Jump to content

சென்னை மெட்ரோ ரயில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13912298_1637870446541972_8616815528326804192_n.jpg?oh=2407ca1685f49f1081a3a6bb06206a91&oe=5869BF03

படிக்காத மேதையின் கேள்வி.

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

படிக்காத மேதையின் கேள்வி.

நீரும் முக்கியம், ரயிலும் முக்கியம்..மறுக்கவில்லை!

ஆனால் எந்த வசதியும், அதனை பயன்படுத்திக்கொள்ளப்போகும் மக்கள் தொகையின் அளவைக் கொண்டே அளவிடமுடியும்(ஏழு மாவட்ட பரப்பளவைக் கொண்டு அல்ல) என்பது படிக்காத மேதை அறிவதும் முக்கியம்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேசிக்கும் அழகர்கோவில் அணையினால் நிலத்தடி நீரை உயர்த்த(Recharge) பயன்படப்போவதாக அறியும் மாவட்டங்கள், பழைய இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலியின் வறட்சியான பகுதிகளான விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் விளாத்திகுளம் முதலியன. ஆனால் இவ்வணையின் நீரவரத்திற்கான சாத்தியக்கூறுகள் வைகை ஆற்றின் நீர் உற்பத்தி பகுதிகளாகும்..இவை கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மாநில எல்லையில் உள்ளது..

ஏற்கனவே முல்லைப்பெரியாறு குடிமிப்பிடி சண்டை முடிந்தபாடில்லை, இதில் வைகை நீர்பிடிப்பு பகுதியில் அரிதாக கிட்டும் உபரி நீரினை அழகர் கோவில் அணைக்கு நீராதாரமாக வழங்க மலையை குடைந்து சுரங்க நீர்வழியமைக்க கேரள அரசும், தமிழக அரசும் இணைந்து செய்ய முன்வருமா?

அணை அமைக்கும் சாத்தியக்கூறுகளை பொறியாளர்களாலும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களாலும் தீர ஆராய வேண்டிய விடயம்..

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

பேசும் படங்கள்: ஏர்போர்ட் - சின்னமலை மெட்ரோ சேவை

 

p_3017706f.jpg
 

விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

1_3017699a.jpg

சோதனை முன்னோட்டமாக நேற்று (செவ்வாய்க் கிழமை) இயக்கிப் பார்க்கப்பட்ட ரயில்

2_3017697a.jpg

f5671e8d-8b43-41ef_3017695a.jpg

தயார் நிலையில் இருக்கும் மெட்ரோ ரயில்கள்

198c65b5-781a-4755_3017703a.jpg

2072a398-a443-4e61_3017696a.jpg

b9a49868-1b59-44f0_3017701a.jpg

மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம்தொடங்கி வைத்தார்.

465898c1-58a3-40b7_3017702a.jpg

நிகழ்ச்சியில் பேசும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு

39432101-315f-4d9d_3017700a.jpg

முதல் ரயிலை இயக்கும் பெண் ஓட்டுநர் அம்சவேணி

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படங்கள்-ஏர்போர்ட்-சின்னமலை-மெட்ரோ-சேவை/article9131449.ece?homepage=true

 

 

 

விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை: காணொலி காட்சியில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

 

 
 
மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஒட்டுநர் அம்சவேணி | படம். ம.பிரபு
மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஒட்டுநர் அம்சவேணி | படம். ம.பிரபு

விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.

சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது. ரயில் நிலையங் களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஆய்வு நடத்தி, ரயிலை இயக்குவதற்கான அனுமதியை அளித்தார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக் கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகம் மற்றும் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடக்க விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந் தபடி ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து விமானநிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் 6 ரயில் நிலையங்கள் உள்ளன.

விமான நிலையம், மீனம் பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கி மலை ஆகிய பகுதிகளில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

197cf686-0875-4b01_3017679a.jpg

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், ''2-ம் கட்ட மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. 45 கி.மீல் இதுவரை 19 கி.மீக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும்'' என்றார்.

