Jump to content

யாழ்க் களமும் ஒட்டுக் குழு அரசியற் பிரசாரகர்களும்


Recommended Posts

வணக்கம் கள உறவுகளுக்கு,

களத்திலே எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ,யாழ்க்களத்தைப் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் இந்த ஒட்டுக் குழு அரசியல் பற்றியும் சிறிது பார்க்கலாம்.

முதலில இந்த ஒட்டுக் குழுக்கள் எண்டால் என்ன?இவற்றை ஏன் இப்படி அழைக்கிறோம்?இது பற்றி விலாவாரியான கட்டுரைகளை நான் அரசியற் களத்தில் விடுதலைப்புலிகள் பத்திரிகையில் இருந்து இணைத்துள்ளேன், நேரம் உள்ளவர்கள் எமது தேசிய விடுதலை அரசியலைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் சென்று படியுங்கள். நீங்கள் அரசியற் தெளிவு பெற வேண்டும் என்றால் இவற்றை அர்த்தம் விளங்கிப் படிக்க வேண்டும்.ஒரு முறை விளங்கா விட்டால் மீண்டும் ஆறுதலாப் படியுங்கள்.

நமக்கு ஏன் தேசிய விடுதலை வேண்டும் என்று இங்கு நான் எழுதத் தேவயில்லை என்று நினைக்கிறேன்.அதை உங்கள் சொந்த அனுபவங்களினூடாகவே நீங்கள் உணர்ந்திருபீர்கள். ஆனால் இன்று இந்த ஒட்டுக் குழு அரசியல் பற்றி வெகு விளக்கமாக எழுத வேண்டிய நிலை உள்ளது.காரணம் யாழ்க் களத்தில் அண்மையில் இந்த ஒட்டுக் குழு அரசியல் வெகு சூட்சுமமாக கருத்துச் சுதந்திரம் பொழுது போக்கு என்ற ரீதியில் விதைக்கப்பட்டு வருகிறது.இன்று புலத்தில் இந்த ஒட்டுக் குழு அரசியலை நிர்வன ரீதியாக வெளிப்படையாக நடத்திக்கொண்டிருக்கும் டிபிசி உடன் தொடர்புள்ளவர்கள், சூட்ச்சுமமாக இந்த அரசியலை காவி வரும் பிபிசி தமிழோசையின் காவடிகள் இங்கே இந்தக் கருத்துக்களை விதைத்துள்ளார்கள்.

இந்த ஒட்டுக்குழு அரசியலின் அடிப்படைத் தந்திரோபாயம் என்ன?

இன்று நேரடியாகப் புலிகளோடு மோத முடியாமல் எம்மக்கள் மேல் சிறிலங்கா அரசு கடவுழ்த்துள்ள வன்முறைகளைக் காட்டி இவர்கள் என்ன சொல்கிறார்கள்.பாருங்கள் மக்கள் அழிகிறார்கள்,பாருங்கள் சொத்துக்கள் அழிகின்றன,என்ன செய்கிறார்கள் உங்கள் பாதுகாவலர்கள்? என்ன செய்கிறது உங்கள் தலமை? என்று வினாவுகிறார்கள்.இந்தக் கேள்விகளைக் கேட்பவர்கள் அடிப்படையில் எதனை மறுதலிகிறார்கள். இந்த வன்முறையை கட்டவுள்துள்ளது சிறிலங்கா அராசாங்கப் படைகள் என்பதை முதலில் மறுதலிகிறார்கள்.தமிழ் ஈழ தேசம் என்பது எங்களுடைய தேசம் என்பதை மறுதலிகிறார்கள்.அங்கே நிலை கொண்டுள்ள சிறிலங்காப்படைகள் ஆகிரமிப்பாளர்கள் என்பதை மறுதலிக்கிறாகள்.இந்த ஆகிரமிப்பளர்களை வெளியேற்றத் தான் எமது வன் முறையான போராட்டம் நடை பெறுகிறது என்பதை மறு தலிகிறார்கள்.எமது போராட்டாத்தால் தான் அவர்களை வெளியேற்றி எமது மக்களுக்கு நிம்மதியான பாதுகாப்பான வாழ்வை வழங்கலாம் என்பதை மறுதலிகிறார்கள்.அப்படியாயின

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 இனக்கலவரத்திற்கு முன்னர், தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை (தென்பகுதியில் இருந்தவர்கள்தான், காடையார்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்). தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழுவோம், சிங்களவருடன் அடிபடாமல், ஒற்றூமையாக வாழுவோம் என்று ஏன் அப்போது நினைக்கவில்லை?

