Jump to content

தேசியத்தலைவர் பற்றி.........!


Recommended Posts

தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்பாளனாகவும் பிறர்மேல் கரிசனை கொண்ட அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார். தலைமைக்குரிய கண்டிப்பும் நேர்மையும் அதேநேரம் பிறருடைய உணர்வுகளைg; புரிந்தவாராக, அவர்களுடைய உணர்விகளிற்கும் மதிப்புக் கொடுக்கும் ஒருவராக இருந்தார். வெறுமனே தலைவர் அவர்களின் ஆளுமைக் கவர்ச்சியில் மட்டும் இளைஞர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படவில்லை. அவரிடம் இருந்த பனமுகப்  பண்புகளே அவரைத்  தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தது. 
 
ஒரு நாள் தலைவர் வாகனத்தில் முகாமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் மீன் வித்துக் கொண்டு சென்றார் ஒரு வியாபாரி. அவரைப்பார்த்ததும் தலைவருக்கு மீன் சாப்பிடும் எண்ணம் ஏற்பட்டது. உடனே மீன் வாங்கும் படி கூறி, வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் இருந்த பாதுகாவலர் பின்னுக்கு வந்த பாதுகாப்பு வாகனத்தில் வந்தவர்களிடம் மீன் வாங்குமாறு கூறினர். சிறிது நேரத்திலேயே மீன் வாங்கியாகிவிட்டது என தெரிவித்தனர். தலைவர் ‘என்ன இவ்வளவு கெதியா வாங்கிட்டீங்களா?’ எனக் கேட்க, அந்தப்போராளியும் ‘ஓம் அண்ணை வாங்கியிட்டம்’ எனக் கூறினார். பின்னர் வாகனங்கள் புறப்பட்டு முகாமிற்குச் சென்றுவிட்டன.
 
வாகனத்திலிருந்து இறங்கிய தலைவர்  ‘எங்க மீனைப்பாப்பம்’ என கேட்க அவர்கள் பெட்டிக்குள் இருந்த மீனைக்காட்டினார்கள். ஆச்சரியமைந்த தலைவர், ஏன் பெட்டியுடன் வாங்கினீர்கள் எனக் கேட்டார். அதற்குப் போராளி ‘நாங்கள் ஐந்து கிலோ கேட்டனாங்கள், அவரிடம் ஐந்து கிலோ மட்டில் இருந்ததால் அப்படியே எடுக்கச் சொன்னவர். எங்களிட்ட பை ஒன்றும் இல்லை, அதால பெட்டியுடன் தாறீங்களா? அதுக்கும் காசு தருகின்றோம் எனக் கேட்டேன், வியாபாரியும் ‘மறுக்காமல் சரி என்று சொன்னார். அதோட அந்த இடத்தில் உங்களை வைத்துக்கொண்டு தாமதிக்க விரும்பவில்லை எனவே அப்படியே வாங்கிக் கொண்டு வந்திட்டன்’ என்றனர்.
 
அதற்குத் தலைவர் ‘நாங்கள் இயக்கம் என்டபடியால், கேட்டதை மக்கள் மறுக்காமல் தருவினம் ஆனால் ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு பொருளை அதிஸ்டமாகக் கருதுவினம், அதுபோன்று இந்த வியாபாரிக்கும் அந்தப்பெட்டியில் மீன்வித்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்திருக்கும். சிலவேளை நாளைக்கு புதிய பெட்டி வாங்கி வியாபாரத்திற்குச் செல்லும் போது, சரியாக வியாபாரம் போகாவிட்டால், அதிஸ்டமான பெட்டியை பெடியள் கேட்டதால கொடுத்திட்டனே என்று கவலைப்படக்கூடும். இந்தக் கருத்து மனைவி, பிள்ளைகளிற்குகூட ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. இது இயக்கத்தைப்பற்றிய ஒரு தவறான பார்வையை மக்களிற்குள் தோற்றுவிக்கும். எனவே நீங்கள் நாளை எப்படியாவது இந்தப்பெட்டியை வியாபாரிக்கு கிடைக்கச் செய்து விடுங்கள்’ என்றார்.
 
