Jump to content

பிரபல கவிஞர் வாலி காலமானார்.


Recommended Posts

Manushya Puthiran

வாலிக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்ற பெயரில் அவர் அவ்வப்போது நேர்ப்பேச்சில் சொன்ன குழந்தைத் தனமான சிலேடைகளை எல்லாம் அவரது கவித்துவமாக கூறி பலரும் வாலியை டேமேஜ் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் என்ன செய்தான் என்பதை தெரியமலேயே அவனை இகழ்வதும் புகழ்வதும் தமிழ்ச் சமூகத்தில் பலருக்கும் நடப்பதுபோலவே வாலிக்கும் நடக்கிறது.

இன்று புதிய தலைமுறையில் பேசிய தமிழருவி மணியன் அய்யா அவர்கள் வாலி சமுக அநீதிகளைக் கண்டு கொதித்த ஒரு சமூகப் பொறுப்புள்ள கவிஞனாக திகழவில்லை என்று விமர்சித்தார். ஒரு ஓவியனிடமோ இசைக் கலைஞனிடமோ நீ சமூக அநீதியைக் கண்டு ஏன் கொதிக்கவில்லை என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாள்னிடம் மட்டும்இந்தக் கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஏன் ஒருவன் வாழ்நாளெலலம் கஸல் காதல் கவிதைகளை மட்டும் எழுதும் ஒரு கவிஞனாக இருந்தால்தான் என்ன? வைக்கம் முகமது பஷீரை ஒரு சமூகப் போராளி என்பதற்காகவா கேரள சமூகம் கொண்டாடுகிறது?

ஒரு கவிஞனையோ எழுத்தளனையோ ஏற்பதை அவனது சமூக - அரசியல் நிலைப்பாடுகள் வழியாகவே செய்ய வேண்டும் என்பது தமிழ் நாட்டில் எழுதபடாத சட்டமாக மாறிவிட்டது. இதனால் பல முக்கியமான படைப்பாளிகள் அவமானபடுத்தப்பட்டிருக்கிறர்கள். பல போலிப் படைப்பாளிகள் முன்னிறுத்தபட்டிருக்கிறார்கள்.

அரசியல் குண்டாந்தடிகளால் இலக்கிய அளவுகோல்களை உருவாக்குவதை நிறுத்தாமல் நமக்கு மீட்சியில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

சென்னை: கவிஞர் வாலியின் பெருமை யாருக்கும வாய்க்காதது என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வாலியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

நிரப்ப முடியாத வெற்றிடம்

தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அழைத்த போதெல்லாம் அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்து விட்டேன்.

வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் இருக்க முடியும். எம்.ஜி.ஆர். - சிவாஜி தொடங்கி நடித்துக்கொண்டிருக்கும் நான்காம் தலைமுறை வரைக்கும் பாட்டெழுதிய பெருமை அவருக்கு உண்டு.

சுப்பையா நாயுடு முதல் ரஹ்மான் வரை...

கண்ணதாசன் என்ற கவியரசருக்கு சற்றே இணையாக நெடுந்தூரம் நடந்து வந்த சிறப்பும் வாலிக்கே வாய்த்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு வரிகளால் வலிமை சேர்த்தார்.

எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உயர்த்திப் பிடித்ததில் வாலியின் வார்த்தைகளுக்கு பெரும்பங்கு உண்டு. திராவிட இயக்க அரசியலை சாகித்தியத்தில் கொண்டு வந்த சாமர்த்தியம் வாலிக்கு வசப்பட்டிருந்தது. "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" என்று எம்.ஜி.ஆருக்கு எழுதியவர், கலைஞரின் மைந்தர் மு.க.முத்துவுக்கு "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ" என்று எழுதினார்.

தனக்கு தானே இரங்கல் பாடல்

மூன்று என்ற தொடங்கும் பல்லவியை இரண்டு பேருக்கும் பயன்படுத்தி இரு சாராரின் மனம் கவர்ந்த திறமை வாலிக்கு மட்டுமே வரும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதவர்; தான் உண்டு தன் தமிழ் உண்டு என்று வாழ்ந்தவர்.

வாழ்வின் நிறைவுக்காலத்தில் நோய்களை சந்தித்தாலும் நொந்து கொள்ளாதவர். "தாய்கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய்கொண்டு போகும் காலம் அம்மா" என்று எழுதிய வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார்.

