Jump to content

ஐந்து ஐந்து ஐந்து 555 விமர்சனம்


Recommended Posts

தலைவா ரிலீஸில் ஏற்பட்ட குளறுபடிகளால் தீடீர் மாப்பிள்ளையாகி சனிக்கிழமை ரிலீஸானது 555.  தலைவாவிற்க்காக காத்திருந்த நிறைய தியேட்டர்கள் 555 யை ரிலீஸ் செய்திருக்கின்றன.

கதை: ஒரு கார் ஆக்சிடண்டில் கொடூரமாய் அடிபடும் அரவிந்த் (பரத்) என பரபரப்பாய் துவங்குகிறது படம். அதன் பின் அவர் தன் காதலி லியானாவை (மிருத்திகா) நினைத்து பீலு பீலு என பீல் பண்ணிக்கொண்டிருக்க.. அந்த பெண்னைப் பார்த்த, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரங்கள் என இவர் நினைத்திருந்த எல்லாமே காணாமல் போய்விடுகிறது. எல்லாம் பிரம்மை அப்படி ஒரு பொண்ணே இல்லை.. விபத்துக்கு அப்புறம் உன் மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் தான் இப்படி கற்பனையாய் சில விசயங்களை உருவாக்கியிருக்கிறது. இப்போது நீ குணமாகிக்கொண்டிருக்கிறாய் அதனால் தான் அவள் இல்லை என உன்னால் உணர முடிகிறது என அவருக்கு சிகிச்சை அளிக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், பரத்தின் அண்ணனான சந்தானமும் சொல்ல.. ஆனால் அதை பரத் நம்பமுடியாமல் தவிக்கிறார்.

ஏதோ உருத்தலில் மீண்டும் அந்தப் பெண் இருந்த இடத்திற்கு சென்று பார்க்க, அவள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கிறது, கூடவே ஒரு கூட்டமும் இவரைத் துரத்துகிறது.  அப்புறம், சண்டை போடுகிறார், சந்தானம் சாகிறார், போலிஸ் துரத்துகிறது, வில்லன் வருகிறார். அந்தக் காதலி உண்மையிலேயே இறந்தாளா இல்லையா, இதன் பின்னணியில் யார், என்ன காரணம் என நமக்கு சொல்லி படம் முடிகிறது. கதையில் சில விசயங்களை சொன்னால் பார்க்க போகும் கொஞ்ச நஞ்ச பேருக்கும் சுவாரஸ்யம் குறையலாம் என்பதால் அதை நீங்கள் வெள்ளித்திரையில் காண்க.

ஒரு படத்திற்கு விளம்பரம் எப்படி செய்வார்கள்? அந்தப் படத்தின் கதையில் அல்லது மேக்கிங்கில் இருக்கும் ஏதாவது சுவாரஸ்யமான  ஒன்றை எடுத்துக்கொண்டு விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் இந்தப் படத்தின் மொத்த விளம்பரத்திற்கும் அடிப்படை பரத்தின் சிக்ஸ் பேக் உடற்கட்டுதான். அப்பவே நாம உசாராயிருக்னும்.  ட்ரைலரை நம்பி மோசம் போயிட்டோம்.

உண்மையில் அட்டகாசமான ட்ரைலர் தான்.  அந்த 1 நிமிடக் காட்சிகள் மட்டும் தான் மொத்தப் படத்திலேயே தேறியிருக்கிறது என்பது தான் பரிதாபம்.

கஜினி மாதிரி ஒரு படம் எடுக்கனும்னு நினைச்சிருப்பாங்க போல.. ஆனால பாவம் இயக்குநர் சசியும் கஜினியைப் போலவே ஷார்ட்டைம் மெமரி லாஸில் கதைக்கு தேவையான பல விசயங்களை மறந்துவிட்டு பரத்தின் 6 பேக்கும், 4 ட்விஸ்டும் போதும் என நினைத்து இறங்கிவிட்டார்.

நாயகன் எதைச் சொன்னாலும் அப்பாவியாய் நம்பும் கேணையான ஹீரோயின் காரக்டர் இங்கும். சில காட்சிகள் ரசிக்கும் படியாய் இருந்தாலும் அதையே இழு இழுவென இழுத்தடித்து கடுப்பேத்துகிறார்கள். அதுவும் அந்த காரில் போகும் போது கிப்டை பிரிக்கும் காட்சி.. உனக்கு பவர் இருக்கு ட்ரை பண்ணு இதுக்குள்ள என்ன இருக்குன்னு கண்டுபுடி.. அப்பத்தான் நம்ம காதல் ஜெயிக்கும்னு ஹீரோயின் கெஞ்சி பரிதவிக்கிறார்.. ஏன்னா பரத்துக்கு அந்த பவர் இருக்கான்னு செக் பண்ணுறதுக்காக அந்தப் பொண்ணோட ஆண்டி போனில் இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். போன்தானம்மா உன் காதல் அவ்வளவு முக்கியம்னா கண்ஜாடை காட்டிட்டு கிப்ட பிரிச்சுக் காமிச்சுட வேண்டியதுதானே?  வழக்கமான நாயகிகளை போலவே இவருக்கும் மூளை வளர்ச்சி குறைவு போல.. அப்புறம் க்ளைமாக்ஸ்லயும் விடாம உனக்கு பவர் இருக்கு நான் நம்புறேன் என அவர் பிணாத்தும் போது.. அந்த பவர் ஸ்டாராச்சம் வந்து காப்பாத்த மாட்டாராண்ணு நம்மள பீல் பண்ண வச்சுடுறாங்க பாஸ்.

