Jump to content

மாவிலாறு அணைக்கட்டை கைப்பற்றும் அரை மணிநேர வலிந்த தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதற்கு, இன்று சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த படை நகர்வு, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6:15 மணிக்கு, ஆட்லறி எறிகணை சூட்டாதரவுடன், கல்லாறு காட்டுப் புறங்கள் ஊடாக, மாவிலாற்றை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படையினரை எதிர்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், பதிலடி தாக்குதல்களை தொடுத்தனர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மத்தியில் அரை மணி நேரத்திற்கு மேலாக உக்கிர நேரடி மோதல் இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்கா படையினர், ஆயுதங்களைக் கைவிட்டு, காயமடைந்த சகாக்களை தூக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தனர்.

இதனை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை இலக்கு வைத்து, சிறீலங்கா படைகளால் செறிவாக எறிகணைகள் ஏவப்பட்டு வருகின்றன.

மனிதநேய அடிப்படையில், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, மாவிலாறு அணைக்கட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் திறந்து விட்டுள்ள போதும், யுத்த முன்னெடுப்புக்களில் சிறீலங்கா அரசாங்கம் அக்கறை காட்டி வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.

Link to comment
Share on other sites

மனித நேயத்தை..சிங்கள இராணுவத்திடம் காட்டிறது எவ்வளவு ஆபத்தானது என்பதை அனுபவ ரீதியா தெரிந்திருந்தும்...ஏதோ நடக்குது. அப்பாவி மக்கள் தான் அல்லாடுறார்கள்..! :roll: :idea:

Link to comment
Share on other sites

மனித நேயத்தை..சிங்கள இராணுவத்திடம் காட்டிறது எவ்வளவு ஆபத்தானது என்பதை அனுபவ ரீதியா தெரிந்திருந்தும்...ஏதோ நடக்குது. அப்பாவி மக்கள் தான் அல்லாடுறார்கள்..! :roll: :idea:

இந்த சின்னஞ்சிறு வயசிலேயே (வயசை ஒத்த) உமக்கு விளங்குது,.. சம்மந்தப்பட்ட பெரிய தரப்புகளுக்கு இது விளங்குதில்லையே... :lol: :oops: :cry: :cry:

Link to comment
Share on other sites

அதுதான் பொஸ்..கேட்கிறமில்ல..!

சிங்கள மக்களின் கண்ணீருக்கு தண்ணீர் விட்டாச்சு..! எங்களின் மக்களின் கண்ணீருக்கு..பொருளாதாரத் தடை எடுத்தாச்சா...விமானத்தாக்குத

Link to comment
Share on other sites

மக்களுக்குத் தேவை இராஜதந்திரமல்ல..இரவில் ஒரு நிம்மதித்தூக்கம். இராஜதந்திரத்துக்காக..சொந்த மக்களை பலி கொடுப்பதா..???!

இரவில் நிம்மதி துக்கம் வேணுமெண்டால் இப்பிடி இருபத்திஅய்ந்து வருட கடின போராட்டத்தை நடத்தியிருக்க தேவையில்லை அப்பவே சொல்லியருக்கலாம் சிங்களவனிட்டை தாறதை தா எங்களை நிம்மதியா ஒரு ஓரமா படுக்கவிடு எண்டு பேசாமல் படுக்கவிட்டிருப்பான் அதுமட்டுமில்லை அப்பப்ப வந்து அவனும் படுத்திட்டு போவான் எங்களுக்கு பின்னாலை நெந்திருக்கும் ஆனாலும் துடைச்சிட்டு பேசாமல் திரும்பி படுத்திருந்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளே நீர் எனது பசிக்கு இரையாகிவிடாதீர். றோஸ; போட்டு சாப்பிடும் படி செய்து விடாதீர்!

