Jump to content

"நடப்பு" அரசியல்: பரமசிவம் அங்கிளும் பரிமளம் ஆன்ரியும் விறாந்தைப் பேச்சு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 1:

 

பரமசிவம் (ப.சி): என்ன பரி.. இன்றைக்கு சக்கரையோட தேத்தண்ணி கொண்டு வந்திருக்கிரா... சீனி முடிஞ்சுதோ..

 

பரிமளம் (பரி): சக்கரையான செய்தி வந்திருக்கெல்லோ.. அதுதாங்க.

 

ப.சி: அப்படி என்னடி செய்தி.

 

பரி: நம்ம வடக்கு மாகாண சபை தேர்தல் தாங்க.

 

ப.சி: சும்மா கிடவடி. உள்ள மாகாணசபைகளையே ஒழுங்கா இயக்கக் காணம்.. இதுக்குள்ள..உது  வேற கூத்து.

 

பரி: நாங்களும் வடக்கு மாகாண சபை வந்து.. இன்னும் வாக்குப் போடாத குறையா எல்லோ இருக்கிறம். அதுதான்.. உந்த வெளிநாட்டு ஆக்கள் அப்படி ஒன்றை எங்களுக்கு பெற்றுத் தருகினம்.

 

ப.சி: ஓமடியப்பா. உதுக்காகத் தானே.. சாத்வீகமாயும்.. ஆயுதம் என்று தூக்கியும் போராடினது..?!

 

பரி: அது எங்க அவங்களுக்கு விளங்கப் போகுது. அவங்களுக்கு தமிழன் ஆயுதம் வைச்சிருந்தா பயங்கரவாதம். சிங்களவன் வைச்சிருந்தா தார்மீகம்..! தமிழன் வாக்குச் சீட்டு வைச்சிருந்தால்.. ஜனநாயக விரோதம்.. சிங்களவன் கள்ள வாக்குப் போட்டாலும் அது ஜனநாயகம். இப்படியான உலகத்தில.. எந்த வழில போராடி என்னத்தைக் காணுறது..??! அதை விடுங்கப்பா. சங்கதி கேட்டியளோ..

 

ப.சி: என்னடிப்பா சங்கதி.

 

பரி: தம்பி இருக்கேக்க.. தனக்கு கட்சித் தலைமை வேணும் என்று கூட்டமைப்பை விட்டு ஓடின சங்கரி.. தம்பி இல்லாத நேரம்.. சம்பந்தனின் காலடியே கதின்னு கிடக்குதே.. உதை எங்க சொல்லி அழ...

 

ப.சி: இந்தா புலிகளை முடி. நான் ஜனாதிபதியிடம் எல்லாம் வாங்கிறத் தாறன் என்று கடிதம் கடிதமா எழுதினதும் அந்தாள் தானே. இப்ப தானே எல்லாம் முடிஞ்சுது. கடிதத்தையும் காணம்.. வாங்கித் தாறதையும் காணமேடி.

 

பரி: சும்மா கிடவுங்க. அதுகள் கொழும்புச் சீவியம் நடத்த அப்படி கொக்கரிக்கிறது ஒன்றும் புதுசில்லையே. அமிர்தலிங்கம் வழி வந்ததுகள் எல்லோ. பின்ன எப்படி இருக்குங்கள். அதில்லப் பகுடி.. உவர் வவுனியா காட்டு ராஜா.. சித்திவதை முகாம்.. சித்தார்த்தன்.. தானும்.. கூட்டமைப்பில.. தான் இடம் கேட்கிறாராமில்ல...

 

ப.சி: அவருக்கு கொலைக்கு.. கப்பத்திற்கு.. கூலி கொடுக்க எனி சிங்களவன் வரட்டாம். சம்பந்தன் தான் சரியான ஆள். அதுதான் போய் பதுங்கிட்டார்.

 

பரி: அதுக்காக.. உந்த ஊத்தவாளிகளை எல்லாம்.. கூட்டமைப்பில விட்டு உவர் சம்பந்தன் என்ன பெயர் எடுக்கப் போறார்...???!

 

ப.சி: அவர் தன்ர சாணக்கியத்தை உதில காட்டுவம் என்று வெளிக்கிட்டு இருக்கிறார். பிள்ளையார் பிடிக்கப் போய்.. குரங்கான கதையா உது முடியாட்டில் சரி.

 

பரி: அதுபோக.. உவர் தயா மாஸ்டர் தானும் தானும் என்று முன்னும் பின்னும் திரியுறார். முந்தி புலிகளுக்காக அரசியல் செய்தாராமில்ல.. இப்ப.. சிங்களவனுக்குச் செய்யுறாராம். இவரை சனம் கேட்டதே இப்ப வந்து சிங்களவனுக்கு அரசியல் செய்யுன்னு..??!

 

ப.சி: உவர் எப்ப புலிகளுக்காக அரசியல் செய்தவர். எப்ப அரசியல்துறையில பொறுப்பில இருந்து கிழிச்சவர். அந்தாள்.. உயிர்ப் பிச்சை அளிச்சவைக்கு விசுவாசம் காட்ட ஆசைப்படுகுதாக்கும். காட்டிட்டிட்டுப் போகட்டன். சனம் என்ன உவையை கூப்பிட்டு வைச்சு விருந்தா கொடுக்கப் போகுது..!! சொல்லு பார்ப்பம்.

 

பரி: அதில்லைங்க.. முந்தி எல்லாம் தனிய நின்று படுதோல்வி கண்ட புளொட்.. கூட்டணி.. ஈபி.. நாய் பீ என்று எல்லாத்தையும் கூட்டமைப்பில கூட்டி வைச்சிருக்கிற சம்பந்தன்.. அதேன் கஜேந்திரகுமார் ஆக்களை கண்ணில காட்டப்படாது என்று இருக்கிறார். உண்மையில.. தமிழ் மக்களுக்காக உழைக்கிறவர் என்றால் அவையையும் கூப்பிட்டு எல்லோ வைச்சிருக்கினம்...

 

ப.சி: கஜேந்திரகுமார் ஆக்களுக்கு சொந்தமாக யோசிக்க.. அரசியல் செய்ய தெரியுமடியப்பா. உதுகள்.. கூலிக்கு மாரடிச்சதுகள் என்ன செய்யுங்கள். சம்பந்தனே கதி என்று கிடக்குங்கள். சம்பந்தனுக்கு உந்தக் கணக்குப் போட வராது என்றே நினைக்கிறா. அந்தாள் பெரிய காய். உனக்குத் தெரியாது சம்பந்தனின் சாணக்கியம் பற்றி.

 

பரி: விக்கியையும்... உள்ள இழுத்து விட்டாச்சு. 

 

ப.சி: விக்கியை உள்ள இழுத்தது இரண்டு விதத்தில சம்பந்தனுக்கு ஆதாயம்.

 

1. விக்கியைக் கொண்டு சொல்ல வைச்சிட்டால்.. தமிழ் மக்களின் உரிமையை மாகாண சபைக்குள்ள அடக்கிடலாம்.

 

2. சிங்கள மிதவாதிகள் மத்தியில் சம்பந்தனுக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ணலாம். உது எதிர்காலத்தில் சம்பந்தனுக்கு பல சலுகைகள் வர உதவும்.

 

பரி: உந்த மாகாண சபைகளே வேணாம்.. 13 வது திருத்தம் சுத்துமாத்து என்று நிராகரிச்சவை எல்லாம் இப்ப அதுதான் அடிப்படை என்று சொல்லினம்... உதென்னங்க கதை.... தமிழ் சனத்தைக் கேட்டா.. உதெல்லாம் வந்தது. ராஜீவும் ஜே ஆரும் தங்களுக்கு ஏத்தமாதிரி எழுதிட்டு எங்கட தலையில கட்டினவை தான உதுகள்.

 

ப.சி: ஏன்.. குத்தியரின் குத்துக்கரணம்.. மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி கூட.. 13 க்கு கீழ போய் நிற்குது  என்றால் பாரன்... உவங்கள் எல்லாம்.. புலிகளுக்காக  தமிழ் மக்களுக்கு முன்னாள் போட்ட வேசம் அப்படியே வெளிச்சு நிற்குது கண்டியோ... உவங்கள் அந்தக்காலம் தொடக்கம் சனத்தை பேய்க்காட்டிறாங்களடியப்பா..! உவங்கட அரசியல்.. சிங்களவன் செய்ததை எல்லாம் மறைச்சு அவன்.. தப்பிப் பிழைக்கவும்.. தமிழனை நிரந்தரமா அடிமைப்படுத்தவும் தான் உதவும். கோழிக்குஞ்சுக்கு கரப்பு வாங்கக் கூட சனத்துக்கு உதவாது. இருந்து பார்.