விமான நிலையம் - சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையம் - கோயம்பேடுக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/விமான-நிலையம்-சின்னமலை-மெட்ரோ-ரயில்-சேவை-காணொலி-காட்சியில்-ஜெயலலிதா-தொடங்கி-வைத்தார்/article9131410.ece?homepage=true

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

யூலை 17, 2013 அன்று ராசவன்னியரால் யாழ்களத்தில் ஓடவிட்ட மெற்றோ மாநகர தொடரூந்து (Metro Rail) பற்றி தற்போதுதான் அறிந்து பார்த்துப் படித்தேன். முன்பே அறிந்திருந்தால் என் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். அதனைப் பின்பற்றியும் மெற்றோ மாநகர தொடரூந்து உருவாகியிருக்கும். இன்று ஆகா, ஓகோ என்று வாழ்த்துபவர்களும், மூக்கில் விரல்வைத்து அசந்துபோயிருப்பார்கள்.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினாவரை  விரட்டி இருக்கலாம் ....! tw_blush:

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

யூலை 17, 2013 அன்று ராசவன்னியரால் யாழ்களத்தில் ஓடவிட்ட மெற்றோ மாநகர தொடரூந்து (Metro Rail) பற்றி தற்போதுதான் அறிந்து பார்த்துப் படித்தேன். முன்பே அறிந்திருந்தால் என் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். அதனைப் பின்பற்றியும் மெற்றோ மாநகர தொடரூந்து உருவாகியிருக்கும். இன்று ஆகா, ஓகோ என்று வாழ்த்துபவர்களும், மூக்கில் விரல்வைத்து அசந்துபோயிருப்பார்கள்.:(

கவலை வேண்டாம் பாஞ் ஐயா..
தங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை..

தீராத பிரச்சனையால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் சென்னை பறக்கு இரயில் திட்டமும்(Madras Rapid Transit System-MRTS), அதன் பின்னனியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும்(CMRL), சென்னை பறக்கும் ரயில் திட்டமும் குழப்பமின்றி இணையும் வழிமுறையையும் வகுக்க தகுந்த ஆலோசகரை(Consultant) தமிழக அரசு தேடிக்கொண்டிருக்கிறதாம்.. ஆழ்ந்த அனுபவமிக்க தாங்கள், அப்பதவிக்கு தகுதியானவர்தான்..

தாங்கள் விண்ணப்பிக்கலாமே!

Check here:   Hunt for Consultant

"In a step ahead for Chennai Metro Rail taking over the Mass Rapid Transit System (MRTS), a consultant will be appointed in about two months for facilitating the process.

According to officials of Chennai Metro Rail Limited (CMRL), tenders have been called to appoint the consultant and the process may be completed in about a month. “The consultant will draft the terms with regard to issues such as finance and operations. We had a discussion with the officials of Railways sometime ago. We hope to complete the merger at least in about 3-5 years,” an official said.."

contind...

19SEPSTS01_Tend_G6_3016380f.jpg

 

6 hours ago, suvy said:

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினாவரை  விரட்டி இருக்கலாம் ....! tw_blush:

அமீரகம் தயார்தான், 'அல்மான்' தான் அல்வா குடுக்குது..! vil-blagueur.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை 'விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம்' - வெளிப்புற தோற்றம்..

Photo2339.jpg  Photo2340.jpg

 

Photo2341.jpg  Photo2351.jpg

ஒப்பீட்டில் 'ஆலந்தூர் மெட்ரோ நிலைய'த்தைவிட உட்புறத்தில் வேலைத் தரமும், அழகும் குறைந்த விமான நிலைய மெட்ரோ நிலையம்..

பல வெளிநாட்டு பயணிகள் பயன்படுத்தக்கூடிய இந்நிலையம், உட்புற வேலைப்பாட்டில் தரம் குன்றி அமைந்தது துரதிஷ்ட்டமே!

Photo2344.jpgPhoto2347.jpg

Photo2348.jpgPhoto2346.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலந்துர் மெட்ரோ நிலைய முகப்பு

 

Photo2367.jpg  Photo2368.jpg

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

5 hours ago, ராசவன்னியன் said:

கவலை வேண்டாம் பாஞ் ஐயா..
தங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை..

தீராத பிரச்சனையால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் சென்னை பறக்கு இரயில் திட்டமும்(Madras Rapid Transit System-MRTS), அதன் பின்னனியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும்(CMRL), சென்னை பறக்கும் ரயில் திட்டமும் குழப்பமின்றி இணையும் வழிமுறையையும் வகுக்க தகுந்த ஆலோசகரை(Consultant) தமிழக அரசு தேடிக்கொண்டிருக்கிறதாம்.. ஆழ்ந்த அனுபவமிக்க தாங்கள், அப்பதவிக்கு தகுதியானவர்தான்..

தாங்கள் விண்ணப்பிக்கலாமே!

