Jump to content

என் காதலி(களம் ) ..!


Recommended Posts

நான் 10ஆம் வகுப்பை நிறைவு செய்யமுன் என் முன்னால் அடிக்கடி வந்து போவாள். எப்படியாவது அவளை தொட்டு பார்க்கும் ஆசை எனக்கு ஆனால் வயது இல்லை என என்னை போக தடுப்பார் உறவுகள். ஆனாலும் என்னுள் ஆசை தீயாய் எரிய முயற்சி செய்தவண்ணம் அவளின் காதலர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பேன். அவர்கள் அவளை பலமுறை கொண்டு வந்து காட்டி போவார்கள்.

ஆசை அதிகமாக நானும் சண்டை பிடித்து அவர்களுடன் போய் விட்டேன். விளைவு மூன்று மாதங்களில் எனக்கு சொந்தம் ஆனாள். அவளை கழட்டி பிரித்து சுத்தம் பண்ணி அணைத்து தூங்கும் சுகம் எவளவு இனிமை. அவளில் வரும் வாசனை ஒரு தனி சுகம். உறக்கத்திலும் பாதுகாப்பை உறுதிப்படித்தி வெட்கம் அற்று உறங்குவாள். கைகளில் ஏந்தி அவளை காடுமலை வயல்கள் எல்லாம் நடப்பேன்.என்னுடன் சுற்றுவது எண்டால் அவளுக்கு கொள்ளை பிரியம். போகும் வழிகளில் மான் மரை அணில் எலி எதுகும் மிச்சம் இல்லை பதம் பார்ப்பாள் அவளை வருடி நடக்கும் பொழுது என் சந்தோஷம் சொல்லி மாளாது.

பெரும் தடுப்பு ஒன்று போட்டு அவளை வைத்து கடும் சண்டை. அவள் என் கைகளில். நான் பக்கத்தில் நின்றால் கடும் வாய்க்காரி. 31பல்லையும் கழட்டி வைப்பாள். மறுபடியும் நான் பூட்டி விட்டால் அதுகும் மீதம் இருக்காது காறி உமிழ்ந்து துப்பி விடுவாள். சண்டையில் இருக்கும் வேகமும் என்னை காப்பற்ற இருக்கும் விவேகமும் அடா போடவைக்கும். ஒரு முறையும் நம்பிக்கை துரோகம் எனக்கு செய்யாதவள். நோய் நொடி என களைப்பு அடையாதவள்.

அவள் எனக்கு கிடைத்தது வரமே என நான் இருக்க ஒருமுறை கடும் சண்டை. அவளின் வாயில் வீக்கம். கூடுதலா பேசி இருப்பாள் போல. வைத்தியரை நாடும்படி எனக்கு கட்டளை வருகிறது. அழைத்து போனேன் சுற்றி பிரட்டி முன்னாள் பின்னால் பார்த்து விட்டு சொன்னார் இனி நீ அவளுடன் வாழமுடியாது உனக்கு இன்னும் ஒரு புதிய காதலி ஏற்பாடு செய்கிறம் போட்டு இரண்டு நாள் கழிய வா என. பெரும் சோகம். என் சந்தோஷம்கள் துக்கம்கள் எல்லாவற்றிலும் கூட இருத்தவள் அவளை எப்படி பிரிவேன் என. ஆனாலும் எதோ ஒரு காதலி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதால் 2 நாள் கழிந்து சென்றேன். ஆச்சரியம் எனக்கே.

ரஷ்சியன் 47வயது காதலியை வாங்கி வைத்து விட்டு ஒரு புதிய அமெரிக்க எம்16 காதலியை காட்டி இனி இவளுடன் வாழ் என சொன்ன போது நான் பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை இனி எந்த சூழலிலும் உன்னை விட்டு நான் பிரியேன் என மனதில் சத்தியம் செய்து அவளை கட்டி அணைத்தேன். கந்தக வாசம் என் நாசியில் பட்டு சிலிர்க்க என் துப்பாக்கி என்னை இறுக்க பிடி என்றது ..!!

