Jump to content

மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி?


Recommended Posts

மரணம் பற்றிய கருத்துக்கள் மிகவும் அழகாகச் செல்லுகின்றது!

 

குறிப்பாகத் தமிழச்சி, பாஞ்ச் போன்றவர்களின் கருத்துக்கள், மறுபிறவிக் கொள்கையையும் ஓரளவுக்குத் தொட்டுச் செல்கிறது!

 

இந்த இடத்தில, சைவமதம் தன்னைத் தெளிவாக்குகின்றது! 

 

'புல்லாகிப், பூடாகிப், புழுவாய் மரமாகிப், பல்மிருகமாய்ப் பறவையாய்ப் பாம்பாகி. எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான்.... என மணிவாசகர் குறிப்பிடுகிறார்!இந்து மதம் போன்று, சைவமதம் பிறப்புக்களை வரிசைப்படுத்தவில்லை! மிருகமாய்ப் பிறந்த பிறகு, பாம்பாதலைக் கவனிக்கவும்!கருமாவைப் (கருமம்) பிறப்புடன் சம்பந்தப் படுத்தல், வருணாச்சிர தர்மத்தின் பின்பே நிகழ்ந்திருக்க வேண்டும்!

 

ஆனால் கிறிஸ்தவ மதத்தின், மரணம் பற்றிய கருத்தில் எனக்குத் தெளிவில்லை!

 

பாவத்தின் சம்பளம் மரணம் என்று வாசித்திருக்கின்றேன்!

 

அப்படியானால், மரணம் ஒரு தண்டனை எனக் கருதப்படுகின்றதா?

பலரிடம் கதைக்கும்போது கேட்டுப்பார்த்தேன்! ஒருவரும் தெளிவான விளக்கத்தைத் தரவில்லை!

யாழ் உறவுகளிடமிருந்து, இதற்கான தெளிவைப்பெறலாம் என எதிர்பார்க்கின்றேன்!

 

 மேலே குறிப்பிட்டதே ஏன் வரிசைப் படுத்தலாக இருக்கக்கூடாது?  ஒவ்வொரு பிறப்பிலிருந்தும் ஏதோ சில விடயங்களாவது (அணுக்கள் மூலம்) அடுத்த பிறப்பிற்குக் கடத்தப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.  அதற்குள் கருமாவும் அடங்கும் என்று நினைக்கிறேன்.  தேவை கருதி, கருமா முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

ஆன்மீக ரீதியில் மரணம் தொடர்பான தேடல்..................

 

இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை. கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது. 
 
கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இந்து மதத்துக்கே உரியதான இந்த தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வணிகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.
 
ஆதிகால கிரேக்க சமய மரபுகள் (Greek Gnosticism) இந்து சமய நம்பிக்கைகளை ஒத்திருக்கக் காணப்படுகின்றன. எம்பிடொக்கில்ஸ், பைதகொறஸ் போன்ற பேரறிஞர்கள் மறுபிறப்புத் தத்துவத்தை மக்கள் மத்தியில் கூறிவந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து பிளாட்டோவும் மறுபிறப்பு நம்பிக்கையை வலியுறுத்தினார்.
 
யூதர்களின் வழிகாட்டியும், அவர்களின் சமயக் கோட்பாடுகளுக்கு ஆரம்ப வித்திட்டவருமான மோசஸ் பரப்பிய “கபாலா” தத்துவம் மறுபிறப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் பின்னால் வந்த “மிஷ்னா”, “தல்முட்” என்ற யூத போதனைகளில் இத்தத்துவம் ஏனோ வலியுறுத்தப்படவில்லை. ஆரம்பகால கிறிஸ்தவ தத்துவங்களிலும் சிந்தனைகளிலும் மறுபிறப்பு நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
 
கி.பி. 538 – ம் ஆண்டின் கான்ஸ்டான்ட்டினோபிளில் நடைபெற்ற மகாநாட்டில் (Council of Constantinople) தான் முதல் தடவையாக ஜஸ்ரீனியன் என்ற பேரரசன் மறுபிறப்பில் நம்பிக்கை வைப்பது திருச்சபைக்கு இழிவு ஏற்படுத்தும் செயல் (Anathema) என்று சட்ட மூலமாகப் பிரகடனப்படுத்தினான்.
 
Irantha-Pin---17.png
 
இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (Sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.
 
“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………”
 
(ஆதாரம் The mystics of Islam by Reynold.A Nicholson).
 
இப்பாடல் மாணிக்கவாசக சுவாமிகளின் பின்வரும் திருவாசகத்தை நினைவுறுத்துகிறது.
 
