Jump to content

சென்னை மெட்ரோ ரயில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

28cki9c.jpg

உங்கள்... கருத்துக்கும்,  கணிப்பீட்டுக்கும் நன்றி வன்னியன்.
மேலே உள்ள படத்தில், சீருடை அணீந்த  ஒரு ஆள்.... கையில் பொல்லுடன் ஏன்... போகின்றார் என அறிய ஆவலாக உள்ளது. :grin:

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ஏறக்குறைய 10 கி.மீ தூரம் இருக்கும்.. ஆனால் இந்த தூரத்தைக் கடக்க ரூ.40 என்பது அதிகமான கட்டணம்தான். மேலும் இந்த வழித்தடத்தில் ஈகாட்டுத்தாங்கல் தவிர்த்து மற்ற இடங்களெல்லாம் குடியிருப்பு பகுதிகள், அதிக அலுவலகங்கள் கிடையாது. ஆகவே வணிக முக்கியத்துவமோ, இணைப்பு வசதிகளோ தற்பொழுது இல்லாத நிலையில், உயர்தட்டு மக்களும் பயணம் செய்ய அதிக வாய்ப்பு இல்லைதானே..?

இரு வழித்தடங்களும் முற்றாக வேலை முடிந்து, முழுத்திட்டமும் அமல்படுத்தப்பட்ட பின்தான் மெட்ரோ இரயிலின் செல்வாக்கு வீச்சு பற்றி அளவிடமுடியும் சிறி.

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

28cki9c.jpg

உங்கள்... கருத்துக்கும்,  கணிப்பீட்டுக்கும் நன்றி வன்னியன்.
மேலே உள்ள படத்தில், சீருடை அணீந்த  ஒரு ஆள்.... கையில் பொல்லுடன் ஏன்... போகின்றார் என அறிய ஆவலாக உள்ளது. :grin:

பெரும்பாலும் வெளிநாடுகளில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள், மிகவும் பாதுகாப்பாக தானியங்கி கதவுகள் திறப்புகளோடு பயணிகள் நிற்கும் நடைமேடையிலிருந்து முற்றாக விலகியிருக்கும். இரயில் வந்து நின்றபின்புதான் நடைமேடை கதவுகளும், ரயில்பெட்டிகளின் கதவுகளும் ஒரு சேரத் திறக்கும்..

ஆனால் இந்தியாவில் மனித உயிர்கள் மிக மிக மலிவு.. நவீன பாதுகாப்பு வசதிகளை செயல்படுத்த அதிகம் காசும் தேவைதானே?


ஆகவே மலிவு மனித உயிர்கள், வேகமாக வந்தடையும் இரயிலினால் அடிபட்டு மாண்டுபோகமல் இருக்க, மிக மலிவான சம்பளத்தில் ஒரு மனித உயிரை நியமித்து, கையில் ஒரு பொல்லும், விசிலும் கொடுத்தாச்சுது..! :)

அவர் இரயில் வந்தடைவதற்கு முன்பாக நடைமேடையின் விளிம்பை நெருங்கும் மக்களை " ஏய்..! மஞ்சள் கோட்டை தாண்டாதே.."! என விசிலடித்து எச்சரிப்பார்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் வெளிநாடுகளில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள், மிகவும் பாதுகாப்பாக தானியங்கி கதவுகள் திறப்புகளோடு பயணிகள் நிற்கும் நடைமேடையிலிருந்து முற்றாக விலகியிருக்கும். இரயில் வந்து நின்றபின்புதான் நடைமேடை கதவுகளும், ரயில்பெட்டிகளின் கதவுகளும் ஒரு சேரத் திறக்கும்..

ஆனால் இந்தியாவில் மனித உயிர்கள் மிக மிக மலிவு.. நவீன பாதுகாப்பு வசதிகளை செயல்படுத்த அதிகம் காசும் தேவைதானே?