 

Link to comment
Share on other sites

வாசிக்க தொடங்கும் போதே உண்மையான காதலி  இல்லை என ஊகித்து இருந்தாலும் ஒரு செல்லப்பிராணி என நினைத்தேன்.துப்பாக்கி என இறுதி வரை நினைக்கவில்லை. சுய ஆக்கத்துக்கு நன்றி, அஞ்சரன்.

Link to comment
Share on other sites

முதல் சில வரிகளுக்குப்பின் சந்தேகத்தில் கடைசி வரிகளைப் போய் படித்துவிட்டேன்.. ஆக்கத்திற்கு நன்றி.. :D

Link to comment
Share on other sites

முதல் சில வரிகளுக்குப்பின் சந்தேகத்தில் கடைசி வரிகளைப் போய் படித்துவிட்டேன்.. 

 

 

அட என்னை மாதிரி ஆட்களும் இருக்கினம் தான் :lol:

Link to comment
Share on other sites

சுய ஆக்கம் நல்லாகத்தான் உள்ளது .வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நாய்க்குட்டியாக்கும் என நினைத்து இறுதிவரை படித்தேன்!

 

அந்த 47 மட்டும் இல்லாவிட்டால், என் தலையில் இருக்கும் கொஞ்ச தலை மயிரையும் இழந்திருப்பேன்! :o

 

நல்ல ஆக்கம், அஞ்சரன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கணனி என்று நினைத்து, தொடர்ந்து வாசிக்கும் போது... இறுதியில் தான் தெரிந்தது துப்பாக்கி என்று.
நன்றாக உள்ளது அஞ்சரன். :)

Link to comment
Share on other sites

உங்கள் ஆதரவுக்கு நன்றி அனைவருக்கும் .........என்னை வைச்சு காமடி கீமடி பண்ணவில்லைதானே :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி என்ன இப்ப எல்லாரும் முன்னாள் போராளியளா இருக்கிறிங்கள் போல.. :rolleyes:

 

முதல் பந்தி முடிந்ததுமே புரிந்து விட்டது, நாய்க்குட்டியை எல்லம் கழட்டி துடைக்கவா முடியும்? பாதிப்பேர் படிக்காமலே கொமன்ட் போடுறாங்கள் போல பாவி பயலுகள்.. :lol::icon_mrgreen::icon_idea:

 

 

 

Link to comment
Share on other sites

அவ் ஜீவா அண்ணா கதை கற்பனை கலந்து எழுதபட்டது . :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராத்திரியே எட்டிப் பார்த்துட்டு தலைப்பு காதலி()...என்று இருந்ததால் தொடர்ந்து படிக்காமல் போய் விட்டேன்....இப்போ தான் விமர்சகர்கள் மூலமாக உங்கள் காதலி துப்பாக்கி என அறிந்து கொண்டேன்.தொடர்ந்து எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

அஞ்சரனுக்கு  நல்ல எழுத்து திறமை  உள்ளது . இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் . உங்களுக்கு எனது மனங் கனிந்த பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை ,

நல்லவேளை அதைவிட்டு நாலு பேரை கடிக்கவிடாட்டி நித்திரை வராது என்று எழுதாமல் விட்டீர்கள்

Link to comment
Share on other sites

அது சரி...... இப்ப உங்கட கடைசிக் காதலி எங்க எண்டு சொல்லவே இல்லை. :rolleyes::)

Link to comment
Share on other sites

இப்ப உங்கடை காதலியை யார் வைத்திருகிறார் :) .உங்கள் சுய ஆக்கத்தை வரவேகிறேன்

Link to comment
Share on other sites

நன்றி அனைவருக்கும் :)

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் . உங்களுக்கு எனது மனங் கனிந்த பாராட்டுகள். :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..கடைசில ஏகே போட்டிசெவினால் போட்டுத்தள்ளீட்டியல் நான் வேறமாதிரி எதிரபாத்து வந்த கற்பனையை :D .. அருமை.. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா..

Link to comment
Share on other sites

நீங்க அலவாங்கு தாசின்ர கதை என்டு நினைச்சிட்டியள்

நல்ல கற்பனை ,

நல்லவேளை அதைவிட்டு நாலு பேரை கடிக்கவிடாட்டி நித்திரை வராது என்று எழுதாமல் விட்டீர்கள்

Link to comment
Share on other sites

  • 6 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.