 

பரி: உதுகளக் கதைச்சால் விசர் தானப்பா வரும். அங்க பாருங்க.. சக்கரையில இளையான் மொய்க்குது.. தேத்தண்ணி ஆறிப் போய் கிடக்குது. குடிக்கிற பிளான் இல்லையோ...

 

ப:சி: புலிகள் இல்லாத தமிழன்ர நிலையும் அந்தச் சக்கரக்கட்டி.. போல ஆயிட்டுதடி. கண்ட கண்ட இளையானுகள் எல்லாம்.. சுத்தி மொய்க்குதுகள். எது எது என்னென்ன வியாதியோட அலையுதோ.. யார் அறிவார். நாங்கள் சனம் தான் விழிப்பா இருக்கனும்..!

 

 

(மீண்டும்.. இன்னொரு விறாந்தையில் "நடப்பு" அரசியல் பற்றி பேசும் வரை.. நன்றி வணக்கம்.)

 

(ஆக்கம்: சமீபத்தில் ஊடகங்கள் பிரதிபலிக்கும் செய்திகளின் விம்பங்களோடு..படைக்கப்பட்டது.)

 

யாழ் களத்திற்கு மட்டுமான படைப்பு.

 

Link to comment
Share on other sites

சபாஷ் நெடுக்ஸ்.. ஒரு சீரியசான காலக்கண்ணாடியை எழுதியிருக்கிறீங்கள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்புராணம் அதிகமாக இருந்தாலும் .....நடப்பு அதுதான்....சிவபுராணம் இல்லாமல் சைவர் இல்லை என்ற மாதிரி புலிப்புராணம் இல்லாமல் தமிழர் இல்லை.....தொடரட்டும் உங்கள் விறாந்தை நடப்பு தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 2

 

பரி: என்னங்க.. பெருநாளும் அதுவுமா.. வந்து போய்க்கிட்டு இருந்த காதர் மாஸ்டரை இப்ப கொஞ்ச நாளா இங்கால காணம்.. என்ன என்று ஒருக்கா போன் போட்டுப் பாருங்களன்..

 

ப.சி: சொல்ல மறந்திட்டன். நேற்றும் காதரை.. சந்தையடியில கண்டு கதைச்சனாண்டியப்பா..

 

பரி: என்னங்க சொன்னவர். இஞ்சால வருவன் எண்ட சிலமன்...

 

ப.சி: என்ன சொல்லு.. என்ன தான் அவையள் தமிழாக்களோட நெருங்கிப் பழகிறம் என்றாலும் முந்தி மாதிரி இல்லை அவதானிச்சனியே..?!

 

பரி: பின்ன இருக்கும் தானே. சில அசம்பாவிதங்கள்.....

 

ப.சி: அசம்பவாவிதங்கள் இந்த நாட்டில எப்பயடி இருந்ததில்லை. வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுக்கிறதுக்கு முன்னாடி இருந்து இருக்குது தானேடி. குடும்பத்துக்க சண்டை என்றால்.. அதை ஏன் பெரிசு படுத்திக் கொண்டு இருப்பான். விட்டுத் தொலைச்சால் ஒரே மொழி.. ஒரே பிரதேசம் என்று பங்கு போட்டு வாழுற சனத்துக்கு இலாபமோ நட்டமோ சொல்லு. இன்னொரு மொழி பேசுறவனுக்காக எதுக்கு நாங்கள் எங்களுக்குள்ள உள்ள சின்னச் சின்ன வேற்றுமைகளை பெரிசாக்காட்டி அவன் நம்மள வைச்சு தன்ர பிழைப்பை ஓட்ட உதவுவான். இதால யாருக்கு நட்டம்... யாருக்கு என்ன இலாபம்..?!

 

பரி: நீங்க சொல்லுறது நியாயம் தான். பழிவாங்கிற உணர்ச்சியை தூண்டியே அரசியல் செய்யுற ஆக்கள் அங்கால பெருகிப் போச்சுது. அவையள் அப்படி கடந்த 20 வருசமா செய்து வாழ்ந்து பழகிட்டினம். அவையளை பழைய நிலைக்கு கொண்டு வாறது கஸ்டம்... எனி புதிய தலைமுறை தான்.. தங்களுக்க பழகிப் பேசி.... மாற்றங்களை கொண்டு வந்தால்.. ஒழிய.. உந்த புட்டும் தேங்காய் பூவும் கதை நாறிப் போயிடும் போலத்தான் கிடக்குது...

 

ப.சி: முந்தி எல்லாம் காதர் வரேக்க நம்ம சகோதரம் வாற ஒரு உணர்வு தாண்டி இருந்திச்சு. இப்ப அந்தாள் வந்தாலும்.. அந்தச் சகோதர உணர்வு இல்லை. அதை வலுக்கட்டாயமாத் தான் கொண்டு வர வேண்டிக் கிடக்குது. அவருக்கும் முந்தி மாதிரி ஒட்டனும் உறவாடனும்..என்ற உணர்வு விட்டுப் போச்சுது..

 

பரி: உதுக்கு எல்லாம்.. ஒரு தரப்பில பிழை சொல்லிக் கொண்டிருக்கிறவையும் தாங்க காரணம். பிழை என்று பார்த்தால் எல்லாப் பக்கமும் சந்தர்ப்பத்திற்கு பிழை விட்டிருக்குது. அதுகளை மறந்து மன்னிச்சு ஒருவரை ஒருவர் புரிஞ்சு ஒருவர் மற்றவரின்ரையை தண்டிப்பறிக்காமல்.. நியாயமா விட்டுக் கொடுத்து பங்கிட்டு வாழ்ந்தால்.. மீண்டும் அந்த பழைய பந்த பாசம் காதர் மாஸ்ரரோட வருமோ இல்லையோ சொல்லுங்கோ பார்ப்பம்.

 

ப.சி: அதுக்கு சிங்களவன் வரட்டாம். அவன் எங்க எதில புகுத்து ஆக்களைப் பிரிப்பம். தான் அதில போய் ஆதாயம் தேடுவம் என்று அலையுறான். இப்படியான சூழலில.. சந்தர்ப்பவாத முயல் அடிக்காமல்.. நாங்க தமிழ் பேசிற.. ஒரே பிரதேசத்தைப் பங்கிட்டு வாழுற மக்கள் தான் நின்று நிதானிச்சு சிந்திச்சு வாழப் பழகனும். நல்ல வழியைக் காட்டனும். அதைவிட்டிட்டு.. சில கடும்போக்கு.. நிலைப்பாட்டில நின்றால்.. உறவாடும் சந்தர்ப்பங்களை இப்படியே தட்டிக்கழிச்சுக் கொண்டு.. பிரிச்சாள நினைக்கிறவன்ர காலைக் கட்டிக் கொண்டு.. சலுகை வாங்கலாம்.. தன் பிழைப்பைப் பார்க்கலாம் என்று கிடந்தால்.. காதருக்கும்.. கந்தருக்கும் எப்படிடி.. உறவு ஒட்டும்..??!

 

பரி: இதனை நாங்களும் சொல்லிக் கொண்டு இருக்கப்படாதுங்க. அரசியல் செய்யுறவங்கள் உதுகளைச் செய்வாங்கள் என்று இருக்கப்படாது. எங்கட பள்ளிக்கூடப் பிள்ளையள்.. பல்கலைக்கழகப் பிள்ளையள்.. உந்த ஒற்றுமையை உருவாக்கினால்.. தங்களுக்க ஒரு இணக்கப்பாட்டை நல்லுறவை உண்டு பண்ணி வளர்த்து வந்தால்.. அதுகளின்ர காலத்திலையாவது.. நாங்கள் தமிழ் பேசிற மக்கள் ஒற்றுமையா நிற்கலாம். அது தாங்க எங்களுக்குப் பலம். நாங்க வடக்கு.. கிழக்கு என்று பிரிஞ்சு நிற்கிறதால என்ன நன்மை.. வடக்குக் கிழக்கென்று இல்லாம ஒற்றுமையா ஒருங்கா நின்றால்.. எல்லாரும் எல்லாத்தையும் பகிர்ந்து வாழலாம் எல்லோ. யாருக்கும்.. மனசில சங்கடம் இருக்காதில்லோ. இது என்ர ஊர் அது உன்ர ஊர் என்ற எல்லைப் பிரிவுகள் இருக்காதெல்லோ.. அதுதாங்க சிறுபான்மையா உள்ள நமக்கு பலம். அதுவும் பேரினவாதம் தலைவிரிச்சாடுற இந்த நேரத்தில அந்தப் பலம் தானேங்க நமக்கு அவசியம்.

 

ப.சி: நீ சொல்லுறது அவ்வளவும் நியாயம். இப்ப இதைப் புரிஞ்சுக்கிற நிலையில அங்கால தலைவர்கள் இல்லை.அவையளுக்கு தங்கட பொக்கட் தான் பிரச்சனை. அவையை நம்பி மாற்றங்கள் வராது. நாங்கள் மக்கள் தான் அடிமட்டத்தில இருந்து இந்த உறவாடலை தொடக்கனும்.. புதுப்பிக்கனும். நம்பிக்கைகளை கட்டி வளர்க்கிற செயல்களைச் செய்யனும்...