ஆகவே மலிவு மனித உயிர்கள், வேகமாக வந்தடையும் இரயிலினால் அடிபட்டு மாண்டுபோகமல் இருக்க, மிக மலிவான சம்பளத்தில் ஒரு மனித உயிரை நியமித்து, கையில் ஒரு பொல்லும், விசிலும் கொடுத்தாச்சுது..! :)

அவர் இரயில் வந்தடைவதற்கு முன்பாக நடைமேடையின் விளிம்பை நெருங்கும் மக்களை " ஏய்..! மஞ்சள் கோட்டை தாண்டாதே.."! என விசிலடித்து எச்சரிப்பார்..:grin:

முன்பே.... புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் வாயால்.... கேட்க வேண்டும் போல் இருந்ததால் தான், கேட்டேன்  வன்னியன்.:grin:
(இன்று, வெள்ளிக் கிழமை  அல்லவா.... விபரமாய் கேட்டால் தான்... மண்டையில் ஏறும்.Smiley)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பே.... புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் வாயால்.... கேட்க வேண்டும் போல் இருந்ததால் தான், கேட்டேன்  வன்னியன்.:grin:
(இன்று, வெள்ளிக் கிழமை  அல்லவா.... விபரமாய் கேட்டால் தான்... மண்டையில் ஏறும்.Smiley)

ஐயா சாமி, உங்கள் வெள்ளிக்கிழமை 'சீவலு'க்கு நான்தானா கிடைத்தேன்..? :love::shocked::)

இதுக்கு மெட்ரோ ரயிலில் கூடுதலாக ரெண்டுதரம் பயணம் செய்திருக்கலாம்.. மனசு 'கூலாக' இருந்திருக்கும்! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

STOPPED ON TRACK - Borewells bring metro work to halt

RUSSIAN CONTRACTOR QUITS AS CHANGE IN DEPTH OF TUNNEL ON SAIDAPET-DMS METRO LINE PUSHES UP COSTS
 
When tunneling machines of Mosmet rostroy started whirring beneath Anna Salai in 2012, the Russian company ,a pioneer in making tunnels, failed to anticipate the complications it would hit. A few unaudited bore wells turned out to be the nemesis of the Gammon-Mosmetrostroy joint venture.

They were to build tunnels and stations between Saidapet and Government Estate along Anna Salai.However, after tunneling began, Chennai Metro Rail Ltd wanted Mosmetrostroy to dig 3m deeper than the earlier alignment of 10m to avoid bore wells. This unexpected change brought the tunneling to a standstill when the machines hit hard rock. This pushed up costs, damaged the machines and delayed work.

“The move to change the depth of the tunnel came after officials thought that they should not take any risk by allowing the tunnel-boring machine to hit bore wells. So they wanted the tunnel to be dug below the bore wells,“ a Gammon-Mosmetrostroy official said.

Tunnel-boring machines use air pressure to hold up the earth while drilling. If it hits a bore well, the pressure will shoot out to the surface and cause a collapse. Metro rail officials had a tough time identifying bore wells because many residents either did not reveal them or were not aware of their presence. Metro officials wanted the contractor to maintain a more or less uniform depth of 10m to 12m from Saidapet to DMS. The com pany had invested in the tunnel-boring machine and other equipment based on the soil condition data given to it by metro rail officials.

“We realized that it would add around `75 crore to the total cost of the project. CMRL agreed and the company invested the money needed and built the tunnels hoping that it could be recovered later. However, CMRL continued to pay only the monthly amount that needed to be sanctioned as per the contract and did not pay the extra cost incurred,“ the Gammon-Mosmetrostroy official said.

“The trouble started in December 2013, till then everything was going per schedule. It took around 10 days to restart the machine after the cutter head was changed. In addition to the cost escalation of around ` 75 crore, CMRL owes us `100 crore. Subcontractors who supplied small machinery and other materials had to be paid and the Russians received threats. This forced them to leave the city on April 30,“ they added.

From January 2014 to February 2015, Mosmetrostroy has sent several letters to CMRL asking for the money owed. “They told us in February that they cannot pay and denied that they changed the alignment of the tunnel“ he said.

A senior metro rail official said Mosmetrostroy abandoned work it was supposed to complete according to the contract. “It may not be possible to pay the cost demanded,“ he added.