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவாராயத் தேவராய்ச்
செல்லா அநின்றவித் தாவர சங்கமத்து
ளெல்லா பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்”.
 
மனிதன் முக்தியடையும் வரை அவனுடைய ஆத்மா பிறப்பெடுத்துக் கொண்டேயிருக்கும் என்று இந்து சமயம் புகட்டுகிறது.
 
கி.மு. 5 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெறோடொட்டுஸ் (Herodotus) என்பவர் “எகிப்தியர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தனர் மனிதனின் ஆத்மா அழிவற்றது. மனிதன் இறந்தவுடன் இன்னொரு உடலினுள் அவனுடைய ஆத்மா புகுந்து விடுகிறது என்று நம்பினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
 
அலெக்சாந்திரியாவின் கிளமேந்து என்னும் போப்பாண்டவர் (2ம் நூற்றாண்டு) அதேகாலத்துப் பேரறிஞர் ஓறிஜின் ஆகியோரும் மறுபிறப்பு தத்துவத்தில் தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.
 
ஜெருசலத்தில் பிரம்மாண்டமான தேவாலயத்தை நிறுவிய இஸ்ரவேல் நாட்டின் புகழ்பெற்ற மன்னன் சாலமன் (கி.மு 970 – 933) வெளியிட்ட “அறிவுக்களஞ்சியம்”  (book of wisdom) என்ற தனது நூலில் “நான் நல்லவனாயிருந்ததால் எனது ஆத்மா ஒருநல்ல உடலில் புகுந்து கொண்டது” என்று கூறியுள்ளார்.
 
மேற்கு நாட்டு அறிஞர்கள் பலர் மறுபிறப்பில் தமக்கு உண்டான நம்பிக்கையை தங்கள் நூல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த Samuel Alexander (1859 – 1939) பிறான்ஸ் தேசத்தைச் சேர்ந்த Henri Bergson (1859 – 1941) ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பேரறிஞர் எமேர்சனும் (1803 – 82) மறுபிறப்புத் தத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
 
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த டாக்டர் இவான்ஸ் வென்ஸ் (Dr. Evans Ventz) ஒரு ஞான ஆராய்ச்சியாளர். இவர் 1958-ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் உரையாற்றிய பொழுது, “இன்னும் ஐம்பது வருடங்களில் விஞ்ஞானிகள் மறு பிறப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிடுவார்கள்” என்று கூறினார். இன்றைய சமுதாயம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்ந்தறிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமுடையது. இருந்தும் இறப்புக்குப் பின் ஏதோவொரு வகையில் மனித வாழ்வு தொடர்கின்றது என்ற நம்பிக்கை இப்போது உலக மக்கள் மத்தியில் பரவலாக நிலை பெற்றுவிட்டது.
 
கடவுளை நம்புகிறவர்களுக்கு கர்மாவிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மேலே குறிப்பிட்டதே ஏன் வரிசைப் படுத்தலாக இருக்கக்கூடாது?  ஒவ்வொரு பிறப்பிலிருந்தும் ஏதோ சில விடயங்களாவது (அணுக்கள் மூலம்) அடுத்த பிறப்பிற்குக் கடத்தப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.  அதற்குள் கருமாவும் அடங்கும் என்று நினைக்கிறேன்.  தேவை கருதி, கருமா முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கலாம்.  

பாம்பாகிக், கல்லாய், மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய்,

வல்லசுரராகி, முனிவராய்த் தேவராய்..........

 

இருக்கலாம், தமிழச்சி!

 

ஆனால், சைவமதம் வேறொரு இடத்தில,

 

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்,கங்கைவார் சடைக்கரந்தார்க்கன்பராகில், அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!

 

என்றும் கூறுகின்றது!

 

ஆனால், கீதை மட்டுமே  'Dog Eater' என்னும் வார்த்தை மூலம், மனு தர்மத்தை, அடிக்கடி நினைவூட்டுகின்றது! கீதையைத் தமிழின் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை!

Link to comment
Share on other sites

எனது நண்பருடன் இந்த  திரி பற்றி பேசினேன் .ஒரு அனுபவம் கூறினார் .........
 
அவருக்கு புக்கை வெறி ....அவரிடன் வந்த ஒரு நண்பர் குடும்பம் வீட்டுக்கு புறப்பட தயாராய் இருந்தது ...........அவருக்கு கார் திறப்பு எடுத்தது மட்டும் நினைவு ...அடுத்தநாள் காலை தனது பெட்டில் இருந்து எழும்பியது மட்டும்தான் அவருக்கு தெரியும் ..............[புக்கை வெறி ] ....அவர் சொல்கிறார் அதுதான் அவரது மரணம் என்கிறார் ........................இப்படித்தான் மரணம் இருக்குமா ............[உளவியல் பார்வை ] :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள், நுணா!

