Jump to content

புரட்சித்தலைவரின் திரைப்படம் மீண்டும் மெகா சாதனை!


Recommended Posts

சென்ற வாரம் சென்னையில் பாரத் மற்றும் ராஜ் திரையரங்குகளில் புரட்சித்தலைவரின் நாடோடி மன்னன் ரீ-ரிலீஸ் ஆகியது.... திவ்யா பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.... 1958ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டும் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வாரம் ஆல்பட், கோபிகிருஷ்ணா மற்றும் கணபதிராம் திரையரங்குகளில் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது.... இன்றே ரிசர்வேஷனும் தொடங்கியிருக்கிறது....

இந்தப் படம் தான் புரட்சித்தலைவரை தமிழ்நாட்டின் மன்னன் ஆக்கியது என்று சொன்னாலும் மிகையில்லை.... இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் புரட்சித்தலைவருக்கு அவ்வளவாக திரையுலக மார்க்கெட் இல்லையாம்.... சிவாஜி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தாராம்.... எனவே தலைவரே இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தாராம்... இந்தப் படம் வெளியாகும் முன்னர் நண்பர்களிடம் தலைவர் சொன்னது, "இந்தப் படம் வெற்றி பெற்றால் நான் மன்னன்.... இல்லையென்றால் நாடோடி"

அபூர்வசகோதரர்கள் எப்படி கமல்ஹாசனுக்கு வெற்றிகரமான செகண்ட் இன்னிங்ஸாக அமைந்ததோ, அதுபோலவே இந்தப் படமும் புரட்சித்தலைவருக்கு மாபெரும் செகண்ட் இன்னிங்ஸாக அமைந்தது.... அவர் முதல்வர் ஆகும் வரையில் திரையுலகில் வெற்றிகரமாக இருக்க அச்சாரம் இட்டது நாடோடி மன்னன் தான்.... படத்திற்கு வசனம் எழுதிய கண்ணதாசனும் வெற்றிக்கு இன்னொரு காரணம்.....

சென்ற வாரம் படம் வெளியாகிறது என்று கேள்விப்பட்டதுமே படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னை தொற்றிக் கொண்டது.... இந்தப் படத்தை 10 முறையாவது பார்த்திருப்பேன்.... (உலகம் சுற்றும் வாலிபன் குறைந்தது 50 முறை) எனக்குத் தெரிந்த நண்பர்களிடமும் படத்தை பார்க்கச் சொல்லி வற்புறுத்தினேன்.... சென்ற சனிக்கிழமை மாலை சைதாப்பேட்டை ராஜ் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றேன்.... ஏராளமான கூட்டம்.... புரட்சித்தலைவர் தோன்றும் காட்சிக்கு வழக்கம் போல கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது....

படத்தை முதல் தடவை பார்த்தவர்களுக்கு ஒரு ஏமாற்றம்.... படம் கருப்பு வெள்ளையில் தொடங்கியதால்.... இந்தப் படம் Partly Colour என்பது முன்னரே பார்த்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.... பல காட்சிகளில் விசில் சத்தம் கூரையைக் கிழித்தது.... குறிப்பாக அந்தக் காலத்திலேயே ஒகேனக்கலில் புரட்சித்தலைவர் கிளைமாக்ஸை எடுத்திருப்பார்.... மிகப் பொருத்தமாக ஒகேனக்கலை மினியேச்சர் செய்தும் சில ரிஸ்க்கான காட்சிகளை எடுத்திருந்தார்..... புரட்சித்தலைவர் இயக்கிய முதல் படம் இது.... அவர் இயக்கிய மூன்று படங்களுமே வசூலில் பெரும் சாதனை செய்தது தான்....

என் வற்புறுத்தலுக்கு இணங்கி வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் என் வடசென்னை நண்பன் சென்ற ஞாயிறு அன்று மாலைக் காட்சிக்கு பாரத் தியேட்டர் சென்று டிக்கெட் கிடைக்காமல் இரவுக்காட்சி பார்த்திருக்கிறான்.... புதுப்படங்களே தியேட்டர்களில் ஈயடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்தப் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனை தான்....

