Jump to content

என் மனம் .!


Recommended Posts

கடலை போன்றது நிலையாய் இருக்கா

அலையும் காற்றும் உறங்க விடா

படகில் பலர் அலையுடன் பேசி நகர

என் மன வானில் விடி வெள்ளி

 

சீவாத தலை முடியும் பொட்டில்லா

உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை

இரவை நினைவில் கொண்டுவர

உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது

 

நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது

எனக்கு சங்கு சத்தமா கேட்குது

உன் அண்ணன் பார்த்த நாள் முதல்

கனவிலும் சுடலை தெரியுது

 

நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை

நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை

நான் உன்னை அடைய விரும்பினேன்

ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான்

 

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்

அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்

பயணம் செய்து கொண்டு இருக்கும்

உன்னை தேடி காதலியே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
அஞ்சரன் காதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

 

என்ன இது புதுக்குழப்பம்... வீட்டிலை புட்டுப்பானையால அடிவிழப்போகுது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்

அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்

பயணம் செய்து கொண்டு இருக்கும்

உன்னை தேடி காதலியே .

 

கவிதை, நல்லாயிருக்கு, அஞ்சரன்!

 

என்றோ ஒரு நாள் என்று பொதுவாகச் சொல்லாமல், ஒரு பத்து வருடம் அல்லது இருபது வருடம் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள்!

 

இல்லாவிட்டால் இரண்டுபேரும் சேரும்போது, மேலதிகமாக இரண்டு ஊன்று தடிகளும் தேவைப்படும்! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கவிதை, நல்லாயிருக்கு, அஞ்சரன்!

 

என்றோ ஒரு நாள் என்று பொதுவாகச் சொல்லாமல், ஒரு பத்து வருடம் அல்லது இருபது வருடம் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள்!

 

இல்லாவிட்டால் இரண்டுபேரும் சேரும்போது, மேலதிகமாக இரண்டு ஊன்று தடிகளும் தேவைப்படும்! :D  

 

காத்திருப்பதுதான் காதலில் சுகம் அண்ணே :rolleyes:

என்ன இது புதுக்குழப்பம்... வீட்டிலை புட்டுப்பானையால அடிவிழப்போகுது.. :D

 

வாழ்த்துவம் எண்டு இல்லை...... :(  போட்டு கொடுக்குறது கூடாது சுபேஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்திருப்பதுதான் காதலில் சுகம் அண்ணே :rolleyes:

 

 

 

அடுத்த காதல் வரும் வரைக்கும்  இப்படித்தான் சொல்லுறாங்கள் பயபுள்ளைங்க... :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தக் காதல் எல்லோரையும் கவி வடிக்க வைத்து விடுவது ஆச்சரியம் தான்.

Link to comment
Share on other sites

அஞ்சரன்.. கவலை வேண்டாம்.. விண்மீன்களை நீங்கள் காணப்போவது உறுதி..

கன்னியின் சிரிப்பைக் காணாட்டிலும் அண்ணன் இருக்கிறார்தானே.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனின் காதல் நின்று நிலைத்து வாழட்டும். 

Link to comment
Share on other sites

கடலை போன்றது நிலையாய் இருக்கா

அலையும் காற்றும் உறங்க விடா

படகில் பலர் அலையுடன் பேசி நகர

என் மன வானில் விடி வெள்ளி

 

சீவாத தலை முடியும் பொட்டில்லா

உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை

இரவை நினைவில் கொண்டுவர

உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது

 

நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது

எனக்கு சங்கு சத்தமா கேட்குது

உன் அண்ணன் பார்த்த நாள் முதல்

கனவிலும் சுடலை தெரியுது

 

நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை

நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை

நான் உன்னை அடைய விரும்பினேன்

ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான்

 

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்

அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்

பயணம் செய்து கொண்டு இருக்கும்

உன்னை தேடி காதலியே .

 

இதுக்கெல்லாம் சிங்க(ன் )ம் பயந்தால் எப்பிடி :lol: :lol: ?? அருமை மேலும் தொடர்ந்து எழுதுங்கள் அஞ்சரன் :) :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.