Jump to content

பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்!


Recommended Posts

உலகத்துலே புரிஞ்சுக்க முடியாத விஷயம் ஒண்ணு இருக்குன்னா... அது நம்ம சொந்த பந்தங்கள் தான்... எப்போ கவுப்பாங்க.... எப்போ கழுத்தறுப்பாங்கன்னு யாருக்குமே தெரியாது.... என் அனுபவித்தில் நான் உணர்ந்தவையும், அக்கம் பக்கத்திலே பார்த்ததையும், கேட்டதையும் சொல்லுறேன்....

சொந்தங்களை நம்புறது காட்டிலும், அசலாரை நம்பலாம்னு.... பொதுவாவே எல்லோரும் சொல்வாங்க.... ஒத்துக்கவே மாட்டேன்... சில சொந்தங்கள் நம்மை வம்பிழுக்குதுன்னு சொல்லி ஒட்டுமொத்தமா எல்லாச் சொந்தத்தையும் இந்த மாதிரி திட்டக்கூடாது....

கொஞ்சம் வருஷம் முன்னாடி எங்கத் தெருவில ரெண்டு பேர் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க.... என்ன விஷயம்னு யாருக்கும் தெரியல... பக்கத்துலே போய் விசார்ச்சிப் பார்த்தப்புறம் தான் தெரிஞ்சது..... அண்ணன், தம்பிகள்.... நில விவகாரம்.... தம்பி காரனுக்கு வந்த பங்குல இருந்த இடத்துக்கு வழி இல்ல.... அண்னன் காரன் கிட்டே 3 அடி இடம் கேட்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தார்.... சும்மாவா சொன்னாங்க ஆறேழு வயசுவரைக்கும் தான் அண்ணன், தம்பி.... பத்து வயசான்னா பங்காளின்னு.... தம்பி கோவமா சொன்னார்.... நீ செத்தாலும் சரி, நான் செத்தாலும் சரி... ரெண்டு பேரும் மூஞ்சியில முழிச்சிக்கக் கூடாதுன்னு.... ரெண்டு வருஷம் முன்னாடி எங்க தெருவில ஒரு வீட்டுல இழவு.... வாசல்லே ஒருத்தர் புரண்டு புரண்டு அழுதுக்கிட்டு இருந்தாரு.... கொஞ்சம் மப்பு போல..... செத்துப்போனவர் அதே அண்ணன்.... புரண்டு புரண்டு அழுதுக்கிட்டிருந்தவர் தம்பி.... என்னாத்தைச் சொல்லுறது?

இதுபோலத்தான் சின்ன வயசுல அண்ணன் - தங்கச்சி எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க... அதே தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போறப்போ அழற அண்ணன்களை ஏராளமாப் பார்த்திருக்கேன்.... கல்யாணம் முடிஞ்சி மண்டபத்தை காலி பண்ணுறப்போ அண்ணனுங்களுக்கு வர்ற பீலிங்.... நீங்க ஒரு தங்கச்சிக்கு அண்ணனா இருந்தாதான் தெரியும்.....

என் நண்பர் ஒருத்தரோட அப்பா ஒரு பிசினஸ் மேன்.... நிறைய பிசினஸ் பண்ணி ரொம்பவும் லாஸ் ஆயிட்டார்... தற்கொலை செஞ்சிக்க வேண்டிய சூழ்நிலை... அந்த நேரத்துலே அவர் தம்பிகள் ரெண்டு பேர் அவர் குடும்பத்தை தாங்கி.... அவரோட பசங்களுக்கு நல்ல கல்வி கொடுத்து இன்னைக்கு வரைக்கும் அண்ணன் குடும்பத்தை தாங்கிக்கிட்டு இருக்காங்க.... இத்தனைக்கும் அண்ணன் நல்லா இருந்தப்போ தம்பிகளுக்கு எந்த ஹெல்ப்பும் பண்ணதில்லே.....

