Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை மெட்ரோ ரயில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி வன்னியன்...

இந்த இரயில் நிலையங்களின் ஆர்கிடெக்ட் நிறுவனங்கள் இந்திய (தமிழ்நாட்டு) நிறுவனங்களா?

 

தமிழ்நாட்டில் தமிழ் கருவோடு கட்டிடங்களை வடிவமைத்தால் இன்னும் நல்லது (கோயில் கோபுர சாயலில்) :)

 

முன்னறிய நாடுகளின் தொழில் நிறுவனங்களுடன் வேலை செய்யும் பொது இந்தியாவில் உள்ள தொழிலாளர்களும் பாதுகாப்பான முறையில் வேலை செய்ய முற்படுவார்கள்....

 

மும்பை விமான நிலைய நிர்மானிப்பை பற்றிய ஒரு படம் youtube  இல் உள்ளது..அதில் வேலை செய்யும் எந்த தொழிலாளரிடமும் பாதுகாப்பு கையுறை இல்லை...எல்லாரும் வெறும் கையால் தான் எல்லா வேலையும் (இரும்பை கையாளுதல்) செய்கின்றார்கள்...

 

இந்தியாவில் அளவு கூடிய மனித வலு..ஆகவே தான் அதற்க்கு மதிப்பு இல்லை....

 

பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டு நிறுவனங்களே (JV).

 

அனைத்து ரயில் நிலையங்களும் கண்ணாடி தட்டுகளால் மூடப்பட்ட நவீன தோற்றம் கொண்டவைதான். இந்த விடயத்தில் தமிழ்நாட்டு கரு சார்ந்த வடிவமைப்பை செய்யவில்லை.

 

வேலையிடத்தில் தொழிளாலர்களின் பாதுகாப்பு விடயத்தில் மேலைநாடுகளின் அளவிற்கு கவனம் செலுத்தினாலும், தொழிளாலர்கள் அதை சிரத்தையாக பின்பற்ற வேண்டுமே?

 

சமீபத்தில் சைதாப்பேட்டையில் ராட்சத கிரேன் பளு தூக்கும்பொழுது நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஒரு தொழிலாளி இறந்தும், மற்றொருவருக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டும் விட்டது. கிரேன் ஆப்பரேட்டரின் கவனக்குறைவால் இது நிகழ்ந்ததாக செய்தி வந்துள்ளது. :o

 

வத வதவென சனத்தொகை இருந்தால் மனிதனுக்கு மதிப்பிருக்காது தானே? :)

 

-17qgulnanz86b.jpg

 

 

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரயில் நிலையங்களின் ஆர்கிடெக்ட் நிறுவனங்கள் இந்திய (தமிழ்நாட்டு) நிறுவனங்களா?

 

தமிழ்நாட்டில் தமிழ் கருவோடு கட்டிடங்களை வடிவமைத்தால் இன்னும் நல்லது (கோயில் கோபுர சாயலில்) :)

 

இந்த மாதிரிதான் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும். ஒரே மாதியாக இல்லாமல் ஒவ்வொன்றும் ஒருவித வடிவமைப்பில் இருக்குமாம். :)

 

 

 

Chennai-Metro-Rail-Alandur-Station.jpg

 

Alandur Station Model

 

 

13THMETRO_103767f.jpg

 

St.Thomas Mount Integrated Station.

 

 

மேற்கொண்டு படங்களை தேடி, பின்னர் இணைக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது துபையிலுள்ள மெட்ரோ நிலையதின் படம்.

 

அனைத்து ரயில் நிலையங்களும் அச்சடித்தாற்போல் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை.

 

 

dm2.jpg

 

 

1024px-Dubai_Metro_Station_in_Bersha_nea

Link to comment
Share on other sites

எனது நிறுவனத்தின் கிளையும் அங்கே வேலை செய்கிறது.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துபை, அல் ரசீதியாவில் உள்ள அதிநவீன துபை 'மெட்ரோ பணிமனை'யில் ரயில் பெட்டிகள் தீவிர சோதனைக்கும், பராமரிப்பு பணிக்கும் உட்படுத்தப்பட்டபொழுது எடுத்த படம்.

 

162.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நிறுவனத்தின் கிளையும் அங்கே வேலை செய்கிறது.. :wub:

 

Exact contract Value Please ! :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

இது போன்ற கட்டுமானங்கள் இந்தியாவிற்கு நல்லது...காரணம்...புதிய தொழிழ் நுட்பங்களை சீக்கிரமே பழகுவார்கள் (தொழிலாளர்கள்) பின் எப்படி IT துறையில் ஒரு இடத்தை பிடித்தார்களோ....அது மாதிரி கட்டுமானங்களிலும் முன்னேறி மற்ற நாடுகளுடன் போட்டியிடலாம்...

இந்தியாவில் அடுத்து பின்பற்றவேண்டியது எப்படி கட்டிடம், தெருக்களை காலாகாலத்திற்கும் பராமரிப்பது என்பதை....

எல்லா கட்டிடங்களிலும் பாசியும், வெடிப்புகளும்...

 

கோயில் கோபுரங்களில் வளரும் குருவிச்சை மரங்களை முதலில் பிடுங்க வேண்டும் :)

 

தற்போது இந்தியாவிற்கு பொய் வரும் நண்பர்கள் எல்லாம் சொல்லுவது ..ஒவ்வொருமுறை செல்லும் போதும் ஒவ்வொரு விடயத்திலும் முன்னேற்றம் காணபடுகிறது என்பது...அது ஒரு நல்ல விடயம்....

 

Link to comment
Share on other sites

இசை அது URC not URS...