 

பரி: பூனைக்கு மணிகட்டிறது யாருங்க...

 

ப.சி: நம்ம பாடசாலை ஆசிரியர்கள்.. சமூக.. மத ஆர்வலர்கள் தான் அதைச் செய்யனும்.

 

பரி: அங்க பாருங்க.. காதர் மாஸ்டர் வாறார். இப்ப தான் அவரைப் பற்றி கதைக்க ஆரம்பிச்சம் ஆள் வந்திட்டார். அந்தாளுக்கு ஆயுசு நூறு.

 

ப.சி: மனுசன் நோன்பும் அதுவுமா களைச்சு வரும்.. ஏதாவது செய்து வையன்.. நோன்பு முடிச்சு சாப்பிடும் தானே..

 

பரி: சரிப்பா. நீங்கள் அவரோடையும் உதுகளைப் பற்றி சாடை மாடையா கதையுங்க. அடுத்த தலைமுறையிலையாவது அந்த பழைய காலத்தில இருந்ததை விட நல்ல ஒரு ஒற்றுமையை தமிழ் பேசிற மக்களுக்கு கொண்டு வாறதுக்கு என்ன வழி இருக்கென்று அவரட்டையும் ஆலோசனை கேட்டால்.. மாஸ்ரர் என்ற வகையில.. அந்தாளும் நாலு நல்லதைச் சொல்லுவார்.. செய்வார் தானே.

 

ப.சி: கண்டிப்பா.

 

பரி: அப்ப நான்.. போய் சமைக்கிறன். நீங்கள் அவரோட கதைச்சுக் கொண்டிருங்கோ..!

 

(இன்னொரு விறாந்தையில் சந்திக்கும் வரை.. எல்லா முஸ்லீம் சகோதர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களுடன்...)

 

சீரியஸான விசயங்களை சிரிப்பா எடுத்து சிம்பிளா உள்வாங்கினா.. சிறக்க வழி பிறக்குமில்ல.. அதுதான் இந்தத் தலைப்பை இங்கு வைத்துள்ளோம்.. :icon_idea:

 

இது ஒரு யாழ் களத்துக்கு மட்டுமான படைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

ப.சி: மனுசன் நோன்பும் அதுவுமா களைச்சு வரும்.. ஏதாவது செய்து வையன்.. நோன்பு முடிச்சு சாப்பிடும் தானே..

 

பரி: சரிப்பா. நீங்கள் அவரோடையும் உதுகளைப் பற்றி சாடை மாடையா கதையுங்க. அடுத்த தலைமுறையிலையாவது அந்த பழைய காலத்தில இருந்ததை விட நல்ல ஒரு ஒற்றுமையை தமிழ் பேசிற மக்களுக்கு கொண்டு வாறதுக்கு என்ன வழி இருக்கென்று அவரட்டையும் ஆலோசனை கேட்டால்.. மாஸ்ரர் என்ற வகையில.. அந்தாளும் நாலு நல்லதைச் சொல்லுவார்.. செய்வார் தானே.

 

ப.சி: கண்டிப்பா.

 

பரி: அப்ப நான்.. போய் சமைக்கிறன். நீங்கள் அவரோட கதைச்சுக் கொண்டிருங்கோ..!

 

காதர் மாஸ்டருக்கு, ஹலால் இறைச்சியை சமைக்கச் சொல்லி, பரிமளம் ஆன்ரியிடம் முதலே... சொல்லவும்.

மனுசி வீட்டிலை நின்ற கோழியைப் பிடித்து, கறி வைத்தால்... மாஸ்ரர் சாப்பிட மாட்டார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதர் மாஸ்டருக்கு, ஹலால் இறைச்சியை சமைக்கச் சொல்லி, பரிமளம் ஆன்ரியிடம் முதலே... சொல்லவும்.

மனுசி வீட்டிலை நின்ற கோழியைப் பிடித்து, கறி வைத்தால்... மாஸ்ரர் சாப்பிட மாட்டார். :D

 

நோன்பும்.. நல்லூர் கந்தன் திருவிழா 25 நாள் விரதமும் ஓவலப் பண்ணுற ரைம் தான் காதர் மாஸ்டர் அங்க போயிருக்கார் சிறியண்ணா..! அதனால.. ஹலால் பிரச்சனை இல்லை. மரக்கறி வெட்டும் போதூம்.. ஹலால் ஓதனும்..???! :)

 

நாங்க யுனில இருந்த போது முஸ்லீம் நண்பர்கள்.. எல்லாம்.. கன்ரீனில.. மாடு.. ஆடு.. கோழின்னு வெட்டுவாங்களே. அது சிங்களவன் நடத்திற கன்ரீன். அவன் ஹலால் ஓதிறது எல்லாம் கிடையாது. உந்த ஹலால் எல்லாம் மாணவர்கள் மத்தியில்.. இல்லை. மதவெறியர்கள் மத்தியில் தான்.. உதுக்கு இவ்வளவு முக்கியத்துவம்..! :lol::)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 3:

 

பரி: என்னங்க இண்டையான் பேப்பர் படிச்சனீங்களே..

 

ப.சி: நீ.. எங்க பேப்பர் படிக்க விட்டா. விடிஞ்சதில இருந்து அதை செய்.. இதைச் செய் என்று கொண்டு நிற்கிறா.. இதுக்குள்ள நான் எங்க பேப்பர் படிக்கிறது. நீ தான் வெள்ளனக் காத்தால பேப்பரோட கதிரையில குந்தினனீ.. சங்கதி என்னவாம் சொல்லன்...

 

பரி: த.தே. கூ.. தேர்தல் பிரச்சாரம் செய்ய வெளிநாட்டுக்கு எல்லோ கிளம்பிட்டாம்... கேள்விப்பட்டனீங்களே..?!

 

ப.சி: என்னடியப்பா.. தேர்தல் இஞ்ச தானே. வடக்கில. அதுக்கு எதுக்கு வெளிநாட்டில பிரச்சாரம்.

 

பரி: ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பு வந்த உடன.. த.தே.கூ புலம்பெயர்ந்து.. கனடா.. லண்டன் அவுஸ்ரேலியா என்று.. ஓடிடுது. அதுக்குள்ள அரசாங்கம் தன்னை பலப்படித்திடுது. இது சும்மா எதேட்சையா நடக்குதோ.. இல்ல திட்டமிட்டு நடக்குதோங்க..???!

 

ப.சி: தேர்தல் இல்லாட்டி.. புலம்பெயர் மக்களை தாறுமாறா விமர்ச்சிக்கினம். ஒரு தூசுக்கும் மதிக்கினம் இல்ல..கண்டுகொள்ளினமும் இல்ல. அப்புறம் தேர்தல் என்ற உடன.. அவையட்டையே காசும்.. ஓட்டும் கேட்டு ஓடினம். அதுவும் இல்லாமல்.. இங்க உள்ளதுகளை வாக்குப் போடச் சொல்லி சொல்லட்டாம் என்றும் கேட்கினம். இப்ப பார்த்தால் புலம்பெயர் மக்கள் எல்லோ.. தேர்தலைச் சந்திக்குதுகள். த.தே கூ இல்லையே..!

 

பரி: அதுதான் எனக்கும் புரியல்ல. விக்கி எடுத்துச் சொன்னார்.. புலம்பெயர் மக்கள் அவைட வேலையைப் பாருங்க என்று. தமிழக மக்கள் அவைட வேலையைப் பாருங்க என்று. நாங்கள் எங்கட கணவான் அரசியல் வேலையைப் பார்க்கிறம் என்று. இப்ப என்னடான்னா தேர்தல் செப் 21 என்று அறிவிச்சு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்த உடன.. புலம்பெயர் மக்கள் எல்லோ எல்லாத்துக்கும் தேவைப்படினம். இப்படிப்பட்ட அதுகளையும் மதிச்சு.. அதுகளோட ஏன் தேர்தல்களுக்கு முன்னாடி கூடிக் கதைக்கக் கூடாது...???! ஒரு பொதுத் தீர்மானத்தை எட்டக் கூடாது..??! சங்கரிக்கு சீட்டுக் கொடுத்து இலட்சக்கணக்கில அதை இன்னொருத்தருக்கு விக்க விட முதல்.. உதுகளையும் புலம்பெயர் மக்களோட கலந்தாலோசிக்கலாமே..?! யார் யாரை வேட்பாளரா நிறுத்திறது நல்லம்.. மக்களுக்கு கொஞ்சம் என்றாலும் பிரயோசனம் என்று..??!