புலத்தில் பலகாலம் இருந்து, இங்குள்ள சுதந்திரத்தையும், மனிதரை மனிதராக மதிக்கும் பண்புகளையும் அனுபவிப்பவர்கள், கொழும்பிலும், பிற இடங்களிலும் தமிழர்கள் நன்றாக நடாத்தப்படுகின்றார்கள் என்று கற்பனை கொள்ளுகின்றார்கள்.

தமிழர்கள் எவ்வாறு இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவார்கள் என்று அறியவேண்டுமானால், புலத்திலுள்ள தூதரகங்களுக்குச் சென்று பாருங்கள் (ஒருவேளை ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ நீங்கள் சரளமாக உரையாடினால் நன்றாகக் கவனிக்கப்படலாம், ஆனால் நீங்கள் அக்க்கணமே தமிழராக இல்லை என்பதையும் கவனத்த்ல் கொள்ளவேண்டும்)

சிங்கள அரசுக்குத் துணைபோய், தமிழரின் போராட்டத்தை மழுங்கடிக்க நினைப்பவர்கள்/உதவுபவர்கள் எதோ ஒருவகையில் சிங்கள அரசிடமிருந்து அனுகூலங்களைப் பெறுகின்றார்கள்/பெற முயற்சி செய்கின்றார்கள்..

Link to comment
Share on other sites

நாரதர் அங்கிள் நல்ல ஆழமான கட்டுரை

நீங்க சொல்லுற மாதிரி எங்களடன் ஒருவராக இருந்தே எமது போராட்டத்துக்கு துரோகம் செய்பவர்களை இனம் காண்பது சிரமம் தான் ஆனால் காலப்போக்கில் அவர்களது நடவடிக்கைகள் அவர்களை இனம்காட்ட உதவலாம்

Link to comment
Share on other sites

உண்மையான மனிதநேயம் என்பது இருதரப்பிலும் இழக்கப்படும் சாமானிய உயிர்களுக்கு பரிதாபப்படுவதே.... அவ்வாறு பரிதாபப்படுபவர்களை தமிழெதிரி என்று கூறுபவர்கள் மனிதகுலத்துக்கே எதிரிகள்.....

Link to comment
Share on other sites

உண்மையான மனிதநேயம் என்பது இருதரப்பிலும் இழக்கப்படும் சாமானிய உயிர்களுக்கு பரிதாபப்படுவதே.... அவ்வாறு பரிதாபப்படுபவர்களை தமிழெதிரி என்று கூறுபவர்கள் மனிதகுலத்துக்கே எதிரிகள்.....

உண்மைதான்....!

ஆனால் வரலாறு எண்று ஒண்டு இருக்கு அது எங்களுக்கு தெரிந்த இந்தியாவிலேயே அதுவும் தமிழகத்திலேயே பார்த்தால் சொந்த மக்களையே கொண்றதுதானே.... அதைத்தானே நாங்கள் புதியபரணி எண்று கவிகளாக பாடுகின்றோம்...!

Link to comment
Share on other sites

உண்மைதான்....!

ஆனால் வரலாறு எண்று ஒண்டு இருக்கு அது எங்களுக்கு தெரிந்த இந்தியாவிலேயே அதுவும் தமிழகத்திலேயே பார்த்தால் சொந்த மக்களையே கொண்றதுதானே.... அதைத்தானே நாங்கள் புதியபரணி எண்று கவிகளாக பாடுகின்றோம்...!

தல!

உங்களுக்குத் தெரியாதது இல்லை...

உலக வரலாறு இரண்டாம் உலகப்போருக்கு முன், போருக்கு பின் என்று இரண்டாக இருக்கிறது.... இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான வரலாறு மனிதகுலத்தை நேயமுடன் பார்க்கிறது.... மனித இழப்புகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகத் தானே உலக அளவிலான அரசியல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கிறது....