Link to comment
Share on other sites

இரவில் நிம்மதி துக்கம் வேணுமெண்டால் இப்பிடி இருபத்திஅய்ந்து வருட கடின போராட்டத்தை நடத்தியிருக்க தேவையில்லை அப்பவே சொல்லியருக்கலாம் சிங்களவனிட்டை தாறதை தா எங்களை நிம்மதியா ஒரு ஓரமா படுக்கவிடு எண்டு பேசாமல் படுக்கவிட்டிருப்பான் அதுமட்டுமில்லை அப்பப்ப வந்து அவனும் படுத்திட்டு போவான் எங்களுக்கு பின்னாலை நெந்திருக்கும் ஆனாலும் துடைச்சிட்டு பேசாமல் திரும்பி படுத்திருந்திருக்கலாம்

சிறீலங்கா அரசுக்கும் இராஜதந்திரம் இருக்குது. ஆனால் அவர்கள் தங்கள் மக்களை சாகடிக்கிறார்களா..தமிழர்களுக

Link to comment
Share on other sites

குருவிகளே நீர் எனது பசிக்கு இரையாகிவிடாதீர். றோஸ; போட்டு சாப்பிடும் படி செய்து விடாதீர்!

தூது புறாவையே சாப்பிட்ட ஆள் ஆச்சே...! :wink: :P

Link to comment
Share on other sites

குருவி.. கற்பனையிலை கொஞ்ச நிபந்தனையளைப்போடும்.. ஒரு அணைக்கட்டை மூடும்.. ரெண்டு டோறாவும் அடிச்சு ஒரு பெரிய கப்பலும் தாட்டதா நினையும்..ஜெற்றியும் பிடிச்சு வெற்றிகரமா முடிச்சு பின்வாங்கிச்சென்றதா நினையும்.. முடின அணைக்கடடை திறந்துவிட்டதா ஒரு செய்தியை விடுறதா நினையும்.. இழுத்து போர்த்துக்கொண்டு படும்.. எழும்ப கையும் கணக்கும் சரியாகும்.. 25-30 வருஷமா நடக்கிறதை இப்ப நீர் ஒராள் இங்சை எழுதி ஏதாவது மாற்றலாம் எண்டு நினைக்கிறீரே? ஆனா ஓண்டு அப்ப நான் எழுதினதை இப்ப நீர் எழுதிறீர்.. அதுக்கு பாராட்டவேணும்..

:P :lol::lol:

Link to comment
Share on other sites

குருவி.. கற்பனையிலை கொஞ்ச நிபந்தனையளைப்போடும்.. ஒரு அணைக்கட்டை மூடும்.. ரெண்டு டோறாவும் அடிச்சு ஒரு பெரிய கப்பலும் தாட்டதா நினையும்..ஜெற்றியும் பிடிச்சு வெற்றிகரமா முடிச்சு பின்வாங்கிச்சென்றதா நினையும்.. முடின அணைக்கடடை திறந்துவிட்டதா ஒரு செய்தியை விடுறதா நினையும்.. இழுத்து போர்த்துக்கொண்டு படும்.. எழும்ப கையும் கணக்கும் சரியாகும்.. 25-30 வருஷமா நடக்கிறதை இப்ப நீர் ஒராள் இங்சை எழுதி ஏதாவது மாற்றலாம் எண்டு நினைக்கிறீரே? ஆனா ஓண்டு அப்ப நான் எழுதினதை இப்ப நீர் எழுதிறீர்.. அதுக்கு பாராட்டவேணும்..

:P :lol::lol:

அப்ப எல்லாம் பொய் எண்டுறீர்....???? சரி அடிச்சது இறங்கமுன்னம் போய்ப்படும் நல்ல கனவு வரும்....! அடுத்தாக மாங்குளம் பிடிக்க போகவேணும் முல்லைத்தீவை கட்டுப்பாட்டில வச்சிருக்க வேணும் எல்லோ...!