 

ப.சி: அதெப்படிடி முடியும். நாங்க தான் கணவான்களாச்சே. அதுகள் கள்ளத்தோணிகள் ஆச்சே. காசுக்கும் வாக்குக்கும் தான் அவை. தேர்தல் முடிய அவை தேவையில்ல. முஸ்லீம் காங்கிரஸ் என்ன.. டக்கிளசோடும் கூட்டு வைக்கிற முக்கிய முடிவுகளை நாங்கள் தனிச்சு இந்தியாவிட்டக் கேட்டிட்டு அதன் படி எடுப்பம். அப்ப புலம்பெயர் மக்கள் கம்மென்று இருந்து கொண்டு.. அதுக்கு கட்டுப்பட்டு வரணும் என்றதை தான் த.தே.கூ உயர்பீடம் சொல்லாமல் சொல்லுது போல..!

 

பரி: அதுக்கு சனம் வரட்டாமோ. எனியும் உவை கொஞ்சப் பேர் நினைச்ச மாதிரி அரசியல் செய்ய சனம் என்ன 1972 காலத்திலையா இருக்குது. பொடியள் சொல்லித் தந்திட்டுத்தானே போயிருக்காங்கள்.. இவை என்னென்ன மாதிரி மக்களை ஏமாத்துவினம் எண்டு..

 

ப.சி: பொடியள் சொல்லித் தந்ததை சனம் 4 வருசத்துக்கு மறந்திடும் என்று தான் நினைச்சு உவை கதைக்கிறது. ஆனால் யதார்த்தம் என்று வரேக்க.. இங்க உள்ள சனம் வெளிநாட்டில உள்ள சொந்த பந்தங்களோட கதைக்கேக்க.. அதுகளின்ர உள்ளுணர்வு ஒன்று வெளிப்படும் எல்லோ..அது வாக்குச் சீட்டில  பிரதிபலிச்சிட்டா.. கணவான் அரசியல் கவுண்டு கொட்டிட்டுமோ என்ற பயம் தான்.. விழுந்தடிச்சு வெளிநாட்டுக்கு ஓடுறது..!

 

பரி: சனம் கூட்டமைப்புக்கு பொடியள் சொல்லித்தான் வாக்குப் போட்டது. இப்பவும் பொடியள் அதை விரும்புவாங்கள் என்று தான் போடுது. ஆனால் கூட்டமைப்பு பெயரில மட்டும் தான் பழசு. மற்றும்படி பேசுறது.. குழப்பிறது எல்லாம் புதிசா இருக்குது.

 

ப.சி: கூட்டமைப்போ.. கூத்தமைப்போ.. கூத்துக்காட்டி அரசியல் செய்யலாம் என்று நினைச்சால் சனம் தக்க பதிலடி கொடுக்கும். புலம்பெயர் மக்களோ.. தாயக மக்களோ.. தமிழ் மக்கள்.. ஒரு சுதந்திரமான தாங்களே தங்களை பரிபாலனம் செய்யக் கூடிய.. ஒரு அரசியல் தீர்வைத் தான் எதிர்பார்க்குதுகள். அதைவிட்டிட்டு.. உவை கொஞ்சப் பேர் சட்டம் படிச்ச திமிரை சனத்தில காட்ட வெளிக்கிட்டால்.. தமிழரசுக் கட்சி ஒரு காலத்தில வாங்கிக்கட்டினது போல வாங்கிக்கட்ட வேண்டித் தான் வரும்..! அப்புறம் தமிழீழத்தைச் சொல்லித்தான் கூட்டணிக்காரர் வெண்டவை. கூட்டமைப்பின்.. இந்தக் குழப்ப அரசியலால.. ஆதாயம் அடையப் போறது சிங்களவனும் அவனுக்கு வால் பிடிக்கிற டக்கிளஸ் போல ஆக்களும் தான். சனத்துக்கு ஒரு விடிவும் வராது. உதை உவையள் விளங்கிக் கொள்ளனும். புலம்பெயர் மக்களும் தங்களைத் தேடி வாற த. தே. கூ விடம் தெளிவாச் சொல்லிடனும். அதுக்கு அப்புறம் அவைட பிரச்சனையை அவை சந்திக்கட்டும்.

 

பரி: சரி.. சரி.. கதையில செவ்வரத்தை வேர் தெரியுற அளவுக்கு தண்ணி அடிச்சிட்டீங்கள். அங்கால அந்த ரோசுகளுக்கும் தண்ணி காட்டி விடுங்கோ..! நான்.. உலை வைக்கப் போறன்.. நேரமாகுது..!

 

ப.சி: சரியடி அப்பா. நீ கதையிலும் கதை.. காரியத்திலும் காரியம். :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை தொடர் நன்றாக செல்கின்றது ...தொடர்ந்து பதியுங்கள்..

ப.சி: சரியடி அப்பா. நீ கதையிலும் கதை.. காரியத்திலும் காரியம்.
புத்தன்: நெடுக்ஸ் எல்லாம் சரி அப்படியே வாக்குகளை த.தே.கூ..போடச்சொல்லிவிடுங்கோ ..ப.ரியிட்டையும்...ப.சி யிட்டையும். :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் தங்கள் கருத்திற்கு. :)

 

நடப்பு அரசியல் போக்கைப் பார்த்திட்டு கடைசி நேரத்தில தான் ப.சியும் பரியும் யாருக்கு வாக்குப் போடுறது என்று முடிவெடிப்பினம் போல இருக்குது. எதுக்கும் தொடரப் போகும் அவையிட விறாந்தைப் பேச்சைக் கவனிச்சால் தான்.. எதுவும் வெளிக்கும்..! :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை - 4

 

பரி: என்னங்க செய்தி கேட்டீயளே...

 

ப.சி: என்ன செய்தி.. ஏதேனும் சாமத்திய வீடு.. கலியாண வீடோ...??!

 

பரி: அப்படி ஒன்றும் இல்லையப்பா. எங்கட அண்டை நாடும்.. சிங்கள நாடும் புலனாய்வு அட்டைச் சண்டை போடினமாமில்ல..!

 

ப.சி: புலிகள் இருக்கும் வரை வேலை வெட்டி இல்லாமல் இருந்தவைக்கு.. இப்ப மேலதிக வேலை வந்திட்டாமோ..??!

 

பரி: ம்ம்.. அப்படி என்றும் சொல்லலாம். ஒரு காலத்தில சிறீலங்கா.. தமிழகத்தில் தமிழ் போராளிகளின் பயிற்சி முகாம் இருக்கு என்று கத்தின போது மறுத்து போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த இந்தியா.. இன்று.. பாகிஸ்தான் தன்னை அடிக்க சிறீலங்கா பயிற்சியும்.. உதவியும் அளிக்கிறதா அழுகுது..??! சிறீலங்கா அதை நக்கல் அடிக்குது. எப்படி காலம் மாறிச்சுது பாத்தியளோ...??!

 

ப.சி: இதில இருந்து என்ன தெரியுது. சிங்களவன் மொக்கன் இல்லையடியப்பா..! அவன் இந்தியாவைக் கொண்டே அது உருவாக்கிய அமைப்புக்களை ஒவ்வொன்றா அழிச்சான். மிச்சத்தைப் பிடிச்சு எலும்பை வீசி.. தன்னோட கட்டி வைச்சான். இப்ப பழைய கணக்கிற்கு பழிவாங்க.. இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிறான். அதுவும் சீனா.. பாகிஸ்தான் என்று கூட்டுச் சேர்ந்து கொண்டு..!

 

பரி: சிங்களத்துக்கு சவால் விட்டுக் கொண்டு.. சும்மா கிடந்த..புலியை.. ஒரு குடும்பத்தின்ர பழிவாங்கல் உணர்வுக்காக வேட்டையாடப் போய்.. இப்ப பாரத நாடு.. தென்கோடியில் வினையை விலைக்கு வாங்கி வைச்சிருக்குது..!!

 

ப.சி: எங்களுக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்திற்கு பாரதம் இதுவும் அனுபவிக்கும் இன்னும் அனுபவிக்கும். பார்த்தியே.. பீரிஸ்.. டெல்லி போன கையோட இஸ்லாமாபாத்தும் போய் தான் வாறாராம்..!

 

பரி: டெல்லிக்காரருக்கு பொதுநலவாய மாநாட்டுக்கு.. அழைப்பிதழ் கொண்டு போன கையோட.. இஸ்லாமாபாத்திற்கும் கொண்டு போயிருப்பார். அப்படியே பீஜிங்கிற்கும்.. ஒரு விசிற்றர் பெமிட் கொடுத்திட்டு தான் வருவார். இல்ல கூட்டா நின்று தமிழனை அடிச்சவை.. ஆளையாள் கோவிப்பினமில்ல..!

 

ப.சி: சிங்களவன் எல்லாருக்கும் தாஜாவும் கூஜாவும்  தூக்கியே  தமிழனை அடிச்சு.. வாழப் பழகிட்டான்..! நாங்க தான்.. இன்னும் இந்தியாவின்ர வாயைப் பார்த்துக்கிட்டு இருக்கிறம்..!