மறுநாள் மீன் வாங்கிய இடத்துக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் மீன்வியாபாரியின் வீடு எங்கிருக்கின்றது என தேடிக்கண்டு பிடித்து, அந்தப்பெட்டியை திருப்பிக் கொடுக்க வியாபாரி வியப்படைந்து ஒரு புன்முறுவலுடன் வாங்கிக் கொண்டார். அன்று மதியம் மீன் வாங்கிய போராளியை அழைத்த தலைவர் ‘மீன் பெட்டியைத் திருப்பிக் கொடுத்து விட்டீர்களா?’ என அவ்வளவு வேலைகளுற்கு மத்தியிலும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
 
பிறிதொரு சம்பவத்தில்  தலைவர் காலையுணவருந்திக் கொண்டிருந்தவேளை கேணல் சங்கர் அண்ணை அலுவலாக வந்திருந்தார். அப்போது தலைவர் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சங்கர் அண்ணை வந்ததும் ‘அண்ணை மாம்பழம் சாப்பிடுங்கோ’ என்று கூற அவரும் சாப்பிட்டார். மாம்பழம் நல்ல சுவையாக இருந்தது. சங்கர் அண்ணையும் நல்ல சுவையாக இருக்கின்றது எனச் சொல்லிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது மனவோட்டத்தை புரிந்து கொண்ட தலைவர் ‘மற்றப்பழத்தையும் சாப்பிடுங்கோ அண்ணை’ என்றார். சங்கர் அண்ணை  சாப்பிடத் தொடங்க அண்ணை பாதுகாவலர்களிடம் ‘இன்னுமொரு மாம்பழம் ஒன்று வெட்டிவாங்கோ’ என்றார். உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்த அவர் ‘மாம்பழம் முடிந்து விட்டது’ என்றார்.
 
சங்கர் அண்ணை முகம் சற்று மாறியதை கவனித்த தலைவர் உடனேயே ‘சரி, வாழைப்பழம் எடுத்துவாங்கோ’ எனக் கூற அவர் அதுவும் முடிந்து விட்டது என்றார். சங்கர் அண்ணை சங்கடப்படுவதை உணர்ந்த தலைவர். ‘சரி தம்பி’ என்று அந்த சம்பாசனையை முடித்துக் கொண்டார். பின்னர் சங்கர் அண்ணையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கதைத்து அவருக்கு மனச்சங்கடம் இல்லாமல் வேறு வகையில் அவரை சந்தோசமாக அனுப்பி வைத்தார்.
 
பின்னர் அன்று மாலை தலைவர் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவேளை சம்பந்தப்பட்ட போராளி தலைவருக்கு முன்னால் சென்றார். ‘தம்பி இங்கை வாங்கோ’ என அப்போராளியை அழைத்து காலையில் நீங்கள் நடந்து கொண்டு முறை சரியா?’ எனக்கேட்டார். அவரும் எது என்று தெரியாமல் விழிக்க,  தலைவர் சொன்னார் ‘காலையில் பழம்; கொண்டு வாங்கோ என்று சொல்ல, நீங்கள் சங்கர் அண்ணைக்கு கேட்கக்கூடியவாறு பழம் முடிந்து விட்டது என்று சொன்னீர்கள். அப்படி சொல்லியிருக்கக்கூடாது. ஏனென்றால் எனக்குரிய உணவை தான் சாப்பிட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி சங்கரண்ணைக்கு ஏற்பட்டதை அவரின் முகமாற்றத்திலிருந்து அறிந்து கொண்டேன். உணவு பரிமாறும் போது விருந்தினர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும் உணவு பரிமாறிமாறவும் பழகிக் கொள்ளவேண்டும். இனிமேல் இப்படியான தருணங்களில் நான் கேட்கும் உணவு முடிந்து விட்டால், ஒரு ஒற்றையில் எழுதித்தாருங்கள் நான் அதைப் புரிந்து கொள்வேன் அவர்களிற்கும் தர்மசங்கடம்; ஏற்படாது’ என்று சொன்னார்.
 
இது தனிமனிதர்கள் மீதும் அவர்களின் தனிமனித உணர்வுகளிற்கும் தலைவர் கொடுக்கும் முன்னுரிமை, மதிப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இதனூடாகப்  போராளிகளை மனிதநேயம், மனிதப் பண்புகள் உள்ளவர்களாக உருவாக்குவதன் மூலம், இப்போராளிகாளால் உருவாக்கப்படும் சமூகம் ஒரு நன்நெறி மிக்க சமூகமாகவும்  நல்ல சிந்தனைகள், நற்பண்புகளைக் கொண்ட சமூகமாகவும் அடுத்தவர்களின் உணர்வுகளிற்கு மதிப்புக் கொடுப்பவர்களாகவும் உருவாக வேண்டும் என்பதை, தன்னைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து மாற்றவேண்டும் என்பதில் ஒரு தெளிவான பார்வை இருப்பதை வெளிக்காட்டுகின்றது.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிகவும் அருமையான பதிவு 
உண்மை வரலாறுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் வாணன் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இது போல் என்னும் எத்தனை அவருடைய பண்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் அற்புதமான தலைவர் அவர் எங்களுக்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியமாகவே கருதலாம்.
 