அதுபோலவே எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயானதுக்கு அப்புறமா அவர் கணவர் விட்டுட்டு ஓடிட்டாரு.... கிட்டத்தட்ட 15 வருஷமா அந்தப் பெண்ணை கண்ணும், கருத்துமா கவனிச்சி அந்தப் பெண்ணோட குழந்தைகளை வளர்க்கிறது அவங்க அண்னன் - தம்பிகள் தான்.... இதுல பாசிட்டிவ்வான விஷயம் என்னன்னா அந்தப் பெண்ணுக்கு வந்த அண்ணிகள் கூட அவருக்கு ஆதரவா இருக்கறது தான்....

என்னோட உறவுக்கார பெண்மணி ஒருத்தர் கொஞ்சம் இராமாயண கூனி மாதிரி பொறாமை எண்ணம் கொண்டவர்.... அவருடைய சொந்த மச்சினன் பையன் +2ல பெயில் ஆயிட்டான்.... உறவுகள் எல்லாம் அந்தப் பையனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றிக்கிட்டு இருந்தப்ப இந்த அம்மா சம்பந்தமேயில்லாம அவங்களுக்கு தெரிஞ்ச ஸ்கூல் ஒன்ணுலே 100% பாஸ் அப்படின்னு சொன்னாங்க.... இந்த மாதிரி உறவுகளும் உண்டு.....

என்னோட தாய் மாமாவுக்கும், என் அம்மாவுக்கு ஏதோ ஒரு சின்ன பிரச்சினையிலே வாய் தகராறு ஆயிடுச்சி.... 15 வருஷமா எந்தப் பேச்சுவார்த்தையும் இல்ல.... எங்க வீட்டிலே நடக்கிற சுகதுக்க காரியங்களாகட்டும், அவங்க வீட்டிலே நடக்கிற சுகதுக்கங்களுக்கு பரஸ்பரம் நாங்க பங்கெடுத்துக்குறது இல்லே... எங்க அம்மாவுக்கு அவ்வளவு வைராக்கியம்.... இதுலே துரதிருஷ்டமான விஷயம் என்னண்ணா அந்த மாமாவுக்கு ஒரு அழகான பொண்ணு இருந்திச்சி.....

சமீபத்துலே எங்க தெருவுல ஒரு வயசான அம்மா கை கால் விழுந்து ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு இருந்தாங்க.... கிட்டத்தட்ட ரெண்டு வருஷம்.... அவங்க மருமக அவங்களை எந்த அளவுக்கு அந்தக் கடைசி நாட்கள்ல பார்த்துக்கிட்டாங்கன்னு எங்களுக்கு தான் தெரியும்... இத்தனைக்கும் அந்த கெளவி நல்லா இருந்தக் காலத்துலே மருமகளை ரொம்பவும் சித்திரவதைப் பண்ணிக்கிட்டு இருந்திச்சி.....

என் பிரண்டு ஒருத்தர் கல்யாணம் ரெண்டு வருஷம் முன்னாடி விழுப்புரத்துலே நடந்துச்சி... கல்யாணத்துக்கு போயிருந்தேன்... தாலி கட்டுற நேரத்துலே ஒருத்தர் பயங்கரப் பிரச்சினை பண்ணி கல்யாணத்தையே நிறுத்துற லெவலுக்கு வந்துட்டாரு... என்னய்யா பிரச்சினைன்னு பார்த்தா அவர் பையனுக்கு பெரியப்பாவாம்.... அவரு பேரை பத்திரிகையில போடாம அவமானப்படுத்திட்டாங்களாம்....

உறவு என்பது எல்லா விஷயத்துக்கும் மகிழ்ச்சியோ, வெறுப்போ எதுவாக இருந்தாலும் ரொம்ப அதீதமாக ரியாக்ட் செய்கிறது.... அதுதான் பிரச்சினையே.... பாசம் காட்டுவது என்றால் பாசமலர் ரேஞ்சுக்கு பாசம் காட்டுவார்கள்.... கோபம் என்றால் வெத்து, குத்து ரேஞ்சுக்கு கோபம் காட்டுவார்கள்.... மொத்தத்துலே உலகத்துலே புரிஞ்சுக்க முடியாத சில விஷயங்கள்ல நம்ப உறவுகளின் மனோபாவத்தையும் சேர்த்துக்கலாம்....