அதை சில நாடுகள் உணராமல் அல்லது உணர்ந்தே தவறு செய்கிறது.... முன்பு அமெரிக்கா.... இலங்கை.... இப்போது புதியதாக இஸ்ரேல்....

Link to comment
Share on other sites

தல!

உங்களுக்குத் தெரியாதது இல்லை...

உலக வரலாறு இரண்டாம் உலகப்போருக்கு முன், போருக்கு பின் என்று இரண்டாக இருக்கிறது.... இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான வரலாறு மனிதகுலத்தை நேயமுடன் பார்க்கிறது.... மனித இழப்புகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகத் தானே உலக அளவிலான அரசியல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கிறது....

அதை சில நாடுகள் உணராமல் அல்லது உணர்ந்தே தவறு செய்கிறது.... முன்பு அமெரிக்கா.... இலங்கை.... இப்போது புதியதாக இஸ்ரேல்....

நான் அதை சும்மா வேடிக்கைக்காகத்தான் சொன்னனான்....

வல்லரசுகள் தங்களுக்கு ஒரு நியாத்தை வைத்திருந்து மற்ரவருக்கு ஒரு நியாயம் வைத்திருப்பதும் அந்த இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் இருந்துதான்... அதுவும் அமெரிக்க முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு பிறகு...

இதை வேற இடத்தில விவாதிப்பம்.... மட்டூஸ் வரமுன்னம் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்.... :wink:

Link to comment
Share on other sites

ஒருவர் என்னடான்னா.......

50 தமிழ் மக்கள் பலி என்று செய்தி வந்தால்...............

அது வந்து - வயலுக்கு நீர் பாய்ச்சி... வாய்க்கால் உடைஞ்சு ...........கட்டி வைச்சு .............வலுக்கட்டாயமா..

அட ஒண்ணுமே ஒழுங்கா வரல்ல அவசரத்துக்கு................

என்னமோ எடுத்து விடுவன். எதையாவது பொறுக்கிங்க ..என்பார்!

அடுத்தவர் என்னடானா............

எனக்கும் தமிழ் நல்லா தெரியும் என்னு காட்ட...

ஆரம்பிப்பார்..........

மக்கள் தெளிவு பெற....

தேசியத்தை மட்டும் நம்பி பயன் இல்ல- என்னோட கருத்தை - வெரி இம்போற்றன்டா - எடுத்துக்கொண்டாதான் .......

நீங்க கிணத்தை விட்டு குளத்துக்க வரலாம் ..............

அப்பிடீன்பார்.......

அது ஒண்ணுமில்ல .................

ஆனந்தசங்கரி ஸ்டைல்!

எப்பவோ நான் இங்க இணைன்சன் - இவங்க எனக்கு - புத்தி சொல்லவான்னு.......ஈகோ!!

எப்பவோ வாசிச்ச நியாபகம் - 'நான் நினைச்சிருந்தா - மோகன் அண்ணாகிட்ட கேட்டு எப்பவோ மட்டுறுத்தினராகி இருப்பன்''

கடைசில பார்த்தா- சிந்தனையும் போச்சு-

வாணவேடிக்கையும் போச்சு-

இழுத்து வெளியில விட்டுட்டாங்க இல்ல....................

இவ்ளோகால - கருத்தாடல் அனுபவம்.

பூச்சியத்தில ..போய் முடின்சிருக்கு!!

இனியாவது -ஏதாச்சும் வெட்கம் - வருமா?

இன்னமும் பணிவுதான் - .

நீங்க குட்டுவாங்கினதில - ஒரு பெரிய துள்ளி குதிப்பும் இல்ல......

நாங்க - சார்ந்த - நியாயம் - வென்றது - என்பதற்காகவும் அல்ல...

செத்துக்கொண்டு இருக்கு எம் இனம் - அதுக்கு முன்னால .

வாண வேடிக்கைகளூக்கு இடமில்ல - என்பதை - கள நிர்வாகM - கருத்தில் எடுத்தால்!!

ஒரு விளக்க கட்டுரையை - எழுதிய - நாரதருக்கு - நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மனிதநேயம் என்பது இருதரப்பிலும் இழக்கப்படும் சாமானிய உயிர்களுக்கு பரிதாபப்படுவதே.... அவ்வாறு பரிதாபப்படுபவர்களை தமிழெதிரி என்று கூறுபவர்கள் மனிதகுலத்துக்கே எதிரிகள்.....