ஏது உங்களது கம்பெனி? :)

அதுக்குமேல் எதுவும் சொல்ல முடியாது.. :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

சென்னை 'மெட்ரோ ரயில்' திட்டம் - இரண்டு (Phase-II)

 

 

metro_1781073f.jpg

 

அடுத்து வரவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில்(Phase II), மொத்தம் 76 கி.மீ. தூரத்திற்கு அனைத்து வழித்தடங்களும் பூமிக்கு அடியில் சுரங்க வழிப்பாதையாகவே அமையுமெனெ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைபெற்றுவரும் திட்டத்தில் (Phase I), அனைத்து பிரதான சாலைகளான அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலைகளின் வழியில் ரயிலுக்கான தடங்கள் அமைக்கப்பட்டுவிட்டதால் மேம்பாலம்(viaduct) வழியாக சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களை இனி நகரினுள் அமைய இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பால முறையில் வழித்தடங்கள் அமைக்க ஒரு கி.மீ. க்கு ரு.150 கோடியும், சுரங்க வழிப்பாதை மூலம் வழித்தடம் அமைக்க ஒரு கி.மீ க்கு ரு.500 கோடியும் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சென்ற சனவரி மாதம் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டிற்கான(Phase II) விரிவான திட்ட வரைவு (Detailed Project Report - DPR) தயாரிக்க  முடிவெடுத்தது.

 

தற்பொழுது மூன்று வழிதடங்கள் பரிசீலனையில் உள்ளன. அவை,

 

மாதவரம் - லைட்ஹவுஸ் (சாந்தோம்) - 17 கி.மீ

கோயம்பேடு - ஈஞ்சம்பாக்கம் (கிழக்கு கடற்கரை சாலை) - 27 கி.மீ

 

மாதவரம் - பெரும்பாக்கம் - 32 கி.மீ.

 

இவற்றிற்கு அரசு ஒப்புதலளித்தால் மேற்கொண்டு விரிவான திட்ட வரைவுப்பணிக்கான (DPR) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்றும், அத்திட்டத்தை செயல்படுத்த 10 வருடங்கள் ஆகுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரு.36,000 கோடிகளாக இருக்கும்.

 

 

- 'செய்தி மூலம் 'இந்து'

 

http://www.thehindu.com/news/cities/chennai/no-elevated-corridor-in-metro-phaseii/article5761680.ece

 

.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரு.36,000 கோடிகளாக இருக்கும்..

 

தமிழகத்தையோ... இந்தியாவையோ... பொறுத்தவரையில்,

ஒரு சாதாரண அரசியல்வாதியே... லட்சக்கணக்கான கோடிகளில் புரளும் போது,

36,000 கோடி என்பது பெரிய தொகை அல்ல.

அடுத்த திட்டத்தை, உடனே... ஆரம்பிக்க அடிக்கல் நாட்ட வேண்டியது தான். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்களை வரவேற்கும் அதே வேளை, இந்த சென்னை மெட்ரோ ரயில் வேலைகளினால் "சிங்காரச் சென்னை" தன் சிங்காரத்தை நாள்தோறும் இழக்கிறாள், பழமை விரும்பிகளுக்கு இது கவலை தரும் விடயம்தான்..!

 

 

 

oldripon.jpg

 

ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற பொழுது  "ரிப்பன்" கட்டிடம் (சென்னை மாநகராட்சி மாளிகை)

 

 

 

 

Ripon_Building_Chennai.jpg

 

சில ஆண்டுகளுக்கு முன்..

 

 

 

 

Photo0906.jpg

 

சிதைந்த நிலையில் தற்பொழுது

Link to comment
Share on other sites

மோனோ ரயிலும் மெட்ரோ ரயிலும் எங்கே தொடுக்க படுகிறது?

 

இப்போது ஓடும் மின்சார ரயில்களுக்கு (லைன்) என்ன நடக்கும்?

ஏதாவது திட்டம் உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோனோ ரயிலும் மெட்ரோ ரயிலும் எங்கே தொடுக்க படுகிறது?

 

இப்போது ஓடும் மின்சார ரயில்களுக்கு (லைன்) என்ன நடக்கும்?

ஏதாவது திட்டம் உள்ளதா?

 

மோனோ ரயில் திட்டம், இன்னமும் திட்ட வரைவிற்கான ஒப்பந்தப்புள்ளி (RFP) கோரப்படும் நிலையிலேயே இருகின்றது. இத்திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (Madras Transport Corporation) செயல்படுத்தும் பொறுப்பை கொண்டுள்ளது. தற்பொழுது தேர்தல் நேரமாதலால் தேர்தல் ஆணைய விதிப்படி புதிய திட்டங்கள் தேர்தல் முடியும் வரை கிடப்பில் போடப்பட வேண்டும்.

 

கீழ்க்கண்ட தோராய வழித்தடங்கள் மோனோ ரயில் திட்டத்தால் செயல்படுத்தப்படும். இதுவரை மோனோ ரயில் திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்குமான வெளிப்படியான தொடர்புகள், சந்திக்கும் ரயில் நிலையங்கள் பற்றி தெளிவான அறிக்கை இல்லை. அனைத்தும் வரைவு நிலையிலேயே (Drafting stage) இருக்கின்றன.

 

 

monorail-copy.jpg

 

சென்னை மோனோ ரயில் திட்ட வரைவு வழித்தடம்

 

 

 

chennai-metro-rail.jpg

 

சென்னை மெட்ரோ ரயில் அங்கீகரிப்பட்ட செயல் வழித்தடம்.

 

 

சென்னையின் மின்சார ரயில்களின் வழித்தடங்களும்(EMU), மெட்ரோ ரயில்(Metro) வழித்தடங்களும் இரு புள்ளிகளில் சந்திக்கின்றன.

ஒன்று -  சென்னை சென்ட்ரல்

மற்றொன்று - பரங்கிமலை (St.Thomas Mount)

சென்னை சென்ட்ரலுக்கு எதிர்புறமுள்ள பல கடைகள்  பலகட்ட வழக்கிற்குப்பின் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி இதற்காக இடிக்கப்பட்டு, அங்கே இரு முனைகளுக்கும் இணைப்பு பாலம் அமையப்போகிறது. (UG and skywalk platforms between existing Chennai Central station and Central Metro station)

பரங்கிமலை ரயில் நிலையம் மிக முக்கியமான ஒருங்கிணைந்த நிலையமாகப் போகிறது. இங்கே மூன்று அடுக்கு மாடி (Three levels) நடைபாதை மேடைகள் அமைகின்றன..

 

 

13THMETRO_103767f.jpg

 

 

தரை தளத்தில் சென்னை மின்சார மற்றும் சாதாரண ரயில் போகுவரத்து இருப்பு பாதைகள்.