 

நேரம் கிடைக்கும்போது வாசித்துப் பார்க்கின்றேன்! :D

Link to comment
Share on other sites

மரணம்பற்றிய பதிவுகளைத் தேடியபோது கிடைத்த இனிதான ஒரு பதிவு. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:

 

நான் எனது குடும்ப மருத்துவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவரது இரு பெண் குழந்தைகளுக்கும் மாலை நேரத்தில் மொழி ஒன்று கற்றுத் தரும் பணி எனக்கு. நான் சென்றகாலை குழந்தைகள் யாரும் அவரது அறையில் இல்லை. ஆகவே அவருடன் ஓர் இரண்டு வார்த்தைகள் பேசலாம் என அழைத்தார்

 

என்ன விசேடம் இன்று ? நெற்றியில் ஏதேதோ இருக்கிறது என்றார்.

ஆம்..டாக்டர் சார் இன்று என்னுடைய தந்தையின் திதி. அதற்கான சடங்குகள் இப்பொழுதுதான் முடிந்தன அதனால் தான் வருவதிலும் தாமதம். என்றேன்

 

என்னது உங்கள் தந்தை இறந்துவிட்டார் என்றா சொல்லுகிறீர்கள் ? என்று

கேட்டார்

ஆம். அதற்குத்தானே சடங்குகள் செய்தேன் என்றேன்.

 

உன் அப்பா இறந்து விட்டார் என்றா நினைக்கிறாய் என்றார் மறுபடியும்.

ஆம். அவர் நினைவுகள் இன்று இருக்கின்றன. ஆயினும் அவர் இவ்வுலகு விட்டு நீங்கிவிட்டார் என்றேன்.

 

நான் சொல்கிறேன். உன் அப்பா இறக்கவில்லை .. என்றார்.

என்ன டாக்டர் ஜோக் அடிக்கிறீர்கள். என்றேன்.

 

இல்லை. நீ என் கண் முன்னே இருக்கும் வரை உன் தந்தை இல்லை என்பதை என்னால் ஒரு பயலாஜிகல் ரீதியாகக் கூட ஒத்துக்கொள்ள இயலாது

ஏன் ?

 

நீ எப்படி இவ்வுலக்குக்குள் வந்தாய் ? உடல் இயல் படி பதில் கூறு.
Tell me biologically. no sentiments please.

 

எந்தையும் தாயும் கூடி .....என துவங்குவதற்குள் என் மனதில் ...தோன்றியது.

 

விழுந்தது லிங்கம். விரிந்தது யோனி.

ஒழிந்த முதல் ஐந்து ஈரைந்தோடு ஏறிப்

பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்

ஒழிந்த நுதல் உச்சி உள்ளம் ஒழித்ததே. ( திரு மந்திரம். 455)

 

ஐயா , எனது தந்தையின் ஒரு துளி திரவம் என் அன்னையின் கருப்பையில் புகுந்து நான் ஆனேன்.

 

அந்த துளியினால் தானே நீ தோன்றினாய்.
you agree you are from that drop of his sperm.
ஆம்.

அந்தத்துளி தன்னைத்தானே பெருக்கிகொண்டது. ஒன்று இரண்டாக இரண்டு நான்காக நான்கு எட்டாக எட்டு பதினாறாக பதினாறு முப்பத்தி இரண்டாக,

இது போல, அந்தத்துளி விழுந்த ஒன்பதாம் மாதம் ஒரு கோடி க்குமேல் செல்களுடன் நீ பிறந்தாய் என்பது தானே உண்மை.

23 அம்மைக்கு சொந்தம் 23அச்சனுடயது. இன்னமும் படிக்க இங்கு செல்லவும்.

 

அந்தத்துளி இன்னமும் ஏதோ ஒரு உருவத்தில் உன்னிடத்தில் தொடர்ந்து இருக்கிறதல்லவா ?

சட் என என் மண்டையில் உதித்தது. நான் இன்று இருக்கிறேன் . அதே தருணத்தில் என் தந்தையும் என்னுள் இக்கணம் இருக்கிறார் . அது மட்டுமல்ல .தொடர்ந்து என்னுடன் பயணிக்கிறார்

 

அவர் இறந்துவிட்டார். இல்லை எனச் சொல்ல வில்லை. ஆயினும் அவர் தனது உயிரின் ஒரு பகுதியை, அது எத்துனை சிறிதாக அன்று இருந்தாலும்

இன்றும் அது உயிருடனே இருக்குமாறு செய்து இருக்கிறார்.