 

பரி: உப்படியே சிங்களவன்ர ஆதிக்கத்துக்குள்ள விட்டால்.... யாழ்ப்பாணம்.. குட்டிக் காஷ்மீர் ஆகும் போலத்தான் கிடக்குது..!! உள்ள தீவிரவாத அமைப்புக்கள் எல்லாம்.. சிங்கள ஆசீர்வாதத்தோடு ஏக்கர் கணக்கில குடியேறிடும். போதாக்குறைக்கு முஸ்லிம் காங்கிரஸ்.. பவுதீன் போன்ற முத்தின முஸ்லீம் மதவாதிகளும்.. தமிழர் எதிர்ப்புணர்வை வளர்த்து விட்டுக் கொண்டிருக்க கையும் கணக்கும் சரியா இருக்கும்..!! சிங்களத்திற்கும்.. இந்தியாவை ஆட்டி வைக்க.. தமிழரட்ட இருந்து நிரந்தரமா விலத்தி வைக்க.. நல்ல வசதியா இருக்கும்.

 

ப.சி: தமிழன் என்றால் முறாய்ச்சுப் பார்க்கிற.. மலையாளியலின்ர கதையைக் கேட்டு ஆட்ட போட்ட சிங்கிற்கும் கருணாநிதிக்கும் சோனியாவிற்கும்.. உதுகும் வேணும் இன்னும் வேணும். அதுக்குள்ள.. உவன் ஞானதேசிகன் என்ற காங்கிரஸ் கூலி. அவன் சொன்னதைக் கேட்டனியே..?!

 

பரி: அவனுக்கு லூசுங்க... எப்ப பாரு ஏதோ உளறிக்கிட்டு இருக்கிறான். அவனுக்கு சீமான் முனி உச்சந் தலையில..அடிச்சிட்டுது.

 

ப:சி: அதுக்காக உப்படி உளறினா.. அப்புறம் அவையிட.. புலனாய்வு அறிக்கையையே எவன் மதிப்பான்...??!

 

பரி:அது மட்டுமே.. எங்கட நிலத்தில நின்று உவையள் எல்லாரும் கூத்துப் போட்டால்.. எங்கட நிலைமை என்னாகிறது..?!

 

ப;சி: திரும்பி தம்பிட ஆக்கள் தான் வரணும் போல...இருக்குது. போகிற போக்கு அப்படித்தான் போக்கிட்டு இருக்குது..! இந்தா யுத்தம் முடிஞ்சதும் பயங்கரவாதம் அழிஞ்சதும் தமிழர்களுக்கு அந்தத் தீர்வு.. இந்தத் தீர்வு என்று சொன்னவையும் வன்னிக்கு வந்து போனவையும் இப்ப ஒரு மூச்சும் இல்லாமல் இருக்கினம்..!

 

பரி: பொடியள் களைச்சுப் போனாங்கள். எங்கட சனமும் களைச்சுப் போச்சுதுகள். ஆனால் உந்த சிங்களவனும்.. முஸ்லீம்களும்.. இந்தியாவும்..  இன்னும் தமிழர் தலையில தான் சவாரி செய்ய நிற்கினம். உதுக்கு ஒரு முடிவுரை எழுதத் தானே வேணும்..!

 

ப.சி: பூனைக்கு மணிகட்டிறது யார் என்றது தானே இப்ப உள்ள பிரச்சனை. கூட்டமைப்பு.. செய்யும் என்று பார்த்தால்.. அது திசை தெரியாமல் திக்குத் தெரியாமல் போற படகாட்டம் எல்லோ போய்க்கிட்டு இருக்குது..!

 

பரி: நீங்கள் பூனை எண்டத்தான் ஞாபகம் வருகுது. வெளில நல்ல வெயில் என்று நெத்தலி காயப்போட்டனான். எங்கட பூனையள் என்ன விளையாட்டுக் காட்டிட்டுதோ தெரியாது. போய் பார்க்கப் போறன். நீங்கள் ஒருக்கா.. உந்த பேக்கரில போய் பாண் வாங்கிக் கொண்டு வாங்களன். ராத்திரிக்கு சமைக்கல்ல இண்டைக்கு.

 

ப.சி: சரியடிப்பா. நீ போய் நெத்தலியைப் பார். நான்.. பேக்கரிக்குப் போட்டு வாறன்.

 

மீண்டும் ஒரு விறாந்தையோடு... சந்திக்கும் வரை நன்றி கலந்த வணக்கங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 5:

 

ப.சி: என்னடியப்பா காலைல இருந்து பேப்பரை தலைகீழா புரட்டிப் புரட்டி படிக்கிறா.. அப்படி என்ன விசயம் தான் கிடக்குது..

 

பரி: எங்கட நவிப்பிள்ளை சுடிதார் போட்டுக் கொண்டு நிற்கிற படங்கள் பார்க்கிறனப்பா...?!

 

ப.சி: உந்தச் சுடிதாரில மயங்கித்தானே சிங்கள மன்னன் 10ம் பண்டுகாபய மேர்வின் சில்வா காந்தர்வ மணம் முடிக்க முயன்றிருக்கிறான். நீயும் உதை வாங்கிப் போட்டு........ என்ர வாழ்கையில மண்ணை அள்ளிப் போட்டிடாதேயடி. போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்.

 

பரி: சும்மா பகிடி விடாதைங்கோ. அவட சுடிதார் நல்லாத் தானே இருக்குது. திருகோணமலைல.. ஸ்கேட் பிளவுஸோட நிற்கிறா. கொழும்பில.. வெஸ்டேனில நிற்கிறா..!

 

ப.சி: ஐநாவில முக்கிய பொறுப்பில உள்ள மனிசி என்ற வகையில.. நவிப்பிள்ளையோட உடுப்பைப் பார்க்கிறா சரி. அவா வந்த அலுவலை எப்படி கவனிச்சாவோ..??!

 

பரி: வந்த அலுவலை கவனிக்க எங்க விட்டாங்கள். மனிசியை சுத்தி எப்பவும்.. நாளைஞ்சு தடியங்கள் கறுப்புக் கண்ணாடியோட திரியுறாங்கள். அதுபோக.. நாலு பேர் பையிலும் கையுமா வழிகாட்டிறாங்கள். மனிசி அவங்கள் காட்டிற.. பக்கம் தானே போய்க்கிட்டு இருக்குது. அதெல்லாம் கிளியேட் ஏரியா.. பாருங்க. வெரி கிளீன்..! ஆமியும் இருக்காது.. சனமும் இருக்காது.

 

ப.சி: நானும் அவதானிச்சனான் தான். கடைசியில திருகோணமலைல.. அரசாங்க ஆதரவில.. சிங்களவங்கள்  வைச்ச ஆர்ப்பாட்டத்தை கவனிக்க விட்டவை... யாழ்ப்பாணத்தில.. கிளிநொச்சியில சனம் செய்த ஆர்ப்பாட்டத்தை கண்ணிலும் காட்டேல்ல. பின் கதவு வழியாக கூட்டிக்கொண்டு அந்தப்புரம் காட்டின கணக்கா இழுத்துக் கொண்டு ஓடி இருக்கிறாங்கள்.

 

பரி: அது அவாக்கு விளங்கி இருக்கும். ஆனாலும் ஒரு டவுட்டு.. 30 வருசமா நடக்கிற மனித உரிமை மீறல்கள் குறித்தும் பேசுவன் என்று கடைசியில சொல்லி இருக்கிறா. அதுவும் அனைத்து இனங்கள் மீதும். 30 வருசமா.. எத்தினை ஆமி.. எத்தனை நாடு.. எத்தனை கொலைக்குழுக்கள்.. இயங்கி இருக்குது. அத்தனையும் விசாரிக்க.. ஐநாவுக்கு ஆயுள் போதுமோ.. இல்ல பழைசைக் காட்டி புதிசை சமன் செய்யப் போகினமோ..தெரியல்ல..???!