பகிற்விற்க்கு நன்றி வாணன்.   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவராலும் அவர்  இடத்தை  நிரப்பமுடியாது என்று  தெரியும்போதே

அவரது பன்முக  ஆற்றலையும்  பண்புகளையும் புரிந்து கொள்ளமுடியும்

 

என்ன

தமிழனுக்கு  அவரது அருமை  தெரியவில்லை

தனியே  விட்டு விட்டோம்

இனி..........

 

பகிற்விற்க்கு நன்றி வாணன்.   

தொடருங்கள்

பதியப்படணும்  இவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்கள் அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

நல்ல பதிவுகளைத் தரும் வாணனுக்கு நன்றிகள்..!

Link to comment
Share on other sites

ஒரு தலைவனுக்கு சரியான வரைவிலக்கணம் கொடுக்கவேண்டுமென்றால்....

ஒற்றைச் சொல்லில் சொல்லிவிடலாம்.... அது "பிரபாகரன்" என்று.

ஒரு நல்ல தலைவனின் மதிப்பினை நம் தமிழினம் முழுமையாக உணர்ந்து கொள்ளவுமில்லை, அவருக்கு ஒத்துழைக்கவும் இல்லை.

 

இனியும் இப்படியொரு சிறந்த தலைவனுக்கு எத்தனையாயிரம் வருடங்கள் காத்திருக்கவேண்டி வருமோ!!!??? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இவைகள் எல்லாவற்றையும் தாண்டியே அவர் எமது இதையங்களில் அரியணையிட்டிருக்கிறார். ஆகவே எங்கள் நட்பு வட்டத்துக்குள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அவற்றைப் பேசுபொருளாகக் கொள்வோம். 

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு நன்றி வாணன்.  ஆளுமையுடைய ஒரு மனிதன்.


நல்லதொரு பதிவு நன்றி வாணன்.  ஆளுமையுடைய ஒரு மனிதன்.

Link to comment
Share on other sites

ஒரு பக்கம் மட்டும் பார்த்தால் வாணன் சொல்வதை முழுமையாக ஏற்று கொள்ளத்தான் வேண்டும் .

தமது தலைவர்களின்  நல்ல பக்கத்தை மட்டும் பார்க்கதான் தொண்டர்கள் விரும்புவார்கள் ஆனால் உலகம் அப்படி பார்க்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 90 or 91  எண்டு  நினைக்கிறேன்  அண்ணயை சந்திக்க  சென்றோம் .அப்போது எங்கள் வேலை ஒவ்வொரு மாவட்டமாக சென்று போராளிகளுக்கு  அரசியல்  படிப்பது ,போவதற்கு ஒழுங்கான

வாகன வசதி எதுவும் எங்களுக்கில்லை .நடந்தும்  வருகின்ற பொதுமக்களின் வாகனங்களில் ஏறியும் எங்களுக்குரிய இடத்தை சென்றடைவோம் .பொதுவான விஷயங்கள் கதைத்து முடியும் பொது

கேட்டார் ,உங்கள் போக்குவரத்து எப்பிடி எண்டு நாங்களும் உள்ளதைச் சொன்னோம் .உடனே அண்ணர்,யோகி அண்ணயை  பாத்து சொன்னார்  இப்பதானே  மண்ணெண்ணெயில்  ஊதி விளையாடுற 

சாமான் இருக்கு ,ஒழுங்கு செய்யுங்கோ எண்டு , அடுத்த நாள்  15 வாகனம்  வந்து இறங்கிச்சு

Link to comment
Share on other sites

ஒரு பக்கம் மட்டும் பார்த்தால் வாணன் சொல்வதை முழுமையாக ஏற்று கொள்ளத்தான் வேண்டும் .

தமது தலைவர்களின்  நல்ல பக்கத்தை மட்டும் பார்க்கதான் தொண்டர்கள் விரும்புவார்கள் ஆனால் உலகம் அப்படி பார்க்காது .