அவரின் ஒன்று இன்னும் உயிருடன் இருக்கிறது. ஆம். உன்னில் இருக்கிறது. உன்னில் உன் தந்தை இருக்கிறார். இந்த லாஜிக்கை தொடர்ந்து சொல்லிக்கொண்டு போனால்,

உன்னில், உன் தந்தை மட்டு மல்ல , அவர் தந்தையும் இருக்கிறார். ஏன் ...அவருக்குத் தந்தையும் இருக்கிறார். ஆக, ஏதோ ஒரு கணத்தில் இப்புவியில் தோன்றிய ஒரு மனித உயிர்த்துளி இன்னும் உறங்காது இன்னும் இன்னொரு உயிரிலே அதுவும் தான் காரணமாய் இருக்கும் ஒரு உயிரிலே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

 

இந்த கணத்தில் அந்த முதல் துளி யார் என்ற கேள்விக்கு நான் செல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருடபுராணம் என நினைக்கின்றேன் , அதில் எமதர்மனுடன் நசிகேதன் உரையாடுகின்றான். அப்போது எமன் மிகத் தெளிவாகவே சிறுவனுக்குக் கூறுகின்றான் ஆண்ட வெளியில் இருக்கும் ஆத்மா எவ்விதம் மழையுடன் கலந்து, தாவரங்களை யடைந்து பின் விந்துகளாக ஜீவராசிகளிடத்தில் சேர்ந்து பிறப்பெடுக்கின்றது என்று . அதுஒரு கருத்துள்ள  உரையாடல். அது கிடைத்தால் நான் பின்பு பதிகின்றேன்.

 

நீங்கள் உங்கள் ஜாதகத்தை ஒருக்கால் பாருங்கள் . அதில் கடைசியில் இருக்கும் ஜென்மத்தில் ,கருப்பையில் கழிந்தது போக இருப்பு என்று கூறி  இப்ப  இன்ன திசை, இன்ன புத்தியில் ஜீவனின் இருப்பு  வரு. மா. நாள். வினாடி எனத் தெளிவாகப் போட்டிருக்கும் .

அதாவது பிரமாண்ட ஜோதியிலிருந்து  எப்ப  ஒரு ஆத்மாவாக ஜனித்ததோ அதிலிருந்து அந்தக் கணக்கு வந்துகொண்டிருக்கு . இதற்குள் அந்த ஆத்மா பல பிறவிகள் எடுத்திருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 5

 

முன்ஷி ஆய்வும், இறந்தவர்கள் வழிபாடும்

 

இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும். முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். "பவான் ஜேர்னல்" என்ற சஞ்சிகையில் (13-7-69) அவர் எழுதிய கட்டுரையில், தான் 1903-ம் ஆண்டு இறந்த தனது தந்தையுடனும், 1821-ல் இறந்த நெப்போலியனுடனும், இன்னும் சேர் ஒலிவர் லொட்ஸ், மீராபாய், மோதிலால் நேரு ஆகியோருடனும் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார். 
 
K-M-Munshi.png1930-ம் ஆண்டு தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு முன்னர், திரு.முன்ஷி காஷ்மீருக்குத் தனது குடும்பத்தினருடன் போய் வரத் திட்டமிட்டார். அதற்காக ஒரு ஆவியை அழைத்து காஷ்மீருக்கு எப்போது போவது நல்லது என்று கேட்டார். ஆவி, "நீங்கள் அங்கு போக மாட்டடீர்கள், ஜெயிலுக்குப் போகப் போகிறீர்கள்" என்று கூறியதாம். ஆவி கூறியது போலவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
 
இன்னொரு சந்தர்ப்பத்தில் வேத வியாசரின் ஆவியை அழைத்தார் திரு.முன்ஷி. வேத வியாசர் என்று தன்னைக் கூறிக் கொண்டு வந்த ஆவி பிரம்ம சூத்திரத்தின் முதல் சுலோகத்தை தட்டுத்தடுமாறிக் கூறியதாம். அச்சுலோகத்தைச் சரியாகக் கூறும்படி வற்புறுத்திய பொழுது அவரைக் கேலி பண்ணியதாம்.
 