 

ப.சி: சிங்களவன் தான் கெட்டிக்காரன் என்ற நினைப்பில... புலிகள் செய்த மனித உரிமை மீறல்களை விசாரி என்று ஒன்றை இழுத்து விட்டிருக்கிறான். அதிலும் தாங்களே பொதுமன்னிப்பு அளிச்ச.. பிரதி அமைச்சர் முரளிதரன் செய்ததும் விசாரிக்கப்படனுமாம். அப்படிப் பார்த்தா.. 1972 இல இருந்து.. ஜே வி பியை கொன்றதிலும்.. ஜே வி பி கொன்றதிலும் இருந்து உதுகளைத் தொடங்கனும். இந்தியப் படைகள் செய்ததும் உதில அடங்கனும். தென்னிலங்கை கலவரங்கள்.. திட்டமிட்ட தமிழ் கிராமங்கள் அழிப்பு.. முஸ்லீம் காடைக்குழுக்களின் தமிழ் மக்கள் மீதான மதவெறித் தாக்குதல்கள்.. தமிழ் கிராமங்கள் அபகரிப்பு.. கொழும்புக்கு போற வாற பஸ்ஸுகளை மறிச்சு தமிழர்களை வெட்டிச் சாய்ச்சது.. கிளாலில பயணம் போன சனத்தை வெட்டி வீழ்த்தினது.. அரசாங்கத்தோட இருக்கிற தமிழ் ஒட்டுக்குழுக்கள் செய்த படுகொலைகள்.. இப்படி எத்தினை எத்தினை... உதுகள் எல்லாம் விசாரிக்கப்படத்தானே வேணும்.

 

பரி: சரியாச் சொன்னியள். 30 வருசம்.. என்றால் சும்மாவே. இந்த 30 வருசத்தில செத்த தமிழ் சனம் இரண்டு இலட்சம் என்றால் முஸ்லீமும் சிங்களமும் மொத்தமாக் கூட்டினால் 2000 கூட வராது. நல்லா விசாரிக்கட்டும். 2,00,000 பேரின் இனப்படுகொலையை 2000 பேரின் சாவால மூடி மறைக்க முடியாது தானே. 2000 பேருக்கு வழங்கிற தீர்ப்பு 2,00,000 பேருக்கும் வழங்கப்படத்தானே வேணும்..!

 

ப.சி: உதில ஒரு விசயம் மட்டும் தெளிவாத் தெரியுது. 30 வருசமா இங்க சிறீலங்காவில மனித உரிமைகள் மீறப்படுகுது என்று தெரிந்தும்.. உவை ஐநா காரரும்.. சும்மா தானே இருந்திருக்கினம். அவையையும் ஒருக்கா விசாரிச்சா நல்லது. உவைக்கு அறியாமல்.. உதுகள் நடக்கல்லத் தானே. ஆரம்பத்திலேயே உதுகளை விசாரிச்சு குற்றவாளிகளை தண்டிச்சிருந்தா.. 30 வருசத்திற்கு உது நீண்டிருக்குமோ.. செத்த தொகையும் இலட்சக்கணக்காக ஆகி இருக்குமோ..??!

 

பரி: உண்மை தாங்க. இவ்வளவு சனமும் செத்து... எவ்வளவோ துன்பங்களோட தமிழ் சனம் நிற்குது. உதுக்கு ஒரு நியாயம் கிடைக்கக் கூடாதுன்னு சிங்களவன் நினைக்கிறான். ஐநா அதுக்கு ஒத்தூதாமல்.. பாதிக்கப்பட்ட மக்கள் யாரா இருந்தாலும் அவைக்கு நீதி வாங்கிக் கொடுக்கனும். எப்படிப் பார்த்தாலும் தமிழ் சனம் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்குது. அதுகளுக்கு தற்கால நீதி மட்டுமன்றி நிரந்தர அரசியல் தீர்வையும் ஐநா தான் பெற்றுக் கொடுக்கனும். அதுக்கு அம்மையாரின் வருகை உதவுதோ அல்லது நவிப்பிள்ளை.. நரிப்பிள்ளையான கதையா முடியுதோ தெரியல்ல. பொறுத்திருந்து பாப்பம்.

 

ப.சி: 30 வருசம்.. என்ற உந்த மனித உரிமை விசயத்தை.. உண்மையா நீதியா விசாரிச்சால் பலர் சிக்குப்படுவினம். இந்தியப் படைகளை அனுப்பினவை..வழிநடத்தினவையில இருந்து.. அமெரிக்க கிரீன் பரேட் வரை சிக்கும். இஸ்ரேல் மொசாட்டில இருந்து.. பாகிஸ்தான் ஐ எஸ் ஐ வரை சிக்கும். ரஷ்சியா முதல் கொண்டு சீனா வரை சிக்கும். சிறிமாவோ வில இருந்து ஹத்துரு சிங்க வரை சிக்குவினம். அப்படிச் சிக்க வைச்சு.. ஒரு முடிவை தமிழ் மக்களுக்கு தரேக்க.. புலிகள் செய்த வன்முறைகள் உதுக்கான பழிவாங்கல்கள்.. தமிழ் மக்களை உதுகளில் இருந்து பாதுகாக்கிற வன்முறைகள்.. என்ற உண்மையும் வெளிக்கும். ஒரு அரசை சரணடையச் செய்ய.. அணு குண்டு வீசி.. கோடி அப்பாவிச் சனத்தைக் கொன்று ஒரு யுத்தத்தை முடிச்சதில செத்துப் போன மனித உரிமைகள்.. இங்க எங்க நிலைக்கப் போகுது.. பார்ப்பம்...என்ன தான் நடக்குது நாடகம் என்று.

 

பரி: உவை என்ன தான் நாடகம் ஆடினாலும்.. 30 வருச மனித உரிமை மீறல்களை விசாரிச்சு தீர்ப்பு சொல்லினமோ இல்லையோ... இப்ப உடனடியாக இறுதி யுத்தத்தில்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உருப்படியான செயற்திட்டத்தை ஐநா மேற்பார்வையில் நடைமுறைப்படுத்த முன் வரணும். அதில அரச.. இராணுவ தலையீடுகள் இருக்கப்படாது. இராணுவத்தை முகாம்களுக்குள்ள முடக்கனும். அப்பாவி தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி இராணுவத்தில இணைக்கிறதுகளை நிப்பாட்டனும். காணி அபகரிப்புக்களை நிறுத்தனும். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்.. வளப் பறிப்புகளை நிறுத்தனும். சர்வதேச உதவிகளை ஐநா பொறுப்பேற்று அதன் மூலமே அது தமிழ் மக்களின் பகுதிகளுக்கு வரணும். ஐநாவே தேவையான செயற்திட்டங்களை அமுல்படுத்தனும். அதுகளைச் செய்யாமல்.. நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு தேடாமல்.. பழையதை விசாரிக்கிறம் என்ற போர்வையில் எல்லாம் காலத்தை இழுத்தடிச்சு.. தமிழ் சனத்தை இன்னும் இன்னும் நிர்க்கதியாக்காமல் இருந்தாலே நல்லம் என்று படுகுது.

 

ப.சி: நீ சொல்லுறது 100 க்கு 100 உண்மை. நவிப்பிள்ளை.. கொடுக்கிற அறிக்கை என்றது.. சிங்களவனுக்கு ஆறுதல் அளிக்கிறதா இருக்கிறதை விட.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா தான் என்ன செய்யலாம் என்றதை அடிப்படையாகக் கொண்டிருப்பது தான்.. முக்கியம். அதைத்தான் நாங்கள் தமிழர்கள் வலியுறுத்தனும். ஐநா தலையீடு இல்லாமல்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதியோ.. விமோசனமோ கிடைக்கப் போறதில்லை..! உதில எங்கட ஆக்கள் தெளிவாக இருக்கனும். புலி செய்தது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால்.. இந்த போரால்.. பாதிக்கப்பட்டது எங்கட நிலமும் மக்களும் என்ற அந்த உண்மையை எல்லோரும் புரிஞ்சு கொண்டு இதய சுத்தியோட செயற்படனும். சிங்களவனை பாதுகாக்கிற அலுவலைச் செய்தால்... அது எங்களுக்குத் தான் ஆபத்து.

 

பரி: சரியாச் சொன்னியள். சரி.. இந்தா நீங்களும் இந்தப் பேப்பரைப் பாருங்க. நான் துணியள் ஊறப் போட்டனான்.. கழுவிப் போட்டிட்டு வாறன்.

 

இன்னொரு விறாந்தையோடு.. பிறகு வாறம்.....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 6:

 

பரி:  என்னங்க... என்னங்க..

 

ப.சி: என்னடியப்பா.. கோழிக்குஞ்சை பிராந்து தூக்கிட்டுதே..??!

 

பரி: இல்லையப்பா. இந்தப் பகிடியை பாருங்கோவன்....

 

ப.சி: அடிபாவி. கோழி மேய்க்கேக்கேயும் பேப்பரும் கையுமாவே நிற்கிறா...??!

 

பரி: உங்கட உந்த உழுத்துப் போன பகிடியை விட்டிட்டு உதைப் படியுங்கோ...

 

ப.சி: அந்தாள் சொல்லுறது நியாயம் தானே. சட்டம் படிச்ச ஆள் எல்லோ.. திரும்ப கொழும்புக்கும் போகனும் என்றால்.. அண்ணன் - தம்பி.. கணவன் - மனைவி உறவு வந்தால் தானே உண்டு..! இல்ல பொதுபலசேன.. சிங்கள இராவணன நேசய.. சிங்கள உறுமைய... அமைப்புக்கள்.. சும்மா விடுவினமோ..??!

