Jump to content

"நடப்பு" அரசியல்: பரமசிவம் அங்கிளும் பரிமளம் ஆன்ரியும் விறாந்தைப் பேச்சு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 1:

 

பரமசிவம் (ப.சி): என்ன பரி.. இன்றைக்கு சக்கரையோட தேத்தண்ணி கொண்டு வந்திருக்கிரா... சீனி முடிஞ்சுதோ..

 

பரிமளம் (பரி): சக்கரையான செய்தி வந்திருக்கெல்லோ.. அதுதாங்க.

 

ப.சி: அப்படி என்னடி செய்தி.

 

பரி: நம்ம வடக்கு மாகாண சபை தேர்தல் தாங்க.

 

ப.சி: சும்மா கிடவடி. உள்ள மாகாணசபைகளையே ஒழுங்கா இயக்கக் காணம்.. இதுக்குள்ள..உது  வேற கூத்து.

 

பரி: நாங்களும் வடக்கு மாகாண சபை வந்து.. இன்னும் வாக்குப் போடாத குறையா எல்லோ இருக்கிறம். அதுதான்.. உந்த வெளிநாட்டு ஆக்கள் அப்படி ஒன்றை எங்களுக்கு பெற்றுத் தருகினம்.

 

ப.சி: ஓமடியப்பா. உதுக்காகத் தானே.. சாத்வீகமாயும்.. ஆயுதம் என்று தூக்கியும் போராடினது..?!

 

பரி: அது எங்க அவங்களுக்கு விளங்கப் போகுது. அவங்களுக்கு தமிழன் ஆயுதம் வைச்சிருந்தா பயங்கரவாதம். சிங்களவன் வைச்சிருந்தா தார்மீகம்..! தமிழன் வாக்குச் சீட்டு வைச்சிருந்தால்.. ஜனநாயக விரோதம்.. சிங்களவன் கள்ள வாக்குப் போட்டாலும் அது ஜனநாயகம். இப்படியான உலகத்தில.. எந்த வழில போராடி என்னத்தைக் காணுறது..??! அதை விடுங்கப்பா. சங்கதி கேட்டியளோ..

 

ப.சி: என்னடிப்பா சங்கதி.

 

பரி: தம்பி இருக்கேக்க.. தனக்கு கட்சித் தலைமை வேணும் என்று கூட்டமைப்பை விட்டு ஓடின சங்கரி.. தம்பி இல்லாத நேரம்.. சம்பந்தனின் காலடியே கதின்னு கிடக்குதே.. உதை எங்க சொல்லி அழ...

 

ப.சி: இந்தா புலிகளை முடி. நான் ஜனாதிபதியிடம் எல்லாம் வாங்கிறத் தாறன் என்று கடிதம் கடிதமா எழுதினதும் அந்தாள் தானே. இப்ப தானே எல்லாம் முடிஞ்சுது. கடிதத்தையும் காணம்.. வாங்கித் தாறதையும் காணமேடி.

 

பரி: சும்மா கிடவுங்க. அதுகள் கொழும்புச் சீவியம் நடத்த அப்படி கொக்கரிக்கிறது ஒன்றும் புதுசில்லையே. அமிர்தலிங்கம் வழி வந்ததுகள் எல்லோ. பின்ன எப்படி இருக்குங்கள். அதில்லப் பகுடி.. உவர் வவுனியா காட்டு ராஜா.. சித்திவதை முகாம்.. சித்தார்த்தன்.. தானும்.. கூட்டமைப்பில.. தான் இடம் கேட்கிறாராமில்ல...

 

ப.சி: அவருக்கு கொலைக்கு.. கப்பத்திற்கு.. கூலி கொடுக்க எனி சிங்களவன் வரட்டாம். சம்பந்தன் தான் சரியான ஆள். அதுதான் போய் பதுங்கிட்டார்.

 

பரி: அதுக்காக.. உந்த ஊத்தவாளிகளை எல்லாம்.. கூட்டமைப்பில விட்டு உவர் சம்பந்தன் என்ன பெயர் எடுக்கப் போறார்...???!

 

ப.சி: அவர் தன்ர சாணக்கியத்தை உதில காட்டுவம் என்று வெளிக்கிட்டு இருக்கிறார். பிள்ளையார் பிடிக்கப் போய்.. குரங்கான கதையா உது முடியாட்டில் சரி.

 

பரி: அதுபோக.. உவர் தயா மாஸ்டர் தானும் தானும் என்று முன்னும் பின்னும் திரியுறார். முந்தி புலிகளுக்காக அரசியல் செய்தாராமில்ல.. இப்ப.. சிங்களவனுக்குச் செய்யுறாராம். இவரை சனம் கேட்டதே இப்ப வந்து சிங்களவனுக்கு அரசியல் செய்யுன்னு..??!

 

ப.சி: உவர் எப்ப புலிகளுக்காக அரசியல் செய்தவர். எப்ப அரசியல்துறையில பொறுப்பில இருந்து கிழிச்சவர். அந்தாள்.. உயிர்ப் பிச்சை அளிச்சவைக்கு விசுவாசம் காட்ட ஆசைப்படுகுதாக்கும். காட்டிட்டிட்டுப் போகட்டன். சனம் என்ன உவையை கூப்பிட்டு வைச்சு விருந்தா கொடுக்கப் போகுது..!! சொல்லு பார்ப்பம்.

 

பரி: அதில்லைங்க.. முந்தி எல்லாம் தனிய நின்று படுதோல்வி கண்ட புளொட்.. கூட்டணி.. ஈபி.. நாய் பீ என்று எல்லாத்தையும் கூட்டமைப்பில கூட்டி வைச்சிருக்கிற சம்பந்தன்.. அதேன் கஜேந்திரகுமார் ஆக்களை கண்ணில காட்டப்படாது என்று இருக்கிறார். உண்மையில.. தமிழ் மக்களுக்காக உழைக்கிறவர் என்றால் அவையையும் கூப்பிட்டு எல்லோ வைச்சிருக்கினம்...

 

ப.சி: கஜேந்திரகுமார் ஆக்களுக்கு சொந்தமாக யோசிக்க.. அரசியல் செய்ய தெரியுமடியப்பா. உதுகள்.. கூலிக்கு மாரடிச்சதுகள் என்ன செய்யுங்கள். சம்பந்தனே கதி என்று கிடக்குங்கள். சம்பந்தனுக்கு உந்தக் கணக்குப் போட வராது என்றே நினைக்கிறா. அந்தாள் பெரிய காய். உனக்குத் தெரியாது சம்பந்தனின் சாணக்கியம் பற்றி.

 

பரி: விக்கியையும்... உள்ள இழுத்து விட்டாச்சு. 

 

ப.சி: விக்கியை உள்ள இழுத்தது இரண்டு விதத்தில சம்பந்தனுக்கு ஆதாயம்.

 

1. விக்கியைக் கொண்டு சொல்ல வைச்சிட்டால்.. தமிழ் மக்களின் உரிமையை மாகாண சபைக்குள்ள அடக்கிடலாம்.

 

2. சிங்கள மிதவாதிகள் மத்தியில் சம்பந்தனுக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ணலாம். உது எதிர்காலத்தில் சம்பந்தனுக்கு பல சலுகைகள் வர உதவும்.

 

பரி: உந்த மாகாண சபைகளே வேணாம்.. 13 வது திருத்தம் சுத்துமாத்து என்று நிராகரிச்சவை எல்லாம் இப்ப அதுதான் அடிப்படை என்று சொல்லினம்... உதென்னங்க கதை.... தமிழ் சனத்தைக் கேட்டா.. உதெல்லாம் வந்தது. ராஜீவும் ஜே ஆரும் தங்களுக்கு ஏத்தமாதிரி எழுதிட்டு எங்கட தலையில கட்டினவை தான உதுகள்.

 

ப.சி: ஏன்.. குத்தியரின் குத்துக்கரணம்.. மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி கூட.. 13 க்கு கீழ போய் நிற்குது  என்றால் பாரன்... உவங்கள் எல்லாம்.. புலிகளுக்காக  தமிழ் மக்களுக்கு முன்னாள் போட்ட வேசம் அப்படியே வெளிச்சு நிற்குது கண்டியோ... உவங்கள் அந்தக்காலம் தொடக்கம் சனத்தை பேய்க்காட்டிறாங்களடியப்பா..! உவங்கட அரசியல்.. சிங்களவன் செய்ததை எல்லாம் மறைச்சு அவன்.. தப்பிப் பிழைக்கவும்.. தமிழனை நிரந்தரமா அடிமைப்படுத்தவும் தான் உதவும். கோழிக்குஞ்சுக்கு கரப்பு வாங்கக் கூட சனத்துக்கு உதவாது. இருந்து பார்.