அதோட மப்பிலயும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறீர் நண்றி....! :wink: :P

Link to comment
Share on other sites

திருமலையில் புலிகள் கொடுத்த அழுத்தம்

-ஜெயராஜ்-

மாவிலாற்று அணையைத்திறந்துவிட விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்த போதும் சிறிலங்கா அரசாங்கம் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இராணுவ நடவடிக்கை மூலம் தமது பொறியியலாளர்களைக் கொண்டே மாவிலாற்று அணைத்துருசுகள் திறக்கப்படவேண்டும் என அது கூறுகின்றது. இதற்கான பாரிய இராணுவ நடவடிக்கைக்கும் அது தயாராகியுள்ளதுஃ தாக்குதலைத் தொடங்கியும் இருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு பலருக்கு ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ள போதும் ஏன் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாது இராணுவ நடவடிக்கையில் முனைப்பாகவுள்ளது? ஏன் மோதலையும் இழப்புக்களையும் எதிர்கொள்ளத் தயாராகின்றது? என்பதே அவர்களின் ஆச்சரியத்திற்குக் காரணமாகும்.

அதிலும் குறிப்பாக அரசாங்கத்தின் சில கோரிக்கைகளுடன் விடுதலைப் புலிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திய நோர்வேயின் விசேட தூதுவர் ஹான்சன் பௌயருக்கு இது ஆச்சரியம் அளித்ததில் வியப்பில்லை. ஏனெனில் அவர் நிறைவேற்றக் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தே புலிகளுடன் பேச்சு நடத்தியதினாலேயே அணையைத் திறக்க விடுதலைப் புலிகள் உடன்பட்டார்கள்.

அடுத்ததாக விடுதலைப் புலிகள் மனிதாபிமான அடிப்படையில் அணையைத் திறக்க உடன்பட்டபோதும் அரசாங்கம் ஏன் வலிந்து தாக்குதலை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றது என்பதே அவருக்கு ஏற்பட்ட மற்றுமொரு ஆச்சரியம் அளிக்கும் நடவடிக்கை யாகும். ஆனால் சிறிலங்கா ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகள் எந்தவகையிலும் ஆச்சரியம் அளிக்கத்தக்கதொன்றல்ல. ஏனெனில் சிறிலங்கா ஆட்சியாளர்களின் அடிப்படைக் குணாம்சங்களே இதற்குக் காணரமாகும்.

1. சிறிலங்கா ஆட்சியாளர்கள் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக இராணுவத் தீர்வையே மனதளவில் ஏற்றுக்கொண்டவர்களாகவுள்ளனர

Link to comment
Share on other sites

யுத்தம் மூலம் தீர்வு காணமுடியும் எனச் சிறிலங்கா அரசாங்கம் நம்பும் பட்சத்தில் இராஜதந்திர ரீதியில் தீர்வு காணுமாறு கூறுவது நேரத்தை வீணடிக்கும் அபத்தமான செயல் என்ற நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹெய்மின் கூற்றுக்கள் பட்டறிவின் பிரதிபலிப்பே ஆகும்.

மாவிலாற்று அணை திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை மனிதாபிமான தேவைக்கானது என அரசாங்கத்தால் கூறப்பட்டது. யுத்த நிறுத்த விதிமுறைகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பேச்சுவார்த்தை முயற்சிகள் அனைத்தையும் ஓரந்தள்ளி விட்டு இவ் இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் எதிர்பார்த்த இலக்கை இராணுவத்தால் எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதிக்குள் அடையமுடியவில்லை என்பது மட்டுமல்ல, அரசாங்கம் கூறிக் கொண்டதான மனிதாபிமானப் பிரச்சினைஃ நெருக்கடி என்பனவற்றையும் தாண்டியதாக பெரும் அனர்த்ததிற்கு அரசாங்கத்தின் நடவடிக்கை வழி சமைத்தது. இந்நிலையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சியின் அடிப்படையில் மனிதாபிமான ரீதியில் விடுதலைப் புலிகளால் மாவிலாற்று நீர் திறந்துவிட ஒப்புக்கொள்ளப்பட்டது

.