 

அமீரகம் தயார்தான், 'அல்மான்' தான் அல்வா குடுக்குது..! vil-blagueur.gif

ஈழத்தமிழன்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் முதலில் தலை வணங்குகிறேன். இருந்தும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து வாழவைத்திருக்கும் ஒரு நாட்டைக் கேவலப்படுத்தியதால் என் சேவையைத் தமிழ்நாட்டிற்கு வழங்க நான் தயாரில்லை என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன். tw_cry:

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த விரிவான திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி, 104 கிலோ மீட்டர்  தொலைவுக்கு  104 ரயில் நிலையங்களுடன் உருவாக்கப்பட உள்ளது.

மாதவரம்-சிப்காட்,

கோயம்பேடு -கலங்கரை விளக்கம்,

மாதவரம் - சோளிங்கநல்லூர்

உள்ளிட்ட  மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற உள்ளது. அதாவது, மாதவரத்தில் இருந்து பாடி, வளசரவாக்கம் மற்றும் மேடவாக்கம் வழியாக சிப்காட் வரை ஒரு தடம் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேட்டில் இருந்து  கலங்கரை விளக்கம் வரை ஒரு தடம். மாதவரத்திலிருந்து பெரம்பூர், லஸ், அடையாறு மற்றும் ECR வழியாக  சோளிங்கநல்லூர் வரை ஒருத் தடம் அமைக்கப்பட உள்ளது.

விகடன்

 

nlec7n.jpg

 

 

Link to comment
Share on other sites

அங்க அம்மா, சின்னம்மானு ஒரே களேபரமா இருக்கு.. இங்க நீங்க ரயிலு உட்டு வெளானுகீரிங்களா?! :D: tw_dizzy: tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இசைக்கலைஞன் said:

அங்க அம்மா, சின்னம்மானு ஒரே களேபரமா இருக்கு.. இங்க நீங்க ரயிலு உட்டு வெளானுகீரிங்களா?! :D: tw_dizzy: tw_blush:

முடியல..... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இசைக்கலைஞன் said:

அங்க அம்மா, சின்னம்மானு ஒரே களேபரமா இருக்கு.. இங்க நீங்க ரயிலு உட்டு வெளானுகீரிங்களா?! :D: tw_dizzy: tw_blush:

சின்னம்மா பெரியம்மா, சித்தப்பு பெரியப்பு சச்சரவுகளை தீர்க்க காலம் பத்தாது.. சந்துல சிந்துபாடி ரெயில் விட வேண்டியதுதான்!

இன்று காலை பேரனுடன் கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தேன்..

ரயில் பெட்டிகளும், டிக்கட் வழங்கும் வசதிகளைத் தவிர அனைத்து கட்டிட அமைப்புகளும், உள்ளக வேலைப்பாடும், ரயில் தட மேம்பால வழிகளின் வேலைப்பாடும் பல்லிளிக்கிறது. தாழ்ந்த இந்தியத் தரம் பளிச்சிடுகிறது.

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என திருப்தியடைய வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரெயில் சேவை ஜூன் மாதத்தில் தொடங்கும்-அதிகாரிகள் தகவல்!

 

201704012316566117_Tirumangalam--Metro-r

 

சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரம் முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரம் 2–வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன. இதில் முதல் கட்டமாக 2–வது வழித்தடத்தில் உள்ள உயர்த்தப்பட்ட பாதையான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் 2 வழித்தடத்திலும் சுரங்கப்பாதையிலும், உயர்மட்ட பாதையிலும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இந்த சுரங்கப்பாதையில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக இருப்பதால், எப்போது ரெயில் சேவை தொடங்கப்படும்? என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

ஜூன் மாதம்

திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை உள்ள 7.6 கிலோ மீட்டர் தூரப்பணிகள் முற்றிலும் நிறைவடைந்து உள்ளன. இந்தபாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னைக்கு வந்து இறுதிக்கட்ட ஆய்வு பணியில் ஈடுபட உள்ளார்.

இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் மாதம் ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்த பாதையில் கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையாகும். திருமங்கலத்தில் இருந்து எழும்பூர் வரை சுரங்கப்பாதையாகும். இதில் திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரை சிக்னல் மற்றும் மின்சார இணைப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது.