 

பரி: உதுகளக் கதைச்சால் விசர் தானப்பா வரும். அங்க பாருங்க.. சக்கரையில இளையான் மொய்க்குது.. தேத்தண்ணி ஆறிப் போய் கிடக்குது. குடிக்கிற பிளான் இல்லையோ...

 

ப:சி: புலிகள் இல்லாத தமிழன்ர நிலையும் அந்தச் சக்கரக்கட்டி.. போல ஆயிட்டுதடி. கண்ட கண்ட இளையானுகள் எல்லாம்.. சுத்தி மொய்க்குதுகள். எது எது என்னென்ன வியாதியோட அலையுதோ.. யார் அறிவார். நாங்கள் சனம் தான் விழிப்பா இருக்கனும்..!

 

 

(மீண்டும்.. இன்னொரு விறாந்தையில் "நடப்பு" அரசியல் பற்றி பேசும் வரை.. நன்றி வணக்கம்.)

 

(ஆக்கம்: சமீபத்தில் ஊடகங்கள் பிரதிபலிக்கும் செய்திகளின் விம்பங்களோடு..படைக்கப்பட்டது.)

 

யாழ் களத்திற்கு மட்டுமான படைப்பு.

 

Link to comment
Share on other sites

சபாஷ் நெடுக்ஸ்.. ஒரு சீரியசான காலக்கண்ணாடியை எழுதியிருக்கிறீங்கள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்புராணம் அதிகமாக இருந்தாலும் .....நடப்பு அதுதான்....சிவபுராணம் இல்லாமல் சைவர் இல்லை என்ற மாதிரி புலிப்புராணம் இல்லாமல் தமிழர் இல்லை.....தொடரட்டும் உங்கள் விறாந்தை நடப்பு தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 2

 

பரி: என்னங்க.. பெருநாளும் அதுவுமா.. வந்து போய்க்கிட்டு இருந்த காதர் மாஸ்டரை இப்ப கொஞ்ச நாளா இங்கால காணம்.. என்ன என்று ஒருக்கா போன் போட்டுப் பாருங்களன்..

 

ப.சி: சொல்ல மறந்திட்டன். நேற்றும் காதரை.. சந்தையடியில கண்டு கதைச்சனாண்டியப்பா..

 

பரி: என்னங்க சொன்னவர். இஞ்சால வருவன் எண்ட சிலமன்...

 

ப.சி: என்ன சொல்லு.. என்ன தான் அவையள் தமிழாக்களோட நெருங்கிப் பழகிறம் என்றாலும் முந்தி மாதிரி இல்லை அவதானிச்சனியே..?!

 

பரி: பின்ன இருக்கும் தானே. சில அசம்பாவிதங்கள்.....

 

ப.சி: அசம்பவாவிதங்கள் இந்த நாட்டில எப்பயடி இருந்ததில்லை. வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுக்கிறதுக்கு முன்னாடி இருந்து இருக்குது தானேடி. குடும்பத்துக்க சண்டை என்றால்.. அதை ஏன் பெரிசு படுத்திக் கொண்டு இருப்பான். விட்டுத் தொலைச்சால் ஒரே மொழி.. ஒரே பிரதேசம் என்று பங்கு போட்டு வாழுற சனத்துக்கு இலாபமோ நட்டமோ சொல்லு. இன்னொரு மொழி பேசுறவனுக்காக எதுக்கு நாங்கள் எங்களுக்குள்ள உள்ள சின்னச் சின்ன வேற்றுமைகளை பெரிசாக்காட்டி அவன் நம்மள வைச்சு தன்ர பிழைப்பை ஓட்ட உதவுவான். இதால யாருக்கு நட்டம்... யாருக்கு என்ன இலாபம்..?!

 

பரி: நீங்க சொல்லுறது நியாயம் தான். பழிவாங்கிற உணர்ச்சியை தூண்டியே அரசியல் செய்யுற ஆக்கள் அங்கால பெருகிப் போச்சுது. அவையள் அப்படி கடந்த 20 வருசமா செய்து வாழ்ந்து பழகிட்டினம். அவையளை பழைய நிலைக்கு கொண்டு வாறது கஸ்டம்... எனி புதிய தலைமுறை தான்.. தங்களுக்க பழகிப் பேசி.... மாற்றங்களை கொண்டு வந்தால்.. ஒழிய.. உந்த புட்டும் தேங்காய் பூவும் கதை நாறிப் போயிடும் போலத்தான் கிடக்குது...

 

ப.சி: முந்தி எல்லாம் காதர் வரேக்க நம்ம சகோதரம் வாற ஒரு உணர்வு தாண்டி இருந்திச்சு. இப்ப அந்தாள் வந்தாலும்.. அந்தச் சகோதர உணர்வு இல்லை. அதை வலுக்கட்டாயமாத் தான் கொண்டு வர வேண்டிக் கிடக்குது. அவருக்கும் முந்தி மாதிரி ஒட்டனும் உறவாடனும்..என்ற உணர்வு விட்டுப் போச்சுது..

 

பரி: உதுக்கு எல்லாம்.. ஒரு தரப்பில பிழை சொல்லிக் கொண்டிருக்கிறவையும் தாங்க காரணம். பிழை என்று பார்த்தால் எல்லாப் பக்கமும் சந்தர்ப்பத்திற்கு பிழை விட்டிருக்குது. அதுகளை மறந்து மன்னிச்சு ஒருவரை ஒருவர் புரிஞ்சு ஒருவர் மற்றவரின்ரையை தண்டிப்பறிக்காமல்.. நியாயமா விட்டுக் கொடுத்து பங்கிட்டு வாழ்ந்தால்.. மீண்டும் அந்த பழைய பந்த பாசம் காதர் மாஸ்ரரோட வருமோ இல்லையோ சொல்லுங்கோ பார்ப்பம்.

 

ப.சி: அதுக்கு சிங்களவன் வரட்டாம். அவன் எங்க எதில புகுத்து ஆக்களைப் பிரிப்பம். தான் அதில போய் ஆதாயம் தேடுவம் என்று அலையுறான். இப்படியான சூழலில.. சந்தர்ப்பவாத முயல் அடிக்காமல்.. நாங்க தமிழ் பேசிற.. ஒரே பிரதேசத்தைப் பங்கிட்டு வாழுற மக்கள் தான் நின்று நிதானிச்சு சிந்திச்சு வாழப் பழகனும். நல்ல வழியைக் காட்டனும். அதைவிட்டிட்டு.. சில கடும்போக்கு.. நிலைப்பாட்டில நின்றால்.. உறவாடும் சந்தர்ப்பங்களை இப்படியே தட்டிக்கழிச்சுக் கொண்டு.. பிரிச்சாள நினைக்கிறவன்ர காலைக் கட்டிக் கொண்டு.. சலுகை வாங்கலாம்.. தன் பிழைப்பைப் பார்க்கலாம் என்று கிடந்தால்.. காதருக்கும்.. கந்தருக்கும் எப்படிடி.. உறவு ஒட்டும்..??!

 

பரி: இதனை நாங்களும் சொல்லிக் கொண்டு இருக்கப்படாதுங்க. அரசியல் செய்யுறவங்கள் உதுகளைச் செய்வாங்கள் என்று இருக்கப்படாது. எங்கட பள்ளிக்கூடப் பிள்ளையள்.. பல்கலைக்கழகப் பிள்ளையள்.. உந்த ஒற்றுமையை உருவாக்கினால்.. தங்களுக்க ஒரு இணக்கப்பாட்டை நல்லுறவை உண்டு பண்ணி வளர்த்து வந்தால்.. அதுகளின்ர காலத்திலையாவது.. நாங்கள் தமிழ் பேசிற மக்கள் ஒற்றுமையா நிற்கலாம். அது தாங்க எங்களுக்குப் பலம். நாங்க வடக்கு.. கிழக்கு என்று பிரிஞ்சு நிற்கிறதால என்ன நன்மை.. வடக்குக் கிழக்கென்று இல்லாம ஒற்றுமையா ஒருங்கா நின்றால்.. எல்லாரும் எல்லாத்தையும் பகிர்ந்து வாழலாம் எல்லோ. யாருக்கும்.. மனசில சங்கடம் இருக்காதில்லோ. இது என்ர ஊர் அது உன்ர ஊர் என்ற எல்லைப் பிரிவுகள் இருக்காதெல்லோ.. அதுதாங்க சிறுபான்மையா உள்ள நமக்கு பலம். அதுவும் பேரினவாதம் தலைவிரிச்சாடுற இந்த நேரத்தில அந்தப் பலம் தானேங்க நமக்கு அவசியம்.

 

ப.சி: நீ சொல்லுறது அவ்வளவும் நியாயம். இப்ப இதைப் புரிஞ்சுக்கிற நிலையில அங்கால தலைவர்கள் இல்லை.அவையளுக்கு தங்கட பொக்கட் தான் பிரச்சனை. அவையை நம்பி மாற்றங்கள் வராது. நாங்கள் மக்கள் தான் அடிமட்டத்தில இருந்து இந்த உறவாடலை தொடக்கனும்.. புதுப்பிக்கனும். நம்பிக்கைகளை கட்டி வளர்க்கிற செயல்களைச் செய்யனும்...