இதேசமயம் இவ் மாவிலாற்றைத் திறந்து விடுமாறும் தமிழ் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்குக் கால அவகாசம் வழங்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே இவ் அணை திறப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அரசாங்கத்தரப்பு தற்பொழுது மாவிலாற்று அணையை இராணுவ நடவடிக்கை மூலம் திறப்பதற்கு அதாவது மாவிலாற்று விவகாரத்திற்கு இராணுவ ரீதியில் தீர்வு காண்பதற்கே முற்பட்டு நிற்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நிலைப்பாடானது தனியாக மாவிலாற்று விவகாரத்திற்கு மட்டும் பொருத்தப்பாடானதல்ல. இனப்பிரச்சினை தொடர்பான அனைத்து விவகாரத்திற்கும் பொருத்தப்பாடானதே. ஒருபுறத்தில் மனிதாபிமானப் பணி எனக் கூறி அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையானது தமிழர் தொடர்பான எவ்விவகாரத்திற்கும் சிறிலங்கா அரசு இராணுவத் தீர்வை நாடி நிற்பதன் வெளிப்பாடே.

அவ்வாறு இ;ல்லாதுவிடில் விடுதலைப் புலிகள் மாவிலாற்றை மனிதாபிமான அடிப்படையில் திறந்து விடுவதற்கு ஒப்புக்கொண்ட பின்னரும் கூட அதனை நிராகரித்து இராணுவ நடவடிக்கையில் அரசாங்கம் முனைப்புக் காட்டவேண்டிய தேவை ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்க மாட்டாது.

இரண்டாவதாக சிறிலங்கா அரசாங்கம் எந்த மனிதாபிமானப் பிரச்சினை எனக் கூறிக்கொண்டு இராணுவ நடவடிக்கையில் இறங்கியதோ, அதே மனிதாபிமானப் பிரச்சினையைத் தமிழ்மக்கள் விடுத்த போது அதற்கு இராணுவத் தீர்வையே அது பதிலாகக் கூறியுள்ளது. அதாவது தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினை எதையும் அது கருத்திற் கொள்வதாக இல்லை.

அவ்வாறு மனிதாபிமானப் பிரச்சினையை ஏற்றுக் கொள்வதாயின் மாவிலாற்று விவகாரமே ஒரு பிரச்சினையாக எழுந்திருக்க மாட்டாது. அவ்வாறு எழுந்திருப்பினும் தற்பொழுது இலகுவான முறையில் இதற்குத் தீர்வு கண்டிருக்க முடியும் ஆனால் அது சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

அவர்களின் பார்வையில் மனிதாபிமானப் பிரச்சினை என்பது சிங்களவர்களுக்கு மட்டுமானதென்பதாகவே உள்ளது. அதற்கும் அப்பால் இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு அத்தகைய தொன்றும்கிடையாது அவற்றினை நிறைவுசெய்ய வேண்டிய தேவையும் அரசிற்கில்லை என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் மற்றொரு வேடிக்கை என்னவெனில் யாருடைய மனிதாபிமான தேவை எனச்; சிறிலங்கா அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதோ அவர்களின் மனிதாபிமானத் தேவைகளையும் மறந்து யுத்தத்திற்குத் தயாராகி நிற்பதே, இந்த வகையில் பார்க்கையில் அச்சிங்கள விவசாயிகளும் பரிதாபத்திற் குரியவர்களாகவே உள்ளனர்.