16_07_2015_002_018_009.jpg

 

Source: Times of India

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கட்டுப்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருக்குமானால் மெட்ரோ சுரங்கப் பாதை நெடுகிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டு விவரங்களைத் திரட்டியிருக்கலாமே.. சும்மா ஒரு மூணு மீட்டர் கீழால‌ போங்க என்று சொல்லுறதுக்கு இது என்ன ஆட்டோ ஓட்டும் வேலையா? :grin:

இந்த நடவடிக்கை போதவில்லை என்றால் சுரங்கம் நகரும் இடங்களுக்கு மேலால் உள்ள மக்களை மட்டும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறச் செய்திருக்கலாம். அவர்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருக்கலாம். இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு வந்திருக்காது. :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருக்குமானால் மெட்ரோ சுரங்கப் பாதை நெடுகிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டு விவரங்களைத் திரட்டியிருக்கலாமே.. சும்மா ஒரு மூணு மீட்டர் கீழால‌ போங்க என்று சொல்லுறதுக்கு இது என்ன ஆட்டோ ஓட்டும் வேலையா? :grin:

இந்த நடவடிக்கை போதவில்லை என்றால் சுரங்கம் நகரும் இடங்களுக்கு மேலால் உள்ள மக்களை மட்டும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறச் செய்திருக்கலாம். அவர்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருக்கலாம். இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு வந்திருக்காது. :innocent:

பரவாயில்லையே..! கட்டமைப்பு திட்டங்களைப் பற்றி அலச, யாழ்களத்திலும் சில சீவன்கள் இருக்கிறார்கள்..!  vil2_happy.gif

 

டங்கு, சென்னையில் வாழும் தமிழர்கள் பற்றி தெரிந்திருக்கும்தானே? இந்த ஆழ்துளைகள் பெரும்பாலும் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல், இரவோடிரவாக போடப்பட்டவையாக இருக்கும்.. துளைகள் இருக்குமிடம் பற்றி போதிய தரவுகள் இல்லாமல் பூமியில் அவற்றை குறிபார்த்து தவிர்ப்பது இயலாத காரியம்தானே?  bouh.gif

 

1514619_1155487077801575_291703889444167

சென்னை 'மெட்ரோ'வில் இவரும் பயணிக்கிறார்..!

Link to comment
Share on other sites

இது சென்னைக்கு மட்டும் வந்தசோதனை இல்லைதானே. வெளிநாடுகளிலும் இதே பிரச்சினைகள் உள்ளன. எங்கள் துறையில் ஒரு தொழிலாளி இறந்தும் போனார். ஆழ்துளை ஒன்றில் நீர் நிரம்பி இருந்துள்ளது. இவர் நிலக்கீழ் சுரங்கத்தில் இருந்து துளை போட அதில் இருந்த நீரின் விசை அவரைப் பலி வாங்கிவிட்டது.

ஆனாலும் கனிமம் எடுப்பதை விட்டுவிட முடியுமா? The show must go on! :o

Edited by இசைக்கலைஞன்
Link to comment
Share on other sites

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மணி நேரத்துக்கு படப்பிடிப்பு நடத்த எத்தனை லட்சம் தெரியுமா?

 

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த, ஒரு மணி நேரத்திற்கு 4 லட்ச ரூபாய் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

1a.jpg

சென்னையில் 2 வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில், முதற்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், எதிர்பார்த்த அளவு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழ் திரை துறையினர் ஆர்வத்துடன் இருந்தனர். முதலில் மெட்ரோ ரயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி மற்றும் மும்பையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, அதனை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
 

2a.jpg

பொதுவாக, ரயில்களில் நாள் வாடகைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மெட்ரோ ரயில்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.  அதற்கான கட்டணம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதிக நேரத்திற்கு மெட்ரோ ரயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=51285

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்: 85 சதவீத பணிகள் நிறைவு!

48.jpg

 

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், ஷெனாய் நகரில் பிரம்மாண்டமாக சுரங்க ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.  சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டது.


 முதல் வழித்தடத்தில்...: வண்ணாரப்பேட்டையில் இருந்து, விமான நிலையம் வரை முதல் பாதையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-ஆவது பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாபேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெறும்.


 இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என ஒன்பது ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.


 சோதனை ஓட்டம் திருப்தி: கோயம்பேடு - அண்ணா நகர் டவர் இடையே சுரங்கப் பாதையில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. அப்போது, மெட்ரோ ரயில் என்ஜின் மூலம் 2 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டம் திருப்தி அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், முழுமையாக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் இன்னும் சோதனை அளவில் இயக்கப்படவில்லை. இந்த நிலையில், எழும்பூர் - சென்ட்ரல் இடையிலான சுரங்கப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.