 

பரி: பூனைக்கு மணிகட்டிறது யாருங்க...

 

ப.சி: நம்ம பாடசாலை ஆசிரியர்கள்.. சமூக.. மத ஆர்வலர்கள் தான் அதைச் செய்யனும்.

 

பரி: அங்க பாருங்க.. காதர் மாஸ்டர் வாறார். இப்ப தான் அவரைப் பற்றி கதைக்க ஆரம்பிச்சம் ஆள் வந்திட்டார். அந்தாளுக்கு ஆயுசு நூறு.

 

ப.சி: மனுசன் நோன்பும் அதுவுமா களைச்சு வரும்.. ஏதாவது செய்து வையன்.. நோன்பு முடிச்சு சாப்பிடும் தானே..

 

பரி: சரிப்பா. நீங்கள் அவரோடையும் உதுகளைப் பற்றி சாடை மாடையா கதையுங்க. அடுத்த தலைமுறையிலையாவது அந்த பழைய காலத்தில இருந்ததை விட நல்ல ஒரு ஒற்றுமையை தமிழ் பேசிற மக்களுக்கு கொண்டு வாறதுக்கு என்ன வழி இருக்கென்று அவரட்டையும் ஆலோசனை கேட்டால்.. மாஸ்ரர் என்ற வகையில.. அந்தாளும் நாலு நல்லதைச் சொல்லுவார்.. செய்வார் தானே.

 

ப.சி: கண்டிப்பா.

 

பரி: அப்ப நான்.. போய் சமைக்கிறன். நீங்கள் அவரோட கதைச்சுக் கொண்டிருங்கோ..!

 

(இன்னொரு விறாந்தையில் சந்திக்கும் வரை.. எல்லா முஸ்லீம் சகோதர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களுடன்...)

 

சீரியஸான விசயங்களை சிரிப்பா எடுத்து சிம்பிளா உள்வாங்கினா.. சிறக்க வழி பிறக்குமில்ல.. அதுதான் இந்தத் தலைப்பை இங்கு வைத்துள்ளோம்.. :icon_idea:

 

இது ஒரு யாழ் களத்துக்கு மட்டுமான படைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

ப.சி: மனுசன் நோன்பும் அதுவுமா களைச்சு வரும்.. ஏதாவது செய்து வையன்.. நோன்பு முடிச்சு சாப்பிடும் தானே..

 

பரி: சரிப்பா. நீங்கள் அவரோடையும் உதுகளைப் பற்றி சாடை மாடையா கதையுங்க. அடுத்த தலைமுறையிலையாவது அந்த பழைய காலத்தில இருந்ததை விட நல்ல ஒரு ஒற்றுமையை தமிழ் பேசிற மக்களுக்கு கொண்டு வாறதுக்கு என்ன வழி இருக்கென்று அவரட்டையும் ஆலோசனை கேட்டால்.. மாஸ்ரர் என்ற வகையில.. அந்தாளும் நாலு நல்லதைச் சொல்லுவார்.. செய்வார் தானே.

 

ப.சி: கண்டிப்பா.

 

பரி: அப்ப நான்.. போய் சமைக்கிறன். நீங்கள் அவரோட கதைச்சுக் கொண்டிருங்கோ..!

 

காதர் மாஸ்டருக்கு, ஹலால் இறைச்சியை சமைக்கச் சொல்லி, பரிமளம் ஆன்ரியிடம் முதலே... சொல்லவும்.

மனுசி வீட்டிலை நின்ற கோழியைப் பிடித்து, கறி வைத்தால்... மாஸ்ரர் சாப்பிட மாட்டார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதர் மாஸ்டருக்கு, ஹலால் இறைச்சியை சமைக்கச் சொல்லி, பரிமளம் ஆன்ரியிடம் முதலே... சொல்லவும்.

மனுசி வீட்டிலை நின்ற கோழியைப் பிடித்து, கறி வைத்தால்... மாஸ்ரர் சாப்பிட மாட்டார். :D

 

நோன்பும்.. நல்லூர் கந்தன் திருவிழா 25 நாள் விரதமும் ஓவலப் பண்ணுற ரைம் தான் காதர் மாஸ்டர் அங்க போயிருக்கார் சிறியண்ணா..! அதனால.. ஹலால் பிரச்சனை இல்லை. மரக்கறி வெட்டும் போதூம்.. ஹலால் ஓதனும்..???! :)

 

நாங்க யுனில இருந்த போது முஸ்லீம் நண்பர்கள்.. எல்லாம்.. கன்ரீனில.. மாடு.. ஆடு.. கோழின்னு வெட்டுவாங்களே. அது சிங்களவன் நடத்திற கன்ரீன். அவன் ஹலால் ஓதிறது எல்லாம் கிடையாது. உந்த ஹலால் எல்லாம் மாணவர்கள் மத்தியில்.. இல்லை. மதவெறியர்கள் மத்தியில் தான்.. உதுக்கு இவ்வளவு முக்கியத்துவம்..! :lol::)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 3:

 

பரி: என்னங்க இண்டையான் பேப்பர் படிச்சனீங்களே..

 

ப.சி: நீ.. எங்க பேப்பர் படிக்க விட்டா. விடிஞ்சதில இருந்து அதை செய்.. இதைச் செய் என்று கொண்டு நிற்கிறா.. இதுக்குள்ள நான் எங்க பேப்பர் படிக்கிறது. நீ தான் வெள்ளனக் காத்தால பேப்பரோட கதிரையில குந்தினனீ.. சங்கதி என்னவாம் சொல்லன்...

 

பரி: த.தே. கூ.. தேர்தல் பிரச்சாரம் செய்ய வெளிநாட்டுக்கு எல்லோ கிளம்பிட்டாம்... கேள்விப்பட்டனீங்களே..?!

 

ப.சி: என்னடியப்பா.. தேர்தல் இஞ்ச தானே. வடக்கில. அதுக்கு எதுக்கு வெளிநாட்டில பிரச்சாரம்.

 

பரி: ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பு வந்த உடன.. த.தே.கூ புலம்பெயர்ந்து.. கனடா.. லண்டன் அவுஸ்ரேலியா என்று.. ஓடிடுது. அதுக்குள்ள அரசாங்கம் தன்னை பலப்படித்திடுது. இது சும்மா எதேட்சையா நடக்குதோ.. இல்ல திட்டமிட்டு நடக்குதோங்க..???!

 

ப.சி: தேர்தல் இல்லாட்டி.. புலம்பெயர் மக்களை தாறுமாறா விமர்ச்சிக்கினம். ஒரு தூசுக்கும் மதிக்கினம் இல்ல..கண்டுகொள்ளினமும் இல்ல. அப்புறம் தேர்தல் என்ற உடன.. அவையட்டையே காசும்.. ஓட்டும் கேட்டு ஓடினம். அதுவும் இல்லாமல்.. இங்க உள்ளதுகளை வாக்குப் போடச் சொல்லி சொல்லட்டாம் என்றும் கேட்கினம். இப்ப பார்த்தால் புலம்பெயர் மக்கள் எல்லோ.. தேர்தலைச் சந்திக்குதுகள். த.தே கூ இல்லையே..!

 

பரி: அதுதான் எனக்கும் புரியல்ல. விக்கி எடுத்துச் சொன்னார்.. புலம்பெயர் மக்கள் அவைட வேலையைப் பாருங்க என்று. தமிழக மக்கள் அவைட வேலையைப் பாருங்க என்று. நாங்கள் எங்கட கணவான் அரசியல் வேலையைப் பார்க்கிறம் என்று. இப்ப என்னடான்னா தேர்தல் செப் 21 என்று அறிவிச்சு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்த உடன.. புலம்பெயர் மக்கள் எல்லோ எல்லாத்துக்கும் தேவைப்படினம். இப்படிப்பட்ட அதுகளையும் மதிச்சு.. அதுகளோட ஏன் தேர்தல்களுக்கு முன்னாடி கூடிக் கதைக்கக் கூடாது...???! ஒரு பொதுத் தீர்மானத்தை எட்டக் கூடாது..??! சங்கரிக்கு சீட்டுக் கொடுத்து இலட்சக்கணக்கில அதை இன்னொருத்தருக்கு விக்க விட முதல்.. உதுகளையும் புலம்பெயர் மக்களோட கலந்தாலோசிக்கலாமே..?! யார் யாரை வேட்பாளரா நிறுத்திறது நல்லம்.. மக்களுக்கு கொஞ்சம் என்றாலும் பிரயோசனம் என்று..??!