திரு.முன்ஷி டில்லியில் ஒரு வீடு வாங்கத் தீர்மானித்து, தனக்குப் பிரியமான ஆவியை அழைத்து ஆலோசனை கேட்டார். அந்த ஆவி ஒரு நபரின் முகவரியைக் கொடுத்து அவருடன் தொடர்புக் கொள்ளும்படி கூறியது. ஆவி கொடுத்த விபரப்படி ஒரு தெருவோ, வீடோ டில்லியில் இருக்கவில்லை.இதனால் ஆவி கூறுபவையெல்லாம் உண்மையென்று ஏற்கவும் முடியவில்லை. முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானவை என்று நிராகரிக்கவும் முடியவில்லை.
 
ஒரு குறிப்பிட்ட நபரின் ஆவி என்று கூறிக் கொண்டு "மீடியம்" மூலம் தன்னை வெளிப்படுத்தும் ஆவி உண்மையிலேயே அந்த நபரின் ஆவிதானா என்பதையும் ஆவிகள் கூறுவதெல்லாம் நம்பககரமானவை தானா என்பதையும் பின்னர் ஆராய்வோம்.
 
மூதாதையரை வணங்கும் வழக்கம் உலகின் நாகரீக இனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எகிப்தியர்கள் இறந்தவர்களின் சடலங்களைப் பத்திரப்படுத்தி வைத்து அவைகளின் மேல் "பிரமிடு" கட்டி வைத்தார்கள். பாபிலோனியர்கள், தங்கள் மூதாதையர்களின் சவக்குழிகளுக்கு மேல் கட்டிடங்களை அமைத்து, அவைகளை அலங்கரித்து, அவைகளுக்கு மரியாதை செலுத்தி வந்தார்கள். பார்சிக்காரர்கள், குறிப்பிட்ட சில தினங்களில் தங்கள் மூதாதையரின் ஆவிகளை வணங்கி, அவைகளின் ஆசிகளையும் வழி நடத்தலையும் வேண்டி நிற்பர். பண்டைக்கால எபிரேபிய மொழியில் ஈலோஹிம் என்பது இறந்து போனவர்களின் ஆவியையே குறித்தது. தற்காலத்தில் ஈலோஹிம் என்றால் கடவுள் என்று மொழி பெயர்க்கப்படுகிறது.
 
Irantha-Pin---5.png
 
ஆப்ரஹாம், ஜேக்கப், மோசஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் காலத்திலிருந்து இயேசு பெருமானின் சிஷ்யர்களின் காலம் வரை எல்லா அருட்போதகர்களும் பிதாவின் ஆவி தம்மை வழிப்படுத்தியதாகவே நம்பினார்கள். இயேசு பெருமானும், நபிகள் நாயகமும் தேவதூதர்களின் அருள்மொழிகளைத் தாம் வெளிப்படுத்துவதாகக் கூறினார்கள். கிறிஸ்தவ சமயத்தில் புனிதர்களை வணங்கும் வழக்கம், மூதாதையரை வணங்கும் மரபுக்கு ஒப்பானதாகவுள்ளது. இவற்றைப் பார்க்குமிடத்து இறந்த பின் ஏதோ ஒருவகையான வாழ்வு தொடர்கிறது என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றிக் கூறலாம்.
 
ஆனால் இறந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், எப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.
 
அவர்கள் எங்கு தான் வாழ்கிறார்கள்? 
 
அடுத்து பார்க்கலாம்.
Link to comment
Share on other sites

முற்பிறவியும் மறுபிறப்பும்

முற்பிறவியும் மறுபிறப்பும்

நம் செயல்கள் அனைத்துக்கும் மூலமுதற் காரணம் நம் முற்பிறவியின் பாவ புண்ணியங்களே என்பது தான். பாமர மக்களிடம் இந்த முன்வினைப் பயன் நம்பிக்கை இன்றும் ஆழமாகவேரூன்றி இருக்கிறது. சாதாரணமாக ஏதாவது நேர்ந்தால் கூட, “ஐயோ! போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ? இப்படி எல்லாம் துன்பம் அனுபவிக்கிறேன்” என்று சொல்லி அலுத்துக்கொள்வோரைப் பார்த்திருக்கிறோம். இப்படி அறிந்தோ அறியாமலோ தலைமுறை தலைமுறையாக மpast-life-regression.jpgுற்பிறவியைப் பற்றி மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளதை நாம் காணலாம்.

இவ்வாறான நம்பிக்கைகள் முற்றிலும் உண்மையானவை என நிரூபிக்கும் வகையில் பல அதிசய சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பல நாடுகளில் பலர்தங்களின் முற்பிறவிகளைப் பற்றி கூறி வருகின்றனர்.

