Jump to content

யாழ்கள கவிகளிடம் ஒரு பணிவான கேள்வி .....


Recommended Posts

என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் 
 
சில பாடல்களை இசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் ,அந்தப்பாடல்களுக்குரிய வரிகளை எழுதி தரும் கவியாளர்க்கும் ஏற்படும் உறவு நிலையின் யதார்த்தம் சில வேளைகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது .இங்கே நான் குறிப்பிடும் கவிகள் யாரும் யாழ் களத்தில் இல்லாதவர்கள் ..........கவிகளாகிய உங்களிடம் இருந்து நான் சில யதார்த்தமான உண்மைகளை .எதிர்காலத்தில் ஓர் புரிந்துணர்வுடன் பல ஆக்கங்களை இணைந்து வழங்க வேண்டுமெனில் ஓர் தெளிவு நிச்சயம் தேவை .
 
தற்சமயம் நான் மாவீரரின் வணக்க பாடல்களின் இசை முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறேன் .அந்த வகையில் இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ................ஆனால் இசையுடன் அந்தவரிகளை இணைக்கும்முயற்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது .
 
ஆனால் சிலர் அதைப்பற்றி பேசினால் எரிந்து விழுகிறார்கள் .கவிதை இப்படித்தான் ,இப்படியே பாடுங்கள் என்கிறார்கள் .........அப்படி பாடினால் அதை நாட்டார் பாடல் போல தான் பாடமுடியும் .........
 
ஆனால் எப்படி ஒரு மெட்டை ஒரு பாடலுக்கு போடும் எனக்குள்ள அதே ஓர் உணர்வே அந்த கவிஞர்க்கும் இருக்கும் ,என்ற உணர்வை நான் மதிக்கும் படியினால் ........எனக்கு நான் சரியா ,அவர்கள சரியா என்று முடிவெடுக்க முடியவில்லை .
 
ஆகவே யாழ் களத்தில் இருக்கும் என் அன்புக்குரிய கவிகளிடம் இந்த கேள்விக்கான பதிலை விடுகிறேன் ..............உங்கள் பதில் எதிர்காலத்தில் பல பயனுள்ள படைப்புக்களை உருவாக்க பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் .நன்றி ........
 
அன்புடன்..................
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் சொற்களுக்குப்  பதிலாக அதே கருத்துள்ள வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன்.

 

பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் தங்கள் இசைக்குரிய எழுத்துக்களைத்தான்

இப்போது எதிர்பார்க்கின்றனர்.

 

நீங்கள்  ஏன் இத்தனை கஸ்ரப்படுகின்றீர்கள் :)

 

Link to comment
Share on other sites

இந்தமாதிரி விடயங்களில் கவிஞர்களுக்கு சந்தங்கள், தாளங்கள் பற்றிய பரீட்சயம் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாடல் கதாகாலட்சேபம் மாதிரி ஆகிவிடும்.. :D

கவிஞர் கண்ணதாசனுக்கு இசையின் கூறுகள் தெரிந்திருந்ததால் மெல்லிசை மன்னரின் பணி ஓரளவுக்கு இலகுவாகிப் போனது..

நீங்கள் குறிப்பிடும் கவிகளும் தங்களை கவியரசுபோல் நினைத்துக்கொண்டு சந்தங்கள், தாளங்களுக்குப் பொருந்தும் வரிகளைத் தருவார்கள் என நம்புகிறேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி எழுதுபவர்களுக்கு மனதிலே தானாக ஒரு மெட்டும் சேர்ந்து உருவாகும். ஆனால் இசையமைப்பவருக்கு  வேறொரு மெட்டு உருவாகும். கவி எழுதுபவர் இப்படி இருக்கலாம் எனத் தன் கருத்தை வைக்கலாமே தவிர இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இசையமைம்பவருக்குக் கூறினால் இசை நன்றாக வராது. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால் இருவரும் ஒத்திசைந்து இசையமைத்தால் இன்னும் நன்றாக வரும் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் உங்களிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம். அதற்காக நாங்க யாழ் கள கவிஞர்களோ.. கவி வித்துவான்களோ கிடையாது.