 செப்டம்பர் மாதம்: மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் விமான நிலையம் - எழும்பூர் இடையே வரும் செப்டம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் சுரங்கம் தோண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.dinamani.com/edition_chennai/chennai/2016/04/23/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF/article3395621.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரங்க நிலையங்களில் மட்டும் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ரயில்முன் பாயும் தற்கொலைகளை தவிர்க்கும் முகமாக நடைமேடைக்கும் வந்து சேரும் மெட்ரோ ரயில் பெட்களிற்கும் இடையே பாதுகாப்பு தடுப்புக் கதவுகள் (Platform Screen Doors) பொருத்தப்பட்டு வருகின்றன.

சென்னை அண்ணாநகர் முதல் செனாய்நகர் வரை முதல்முறையாக சுரங்க வழித்தடதின் ஒரு பகுதியாக இவ்வருடம் டிசம்பரில் மெட்ரோ ரயில் இயக்கபடவுள்ளது.

 

ChennaiMetroPlatformScreenDoors.png

அண்ணாநகர் திருமங்கலம் சுரங்க நிலையத்தில் ' நடைமேடை தடுப்பு கதவுகள்'(PSD) நிறுவும் பணி

 

22_04_2016_002_020_009.jpg

 

- 'டைம்ஸ் அஃப் இந்தியா' தமிழாக்க சுருக்கம்.

 

Link to comment
Share on other sites

தடுப்பு கண்ணாடியும், கதவுகளும் சிங்கப்பூர் நிலத்தடி ரெயில் நிலையங்களில் உள்ளன. ஆனால் ரொராண்டோவின் அப்படியெல்லாம் இல்லை. சென்னையில் இவற்றை அமைப்பது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

தடுப்பு கண்ணாடியும், கதவுகளும் சிங்கப்பூர் நிலத்தடி ரெயில் நிலையங்களில் உள்ளன. ஆனால் ரொராண்டோவின் அப்படியெல்லாம் இல்லை. சென்னையில் இவற்றை அமைப்பது மகிழ்ச்சி.

நன்றி டங்கு!

பரவாயில்லையே, கட்டமைப்பு வசதிகளைப் பற்றியும் வாசிக்க இங்கே சிலர் இருக்கிறார்களென்பது மகிழ்ச்சியை தருகிறது.

. நானும் சிங்கப்பூரில் பயோனியர் மெட்ரோ நிலையத்திலிருந்து லிட்டில் இந்தியா வரை பயணம் செய்துள்ளேன்.. நீங்கள் கூறியுள்ளபடி ந டைமேடை பாதுகாப்பு கதவுகள் அங்கே உள்ளன.

துபாய் மெட்ரோவிலும் அனைத்து நிலையங்களிலும் இம்மாதிரி கதவுகளை பொருத்தியுள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பரிசில் ஓடும் 14 இலக்க மெட்ரோ (நிலகீழ் புகையிரதம்)

இதற்கு சாரதி கிடையாது.

 

 

2jb2p0k.jpg

20jlpvl.jpg

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இது பரிசில் ஓடும் 14 இலக்க மெட்ரோ (நிலகீழ் புகையிரதம்)

இதற்கு சாரதி கிடையாது.

 

 

2jb2p0k.jpg

20jlpvl.jpg

 

 

இதில எத்தினை தீவிரவாதிமார் டெய்லி போய் வருவினம்?!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இசைக்கலைஞன் said:

இதில எத்தினை தீவிரவாதிமார் டெய்லி போய் வருவினம்?!tw_blush:

 

Première ligne automatique du réseau RATP, la ligne 14 du métro a connu un véritable succès dès sa mise en service avec 130 000 voyageurs par jour. Prolongée à deux reprises, à Saint-Lazare en 2003, et à Olympiades en 2007, la ligne 14 est aujourd’hui l’une des lignes les plus fréquentées du réseau RATP, avec plus de 500 000 voyageurs par jour. Elle est également la ligne de métro transportant le plus de voyageurs pendant l'heure de pointe, avec près de 25 000 voyageurs par heure et par sens.