ஒண்ணு ரெண்டு உறவுக்காரங்களைக் காரணம் காட்டி உறவுகளே மோசம்னு தள்ளி வெச்சுட முடியாது.... அதே நேரத்துலே ஓரிரு உறவுகளின் நேச, பாசத்தையும் பார்த்து உறவுகள் தான் சூப்பர்னு தூக்கி வெச்சி கொண்டாடவும் முடியாது... பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூளைப் போல வாழ்க்கைப் புல்லா நெரடிக்கிட்டே இருக்கிற விஷயம் தான் உறவுகள்!!!!

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோட தாய் மாமாவுக்கும்இ என் அம்மாவுக்கு ஏதோ ஒரு சின்ன பிரச்சினையிலே வாய் தகராறு ஆயிடுச்சி.... 15 வருஷமா எந்தப் பேச்சுவார்த்தையும் இல்ல.... எங்க வீட்டிலே நடக்கிற சுகதுக்க காரியங்களாகட்டும்இ அவங்க வீட்டிலே நடக்கிற சுகதுக்கங்களுக்கு பரஸ்பரம் நாங்க பங்கெடுத்துக்குறது இல்லே... எங்க அம்மாவுக்கு அவ்வளவு வைராக்கியம்.... இதுலே துரதிருஷ்டமான விஷயம் என்னண்ணா அந்த மாமாவுக்கு ஒரு அழகான பொண்ணு இருந்திச்சி.....

அடஅட :cry: :cry: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமாவில வாற மாதிரி நீங்க உங்கட மாமா பொண்ண லவ் பண்ணி பிரிஞ்ச உங்கட குடம்பத்தை சேர்த்திருக்கலாம் தானே!

Link to comment
Share on other sites

சினிமாவில வாற மாதிரி நீங்க உங்கட மாமா பொண்ண லவ் பண்ணி பிரிஞ்ச உங்கட குடம்பத்தை சேர்த்திருக்கலாம் தானே!

சினிமாவுக்கும், யதார்த்த வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லன்னு இதிலேர்ந்தே எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்.... :lol:

Link to comment
Share on other sites

சினிமாவுக்கும், யதார்த்த வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லன்னு இதிலேர்ந்தே எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்.... :lol:

அந்த பெண்ணுக்காகவாவது குடும்பத்தை ஒண்று சேர்க்க வேணும் எண்று நினைக்காதது துரதிஸ்ரம்....!

பாவம் அந்த பெண்ணின் மனம் எவ்வளவு கஸ்ரப்படும்.... :wink: :P (சும்மா ஒரு உதார்தான்)

Link to comment
Share on other sites

உறவு என்பது எல்லா விஷயத்துக்கும் மகிழ்ச்சியோ, வெறுப்போ எதுவாக இருந்தாலும் ரொம்ப அதீதமாக ரியாக்ட் செய்கிறது.... அதுதான் பிரச்சினையே.... பாசம் காட்டுவது என்றால் பாசமலர் ரேஞ்சுக்கு பாசம் காட்டுவார்கள்.... கோபம் என்றால் வெத்து, குத்து ரேஞ்சுக்கு கோபம் காட்டுவார்கள்.... மொத்தத்துலே உலகத்துலே புரிஞ்சுக்க முடியாத சில விஷயங்கள்ல நம்ப உறவுகளின் மனோபாவத்தையும் சேர்த்துக்கலாம்....

ஒண்ணு ரெண்டு உறவுக்காரங்களைக் காரணம் காட்டி உறவுகளே மோசம்னு தள்ளி வெச்சுட முடியாது.... அதே நேரத்துலே ஓரிரு உறவுகளின் நேச, பாசத்தையும் பார்த்து உறவுகள் தான் சூப்பர்னு தூக்கி வெச்சி கொண்டாடவும் முடியாது... பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூளைப் போல வாழ்க்கைப் புல்லா நெரடிக்கிட்டே இருக்கிற விஷயம் தான் உறவுகள்!!!!