 

கிட்டு மாமா நினைவாக நான் 2005-6 களில் எழுதிய வரிகள் சில உள்ளன.

 

இதனை எனக்குள் எழுந்த ஒரு பாடல் மெட்டுக்கு அமைய எழுதினேன். இதனை முடிந்தால் உங்கள் இசைக்கு அமைய மாற்றியமைத்து பாடலாக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

 

அப்போதெல்லாம் தேசத்தின் மீதான பிரியம் கொண்டவன் என்ற வகையில் தேசப்பிரியன் என்ற பெயரில் எழுதி இருக்கிறேன்.

 

அவசியம் என்றில்லை. வசதி இருந்தால் முயற்சித்துப் பாருங்கள்.

 

நன்றி.

 

kiddu.jpg

 

வெடியோசை எழுந்தது
எங்கள் நெஞ்சோசை அழிந்தது
களத்தோடு களமாடி
கோட்டைக்குள் அடித்தெழுந்த
அந்தப் புயலும் ஓய்ந்தது...!
தங்க தமிழீழ வேங்கையது
வங்கக் கடல் நடுவே சரிந்தது...!

அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!

குரலோசை எழுந்தது - அது
அவன் புகழோசை சொன்னது
விடியலின் தாய் மகன்
விடிவெள்ளியான கதை
முடிவின்றிச் சொன்னது....!
தர்மம் வெல்லும் என்பது
காலத்தின் கோலம் என்றது
சரியாகி நின்றது
எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள்
அலையலையாய் சுமந்தது...!


- தேசப்பிரியன்

 

http://kundumani.blogspot.co.uk/2009/01/blog-post_16.html

 

 

Link to comment
Share on other sites

நன்றி நெடுக்ஸ் .

 
இந்த வரிகள்  நிச்சயம்  பாடலாக வரும். அடுத்து வரும் கிட்டண்ணாவின் நினைவு நாளுக்குள் இந்த வரிகளை பாடலாக அமைத்து தருகிறேன்.
 
 
 
நெடுக்ஸ் நீங்களும் மாவீரர் பாடல் ஒன்றை எழுதி தந்தால் சிறப்பாய் இருக்கும் .நன்றிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது நட்பு வட்டத்தின் முயற்சியில் உதித்த மாவீரர்களுக்கான வரிகள்...

 

தீவினில் ஒரு தீபம்
அது வீர தீபம்
உடல்தனை உருக்கி
உயிரினை அளித்து
மூட்டிய தீபம்

கார்த்திகை மாதம்
மலர்ந்திடும் மலரும்
காட்டினில் சிறுத்தையும்
வளவினில் செம்பகமும்
வீதியில் வாகையும்
வணங்கிடும் தீபம்
அது வீர தீபம்

மக்களின் மனங்களில்
மலர்ந்திடும் நினைவுகள்
சொரிந்திடும் விழினீரில்
உருகியே தாழ்ந்திடும் தீபம்
அது வீர தீபம்

விடியலின் ஒளிதேட
இருளோடு கலந்திட்ட
தமிழீழ மைந்தரவர்
ஏற்றிய தீபம்
அது வீர தீபம்

காற்றோடு சாயினும்
மழையோடு மாழினும்
தமிழீழ மண்ணிலது
அணையாத தீபம்
அது வீர தீபம்

வேங்கைகள் உயிரது
வேள்வியில் கலந்திட்ட
வேளையில் பிறந்திட்ட
மாவீர தீபம்
அது வீர தீபம்

அழியாத நினைவோடு
நெஞ்சினில் வாழ்ந்திடும்
வீரர்கள் உருவினில்
ஏற்றிடும் தீபம்
அது வீர தீபம்

வையகம் உள்ளவரை
ஒளிர்ந்திடும் தீபம்
கார்த்திகை மாசத்து
மாவீரர் தீபம்
அது எங்கள் வீரர் தீபம்.