 

 

நேரடிச்சாட்சிகளை நம்பவும். கனவுலகில் சஞ்சரிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 90 or 91  எண்டு  நினைக்கிறேன்  அண்ணயை சந்திக்க  சென்றோம் .அப்போது எங்கள் வேலை ஒவ்வொரு மாவட்டமாக சென்று போராளிகளுக்கு  அரசியல்  படிப்பது ,போவதற்கு ஒழுங்கான

வாகன வசதி எதுவும் எங்களுக்கில்லை .நடந்தும்  வருகின்ற பொதுமக்களின் வாகனங்களில் ஏறியும் எங்களுக்குரிய இடத்தை சென்றடைவோம் .பொதுவான விஷயங்கள் கதைத்து முடியும் பொது

கேட்டார் ,உங்கள் போக்குவரத்து எப்பிடி எண்டு நாங்களும் உள்ளதைச் சொன்னோம் .உடனே அண்ணர்,யோகி அண்ணயை  பாத்து சொன்னார்  இப்பதானே  மண்ணெண்ணெயில்  ஊதி விளையாடுற 

சாமான் இருக்கு ,ஒழுங்கு செய்யுங்கோ எண்டு , அடுத்த நாள்  15 வாகனம்  வந்து இறங்கிச்சு

உண்மைகள் வெளிவரவேண்டும்...வரட்டும்...நன்றி நந்தன்.

Link to comment
Share on other sites

நேரடிச்சாட்சிகளை நம்பவும். கனவுலகில் சஞ்சரிக்க வேண்டாம்.

முழுக்க முழுக்க அவர்களை நான் நம்புகின்றேன் .வெறும் சம்பவங்களும் மனிதாபிமானமும் அல்ல எமது இனத்தின் விடுதலையை தீர்மானிப்பது .

Link to comment
Share on other sites

முழுக்க முழுக்க அவர்களை நான் நம்புகின்றேன் .வெறும் சம்பவங்களும் மனிதாபிமானமும் அல்ல எமது இனத்தின் விடுதலையை தீர்மானிப்பது .

 

 

ஓ  உலகம் எப்படி பார்க்கிறதோ அப்படி நாங்கள் பார்க்க வேண்டும் என்கிறீர்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடுதலைப் போராளியின் வரலாற்றுப் பெருமைகள் என்பது அவனுடைய தனிமனித பண்புகள் சார்ந்தும் உள்ளது. அதனை அழகுறச் சொல்லி இருக்கும் வாணனுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்க.

 

தலைவர் அன்று திட்டங்களாகச் செயற்படுத்தியதை இன்று பலர் கொப்பி பண்ணி செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவையும் தலைவரின் சிந்தனையின் பெறுதிகளே..!

 

தலைவர் மக்களின் நன்மைக்காகத் தான் அவற்றை செயற்படுத்தினார். அன்று அவர் செயற்படுத்தியதால் அவற்றை விமர்சித்தவர்கள் இன்று தாம் அந்த நிலையில் நின்று கொண்டு செயற்படுத்தும் போது நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இது தான் மனித இயல்பும் கூட. தான் சாதிக்க முடியாததை இன்னொருவன் சாதித்தால்.. போற்றிப் புகழ்வதை விட இகழும் மனிதர்களே அதிகம். அதனையே தான் சாதிக்கும் போது.. புகழ்ச்சியே வரனும் என்று விரும்புவான். ஆனால் தலைவர் இந்தச் சாராசரி மனித உணர்வுகளைத் தாண்டிய ஒரு உன்னத மனிதராக வாழ்ந்து காட்டினார் என்றால் மிகையல்ல..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 90 or 91  எண்டு  நினைக்கிறேன்  அண்ணயை சந்திக்க  சென்றோம் .அப்போது எங்கள் வேலை ஒவ்வொரு மாவட்டமாக சென்று போராளிகளுக்கு  அரசியல்  படிப்பது ,போவதற்கு ஒழுங்கான

வாகன வசதி எதுவும் எங்களுக்கில்லை .நடந்தும்  வருகின்ற பொதுமக்களின் வாகனங்களில் ஏறியும் எங்களுக்குரிய இடத்தை சென்றடைவோம் .பொதுவான விஷயங்கள் கதைத்து முடியும் பொது