 

ப.சி: அதெப்படிடி முடியும். நாங்க தான் கணவான்களாச்சே. அதுகள் கள்ளத்தோணிகள் ஆச்சே. காசுக்கும் வாக்குக்கும் தான் அவை. தேர்தல் முடிய அவை தேவையில்ல. முஸ்லீம் காங்கிரஸ் என்ன.. டக்கிளசோடும் கூட்டு வைக்கிற முக்கிய முடிவுகளை நாங்கள் தனிச்சு இந்தியாவிட்டக் கேட்டிட்டு அதன் படி எடுப்பம். அப்ப புலம்பெயர் மக்கள் கம்மென்று இருந்து கொண்டு.. அதுக்கு கட்டுப்பட்டு வரணும் என்றதை தான் த.தே.கூ உயர்பீடம் சொல்லாமல் சொல்லுது போல..!

 

பரி: அதுக்கு சனம் வரட்டாமோ. எனியும் உவை கொஞ்சப் பேர் நினைச்ச மாதிரி அரசியல் செய்ய சனம் என்ன 1972 காலத்திலையா இருக்குது. பொடியள் சொல்லித் தந்திட்டுத்தானே போயிருக்காங்கள்.. இவை என்னென்ன மாதிரி மக்களை ஏமாத்துவினம் எண்டு..

 

ப.சி: பொடியள் சொல்லித் தந்ததை சனம் 4 வருசத்துக்கு மறந்திடும் என்று தான் நினைச்சு உவை கதைக்கிறது. ஆனால் யதார்த்தம் என்று வரேக்க.. இங்க உள்ள சனம் வெளிநாட்டில உள்ள சொந்த பந்தங்களோட கதைக்கேக்க.. அதுகளின்ர உள்ளுணர்வு ஒன்று வெளிப்படும் எல்லோ..அது வாக்குச் சீட்டில  பிரதிபலிச்சிட்டா.. கணவான் அரசியல் கவுண்டு கொட்டிட்டுமோ என்ற பயம் தான்.. விழுந்தடிச்சு வெளிநாட்டுக்கு ஓடுறது..!

 

பரி: சனம் கூட்டமைப்புக்கு பொடியள் சொல்லித்தான் வாக்குப் போட்டது. இப்பவும் பொடியள் அதை விரும்புவாங்கள் என்று தான் போடுது. ஆனால் கூட்டமைப்பு பெயரில மட்டும் தான் பழசு. மற்றும்படி பேசுறது.. குழப்பிறது எல்லாம் புதிசா இருக்குது.

 

ப.சி: கூட்டமைப்போ.. கூத்தமைப்போ.. கூத்துக்காட்டி அரசியல் செய்யலாம் என்று நினைச்சால் சனம் தக்க பதிலடி கொடுக்கும். புலம்பெயர் மக்களோ.. தாயக மக்களோ.. தமிழ் மக்கள்.. ஒரு சுதந்திரமான தாங்களே தங்களை பரிபாலனம் செய்யக் கூடிய.. ஒரு அரசியல் தீர்வைத் தான் எதிர்பார்க்குதுகள். அதைவிட்டிட்டு.. உவை கொஞ்சப் பேர் சட்டம் படிச்ச திமிரை சனத்தில காட்ட வெளிக்கிட்டால்.. தமிழரசுக் கட்சி ஒரு காலத்தில வாங்கிக்கட்டினது போல வாங்கிக்கட்ட வேண்டித் தான் வரும்..! அப்புறம் தமிழீழத்தைச் சொல்லித்தான் கூட்டணிக்காரர் வெண்டவை. கூட்டமைப்பின்.. இந்தக் குழப்ப அரசியலால.. ஆதாயம் அடையப் போறது சிங்களவனும் அவனுக்கு வால் பிடிக்கிற டக்கிளஸ் போல ஆக்களும் தான். சனத்துக்கு ஒரு விடிவும் வராது. உதை உவையள் விளங்கிக் கொள்ளனும். புலம்பெயர் மக்களும் தங்களைத் தேடி வாற த. தே. கூ விடம் தெளிவாச் சொல்லிடனும். அதுக்கு அப்புறம் அவைட பிரச்சனையை அவை சந்திக்கட்டும்.

 

பரி: சரி.. சரி.. கதையில செவ்வரத்தை வேர் தெரியுற அளவுக்கு தண்ணி அடிச்சிட்டீங்கள். அங்கால அந்த ரோசுகளுக்கும் தண்ணி காட்டி விடுங்கோ..! நான்.. உலை வைக்கப் போறன்.. நேரமாகுது..!

 

ப.சி: சரியடி அப்பா. நீ கதையிலும் கதை.. காரியத்திலும் காரியம். :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை தொடர் நன்றாக செல்கின்றது ...தொடர்ந்து பதியுங்கள்..

ப.சி: சரியடி அப்பா. நீ கதையிலும் கதை.. காரியத்திலும் காரியம்.
புத்தன்: நெடுக்ஸ் எல்லாம் சரி அப்படியே வாக்குகளை த.தே.கூ..போடச்சொல்லிவிடுங்கோ ..ப.ரியிட்டையும்...ப.சி யிட்டையும். :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் தங்கள் கருத்திற்கு. :)

 

நடப்பு அரசியல் போக்கைப் பார்த்திட்டு கடைசி நேரத்தில தான் ப.சியும் பரியும் யாருக்கு வாக்குப் போடுறது என்று முடிவெடிப்பினம் போல இருக்குது. எதுக்கும் தொடரப் போகும் அவையிட விறாந்தைப் பேச்சைக் கவனிச்சால் தான்.. எதுவும் வெளிக்கும்..! :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை - 4

 

பரி: என்னங்க செய்தி கேட்டீயளே...

 

ப.சி: என்ன செய்தி.. ஏதேனும் சாமத்திய வீடு.. கலியாண வீடோ...??!

 

பரி: அப்படி ஒன்றும் இல்லையப்பா. எங்கட அண்டை நாடும்.. சிங்கள நாடும் புலனாய்வு அட்டைச் சண்டை போடினமாமில்ல..!

 

ப.சி: புலிகள் இருக்கும் வரை வேலை வெட்டி இல்லாமல் இருந்தவைக்கு.. இப்ப மேலதிக வேலை வந்திட்டாமோ..??!

 

பரி: ம்ம்.. அப்படி என்றும் சொல்லலாம். ஒரு காலத்தில சிறீலங்கா.. தமிழகத்தில் தமிழ் போராளிகளின் பயிற்சி முகாம் இருக்கு என்று கத்தின போது மறுத்து போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த இந்தியா.. இன்று.. பாகிஸ்தான் தன்னை அடிக்க சிறீலங்கா பயிற்சியும்.. உதவியும் அளிக்கிறதா அழுகுது..??! சிறீலங்கா அதை நக்கல் அடிக்குது. எப்படி காலம் மாறிச்சுது பாத்தியளோ...??!

 

ப.சி: இதில இருந்து என்ன தெரியுது. சிங்களவன் மொக்கன் இல்லையடியப்பா..! அவன் இந்தியாவைக் கொண்டே அது உருவாக்கிய அமைப்புக்களை ஒவ்வொன்றா அழிச்சான். மிச்சத்தைப் பிடிச்சு எலும்பை வீசி.. தன்னோட கட்டி வைச்சான். இப்ப பழைய கணக்கிற்கு பழிவாங்க.. இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிறான். அதுவும் சீனா.. பாகிஸ்தான் என்று கூட்டுச் சேர்ந்து கொண்டு..!

 

பரி: சிங்களத்துக்கு சவால் விட்டுக் கொண்டு.. சும்மா கிடந்த..புலியை.. ஒரு குடும்பத்தின்ர பழிவாங்கல் உணர்வுக்காக வேட்டையாடப் போய்.. இப்ப பாரத நாடு.. தென்கோடியில் வினையை விலைக்கு வாங்கி வைச்சிருக்குது..!!

 

ப.சி: எங்களுக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்திற்கு பாரதம் இதுவும் அனுபவிக்கும் இன்னும் அனுபவிக்கும். பார்த்தியே.. பீரிஸ்.. டெல்லி போன கையோட இஸ்லாமாபாத்தும் போய் தான் வாறாராம்..!

 

பரி: டெல்லிக்காரருக்கு பொதுநலவாய மாநாட்டுக்கு.. அழைப்பிதழ் கொண்டு போன கையோட.. இஸ்லாமாபாத்திற்கும் கொண்டு போயிருப்பார். அப்படியே பீஜிங்கிற்கும்.. ஒரு விசிற்றர் பெமிட் கொடுத்திட்டு தான் வருவார். இல்ல கூட்டா நின்று தமிழனை அடிச்சவை.. ஆளையாள் கோவிப்பினமில்ல..!

 

ப.சி: சிங்களவன் எல்லாருக்கும் தாஜாவும் கூஜாவும்  தூக்கியே  தமிழனை அடிச்சு.. வாழப் பழகிட்டான்..! நாங்க தான்.. இன்னும் இந்தியாவின்ர வாயைப் பார்த்துக்கிட்டு இருக்கிறம்..!