கரங்கள் கூப்பியே
நினைவுகள் ஒருக்கியே
காற்றும் மெளனிக்க
காவியம் படைந்த
நாயகர் நினைவோடு
விழி சொரியும் பூ வைத்து
ஏற்றுவோம்
காத்திகை தீபம்
அது வீர தீபம்

விடியலில் என்றும்
ஒளிரட்டும்
விடி வெள்ளியாய்
கார்த்திகை 27 இல்
கடமை மறவாது
ஏற்றும் தீபம்
அது வீர தீபம்.

 

 

இது நீட்சி அதிகமெனில்.. இதனைச் சுருக்கி தந்த.. சோழியான் அண்ணாவின் வடிவமும் உள்ளது..

 

maveerar2006-kuruvikal.jpg

 

http://thedatsaram.blogspot.co.uk/search?updated-max=2008-05-14T11:49:00%2B01:00

 

தற்போது இது தேசக்காற்றிலும் இடம்பிடித்துள்ளது.

 

http://thesakkaatu.com/doc1156.html

 

 

Link to comment
Share on other sites

நன்றிகள் நெடுக்ஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சூரியன்

 

உங்கள் சங்கடம் எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் அமைத்த மெட்டை கம் பண்ணி MP3 இல் எனது ஈமெயிலுக்கு அனுப்பினால் நான் அதுக்கு எமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கான வரிகளை எழுது அனுப்புகிறேன்...

நீங்கள் விரும்பும் பட்சத்தில் தனிமடலில் தொடர்புகொள்ளவும் எனது ஈமெயிலை உங்களது தனிமடலுக்கு அனுப்பிவைக்கிறேன்.

 

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சூரியனின் முயற்சி வெற்றிபெறட்டும்.

கவியெழுதுவோருக்கும் இசையமைப்போருக்குமிடையே ஒரு ஒத்திசைவான தன்மையொன்று இருக்குமாயின் பாடல் வெற்றிபெறுமென்பதே எனது கருத்தாகும். ஒருமுறை ஒருபாடலை ஒரு நிகழ்வுக்காக எனது நண்பரொருவர் இசையமைத்துப்பாடியபோது, கவிஞர்ர் பதினொராவது முறையே சரியென ஏற்றுகொண்ட சம்பவமொன்றை நேரிலே பார்த்துள்ளேன். எனவே படைப்பென்பது ஒரு கூட்டுமயற்சியென்பதை எழுதுவோரும் இசைப்போரும் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்.

Link to comment
Share on other sites

உங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் சொற்களுக்குப்  பதிலாக அதே கருத்துள்ள வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன்.

 

பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் தங்கள் இசைக்குரிய எழுத்துக்களைத்தான்

இப்போது எதிர்பார்க்கின்றனர்.

 

நீங்கள்  ஏன் இத்தனை கஸ்ரப்படுகின்றீர்கள் :)

மிக்க நன்றி  வாத்தியார் ............உண்மை அப்படி வசனங்களை மாற்றுவதில் கூட சிலருடன் உடன்பாடு இல்லை ............அதுவே பிரச்னை :D .

 
சில பாடல்களுக்கு மெட்டுக்கு கருத்துக்களை எழுதி வாங்கியுள்ளேன் .ஆனால் வரிக்கு மெட்டு போடும்போது தான் அந்த மெட்டு பாடலுக்குரிய மெட்டாக அமைந்திருப்பதை பல முறை அவதானித்தேன் :) .............மீண்டும் நன்றிகள்.
Link to comment
Share on other sites

இந்தமாதிரி விடயங்களில் கவிஞர்களுக்கு சந்தங்கள், தாளங்கள் பற்றிய பரீட்சயம் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாடல் கதாகாலட்சேபம் மாதிரி ஆகிவிடும்.. :D

கவிஞர் கண்ணதாசனுக்கு இசையின் கூறுகள் தெரிந்திருந்ததால் மெல்லிசை மன்னரின் பணி ஓரளவுக்கு இலகுவாகிப் போனது..