Aujourd'hui, la ligne 14 c'est 9 stations sur 9km parcourus en moins d'un quart d'heure, assurant la correspondance avec 4 des 7 principales gares parisiennes, l'ensemble des lignes de RER et toutes les lignes de métro sauf 3 (la 2, la 5 et la 10). 290 agents d'exploitation et de maintenance qui se relayent pour assurer le bon fonctionnement de la ligne. C'est aussi 324 portes qui s'ouvrent plus de 8000 fois chacune, tous les jours, pour engloutir plus de 500 000 voyageurs et les transporter dans l'un des 21 trains de la ligne.

 

21 ரெயின்களே ஓடும் இந்த 14ம் நம்பர் பாதையில் மணிததியாலத்துக்கு 25 ஆயிரம் பேர் படி ஒரு நாளைக்கு 5 லட்சம் மக்கள் சராசரியாக பயணிப்பதாக இருக்கிறது

அதில் 75 வீதமானவர்கள் வெளிநாட்டினர் என சராசரியாக எடுத்தக்கொண்டால்

உங்கள் தீவிரவாத பட்டியலை எடுத்துக்கொண்டு (தமிழரையும் சேர்த்து?)  கணிப்பிடலாம் ராசா...:rolleyes:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

13419029_1281143555252762_86702200920682

 

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களின் மிக முக்கிய சந்திப்பு புள்ளியான ஆலந்தூர் நிலையத்தில் ரயில்களின் வழித்தடங்களை மாற்றி திருப்பிவிட ஏதுவாக மாற்று வழி(லூப் லைன்) வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கோயம்பேட்டிலிருந்து வரும் ரயில் பயணிகள் விமான நிலையம் செல்ல, ஆலந்தூரில் ரயிலைவிட்டு இறங்கி வண்ணாரப்பேட்டையிலிருந்து மற்றொரு வழித்தடத்தில் வரும் ரயிலுக்கு மாறத் தேவையில்லை. அவர்கள் பயணிக்கும் அதே ரயிலை மாற்று வழியில் திருப்பி சென்னை விமான நிலையத்திற்கு செலுத்த இயலும். இதனால் பயண நேரம் 30 நிமிடங்கள் குறையும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி மூலம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

Link to comment
Share on other sites

தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகம் ஒரு முதன்மை மாநிலமாக மாறிவருவதை அறிந்து ஏழை எளிய மக்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்..! :unsure: (அதிகமாக அரசியல் விவாத நிகழ்ச்சிகளைப் பார்த்ததால் வந்த வினை. tw_blush:)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update:

dc-Cover-u2favi9lola4tspee5pkeseop6-2016

சென்னையில் சைதாப்பேட்டையை அடுத்துள்ள சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரையேயான பிறிதொரு வழித்தடத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கபடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே சமயத்தில் ஆலந்தூரிலிருந்து பரங்கிமலை(St. Thomas Mount) மெட்ரோ நிலையத்திற்கும் போக்குவரத்து நீட்டிக்கப்படப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நகரின் மையத்திலிருந்து விமான நிலையம்வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பெறும் இரண்டாவது நகரமாக புது தில்லிக்கு அடுத்து சென்னை என்ற பெருமையை தமிழகம் பெறப்போகிறது.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/190616/chennai-next-to-delhi-in-getting-metro-to-airport.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

சென்னை 'வண்ணாரப்பேட்டை -  விமான நிலையம்' மெட்ரோ வழித்தடத்தில் முதல் பகுதியான சின்னமலை(Little Mount) முதல் விமான நிலையம் (Air Port) வரை கட்டுமான பணிகள் முடிவடைந்து மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையாளரால் (CMRS) பரிசோதிக்கப்பட்டு வணிக ரீதியான மக்கள் பாவனைக்கு தயாராகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் உயரதிகாரிகள் தெரிவிக்கையில், சின்னமலையிலிருந்து விமான நிலையத்திற்கான 9 கி.மீ வழித்தடம் பொது மக்கள் பாவனைக்கு திறந்து வைக்க தமிழக அரசிற்கு அறிக்கை கொடுத்துள்ளோம். இம்மாதம் ஆகஸ்ட் 16 முதல் 20 வரையிலான திகதிகள் இவ்வழித்தடம் திறக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.வெங்கையா நாயுடுவும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து

