Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10457836_762124393825696_129571377179002

 

வல்லரசுக் கனவுடன்.. நாடு..! ஒரு வேளை நல்ல உணவுக்கு ஏக்கத்தோடு வீடு..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10672381_10152343497642944_6488086166021

 

கட்டுக்கட்டா புத்தகம் பரப்பி.. படிச்ச காலம் முடிஞ்சு போச்சு. இப்ப ஒரு கணனி.. இல்ல.. ஒரு ஐபாட்.. இரண்டு அப்பியாசப் புத்தகம்.. ஒரு பென்சில் கேஸ்.. இருந்தா புள்ளைங்க படிப்பு.. ஜோரா போய்க்கிட்டு இருக்கும்..! :) :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10614392_512073845590407_790612933199527

 

 

இனம் எதுவானால் என்ன ஆறுதலுக்கு ஒரு தோள் தேவையாத்தான் இருக்கு...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

AADI18081_zps306b32ca.jpg

 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும். 

 

 

 
Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pbox_zps9724b131.jpg

 

 

ஞாபகம் இருக்கோ?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கூடி நின்று மேய்ஞ்சு ............... வாத்து விபரீதம் பண்ணி இருக்குமோ? 

Link to comment
Share on other sites

இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் !

·

daughter3.jpg?w=300&h=200ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் அசந்து விடுவீர்கள். ஆனால் அந்த புகைப்படங்களின் அழகை விட அதன் பின்னே இருக்கும் தாய்மையும் நம்பிக்கையும் தான் உங்கள் உள்ளத்தை தொடும்; நெகிழ வைக்கும். கூடவே நம்பிக்கை என்றால் என்ன என்றும் புரிய வைக்கும்.

அந்த புகைப்படங்களின் மையமாக இருக்கும் குட்டி தேவைதையின் பெயர் வொய்லெட். 5 வயதாகும் வொய்லெட்டின் தாயான ஹோலி ஸ்பிரிங் ஒரு புகைப்பட கலைஞர். காமிராவை தொழிலாக கொண்ட ஹோலி ஸ்பிரிங் தனது செல்ல மகளை விதவிதமாக புகைப்படம் எடுத்து பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

ஒரு தாய் தனது மகளை விதவிதமாக படம் எடுக்க ஆசைப்படுவதோ, அதை ஆர்வத்துடன் பகிர்ந்து கொளவ்தோ பெரிய விஷயம் இல்லை. அதிலும் அந்த அம்மா புகைப்பட கலைஞராக இருக்கும் போது இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த புகைப்படங்கள் வழக்கமான புகைப்பங்கள் அல்ல. இவை ஒரு தாயின் பாசப்பதிவுகள். அதன் பதிவுகளின் மையமாக இருக்கும் குட்டி தேவதை ஒரு அசாதரனமான சிறுமி. அதனால் தான் இந்த புகைப்படங்கள் அழகை மீறிய ஆன்மாவோடு கவர்கின்றன.

ஐந்து வயதாகும் அந்த குட்டி தேவதை வொய்லெட் ஸ்பிரிங் பிறவி குறைப்பாடு காரணமாக முழுவதும் வளர்ச்சி அடையாத ஒரு கையுடன் பிறந்தவர். அதோடு ஒரு வகையான வயிறு மற்றும் சிறுகுடல் தொடர்பான நோயாலும் பாதிக்கப்பட்டவர்.

இந்த நோயால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.அறுவை சிகிச்சையின் போது உயிர் பிழைத்து வந்தாள் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து சிறுமியின் வாழ்க்கை சோதனையானதாகவே இருந்து வருகிறது. மகள் அதிக காலம் வாழாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதை விட தாயுள்ளத்தை உலுக்ககூடியது எது?

daughter5.jpg?w=300&h=200

இந்த உணர்வுக்கு ஆளான ஹோலி ஸ்பிரிங், ஒரு வேளை மகள் தன்னை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டால் அவளது அரிய நினைவுகளுக்கான சாட்சி தன்னிடம் இல்லாமலே போய்விடுமே என கலங்கியிருக்கிறார். அப்போது தான் அவரது கணவர் , காமிரா ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். அதிலிருந்து அவர் தனது மகளின் வளர்ச்சியை புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தான் வியக்க வைக்கும் தன்மையோடு இருக்கின்றன.

இந்த படங்களில் எல்லாம் அவரது மகள் குட்டி தேவதை போல ஒரு கற்பனை உலகின் நடுவே காட்சி அளிக்கிறார். அந்த கற்பனை உலகம் அந்த தேவதையின் உள்ளத்தில் இருந்து உருவானவை. அம்மா அதற்கு காட்சி வடிவம் கொடுத்திருக்கிறார்.

ஸ்பிரிங் பொதுவாக மகளை மாடலாக்கி படம் எடுத்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படமும் விஷேசமானவை. முதலில் மகளை விதவிதமான போஸ்களில் தயார் செய்கிறார். சிறுமிக்கு ஆடை அணிவதில் அதிக ஆனந்தம் என்பதால் மகிழ்ச்சியோடு பிடித்தமான உடை அணிந்து தயாராகி விடுகிறாள். அதன் பின் தனது மனதில் தோன்றும் கற்பனைகளை விவரிக்கிறாள். அந்த கற்பனைகளை அம்மா தனியே புகைப்படமாக எடுத்திக்கொள்கிறார். பின்னர் அந்த புகைப்படங்கள் நடுவே மகளை இடம்பெற வைத்து புதிய புகைப்படத்தை உருவாக்குகிறார்.