 

பரி: இல்ல எனக்கொரு டவுட்டு.. சிங்களவன் கணவன் என்றால்.. தமிழன் மனைவி என்றால் அப்ப இவ்வளவு நாளும் தமிழனை அடிச்சது கொன்றது என்ன சும்மா கணவன் மனைவி ஊடலாமோங்க..??!

 

ப.சி: அவர் சொல்லுறது.. 2009 க்கு அப்புறம் உள்ள உறவை. அதுக்கு முன்னர் அவரும் அவையும்.. அமிரும் ஜே ஆரும்.. சம்பந்தனும் சந்திரிக்காவும்... அண்ணன்.. தம்பிகள்.. அக்கா தம்பிகள்.. தானே..!!

 

பரி: எது என்னவோ கிடக்கட்டும். உவரின் வாதப்படி பார்த்தாலும் தன்ர தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் தங்கச்சி புருசனால கஸ்டப்படேக்க.. அண்டையில உள்ள சகோதரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமாமோ..???!

 

ப.சி: இருக்காது என்று சொல்லித் தானே 1983 இல இருந்து சம்பந்தனும் அமிர்தலிங்கமும் அங்கும் இங்கும் பறந்து பறந்து அரசியல் செய்தவை..?! ஏன் இப்ப கூட டெல்லில ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கிளைக்கு போய் கத்திப்போட்டுத்தானே வந்திருந்து தேர்தலில குதிச்சவை...???!

 

பரி: ம்..  உண்மை அப்படி இருக்க.. இப்ப ஏன் உந்தாள் இப்படி ஒரு கதைவிடுகுது..??! தமிழக சொந்தங்கள் இல்லை என்றால் நாங்கள் எப்பவோ அழிக்கப்பட்டிருப்பம்... என்ற உண்மையை ஏன் உணராமல் கதைக்கினம். அதுகளும் அங்கிணைக்க கிடந்து அப்பப்ப கத்திற படியாலும் தான் உலகம் எங்களை கணக்கெடுக்குது. ஏன் இந்திய நடுவன் அரசே அதுக்காகத்தான் ஈழத்தமிழர் என்றே உச்சரிக்குது. இல்லை என்றால் சிங்களவனோடு சேர்ந்து ஒட்டுமொத்தமா அழிச்சு முடிச்சிருப்பாங்கள்.

 

ப.சி: ஒருவேளை கணவன் - மனைவி உறவென்றால்.. அதுக்குள்ள தீர்க்க முடியாத பிரச்சனை இருக்கென்று விவாகரத்து வாங்கித் தரச்சொல்லி சர்வதேசத்தை கேட்கப் போறாரோ என்னமோ..??!

 

பரி: நல்லா கேட்டார். சுப்பிரமணியம் சாமி இப்ப கிட்டடில சொல்லிச்சே.. தமிழனும் சிங்களவனும் ஒன்று டி என் ஏ ரெஸ்டில தெரிஞ்சிட்டுது என்று அது போலத்தான் சொல்லுவார் உவரும்.

 

ப.சி: சுப்புட கதை சூப்பர். இந்தியாவில.. தமிழனும் தெலுங்கனும் மலையாளியும் கன்னடனும்.. ஒன்றில்லை.. ஆனால் ஈழத்தில..தமிழனும் சிங்களவனும் ஒன்று. அவன் ஒரு முழு முட்டாள்.

 

பரி: அந்த லூசை விடுங்க.. உவர் விக்கியர் சொல்லப் போறார்... கணவன் மனைவி ஒற்றுமையா இருக்கினம்...ஒன்றுபட்ட இலங்கைக்குள்ள. இங்க இப்ப.. கணவன் மனைவிக்க பிரச்சனை இல்ல.. ஒரே ஒரு பிள்ளைதான் கொஞ்சம் குழப்படி.. அதையும் இப்ப தீர்த்துக்கட்டியாச்சு. எனி ஒற்றுமை தான் பாக்கி.. என்று சொல்லி முடிச்சிடுவார். இப்ப இந்தத் தேர்தலுக்காக சமஸ்டில நிற்கிறார். மகிந்தவுக்கு சமஸ்டிக்கு வகுப்பெடுக்கிறார். தேர்தல் முடிய.. கணவன் - மனைவி நல்லிணக்கம்.. மீண்டும்..வந்திட்டுது. புலம்பெயர் தமிழர்கள் உட்பட.. ஊரார் உங்கட வேலையை பார்த்துக்கிட்டு போங்க என்றாரோ என்னமோ..??!

 

ப.சி: விக்கி ஒருவேளை முற்பிறவில யானையா பிறந்திருப்பாரோ.. தானே தன் தலையில் மண்ணள்ளிப் போடுறது என்றே உந்த தமிழ் சட்டம் படிச்ச கூட்டம் அலையுது. பொன்னம்பலம் காலம் தொடங்கி.. உதுதான் உவையின்ர இராஜதந்திரம். உதால வந்தது தானே இவ்வளவு அழிவுகளும் அடிமை வாழ்வும். அப்பவே வெள்ளைக்காரன் இருக்கேக்க பிரிச்சிருந்தால்.. ஒரு கரைச்சலும் வந்திருக்காது.

 

பரி: பாப்பம்.. தேர்தல் முடிஞ்ச கையோட.. உந்தக் கணவன் - மனைவி உறவாடலுக்கால என்ன பூனைக்குட்டி வெளிய வருகுதெண்டு. 

 

அங்க பாருங்கப்பா.... முருங்கை மரத்தில வல்லூறு ஒன்று பதுங்கி இருக்குது.. எங்கட கோழிக் குஞ்சை தூக்க.....

 

ப.சி: எங்கட தேசத்தில வல்லூறுகள் கூடிப் போச்சு. உள்ள நாட்டு உளவுப்படைகள்.. படைத்தளபதிகள்.. எல்லாம் யாழ்ப்பாணத்தில தான் நிற்கினம்...அவையோட சேர்ந்து உதுகளும் வந்திட்டுதுகளோ.  அது தான் நம்ம கோழிக்குஞ்சுகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போச்சுது. விரட்டியடி அதை..!

 

 

மீண்டும் ஓர் விறாந்தையோடு....இன்னொரு வேளையில்..

 

Mr C.V. Wigneswaran, the Chief Minister candidate the TNA was prodded to field by the Establishments, found The Hindu on Thursday to bare open what would be his political agenda once given with a ‘mandate’ by a choice-less people, commented Tamil activists for alternative politics in the island. Speaking to The Hindu, and comparing the island situation to a husband and wife fight at home, Wigneswaran addressed to Tamil Nadu that “We will fight, but sometimes we come together. The next-door neighbour must not come and say ‘you must divorce, you must divorce’. That is not your business.” Will the former justice come out with a similar stricture on Washington, New Delhi and Beijing in complicity with the spouse murdering dominant spouse, asked the activists.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரி: நல்லா கேட்டார். சுப்பிரமணியம் சாமி இப்ப கிட்டடில சொல்லிச்சே.. தமிழனும் சிங்களவனும் ஒன்று டி என் ஏ ரெஸ்டில தெரிஞ்சிட்டுது என்று அது போலத்தான் சொல்லுவார் உவரும்.
சிங்களம் திராவிட பாஷா என்று சொல்லுறாங்கள்.....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான்  பார்த்தேன்

வாசிக்க நேரமில்லை

 

தம்பி  எழுதினால்  என்ன  எழுதுவான்  என்று தெரியும்

தொடர்க

நேரமிருக்கும்  போது நிச்சயம் வாசித்து கருத்தும் விருப்பு வாக்கும்  வைப்பேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை -7

 

ப.சி: பரி.. பரி.. இஞ்ச வாவேன். உனக்கொரு நல்ல செய்தி காட்டுறன்..

 

பரி: என்னங்க அப்படி நல்ல செய்தி..

 

ப.சி: நம்ம ஊருக்கு ரெயின் வருகுதாமடியப்பா. அதுவும் யாழ்தேவி...

 

பரி: ஏங்க.. ஊருக்கு ரெயின் வாறது பெரிய விசயமாங்க..?! உங்களுக்கு என்ன பைத்தியமே.. சும்மா சின்ன விசயம் உது.. உதைப் தூக்கிப் பிடிச்சு கத்துறியள்..!

 

ப.சி: என்னடியப்பா இப்படி சலிச்சுக்கிரா. 20 வருசத்துக்கு அப்புறம்.. யாழ்தேவி வருகுதுண்ணு நான் சந்தோசத்தில் கூப்பிட்டு காட்டிறன்.. நீ என்னடான்னா.. இப்படி ஒரேடியா சலிச்சுக்கிறா...!