தமிழ் மரணம்

அவர் உயிர் பிரிந்திருக்கலாம்; உடலை ஐம்பூதங்கள் பிரித்துக் கொண்டிருக்கலாம். அவர் தமிழ் மரணம் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறது. அது காலமெல்லாம் அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கும். இறங்கும் கண்ணீரை துடைத்து கொண்டு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Thatstamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ். ஈழத் தமிழர்கள் பால் இயல்பான நேச உணர்வுடன் செயல்பட்ட வாலியின் பேனா எழுதிய இந்தக் கவிதை, படிப்போர் விழி நனைக்கும்..

 

. "ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? மாமனிதனின் மாதாவே! - நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் - பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று...

 

சூளுரைத்து - சின்னஞ்சிறு தோளுயர்த்தி நின்றது நீல இரவில் - அது நிலாச் சோறு தின்னாமல் - உன் இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் - சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது அம்மா! அதற்கு நீயும் - அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு, தினச் சோறு கூடவே இனச் சோறும் ஊட்டினாய்; நாட்பட - நாட்பட - உன் கடைக்குட்டி புலியானது காடையர்க்கு கிலியானது!

 

'தம்பி! தம்பி!" என நானிலம் விளிக்க நின்றான் - அந்த நம்பி; யாழ் வாழ் - இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி; அம்மா! அத்தகு - நம்பி குடியிருந்த கோயிலல்லவா - உன் கும்பி! சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை... ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி; அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி; செம்பொன்னாய் இருந்தோரை - செப்பாக்கி; அவர்கள் வாழ்வை வெட்டவெளியினில் நிறுத்தி வெப்பாக்கி; மான உணர்வுகளை மப்பாக்கி; தரும நெறிகளைத் தப்பாக்கி - வைத்த காடையரை வீழ்த்த... தாயே உன் தனயன் தானே - தந்தான் துப்பாக்கி!

 

'இருக்கிறானா? இல்லையா?" எனும் அய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்! அம்மா! இந்த அவல நிலையில் - நீ... சேயைப் பிரிந்த தாயானாய்; அதனால் - பாயைப் பிரியாத நோயானாய்! வியாதிக்கு மருந்து தேடி விமானம் ஏறி - வந்தாய் சென்னை; அது - வரவேற்கவில்லை உன்னை! வந்த வழிபார்த்தே - விமானம் திரும்பியது; விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது! இனி அழுது என்ன? தொழுது என்ன? கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள் கன்ன வயல்களை உழுது என்ன? பார்வதித்தாயே! - இன்றுனைப் புசித்துவிட்டது தீயே! நீ - நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி; உனக்குத் தங்க இடம்தராத - எங்கள் தமிழ்மண் - நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி!

 

(பிரபாகரன் தாயார் மறைவின்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது) 



Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/07/vaali-s-poetry-on-tamil-eelam-prabh-179441.html

Link to comment
Share on other sites

கண்போன போக்கிலே... வாலியின் பாடல்கள் என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே, முதலில் வந்து விழுவது அவர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்காக எழுதிய கண்போன போக்கிலே பாடல்தான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உலகுக்கு சொல்லிக் கொடுத்த பாடல். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்று ஆரம்பிக்கும் அந்த சரணம்...!

ஒரு நடிகராக மட்டுமே இருந்த எம்ஜிஆருக்கு 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்...' என்று எழுதினார் வாலி. நடிகர் தலைவராகி முதல்வரானார். ஏழைகள் சந்தோஷம் கொண்டார்கள். வறியவரை சந்தோஷம் கொள்ள வைத்த இரண்டு முதல்வர்களில் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர்... அடுத்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... வாலி எழுதியதே நடந்தது!

குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் பாடல்களை எழுதத் தகுதியான கவிஞரும், அதை திரையில் சொல்லத் தகுதி வாய்ந்த நடிகர்களும் இருந்த காலமது. அன்று வாலி எழுதிய நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே... பாடலை இப்போது கேட்டாலும் நெஞ்சம் நிறைந்து தளும்புகிறது. என்ன வரிகள்... எத்தனை கவித்துவம்... எவ்வளவு நேர்மை... என்னே அழகு!

வாலி எழுதினார்... எம்எஸ்வி இசை தந்தார்... டிஎம்எஸ் குரல் தந்தார்.... எம்ஜிஆர் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்தார். இப்படி ஒரு இணையை தமிழ் சினிமாவில் இனி பார்க்கத்தான் முடியுமா!

பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற பாடல் கண்ணன் ஒரு கைக்குழந்தை. ராஜாதான் இசை. எழுபதுகளில் தொடங்கி இன்று வரை, தமிழர் உலகின் ஒப்பற்ற அமுத கானம் இது.

ஒரே நாள் உனை நான்... இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காதலர்களின் தேசிய கீதமாகத் திகழ்ந்தது. எம்ஜிஆர் கால பாடல்களிலிருந்து எத்தனை அழகான transition... அந்த வரிகளில் துள்ளும் இளமையைப் பாருங்கள்...

மழை வருது மழை வருது... இனிமை என்ற சொல்லுக்கு இனிமை சேர்த்த மெட்டு இந்த பாடலும் அதன் வரிகளும். அதை ஜேசுதாஸையும் சித்ராவையும் இளையராஜா பாட வைத்த விதம்... அம்மம்மா... வாழ்வை இனிமைப்படுத்திய பாடல். இடம்பெற்ற படம்: ராஜா கைய வச்சா.

கண்ணாலே காதல் கவிதை... இதுவும் காதலர்களுக்காக வாலி தந்த வைரமணிப் பாட்டுதான். பிரதாப் போத்தன் இயக்கத்தில் வந்த ஆத்மா என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். வாழ்நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

இசையும் தமிழின் மகத்துவமும் உணர்ந்த அத்தனை பேரும் அனுபவித்து ரசிக்கும் பாடல் இது. வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும் அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன? அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட...

இந்தப் பாடல் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. மறைந்த நடிகர் விஜயன் இயக்கிய படம் புதிய ஸ்வரங்களில் இடம்பெற்ற உன்னதமான பாட்டு. ஓ வானம் உள்ள காலம் மட்டும வாழும் இந்தக் காதல்... இதுதான் தேவன் ஏற்பாடு... இணைத்தான் பூவைக் காற்றோடு... இந்த பாடலின் இனிமை உணர்ந்தோ என்னமோ.. அடுத்த வரியை இப்படி எழுதியிருப்பார் வாலி... ஓ கானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தப் பாடல்...!

உன்ன நெனச்சேன்... பாட்டுப் படிச்சேன்...

காதல் தோல்வியை வாலி வார்த்தைகளாக வடித்த விதமிருக்கிறதே... அது கமல் ஹாஸனையே கண் கலங்க வைத்தது இந்தப் பாடலில். இதைவிட உணர்ச்சிப் பூர்வமா எழுத முடியாதுய்யா என்று கூறி வாலி கொடுத்த இந்தப் பாடலைப் படித்து முடித்து கலங்கி நின்றாராம் கலைஞானி.

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட... பின்னொரு ஆண்டில் உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் என்ற வாலியின் வரிகளே படத் தலைப்பானது. அந்தப் படத்துக்கும் வாலிதான் பாட்டெழுதினார். அதில் ஒரு பாட்டு.. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி..." அதற்கு இணையான ஒரு காதல் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா...

போவோமா ஊர்கோலம்... இது சின்னத்தம்பி பாட்டு. பாட்டுப் பைத்தியம் பிடித்துவிட்டதாடா உனக்கு என்று பார்ப்பவர் கேட்கும் அளவுக்கு இந்தப் பாடலைப் பைத்தியமாய் பாடித் திரிந்த இளைஞர்கள் பலரை பின்னோக்கி திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது வாலியின் மரணம்.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே... தமிழ் சினிமாவின் ஆயுள் உள்ளவரை வாழும் ஒரு பாடல் என்ற உயரிய அந்தஸ்துக்குரிய அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் வாலிதான். அதில் ஒவ்வொரு வரியும் பசுந்தங்கம், புதுவெள்ளி, மாணிக்கம், மணி வைரம்... அபிராமி, சிவகாமி, கருமாரி, மகமாயி திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா.... அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே... ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா... ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா... அய்யா வாலி... இத்தனை அவசரமேனய்யா...!

Thatstamil

Link to comment
Share on other sites

கவிஞர் வாலி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரைத்துறையால் மட்டுமல்ல!! அவர் அளித்துள்ள பல படைப்பால்,,, ‘தமிழ்பால் என்னைக்குடிக்க வைத்தவர். தமிழ் அவர்பால் கொண்டுள்ள காதலோ! அவர் தமிழ்பால் கொண்டுள்ள காதலோ...வார்த்தைகள் யாவும் அவருக்குக்கட்டுப்படும்.

 

அழகுசேர்க்கும் சொற்களால் அருமையான படைப்புகள் தந்த கவிஞர் நல்ல படைப்பாளி.