உமக்கு ஒரு விடயத்தைச் சொல்ல நினைக்கின்றேன். எதுவுமே அறியாத உம் பெற்றோர்கள், சகோதரங்கள், வெளியாரல் பாதிக்கப்படும்போது மனிதாபிமானம் பற்றி உம்மால் கதைக்கமுடியுமா?

ஏன் இந்தியா மக்கள் பாகிஸ்தான்; குண்டுவீச்சால் சாகும்போது, பதிலுக்கு பாகிஸ்தானியர் சாகும்போது அது குறித்து நீர் கவலைப்படுவீரா?

அது தான் நாமும் சொல்கின்றோம். எம் மக்களின் மரணத்தின் போது நடுநிலமை என்ற கருத்து எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும். வெறுமனே இந்தியாவைப் பற்றி நாம் கதைத்தபோது சாதாரணமாகவே உமக்கு பொறுக்கமுடியவில்லை. அது போலத் தான் இதுவும்!

சிங்கள மக்களின் மரணம் எமக்கு தேவையில்லாதது. ஆனால் தமிழர் சாகும்போது அதை நாம் கணக்கில் ஏன் எடுக்கவேண்டும். இன்று வரைக்கும் தமிழரின் மரணத்துக்காக சிங்களவனில் ஒருவன் கூட கண்ணீரே வடிக்கவில்லை. ஏன் என்றால் அவனின் பிறப்பில் அவன் தூய்மையானவன். எங்களில் சிலர் தான் உந்தக் கபடப்புத்தி!

Link to comment
Share on other sites

வெறுமையாக பரிதாப்படுவது போல் எழுதுவது மனிதாபிமானம் ஆகிவிடாது, வெறுமனே நான் ஒரு மனிதாபிமானி கவலைப் படுகிறேன் என்று சொல்லி விட்டு செல்வதோ எழுதுவதோ செய்தி சொல்வதோ மனிதாபிமானம் இல்லை.அது பச்சோந்தித் தனம்.அதற்காக என்ன செய்தாய் என்பது தான் உண்மையான மனிதாபிமானம்.இவ்வாறான செயல்கள் இனி நடை பெறாமற் செய்வது தான் மனிதாபிமானம், அப்படிச் செய்தவன் தான் உண்மயான மனிதாபிமானி.இந்த மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்தவே எமது மக்கள் பாதுகாப்பாக இருக்கவே நாம் போராடுகிறோம்.அந்தப் போராட்டத்தை மனிதாபிமானம் என்கின்ற பொய்யான காட்சிகளாய் அர்த்தமற்றதாக்க முயல்பவர்களையே மேலே சுட்டிக் காட்டி உள்ளேன்.லக்கி லுக் உங்களுக்கு சில விடயங்கள் புரியாது, ஏனெனில் எமது போராட்டமும் அதன் எதிரிகள் பற்றியும் எங்களுக்கு இருக்கும் புரிதல் உங்களுக்கு இருக்காது, இங்கே மனிதாபிமானம் என்ற வேடத்தோடு ,இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்வதற்கான பிரச்சாரமே நடை பெறுகிறது, அதனைத் தான் நான் சுட்டிக் காட்டி உள்ளேன்.எவ்வாறு இந்த வேடதாரிகள் நாடகமாடுகின்றனர் என்பதைத்தான் எழுதி உள்ளேன்.

உண்மையான மனிதாபிமானி எமது போராட்டத்துடன் என்றும் ஒன்றிணைந்து இருப்பான் அதனைக் காட்டிக் கொடுத்து அதன் அரசியற் பலத்தை நியாயத்தை உடைப் பதற்காக மனிதாபிமானம் என்று வேடம் போட மாட்டான்.

