Jump to content

Colombo Wigneswaran Is Out Of Touch, TNA Should Pick Another CM Candidate, Says Tamils For Obama


Recommended Posts

Justice Wigneswaran should apologize to Tamil Nadu Tamils; TNA should pick another CM candidate, says Tamils for Obama.

Issuing a statement Tamils for Obama says; “Mr. Wigneswaran lives in Colombo and has lived there all his life. He is out of touch with the experiences and wishes of the Tamils in northeast Sri Lanka. He was reluctant from the beginning take this office and we urge the TNA should pick someone closer to the northeastern Tamils.”

Wigneswaran

We publish below the statement in full;

Justice Wigneswaran recently gave an exclusive interview to Hindustan Times. There are few things that came out during this interview that worry us. We would like address these worries in this letter.

1. Mr. Wigneswaran in this Hindustan Times interview referred to “our army” and “our navy.” These references are to the Singhalese-controlled national Sri Lankan armed forces. They are not “our” forces and calling it “our army” insults the Tamils. This is the genocidal army killed over 70,000 Tamil civilians, and raped numerous Tamil women and whose officers may eventually be facing war crimes tribunals for these murders.

2. Mr. Wigneswaran makes clear (he says it many times and in many ways) that he favors a united Sri Lanka. He asks the leaders in Tamil Nadu to “allow us to work out our own solutions to our own problems within a united Sri Lanka.” These are the same ideas and even the same phrases that Mahinda Rajapaksa used when misleading the international community.

3. “You are welcome to give us any other kind of support,” Mr. Wigneswaran says to our Tamil cousins in Tamil Nadu, “but please allow us to work out our own solutions to our own problems within a united Sri Lanka.” Our cousins deserve our respect and thanks for their support and sacrifice. CM Jayalalithaa and the Tamil Nadu legislature have passed (unanimously) a resolution calling for a South Sudan style referendum asking about a separate, secure and safe Tamil homeland. Jayalalithaa met Hillary Clinton in Chennai and spoke of the suffering of the Sri Lankan Tamils. We know, because when we met Asst. Secretary Blake at the state department he told us so. Secretary Clinton then worked to support the UNHRC resolution to bring war crimes charges against SL government leaders. Jayalalithaa and the TN legislature then pushed India to support the resolution also, and India has since supported it twice. TN Tamils have given us their support in our time of need. We appreciate their help, and we will never tell them “mind your own business.”

We urge Mr. Wigneswaran to apologize to the leaders and the people of Tamil Nadu.

Mr. Wigneswaran lives in Colombo and has lived there all his life. He is out of touch with the experiences and wishes of the Tamils in northeast Sri Lanka. He was reluctant from the beginning take this office and we urge the TNA should pick someone closer to the northeastern Tamils.

Tamils for Obama

http://www.colombotelegraph.com/index.php/wigneswaran-is-out-of-touch-tna-should-pick-another-cm-candidate-says-tamils-for-obama/

Link to comment
Share on other sites

இப்படியெல்லாம் சொல்லியிருந்தார் என்றால் வில்லங்கமான ஆள்தான் விக்கி.. :rolleyes:

Link to comment
Share on other sites

விக்கினேஸ்வரன் மட்டும் அல்ல கூட்டமைப்பின் எல்லா வேட்பாளர்களும் தேர்தல் ஆணையாளர் புதிதாக சேர்த்திருக்கும் சத்தியக்கடதாசியில் இலங்கையின் ஒற்றுமையை பாதுகாப்போம் என்று கையெழுத்து போட்டுக்கொடுத்த பின்னர்தான் தேர்தலில் நிற்க முடியும்.  இது தேர்தலில் வென்றபின்னர் எடுக்கப் போகும் 6ம் திருத்தத்திற்கு கீழ் வரும் சத்தியபிரமாணத்திற்கு மேலதிகமானது.

