Jump to content

நிரந்தர வலி தரும் நிராகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அர்ஜுன்,கோமகன், தமிழ்ச் சூரியன், புங்கையூரான், யாயினி ஆகிய உறவுகளுக்கு நன்றி.  நான்தான் விடயம் தெரியாது இடத்தில் பதிந்துவிட்டேன். தயவுசெய்து நிர்வாகத்தினர் முடிந்தால் இதைப் பொருத்தமான பகுதிக்கு  நகர்த்திவிடவும்.

Link to comment
Share on other sites

சொந்தக்காரர் வட்டத்தில், நட்பு வட்டத்தில் பெரிதாக கண்டுகொள்வதில்லை.. சில விடயங்களுக்கு, விழாக்களுக்கு என்னை அழைக்காமல் விட்டால் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..  :icon_idea:  ஆனால் வேலை விவகாரங்களில் வேறு மாதிரி.. சுழிக்காமல் ஓய மாட்டோம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பலவிதமான 'நிராகரிப்புகள்' ஏற்பட்டதுண்டு! அதற்கான 'காரணங்களைத்' தேடி நேரத்தை வீணடித்ததும் உண்டு!

 

இரண்டு நிராகரிப்புகள், எனது வாழ்வை மாற்றியமைக்கக் காரணமாகின! வங்கியில் வேலை செய்தபோது, 'தமிழன்' என்ற ஒரே காரணத்துக்காகக் காட்டப்பட்ட 'பார பட்சம்' என்னை, நாட்டை விட்டே வெளியேறும் உந்துதலைத் தந்தது! இப்போது திரும்பிப் பார்க்கையில், அந்த நிராகரிப்பானது, நன்மையிலேயே முடிந்தது!

 

இரண்டாவது நிராகரிப்பு, ஆழமான வலியை ஏற்படுத்தியது! அதுவும், நன்மையிலேயே முடிந்தது!

 

தடைக்கற்களைப் படிக்கற்கள் ஆக்குவதிலேயே, வாழ்வின் சுவை தங்கியிருக்கின்றது, என்பது எனது கருத்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் கூட மறக்க முடியாத வலி ஒன்று உண்டு. வேம்படியில் இல்லங்களுக்கிடையில் விளையாட்டுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும். ஒவ்வொருவருடமும் நானும் என் இல்லத்திற்கு நிறையப் புள்ளிகளைச் சேர்ப்பேன். எமது இல்லமே பெரும்பாலும் முதலமிடத்தைத் தட்டிக்கொள்ளும். முதல் வருடம் யார் தலைவியாக உள்ளாரோ அவரும் மற்றைய ஏ எல் படிக்கும் மாணவிகளுமே பெயரைத் தெரிவுசெய்வர். நான் தான் அடுத்த இல்லத் தலைவி என்று பலரும் கூறிக்கொண்டிருக்க, பழைய இல்லத் தலைவியின் நண்பியாக இருந்த ஒருவரின் தங்கையை , எந்தவித தடகளப் போட்டிகளிலும் பங்குபற்றியிராத  ஒருவரைத் தெரிவுசெய்தமை மரணத்தில் கூட மறக்கமுடியாதது.  அடுத்தவருடம் எவ்வளவுதான் கேட்டும் நான் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளவே இல்லை.

Link to comment
Share on other sites

சுமே அக்கா சொற்கள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும். :)
 
இதைத்தான் சொல்வது குளத்தோட கோவிச்சுகொண்டு பின்பக்கத்தை கழுவமால் இருப்பது என்று. விளையாட்டில் பங்குபற்றினால் உங்களுக்குதான் நன்மை கூட ஒழிய இல்லத்திக்கு இதனால் வருகின்ற நன்மை சிறிது. ஏனெனில் இல்ல அளவில் வெற்றியீட்டீனால்தான் வட்டார , மாவட்ட ,மாகாண அளவில் செல்ல முடியும். யாரோ ஒருவர் செய்ததிற்காக, உங்களை நம்பிய பெற்றோரை எப்படி கைவிட முடியும். :(
 
இன்னும் கடுமையாக உழைத்து அந்த வருடம் இன்னும் கூட புள்ளிகளை எடுத்து நீங்கள் மிகவும் பொருத்தமானவர் என்று அல்லவா காட்டி இருக்கவேண்டும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுமே அக்கா சொற்கள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும். :)
 