நீங்கள் குறிப்பிடும் கவிகளும் தங்களை கவியரசுபோல் நினைத்துக்கொண்டு சந்தங்கள், தாளங்களுக்குப் பொருந்தும் வரிகளைத் தருவார்கள் என நம்புகிறேன்.. :D

நன்றி இசை உங்கள் யதார்த்தமான கருத்திற்கு ....இசை தெரிந்த உங்களுக்கு அது புரிகிறது .........ஆனால் ............ :) 

 
மேலும் நான் எழுதி இந்த திரியை திசை திருப்பல. :D  :D
Link to comment
Share on other sites

கவி எழுதுபவர்களுக்கு மனதிலே தானாக ஒரு மெட்டும் சேர்ந்து உருவாகும். ஆனால் இசையமைப்பவருக்கு  வேறொரு மெட்டு உருவாகும். கவி எழுதுபவர் இப்படி இருக்கலாம் எனத் தன் கருத்தை வைக்கலாமே தவிர இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இசையமைம்பவருக்குக் கூறினால் இசை நன்றாக வராது. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால் இருவரும் ஒத்திசைந்து இசையமைத்தால் இன்னும் நன்றாக வரும் என்பது என் கருத்து.

உண்மை அக்கா .............அவர்கள் போடும் மெட்டு என்னால் புரிந்து கொள்ள முடியும் .........ஆனால் அவை சுரங்களுக்குள்ளும்,தாளக்கட்டுக்குள் கொண்டுவருவதிலும் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளணும் .............ஏனனில் அவர்கள் பெர்ம்பாலும் ஒரே மாதிரியான மெட்டையே முழு பாடல்களுக்கும் போடுவார்கள் .ஆனால் அதை நான் பகுதி பகுதியாக பிரித்து வேறுபட்ட மெட்டுக்களை போடும்போதே நான் கூறும் பிரச்சனைகள் எழும் .இசை தெரிந்த நீங்கள் நிச்சயம் இதை புரிந்து கொள்வீர்கள் ..........நன்றி அக்கா ......
 
 
[உங்களையும் இந்த இசைத்தட்டில் பாடவைக்க நினைத்திருக்கிறேன் அக்கா ]

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பி  தமிழ்சூரியன்

 

பொதுவாகவே இந்த  சிக்கல் வருவது தான்

இதை பாடலின்  அல்லது நோக்கத்தின் நன்மை   கருதி  இருவரும் கலந்த பேசி  ஒரு முடிவுக்கு வரணும்

 

என்னைப்பொறுத்தவரை

பாடலை  இயற்றியவருக்கு அது குழந்தை போன்றது

எனவே அதைச்சிதைப்பதற்கு எதிரானவன்

 

ஆனால் 100 வீதம் இதில் இரு பகுதியும் விடாப்பிடியாக  இராது

விட்டுக்கொடுத்து  நல்ல பாடல்கள் வர உதவணும்

அதுவே ரசிகர்களுக்கும்  நாட்டுக்கும் தேவை.

 

தொடர்க  தங்கள் பணி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பி  தமிழ்சூரியன்

 

பொதுவாகவே இந்த  சிக்கல் வருவது தான்

இதை பாடலின்  அல்லது நோக்கத்தின் நன்மை   கருதி  இருவரும் கலந்த பேசி  ஒரு முடிவுக்கு வரணும்

 

என்னைப்பொறுத்தவரை

பாடலை  இயற்றியவருக்கு அது குழந்தை போன்றது

எனவே அதைச்சிதைப்பதற்கு எதிரானவன்

 

ஆனால் 100 வீதம் இதில் இரு பகுதியும் விடாப்பிடியாக  இராது

விட்டுக்கொடுத்து  நல்ல பாடல்கள் வர உதவணும்

அதுவே ரசிகர்களுக்கும்  நாட்டுக்கும் தேவை.