 

 

தமிழ் உலகில் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்பார். கவிஞர்.

 

 

மறையவில்லை அவர். நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருப்பார்!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அற்புதமான பாடல்களைத் தந்த கவிஞர் வாலிக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

உன்னை பிடித்து போக இந்த கவிதையும் ஒரு காரணி 

ஆழ்ந்த இரங்கல் :(

17585_493609444010377_972873213_n.jpg
நடையில் நின்றுயர் நாயகன் 

------------------------------------------------------

இவ்வுளவு பெரிய நாயகனை நான் வாழ்த்தி 

ஒரு கவிதை படிக்காவிட்டால் 

என் தமிழ் துருப்பிடித்து போகும் ...

வையமிசை வைகலன் வாடாது 

அய்யன் வள்ளுவன் வகுத்தளித்த நூல்நடை 

பால்நடை முப்பால்நடை 

அந்த நூல்நடை பால்நடை -போல் நடை 

வைகோ கால் நடை 

கால்நடை மனிதர்களை கால்நடை மூலமாகத்தான் 

மேல்நடை மனிதர்களாக மாற்ற முடியும் 

என முன்பு எண்ணியவன்...சீன சிவப்பு சிந்தனையாளன் மா.வோ . மாவோவின் மறுபிறப்புத்தான் வைகோவோ...

நீ தடந்தோள்களில் கருப்பு துண்டு...

தாங்கி நடக்கும் நெருப்பு துண்டு..

ஆயினும் நீ எதையும் அவிக்க பிறந்தவனல்ல...

தென்புலத்தார் பெருமை தென் படாமல் கவிக்க பிறந்தாரை 

கவிழ்த்து புகழ் குறிக்க பிறந்தவன் நீ ...

வைகோ பேச்சை காதில் வாங்கினால் போதும் 

வைக்கோல் கூட ஒரு தைகோள் போல 

விறைத்து நிற்கும் 

வீரம் இறைத்து நிற்கும் 

வைகோவே ...தமிழன்னை தலையில் வைக்கும் பூவே ..

நற்றமிழ் ஆங்கில நாளும் அமர்ந்திருக்கும் நாற்காலி உனது நாக்கு 

அந்த நாக்களவு கூர்மை உன் மூக்கு..

இத்தகு கூர்மைகள் கூர்த்த மதியின் குறியீடுகள் ..

நல்ல குறியீடுகளுக்கு ஏது குறுக்கீடுகள் ??

தேர்ந்த குணாளனே...

என் நாற்பது ஆண்டுகால நகல்களின் தோய்ந்தவனே 

நவிலர் தெரியதான நல்லியல்புகள் வாய்ந்தவனே

மாபெரும் மறுமலர்ச்சி பயணத்தில் 

மழையில் நனைந்து 

மதிய வெயிலில் காய்ந்தவனே

காலங்கள் பல நடந்து பாதங்கள் தேய்ந்தவனே 

நீ நடந்து வருகையில் பூமரங்கள் வீசினவாமே சாமரங்கள் ...

வைகோ ...அது உன் ‘வேர்’ வைகோ ..

நீ நடந்து வருகையில் தரை இறங்கி நின்றனவாமே

தண்ணீர் மேகங்கள் ..

வைகோ அது உன் ‘பார்’ வைகோ 

உயர்ந்த மனிதரே ...ஒன்று நிச்சயம் 

பூமி சிலிர்த்திற்கும் உன் பாதங்கள் தொட்டதாலே

நெஞ்சில் கவடுகள் இல்லாதவனின் காலடிச்சுவடுகள் பட்டதாலே..

என் நண்பனே... ஏறார்ந்த பண்பனே...

சிறைச்சாலையில் சில சாயங்கால வேளையில்

நீ பந்து விளையாடிய போது உன் நெஞ்சில் வந்து விளையாடியிருக்குமே 

என் நினைவு..

அது எப்படி என்று சொல்லவா ..

அன்று நீ ஆடிய ஆட்டம் ‘வாலி’பால் அல்லவா ...??

மக்கள் கடல் பின்தொடர ..மன்மிசை நடந்த மனித நதியே .. 

நீ பாதங்களால் எழுதியிருக்கிறாய் பூமி தாளில் ஒரு புனித விதியே ..

பூகாயம் சீர்பட அதன் கோணல்கள் நேர்பட 

வாழிய நீ பல்லாண்டு ...!!!!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZTU19_xn4gw

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.