இதைத்தான் சொல்வது குளத்தோட கோவிச்சுகொண்டு பின்பக்கத்தை கழுவமால் இருப்பது என்று. விளையாட்டில் பங்குபற்றினால் உங்களுக்குதான் நன்மை கூட ஒழிய இல்லத்திக்கு இதனால் வருகின்ற நன்மை சிறிது. ஏனெனில் இல்ல அளவில் வெற்றியீட்டீனால்தான் வட்டார , மாவட்ட ,மாகாண அளவில் செல்ல முடியும். யாரோ ஒருவர் செய்ததிற்காக, உங்களை நம்பிய பெற்றோரை எப்படி கைவிட முடியும். :(
 
இன்னும் கடுமையாக உழைத்து அந்த வருடம் இன்னும் கூட புள்ளிகளை எடுத்து நீங்கள் மிகவும் பொருத்தமானவர் என்று அல்லவா காட்டி இருக்கவேண்டும்.

 

 

 

 

சுமோ அக்கா எங்காவது பெற்றோர் பற்றி எழுதி இருக்கிறாவா...எனக்கு புரிய இல்லை அதனால் கேட்டேன்..

Link to comment
Share on other sites

சுமோ அக்கா எங்காவது பெற்றோர் பற்றி எழுதி இருக்கிறாவா...எனக்கு புரிய இல்லை அதனால் கேட்டேன்..

 

பெற்றார் தான் எங்கள் திறமை வளர்க்க எவ்வளவோ தியாகம் செய்து கல்லூரிக்கு அனுப்பினம். போட்டியில் வென்று trophy ஐ அவரகளிடம் கொடுத்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடைக்கற்களைப் படிக்கற்கள் ஆக்குவதிலேயே, வாழ்வின் சுவை தங்கியிருக்கின்றது, என்பது எனது கருத்து!

 

நல்லதொரு கருத்து நன்றி புங்கை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக்காரர் வட்டத்தில், நட்பு வட்டத்தில் பெரிதாக கண்டுகொள்வதில்லை.. சில விடயங்களுக்கு, விழாக்களுக்கு என்னை அழைக்காமல் விட்டால் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..  :icon_idea:  ஆனால் வேலை விவகாரங்களில் வேறு மாதிரி.. சுழிக்காமல் ஓய மாட்டோம்.. :D

 

மொய்ப்பணமும்  மிச்சம் தானே இசை. :lol: 

 

 

சுமே அக்கா சொற்கள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும். :)
 
இதைத்தான் சொல்வது குளத்தோட கோவிச்சுகொண்டு பின்பக்கத்தை கழுவமால் இருப்பது என்று. விளையாட்டில் பங்குபற்றினால் உங்களுக்குதான் நன்மை கூட ஒழிய இல்லத்திக்கு இதனால் வருகின்ற நன்மை சிறிது. ஏனெனில் இல்ல அளவில் வெற்றியீட்டீனால்தான் வட்டார , மாவட்ட ,மாகாண அளவில் செல்ல முடியும். யாரோ ஒருவர் செய்ததிற்காக, உங்களை நம்பிய பெற்றோரை எப்படி கைவிட முடியும். :(
 
இன்னும் கடுமையாக உழைத்து அந்த வருடம் இன்னும் கூட புள்ளிகளை எடுத்து நீங்கள் மிகவும் பொருத்தமானவர் என்று அல்லவா காட்டி இருக்கவேண்டும்.

 

 

அடுத்தவருடம் எம்வயதினர் வர முடியாது. எமக்கு அடுத்த வயதினரே வர முடியும்.

 

தடைக்கற்களைப் படிக்கற்கள் ஆக்குவதிலேயே, வாழ்வின் சுவை தங்கியிருக்கின்றது, என்பது எனது கருத்து!

 

நல்லதொரு கருத்து நன்றி புங்கை

 

 

எல்லாவற்றிற்கும் இது பொருந்தாது என நினைக்கிறேன்.

 

..

ஏன் இதைக் கொண்டு வந்து பேசாப் பொருளுக்குள் பதிந்தார்களோ தெரியாது..

 

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கத்  திரியை நகர்த்தியாச்சு யாயினி. 

 

 

ஆகவே எம்மை நிராகரிக்கப்படும் போது ...அது பிழையான நிராகரிப்பாக இருந்தால் ,அங்கே ஏன்,எதற்கு என்ற காரணங்களை பகிர்த்தறிந்து ...............அந்த காரணிகளை உடைத்தெறியும் எம் செயல்பாட்டிலேயே  எம் இனிய நேரங்கள் தங்கியுள்ளது ................ :)

 

 

அதேபோல் சரியான நிராகரிப்பாக இருந்தால் நாம் என்ன தவறு செய்தோம் என்று எம்மை நாமே கேட்டுத் திருந்தவும் செய்யலாம்தானே தமிழ்ச் சூரியன்.