 

தொடர்க  தங்கள் பணி.

 

விசுகு சொன்ன கருத்தே.... எனதும், த‌மிழ்ச்சூரிய‌ன். :)

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்

 

உங்கள் சங்கடம் எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் அமைத்த மெட்டை கம் பண்ணி MP3 இல் எனது ஈமெயிலுக்கு அனுப்பினால் நான் அதுக்கு எமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கான வரிகளை எழுது அனுப்புகிறேன்...

நீங்கள் விரும்பும் பட்சத்தில் தனிமடலில் தொடர்புகொள்ளவும் எனது ஈமெயிலை உங்களது தனிமடலுக்கு அனுப்பிவைக்கிறேன்.

 

நன்றிகள்

நிச்சயம் நண்பரே ..............உங்களைப்போன்றவர்கள் இப்படி நேரடியாக பங்களிக்கிறேன் என்று கூறும்போது இன்னும் இன்னும் உற்சாகம் எனக்கு பிறக்கிறது .............வெகு விரைவில் மெட்டை அனுப்புகிறேன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள் .

 
மீண்டும் நன்றிகள் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் 
 
இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ................ஆனால் இசையுடன் அந்தவரிகளை இணைக்கும்முயற்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது .
 
ஆனால் சிலர் அதைப்பற்றி பேசினால் எரிந்து விழுகிறார்கள் .கவிதை இப்படித்தான் ,இப்படியே பாடுங்கள் என்கிறார்கள் .........அப்படி பாடினால் அதை நாட்டார் பாடல் போல தான் பாடமுடியும் .........
 
ஆனால் எப்படி ஒரு மெட்டை ஒரு பாடலுக்கு போடும் எனக்குள்ள அதே ஓர் உணர்வே அந்த கவிஞர்க்கும் இருக்கும் ,என்ற உணர்வை நான் மதிக்கும் படியினால் ........எனக்கு நான் சரியா ,அவர்கள சரியா என்று முடிவெடுக்க முடியவில்லை .
 
ஆகவே யாழ் களத்தில் இருக்கும் என் அன்புக்குரிய கவிகளிடம் இந்த கேள்விக்கான பதிலை விடுகிறேன் ..............உங்கள் பதில் எதிர்காலத்தில் பல பயனுள்ள படைப்புக்களை உருவாக்க பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் .நன்றி ........
 
அன்புடன்..................

 

 

இதற்கே  பதில் எழுதினேன்  தமிழ்சூரியன்

நீங்கள் அடுத்த கட்டத்தை  எடுத்துவிட்டதாக இந்த முடிவில் தெரிகிறது

(அதாவது டட்டைத்தாறேன்  பாட்டுத்தாருங்கள் என்பது)

 

வளர்க

தொடர்க  தங்கள் பணி

 

நிச்சயம் நண்பரே ..............உங்களைப்போன்றவர்கள் இப்படி நேரடியாக பங்களிக்கிறேன் என்று கூறும்போது இன்னும் இன்னும் உற்சாகம் எனக்கு பிறக்கிறது .............வெகு விரைவில் மெட்டை அனுப்புகிறேன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள் .

 
மீண்டும் நன்றிகள் .

 

 

Link to comment
Share on other sites

இதற்கே  பதில் எழுதினேன்  தமிழ்சூரியன்

நீங்கள் அடுத்த கட்டத்தை  எடுத்துவிட்டதாக இந்த முடிவில் தெரிகிறது

(அதாவது டட்டைத்தாறேன்  பாட்டுத்தாருங்கள் என்பது)

 

வளர்க

தொடர்க  தங்கள் பணி

விசுகு அண்ணா வணக்கம் 

எனக்கு மெட்டுக்கு வரிகளை போட்டு பாடலை செய்வதை விட ,வரிகளுக்கு மெட்டை போட்டு பாடலை உருவாக்குவதே பிடிக்கும் .என்னில் வரிகளுடன் ஒன்றிக்கும் ஒரு மெட்டு உருவாகும் .
 