முதல் தளத்தில் சென்னை பறக்கும் ரயில் பாதை (Madras Rapid Transit System - MRTS) நடைமேடை. இது சென்னை பீச் ரயில் நிலையம் தொடங்கி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலையில் இணையும் வழித்தடம்.

இரண்டாம் தளத்தில் சென்னை மெட்ரோ ரயில் (Metro Rail) நடைமேடை அமைகிறது.

 

 

 

Reason for edit: எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Photo0912.jpg

 

ஆதம்பாக்கம் அருகே தொங்கி நிற்கும் பறக்கும் ரயில் திட்ட வழித்தடம்

 

 

Photo0916.jpg

 

சென்னை பீச் - ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் திட்ட வழித்தடம்.

 

 

பரங்கிமலை ரயில் நிலையத்தோடு இணைக்கப்டவேண்டிய சென்னை பீச் - ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் சாலைத் திட்டம் வேளச்சேரி வரை முடிந்துள்ளது.

 

அதன் விரிவாக்கமாக வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு மேம்பாலம் வழியாக ரயில் பாதை அமைக்கும் பணி பல வருடங்களாக நிலம் கையகப்படுத்தும் பொழுது ஏற்பட்ட நில ஆர்ஜித வழக்குகளால், திட்டம் பரங்கிமலை ரயில் நிலையத்தருகே 500 மிட்டர் தூரத்தில் தொங்கி முடங்கியுள்ளது.

 

சென்னை மெட்ரோ ரயில் பரங்கிமலையோடு இணைந்தவுடன் பறக்கும் ரயில் பாதையும் அதோடு இணைந்து ஒருங்கிணைந்த ரயில் நிலையமாக பரங்கிமலை மாறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திட்டங்கள் அரசியல் கயமைத்தனத்தில் அலங்கோலப் படக்கூடாது...!

Link to comment
Share on other sites

சென்னை இப்படி  வளருவதில் எல்லாருக்கும் பெருமை....பிற்காலத்தில் தமிழகத்திலேயே செட்டில் ஆகலாம்

:)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை இப்படி  வளருவதில் எல்லாருக்கும் பெருமை....பிற்காலத்தில் தமிழகத்திலேயே செட்டில் ஆகலாம் :)

 

நன்றி, தமிழர்களை வரவேற்கிறோம்! groups_cuddle.gifsmiley-with-glasses32.gif

 

Link to comment
Share on other sites

தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டிய முதலாவது விடயம் விளப்படப் ”போஸ்டர்”கள். நகரையே அலங்கோலம் செய்கின்றன. இரண்டாவது முக்கியமாகச் செய்யப்பட வேண்டியது கழிவுநீர் வாய்க்கால்கள். இது இல்லாமல் நிறையப் பிரச்சனைகள். தண்ணீர் தேங்கி நிற்றல், ஆற்றுநீர் மாசுபடுதல்... உற்பட பல. பல உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கழிவுகளை ஆற்றில் கலக்க இதுவே காரணமும் ஆகும்.
 


மேற்கு நாடுகளில் இவ்வளவு அநியாயத்துக்குப் புல் வளர்க்கின்றார்கள். அழகுக்காக இப்படிச் செலவளிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. ஆனால் உண்மையில் கழிவுநீர் வாய்க்கால்களில் சேறு கலக்காமல் இருக்க புல் வளர்ப்பது பெரும்பங்கு வகிக்கின்றது. அத்தோடு புற்கள் நிலத்தடி நீரை உறுஞ்சாமல் இருப்பதும் ஒருவகையான நன்மையானதே. மரங்கள் வளர்ப்பதைக் காட்டிலும் புற்களின் தேவை, நல்லது என்றே நினைக்கின்றேன்.

தமிழ்நாடு இந்தியாவில் ஒரு தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டும். பொருளாதாரரீதியாகத் தமிழர்கள் உயர்வடைந்தால் எவனாலும் எங்களை ஏவல் செய்ய முடியாது.

பெற்றோலியப் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, ஒரு காலத்தில் பணம்படைத்தவர்கள் மட்டுமே வாங்கும் நிலை உருவாக்கும். அப்போது உலகத்தின் பொருளாதரம் ஒருசில நாடுகளின் கைகளுக்குச் சென்றுவிடும். அப்போது நம்மவர்கள் தொடர்ச்சியாக இப்படி மானியம், இலவசம் என்ற சொற்களின் அர்த்தங்கள் மறந்துவிடக்கூடும். அதைத் தவிர்க்க எங்களின் வருவாய்களை உயர்த்த வேண்டும்.

 

Link to comment
Share on other sites

தண்ணீர் பஞ்சத்திற்கும்..அங்குள்ள ஏழை மக்களையும் பாதுகாக்கும் திட்டங்கள் இருந்தால் ஒரு குற்ற உணர்வு இல்லாமல்அங்கு சந்தோசமாக இருக்கலாம்....அந்த இரண்டையும் எதிர்நோக்கும் மன துணிவு இல்லை..

ஆனால் எனது நண்பர்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு (தமிழ்நாட்டிற்கு) செல்கின்றார்கள்...ஒவ்வொரு முறையும் அதற்க்கு முந்தின முறையிலும் பார்க்க முன்னேற்றம் என்றே சொல்லுகிறார்கள்...அது ஒரு நல்ல விடயம்.....

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி சுவி, தூயவன் மற்றும் நான்தான்.

 

 

மேலதிக திட்ட முன்னேற்ற படங்கள்:

 

சென்னை நுழைவாயிலுள்ள முக்கியமான "கத்திப்பாரா" சந்திப்பு மேம்பாலத்தின் மீது இடையூறு இல்லா போக்குவரத்திற்காக சாலையின் இருபுறமும் சமநிலை தொங்குபால தூண்கள் (Balanced Cantilever) அமைக்கப்பட்டு அவைகளை இணைக்கும் பணியும் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளது. இரு தூண்களுக்கும் இடையான தூரம் 75 மீட்டர்களாகும். சாதாரணமாக இத்தகைய வடிவமைப்பு பாலங்கள் ஆழமான குறுகிய நதியோடும் பள்ளத்தாக்குகளின் இரு கரைகளை இணைக்கும் இடங்களில் வடிமைப்பு பொறியாளர்கள் திட்டமிட்டு கட்டுவார்கள். இப்பாலத்தின் பலவேறு திட்ட நிலைகளின் முன்னேற்ற படங்களை கீழே காணலாம்.