ரொம்ப உணர்ந்து அருமையா எழுதி இருக்கிறியள் லக்கிலுக்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா உறவுகளை பத்தி நல்லா சொல்லி இருக்கிறீங்களே... :lol: சொன்னதல்லாம் 100% உண்மைதாங்க... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக் கூட நன்றாக இருக்கின்றது லக்கிலுக்! நான் என்னவோ, தலைப்பைப் பார்த்தபோது பாக்குத் தூள் பற்றி தத்துவம் ஏதும் சொல்லப் போகின்றீராக்கும் என நினைத்தேன்!

Link to comment
Share on other sites

தலைப்புக் கூட நன்றாக இருக்கின்றது லக்கிலுக்! நான் என்னவோ, தலைப்பைப் பார்த்தபோது பாக்குத் தூள் பற்றி தத்துவம் ஏதும் சொல்லப் போகின்றீராக்கும் என நினைத்தேன்!

குடும்பத்தோட கஸ்ரப்பட்டு பாக்குத்தூள் எண்டுறார்.... யாழ்களத்தில பட்டதை வச்சு என்ன எண்டு சொல்லுவாராம்....! ( அதே பாக்குதூளா இல்லை பாண்பராகா..?? :wink: :P :P )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தோட கஸ்ரப்பட்டு பாக்குத்தூள் எண்டுறார்.... யாழ்களத்தில பட்டதை வச்சு என்ன எண்டு சொல்லுவாராம்....! ( அதே பாக்குதூளா இல்லை பாண்பராகா..?? :wink: :P :P )

ஏனப்பா இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டு வம்பில் மாட்டப் பார்க்கின்றீர்கள்! அதை அவரே சொல்லட்டும்! :roll:

(எங்கு எல்லாம் பிரச்சனை உருவாக்கலாம் என்று ஒரு போக்கோடு தான் திரிகின்றீர்கள் போல கிடக்குதே :wink: :P )

Link to comment
Share on other sites

தலைப்புக் கூட நன்றாக இருக்கின்றது லக்கிலுக்!

இந்தத் தலைப்பு நம் சொந்தச் சரக்கல்ல.... கலைஞர் ஒரு முறை எதுக்கோ கூறிய உவமானம்....

Link to comment
Share on other sites

இந்தத் தலைப்பு நம் சொந்தச் சரக்கல்ல.... கலைஞர் ஒரு முறை எதுக்கோ கூறிய உவமானம்....

அருமையா எழுதி இருகிறீர்கள். ஆனா கடைசியில் தலைப்பு உங்களது இல்லை எண்று கவுத்து புட்டியளே. சரி கருத்தும் எழுத்தும் நல்லா இருக்கு. தலைப்பை பற்றி நான் ஒண்டும் சொல்லேல்லை. :wink:

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒண்ணு ரெண்டு உறவுக்காரங்களைக் காரணம் காட்டி உறவுகளே மோசம்னு தள்ளி வெச்சுட முடியாது.... அதே நேரத்துலே ஓரிரு உறவுகளின் நேச, பாசத்தையும் பார்த்து உறவுகள் தான் சூப்பர்னு தூக்கி வெச்சி கொண்டாடவும் முடியாது... பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூளைப் போல வாழ்க்கைப் புல்லா நெரடிக்கிட்டே இருக்கிற விஷயம் தான் உறவுகள்!!!!

எல்லோருடைய அனுபவத்தையும் அப்படியே பேட்டி கண்டு எழுதியிருக்கின்றீர்கள் போல. நான் சந்தித்த பெரும்பலான உறவுகள் சுயநலக்கரார் போல தான் இருக்கின்றார்கள். அவர்களிடம் இருந்து எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி நாம் பழகினால் தான் பல வேதனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

பதிப்புக்கு நன்றி லக்கிலுக்.

Link to comment
Share on other sites

தாய்வழி சொந்தம்..தகப்பன்வழி சொந்தம்....

இதெல்லாம் நாம அமைச்சுக்கிறது இல்ல தானே.. அமைஞ்சது...

உறவுகளை சரியானமுறையிலே கொண்டாடணும்..

எல்லா உறவுகளுக்கும் பழகுறதுக்கும்..கொண்டாடுறதுக்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.   பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.   மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.