 

Link to comment
Share on other sites

மொய்ப்பணமும்  மிச்சம் தானே இசை. :lol: 

 

 

அதுவும் உண்மைதான்.. :D 40% அரசாங்கத்துக்கு வரிகட்டி, பிறகு மிச்சத்தில் கொஞ்சத்தை இந்த விழாக்களில் கொண்டுபோய் குடுக்க, அவை தண்ணியடிக்கிறதை பார்த்துக்கொண்டிருக்க விருப்பமில்லை.. :D

 

Link to comment
Share on other sites

 

நீங்கள்  விபரமா எழுதினால்த்தானே  நாங்கள் நிர்வாகத்தோட சண்டை போடலாம் சாம்பவி. :D

 

 

என்னால் வேறு தளங்களில் இருந்து புதிய பதிவை இணைக்க முடியவில்லை, எங்கே எனக்காக நிர்வாகத்துடன் கதையுங்கள் பார்ப்போம் சுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் கூட மறக்க முடியாத வலி ஒன்று உண்டு. வேம்படியில் இல்லங்களுக்கிடையில் விளையாட்டுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும். ஒவ்வொருவருடமும் நானும் என் இல்லத்திற்கு நிறையப் புள்ளிகளைச் சேர்ப்பேன். எமது இல்லமே பெரும்பாலும் முதலமிடத்தைத் தட்டிக்கொள்ளும். முதல் வருடம் யார் தலைவியாக உள்ளாரோ அவரும் மற்றைய ஏ எல் படிக்கும் மாணவிகளுமே பெயரைத் தெரிவுசெய்வர். நான் தான் அடுத்த இல்லத் தலைவி என்று பலரும் கூறிக்கொண்டிருக்க, பழைய இல்லத் தலைவியின் நண்பியாக இருந்த ஒருவரின் தங்கையை , எந்தவித தடகளப் போட்டிகளிலும் பங்குபற்றியிராத  ஒருவரைத் தெரிவுசெய்தமை மரணத்தில் கூட மறக்கமுடியாதது.  அடுத்தவருடம் எவ்வளவுதான் கேட்டும் நான் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளவே இல்லை.

சுமே, இப்படியான எண்ணங்கள் தான் உங்கள் ஆளுமையை உருவாக்குபவை!

 

மனிதனின் கோபம் காட்டு வாழ்க்கைக்காவே, அவனுக்குத் தேவைப்பட்டது! கோபம் வரும்போது, உடலின் சகல பகுதிகளும், (மூளை உட்பட) தொழிற்பாட்டை நிறுத்தித், தற்பாதுகாப்பில் மட்டுமே, உடலின் சகல சக்திகளும், குவிக்கப்படுகின்றன! ஏனெனில், அவனது இருப்பு முழுவதும், அந்தக்கணத்திலேயே தங்கியிருக்கின்றது!

 

திருப்பித் தாக்குதல், அல்லது தப்பியோடுதல், என்ற இரண்டில் ஒரு முடிவை அவன் விரைவாக எடுப்பதற்கே, இந்த நிகழ்வு நிகழ்கிறது! கழுத்துப் பகுதி, விறைத்துக்கொள்ள, உடல் தாக்குதலுக்குத் தயாராகின்றது!

 

ஆனால் நவீன வாழ்க்கையில் 'கோபத்தின்' தேவை அற்றுப்போய் விட்டது! உங்களை மாதிரிப் 'பாரிஸ்' பஸ்ஸில் தனியப்போகும், சந்தர்ப்பங்களப்போல, சில சந்தர்ப்பங்களைத் தவிர, அது தேவைப்படுவதில்லை! :o

 

ஆனாலும், மனிதன் கோபப்படுகிறான்! அதன் விளைவாக முதுகுத் தசைகள், தாக்குதலுக்குத் தயாராக முருக்கேறுகின்றன! ஆனால், தாக்குதலை நடத்தினால், காவல் நிலையத்தில் தான் நிற்கவேண்டும்! அதனால் தான், அது நிரந்தர முதுகு, தோள்பட்டை வலியாக , நவீன சமூக அமைப்பில், அது தன்னை வெளிக்காட்டுகின்றது! அதுமட்டுமல்ல, வேலையால், பணத் தேவையால், குடும்பப் பிரச்சனைகளால், கூட, முதுகுத் தசைகள் இறுகுவதாக , இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

சுமே, எனவே, ஆத்திரங்களைக், கோபங்களை, ஒரு நாளும் ஒரு வாரத்துக்கு மேல் கொண்டு திரியக்கூடாது! :icon_idea:

 

உங்கள் மனதில் அல்லது உடலில் ஏற்படும் மாற்றங்களே, நான் சொல்வது சரியென்று உங்களுக்குத் தெரிய வைக்கும்!