 

பரி: உப்படியே சிங்களவன்ர ஆதிக்கத்துக்குள்ள விட்டால்.... யாழ்ப்பாணம்.. குட்டிக் காஷ்மீர் ஆகும் போலத்தான் கிடக்குது..!! உள்ள தீவிரவாத அமைப்புக்கள் எல்லாம்.. சிங்கள ஆசீர்வாதத்தோடு ஏக்கர் கணக்கில குடியேறிடும். போதாக்குறைக்கு முஸ்லிம் காங்கிரஸ்.. பவுதீன் போன்ற முத்தின முஸ்லீம் மதவாதிகளும்.. தமிழர் எதிர்ப்புணர்வை வளர்த்து விட்டுக் கொண்டிருக்க கையும் கணக்கும் சரியா இருக்கும்..!! சிங்களத்திற்கும்.. இந்தியாவை ஆட்டி வைக்க.. தமிழரட்ட இருந்து நிரந்தரமா விலத்தி வைக்க.. நல்ல வசதியா இருக்கும்.

 

ப.சி: தமிழன் என்றால் முறாய்ச்சுப் பார்க்கிற.. மலையாளியலின்ர கதையைக் கேட்டு ஆட்ட போட்ட சிங்கிற்கும் கருணாநிதிக்கும் சோனியாவிற்கும்.. உதுகும் வேணும் இன்னும் வேணும். அதுக்குள்ள.. உவன் ஞானதேசிகன் என்ற காங்கிரஸ் கூலி. அவன் சொன்னதைக் கேட்டனியே..?!

 

பரி: அவனுக்கு லூசுங்க... எப்ப பாரு ஏதோ உளறிக்கிட்டு இருக்கிறான். அவனுக்கு சீமான் முனி உச்சந் தலையில..அடிச்சிட்டுது.

 

ப:சி: அதுக்காக உப்படி உளறினா.. அப்புறம் அவையிட.. புலனாய்வு அறிக்கையையே எவன் மதிப்பான்...??!

 

பரி:அது மட்டுமே.. எங்கட நிலத்தில நின்று உவையள் எல்லாரும் கூத்துப் போட்டால்.. எங்கட நிலைமை என்னாகிறது..?!

 

ப;சி: திரும்பி தம்பிட ஆக்கள் தான் வரணும் போல...இருக்குது. போகிற போக்கு அப்படித்தான் போக்கிட்டு இருக்குது..! இந்தா யுத்தம் முடிஞ்சதும் பயங்கரவாதம் அழிஞ்சதும் தமிழர்களுக்கு அந்தத் தீர்வு.. இந்தத் தீர்வு என்று சொன்னவையும் வன்னிக்கு வந்து போனவையும் இப்ப ஒரு மூச்சும் இல்லாமல் இருக்கினம்..!

 

பரி: பொடியள் களைச்சுப் போனாங்கள். எங்கட சனமும் களைச்சுப் போச்சுதுகள். ஆனால் உந்த சிங்களவனும்.. முஸ்லீம்களும்.. இந்தியாவும்..  இன்னும் தமிழர் தலையில தான் சவாரி செய்ய நிற்கினம். உதுக்கு ஒரு முடிவுரை எழுதத் தானே வேணும்..!

 

ப.சி: பூனைக்கு மணிகட்டிறது யார் என்றது தானே இப்ப உள்ள பிரச்சனை. கூட்டமைப்பு.. செய்யும் என்று பார்த்தால்.. அது திசை தெரியாமல் திக்குத் தெரியாமல் போற படகாட்டம் எல்லோ போய்க்கிட்டு இருக்குது..!

 

பரி: நீங்கள் பூனை எண்டத்தான் ஞாபகம் வருகுது. வெளில நல்ல வெயில் என்று நெத்தலி காயப்போட்டனான். எங்கட பூனையள் என்ன விளையாட்டுக் காட்டிட்டுதோ தெரியாது. போய் பார்க்கப் போறன். நீங்கள் ஒருக்கா.. உந்த பேக்கரில போய் பாண் வாங்கிக் கொண்டு வாங்களன். ராத்திரிக்கு சமைக்கல்ல இண்டைக்கு.

 

ப.சி: சரியடிப்பா. நீ போய் நெத்தலியைப் பார். நான்.. பேக்கரிக்குப் போட்டு வாறன்.

 

மீண்டும் ஒரு விறாந்தையோடு... சந்திக்கும் வரை நன்றி கலந்த வணக்கங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 5:

 

ப.சி: என்னடியப்பா காலைல இருந்து பேப்பரை தலைகீழா புரட்டிப் புரட்டி படிக்கிறா.. அப்படி என்ன விசயம் தான் கிடக்குது..

 

பரி: எங்கட நவிப்பிள்ளை சுடிதார் போட்டுக் கொண்டு நிற்கிற படங்கள் பார்க்கிறனப்பா...?!

 

ப.சி: உந்தச் சுடிதாரில மயங்கித்தானே சிங்கள மன்னன் 10ம் பண்டுகாபய மேர்வின் சில்வா காந்தர்வ மணம் முடிக்க முயன்றிருக்கிறான். நீயும் உதை வாங்கிப் போட்டு........ என்ர வாழ்கையில மண்ணை அள்ளிப் போட்டிடாதேயடி. போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்.

 

பரி: சும்மா பகிடி விடாதைங்கோ. அவட சுடிதார் நல்லாத் தானே இருக்குது. திருகோணமலைல.. ஸ்கேட் பிளவுஸோட நிற்கிறா. கொழும்பில.. வெஸ்டேனில நிற்கிறா..!

 

ப.சி: ஐநாவில முக்கிய பொறுப்பில உள்ள மனிசி என்ற வகையில.. நவிப்பிள்ளையோட உடுப்பைப் பார்க்கிறா சரி. அவா வந்த அலுவலை எப்படி கவனிச்சாவோ..??!

 

பரி: வந்த அலுவலை கவனிக்க எங்க விட்டாங்கள். மனிசியை சுத்தி எப்பவும்.. நாளைஞ்சு தடியங்கள் கறுப்புக் கண்ணாடியோட திரியுறாங்கள். அதுபோக.. நாலு பேர் பையிலும் கையுமா வழிகாட்டிறாங்கள். மனிசி அவங்கள் காட்டிற.. பக்கம் தானே போய்க்கிட்டு இருக்குது. அதெல்லாம் கிளியேட் ஏரியா.. பாருங்க. வெரி கிளீன்..! ஆமியும் இருக்காது.. சனமும் இருக்காது.

 

ப.சி: நானும் அவதானிச்சனான் தான். கடைசியில திருகோணமலைல.. அரசாங்க ஆதரவில.. சிங்களவங்கள்  வைச்ச ஆர்ப்பாட்டத்தை கவனிக்க விட்டவை... யாழ்ப்பாணத்தில.. கிளிநொச்சியில சனம் செய்த ஆர்ப்பாட்டத்தை கண்ணிலும் காட்டேல்ல. பின் கதவு வழியாக கூட்டிக்கொண்டு அந்தப்புரம் காட்டின கணக்கா இழுத்துக் கொண்டு ஓடி இருக்கிறாங்கள்.

 

பரி: அது அவாக்கு விளங்கி இருக்கும். ஆனாலும் ஒரு டவுட்டு.. 30 வருசமா நடக்கிற மனித உரிமை மீறல்கள் குறித்தும் பேசுவன் என்று கடைசியில சொல்லி இருக்கிறா. அதுவும் அனைத்து இனங்கள் மீதும். 30 வருசமா.. எத்தினை ஆமி.. எத்தனை நாடு.. எத்தனை கொலைக்குழுக்கள்.. இயங்கி இருக்குது. அத்தனையும் விசாரிக்க.. ஐநாவுக்கு ஆயுள் போதுமோ.. இல்ல பழைசைக் காட்டி புதிசை சமன் செய்யப் போகினமோ..தெரியல்ல..???!

 

ப.சி: சிங்களவன் தான் கெட்டிக்காரன் என்ற நினைப்பில... புலிகள் செய்த மனித உரிமை மீறல்களை விசாரி என்று ஒன்றை இழுத்து விட்டிருக்கிறான். அதிலும் தாங்களே பொதுமன்னிப்பு அளிச்ச.. பிரதி அமைச்சர் முரளிதரன் செய்ததும் விசாரிக்கப்படனுமாம். அப்படிப் பார்த்தா.. 1972 இல இருந்து.. ஜே வி பியை கொன்றதிலும்.. ஜே வி பி கொன்றதிலும் இருந்து உதுகளைத் தொடங்கனும். இந்தியப் படைகள் செய்ததும் உதில அடங்கனும். தென்னிலங்கை கலவரங்கள்.. திட்டமிட்ட தமிழ் கிராமங்கள் அழிப்பு.. முஸ்லீம் காடைக்குழுக்களின் தமிழ் மக்கள் மீதான மதவெறித் தாக்குதல்கள்.. தமிழ் கிராமங்கள் அபகரிப்பு.. கொழும்புக்கு போற வாற பஸ்ஸுகளை மறிச்சு தமிழர்களை வெட்டிச் சாய்ச்சது.. கிளாலில பயணம் போன சனத்தை வெட்டி வீழ்த்தினது.. அரசாங்கத்தோட இருக்கிற தமிழ் ஒட்டுக்குழுக்கள் செய்த படுகொலைகள்.. இப்படி எத்தினை எத்தினை... உதுகள் எல்லாம் விசாரிக்கப்படத்தானே வேணும்.