வண்ணாரப்பேட்டை– விம்கோ நகர்

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான விரிவாக்கத்தில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய 8 ரெயில் நிலையங்கள் வர உள்ளன. இதில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய 2 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைய உள்ளன. மீதம் உள்ள 6 ரெயில் நிலையங்களும் உயர்த்தப்பட்ட பாதையில் வர உள்ளன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து முதல் 2 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. ‘ஆப்கான்ஸ்’ நிறுவனத்துக்கு பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மீதம் உள்ள 7 கிலோ மீட்டருக்கு விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. 2018–ம் ஆண்டு இந்தப்பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தினத்தந்தி

 

டிஸ்கி:

யப்பாடா, இனி சென்னை சென்றால், விமான நிலையத்திலிருந்து வீடு செல்ல வாடகை மகிழுந்துகளுக்கு வரிசையில் தொங்கிக்கொண்டிருக்க தேவை இல்லை..

மெட்ரோ ரயில் சேவையை அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கினால், விமான நிலையதிற்கு செல்லும் / வரும் பயணிகள் அதிகம் பயன்பெறுவர். மெட்ரோ ரயில் சேவையின் நோக்கமும் முழுமையடையும்..!

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நாளை(14-05-2017) திறக்கவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்த கட்ட நகர்வான 'சுரங்கப் பாதையில்' அண்ணா நகர் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்க வழியில் ரயில் சேவை மக்களுக்காக காத்திருக்கிறது..

சில படங்கள் இங்கே பார்வைக்கு..!

 

20170510a_004101008.jpg

பச்சையப்பன் கல்லூரி ரயில் நிலையம்.

 

20170509_174005.jpg

திருமங்கலம் ரயில் நிலையம்.

 

20170509_175313.jpg

ஷெனாய் நகர் ரயில் நிலையம்.

 

C_m7zxGUAAA8zf0.jpg

அண்ணாநகர் கிழக்கு ரயில் நிலையம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுரங்க தளத்திலிருக்கும் ரயில் நிலையங்களின் படங்கள்..!:)

 

Metro_1_3163800g.jpg

 

metro_3163797g.jpg

 

12_BLPRU_METRO1_3163819g.jpg

 

12_BLPRU_METRO3_3163817g.jpg

 

34452635792_4221f94a39_b.jpg

 

34452635012_358722b1e2_b.jpg

 

34452634492_d9a816da13_b.jpg

 

34452635422_e50b288259_b.jpg

 

34452633982_0f821278c0_b.jpg

 

நாளை திறக்கவிருக்கும் சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை எனக்கும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. :grin:

காரணம், என் சென்னை வீட்டருகே 100மீ தொலைவில் ஒரு மெட்ரோ நிலையம் அமைந்துள்ளது..  அனைத்து ரயில் நிலையங்களிலும், "காய் ரே.. ஆஜ் மே.." என அந்நிய மொழியில் இல்லாமல் எம் தாய்மொழி தமிழிலில் எங்கும் அறிவிப்புகள் மற்றும் பலகைகள்..!

இத்திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெட்ரோ ரெயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயில்!

 

சென்னை:

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே நாளை தொடங்கி வைக்கப்படும் சுரங்க மெட்ரோ ரெயிலை தவறாகப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு, மெட்ரோ ரெயில் சொத்துகளுக்கு ஊறுவிளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப் படும்.

ஆபத்தான பொருட்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம்.

மெட்ரோ ரெயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ.250 அபராதம்.

மெட்ரோ ரெயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம்.

ஓடும் ரெயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம்.

மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ.50-ம், பயணத்துக்கான பயணக் கட்டணத்தோடு அபராதம்.

ரெயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம்.

உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை.

ரெயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை (சட்ட விதிகளுக்கு உட்பட்டு) விதிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்.


http://www.maalaimalar.com/News/TopN...in-damages.vpf

Mock Fire Drill..

 

34452080062_51354890b8_b.jpg

 

34227837340_553b1ce153_b.jpg

 

34452079052_7f35d8d057_b.jpg

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ராசவன்னியன் said:

நாளை திறக்கவிருக்கும் சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை எனக்கும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. :grin:

காரணம், என் சென்னை வீட்டருகே 100மீ தொலைவில் ஒரு மெட்ரோ நிலையம் அமைந்துள்ளது..  அனைத்து ரயில் நிலையங்களிலும், "காய் ரே.. ஆஜ் மே.." என அந்நிய மொழியில் இல்லாமல் எம் தாய்மொழி தமிழிலில் எங்கும் அறிவிப்புகள் மற்றும் பலகைகள்..!

இத்திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்..!