 

 

670px-French-Kiss-Step-2.jpg

 

(ஆங்கிலத்தில் ஃப்ரன்ச் கிஸ் - French Kiss என்று சொல்வார்களே அந்த மாதிரியான சந்திப்பு இந்த இரு தூண்களின் சங்கமம்) :rolleyes:

 

 

1958515_783441375002389_110739079_n.jpg

 

 

559009_783441388335721_614791683_n.jpg

 

 

10001318_783441358335724_99487542_n.jpg

 

 

1904123_783441468335713_985610754_n.jpg

 

 

1960097_783441385002388_987154836_n.jpg

 

 

10003172_783441465002380_677269203_n.jpg

 

 

1011464_783441425002384_1997903563_n.jpg

 

 

Source: CMRL FB.

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆலந்தூர் - கத்திப்பாரா சந்திப்பு தாண்டியவுடன் பிரியும் கிண்டி நோக்கிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ வழித் தடத்தில், கிண்டி குதிரைப் பந்தய மைதானமருகே குறுக்கே வரும் மின்சார இருப்புப் பாதைக்கு மேலாக சுமார் 100 மீட்டர் (Span) அகல மேம்பாலம், கடின இரும்புத்தகடுகளால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப் படுகிறது. இந்த இரும்பு மேம்பாலம் அமைந்தவுடன் அதன் மீதி சீமந்து பலகைகள் (Concrete slabs) மேவப்பட்டு தண்டவாளம் அமைக்கப்படும்.

 

அதன் படங்களை கீழே இணைக்கிறேன்.

 

 

 

IMG_8325.jpg

 

 

 

IMG_8331.jpg

 

 

IMG_8336.jpg

 

 

IMG_8340.jpg

 

 

1111.jpg

 

 

IMG_8287.jpg

 

 

 

படங்கள் உதவி: தினகரன்.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

 

chennaiMetroRail1.jpg

 

 

'கோயம்பேடு - எழும்பூர்' இடையேயான சுரங்கப் பாதையில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் இருவழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக, வரும் அக்டோபர் மாத இறுதியில் கோயம்பேடு  - ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது.

 

அதுபோல கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் அடுத்த ஆண்டு இறுதியில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கோயம்பேடு - எழும்பூர் இடையே நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் ஆகிய 7 மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

சுரங்கப் பாதையைப் பொருத்தவரை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக தனித்தனியாக இரண்டு டன்னல்கள் (Tunnels)  அமைக்கப்படுகின்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில், எழும்பூர் நேரு பூங்கா இடையேயும், ஷெனாய் நகர் அண்ணாநகர் டவர் இடையேயும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது.

இங்கு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராட்சத டன்னல் போரிங் மிஷின்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இப்போது இரண்டு டன்னல் போரிங் மிஷின்கள் பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஷெனாய் நகரை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது. வேறொரு இடத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மற்றொரு டன்னல் போரிங் மிஷின் நேரு பார்க்கை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது.அதுபோல அண்ணாநகர் டவரில் இருந்து திருமங்கலத்தை நோக்கி இரண்டு டன்னல் போரிங் மிஷின்கள் மே முதல்வாரத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்படும். அதையடுத்து 4 மாதங்களில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு டிசம்பரில் கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் மற்றொரு பகுதியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் தரையில் இருந்து 100 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது. மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் என்பதாலும், இரண்டு அடுக்கு சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்படுவதாலும், மொத்தம் 100 அடி ஆழத்தில் 25 அடிக்கு பாறைகள் இருப்பதாலும் இந்த ரயில் நிலையம் அமைப்பது சவாலான பணியாக இருக்கிறது. இருப்பினும், 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5893475.ece

Link to comment
Share on other sites

முண்டகண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் இன்னும் திறக்கவில்லை என்று ஒரு blog பதிவு இருந்தது..அது எதற்கு? மின்சாரரயிலுக்கா?

அந்த ரயில் நிலையத்தின் வெளிப்புறம் ஒரே சாக்கடையாக இருந்தது....இந்த ரயில் நிலையங்களும்...அப்படியாகாமல் இருக்க கடவுளை வேண்டுவோம்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முண்டகண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் இன்னும் திறக்கவில்லை என்று ஒரு blog பதிவு இருந்தது..அது எதற்கு? மின்சாரரயிலுக்கா?

அந்த ரயில் நிலையத்தின் வெளிப்புறம் ஒரே சாக்கடையாக இருந்தது....இந்த ரயில் நிலையங்களும்...அப்படியாகாமல் இருக்க கடவுளை வேண்டுவோம்....

 

TH16_mrts_new_eps_1238532f.jpg

 

 

மேலேயுள்ள வரைபடத்தில் வெள்ளை நிற வழித்தடத்தை(MRTS) பார்த்தால் புரியும்.

 

முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையம், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின்(MRTS) வழித்தடத்தில் வரும் புதிய ரயில் நிலையமாகும். இது திருமயிலை (மயிலாப்பூர்) ரயில் நிலையத்திற்கும், லைட் ஹவுஸ் ரயில் நிலையத்திற்கும் இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையம்.

 

இது மின்சார ரயில் பாதையாகும்.

317703_553706877996437_1471925865_n.jpg

 

 

சென்னை சென்ரலிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள கோவளம் வரை அக்காலத்தில் ஆங்கிலேயர்களால் படகுப் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?

 

அக்கால்வாயில் படகு சவாரி மூலம் மக்களும்,, காய்கறி சணல் போன்றவைகளும் எடுத்துச்செல்லப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா? :o

 

சுதந்திரம் பெற்ற பின் படிப்படியாக வந்த அரசுகள் எவையும் தொலை நோக்கில் நகரின் வளர்ச்சிக்கேற்றவாறு இருக்கும் இயற்கை சூழலை பாதுகாக்கவில்லை.

 

விளைவு?

இன்று பக்கிங்காம் கால்வாய் கழிவு நீருக்கான சாக்கடையாக சிதைந்து உருமாறிவிட்டது.. அக்கால்வாய் தான் நீங்கள் குறிப்பிடும் முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையத்தை ஒட்டிச் செல்கிறது.