 

ChennaiMetroMap.jpg

 

ChennaiCMRS1-600x390.jpg   ChennaiCMRS5.jpg

 

படங்கள் உதவி: மெட்ரோ ரயில் கை

Edited by ராசவன்னியன்
படங்கள் இணைக்க..
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

Link to comment
Share on other sites

On 20/06/2016 at 0:21 AM, ராசவன்னியன் said:

தே சமயத்தில் ஆலந்தூரிலிருந்து பரங்கிமலை(St. Thomas Mount) மெட்ரோ நிலையத்திற்கும் போக்குவரத்து நீட்டிக்கப்படப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்க எல்லாம் அந்த காலத்துல ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடைக்கு எடுத்து ஆலந்தூரில் இருந்து வடபழனிக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு பக்கத்திலேயே தோசையையும் தின்னுட்டு, வாறவழியில உதயம் தியேட்டர்ல படமும் பாத்திட்டு வந்தனாங்கள். இப்ப வடபழனிக்கு ஆலந்தூரில் இருந்து போக 40 ரூபாயாம்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/08/2016 at 10:13 PM, ஜீவன் சிவா said:

நாங்க எல்லாம் அந்த காலத்துல ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடைக்கு எடுத்து ஆலந்தூரில் இருந்து வடபழனிக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு பக்கத்திலேயே தோசையையும் தின்னுட்டு, வாறவழியில உதயம் தியேட்டர்ல படமும் பாத்திட்டு வந்தனாங்கள். இப்ப வடபழனிக்கு ஆலந்தூரில் இருந்து போக 40 ரூபாயாம்.

ஐயா பல ஊர்களில் ரசித்து வாழ்பவர் போலிருக்கு..! நன்றி..ஐயா!!

இத்திட்டதிற்காக ஜப்பான் நிதி நிறுவனத்திடம் பெறப்பட்டுள்ள கடனை அடைக்க வேண்டும்.அதே நேரம் சில செளகரியங்களுக்கான விலையையும் கொடுத்தாக வேண்டுமே! மெட்ரோ ரயில் வசதியிலும் சாதாரண ரயில்களைப் போன்று விலையை தீர்மானித்தால், தற்பொழுதிருக்கும் தென்னக ரயில் சேவையைப் போன்றே மிக மட்டமானதாக இருக்கும்.

சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார்..

 

metro_2667977f.jpg

 

சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்களை இயக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை வரும் 21-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரு கின்றன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

ஒப்புதல் அளிப்பு

சென்னையில் சின்னமலை - ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் (11 கி.மீ) இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. 9 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதையை ஆய்வு செய்தும், 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்தும் இந்த ரயில் சேவையை தொடங்க ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சின்னமலை விமான நிலை யம் இடையே வரும் 21-ம் தேதி (நாளை) முதல்வர் ஜெயலலிதா, காணொளிகாட்சி மூலம் மெட்ரோ ரயில்சேவையை தொடங்கி வைக்கிறார். விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார். தொடக்க விழாவுக்கான பணிகள் தற்போது, நடைபெற்று வருகின்றன.

ரூ.50 கட்டணம்

மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது, சராசரியாக 10 ஆயிரமாக இருக்கிறது. இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கும்போது இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். சென்ட்ரல், எழும்பூர், பரங்கிமலை போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும்போது பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

0 - 2 கி.மீ ரூ.10, 2 - 4 கி.மீ ரூ.20, 4 - 6 கி.மீ ரூ.30, 6 - 10 கி.மீ ரூ.40, 10 - 15 ரூ.50, 15 - 20 கி.மீ ரூ.60, 20 - 50 கி.மீ ரூ.70 என மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். எனவே, விமான நிலையத்தில் இருந்து சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு ரூ.50 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் இணைந்தால், மக்களின் பயணம் எளிதாக இருக்கும் என்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆலந்தூர் - பரங்கிமலை இடையேவுள்ள வழித்தடத்தில் இம்மாத இறுதியில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தவுள்ளார்.

 

தி இந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் சேவை துவக்க விழா அழைப்பு..

 

Capture.jpg

 

Source : சென்னை மெட்ரோ ரயில் இணையம்.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.