இவ்வாறான சம்பவங்களால் முற்பிறவி உண்டா, இல்லையா என்ற கேள்வி இன்று ஆராய்ச்சிக்குரியதாகி விட்டது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற சம்பவங்களை நேரில் சென்றுசம்பந்தப்பட்டவர்கள் கூறவதை ஆராய்கின்றார்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் மறுபிறவி தொடர்பான ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஆய்வுகளில்;அமெரிக்காதான் இன்று வரை முன்னணியில் உள்ளது. இதற்கு ஆதரவும் அமெரிக்காவில் தான் அதிகம் என்றால் நம்புவீர்களா?

இவ்வாறு ஆராய்ந்தவர்கள் ஏதேனும் முடிவுகளை வெளியிட்டுள்ளனரா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். “மறுபிறப்பு என்பது உண்மையானதே. இறந்தவர்களின் ஆன்மா மீண்டும்இவ்வுலகில் வந்து பிறக்கின்றது” அதிகாரப்பூர்வமான அறிக்கைகளை அந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஆராய்ந்த மறுபிறவிச் சம்பவங்கள் சிலவற்றை இனி வரும்பதிவுகளில் பார்க்கலாம்.

 

 

ரோமி க்ரீஸின் முற்பிறவி நினைவு

ரோமி க்ரீஸ் (Romy Crees) என்ற மூன்று வயது நிரம்பிய அமெரிக்கச் சிறுமி திடீரென்று தனது முற்பிறவியைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். டெஸ் மொயின்ஸ் (Des Moines) என்ற நகரில்பெற்றோருடன் வசித்து வந்த இச்சிறுமியின் பேச்சை யாரும் நம்பவில்லை. இதைக் கேள்விப்பட்ட டாக்டர் பர்னாஜி அமெரிக்கா சென்று அச்சிறுமியைச் சந்தித்தார். பர்னாஜியின் நோக்கத்தைக்கேட்டதும் மிகவும் மகிழ்ந்த அச்சிறுமி, பெரிய பெண் போல இவருடன் பேச ஆரம்பித்தாள்.

“எனது பெயர் ரோமி க்ரீஸ். எனது முற்பிறவியின் பெயர் ஜோ ஸ்மித் (Joe Smith) என்பது. அப்போது நான் ஒரு ஆண். சார்ல்ஸ் நகரில் (Charles City) எனது பெற்றோர்களுடன் வசித்துவந்தேன். ஒரு முறை சிறு வயதில் பஸ்ஸில் அடிபட்டு விழுந்து விட்டேன். அப்போது பொது மக்களும் போலீஸாரும் தக்க சமயத்தில் உதவி செய்ததால் பிழைத்துக் கொண்டேன். சிவப்புநிறமான வீட்டில் நாங்கள் வசித்தோம். பிறகு நான் ஷெல்லி என்பவளை மணந்து கொண்டேன். எங்கள் வீட்டில் இரண்டு பூனைகளும் ஒரு நாயும் இருந்தன.

ஒருமுறை எங்கள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. எனது அஜாக்கிரதையால்தான் அது நிகழ்ந்தது. எனது பாட்டி உடனே தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தாள். இந்த முயற்சியில் அவளதுகையில் தீக்காயங்கள் ஏற்பட்டன. எனது பாட்டியின் பெயர் லூயிஸ் ஸ்மித்( Louise Smith). அவளுக்கு வலதுக் காலில் இந்த இடத்தில் எப்போதும் வலி இருக்கும் ( வலி எந்த இடத்தில் என்றுசிறுமி தனது காலில் சுட்டிக் காட்டுகிறாள்). நான் எனது தாத்தாவைப் பார்த்ததில்லை.

நான் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்து விட்டேன். மனைவி ஷெல்லியும் அந்த விபத்தில் இறந்து விட்டாள். எனவே மோட்டார் சைக்கிள் என்றாலே இப்போது பயமாகஉள்ளது. நீல நிற மலர்கள் என்றால் எனது பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். நானும் நீல மலர்களை எடுத்துச் சென்று பாட்டியைச் சந்திக்க விரும்புகிறேன். நாங்கள் எங்கள் வீட்டின் முன்புறக்கதவை எப்போதும் உபயோகிக்கவில்லை. பின்புறம் வழியாகத் தான் வீட்டினுள் நுழைவோம். நான் எனது வீட்டைப் பார்க்க விரும்புகிறேன். நீங்களாவது உதவி செய்யுங்கள்” என்றாள் சிறுமிரோமி க்ரீஸ்.