சிறிலங்கா அரசு தற்பொழுது எவ்வாறு மாவிலாற்று விவகாரத்தில் சமரச முயற்சிகளில் ஈடுபட்டவர்களை புறந்தள்ளியதோ அதை ஒத்ததாகவே இனப்பிரச்சினை விவகாரத்தில் இருந்தும் இராஜதந்திர முயற்சிகளையும் நோர்வேத் தரப்பையும் புறம் தள்ளும் என்பதை நோர்வேத் தரப்பும், ஏனையவர்களும் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

இது அனுமானமோ எதிர்பார்ப்பின் அடிப்படையிலான எதிர்வு கூறுதலோ அல்ல. கடந்த கால வரலாற்றுப் பாடமாகும். இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவைச் சிக்கவைத்த பின்னர் இவ்வாறே சிறிலங்கா அரசு நடந்து கொண்டது. இதன் காரண மாகவே சிறிலங்காவால் அழைக்கப்பட்ட இந்தியா அவமானகரமாக வெளியேற வேண்டிவந்தது. இதனை நோர்வேத் தரப்பும் விளங்கிக் கொள்வது நல்லது.

நன்றி: ஈழநாதம்

http://www.tamilnaatham.com/articles/2006/.../jeyaraj/09.htm

Link to comment
Share on other sites

இல்லையப்பா.. உங்கடை தேவா வாக்குக்கு மறுப்பு தெரிவிச்சுப்போட்டு இஞ்சை எழுதமுடியுமா.. அதுதான் எல்லாபக்க செய்தியளையும் வாசிச்சு என்னுடைய அனுமானத்தை அனுகூலமா தெரிவிச்சன்.. போத்தல் கிறவுஸ் நெற்றுக்கிள்ளாலை அனுப்பும்.. இரவிரவா உமக்கு பதில் எமுதிறன்..

:P

அப்ப எல்லாம் பொய் எண்டுறீர்....???? சரி அடிச்சது இறங்கமுன்னம் போய்ப்படும் நல்ல கனவு வரும்....! அடுத்தாக மாங்குளம் பிடிக்க போகவேணும் முல்லைத்தீவை கட்டுப்பாட்டில வச்சிருக்க வேணும் எல்லோ...!

அதோட மப்பிலயும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறீர் நண்றி....! :wink: :P

Link to comment
Share on other sites

இல்லையப்பா.. உங்கடை தேவா வாக்குக்கு மறுப்பு தெரிவிச்சுப்போட்டு இஞ்சை எழுதமுடியுமா.. அதுதான் எல்லாபக்க செய்தியளையும் வாசிச்சு என்னுடைய அனுமானத்தை அனுகூலமா தெரிவிச்சன்.. போத்தல் கிறவுஸ் நெற்றுக்கிள்ளாலை அனுப்பும்.. இரவிரவா உமக்கு பதில் எமுதிறன்..

அதுக்கு போதிய விபரம் இல்லாதவையோட் மினக்கெடலாமே....! இல்லை உமக்கும் அவைக்கும் ஒரே அளவுதானே இருக்கு...! :wink:

Link to comment
Share on other sites

http://www.viduthalaipulikal.com/file/docs...6/06/130-06.pdf

ஆனால் சம்பூர் மீதான விமானத் தாக்கு

தலுக்கு இந்த நாட்டம் மட்டுமே காரணமாயி

ருப்பதாகத் தெரியவில்லை. வேட்டையாடும்

மிருகத்திற்கு வேட்டைப் பொருளின் தசை

பற்றிய பிரக்ஞை மட்டுமே இருப்பதைப் போல

உலக இராச தந்திரிகளுக்கும் ஒரு தரைப்

பிரதேசத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப்

புப் பெறுமானமே கருத்திற்குரியது. அந்த

வகையில் தமிழீழத்தின் உற்பத்திப் புலங்கள்

போக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வகை

யில் முக்கியம் பெறுவது மூன்று புள்ளிகள்.

அவை காங்கேசன்துறை, ஆனையிறவு மற்றும்

திருகோணமலை. அவற்றில் சேது சமுத்திர

முக்கியத்துவம் ஏற்பட்டாலே தவிர காங்கேசன்

துறைக்குப் பாதுகாப்புப் பரிமாணம் மட்டுமே

தற்போதைக்கு உண்டு. ஆக, சம காலத்தில்

அதிமுக்கியம் பெறுபவை ஆனை யிறவும்

திருகோணமலையுமே.