பழைய படங்கள் மீண்டும் மக்களிடம் பேராதரவைப் பெறுவது என்பது ரொம்பவும் சிரமம்.... ஓராண்டுக்கு முன்னால் காமதேனு தியேட்டரில் இரத்தக் கண்ணீர் ரீ-ரிலிஸ் செய்தபோது போயிருந்தேன்.... அதுவும் அரங்கு நிறைந்து வெற்றிகரமாக ஓடியது.... படம் பார்க்க வந்தவர்கள் முற்றிலும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

சில ஆண்டுகளுக்கு முன்னால் சாந்தி தியேட்டரில் சரஸ்வதி சபதம் ரிலீஸ் செய்தார்கள்.... பெற்றோருடன் போயிருந்தேன்.... பெரும் கூட்டம்.... ஆனாலும் பெரும்பாலும் பெருசுகள் கூட்டம் தான்.... திருவிளையாடல் இன்னமும் ஏதாவது தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் வசூலில் சாதனை புரிகிறது என்கிறார்கள்....

அதுபோலவே 10 ஆண்டுகளுக்கு முன்னால் ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் சென்னை தியேட்டர்களில் இணைந்து நூறு நாள் ஓடி சாதனை புரிந்தது....

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முரட்டுக்காளை, பாயும்புலி, ராஜாதிராஜா, அண்ணாமலை, முத்து, படையப்பா படங்களும் எப்போது தியேட்டர்களில் போடப்பட்டாலும் வசூலில் சாதனை புரிவது வழக்கம்.... கமல்ஹாசனின் சகலகலா வல்லவன், நாயகன், அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் படங்களுக்கும் இதே வசூல் திறன் உண்டு....

என் வீட்டுக்கு அருகிலே இருக்கும் நங்கைநல்லூர் வெற்றிவேல் தியேட்டரில் (சில ஆண்டுகளுக்கு முன் ரங்கா) 1982ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சகலகலா வல்லவன் 5 முறை போடப்பட்டிருக்கிறதாம்.... ஒவ்வொரு முறையும் அந்தப் படம் ஒரு மாதம் ஓடி சாதனை புரிகிறதாம்.... தியேட்டர் ஊழியர் ஒருவர் சொன்ன தகவல் இது....

சமீபத்தில் தேர்தல் நேரத்தில் கேப்டனின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் விருத்தாச்சலம் தொகுதியில் இருந்த சில தியேட்டர்களில் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்ததாக பத்திரிகைகளில் படித்தேன்... (டிக்கெட் விலை ரொம்பவும் குறைத்திருந்தார்கள் என்பது இன்னொரு காரணம்)..... இருப்பினும் கேப்டன் பிரபாகரன் இன்னமும் கூட சென்னை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டால் நன்றாகவே ஓடும்.... நடிகர்களிலேயே 100வது படத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரே நடிகர் கேப்டன் தான்.... இவரது 100வது படம் மட்டும் தான் வெள்ளிவிழா கொண்டாடி 250 நாள் ஓடியது....

நிறைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடினாலும் நாடோடி மன்னனின் தற்போதைய வெற்றி தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.... கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.... தலைவர் மறைந்து 20 ஆண்டுகள் ஆகியும் கூட இந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால்.... தலைவரின் "மாஸ்" உலகம் அழியும் வரைக்கும் இருக்கும் என்பதற்கு தக்கச் சான்று அல்லவா?

நட்புக்கு சிலை எடுத்த டாக்டர் கலைஞர்... புரட்சித்தலைவரின் நாற்பதாண்டு கால நண்பர்.... புரட்சித் தலைவருக்கும் கடற்கரைச் சாலையில் ஒரு சிலை எடுக்க வேண்டும்... இன்னும் 10 ஆண்டுகளில் வரப்போகும் புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பிக்க வேண்டும்.... இதுவே புரட்சித் தலைவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கோரிக்கை.....

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

நானும் 92ல் ரத்தக்கண்ணீர் அடையார் கணபதிராமில் பார்த்தேன். திரையரங்கு நிறைந்த கூட்டம். 91ல் வெளியான கப்டன் பிரபாகரன் படத்தினை 92ல் கணபதிராமில் திரையரங்கு நிறைந்த கூட்டத்தோடு பார்த்தேன். 50,60ம் ஆண்டில் வெளிவந்த பாதாள பைரவி, கர்ணன், மாஜாபஜார் மீண்டும் யாழ்ப்பாணத்தில் 80 களில் திரையிட்டு அதிக மக்கள் சென்று பார்த்தார்கள். தேவதாஸ் திரைப்படமும் 80 களில் யாழ்ப்பாணத்தில் மீண்டும் வெளியிட்டு அதிக மக்கள் சென்று பார்த்தார்கள்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