இப்பொழுது கூவத்தின் நடுவே தூண்கள் என காரணம் கூறி சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால திட்டத்தை தடுக்கும் அரசு, அப்பொழுது சென்னை பறக்கும் சாலை ரயில் திட்டத்தில் பல இடங்களில் பக்கிங்காம் கால்வாய் நடுவே தூண்கள் எழுப்பியபோது கள்ள மெளனம் சாதித்தன என்பது வேடிக்கை. :huh:

 

 

Pc0020500.jpg

 

சென்னை பறக்கும் ரயில் வழித்தடம், சென்னை கடற்கரையிலிருந்து வேளைச்சேரி வரை முதல் இரண்டு திட்டங்களாக நிறைவேற்றப்பட்டது.  அதன் விரிவாக்கமாக (Phase III) வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை மூன்றாம் கட்ட திட்டம் நிறைவேற்றுகையில் வழக்கம் போலவே நில ஆர்ஜித வழக்குகளால் இத்திட்டம் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே 500 மீட்டர் தூரத்தில் நிறைவேறாமல் தொங்கி நிற்கிறது.

 

 

 

malaimalar28oct2010.png

 

 

டிஸ்கி:

 

பரவாயில்லையே.., யாழ் களத்திலும் சில சீவன்கள் அக்கறையாக தமிழ் நாட்டின் வளர்ச்சி பற்றியும், திட்டங்கள் பற்றியும் கேட்கிறார்கள். நன்றி!

இத்திரியை வாசிக்கும் அனைவருக்கும் நன்றி. :rolleyes:

Edited by ராசவன்னியன்
  • Like 2
Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்!   மனிதர்களின் புத்திக்கூர்மையை மூன்று வகையாகப் பிரித்துச் சொல்கின்றன பண்டைய ஞான நூல்கள்: சிலைப் புத்தி, தாரு புத்தி, மூங்கில் புத்தி. கல்லை உளியால் கொத்தி, செதுக்கிக் கடும் உழைப்பில் சிலையை உருவாக்கவேண்டும். அதேபோல் மிகுந்த அக்கறையுடன் பலமுறை எடுத்துச் சொன்னபிறகு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோரை சிலைப்புத்தி வகையில் சேர்க்கலாம். கல்லைக் காட்டிலும் மரத்தில் சுத்தமாகவும் சுலபமாகவும் ஒரு வடிவத்தைச் செதுக்கிவிட முடியும். அதேபோன்று ஒருமுறை கூறினாலே, சட்டென்று உள்வாங்கிக்கொள்வோரை தாரு புத்திக்காரர்கள் எனலாம். தாரு என்றால் மரம். மூங்கிலை உளியால் ஒரு பக்கம் பிளக்கும்போதே மறுபக்கம் தானே பிளந்துகொள்ளும். அதேபோல் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கும்போதே, முழு விவரங்களையும் இன்னதென அறிந்து கொள்ளும் சூட்சும புத்திக்கு வேணு புத்தி என்று பெயர். வேணு என்றால் மூங்கில். இதையே வாழைமட்டை, கரித்துண்டு, கற்பூரம் ஆகியவற்றை உதாரணம் காட்டியும் விளக்குவார்கள். ஆக, மூங்கில் அல்லது கற்பூர வகை சூட்சுமபுத்தி அமைவது பெரும்பாக்கியம். இத்தகைய புத்திக்காரர்கள் வெளியில் மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். கங்கைக்கரையில் ஞானி ஒருவர் ஆசிரமம் அமைத்திருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் பயின்று வந்தனர். அந்நாட்டு இளவரசனும் அங்கே சீடனாகத் தங்கியிருந்து பயின்றதுடன், அந்த ஆசிரமத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்தான். ஒரு நாள், திடீரென தடியால் அவனைத் தாக்கினார் ஞானி. இளவரசன் அதிர்ந்தான். ‘`என்ன இது… ஏன் அடித்தீர்கள்?’’ எனக் கேட்டான். ‘`உனது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முதல் பயிற்சி இதுதான். திடீர் திடீரென தடியால் உன்னைத் தாக்குவேன். அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும்’’ என்றார் ஞானி. இளவரசன் திகைத்தான். ஆரம்பத்தில் பலமுறை அடிவாங்கினான். போகப் போக அவனது அறிவும் உணர்வும் கூர்மையாயின. ஞானியின் காலடி ஓசையைக்கூடத் துல்லியமாகக் கணித்து, அவரிடமிருந்து தப்பித்தான். ஞானி மகிழ்ந்தார். ‘`பயிற்சியின் முதல் கட்டம் முடிந்தது. இனி, தூங்கும்போது தாக்குவேன். எச்சரிக்கையாக இரு’’ என்றார். இதிலும் ஆரம்பக்கட்டத்தில் பலமுறை அடி வாங்கிய இளவரசன், ஒரு நிலையில் தூக்கத்திலும் உள்ளுணர்வு விழித்திருக்கும் நிலையை எட்டினான். ஒரு நாள், அவன் தூங்கும் வேளையில் அவனைத் தாக்குவதற்காகத் தடியை ஓங்கினார் ஞானி. அவனோ, கண்களைத் திறக்காமலேயே தாக்குதலைத் தடுத்தான். ஞானிக்குத் திருப்தி! மறுநாள், ‘`இனி மூன்றாம் கட்டப் பயிற்சி. தடிக்குப் பதிலாக வாளால் தாக்குவேன். கொஞ்சம் அசந்தாலும் உயிர் போய்விடும்!’’ என்று எச்சரித்தார். இளவரசன் அதிர்ந்தான். ‘விழிப்புணர்வை மேம்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறாரே… ஒரு முறை, இவர் தூங்கும்போது நாம் தாக்கினால் என்ன?’ என்று எண்ணினான். மறுகணம், ஞானியின் முகம் சிவந்தது. ‘`என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா, என்ன துணிச்சல்?’’ என்று அவன்மீது பாய்ந்தார். ஆமாம்… மற்றவர் மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்புணர்வு மிகுந்தவராக இருந்தார் அந்த ஞானி. இளவரசன் வியந்தான். தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். பயிற்சிகள் தொடர்ந்தன. விரைவில் தேர்ச்சி பெற்றான். அவனை வாழ்த்தி வழியனுப்பினார் ஞானி! நாமும் அந்த ஞானியைப் போன்று, இளவரசனைப் போன்று உள்ளே விழிப்பு நிலையை அடைந்துவிட்டால் போதும்; எதிலும் தோற்கவேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால், அதற்குச் சில பக்குவ நிலைகள் தேவைப்படுகின்றன. உங்களின் உண்மை இயல்பை அறிந்துகொள்ளுங்கள்! மனிதனைப் பார்த்து, ‘நீயே பேரின்ப வடிவம்’ என்கின்றன சாஸ்திரங்கள். இதைப் படித்ததும் உங்களில் பலரும் எண்ணலாம்… தினம் ஒரு பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாங்களா பேரின்ப வடிவம் என்று ஏளனம்கூட செய்யலாம். ஆனால், அதுதான் உண்மை. நீங்கள் பேரின்ப வடிவம்தான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை ஒப்புக்கொள்ள மறுத்தீர்கள் என்றால் அதற்குக் காரணம், உங்கள் உண்மை இயல்பு பற்றிய அறியாமையே! சுவாமி விவேகானந்தரிடம், ‘மாயை என்றால் என்ன?’ என்று சிலர் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘`அறியாமை, அறியாமை, அறியாமையே’’ என்றார் அவர். ஒருவன் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்தில் கனவு. பெரிய சிங்கம் ஒன்று அவனைத் துரத்தியது. பதறி விழித்தான். தான் கண்டது கனவு என்பதை அறிந்ததும் அவனுக்கு எவ்வளவு நிம்மதி?! நீங்களும் உங்களின் நிஜ இயல்பை அறிந்துகொண்டால் இப்படியான நிம்மதியையும் ஆனந்தத்தையும் அடைவீர்கள். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! இயல்பை மாற்றிக்கொள்ளாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவனாக இருந்தபோது அவரிடம், ‘`நீ எதிர்காலத்தில் வாஷிங்டனைப் போல் வருவாயா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘`இல்லை. நான் எப்போதும் எடிசனாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்றாராம். அவரவர் நிஜ இயல்பை அறிவதும், காப்பாற்றிக்கொள்வதும் மிகவும் சிறப்பாகும். போர்க்களத்தில் அர்ஜுனனிடம், ‘`உன் தனித்தன்மையை எப்போதும் தக்கவைத்துக் கொள். உன் பிரதான இருப்பை நிலைப்படுத்து’’ என்றே வலியுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணன். ஒரு நாள் சீடர்களோடு காட்டு வழியில் பயணித்துக்கொண்டிருந்தார் புத்தபிரான். ஓரிடத்தில் குனிந்து கைப்பிடியளவு தழைகளைப் பறித்தார். “சீடர்களே, என் கையில் உள்ள இலைகள் அதிகமா? இந்தக் காட்டில் உள்ள இலைகள் அதிகமா?’’ என்று கேட்டார். ‘`இதில் என்ன சந்தேகம். காட்டில் உள்ள இலைகளே அதிகம்’’ என்றனர் சீடர்கள். உடனே புத்தர் புன்னகையோடு கூறினார்… ‘`இந்தக் காட்டில் உள்ள இலைகளைவிட நானறிந்த உண்மைகள் அதிகம். என் கையிலுள்ள இலைகளின் அளவு உண்மைகளை அறிந்தாலே போதும், துன்பங்களில் இருந்து நீங்கள் விடுபட முடியும். எனவே, பாசாங்கு இன்றிப் பழகுங்கள். இருக்கிறபடி இயல்பாக இருங்கள். எப்போதும் எளிமையாக இருங்கள்’’ என்றார் கௌதமர். திருப்தியோடு இருங்கள்… ‘ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது மனத்திருப்தி’ என்கிறது மகாபாரதம். பெரும் தலைவனாக இருந்தாலும் அறிஞனாக இருந்தாலும் நிறைவை அடையாதவன் நிலை தாழ்ந்துவிடுகிறான்’ என்கிறது மத் பாகவதம். மகாபாரதம் என்ன சொல்கிறது தெரியுமா? `வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம், மகிழ்ச்சி-துயரம் ஆகியவை எவனுக்குச் சமமாகத் தோன்றுகிறதோ அவனுக்குப் பிரச்னை இல்லை…’ என்கிறது மகாபாரதத்தின் சாந்தி பருவம். ஆகவே, சகலத்தையும் சமமாக பாவித்து மனநிறைவோடு வாழும் மனிதர்கள் பாக்கியவான்கள். இவர்கள், வீண் ஆசைகளை அண்டவிடுவதில்லை. பற்றற்று இருங்கள்.! பற்றுகொண்டவன் தன்னையும் அறியாமல், பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு, தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து, தானும் சுதந்திரமாக இருக்கிறான். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! பகவான் கண்ணன் நினைத்திருந்தால் `போர் புரிந்தே ஆக வேண்டும்’ என்று பார்த்தனுக்குக் கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. உற்றார் உறவுகள்மீது கொண்ட பற்றானது உள்ளத்தைப் பலவீனப்படுத்திவிட, தன்னிடம் சரணடைந்த அர்ஜுனனுக்கு, அவனை அவன் அறிந்துகொள்ளும் விதம் கீதை எனும் அமிர்தத்தைப் புகட்டினார். அதன்பிறகும் “நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி, நீ உன் விருப்பம்போல் செயல்படு’’ என்று அவனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். விளைவு நாமறிந்ததே! பூந்தோட்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் சில பூக்கள் மட்டுமே இறைவனுக்கு ஆரமாகும். மீதம் உள்ளவை எவ்வித எதிர்பார்ப்புமின்றி மலர்ந்து சிரிக்கவே செய்கின்றன. நாமும் மனதால் மலராக வேண்டும். https://thinakkural.lk/article/246653
    • வேரோடு களைதல் காலத்தின் தேவை! -நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புகளைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள், மோதல்கள், வன்முறைகள், வறுமை துயரங்கள் என்பன கடலலைபோல தொடர்ந்து ஓயாது அடித்துக் கொண்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தில் இருப்போரின் அட்டகாசங்கள், அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்கள், இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால் தெருவுக்குக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்ற பொது மக்கள், உள்நாட்டில் வாழ்வு சூனியமான நிலையில் தமது குடும்பங்களை காப்பாற்ற வெளி நாடுகளுக்கு ஓடுகின்ற உழைப்பாளிகள் படை, வல்லுநர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தொந்தரவுகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு மேற்கு நாடுகளில் குடியேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள். நாம் மேற் சொன்னவைகள் அனைத்தும் நாட்டில் மிகப் பெரிய அழிவுகளின் அறிகுறி என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். இதுவரை அரசியல் வேறு ஆட்சியாளர்கள் வேறு என்று வாழ்ந்து வந்த மக்கள் இன்று நாம் அனுபவிக்கின்ற இந்த துயரங்கள் எப்படி எங்கிருந்து வந்தது.அவற்றை நமது தலைகளில் கொட்டி விட்டவர்கள் யார் என்று ஆராய முற்பட்டிருக்கின்றார்கள். இதனால்தான் 75 வருடங்களின் சாபம் என்று ஒரு வார்த்தை நமது அரசியலில் இன்று பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக அடிக்கடி உச்சரிப்பது போல ஆகாயத்தில் இருந்து சோறு, குடி மக்களுக்கு சிங்கப்பூர் வாழ்வு, ஆசியாவின் ஆச்சர்யம், சௌபாக்கிய என்ற அனைத்தும் இதுவரை வாக்குக் கொள்ளைக்காக மக்களை ஏமாற்ற பாவித்த மந்திரங்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.   இதனால்தான் இன்று மக்கள் மத்தியில் மாபெரும் கருத்தியல் மாற்றங்கள் ஏற்பட்டு அரசியல் போக்கிலும் அது பிரதிபலிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அதிகாரத்தில் இருப்போர் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை தட்டில் வைத்து கொடுக்க மாட்டார்கள். ஆட்சியாளர்கள் தமது பிடியை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அரசியல் யாப்பை கூடக் கண்டு கொள்ளாமல் தான்தோறித்தனமான தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டம் இது பற்றிக் கேள்வி எழுப்புகின்ற போது நீதிபதிகளின் கழுத்தையே ஆட்சியாளர்கள் நசுக்குகின்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது. சர்வதேசம் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. பிரதான பௌத்த பீடாதிபதிகள் கூட மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரச தலைவர்களிடத்தில் கோரிக்கை விடுத்தாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சட்ட விரோத நடவடிக்கைகளில்தான் இப்போது ஆர்மாக இருந்து வருகின்றார்கள். இதுவரை நாட்டில் பேசு பொருளாக இருந்து வந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற கதை நூலறுந்த பட்டம் போல தொலைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இது விடயத்தில் இந்தியா ஈழத் தமிழர்களை ஏமாற்றி விட்டது. இதன் பின்னரும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதுதான் நமது கருத்து.   ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது தமிழர்கள் மட்டுமல்ல பேரினத்தவர்களும் வஞ்சக அரசியல்வாதிகளினால் இனி இல்லை என்ற அளவுக்கு ஏமாற்றப்பட்டு விட்டனர். ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், கடந்த 75 வருடங்கள் நாம் செய்த தவறுகள்தான் இன்றைய அவலங்களுக்கு  காரணம் என்று ஜனாதிபதி ரணிலே சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்படியாக இருந்தால் அப்போது ஆட்சியல் இருந்தவர்களைத்தான் இவர் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் கடந்த கால ஆட்சிகளில் அவரும் அவரது கட்சியினரும் கணிசமான காலத்தில் அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இதனை மறந்து ஏதோ இன்று பிறந்த பாலகன் போல அவரது கதைகள் இருக்கின்றது. இதை நாம் வழக்கம் போல நகைச்சுவைப் பட்டியலில் தான் சேர்த்து விடுவோம். ஆனாலும் இது அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி குறுக்கு வழியில் இன்று அதிகாரமிக்க பதவியில் அமர்ந்திருக்கின்றது. அந்தக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் இன்று இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வஜிர அபேவர்தனதான் இன்று ஆளும் தரப்பு சார்பாக பெரும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். கடந்த 75 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள்தான் நாட்டை பிழையான வழியில் கொண்டு சென்று விட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் சொல்லும் போது வஜிர அபேவர்தன இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாட்டை  மீட்டெடுக்க முடியும் என்று புதுக் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார். இதனை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள்?   