 

பரி: சரியாச் சொன்னியள். 30 வருசம்.. என்றால் சும்மாவே. இந்த 30 வருசத்தில செத்த தமிழ் சனம் இரண்டு இலட்சம் என்றால் முஸ்லீமும் சிங்களமும் மொத்தமாக் கூட்டினால் 2000 கூட வராது. நல்லா விசாரிக்கட்டும். 2,00,000 பேரின் இனப்படுகொலையை 2000 பேரின் சாவால மூடி மறைக்க முடியாது தானே. 2000 பேருக்கு வழங்கிற தீர்ப்பு 2,00,000 பேருக்கும் வழங்கப்படத்தானே வேணும்..!

 

ப.சி: உதில ஒரு விசயம் மட்டும் தெளிவாத் தெரியுது. 30 வருசமா இங்க சிறீலங்காவில மனித உரிமைகள் மீறப்படுகுது என்று தெரிந்தும்.. உவை ஐநா காரரும்.. சும்மா தானே இருந்திருக்கினம். அவையையும் ஒருக்கா விசாரிச்சா நல்லது. உவைக்கு அறியாமல்.. உதுகள் நடக்கல்லத் தானே. ஆரம்பத்திலேயே உதுகளை விசாரிச்சு குற்றவாளிகளை தண்டிச்சிருந்தா.. 30 வருசத்திற்கு உது நீண்டிருக்குமோ.. செத்த தொகையும் இலட்சக்கணக்காக ஆகி இருக்குமோ..??!

 

பரி: உண்மை தாங்க. இவ்வளவு சனமும் செத்து... எவ்வளவோ துன்பங்களோட தமிழ் சனம் நிற்குது. உதுக்கு ஒரு நியாயம் கிடைக்கக் கூடாதுன்னு சிங்களவன் நினைக்கிறான். ஐநா அதுக்கு ஒத்தூதாமல்.. பாதிக்கப்பட்ட மக்கள் யாரா இருந்தாலும் அவைக்கு நீதி வாங்கிக் கொடுக்கனும். எப்படிப் பார்த்தாலும் தமிழ் சனம் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்குது. அதுகளுக்கு தற்கால நீதி மட்டுமன்றி நிரந்தர அரசியல் தீர்வையும் ஐநா தான் பெற்றுக் கொடுக்கனும். அதுக்கு அம்மையாரின் வருகை உதவுதோ அல்லது நவிப்பிள்ளை.. நரிப்பிள்ளையான கதையா முடியுதோ தெரியல்ல. பொறுத்திருந்து பாப்பம்.

 

ப.சி: 30 வருசம்.. என்ற உந்த மனித உரிமை விசயத்தை.. உண்மையா நீதியா விசாரிச்சால் பலர் சிக்குப்படுவினம். இந்தியப் படைகளை அனுப்பினவை..வழிநடத்தினவையில இருந்து.. அமெரிக்க கிரீன் பரேட் வரை சிக்கும். இஸ்ரேல் மொசாட்டில இருந்து.. பாகிஸ்தான் ஐ எஸ் ஐ வரை சிக்கும். ரஷ்சியா முதல் கொண்டு சீனா வரை சிக்கும். சிறிமாவோ வில இருந்து ஹத்துரு சிங்க வரை சிக்குவினம். அப்படிச் சிக்க வைச்சு.. ஒரு முடிவை தமிழ் மக்களுக்கு தரேக்க.. புலிகள் செய்த வன்முறைகள் உதுக்கான பழிவாங்கல்கள்.. தமிழ் மக்களை உதுகளில் இருந்து பாதுகாக்கிற வன்முறைகள்.. என்ற உண்மையும் வெளிக்கும். ஒரு அரசை சரணடையச் செய்ய.. அணு குண்டு வீசி.. கோடி அப்பாவிச் சனத்தைக் கொன்று ஒரு யுத்தத்தை முடிச்சதில செத்துப் போன மனித உரிமைகள்.. இங்க எங்க நிலைக்கப் போகுது.. பார்ப்பம்...என்ன தான் நடக்குது நாடகம் என்று.

 

பரி: உவை என்ன தான் நாடகம் ஆடினாலும்.. 30 வருச மனித உரிமை மீறல்களை விசாரிச்சு தீர்ப்பு சொல்லினமோ இல்லையோ... இப்ப உடனடியாக இறுதி யுத்தத்தில்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உருப்படியான செயற்திட்டத்தை ஐநா மேற்பார்வையில் நடைமுறைப்படுத்த முன் வரணும். அதில அரச.. இராணுவ தலையீடுகள் இருக்கப்படாது. இராணுவத்தை முகாம்களுக்குள்ள முடக்கனும். அப்பாவி தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி இராணுவத்தில இணைக்கிறதுகளை நிப்பாட்டனும். காணி அபகரிப்புக்களை நிறுத்தனும். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்.. வளப் பறிப்புகளை நிறுத்தனும். சர்வதேச உதவிகளை ஐநா பொறுப்பேற்று அதன் மூலமே அது தமிழ் மக்களின் பகுதிகளுக்கு வரணும். ஐநாவே தேவையான செயற்திட்டங்களை அமுல்படுத்தனும். அதுகளைச் செய்யாமல்.. நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு தேடாமல்.. பழையதை விசாரிக்கிறம் என்ற போர்வையில் எல்லாம் காலத்தை இழுத்தடிச்சு.. தமிழ் சனத்தை இன்னும் இன்னும் நிர்க்கதியாக்காமல் இருந்தாலே நல்லம் என்று படுகுது.

 

ப.சி: நீ சொல்லுறது 100 க்கு 100 உண்மை. நவிப்பிள்ளை.. கொடுக்கிற அறிக்கை என்றது.. சிங்களவனுக்கு ஆறுதல் அளிக்கிறதா இருக்கிறதை விட.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா தான் என்ன செய்யலாம் என்றதை அடிப்படையாகக் கொண்டிருப்பது தான்.. முக்கியம். அதைத்தான் நாங்கள் தமிழர்கள் வலியுறுத்தனும். ஐநா தலையீடு இல்லாமல்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதியோ.. விமோசனமோ கிடைக்கப் போறதில்லை..! உதில எங்கட ஆக்கள் தெளிவாக இருக்கனும். புலி செய்தது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால்.. இந்த போரால்.. பாதிக்கப்பட்டது எங்கட நிலமும் மக்களும் என்ற அந்த உண்மையை எல்லோரும் புரிஞ்சு கொண்டு இதய சுத்தியோட செயற்படனும். சிங்களவனை பாதுகாக்கிற அலுவலைச் செய்தால்... அது எங்களுக்குத் தான் ஆபத்து.

 

பரி: சரியாச் சொன்னியள். சரி.. இந்தா நீங்களும் இந்தப் பேப்பரைப் பாருங்க. நான் துணியள் ஊறப் போட்டனான்.. கழுவிப் போட்டிட்டு வாறன்.

 

இன்னொரு விறாந்தையோடு.. பிறகு வாறம்.....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை 6:

 

பரி:  என்னங்க... என்னங்க..

 

ப.சி: என்னடியப்பா.. கோழிக்குஞ்சை பிராந்து தூக்கிட்டுதே..??!

 

பரி: இல்லையப்பா. இந்தப் பகிடியை பாருங்கோவன்....

 

ப.சி: அடிபாவி. கோழி மேய்க்கேக்கேயும் பேப்பரும் கையுமாவே நிற்கிறா...??!

 

பரி: உங்கட உந்த உழுத்துப் போன பகிடியை விட்டிட்டு உதைப் படியுங்கோ...

 

ப.சி: அந்தாள் சொல்லுறது நியாயம் தானே. சட்டம் படிச்ச ஆள் எல்லோ.. திரும்ப கொழும்புக்கும் போகனும் என்றால்.. அண்ணன் - தம்பி.. கணவன் - மனைவி உறவு வந்தால் தானே உண்டு..! இல்ல பொதுபலசேன.. சிங்கள இராவணன நேசய.. சிங்கள உறுமைய... அமைப்புக்கள்.. சும்மா விடுவினமோ..??!