டாக்டர் பர்னாஜி அந்தச் சிறுமியின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து 140 மைல் தூரத்தில் இருந்த சார்ல்ஸ் நகரத்திற்குப் புறப்பட்டார். இவர்கள்நகரத்தை அடையும் போது பிற்பகல் ஆகி விட்டது. ஒரு டெலிபோன் டைரக்டரியின் உதவியால் விலாசத்தைக் கண்டுபிடித்தார் டாக்டர் பர்னாஜி.

 

முற்பிறவி பாட்டி

அந்த வீட்டை அடைந்ததுமே சிறுமியின் கூற்று உண்மை என்பதற்கு முதல் ஆதாரம் கிடைத்தது. காரணம் அவள் விவரித்தது போல அது ஒரு சிவப்பு நிறமான வீடு. வீட்டில் வெளிப்புறம்இருந்த காம்பௌண்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததுமே அச்சிறுமி ஆர்வத்துடன் உள்ளே ஓடினாள். வீட்டின் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது. “தயவு செய்து பின்புறம்வாருங்கள்” என்று வீட்டின் கதவில் எழுதப்பட்டிருந்தது. சிறுமியின் முற்பிறவி நிகழ்ச்சிக்கு இது மற்றுமொரு ஆதாரம்.

வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்புறக் கதவை அடைந்து அதைத் தட்டினாள். பலமுறை தட்டிய பிறகு ஒரு வயதான பெண்மணி வந்து கதவைத் திறந்தார். அவரது வலது காலில் பாண்டேஜ்சுற்றப்பட்டிருந்தது. ‘எனது பாட்டிக்கு காலில் வலி இருக்கும்’ என்று சிறுமி சொன்னதை டாக்டர் பானர்ஜி நினைத்துக் கொண்டார்.

 

ஏமாற்றம்

கதவைத் திறந்த லூயிஸ் விபரத்தைக் கேள்விப்பட்டதும் தயவு செய்து எனது பேரனின் ஆன்மாவை அமைதியாக இருக்க விடுங்கள். போய்விடுங்கள் என்று முகத்தில் அடித்தாற் போலகதவை மூடிவிட்டார். சிறுமி ரோமி க்ரீஸின் நீல நிறக் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதனால் சலிப்படையவில்லை டாக்டர் பானர்ஜி. அருகில் இருந்த மார்க்கெட்டுக்குப் போனார்கள்.ரோமியின் சொல்படி பாட்டிக்குப் பிரியமான நீலநிற மலர்களை வாங்கிக் கொண்டு மாலையில் மீண்டும் கதவைத் தட்டினார்கள்.

இந்த முறை மலர்களைக் கண்டு திகைத்த வயதான பாட்டி சிறிது நேர யோசனைககுப் பின் உள்ளே நுழைந்தாள். ஊள்ளே சென்றதும் சிறுமி ஓடிச் சென்று அங்கிருந்த ஒரு படத்தின் முன் நின்றுஇதோ எனது தாத்தா லாரி ஸ்மித்( Larry Smith) ) என்றாள். உடனே மற்றொரு படத்திடம் ஓடிச் சென்று, “இதோ நான் ஜோ ஸ்மித். எனது மனைவி ஷெல்லி” என்றாள்.

 

கதையல்ல உண்மை

ரோமியின் நடவடிக்கைகளைக் கண்டதும் துக்கம் தாங்காமல் அழ ஆரம்பித்தார் லூயிஸ் ஸ்மித். “சிறுவயதில் பஸ் மோதியதால் ஜோ ஸ்மித்தின் நன்மைக்காகவே தெருக் கதவை மூடிவைத்தோம். பிறகு அதுவே பழக்கமாகியது. மற்றொரு முறை அவன் தீக்குச்சிகளோடு விளையாடிக் கொண்டிருந்தபோது தீ விபத்தை உண்டாக்கி விட்டான். அப்போது எனக்கும் கையில்காயம் ஏற்பட்டது. தீ விபத்தின் காரணமாகவே வீட்டைப் புதுப்பித்து சிவப்பு வர்ணம் தீட்டினோம்.