இப்போது பன்னாட்டுப் பிரதிநிதிகள்

இலங்கையிலே தமிழருக்குச் சரியாசனம்

தருவதற்கான முக்கிய காரணிகளில் முதலா

வது, சிறிலங்காவின் எந்தவொரு பொருளாதார

இலக்குகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும்

திறனைப் புலிகள் ஒன்றுக்கு மேற்பட்ட தருண

ங்களில் நிரூபித்திருப்பது. இரண்டாவது, துறை

முகம், விமானத்தளம், தொழிற்சாலை, மீன்பிடி

மற்றும் மனிதவளம் போன்ற செல்வங் களைக்

கொண்டுள்ள குடாநாட்டின் வாசலும் பாதுகாப்

பரணுமான ஆனையிறவு புலிகளின் கையில்

இருப்பது. மூன்றாவது, திருமலைத் துறை

முகத்தின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும்

படை வீச்செல்லைக்குள் புலிகள் நிலை

கொண்டிருப்பது. தமிழரின் பேரம் பேசும் பலம்

என்ன என்ற உலக இராசதந்திரக் கேள்விக்கு

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையிலேயே

பதில் அமைய முடியும். அந்த அழுத்தங்களின்

விளைவே தென்னை மரத்தில் தேள்கொட்டி

யதற்குப் பனை மரத்தில் நெறிகட்டியது போல

படைத்தளபதி தாக்கப்பட்டதற்குப் பதிலாக

சம்பூர் சாடப்பட்டது.

சிறிலங்கா அரசின் அண்மைக்காலப்

போராயுதக் கொள்வனவை நோக்கும் போது

அதிலும் ஒரு கோலம் புலப்படுகிறது. அவற்

றில், தரைக்கண்காணிப்பு ராடர்கள், கவசத்

துருப்புக்காவிகள், கண்ணிவெடிப் பாதுகாப்பு

வாகனம், மிலான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை

பொருத்திய ஐPப், பல்குழல் ஏவுகணை செலுத்

திகள் வு-55 டாங்கிகள் என்பனவற்றைத்

தொகுத்துப் பார்த்தால் அவை வேக நகர்வை

யும் திறந்தவெளிச் செயற்பாட்டையும் கோடி

காட்டுகின்றன. இவையனைத்தும் வான் வழி

யாக நகர்த்தப்படக் கூடியவை என்பதும்,

இவையனைத்திற்குமாகத் தரையைத் தொடா

மலேயே வினியோகிக்கும் ஆற்றல் உள்ள

ஹேர்குலிஸ் ஊ-130 விமானத்தையும் சிறி

லங்கா கொள்வனவு செய்கின்றது என்பதும்

கவனிப்பிற்குரியவை. தரையில் வேகம் குறை

வான பெரிய ஆர்டிலறிகள் தவிர்க்கப்பட்டிருப்

பதைப் போலவே கடலிலும் தரையிறங்குகலங்

கள் இம்முறை நாடப்படவில்லை. மாறாக,

கடற்கலங்களில் இருந்து ஏவக்கூடிய மோட்டார்

களும், வேகத்தாக்குதற் கலங்களும், கடற்

கண்ணிகளும் கோரப்பட்டிருக்கின்றன. கடலி

லிருந்து ஆதரவு தரக்கூடியதும் கோடை காலத்

தில் திடமான தரையாக இருப்பதுமான

ஆனையிறவை அண்டிய பெருவெளிகள்

போன்ற இடங்களில் மேற்கூறிய படைக்கலங்

கள் தொகுப்பாகப் பயன்படுத்தபடக் கூடி

யவை.