இதெல்லாம் கூட நாம சகிச்சுக்கலாம் பாஸ்.. கடைசில வில்லன்னு ஒருத்தர கொண்டுவந்து அவருக்கு ஒரு ப்ளாஸ்பேக்குன்னு ஒண்ண ஓப்பன் பண்றாங்க பாருங்க.. அங்க தான் பாஸ் ஆக்சுவலா கதையை குழிதோண்டி புதைக்குறாங்க. இவரு சின்ன வயசுல குஜராத்ல ஒரு பொண்ண லவ் பண்ணாராம்.. அந்த கிராமத்து மக்கள் அதை ஏத்துக்காம பிரிச்சு, கௌரவக்கொலைன்னு ரெண்டு பேரையும் கொல்ல பாக்குறாங்க.. அந்தப் பொண்ணு இறந்துடுறா.. இவர தப்பிச்சு சென்னைக்கு வந்து இம்மாம்பெரிய பிஸினெஸ் மேக்னட் ஆகிடுறாரு.. வயசும் ஆயிடுச்சு.. ஒரு இஸ்கூலுக்கு ஏதோ நல்ல காரியம் பண்ண போக அந்த இஸ்கூலுல படிக்குற நம்ம கதாநாயகி எழுந்து ஏன் சார் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கலைன்னு கதைக்கு அவசியமான அந்த கேள்வியைக் கேட்க, இந்த பொண்ணைப் பார்த்து நம்ம வில்லன் சாருக்கு பயங்கர ஷாக்கு.. ஏன்னா இந்த பொண்ணு இவரு லவ் பண்ணி செத்துப்போன அந்தப் பொண்ணு மாதிரியே.. உடனே இவளை எப்படியாவது அடைவேன் என அந்த ஸ்கூல் கொடிக்கம்பத்துக்கு கீழேயே கையைத் தூக்கி உறுதிமொழி எடுத்துக்குட்டு, அவளோட அப்பா, அம்மாவ ஒரே ஷாட்ல கொண்ணுட்டு, இந்த ஹீரோயினை தத்து எடுத்து, ஒரு அழகான ஆண்டியை செலக்ட் பண்ணி (அவளுக்கு என்ன வேலைன்னா இந்த பொண்ணை பொருப்பா, யாரையும் லவ்வு கிவ்வு பண்ணிடாம வளக்குறதாம்) காலேஜ் முடிச்சதும் நம்ம வில்லன் சார் ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாணம் பண்ணிப்பாராம். பூ படம் எடுத்த சசி இப்படி வண்டி வண்டியா பூ சுத்த, நமக்கு மூச்சு முட்ட.. .. என்ன எழவுடா இதுன்னு நாம டென்சனாக உடனே நம்ம மூடை புரிஞ்சுகிட்டு ‘எழவு’ண்ணு ஒரு பாட்டை மியூசிக் டைரக்டர் போட்டு நம்மள இம்ப்ரஸ் பண்றாரு பாருங்க…ப்ப்ப்பா.

இதுக்கு மேலயும் இந்த காதலுக்கு என்ன ஆச்சுண்ணு அவசியம் தெரிஞ்சுக்கணும்னா படத்தை தூக்கறதுக்குள்ள ஓடிப்போய் பாத்து உங்க கலைத்தாகத்தை தீர்த்துக்கங்க பாஸ்.

பரத்திற்கு 6 பேக்கோ 8 பேக்கோ ரெடி பண்ணுவதே குறிக்கோளாய் இருந்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது.. இதுவரை நாம் பார்த்த சினிமா சிக்ஸ் பேக் உடற்கட்டுகளையெல்லாம் ரொம்ப சாதாரணமாக்கிவிட்டது இவரது உடலில் புடைத்தி நிற்கும் நரம்புகளும், செதில் செதிலாய் திரண்டு நிற்கும் தசைகளும்.

கதாநாயகி மிருத்திகா. இன்னொரு கேரள வரவு. சுவாரஸ்யமான முகமும் முகபாவங்களும்.

இன்னொரு நாயகி எரிக்கா பெர்னாண்டஸ். ஒரு பாடல், சில காட்சிகள் அப்புறம் இரண்டாவது நாயகிகளுக்கே உரித்தான இலக்கணத்தில் செத்துப்போகிறார்.

இசை அறிமுகம் சைமன். எழவு என்ற பாடலில் கவனத்தை ஈர்க்கிறார். முதல் மழைக் காலம் பாடல் ரம்மியமாய் இருக்கிறது. இதே போல மற்ற பாடல்களிலும் கவனம் செலுத்தினால் முன்னேறி முன்னணியில் சேரலாம்.

ஒளிப்பதிவாளர் அறிமுகம் சரவணன் அபிமன்பு. படத்தின் ட்ரைலர் உண்மையில் இவரது திறமைக்கான ஷோ ரீல்தான். முதல் ஆக்ஸிடெண்ட் காட்சியிலிருந்து, ஆங்காங்கே தன் தனித்திறமையை பதித்திருக்கிறார்.

இந்தப் படத்தால் பரத்திற்கு மட்டும் லாபம். 6 பேக்கோ 8 பேக்கோ ரெடி பண்ணி, அப்படியே ஹிந்திப் பட சான்சும் வர, சன்னி லியோனியோட தண்ணில விளையாடிகிட்டிருக்கார்.

நடிகர் பரத் சிக்ஸ் பேக்குக்காக எடுத்துருக்கும் அசாதாரண முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது இயக்குநர் சசி கதை, திரைக்கதையில் செலுத்தியிருந்தால் ஒரு வேளை நல்ல ஆக்சன் படமாய் வந்திருக்கலாம்!http://goldtamil.com/?p=6173

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.