தற்போதைய ஜனாதிபதி ரணிலும் மொட்டுக் கட்சியினரும் அரசியல் யாப்பையோ சட்டம் நீதி என்பவற்றையோ மதிக்கத் தயாராக இல்லை. தாம் நினைத்ததுதான் சட்டம், நீதி என்ற நிலையில்தான் இப்போது அவர்கள் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அவர்களுக்கு இப்போது அதிகாரத்தில் இருப்பதற்கு பாதுகாப்பு படைத்தரப்பின் உதவிதான் தேவைப்படுகின்றது. ஆனால் படைத்தரப்பில் கூட அவர்களுக்கு விசுவாசமில்லா ஒரு நிலை தற்போது தோன்றி இருப்பதால் ஆட்சியாளர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் தெரிகின்றது. இது தொடர்பான அந்தரங்க  குறிப்பொன்றை நாம் மற்றுமொரு இடத்தில் பதிந்திருக்கின்றோம். தமது அரசியல் இருப்புக்காக ஆட்சியாளர்கள் அரசியல் யாப்பை மதிக்கத் தயாராக இல்லை. நீதித்துறையிடம் இது பற்றி நியாயம் கேட்கப் போனால் நீதிபதிகளையே அதிகாரத்தில் இருப்போர் விசாரணைக்கு அழைத்து குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் இதே ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்தபோது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆரின் ஆட்கள் தமக்கு எதிராக  நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்ன நீதிபதிகளுக்கு தொந்தரவு செய்து வந்தனர். அவர்கள் வீடுகளுக்குக் கூட குண்டர்களை வைத்து கல்லெறிந்த சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று அதனையும் விஞ்சிய அட்டகாசம்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மனிதன் நாட்டில் அதிகாரம் மிக்க கதிரையில் அமர்கின்றார் என்றால் இந்த நாட்டு அரசியல் யாப்பில் எந்தளவுக்கு பலயீனம் இருந்து வந்திருக்கின்றது என்பது புரிகின்றது.இவ்வாறான சம்பவங்கள் உலக அரசியலில் எங்கும் நாம் இதுவரை பார்த்ததில்லை. எனவே புதியதோர் அரசாங்கம் இலங்கையில் அதிகாரத்துக்கு வருமாக இருந்தால் யாப்பு மாற்றமொன்று காலத்தின் உடனடித் தேவை என்று இன்று உணரப்பட்டிருக்கின்றது. நாம் மேற்சொன்ன வஜிர அபேவர்தன கதைப்படி இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் ஆட்சி என்றால் இந்த நாட்டில் தேர்தலுக்கே வாய்ப்புக் கிடையாது. அரசியல் யாப்போ நீதியோ முக்கியமானதல்ல. நாடுதான் முக்கியம் என்ற ரணிலின் வார்த்தை கூட இதற்குக் களம் அமைப்பதாகத்தான் இருக்கின்றது.   இனிவரும் காலங்களில் ஆட்சியாளர்கள் படைத்தரப்பினரின் உதவியுடன்தான் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள். இன்றுகூட நாட்டில் அந்த நிலைதான் காணப்படுகின்றது. படைத்தரப்பு நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது கீழ்மட்ட படை வீரர்களில் பெரும்பாலானவர்கள் அரசின் இந்தப் போக்கை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் படைத்தரப்புக்கு கொடுக்கப்படும் தகவல்களை அவர்கள் உடனுக்குடன் வெளியில் கசிய விடுகின்றார்கள். ஆனால் ஆளும் தரப்புக்கு விசுவாசமாக சிறு தொகை அதிகாரிகள் மட்டுமே செயலாற்றிக் கொண்டிருப்பதாக தெரிகின்றது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தன்னைச் சந்தித்த ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்  திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அகசா குபோடாவுடன் நடந்த சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார். பொதுவாக நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை பற்றித்தான் ஐ.நா கவனம் செலுத்தும். இப்போது நமது நாட்டு உள்நாட்டுப் பிரச்சினையிலும் ஐ.நா தலையிட வேண்டிய அளவுக்கு நிலமை கட்டுமீறிச் சென்றிருக்கின்றது. எனவே சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளின் போது பேரினத்து அரசு எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கும். ஆட்சியாளர்களைப் பொறுத்துவரை இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போது  இனம் தெரியாத படைவீரர்கள் தடிகளை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் இந்த தடிகள் மின்னேரியக் காட்டில் வெட்டப்பட்டு இனமனுவ என்ற படை முகாமில் வைத்து லொறிக்கு ஏற்றப்பட்டு அது கொழும்பிலுள்ள ஒரு படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட அனைத்து தகவல்களும் சமூக ஊடகங்களில் வெளி வந்தது. ஆனால் அன்றைய தினம் இந்த தடிகளை வைத்திருந்த இராணுவவீரர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது அது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் இன்று பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகின்றன. ஆளும் தரப்பு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அண்மையில் நடந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் படுதோல்வி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் எதிரணியினரும் நடுநிலை ஊடகங்கள் அதற்கு முற்றிலும் முரணாக செய்திகளில் இது பெரு வெற்றி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே மக்கள் எந்தச் செய்திகளைப் பார்க்கின்றார்களோ அந்த வகையில்தன் இது பற்றிய தீர்மானங்களுக்கு வருவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்பதனை மக்கள் தமது தேவைகளுக்காக அந்த இடங்களுக்குப் போகும் போது புரிந்து கொள்ள முடியுமாக இருந்திருக்கும். அப்போது யார் சொல்வது யதார்த்தம் என்பது புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும். கடந்த 15ம் திகதி நடந்த வேலை நிறுத்தம் காரணமாக 4600 கோடி ரூபாய்கள் இழப்பு என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறி இருக்கின்றார். அப்படியாக இருந்தால் வேலை நிறுத்தம் எப்படி தோற்றுப் போனது என்று கேட்கத் தோன்றுகின்றது. இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் அடிப்படை உரிமைகளுக்கு குறிப்பாக மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சுதந்திரப் போராட்டம் தேவை என்ற நிலையில்தான் ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் இன்று மக்களைக் கொண்டு போய்விட்டிருக்கின்றது. https://thinakkural.lk/article/245688
    • ஓம் ஆனால் இவ்வளவு காலமும் இருந்தது. இப்போதும் ஏலவே பென்சன் வயதுக்கு வந்தவர்கள் எடுக்கிறார்கள். ஆகவே NI கட்டாதவர், போதியளவு கட்டாதவருக்கும் - basic state pension கிடைத்தது. கிடைக்கிறது. அதே போல் - வேலை இல்லா கொடுப்பனவு 16 வயதில் எடுக்க தொடங்குபவர் ஒரு பங்களிப்பும் (பிறிமியம்) இல்லாமல் காசு எடுப்பார். அதைப்போலவே வாழ்நாள் மாற்றுத்திறனாளியும் அவர்களுக்கு உரிய பங்கை எப்போதும் செலுத்தாமலே பலனை வாழ் நாள் பூராகவும் எடுப்பார். இவர்கள்+ பென்சன் காரர் கொடுப்பனவுகளை fund பண்ணுவது (முழுவதுமாக அல்ல) ஏனையோரின் NI contributions. ஆகவே இதை காப்புறுதி என எப்படி சொல்லமுடியும்? இயலுமானர்கள்/இருப்பவர்களிடம் எடுத்து, எல்லோருக்கும் சேவையை வழங்குவது - வரி, taxation. காப்புறுதி அல்ல. இல்லை. இது ஒரு காப்புறுதி என பெயரிடப்பட்ட வரி. NI வரமுதலும் இந்த பாதுகாப்புகள் இருந்தன. ஆனால் தொடர்ந்தும் அதை செய்ய வழி தெரியாத போது,  தந்திரமாக உள்ளே வந்த வரிதான் NI.
    • பார்த்தேன் சிரித்தேன்...
    • அண்ணை சிங்கள பெண்களதும் கேரள பெண்களதும் ஆடை அணிதலும், கலை நடனங்களிலும் சில ஒற்றுமை தெரிகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.