வரலாற்றின் வழித்தடத்தில் திருமலை

என்பது தமிழர்தாயக உணர்வுமையமாகவே

இருந்து வந்திருக்கிறது. உன்னதமான பல

போராளிகளையும் அவர்களைப் பெற்ற தாய்ச்ச

மூகத்தையும் உடைய திருமலையின் ஆன்மா

உள்@றக் குமுறிக்கொண்டிருக்கிறது. எழுச்

சிப் பேரணிகளிலும், உணர்வுக் கூட்டங்

களிலும், போர்ப் பங்களிப்பிலும், அண்மைத்

தேர்தலிலும் அதன் உணர்வுக் குமுறலின்

ஒலி கேட்கவே செய்தது. அதன் வேதனையை

பேச்சுவார்த்தைகள் தீர்த்து வைக்கவில்லை

என்பது வெளிப்படை.

இந்த நாட்டில் இரத்தம் சிந்துதலைத்

தவிர்க்க விரும்புபவர்கள் சிங்கள மக்களுக்கு

மூன்று உண்மைகளைக் கற்றுத்தர வேண்டும்.

முதலாவது, தமிழர் தரப்பு சிங்களப் படைதரப்

பைத் தாக்குவது ஒரு குற்றமல்ல. அது உயிர்

பிழைப்பதற்கான ஒரு உத்தி. இரண்டாவது

தமிழர் நாட்டைப் புதிதாகப் பிரிக்க நினைக்க

வில்லை. ஐரோப்பியரின் நிருவாக வசதிகரு

திய கோர்ப்பின் விளைவாக நிருவாகத்தால்

மட்டும் ஒன்றிணைந்த இரு தேசங்களில் ஒன்று

தனது விருப்பிற்கமையப் பிரிந்து செல்ல

நினைப்பதே தமிழரின் போராட்டச்செய்தி. அது

சிங்களவர்களுக்கு எதிரான யுத்தமல்ல. மூன்

றாவது, தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு அங்கு

லத்திற்குமாகப் போராடுவது அந்த மண்ணின்

மைந்தர்கள். அதை எதிர்த்து நிற்கும் உங்கள்

வீரர்கள் அந்நியர்கள். இந்த உண்மைகளைத்

துணிந்து சொல்லும் வீரம் சிங்களத் தலைவர்

களில் எவருக்கும் இருந்ததில்லை. மகிந்தரும்

அதற்கு விதிவிலக்கானவர் அல்லர்.

Link to comment
Share on other sites

இன்று இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியறிக்கையில் மாவிலாற்று அணிக்கட்டை அரசபடைகளுடன் திறந்து வைப்பதை வீடியோ படம் மூலம் காட்டப்பட்டது.

அப்ப எது உண்மை? இந்த நாட்டில உண்மையாக என்னதான் நடக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவியாறின் எந்த பக்கத்தை திறந்து வைத்தார்கள்? புலிகள் ஏற்கனவே திறந்து விட்டார்கள் என்று அறிவித்த பின்பு திறந்தால் என்ன திறக்காட்டில் என்ன. பொறுத்திருந்து பாப்பம் இனி மாவிலாறு திறப்பதற்காக படைகள் சண்டை என்று செய்து வருதா என்டு. அப்ப தெரியும் எது உண்மை என்டு.

Link to comment
Share on other sites

இன்று இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியறிக்கையில் மாவிலாற்று அணிக்கட்டை அரசபடைகளுடன் திறந்து வைப்பதை வீடியோ படம் மூலம் காட்டப்பட்டது.

அப்ப எது உண்மை? இந்த நாட்டில உண்மையாக என்னதான் நடக்குது?

ஏன் இலங்கையில் ஒரெ ஒரு அனைக்கட்டு தான் இருக்குதா??? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

seithiththokuppu.gif

09.08.2006 புதன்கிழமை

மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதற்கு, சிறீலங்கா படையினர் இன்று மேற்கொண்ட படை நகர்வு, எமது போராளிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6:15 மணிக்கு, கல்லாறு காட்டினூடாக , மாவிலாற்றை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படையினரை எதிர்கொண்ட எமது போராளிகள், பதிலடி தாக்குதல்களை தொடுத்து விரட்டியடித்துள்ளனர்.