வேடம் இடுபவர்களை நாங்கள் இலகுவில் கண்டு பிடித்து விடுவோம், எமது போராட்டம் அந்த அரசியல் முதிர்ச்சியை எமக்குத் தந்து உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம், மாற்றுத் தலைமை, ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்ற சொற்களுக்குள் ஒளிந்திருப்பவர்கள் யார்? காட்டிக் கொடுத்தோர்/கொடுப்போர், கப்பம் பெறுவோர், கொள்ளையர்கள், திருடர்கள். எல்லாமே வயிற்றுப் பிழைப்புக்குத்தான். இவர்களில் எவர் மக்கள் நலனை முன்நிறுத்தி போராட்டம் செய்பவர்கள்? புலத்திலாவது மக்களைத் திரட்டி போராட்டம் நடாத்தலாமே, அல்லது விளக்கங்கள் கொடுக்கலாமே. இவர்களால் முடியாது, எங்காவது ஒரு மூலையிலிருந்து இணையத்தில் கட்டுரைகள் எழுதத்தான் முடியும்.

Link to comment
Share on other sites

மனிதாபிமானம், மாற்றுத் தலைமை, ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்ற சொற்களுக்குள் ஒளிந்திருப்பவர்கள் யார்? காட்டிக் கொடுத்தோர்/கொடுப்போர், கப்பம் பெறுவோர், கொள்ளையர்கள், திருடர்கள். எல்லாமே வயிற்றுப் பிழைப்புக்குத்தான். இவர்களில் எவர் மக்கள் நலனை முன்நிறுத்தி போராட்டம் செய்பவர்கள்? புலத்திலாவது மக்களைத் திரட்டி போராட்டம் நடாத்தலாமே, அல்லது விளக்கங்கள் கொடுக்கலாமே. இவர்களால் முடியாது, எங்காவது ஒரு மூலையிலிருந்து இணையத்தில் கட்டுரைகள் எழுதத்தான் முடியும்.

நேரடியாக மக்கள் முன் ஒரு பொதுவான இடத்தில் அவர்களால் இப்படி மாற்றுக்கருத்து பேசும் துணிவு இருக்குறதா..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியாக மக்கள் முன் ஒரு பொதுவான இடத்தில் அவர்களால் இப்படி மாற்றுக்கருத்து  பேசும் துணிவு இருக்குறதா..??

இவர்களுக்குத் துணிவிருந்தால் குறைந்த பட்சம் பைபிள்வாதிகள் போல் வீடு வீடாய் ஏறிப் பிரச்சாரம் செய்யலாமே.. அவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. தேவை தமிழர்களின் பெயரில் காசு பார்க்கும் வழிகள்தான்.

Link to comment
Share on other sites

மிகவும் பயனுடைய கட்டுரை.

மனிதாபிமானம் என்பது பேச்சளவில் இல்லாது செயல்களிலும் இருக்கவேண்டும். ஆனால் இன்று பலர் பேசி பேசியே மற்றவர்களின் மனிதாபினமானத்தையும் புரிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

தகவலுக்கு நன்றிகள் நாரதர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஈழம் கிடைத்த பின் எல்லாவற்றிற்கும் பதில் உண்டு

Link to comment
Share on other sites

உண்மையான மனிதநேயம் என்பது இருதரப்பிலும் இழக்கப்படும் சாமானிய உயிர்களுக்கு பரிதாபப்படுவதே.... அவ்வாறு பரிதாபப்படுபவர்களை தமிழெதிரி என்று கூறுபவர்கள் மனிதகுலத்துக்கே எதிரிகள்.....

உங்களுக்கு எட்டப்பன். காக்கைவன்னியன் பற்றி தெரியுமா? :roll: :idea: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு மனிதாபிமானம் இருப்பதனால்தான், இன்று வரை சிங்களவன் தன் பகுதியில் இன்னும் நிறைவுடன் வாழ்கிறான். புரிந்தால் சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வெள்ளைக்காரன்

ஜனநாயகம் பார்த்திருந்தால்

மனிதாபிமானம் பார்த்திருந்தால்

கருத்து சுதந்திரம் பார்த்திருந்தால்

அவனுக்கு இன்று

அவுஸ்திரெலியா இல்லை

அமெரிக்காவும் இல்லை

ஆங்கில மொழி உலகமொழியகவுமில்லை

அன்று அவன் பார்க்கவில்லை

கிடைத்தது வெற்றி

இன்று அவன் சந்ததி பொதிக்கிறது

ஜனநாயகம் ,மனிதாபிமானம்

சுதந்திரக்காற்றை சுவாசித்து

சுதந்திரமாக வாழ என்னும்

கடற் தொழிலாளி கந்தனுக்கும்

விவசாயி விசுவனுக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.