இந்த படங்களில் தான் சிறுமி வொய்லெட் குட்டி தேவதையாக, சிண்ட்ரல்லா போல ஒரு படகின் மீது அமர்ந்திருக்கிறாள். அப்பாவியான ஒட்டகச்சிவிங்கியை பார்த்து வியக்கிறாள். தேவதை போல நடுக்காட்டில் கைநீட்டி காட்சி அளிக்கிறாள். ஒரு பட்டாம்பூச்சி போல நிலவை எட்டிப்பிடிக்கிறாள். இப்படி இன்னும் பல வடிவங்களில் அந்த தேவதை வசிகறிக்கிறாள்.

இந்த படங்கள் ஒவ்வொன்றிலும் விஷேசமான செய்தி இருக்கிறது. தன் மீது நம்பிக்கை கொண்டால் , வாழ்க்கையில் சாதிப்பதற்கு அளவும் இல்லை, எந்த தடையும் இல்லை’ என்னும் நம்பிக்கையை இந்த புகைப்ப்டங்கள் மூலம் அந்த தாய் தனது மகளின் மனதில் ஏற்படுத்த முயன்று வருகிறார்.

ஒரு வித்திதில் இந்த நம்பிக்கையை கொடுத்ததே அவரது மகள் தான். 2 வயதாக இருக்கும் போது, மகள் அவரிடம் தனது கை எப்போது வளரும் என கேட்டிருக்கிறார். அந்த கை வளராது எனும் உண்மையை சொல்ல முடியாமல் அவர் தனக்குள் அழுது தவித்திருக்கிறார். ஆனால் மகள் அதன்பின் அந்த நிலையை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். பிஞ்சு உள்ளம் தன்னைதானே மாற்றிக்கொண்ட விதத்தை பார்த்த அம்மா தானும் மன உறுதி பெற்றிருக்கிறார்.

என மகள் என படங்களுக்கு மாடல் மட்டும் அல்ல, அவள் எனக்கான ரோல்மாடலும் தான், அவளிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன் ‘ என பேட்டி ஒன்றில் ஹோலி ஸ்பிரிங் கூறியிருக்கிறார்.

மகளுடன் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு பொக்கிஷம் ,ஒவ்வொன்றும் கொண்டாட்டத்தின் மைல்கல் என்றும் அவர் சொல்கிறார்.

daughter6.jpg?w=238&h=300

இந்த புகைப்படங்கள் வளரந்த பின் மகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். ’ இந்த படங்கள் அவளது உடல் குறைபாட்டை மீறி, அவளது வயதை மீறி எல்லையில்லா எதிர்காலத்தை காட்டும் வகையில் இருப்பதாக’ அவர் கூறுகிறார்.

இந்த புகைப்படங்களை தனது இணையதளம் மூலமு பேஸ்புக் பக்க மூலமும் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பேஸ்புக்கில் இந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதன் அழகு மற்றும் அதன் பின்னே உள்ள நெகிழ்ச்சியான கதையை அறிந்து உருகிப்பொகின்றனர. பல்ரும் உங்கள் மகள் தான் அழகு என கருத்து தெரிவித்துள்ளனர். ‘

இன்னும் சிலர் இதே போல உடல்ரீதியான குறைபாடு கொண்ட தங்கள் குழந்தைகள் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு , இந்த குறைபாட்டை புகைப்படங்கள் வழியே வெல்லும் முயற்சியை மனதார பாராட்டியுள்ளனர்.

97 வய்தான பெண்மணி ஒருவர், நானும் ஒற்றைக்கையுடன் பிறந்தேன்.ஆனால் என்னை ஊக்குவிக்க யாரும் இல்லை.நானாக தடைகளை வென்று வளர்ந்தேன் என குறிப்பிட்டு இந்த பஞ்சுக்கு நல்ல வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மகளின் குறை தெரியாமல் இருக்க அவளுக்கு புகைப்படம் மூலம் புது உலகை உருவாக்கத்தரும் இந்த தாயின் முயற்சியை இணையத்தில் படித்து லட்சக்கணக்கானோர் இந்த குட்டி தேவைதையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

’எப்போதும் உங்கள் குழந்தைகளின் சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் நேரத்தை செலவிடுங்கள் , அவர்களுக்கு சுவாரஸ்யத்தை அளியுங்கள், அவர்கள் உங்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளிப்பார்கள்’ என ஹோலி ஸ்பிரிங் தனது பேஸ்புக் பக்கத்தில் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். எத்தனை அழகான கோரிக்க்கை அது!.

ஹோலி ஸ்பிரிங்கின் பேஸ்புக் பக்கம்:https://www.facebook.com/HSpringPhotography?ref=stream

ஹோலி ஸ்பிரிங்கின் இணையதளம்: http://www.hollyspringphotography.com/

——-

நன்றி-விகடன்.காம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1002622_10151929306006807_565245333_n.jp


10389359_1437159036536428_73904169940071

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1908433_387957448026183_8726457020636187

 

10696455_387957481359513_344692807429364

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1959319_758223574215838_6507356117108483

 

எதிர்காலம் குறித்த கவலை இருந்தாலும்.. நித்தாவை எவனால கட்டுப்படுத்த முடியும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1959779_581530718639059_1021394756512179

 

 

மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்....
மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்....
இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது...
சேலை கட்டிய மரங்கள் மட்டுமே. :icon_idea:
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10302174_396274053861189_510974648863338

 

10711117_396273993861195_378260496006817

 

சூழலுக்கு கேடில்லாத.. உடலுக்கும் பயிற்சி அளிக்கும் நல்ல பயணம்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.