 

இந்த குழப்பங்கள் வருவது ஆடு அறுக்க முதல் தொடைக்கு போட்டி போடுவதால். முதலில், வடமாகாண தேர்தல் மூலம் வடக்கை, இலங்கை அரசிடமிருந்து பிரிக்க விக்கினேஸ்வரன் தெரியபட்டிருக்கிறார் என்ற மாயையை இந்த எழுத்தாளர் எழுப்புகிறார்கள்.  பின்னர் விக்கினேஸ்வரன், அப்படி பிரிக்க படும் வடமாகணத்தை தூக்கிக்கொண்டு அரசுடன் கம்பி நீட்டிவிடப்போகிறார் என்றும் மிரட்டுகிறார்கள். அரசியலில் எதுவும், எதிராக அல்லது ஆதரவாக விபரிக்க முடியும் என்றதை இந்த எழுத்தாளர்கள் உணர வேண்டும்.

 

மானிலத்தில் தேர்தல் வந்தால், மாணவர் போராட்டம் வந்தால், ஐ.நாவில் பிரேரணை வந்தால், விக்கினேஸ்வரன் தெரியப்பட்டால் தமிழ்நாட்டில் சில திருத்த முடியாத கழுதைகள் டெசோ கூட்டுகிறார்கள். இதானல் விக்கினேஸ்வரன் தெரிவு செய்யபட்டதற்காக கூட்டப்படும் டெசோவுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் கட்சி சார்பில்லாமல் நடத்தப்பட்ட மாணவர் போராட்டதை பற்றி குறை கூறினால் அவர் தன்னைத்தான் எதிர்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் சொல்லியிருந்தார் என்றால் வில்லங்கமான ஆள்தான் விக்கி.. :rolleyes:

 

என்ன சொல்லி இருந்தால் என்று இழுக்குறீங்க.. அண்மையில் தமிழ் மிரருக்குச் சொல்லி இருந்ததில் ஒன்று யாரும் எங்கும் போய் குடியேறலாமாம். அப்ப தமிழர்கள் காலியில் போய் ஏக்கர் கணக்கில் காணி பிடிச்சு இருக்கலாமோ..?????! :rolleyes::(

Link to comment
Share on other sites

சரவணபவன் நேற்று வானொலியில் சொன்னார்

"புலி முத்திரை இல்லாத அரசியல்வாதிகளை தான் சர்வதேசம் வேண்டிநிற்கின்றது என்று ".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனும்.. சம்பந்தன் கூட்டமும்.. ஒன்றைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான தீர்வு என்ன..???! முதலில் அதைச் சொல்லிட்டுத்தான்.. வாக்குப் போடென்று கேட்கனும்.

 

முன்னைய தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் தெளிவாக மக்களுக்குச் சொல்லப்பட்டே மக்கள் முன் நின்றார்கள். ஆனால் 2009 மே க்குப் பின் பல விடயங்கள் மூடு மந்திரமாகவும்.. தேர்தலுக்கு முன் ஒன்றும் பின் ஒன்றும் பேசுவதாகவும் செய்வதாகவும் உள்ளது.

 

அதுமட்டுமன்றி தமிழ் தேசியப் பற்றாளர்கள் தூக்கி வெளியே எறியப்பட்டுள்ளனர். இவை எல்லாம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமாகத் தெரியவில்லை. சங்கரியையும் சித்தார்த்தனையும் உள்ள வைச்சிருக்கிறது அவசியம் என்று கருதுபவர்கள் கூட கஜேந்திரன்.. போன்றவர்களின் பங்களிப்பை தேடுவதாக இல்லை. இப்படிப் பலர் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தியோடு உள்ளனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு.. காட்டிக்கொடுக்க துரோகம் செய்ய சற்றும் பின் நிற்காத சங்கரி.. சித்தார்த்தன் போன்றவர்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெருங்கிக் கொண்டு போவதும்.. பல விடயங்களை மூடு மந்திரமாக வைத்திருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

 

சம்பந்தன் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்க மாவை தூக்கி வீசுறார். சம்பந்தன் ஐக்கிய இலங்கை என்று உளற சிறீதரன் சுயநிர்ணயம் என்று பேசுகிறார். சங்கரி.. சித்தார்த்தன்.. இவை பற்றி மூச்சும் இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளனர். அங்கு அவர்கள் என்ன அடிப்படை கொள்கை மாற்றத்தோடு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது. சங்கரியோ.. சித்தார்த்தனோ தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களுக்கு துரோகங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் இல்லை..!

