Jump to content

முஸ்லீம் காடையர்கள் மேற்கொண்ட வீரமுனை தமிழினப் படுகொலை நாள் இன்று.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று.

 

முஸ்லிம் காடையர்களாலும் தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறையான தாக்குதல்களும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன.

 

இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூர், வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர். மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.

இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன. முஸ்லீம்களின் செயலால் தூண்டப்பட்டு.. தமிழர்கள் செய்த செயல்கள் போலவே.. தமிழர்களால் தூண்டப்படாமல் சிங்களவர்களின் தூண்டுதலின் பெயரிலும் மதத்தின் பெயரிலும்.. முஸ்லிம்களும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. // தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட முஸ்லிம் பயங்கரவதாதத்திற்கு ஒரு சாம்பிள் இது

 

(thanks: kalachuvadu) மற்றும் முகநூல்.)

 

///கீழே முஸ்லிம்கள் தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து செய்த தமிழின அழிப்புகள் பற்றிய ஒரு தொகுதி பட்டியல் உள்ளது.

தவறு இருபக்கமும் நிகழ்நதன. புலிகளினதை மட்டும் முன்னிறுத்தி செய்யும் விவாதம் கண்டிக்கத்தக்கது. தற்போது முஸ்லிம்களுக்கு அதனை குத்திக்காட்ட இதை பதிவு செய்யவில்லை.

அடுத்த இன அழிப்பு இலக்கு தாம்தான் என்பதை உணராமல் சிங்களத்துடன் துணைக்கு நின்றதன் விளைவை இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தூர நோக்கற்ற பார்வையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறுகிய பார்வைகளுமே இதற்கு காரணம். இருபக்க பகையை மறந்து முஸ்லிம்கள் தமிழர்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம் இது.///
- முகநூலில்.. பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த உயிர்களுக்கு, ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

மரணித்த உயிர்களுக்கு, ஆழ்ந்த அஞ்சலிகள்!


995780_601680133218196_1995926424_n.jpg
தமிழர்களின் பாரம்பரிய கிராமமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று //

சிங்கள முஸ்லிம் கூட்டுப்பயங்கரவாதம்..

(முஸ்லிம்கள் மீதான புலிகளின் வன்முறைகள் குறித்து பேசுபவர்கள் இவற்றை மறந்துபோவதன் அரசியல்தான் எமக்கு புரியவில்லை. )
 

 

Link to comment
Share on other sites

நினைவு அகவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

அஞ்சலிகள்.... 

 

 

இந்த ஜனநாயக செயலை  எதிர்த்து தட்டிக்கேட்டதால் தான் புலி பயங்கரவாதிகள் அழிஞ்சு போனார்கள் எண்டு சொல்லும் ஜனநாயக குஞ்சுகளை நினைக்கும் போது இந்த தருணங்களின் அவர்களின் வரலாற்று அறிவை நினைக்க  பெருமையாக இருக்கிறது.... !  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.