 

பரி: இல்ல எனக்கொரு டவுட்டு.. சிங்களவன் கணவன் என்றால்.. தமிழன் மனைவி என்றால் அப்ப இவ்வளவு நாளும் தமிழனை அடிச்சது கொன்றது என்ன சும்மா கணவன் மனைவி ஊடலாமோங்க..??!

 

ப.சி: அவர் சொல்லுறது.. 2009 க்கு அப்புறம் உள்ள உறவை. அதுக்கு முன்னர் அவரும் அவையும்.. அமிரும் ஜே ஆரும்.. சம்பந்தனும் சந்திரிக்காவும்... அண்ணன்.. தம்பிகள்.. அக்கா தம்பிகள்.. தானே..!!

 

பரி: எது என்னவோ கிடக்கட்டும். உவரின் வாதப்படி பார்த்தாலும் தன்ர தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் தங்கச்சி புருசனால கஸ்டப்படேக்க.. அண்டையில உள்ள சகோதரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமாமோ..???!

 

ப.சி: இருக்காது என்று சொல்லித் தானே 1983 இல இருந்து சம்பந்தனும் அமிர்தலிங்கமும் அங்கும் இங்கும் பறந்து பறந்து அரசியல் செய்தவை..?! ஏன் இப்ப கூட டெல்லில ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கிளைக்கு போய் கத்திப்போட்டுத்தானே வந்திருந்து தேர்தலில குதிச்சவை...???!

 

பரி: ம்..  உண்மை அப்படி இருக்க.. இப்ப ஏன் உந்தாள் இப்படி ஒரு கதைவிடுகுது..??! தமிழக சொந்தங்கள் இல்லை என்றால் நாங்கள் எப்பவோ அழிக்கப்பட்டிருப்பம்... என்ற உண்மையை ஏன் உணராமல் கதைக்கினம். அதுகளும் அங்கிணைக்க கிடந்து அப்பப்ப கத்திற படியாலும் தான் உலகம் எங்களை கணக்கெடுக்குது. ஏன் இந்திய நடுவன் அரசே அதுக்காகத்தான் ஈழத்தமிழர் என்றே உச்சரிக்குது. இல்லை என்றால் சிங்களவனோடு சேர்ந்து ஒட்டுமொத்தமா அழிச்சு முடிச்சிருப்பாங்கள்.

 

ப.சி: ஒருவேளை கணவன் - மனைவி உறவென்றால்.. அதுக்குள்ள தீர்க்க முடியாத பிரச்சனை இருக்கென்று விவாகரத்து வாங்கித் தரச்சொல்லி சர்வதேசத்தை கேட்கப் போறாரோ என்னமோ..??!

 

பரி: நல்லா கேட்டார். சுப்பிரமணியம் சாமி இப்ப கிட்டடில சொல்லிச்சே.. தமிழனும் சிங்களவனும் ஒன்று டி என் ஏ ரெஸ்டில தெரிஞ்சிட்டுது என்று அது போலத்தான் சொல்லுவார் உவரும்.

 

ப.சி: சுப்புட கதை சூப்பர். இந்தியாவில.. தமிழனும் தெலுங்கனும் மலையாளியும் கன்னடனும்.. ஒன்றில்லை.. ஆனால் ஈழத்தில..தமிழனும் சிங்களவனும் ஒன்று. அவன் ஒரு முழு முட்டாள்.

 

பரி: அந்த லூசை விடுங்க.. உவர் விக்கியர் சொல்லப் போறார்... கணவன் மனைவி ஒற்றுமையா இருக்கினம்...ஒன்றுபட்ட இலங்கைக்குள்ள. இங்க இப்ப.. கணவன் மனைவிக்க பிரச்சனை இல்ல.. ஒரே ஒரு பிள்ளைதான் கொஞ்சம் குழப்படி.. அதையும் இப்ப தீர்த்துக்கட்டியாச்சு. எனி ஒற்றுமை தான் பாக்கி.. என்று சொல்லி முடிச்சிடுவார். இப்ப இந்தத் தேர்தலுக்காக சமஸ்டில நிற்கிறார். மகிந்தவுக்கு சமஸ்டிக்கு வகுப்பெடுக்கிறார். தேர்தல் முடிய.. கணவன் - மனைவி நல்லிணக்கம்.. மீண்டும்..வந்திட்டுது. புலம்பெயர் தமிழர்கள் உட்பட.. ஊரார் உங்கட வேலையை பார்த்துக்கிட்டு போங்க என்றாரோ என்னமோ..??!

 

ப.சி: விக்கி ஒருவேளை முற்பிறவில யானையா பிறந்திருப்பாரோ.. தானே தன் தலையில் மண்ணள்ளிப் போடுறது என்றே உந்த தமிழ் சட்டம் படிச்ச கூட்டம் அலையுது. பொன்னம்பலம் காலம் தொடங்கி.. உதுதான் உவையின்ர இராஜதந்திரம். உதால வந்தது தானே இவ்வளவு அழிவுகளும் அடிமை வாழ்வும். அப்பவே வெள்ளைக்காரன் இருக்கேக்க பிரிச்சிருந்தால்.. ஒரு கரைச்சலும் வந்திருக்காது.

 

பரி: பாப்பம்.. தேர்தல் முடிஞ்ச கையோட.. உந்தக் கணவன் - மனைவி உறவாடலுக்கால என்ன பூனைக்குட்டி வெளிய வருகுதெண்டு. 

 

அங்க பாருங்கப்பா.... முருங்கை மரத்தில வல்லூறு ஒன்று பதுங்கி இருக்குது.. எங்கட கோழிக் குஞ்சை தூக்க.....

 

ப.சி: எங்கட தேசத்தில வல்லூறுகள் கூடிப் போச்சு. உள்ள நாட்டு உளவுப்படைகள்.. படைத்தளபதிகள்.. எல்லாம் யாழ்ப்பாணத்தில தான் நிற்கினம்...அவையோட சேர்ந்து உதுகளும் வந்திட்டுதுகளோ.  அது தான் நம்ம கோழிக்குஞ்சுகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போச்சுது. விரட்டியடி அதை..!

 

 

மீண்டும் ஓர் விறாந்தையோடு....இன்னொரு வேளையில்..

 

Mr C.V. Wigneswaran, the Chief Minister candidate the TNA was prodded to field by the Establishments, found The Hindu on Thursday to bare open what would be his political agenda once given with a ‘mandate’ by a choice-less people, commented Tamil activists for alternative politics in the island. Speaking to The Hindu, and comparing the island situation to a husband and wife fight at home, Wigneswaran addressed to Tamil Nadu that “We will fight, but sometimes we come together. The next-door neighbour must not come and say ‘you must divorce, you must divorce’. That is not your business.” Will the former justice come out with a similar stricture on Washington, New Delhi and Beijing in complicity with the spouse murdering dominant spouse, asked the activists.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரி: நல்லா கேட்டார். சுப்பிரமணியம் சாமி இப்ப கிட்டடில சொல்லிச்சே.. தமிழனும் சிங்களவனும் ஒன்று டி என் ஏ ரெஸ்டில தெரிஞ்சிட்டுது என்று அது போலத்தான் சொல்லுவார் உவரும்.
சிங்களம் திராவிட பாஷா என்று சொல்லுறாங்கள்.....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான்  பார்த்தேன்

வாசிக்க நேரமில்லை

 

தம்பி  எழுதினால்  என்ன  எழுதுவான்  என்று தெரியும்

தொடர்க

நேரமிருக்கும்  போது நிச்சயம் வாசித்து கருத்தும் விருப்பு வாக்கும்  வைப்பேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறாந்தை -7

 

ப.சி: பரி.. பரி.. இஞ்ச வாவேன். உனக்கொரு நல்ல செய்தி காட்டுறன்..

 

பரி: என்னங்க அப்படி நல்ல செய்தி..

 

ப.சி: நம்ம ஊருக்கு ரெயின் வருகுதாமடியப்பா. அதுவும் யாழ்தேவி...

 

பரி: ஏங்க.. ஊருக்கு ரெயின் வாறது பெரிய விசயமாங்க..?! உங்களுக்கு என்ன பைத்தியமே.. சும்மா சின்ன விசயம் உது.. உதைப் தூக்கிப் பிடிச்சு கத்துறியள்..!

 

ப.சி: என்னடியப்பா இப்படி சலிச்சுக்கிரா. 20 வருசத்துக்கு அப்புறம்.. யாழ்தேவி வருகுதுண்ணு நான் சந்தோசத்தில் கூப்பிட்டு காட்டிறன்.. நீ என்னடான்னா.. இப்படி ஒரேடியா சலிச்சுக்கிறா...!

