகாக்கக் தவறிவிட்டோம். களமாடி, கடலாடி தனது உறவதையும் களப்பலியாக்கினான். இனியொருகாலமும், எம்மினமே களப்பலியாகிடிலும், இயற்கை எமக்கு ஈகாது இத்தலைவனை.

 

கனத்த நெஞ்சத்துடன்,கவிதைக்கு நன்றி.

 

உலகத்தமிழினத்துடன் புலம்பெயர் தமிழினமும் செய்ததவறால், வாராதுவந்த மாமணியை நந்திக்கடல் மடியில் விட்டுவந்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

969986_456307734464795_275349760_n.jpg

 

 

 

தானைக்கும்

தலைவன்…

தமிழர் தரணிக்கும் பரணிக்கும்

சொந்தக்காரன்

தமிழர் தளபதி…

தகுதி விகுதி

என்றின்றி…

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

எதிரிகள் மட்டுமல்ல! துரோகிகளும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டிய உண்மை!...’ தலைவர்” என்ற சொல்லின் பொருளே!!! ‘எங்கள் அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

வராது வந்த வரலாறே எம்வாழ்நாளில் இனியொரு தகைமையுடைத் தலைவனைக் காண்போமா?

கனத்த நெஞ்சமுடன் வரிகளுக்கு நன்றி நெடுக்கவர்களே!

Link to comment
Share on other sites

மிகமிகச் சிறந்த தலைவன் கிடைத்தும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள

தமிழினம் தவறிவிட்டதோ எனத் தோன்றுகின்றது. :(

இப்படி ஒரு அருமையான தலைசிறந்த தலைவனை மீண்டும் பெறுவதற்கு தமிழினம் இன்னும் எத்தனை யுகங்கள் காத்திருக்கவேண்டி வருதோ தெரியவில்லை.

கவிதைக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.