 

இப்படியே போய்க்கிட்டிருந்தா.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை படு வீழ்ச்சியடையும். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியாக அமையும். பின்னர் அது வெளிநாட்டுச் சக்திகளால் ஒட்டுக்குழுக்களால் புலிகளின் தோல்வி என்றாக்கப்படும். ஆனால் அடிப்படையில் புலிகள் தான் இந்தக் கூட்டமைப்பைப் பலமாக்கினார்கள். யார் யார் இருக்க வேண்டாமோ அவரவரை அவரவர் விருப்பப்படி இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவிட்டார்கள். ஆனால் இன்று.. ஒற்றுமைப்படுத்திறம் என்ற போர்வையில் உண்மையான இனப்பற்றாளர்களை தூக்கி எறிந்துவிட்டு துரோகத்திற்கு சற்றும் பிந்தங்காதவர்களை.. கொழும்பில் சுகபோக வாழ்வை அனுபவித்தவர்களை வைச்சு வடக்குக் கிழக்கு அரசியலை செய்வது என்பது நிச்சயம் மக்கள் மனதில் நெருடலை வளர்க்கவே செய்யும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் புலிகளை அழிக்கனுன்னு முற்றாக விரும்பி இருக்கவில்லை. இந்தியா தான் அந்த நிலைப்பாட்டில் இருந்தது. அதனை நோக்கி சர்வதேசத்தை நகர்த்தியும் வந்தது.

 

புலிகள் தமிழ் மக்களின் விருப்புக்குரிய சக்திகள் என்பதை சர்வதேசம் நன்கறிந்திருப்பதால் தான்.. புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் எந்தச் செயற்பாடுகளையும் அவர்கள் தடுக்கவில்லை. அல்குவைடா  ஆதரவாளர்கள் மீது காட்டும் கடும்போக்கை தமிழர்கள் மீது சர்வதேசம் காட்டாததற்கு காரணம்.. அது புலிகள் தமிழ் மக்கள் உறவை நன்கே தெரிந்திருக்கிறது.

 

சரவணபவன்.. எனி ஏன் மாவீரர் தினம்.. என்று கேள்வி கேட்ட ஒருவர்.மாவீரர் தினம்..  சிங்களப் படையினரால்.. பிரச்சனையை வளர்க்கிறது என்ற விதண்டாவாதம் செய்தவர். ஏதோ மாவீரர் தினம் கொண்டாடாட்டி.. சிங்களவனுக்கு தெரியாதாக்கும்.. தமிழர்கள் சுதந்திர தமிழீழம் வாங்க செல்வநாயகம் ஐயா காலம் தொடங்கி குரல் எழுப்புகின்றனர் என்று. பின்னர் அவரே கடந்த மாவீரர் தினக் கொண்டாட்டங்களை யாழ் பல்கலையில் ஊக்குவித்தார். சிங்களப் படைகளிடம் கல்லெறியும் வாங்கினார்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் 2009 மே க்குப் பின் நிறைய மாற்றங்கள் மக்கள் விரும்பாத வகைக்கும் நிகழ்கின்ற நிலையில்.. மக்கள் இவர்களை வாக்குகளால் எதிர்க்கும் நிலை தோன்றின் அது மகிந்தவுக்கும் அவரைச் சார்ந்த ஒட்டுக்குழுக்களுக்குமே இன்னும் வாய்ப்பாகும்.

 

இந்த நிலையில்.. பலமான தமிழ் தேசிய அரசியல் களம் ஒன்று.. தாயகத்தில் இதய சுத்தியோடு தோற்றம் காணும் நிலை ஒன்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பை வழி நடத்தும் என்று நினைக்கிறேன். இதன் பின்னணியில் புலம்பெயர் மற்றும் தமிழக மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

பேசாமல் சர்வதேசமே வாக்கும் போட்டுவிடலாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் சர்வதேசமே வாக்கும் போட்டுவிடலாம்.. :icon_idea:

 

இப்ப எல்லாம் நம்மவர்கள் சர்வதேசத்துக்காகத்தான் அழுகிறது.. சாப்பிடுறது.. கூட்டம் போடுறது.. அரசியல் செய்யுறது எல்லாமே..!