 

பரி: 20 பது வருசத்துக்கு முன்னம் வந்த ரெயிலை நிற்பாட்டினவனே இப்ப மீண்டும் தன்ர தேவைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு.. கொண்டு வாறான். அவனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால்.. அதனை அப்பவே தொடர்ந்து இயக்கி இருக்கலாம் தானே..???! புலிகள் உவையை கூப்பிட்டு வைச்சு சொன்னவங்களே நாங்கள் உதுகளை இயக்க விடமாட்டம். நிற்பாட்டுன்னு.

 

ப.சி: அதெப்படியப்பா. புலிகள் இருக்கேக்க உதுகளை இயக்கிறது. அப்புறம் புலிகள் அதனை திறமாச் செய்து பெயர் வாங்கிட்டா...???!

 

பரி: புலிகள் இருக்கேக்க.. சிங்கள அரசாங்கத்தின்ர.. இலங்கை வங்கி.. சிறீலங்கா தபால்சேவை..சிறீலங்கா அரசாங்க அதிபர்.. கச்சேரி.. பாடசாலைகள்.. பரீட்சைகள்... உதுகள் எல்லாம் இயங்க முடிஞ்சதுன்னா.. ரெயினும்.. தொலைக்காட்சி சேவையும் மின்சாரமும் தானா இயங்க முடியாது..???!

 

ப.சி: பரி.. இப்படி குண்டக்கமண்டக்க கேள்வி கேட்கப்படாதடி. ரெயில் விட்டினமா.. வெடி கொழுத்தி.. பூமாலை போட்டு வரவேற்றமா.. யாழ்தேவி வருகுதென்று சேர்ந்து நின்று.. கும்மி அடிச்சமா என்றில்லாமல்... கேள்வி கேட்கிறது யாருக்கடி பிடிக்கும். அவை நினைச்சா நிப்பாட்டுவினம். நினைச்சா விடுவினம். நாங்கள் தான் ரோசம் மானம் என்று.. எதுவுமே இல்லாத கள்ளத்தோணிகள் ஆச்சே...!!

 

பரி: புலிகள் இருக்கேக்க தமிழ் மக்கள் கஸ்டப்படனும். அப்பதான் அவை புலிகளை வெறுத்து ஒதுக்கிவினம் என்று.. எத்தனை  தடைகளை.. கஸ்டங்களை தந்தான்.. இந்தச் சிங்களவன். இப்ப என்னடான்னா.. தன்ர ஆமியையும் ஆக்களையும் கொண்டு வந்து வைச்சுக் கொண்டு.. ரெயில் விடுகினமாம். ஏயர்போட் திறக்கினமாம். அவன் தன்ர வசதிக்கு.. தான் உறுதியா தமிழன்ர நிலத்தில நிற்க வசதி செய்து கொண்டு.. அதுக்கு அரசியல் ஜனநாய சாயம் வேற பூசிக் கொண்டிருக்கிறான். எங்கட சிலதுகள் அதுக்கு விசிலடிக்குதுகள்....

 

ப.சி: நான் விசிலடிக்கல்லையடியப்பா. யாழ்தேவி வருகுதாம் என்று செய்தி படிச்ச உடன.. ஒரு சந்தோசத்தில கத்திட்டன்டியப்பா. மன்னிச்சுக்கோ.

 

பரி: யாழ்தேவி ஒன்று.. 93 இல எப்படி வந்தது என்று தெரியும் தானே. தென்மராட்சி அதிர.. இடைவிடாத செல்லடியும்.. விமானக் குண்டடியும் என்று வந்தது எங்கட சொத்துக்களை அழிச்சது.. உயிர்களை பறிச்சது மறந்து போச்சுப் போல...

 

ப.சி: அதுகளை இப்ப யாரடி நினைக்கிறம். நாங்கள் தான் இப்ப கரண்டு.. ரெலிபோன்.. வெளிநாட்டில உள்ள பிள்ளை குட்டி வரவுன்னு ரெம்ப ஜோரா இருக்கிறமில்ல..

 

பரி: நீங்கள் உங்கட குடும்பத்தை பற்றி மட்டும் சிந்திக்கிறீங்க. 93 இல பிள்ளைகளை.. சொந்தங்களை.. சொத்தைப் பறிகொடுத்த மக்களின் மனநிலையை... பற்றி யோசிக்கிறீங்களோ. இல்லை. உதாலதான்.. தமிழனை ஆரும் என்னவும் செய்ய முடியுது. ஒரு இன உணர்வில்ல. ஒற்றுமை இல்ல. தங்களுக்கு ஒரு வசதி என்றால்..  எல்லாருக்கும் அது அப்படித்தான்.. என்று நினைச்சு கற்பனையில.. வாழுறது.

 

ப.சி: அது எங்கட பரம்பரை புத்தியடி. அதை மாத்தேலுமோ..??!

 

பரி: இத்தனை சாவுகள்.. அழிவுகள்.. துரோகங்கள்.. மாற்றான்மனப்பான்மை கண்டும்.. திருந்தல்லைன்னா.. நீங்கள் எப்பவுமே திருந்தப் போறதில்லை. இப்படியே ஆமிக்காரன் வேண்டிய நேரம் வந்து.. கதவை தட்டுவான்.. திறந்து கொண்டு.. அடிமைகளாய் கிடந்து சாவுங்கோ.

 

ப.சி: நான் ஏன் அடிமையா இருக்கப் போறன். எனக்குத்தான் லண்டன் கனடா அவுஸி என்று பிள்ளைகள் இருக்குதுகள். இங்க நிலைமை மோசம் என்றால் அங்க போவன்.

 

பரி: உங்களைப் போல.. நாடோடிகளுக்கு யார் என்ன கொண்டு வந்தாலும்.. அமிர்தமாகத்தான் இருக்குமுங்க. எனக்கென்டா.. கொட்டில இருந்தாலும் சொந்த மண்ணில சுதந்திரமா ஒருத்தற்ற தொந்தரவும் இல்லாமல் இருக்கனுன்னு தான் விருப்பம். கனடாவில எவனோ வகுக்கிற சட்டத்திற்கு அவனுக்கு கூலியா இருந்து கொண்டு இஞ்ச வந்து சோ காட்டிறது எல்லாம்.. ஒரு பிழைப்பாங்க. உங்களுக்கு அது திறம். எனக்கு அப்படி இல்லை.

 

ப.சி: அது தான் நீ.. பிள்ளைகள் என்னை இஞ்ச வந்து பார்க்கனும்.. நான் உந்த நாடுகள் ஒன்றுக்கும் போகமாட்டன் என்று அடம்பிடிக்கிறனியே. அப்படிச் சொல்லன் சங்கதிய. பார் உன்னைக் கட்டி 40 வருசமாச்சு. என்னாலேயே உன்னைப் புரிஞ்சுக்க முடியல்ல.. கொண்டதே கோலம் என்றிருக்கிற..எங்கட சனத்தால.. எப்படி.. சிங்களவனை புரிஞ்சுக்க முடியும்.

 

பரி: சனத்தைப் பற்றி எதுக்குக் கதை. அந்தச் சனமே நாங்கள் தானே. நாங்கள் ஒழுங்கா சிந்திச்சு செயற்பட்டு வாழ்ந்தா.. அது ஒவ்வொரு வீட்டிலும் நடந்தா அதுவே சனம் செய்யுறதா முடியும். முதலில உங்களை மாத்திக்கொள்ளுங்க. அற்ப விசயங்களை தூக்கிப் பிடிச்சு அநியாயம் செய்தவனுக்கு அனுதாபம் தேடிக் கொடுக்காதேங்க. சனத்தைப் பற்றி அப்புறம் பேசுவம். சரி உலை வெந்திட்டுது போல.. நான் கறி வைக்கப் போறன். இதுக்குப் பிறகும்.. யாழ்தேவி அதுஇதென்று கத்தினீங்க.. எனக்குப் பொல்லாத கோபம் வந்திடும் சொல்லிப்போட்டன்.

 

ப.சி: நான் எனிச் சொல்லலடியப்பா. எங்களைக் கொன்ற அழிச்ச.. உந்தச் சிங்களவனுக்காக உன்னோட சண்டை பிடிச்சு..என்ர வயிறை காயப் போட நான் என்ன அடிமுட்டாளே. சுழியன்டி..! நீ போய் உன்ர வேலையைப் பாரடியப்பா.

 

(மீண்டும் ஒரு விறாந்தையோடு....சிந்திக்கும் வரை நன்றி..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனிச் சொல்லலடியப்பா. எங்களைக் கொன்ற அழிச்ச.. உந்தச் சிங்களவனுக்காக உன்னோட சண்டை பிடிச்சு..என்ர வயிறை காயப் போட நான் என்ன அடிமுட்டாளே. சுழியன்டி..! நீ போய் உன்ர வேலையைப் பாரடியப்பா

:D :D உந்த யாழ்தேவியில போய் தமிழ்தேசிய கூட்டமைப்பு ,சனம் வோட்டு போடவேணும் ....
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.