 

பரி: 20 பது வருசத்துக்கு முன்னம் வந்த ரெயிலை நிற்பாட்டினவனே இப்ப மீண்டும் தன்ர தேவைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு.. கொண்டு வாறான். அவனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால்.. அதனை அப்பவே தொடர்ந்து இயக்கி இருக்கலாம் தானே..???! புலிகள் உவையை கூப்பிட்டு வைச்சு சொன்னவங்களே நாங்கள் உதுகளை இயக்க விடமாட்டம். நிற்பாட்டுன்னு.

 

ப.சி: அதெப்படியப்பா. புலிகள் இருக்கேக்க உதுகளை இயக்கிறது. அப்புறம் புலிகள் அதனை திறமாச் செய்து பெயர் வாங்கிட்டா...???!

 

பரி: புலிகள் இருக்கேக்க.. சிங்கள அரசாங்கத்தின்ர.. இலங்கை வங்கி.. சிறீலங்கா தபால்சேவை..சிறீலங்கா அரசாங்க அதிபர்.. கச்சேரி.. பாடசாலைகள்.. பரீட்சைகள்... உதுகள் எல்லாம் இயங்க முடிஞ்சதுன்னா.. ரெயினும்.. தொலைக்காட்சி சேவையும் மின்சாரமும் தானா இயங்க முடியாது..???!

 

ப.சி: பரி.. இப்படி குண்டக்கமண்டக்க கேள்வி கேட்கப்படாதடி. ரெயில் விட்டினமா.. வெடி கொழுத்தி.. பூமாலை போட்டு வரவேற்றமா.. யாழ்தேவி வருகுதென்று சேர்ந்து நின்று.. கும்மி அடிச்சமா என்றில்லாமல்... கேள்வி கேட்கிறது யாருக்கடி பிடிக்கும். அவை நினைச்சா நிப்பாட்டுவினம். நினைச்சா விடுவினம். நாங்கள் தான் ரோசம் மானம் என்று.. எதுவுமே இல்லாத கள்ளத்தோணிகள் ஆச்சே...!!

 

பரி: புலிகள் இருக்கேக்க தமிழ் மக்கள் கஸ்டப்படனும். அப்பதான் அவை புலிகளை வெறுத்து ஒதுக்கிவினம் என்று.. எத்தனை  தடைகளை.. கஸ்டங்களை தந்தான்.. இந்தச் சிங்களவன். இப்ப என்னடான்னா.. தன்ர ஆமியையும் ஆக்களையும் கொண்டு வந்து வைச்சுக் கொண்டு.. ரெயில் விடுகினமாம். ஏயர்போட் திறக்கினமாம். அவன் தன்ர வசதிக்கு.. தான் உறுதியா தமிழன்ர நிலத்தில நிற்க வசதி செய்து கொண்டு.. அதுக்கு அரசியல் ஜனநாய சாயம் வேற பூசிக் கொண்டிருக்கிறான். எங்கட சிலதுகள் அதுக்கு விசிலடிக்குதுகள்....

 

ப.சி: நான் விசிலடிக்கல்லையடியப்பா. யாழ்தேவி வருகுதாம் என்று செய்தி படிச்ச உடன.. ஒரு சந்தோசத்தில கத்திட்டன்டியப்பா. மன்னிச்சுக்கோ.

 

பரி: யாழ்தேவி ஒன்று.. 93 இல எப்படி வந்தது என்று தெரியும் தானே. தென்மராட்சி அதிர.. இடைவிடாத செல்லடியும்.. விமானக் குண்டடியும் என்று வந்தது எங்கட சொத்துக்களை அழிச்சது.. உயிர்களை பறிச்சது மறந்து போச்சுப் போல...

 

ப.சி: அதுகளை இப்ப யாரடி நினைக்கிறம். நாங்கள் தான் இப்ப கரண்டு.. ரெலிபோன்.. வெளிநாட்டில உள்ள பிள்ளை குட்டி வரவுன்னு ரெம்ப ஜோரா இருக்கிறமில்ல..

 

பரி: நீங்கள் உங்கட குடும்பத்தை பற்றி மட்டும் சிந்திக்கிறீங்க. 93 இல பிள்ளைகளை.. சொந்தங்களை.. சொத்தைப் பறிகொடுத்த மக்களின் மனநிலையை... பற்றி யோசிக்கிறீங்களோ. இல்லை. உதாலதான்.. தமிழனை ஆரும் என்னவும் செய்ய முடியுது. ஒரு இன உணர்வில்ல. ஒற்றுமை இல்ல. தங்களுக்கு ஒரு வசதி என்றால்..  எல்லாருக்கும் அது அப்படித்தான்.. என்று நினைச்சு கற்பனையில.. வாழுறது.

 

ப.சி: அது எங்கட பரம்பரை புத்தியடி. அதை மாத்தேலுமோ..??!

 

பரி: இத்தனை சாவுகள்.. அழிவுகள்.. துரோகங்கள்.. மாற்றான்மனப்பான்மை கண்டும்.. திருந்தல்லைன்னா.. நீங்கள் எப்பவுமே திருந்தப் போறதில்லை. இப்படியே ஆமிக்காரன் வேண்டிய நேரம் வந்து.. கதவை தட்டுவான்.. திறந்து கொண்டு.. அடிமைகளாய் கிடந்து சாவுங்கோ.

 

ப.சி: நான் ஏன் அடிமையா இருக்கப் போறன். எனக்குத்தான் லண்டன் கனடா அவுஸி என்று பிள்ளைகள் இருக்குதுகள். இங்க நிலைமை மோசம் என்றால் அங்க போவன்.

 

பரி: உங்களைப் போல.. நாடோடிகளுக்கு யார் என்ன கொண்டு வந்தாலும்.. அமிர்தமாகத்தான் இருக்குமுங்க. எனக்கென்டா.. கொட்டில இருந்தாலும் சொந்த மண்ணில சுதந்திரமா ஒருத்தற்ற தொந்தரவும் இல்லாமல் இருக்கனுன்னு தான் விருப்பம். கனடாவில எவனோ வகுக்கிற சட்டத்திற்கு அவனுக்கு கூலியா இருந்து கொண்டு இஞ்ச வந்து சோ காட்டிறது எல்லாம்.. ஒரு பிழைப்பாங்க. உங்களுக்கு அது திறம். எனக்கு அப்படி இல்லை.

 

ப.சி: அது தான் நீ.. பிள்ளைகள் என்னை இஞ்ச வந்து பார்க்கனும்.. நான் உந்த நாடுகள் ஒன்றுக்கும் போகமாட்டன் என்று அடம்பிடிக்கிறனியே. அப்படிச் சொல்லன் சங்கதிய. பார் உன்னைக் கட்டி 40 வருசமாச்சு. என்னாலேயே உன்னைப் புரிஞ்சுக்க முடியல்ல.. கொண்டதே கோலம் என்றிருக்கிற..எங்கட சனத்தால.. எப்படி.. சிங்களவனை புரிஞ்சுக்க முடியும்.

 

பரி: சனத்தைப் பற்றி எதுக்குக் கதை. அந்தச் சனமே நாங்கள் தானே. நாங்கள் ஒழுங்கா சிந்திச்சு செயற்பட்டு வாழ்ந்தா.. அது ஒவ்வொரு வீட்டிலும் நடந்தா அதுவே சனம் செய்யுறதா முடியும். முதலில உங்களை மாத்திக்கொள்ளுங்க. அற்ப விசயங்களை தூக்கிப் பிடிச்சு அநியாயம் செய்தவனுக்கு அனுதாபம் தேடிக் கொடுக்காதேங்க. சனத்தைப் பற்றி அப்புறம் பேசுவம். சரி உலை வெந்திட்டுது போல.. நான் கறி வைக்கப் போறன். இதுக்குப் பிறகும்.. யாழ்தேவி அதுஇதென்று கத்தினீங்க.. எனக்குப் பொல்லாத கோபம் வந்திடும் சொல்லிப்போட்டன்.

 

ப.சி: நான் எனிச் சொல்லலடியப்பா. எங்களைக் கொன்ற அழிச்ச.. உந்தச் சிங்களவனுக்காக உன்னோட சண்டை பிடிச்சு..என்ர வயிறை காயப் போட நான் என்ன அடிமுட்டாளே. சுழியன்டி..! நீ போய் உன்ர வேலையைப் பாரடியப்பா.

 

(மீண்டும் ஒரு விறாந்தையோடு....சிந்திக்கும் வரை நன்றி..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனிச் சொல்லலடியப்பா. எங்களைக் கொன்ற அழிச்ச.. உந்தச் சிங்களவனுக்காக உன்னோட சண்டை பிடிச்சு..என்ர வயிறை காயப் போட நான் என்ன அடிமுட்டாளே. சுழியன்டி..! நீ போய் உன்ர வேலையைப் பாரடியப்பா

:D :D உந்த யாழ்தேவியில போய் தமிழ்தேசிய கூட்டமைப்பு ,சனம் வோட்டு போடவேணும் ....
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.