 

புலிகள் இருந்தப்போ.. தமிழ் மக்களை நோக்கி.. வன்னியை நோக்கி சர்வதேசம் பல வேசங்களில்.. வந்த காலம் போய்.. புலிகளை சர்வதேச நாடுகள் வாங்க எங்க நாட்டில பேசுங்க என்று அழைத்த காலம் போய்.. இப்ப நம்மவர்கள் சர்வதேசத்தின் காலில் கும்பிடுபோடும் நிலை. இதில் இந்தியாவின் காலைக் கட்டிக்கொண்டு வேற அழுகிறார்கள்...! இதைத் தான் அவர்களும் விரும்பினார்கள். இதற்கு தடையாக புலிகள் இருந்ததால் தான் அவர்களை அழிக்கனுன்னும் இந்தியா நின்றது..!

 

இப்ப சங்கரிக்கு சித்தார்த்தனுக்குக் கூட அரசியல் செய்ய வாய்ப்புப் பிறந்திருக்கென்னா.. இதுக்காகத்தான் சங்கரி புலிகளை அழி.. போர் என்றால் அழிவுகள் இருக்கத்தான் செய்யும்.. எல்லாம் புலிகளால் வந்த அழிவு.. என்று.. கடிதம் எழுதிக்கிட்டு இருந்ததும்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் நேற்று வானொலியில் சொன்னார்

"புலி முத்திரை இல்லாத அரசியல்வாதிகளை தான் சர்வதேசம் வேண்டிநிற்கின்றது என்று ".

ஈழத்தமிழருக்கு எப்ப பிரச்சனை தொடங்கினது? புலி எப்ப வந்தது? ஏன் வந்தது எண்டு எண்டு அங்கிளுக்கும் தெரியேல்லை.....சர்வதேசத்துக்கும் தெரியேல்லை. ஏன் அந்த சரவணனுக்கும்?????.......என்ன கொடுமை சரவணா....
 
உலகத்துக்கு ஈழத்தமிழர்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆயிரம்வழிகள் இருக்கு.
உலகத்துக்கு ஈழத்தமிழர்பிரச்சனையை  இழுத்தடிக்க,தப்பிக்க,குளிர்காய,சம்பாதிக்க புலி எண்ட நாமம் காணும். 
Link to comment
Share on other sites

சரவணபவன் நேற்று வானொலியில் சொன்னார்

"புலி முத்திரை இல்லாத அரசியல்வாதிகளை தான் சர்வதேசம் வேண்டிநிற்கின்றது என்று ".

 

செத்தையில் பல்லியை மெத்தைக்குள் விட்டாலும் அது திரும்ப... இப்படி கருத்துக்களை தேடிப்பிடிப்பதில் அருசுனிற்கு நிகர் அவர்தான்.

 

இந்த சரவணபவன் மகிந்தாவை போய் சந்தித்ததும்,  அவரையும், உதயன் பத்திரிகையையும் பற்றி கூட்டமைப்பு வெளிவிட்ட கருத்துகளையும் படிக்காதது மாதிரி நடித்து அப்புறம் என்ன? கழன்று போபவர்களைக் கடந்தேற பண்ண கருத்துகள் பதிவது அருசுனுக்கு கொடுத்திருக்கும் உத்தியோகம்.

Link to comment
Share on other sites

சரவணபவன் நேற்று வானொலியில் சொன்னார்

"புலி முத்திரை இல்லாத அரசியல்வாதிகளை தான் சர்வதேசம் வேண்டிநிற்கின்றது என்று ".

அப்பிடியா உடனே ஒரு நன்றிக் கடிதம் எழுதுங்கோ  :icon_idea: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.