கேட்டார் ,உங்கள் போக்குவரத்து எப்பிடி எண்டு நாங்களும் உள்ளதைச் சொன்னோம் .உடனே அண்ணர்,யோகி அண்ணயை  பாத்து சொன்னார்  இப்பதானே  மண்ணெண்ணெயில்  ஊதி விளையாடுற 

சாமான் இருக்கு ,ஒழுங்கு செய்யுங்கோ எண்டு , அடுத்த நாள்  15 வாகனம்  வந்து இறங்கிச்சு

 

இது மட்டுமல்ல. தென்மராட்சியில் ஒரு விபத்து. அதில் ஒரு பள்ளிச் சிறுவனை இயக்க லொறி ஓட்டி வந்தவர் மதிலோடு நெரித்திக் கொன்று விட்டார். லொறி ஓட்டியவர் இயக்கம் அல்ல. தவறு இரு தரப்பிலும் இருந்தது.

 

இயக்கத்திற்கு பெற்றோர் கொடுத்த அழுத்தம் தலைவருக்குச் செய்தியாக எட்டியது. தலைவரின் நேரடி அறிவுறுத்தலின் பெயரில்..  சிறுவன் சம்பவ இடத்தில் அல்ல வைத்தியசாலையில் தான் இறந்தான்... அந்தக் காலவெளியில்.. அந்தச் சிறுவனின் பராமரிப்பு.. மருந்துகள் வழங்கல்.. என்று அவனுக்கு ஒரு போராளிக்குரிய மரியாதை கொடுக்கச் சொன்னார் தலைவர். பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டான். அவனுக்கு போராளிகளுக்குரிய மரியாதையோடு அடக்கம் செய்ய இயக்கமே உதவியது. பிரதேச தலைவர்கள் இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டு பெற்றோரின் குறை நிறைகளை கவனிக்கப் பணிக்கப்பட்டிருந்தனர். அதன் பின் பெற்றோருக்கு மாவீரர் குடும்பத்திற்குரிய எல்லா சலுகைகளும் வழங்கப்பட்டன.

 

அடிப்படையில் தலைவர் அறியாமல் நிகழும் தவறுகள் சில இயக்கத்திற்கு சில சங்கடங்களை தந்திருந்தாலும்.. தலைவர் அறிய ஒரு சம்பவம் நடந்தால் அது உடனடி நீதிக்கும் தர்மத்திற்கும் அமைய தீர்வுகள் வழக்கப்படும் நிகழ்வுகளாக அமைந்ததே அதிகம்.

 

இன்னொன்று.. ஒரு அண்ணை. அவர் கள்வியங்காடு நல்லூரில் வசித்தவர். தான் கரும்புலியாக வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். வீட்டுக்கு ஒரேயொரு ஆண் வாரிசு அவர் தான். இரண்டு தங்கைகள். பெற்றோர் அந்த அண்ணைக்குத் தெரியாமல் தகவல் பெட்டி ஊடாக தலைவருக்கு செய்தியை சேர்ப்பித்தனர். சில மாதங்களின் பின் தலைவரின் நேரடி உத்தரவின் பெயரில் அவர் இயக்கத்தில் இருந்தே விடுவிக்கப்பட்டு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார். ஆனாலும் அந்த அண்ணை இயக்கத்தை விட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடித்து முகாமிலேயே போய் இருந்துவிட்டார். அவருக்குப் பின் உளவுப் போராளியாக இயக்கம் செயற்பட அனுமதித்தது..!

 

இப்படிப் பல சம்பவங்கள். தலைவரின் நேரடி கவனத்தைப் பெற்ற மக்களின் கஸ்டங்களுக்கு அவர் மிகுந்த அக்கறையும் மனிதாபிமானமும் காட்டி முடிவுகளை எடுத்தமை பல உதாரணங்களில் வெளிப்பட்டுள்ளது.

 