ஆனால் இளங்கவி அவர்கள் மெட்டை தாருங்கள் என்று என்னிடம் கேட்ட படியினால் இப்படி எழுதினேன் ..............தவறாக நினைக்க வேண்டாம் ...........நிச்சயமாய் நீங்கள் கூறியதுபோல ஓர் புரிந்துணர்வுடன் கலைப்பணியை நகர்த்தினால் மட்டுமே நாம் எம்மையும், எமது கலையையும் மேலும் வளர்க்கமுடியும் .இதை என் சிறிய அனுபவத்தில் கண்டவன் ,புரிந்துணர்வு இல்லாமலும், தலைக்கனத்திடனும் செயல்பட்ட பல கலைஞ்சர்கள் [திறமை மிக்கவர்கள் ] காணாமல் போனதும் வரலாறு. அதனாலேயே இந்த திரியை ஆரம்பித்தேன் ..உங்கள் யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகு அண்ணா வணக்கம் 

எனக்கு மெட்டுக்கு வரிகளை போட்டு பாடலை செய்வதை விட ,வரிகளுக்கு மெட்டை போட்டு பாடலை உருவாக்குவதே பிடிக்கும் .என்னில் வரிகளுடன் ஒன்றிக்கும் ஒரு மெட்டு உருவாகும் .
 
ஆனால் இளங்கவி அவர்கள் மெட்டை தாருங்கள் என்று என்னிடம் கேட்ட படியினால் இப்படி எழுதினேன் ..............தவறாக நினைக்க வேண்டாம் ...........நிச்சயமாய் நீங்கள் கூறியதுபோல ஓர் புரிந்துணர்வுடன் கலைப்பணியை நகர்த்தினால் மட்டுமே நாம் எம்மையும், எமது கலையையும் மேலும் வளர்க்கமுடியும் .இதை என் சிறிய அனுபவத்தில் கண்டவன் ,புரிந்துணர்வு இல்லாமலும், தலைக்கனத்திடனும் செயல்பட்ட பல கலைஞ்சர்கள் [திறமை மிக்கவர்கள் ] காணாமல் போனதும் வரலாறு. அதனாலேயே இந்த திரியை ஆரம்பித்தேன் ..உங்கள் யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா .

 

 

 

அதுதுதுதுதுதுதுது

என் தம்பி

தொடர்க  பயணம்

பொது நன்மைகருதி  எடுக்கப்படும்  முடிவுகள் எப்பொழுதுமே  வெற்றி  தரும்

Link to comment
Share on other sites

தமிழ்ச்சூரியனின் முயற்சி வெற்றிபெறட்டும்.

கவியெழுதுவோருக்கும் இசையமைப்போருக்குமிடையே ஒரு ஒத்திசைவான தன்மையொன்று இருக்குமாயின் பாடல் வெற்றிபெறுமென்பதே எனது கருத்தாகும். ஒருமுறை ஒருபாடலை ஒரு நிகழ்வுக்காக எனது நண்பரொருவர் இசையமைத்துப்பாடியபோது, கவிஞர்ர் பதினொராவது முறையே சரியென ஏற்றுகொண்ட சம்பவமொன்றை நேரிலே பார்த்துள்ளேன். எனவே படைப்பென்பது ஒரு கூட்டுமயற்சியென்பதை எழுதுவோரும் இசைப்போரும் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்.

