Jump to content

வேர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேர்கள்

வெளியில் தெரிவதில்லை

கனிகள்,காய்கள்

ஏன் மரங்கள் கூட

கொண்டாடப்படுகையில்

வேர்களின் வியர்வையை

யாரும் துடைப்பதில்லை

மரத்தை வளர்க்க

நிலத்தை துளையிட்ட  

வேர்களின் வலி யார் அறிவார்

கனிகளை,காய்களை,மரத்தை

திருடுகையில்

வேரின் அழுகையை யார் நினைத்தார்?

வேர் என்பது

உயிருள்ள அத்திவாரம்

தாயை போல,

தாயின் தாயை போல

 

வேர் கிழங்கானால் மட்டும் ---

 

-நிரோன் -

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, லியோ!நன்றிகள் !

 

வெளியில், பகட்டாகத் தெரிபவைகளுக்குத் தான், இது காலம்!

 

 

பாலைவனத்து மணலிலும், ,

நீர் மொண்டு வருகிறாய்,

உறுதியான உனது கரங்கள் பிடித்து,

நெடு மரமாய் நிமிர்கின்றேன்!

 

இலைகள் விடை பெற்ற பின்னும்,

இறந்து போன எனது பூதவுடலின்,

பாதங்களைப் பற்றிப் பிடித்திருக்கும்,

பெண்ணங்கே! 

விடைகொடு எனக்கு,

வெகுதூரம் போக வேண்டும் !

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேர்கள் வெளியில் தெரியாத வரைதான் வேரும் வாழும் , தருவும் வாழும் !

வேர்கள் வெளிப்  போந்தால்  இரண்டுமே விறகாகும் !!

 

 

நல்ல கவிதை  லியோ !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் வாழ்வில் நாமும் வேர்களே.நன்றி லியோ தரமான இணைப்புக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கு

 

அண்மையில்  வாலியின்  ஒரு பேச்சில் கேட்டேன்

 

 

வேர்வை

என்றாவது ஒருநாள்

வேர்  விடும்.......... :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு கவிதை , புங்கை அண்ணாவினதும் சூப்பர்.

வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

வேர்கள் எப்போதுமே வெளியில் வராத  வரலாறுகளே. நன்றிகள் லியோ அண்ணா பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.