இன்று ஆரம்பிக்க இருக்கும்.... மெட்ரொ ரயில் சேவைக்கு வாழ்த்துக்கள். :)
ரயில் நிலையங்கள்.... மிக அழகாக கட் டப்  பட்டுள்ளமையுடன், 
தமிழுக்கு  முன்னுரிமை கொடுத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. 
ரயிலின்... வெள்ளோட்ட காணொளிகள் கிடைத்தால், இணைத்து விடுங்கள்  ராஜவன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

இன்று ஆரம்பிக்க இருக்கும்.... மெட்ரொ ரயில் சேவைக்கு வாழ்த்துக்கள். :)
ரயில் நிலையங்கள்.... மிக அழகாக கட் டப்  பட்டுள்ளமையுடன், 
தமிழுக்கு  முன்னுரிமை கொடுத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. 
ரயிலின்... வெள்ளோட்ட காணொளிகள் கிடைத்தால், இணைத்து விடுங்கள்  ராஜவன்னியன்.

பச்சைகளையும், வாழ்த்துக்களையும் வழங்கிய உறவுகளுக்கு மிக்க நன்றி..! happycopains.gif

எனது வீட்டிற்கு அருகாமையில் ஒரு மெட்ரோ நிலையம் அமைந்திருந்தாலும், வெளிநாட்டில் வசிப்பதால் சென்னை மெட்ரோ சுரங்க வழியில் பயணம் செய்ய, இன்னும் அரை வருடம் நான் காத்திருக்க வேண்டும்..

சுரங்க வழியில் ரயில் சேவை துவக்க விழா படங்களும் காணொளிகளும் கீழே..!1

 

34603504216_fd0211133a_b.jpg

துவக்க விழா..

 

34647778595_9c7ed072c9_z.jpg

அமைச்சர்களின் முதல் துவக்கப் பயணம்..

 

34647778915_e7534ba623_z.jpg

 

34517050991_5be356fbc3_z.jpg

 

34647778215_30dd4a7fbe_z.jpg

பொதுமக்கள் பயணம்..

 

காணொளிகள்..

 

 

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  அரசாங்கம் அப்படி இப்படி போனாலும் மெட்ரொ நேராய் போகுது. நல்லாய் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13.5.2017 at 3:35 PM, ராசவன்னியன் said:

மெட்ரோ ரெயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயில்!

 

சென்னை:

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே நாளை தொடங்கி வைக்கப்படும் சுரங்க மெட்ரோ ரெயிலை தவறாகப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு, மெட்ரோ ரெயில் சொத்துகளுக்கு ஊறுவிளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப் படும்.

ஆபத்தான பொருட்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம்.

மெட்ரோ ரெயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ.250 அபராதம்.

மெட்ரோ ரெயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம்.

ஓடும் ரெயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம்.

மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ.50-ம், பயணத்துக்கான பயணக் கட்டணத்தோடு அபராதம்.

ரெயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம்.

உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை.

ரெயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை (சட்ட விதிகளுக்கு உட்பட்டு) விதிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்.
http://www.maalaimalar.com/News/TopN...in-damages.vpf

ரயில் ஒழுங்காய் ஓடுதோ இல்லையோ.......இப்படி கடுமையான சட்டங்கள்தான் அடுத்த சந்ததியை கட்டுக்கோப்புடன் வாழவைக்கும்.

அரசு! உந்த சினிமா கட்டவுட்டுகளுக்கு பால் ஊத்துறதையும் நிற்பாட்டினால் அரைவாசி தமிழ்நாடு எதுவுமே இல்லாமல் முன்னேறிடும்.:grin:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்தில் அடுத்த கட்டமாக இடபெறவிருந்த சென்னை கலங்கரை விளக்கம் முதல் கோயம்பேடு வழித்தட திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதே வழித்தடம் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படுகிறது..

(இதே வழித்தடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் திட்டமிடப்பட்டிருந்த "மோனோ ரயில் திட்டம்" இனி என்னவாகும் என தெரியவில்லை! rougir5.gif )

மற்றுமொரு இனிய செய்தி..

கோயம்புத்தூரிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது..

இவற்றுக்கான அறிவிப்பை இன்று சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வட பழனி - அரும்பாக்கம் இடையே சென்னை மெட்ரோ இரயிலின் என்ஜின் பழுதால், பயணிகள் அருகேயுள்ள அடுத்த ரயில் நிலையத்திற்கு நடந்து செல்லும் காட்சி..!

 

Typical Indian quality of operation & maintenance..?

 

7c56e5f763b275f5ad882d8216b0f839.jpg

 

8c4e81617fe2c9033463cac428c6fe7b.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.