மேற்படி சம்பவங்கள் நாங்கள் அறிய நடந்த சம்பவங்களில் சில..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் இன்னொரு சம்பவம். இந்த அண்ணை முக்கிய ஒரு போராளி. தென்மராட்சியை சேர்ந்தவர். படிப்பில் சுட்டி. மாத்தையா அவர்களின் தலைமையின் கீழ் இயங்கிய அணியில் செயற்பட்டவர். ஆனையிறவு ஆகாயக் கடல் வெளிச் சமரில் முக்கிய பங்கெடுத்தவர்.  மாத்தையாவின் துரோகம் வெளிப்பட்ட போது அந்த அணி கலைக்கப்பட்டது. துரோகத்திற்கு உதவியர்கள் தவிர மற்றவர்களை இயக்கம் இயக்கத்தில் இருந்து விடுவித்து வந்தது. அதன்படி மேற்படி போராளியையும் இயக்கம் விடுவித்தது. அதனால் அவருக்கு ஒரே மன உளைச்சல். இச்செய்தியை அவர் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அதன் பின் தலைவரின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் அவர் அரசியல்துறைப் போராளியாக உள்வாங்கப்பட்டிருந்தார். அதுவும் தண்ணி சாப்பாடு இல்லாமல் ஆனையிறவில் போரிட்டு.. சிறுநீரகங்களில் ஒன்று பாதிப்படைந்த நிலையிலும்.. இயக்கம் அதை சுட்டிக்காட்டி அவரை குடும்பத்தோடு இணையக் கேட்ட போதும்.. அவரின் வேண்டுகோளை மதித்து தலைவர் மீண்டும் அவரை இயக்கத்தில்.. ஏற்றுக் கொண்டிருந்தார்..!

Link to comment
Share on other sites

தலைவரைப் பற்றீ சொல்ல வார்த்தைகளே இல்லை ஆனால் அவரை வைத்துப் பிழைக்கும் துரோகிகள்,எதிரிகள விட அவரால் வளர்க்கப்பட்டவர்களே அதிகம்

Link to comment
Share on other sites

சாயிபாபா பக்தர்கள் ரேஞ்சிற்கு போகுது நெடுக்கரின் பதிவுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாயிபாபா பக்தர்கள் ரேஞ்சிற்கு போகுது நெடுக்கரின் பதிவுகள் .

 

பஜனை வைக்கிறோம் என்று சொல்லுறீயளோ?....இரண்டு பேரும் மக்களின் நாயகன் ஆகிவிட்டார்கள் .மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்கள் ஒருவர் தேசிய நாயகன் மற்றவர் ஆத்மீக நாயகன்......என்னதான் குத்துக்கரணம் அடித்தாலும் இருவரையும் டமிழ்மக்களின் மனதிலிருந்து அசைக்கமுடியாது.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாய் பாபா போல தலைவர் ஒன்றும் மாஜாயால வித்தை காட்டும் கதையல்ல இவை. எம் கண் முன்னால் நடந்த நிதர்சனங்கள். சில பேருக்கு சில மனிதர்களை அசுரர்களாக விபரிச்சால் தான் ரசிக்கும் ஒரு வகை மன நோய் உள்ளது. அது புராண காலம் தொட்டுத் தொடர்கிறது. அவர்கள் அதில் இருந்து இறங்கி வந்து நிதர்சனத்தைப் பார்க்கனும். இல்லாவிட்டால்.. திட்டித் திட்டி திட்டலிலேயே வாழ்வும் ஓய்ந்திடும்..!

 

மக்கள் தலைவராக ஒருவரை சும்மா ஏற்கவில்லை. அவர் மக்கள் முன் அப்படி வாழ்ந்து காட்டியதால் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் களத்தில் இல்லாத போதும் அது தெளிவாக உணரப்படுகிறது. இது கண்டு சில குரோதமனநிலையில் உள்ளோருக்கு மனசு வேகுது. அதில் இருந்து விடுபட... அவர்கள் தான் தம்மை மாற்றிக் கொள்ளனும். மக்கள் அல்ல..! :lol::)

Link to comment
Share on other sites

கருத்துக்களை  பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

 

தலைவர் பற்றிய  சம்பவங்களை பகிர்ந்து கொண்ட நெடுக்ஸ், நந்தன் ஆகியோருக்கு நன்றி. இது போன்று யாழ் குடும்பத்திலுள்ளவர்களும் தங்களுக்குத் தெரிந்த புதிய உண்மைச்சம்பவங்களை பதிவு செய்தால் தலைவரின் பல்வேறு பண்புகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கினறது. எப்போதும் தலைவரைப்பற்றி அறிவதற்கு   “தேசியத்லைவரைப்பற்றி....!“  என்ற இந்தத்தலைப்பு ஒரு அடித்தளத்தைக் கொடுத்தால் நல்லாயிருக்கும். அவரைப்பற்றிய தனியொருவரால் சொல்லிவிட முடியாது. கூட்டுமுயற்சியாக தெரிந்தவர்கள் எல்லோரும் பதியத்தொடங்கினால் புதிய பல விடயங்கள் வெளிப்படும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.