 

சரி, இப்போது, கோவித்தவர்களிடம், போய்க் கை குலுக்குங்கள்! :wub:

Link to comment
Share on other sites

அதுவும் உண்மைதான்.. :D 40% அரசாங்கத்துக்கு வரிகட்டி, பிறகு மிச்சத்தில் கொஞ்சத்தை இந்த விழாக்களில் கொண்டுபோய் குடுக்க, அவை தண்ணியடிக்கிறதை பார்த்துக்கொண்டிருக்க விருப்பமில்லை.. :D

 

 

நான் போனால் குடுக்கிற காசுக்கு "குளிச்சிட்டு" வந்திடுவன். :icon_idea:  மிலிட்டரி தண்ணியடிச்ச வாய்க்கு எந்த லேபிளையும் ஊத்திக் கட்டாது.

கூட்டிக் கழிச்சுப் பாத்தா லாபம் எனக்குத்தான். :wub:

Link to comment
Share on other sites

ஆமிக்காரன் என்டு பெயர் இருக்கிறதால இங்க உள்ளவையள் கனபேர் என்னை ஒரு மாரித்தான் பாக்கீனம் போல கிடக்கு. :rolleyes:
சிங்கள ஆமியைத்தான் உவையளுக்கு பிடிக்காதென்றால் ஆமி எண்டு பெயர்வைச்ச என்னையுமா? :huh:
இது கூட ஒரு நிராகரிப்புதான். ஆனால் ஐ டோன்ற் மைன்ட்  இற். :lol:
போகப் போக எல்லாம் சரிவரும். சில நிராகரிப்புகள் அப்படித்தான்.
நிராகரிப்புகளைப் பார்த்து நாம் ஒதுங்குவதும் நாம் செய்யும் ஒருவித நிராகரிப்புதானே. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிப்புகளைப் பார்த்து நாம் ஒதுங்குவதும் நாம் செய்யும் ஒருவித நிராகரிப்புதானே. :icon_idea:

என்னா தத்துவம்? என்னா தத்துவம்?

 

உடம்பெல்லாம் புல்லரிக்குது! :icon_idea:

 

தொடருங்க சாமி!

 

மன்னிக்கவும், ஆமி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் வேறு தளங்களில் இருந்து புதிய பதிவை இணைக்க முடியவில்லை, எங்கே எனக்காக நிர்வாகத்துடன் கதையுங்கள் பார்ப்போம் சுமே

 

ஆப்பு என்பது இதுதான். அவர்களின் சட்டதிட்டங்களுக்கு ஏற்புடையதற்ற விடையத்தை செய்யும்படி கேட்டால் எனக்கெல்லோ சீட்டுக் கிழியும் சாம்பவி. மற்றவர்களினதை   ஏன் நீங்கள் போடுகிறீர்கள். நீங்களாகவே எழுதுங்கோவன். பிரச்சனை தீர்ந்துவிடும்.

இருந்தாலும் உங்களுக்காகக் கேட்டுப் பார்க்கிறேன் :D

 

ஆமிக்காரன் என்டு பெயர் இருக்கிறதால இங்க உள்ளவையள் கனபேர் என்னை ஒரு மாரித்தான் பாக்கீனம் போல கிடக்கு. :rolleyes:

சிங்கள ஆமியைத்தான் உவையளுக்கு பிடிக்காதென்றால் ஆமி எண்டு பெயர்வைச்ச என்னையுமா? :huh:

இது கூட ஒரு நிராகரிப்புதான். ஆனால் ஐ டோன்ற் மைன்ட்  இற். :lol:

போகப் போக எல்லாம் சரிவரும். சில நிராகரிப்புகள் அப்படித்தான்.

நிராகரிப்புகளைப் பார்த்து நாம் ஒதுங்குவதும் நாம் செய்யும் ஒருவித நிராகரிப்புதானே. :icon_idea:

 

எத்தினையோ நல்ல நல்ல பெயர்கள் இருக்க உந்தப் பெயர் உங்களுக்குத் தேவைதானோ ??

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.