Jump to content

அவனுக்குள் ..!!


Recommended Posts

அவனுக்கு வயது ஒரு பூக்கும் காலத்துடன் சேர்த்து இருந்தது இளமை வசீகரமும் அவனை நன்றாக வளப்படுத்தி இருக்க தன்னை இன்னும் மெருகேற்ற அடிக்கடி ஜிம்மிலும் போய் இருக்க தவறுவது இல்லை.

என்ன ஆளும் வடிவு கெட்டிக்காரனும் வேற. முதல் பார்க்கும் எந்தப்பெண்ணும் ஒருமுறை இருமுறை திரும்பி பார்க்கும் அழகன். பழைய இதிகாச கதாநாயகன் போல வர்ணிக்கும் அளவு அழகு இருத்தும் என்ன பண்ணுறது.

 

பிறக்கும் போது அவனுடன் கூடி பிறந்தது வெட்கம். எவரையும் திரும்பி பார்க்க அவன் கண்கள் தயங்கும். அவனுடன் போவது அவனை பார்க்கும் பெண் நம்மளையும் பார்ப்பாள் என்கிற நட்பாசை. சரி விசயத்துக்கு வருவம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சக்கரை என்பதைபோல நம்ம ஏரியாக்கு நாம்தான் கீரோ. லுமாலா சைக்கிள மடக்கி வெட்டுற வெட்டில நாலு பெட்டையள் சுழண்டு விழும் (அப்படி நம்ம நினைப்பு ).

கருவாச்சிக்கும் கருத்தம்மா முனியம்மா பெண்ணுக்கும் நம்மமேல கண்ணு. நம்மட ஒரு லுக்குக்கு ஏங்கி திரியும் அதுகள்.

 

இது இப்படி இருக்க ரோட்டில நாம போனால் நம்ம பசுபதி ஐயா சொல்லுவாரு பாருடா மன்னர் காளைமாதிரி எப்படி தினவெடுத்து திரியுது எண்டு. குளிக்கிற்மோ இல்லையோ சேட்டு ஐயின்பண்ணிதான் போடுவம். கொலர் கலர் மாறி போனால் லேஞ்சி வைப்பம். பல ஐடியா இருக்கு கைவசம்.

 

சரிவிடுங்க மேட்டருக்கு வருவம். இப்படி போயிட்டு இருந்த வாழ்க்கையில இடையில் வந்தவன்தான் நான் முதலில் சொன்ன அவிச்ச றால் பையன். திடீர் என ஒருநாள் நம்ம ஏரியாக்கு வந்து நிண்டான். யாரு இவன் நம்மளயே குறு குறு எண்டு பார்க்குற பிள்ளைகள் இம்புட்டு அழகான பையன விடுவாளுகளா கோயிலுக்கு நேந்து விட்ட கோழி சேவல் கணக்கா வந்து நிண்டா?

 

நல்லகாலம் வந்தவன் முதல் நட்பை என்னுடன் வைத்தான். அதால நமக்கு பிழைப்பு ஓகே. அவனுக்கு நம்ம ஏரியா பற்றி ஒருநாள் பூரா குளக்கட்டில் இருத்தி வகுப்பெடுத்து நா வறண்டு போனது வேறகதை.

கோயிலுக்கு கூட்டிப்போனால் சாமிய மட்டும் பார்ப்பான். பக்கத்தில் நிக்கும் மாமியை பாரான். எனக்கு ஒரே டவுட்டு இவன் நல்லவனா கெட்டவனா எண்டு. அநியாயத்துக்கு நல்லவனா இருக்குறான் எண்டு அவன் கதை கேட்க முயற்ச்சி செய்தேன்.

 

தன் குடும்ப நிலைமையும் தான் வளர்ந்த கதையும் சொன்னான். இப்படி ஒரு உலகம் மறைவில் இன்னும் இருக்குது என்பதுதான் வேதனை. அவனை மிக கண்டிப்பாக வளர்த்து இருக்குறார் தகப்பனார். தன் ஜாதி பற்று பிறரை மதிக்காத நிலை தங்கள் குடும்பம் தவிர மற்றவர்களுடன் நிமிர்ந்து பேச அனுமதிக்காத தன்மை. வளர்ந்து ஆளாகி பெரியவன் ஆன பின் அவனின் தந்தையின் மரணம் இடம்பெயர்வு இவை இரண்டுமே அவனை ஒரு சமூகத்துக்கு தேவையான மனிதன் ஆக்கி இருக்கு.

 

வெளிதோற்றம் வேறு ஒருவரின் மனநிலையின் பிரதிபலிப்பு வேறு என்பதை அவனுடன் பழகிய நாட்கள் எனக்கு கற்று கொடுத்தது. எல்லோருடைய கடந்தகாலம் ஒரு இருண்ட அல்லது சொல்லமுடியாத பக்கத்தை கொண்டே இருக்கு என்பதுதான் ஆச்சரியம் ஆகவே உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறிய சுகந்திரம் கொடுத்து வளருங்கள் பின்னாளில் கஷ்டம் தெரியாமல் வாழ  என்னுடன் இருந்த நட்பு வைத்த காலத்தில் மிக சந்தோஷமா இருத்தான் இப்ப எப்படி இருகுறனோ அவனுக்கே வெளிச்சம் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இது இப்படி இருக்க ரோட்டில நாம போனால் நம்ம பசுபதி ஐயா சொல்லுவாரு பாருடா மன்னர் காளைமாதிரி எப்படி தினவெடுத்து திரியுது எண்டு. குளிக்கிற்மோ இல்லையோ சேட்டு ஐயின்பண்ணிதான் போடுவம். கொலர் கலர் மாறி போனால் லேஞ்சி வைப்பம். பல ஐடியா இருக்கு கைவசம்.

 

 

 

ம்ம்... இதுகள் பட்டிக்கு வராத மாடுகள் போல கிடக்கு.. :D

Link to comment
Share on other sites

கருவாச்சிக்கும் கருத்தம்மா முனியம்மா பெண்ணுக்கும் நம்மமேல கண்ணு. நம்மட ஒரு லுக்குக்கு ஏங்கி திரியும் அதுகள்.////

 

நினைப்புத்தானே பிழைப்பை கெடுக்கிறது  :lol:  :lol: .  சிறிது எழுத்துப்பிழைகள் இருகின்றன கவனத்தில் கொள்ளுங்கள் அஞ்சரன் . உங்கள் அனுபவக் கதைக்கு எனது மனக் கனிந்த பாராட்டுக்கள் தொடருங்கள் :) .

Link to comment
Share on other sites

கருவாச்சிக்கும் கருத்தம்மா முனியம்மா பெண்ணுக்கும் நம்மமேல கண்ணு. நம்மட ஒரு லுக்குக்கு ஏங்கி திரியும் அதுகள்.////

 

நினைப்புத்தானே பிழைப்பை கெடுக்கிறது  :lol:  :lol: .  சிறிது எழுத்துப்பிழைகள் இருகின்றன கவனத்தில் கொள்ளுங்கள் அஞ்சரன் . உங்கள் அனுபவக் கதைக்கு எனது மனக் கனிந்த பாராட்டுக்கள் தொடருங்கள் :) .

 

நன்றி கோமகன் எழுத்துப்பிழை கவனத்தில் எடுக்குறேன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.