±õ.ƒ¢.¬Ã¢ý À¼í¸Ç¢ø «ó¿¡Ç¢ø ±Ø¾ôÀð¼ ÀÄ ÒÃðº¢ôÀ¡¼ø¸û «Åáø ¾ÉÐ «Ãº¢Âø ¦ÅüȢ측¸

ÀÂý ÀÎò¾ôÀð¼§À¡¾¢Öõ,

±É즸ýɧš «¨Å ¡×õ þ측ÄòÐ ®Æò¾Á¢ÆÕ측¸ ±Ø¾ôÀð¼¨Å §À¡ý§È ¦¾ýÀθ¢ÈÐ.

¯¾¡Ã½Á¡¸ ÀÄ À¡¼ø¸¨Ç ¦º¡øÄÄ¡õ

¾¡Â¸ò¾¢ý ;ó¾¢Ã§Á ±í¸û ¦¸¡û¨¸

¾ýÁ¡Éõ ´ý§È¾¡ý ±í¸û ¦ºøÅõ

´üÚ¨Á¡ö À¨¸Å÷¸¨Ç µ¼ ¨Åô§À¡õ

¯¨ÆôÀ¡§Ä ¿õ¿¡ð¨¼ ¯Â÷ò¾¢ ¨Åô§À¡õ

(À¼õ-ÁШè Á£ð¼ Íó¾ÃÀ¡ñÊÂý.)

§¾¡ð¼í¸¡ì¸ §À¡ð¼ §ÅÄ¢

À¢¨Ã ¾¢ýÀ§¾¡

«¨¾ §¸ûÅ¢ §¸ð¸ ¬Ç¢øÄ¡Áø

À¡÷òÐ ¿¢üÀ§¾¡

¿¡ý ´Õ¨¸ À¡÷츢§Èý

§¿Ãõ ÅÕõ §¸ð¸¢§Èý

â¨ÉÂøÄ ÒÄ¢¾¡ý ±ýÚ

§À¡¸ §À¡¸ ¸¡ðθ¢§Èý

§À¡¸ §À¡¸ ¸¡ðθ¢§Èý

(À¼õ-â섡측Ãý)

¿ÁÐ ¦ÅüÈ¢¨Â ¿¡¨Ç

ºÃ¢ò¾¢Ãõ ¦º¡øÖõ

þôÀ¨¼ §¾¡ü¸¢ý

±ôÀ¨¼ ¦ÅøÖõ

¿£¾¢ìÌ þÐ¦Å¡Õ §À¡Ã¡ð¼õ

þ¨¾ ¿¢îºÂõ ¯Ä¸õ À¡Ã¡ðÎõ

(À¼õ-¯Ä¸õ ÍüÚõ Å¡Ä¢Àý)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

என்னைக் கவர்ந்த வரிகள்:

மண்குடிசை வாசலென்றால்

தென்றல் வர வெறுத்திடுமா

மாலை நிலா ஏழையென்றால்

வெளிச்சந் தர மறுத்திடுமா

எனக்காக ஒன்று உனக்காக ஒன்று

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லையென்போர் இருக்கையிலே

இருப்பவரும் இல்லையென்பார்

மடிநிறையப் பொருளிருக்கும்

மனம் நிறைய இருளிருக்கும்

எனக்காக ஒன்று உனக்காக ஒன்று

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

மேலும்:

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுண்ணு

விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க

உன் வீரத்தை முளையினிலேயே கிள்ளிவைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் தேவையற்றை வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே நீ

வீட்டுக்குள்ளே அழுதுகிடந்து விம்பிவிடாதே

நீ விம்பிவிடாதே.

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகழ்ச்சி

காலம் கூறும் பாடம் கேழு நாளும் வரும் பயிற்சி

உன் நரம்போடுதான் பின்னிவளரணும் தன்மன உணர்ச்சி

Link to comment
Share on other sites

நான் அண்மையில் கேட்ட பாடல் ஒன்றிலிருந்து சில அருமையான வரிகள்:

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்

சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்துவிட்டு

அதிஸ்டமில்லையென்று அலட்டிக்கொண்டார்

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்

இங்கு குரட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே

நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே.

ஒரு படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்

ஒரு கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான்

கொண்ட கடமையில் தூங்கியவன் கொள்கையிழந்தான்

சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்

பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி தூங்காதே

நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.