உங்கள் யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கு நன்றி அண்ணா .நிச்சயம் உங்கள் அறிவுரைகள் என்னை சரியான பாதையில் செல்ல கை கொடுக்கும் என்பது திண்ணம் .மீண்டும் நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் பாடலுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.அனைத்துக் கவிதைகளையும் பாடலாக்க முடியாது.ஆனால் பாடல்கள் எல்லாம் கவிதைகளே.கவிதையைப் பாடலுக்காக சில மாற்றங்களைச் செய்யும் போது அதன் கருவும் அதன் அழகும் கெடாமல் மாற்ற வேண்டும்.ஒரு சொல்லால் அல்லது ஒரு வரியால் பாடலின் இசைப் போக்கில் முறிவு வருகின்றதெனில் வேறு சொற்களை அதன் கருத்து மாறாமல் போட்டு மாற்ற வேண்டும்.அதற்காகக் கடுந் தமிழைப் பாடலில் புகுத்தக் கூடாது ஏனெனில் பாடல் என்பது பாமரர் முதல் பண்டிதர் வரை ரசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆகவே வரிகள் எளிமையாகவும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் சொற்களாகவும் இருப்பது விரும்பத் தக்கது.தமிழில் நல்ல புலமையுள்ளவர்களால் இந்த மாற்றங்களை எளிதாகச் செய்ய முடியும். தமிழ்சூரியன் அவர்களே உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு என்னால் பங்களிக்க முடியாமாயின் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞனுக்கும், இசை அமைப்பாளனுக்கும் இந்தச் சச்சரவுகள் அதிகம் த.சூ

எப்போது கவிஞன் காயப்படாமலும் இசைக்கும் இசைஞன் திணறாமலும் இசையமைப்பாளன் சோராமலும் ஒரு பாடல் வெளிப்படுகிறதோ அதுதான் அப்பாடலுக்கான வெற்றியை நிர்ணயிப்பது மட்டுமல்ல சாகாவரம் பெற்ற பாடலாகவும் அமையும்.

Link to comment
Share on other sites

அச்சு யந்திரம் வர முன்னர் இலக்கியங்களை நினைவுபடுத்திப் பாதுகாக்கும் அவசியம் இருந்தது. இதனால் பாடல்கள் மட்டுமன்றிக் கவிதைகளும் பாடக்கூடியதாக எழுதப்பட்டு வந்தது. இன்று அந்தத் தேவையில்லை.

இப்போது பாடல் இசையின் இலக்கணத்துக்கு கட்டுப் பட்டது என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. இசையமைப்பாளரது இசை அல்லது  எழுதும் கவிஞனைக் கவர்ந்த தாளம் அல்லது மெட்டுக்களில்தான் இப்போ பெரும்பாலான பாடல்கள் எழுதப்படுகிறது. கவிஞன் தனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு தாளம்/மெட்டைப் பிடித்து எழுதும்போது இசையமைப்பாளரால் அதே பாடலை பல்வேறு மாறுபட்ட மெட்டுக்களில் பாடமுடியும்.  தாளக்கட்டுக்கு மெட்டுக்கு இடறும் சொற்களை இசைக்கேற்ப்ப மாற்றுவதற்க்கு கவிஞன் தயங்கத்  தேவையில்லை.

 

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை
இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை
இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்
இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு



ஜாதி மத பேதமின்றி
செந்தமிழர் கூடி
நீதி நெறியோடு என்றும்
வெற்றி வாகை சூடி
பாங்கொலிக்கும் பள்ளி
பாடும் கோவில் மணிகள்
மங்களமாய் எங்களது
மண்ணில் வாழ்வு எழுக



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை
இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை
இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்
இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு



ஜாதி மத பேதமின்றி
செந்தமிழர் கூடி
நீதி நெறியோடு என்றும்
வெற்றி வாகை சூடி
பாங்கொலிக்கும் பள்ளி
பாடும் கோவில் மணிகள்
மங்களமாய் எங்களது
மண்ணில் வாழ்வு எழுக



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

 
 
நன்றி  தோழர்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.