திருகோணமலையில் உள்ள எமது நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை தாக்குலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கைத் தீவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா அனைத்துலக சமூகத்துடன் இணைந்து முயற்சித்து வருகிறது என்று அந்த நாட்டின் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தீவில் தற்போது நீடிக்கும் மோசமான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவி வழங்கத்; தயாராக உள்ளது என்று ராஜாங்க அமைச்சின் பேச்சாளர் சீன் மக்கொமக் தெரிவித்துள்ளார்.

மூதூரில் பிரெஞ்சு தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்து விட்டது என்றும் ராஜாங்க அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

மூதூரில் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரான்ஸ் அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணியாற்றி வந்த தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோழைத்தனமானது என்றும் மிகவும் கொடூரமானது என்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்;; பிலிப் டுஸ்தே 0பிளஸி தெரிவித்துள்ளார்.

மூதூரில் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் படுகொலையை ஒஸ்றேலியாவும் பலமாகக் கண்டித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாமதமின்றி சமாதான முயற்சியை முன்னெடுத்துச் சென்று இனநெருக்கடிக்கு நிலையான தீர்வு காண வேண்டும் என்றும் ஒஸ்றேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டௌனர் தெரிவித்துள்ளார். மூதூரிலும் ஏனைய பகுதிகளிலும் அண்மைக் கால வன்சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒஸ்றேலிய அரசாங்கம் 10 லட்சம் டொலர் உதவியை வழங்கியுள்ளது. மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் இந்த உதவி முதல் கட்டமாகவே வழங்கப்படுகிறது என்று ஒஸ்றேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 0000000 மூதூர் நகரில் பிரெஞ்சு தொண்டர் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விபரங்களை நேரில் திரட்டும் பொருட்டு அந்த அமைப்பின் இயக்குநர் இன்று கொழும்பு செல்கிறார்.

திருகோணமலை மூதூர் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தழிழர் புனர் வாழ்வுக்கழகம் உதவிப் பொருட்களை வழங்கி வருகிறது.

வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில், சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் பயங்கரவாதப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் மருத்துவ அவசர உதவி வாகனத்தில் சென்ற மருத்துவர் உட்பட்ட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, ஆகியவற்றின் அதிகாரிகள், விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானத்துடன், இந்தச் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிடுவதற்காக அந்தப் பகுதிச் சென்றுவிட்டுத் திரும்பியபோது அவர்களை குறிவைத்து மற்றுமோர் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இருந்து அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம், நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா அரசுக்கும் இராஜதந்திரம் இருக்குது. ஆனால் அவர்கள் தங்கள் மக்களை சாகடிக்கிறார்களா..தமிழர்களுக

Link to comment
Share on other sites

வணக்கம்,

ஏற்கனவே யாழ்கள நிர்வாகத்தினரால் அறிவித்தபடி, தமிழ்த் தேசித்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் முன்வைத்தபடியால், கள விதிகளுக்குட்பட்டு மதிவதனனும், குருவிகளும் இத்தலைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்,

ஏற்கனவே யாழ்கள நிர்வாகத்தினரால் அறிவித்தபடி, தமிழ்த் தேசித்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் முன்வைத்தபடியால், கள விதிகளுக்குட்பட்டு மதிவதனனும், குருவிகளும் இத்தலைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நன்றி

இதை என்னால் எற்ரு கொள்ள முடியாது இரண்டு உலகமாக

ஜனநாயகவதிகளை இங்கு இருந்து வெளியேற்றியது மாக சரி :P :twisted: :!:

Link to comment
Share on other sites

வணக்கம்,

ஏற்கனவே யாழ்கள நிர்வாகத்தினரால் அறிவித்தபடி, தமிழ்த் தேசித்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் முன்வைத்தபடியால், கள விதிகளுக்குட்பட்டு மதிவதனனும், குருவிகளும் இத்தலைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நன்றி

நண்றி...! :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.