ஜோ ஸ்மித் 1937ல் பிறந்தான். அவனது மனைவியின் பெயர் ஷெல்லி என்பது சரிதான். 1975ஆம் ஆண்டு சிக்காக்கோலிலிருந்து திரும்பும்போது ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவருமேஇறந்து விட்டனர். அந்தத் துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. இதனால் அவன் வளர்த்த இரண்டு பூனையையும் ஒரு நாயையும் பிராணிகள் நல்வாழ்வு இல்லத்திற்கு அளித்துவிட்டேன். அவன் இறந்து இரண்டு வருடம் கழித்துப் பிறந்த இச்சிறுமி ஜோ ஸ்மித்தின் ஆன்மாதான் என்பதில் சந்தேகமே இல்லை” என்று கூறிய லூயிஸ், சிறுமி ரோமியை வாரி அணைத்துமுத்தமிட்டு மகிழ்ந்தார்.

மேற்கூறிய சம்பவங்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன? இறந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு உண்டு என்பதைத் தானே? மேலை நாடுகளில் இந்த மறுபிறவிகளை பற்றிய பல புத்தகங்கள்வெளியாகின்றன. அவைகளை கதைகளாகவோ, கற்பனைகளாகவோ கருதி ஒதுக்கி விட முடியாது. அனைத்தும் ஆதாரப்பூர்வமாக உண்மையானவை என்று நிருபிக்கப்பட்டவை. மறுபிறப்புஎடுக்கும் அனைவரும் முற்பிறவியின் நினைவுகளைச் சொல்வதில்லை. சிலருக்கு மட்டுமே இந்த அபூர்வ சக்தி காணப்படுகிறது.

 

http://www.atheetham.com/?p=5204

Link to comment
Share on other sites

வந்தியதேவனின் பின்னூட்டத்தின் 'முற்பிறவியும் மறுபிறப்பும்' என்ற பதிவு தரும் அதிசயங்களை விஞ்ஞான ரீதியில் ஆராயும்போதும் அவைதரும் முடிவுகளும் அதிசயிக்க வைக்கிறது.

 

"கலியுகமீதில் இவர்மரியதை
கண்டிடும்!"என்பவர் சஞ்சலமிஞ்ச
கலகலவென்று மலசலம்வந்து
கால்வழிமேல்வழி சார நடந்து -

தெளிவும்இராமல் உரைதடுமாறி
சிந்தையும்நெஞ்சமும் உலைந்துமருண்டு
திடமுமுலைந்து மிகவுமலைந்து
தேறி"நல்ஆதர(வு) ஏது?"எனநொந்து -

"
மறையவன்வேதன் எழுதியவாறு
வந்ததுகண்டமும்", என்றுதெளிந்து
"இனியெனகண்டம்? இனியெனதொந்தம்?
மேதினிவாழ்வுநி லாதுஇனிநின்ற -

கடன்முறைபேசும்" எனஉரைநாவு
றங்கிவிழுந்துகை கொண்டுமொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமும்நாலு சுவாசமும்நின்று -
நெஞ்சுதடுமாறி வருநேரமே.

 

பட்டினத்தடிகளின் "ஒருமடமாதும் ஒருவனுமாகி" என்னும் பாடலில் வரும் இப்பகுதிகளை ஆராயும்போது, இன்றைய நவீன விஞ்ஞான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களைக்கொண்டும் ஆராயமுடியும். மறுபிறப்பின் அதிசயங்களை, ஒரு ஒலிப்பதிவு நாடாவானது புலப்படுத்திவிடும் தன்மையைக் கொண்டிருப்பதைக் காணலாம். பதிவுகள் ஏற்றப்பட்டுப் பின்பு அழிக்கப்பட்ட நாடாவானது யார்கையை அடைந்தாலும் அதிலிருந்து எந்தச் செய்தியையும் பெறமுடியாது. பதிவுகள் அழிக்கப்படாத நாடாவானது அறுந்து சிதைந்த பின்பும், சிதைந்த நாடாவின் ஒரு துண்டு கிடைக்கும் தருணத்தில், அதிலிருக்கும் பதிவை நுட்பமான செயற்பாட்டின் மூலம் அறிந்துகொள்ள முடியும். முதுநிலையை அடைந்து, அறிவுகள் அத்தனையும் அழிந்து, சேடமிழுத்து உயிர் பிரிக்கும் ஆற்றலும் அற்ற நிலையிலுள்ள ஒருவரைப் பாலூற்றி மூச்சடைக்கச் செய்து உயிர் பிரியச்செய்வதைக் கண்டுள்ளோம். அப்படி அறிவழிந்த நிலையை, ''பூதமும்நாலு சுவாசமும்நின்று நெஞ்சுதடுமாறி வருநேரமே'' என்று பட்டினத்தடிகள் குறிப்பிடுகின்றார். இவ்வகையில் மரணிக்கும்போது, மூளை என்கின்ற அணுச்சேர்க்கையின் பகுதியிலுள்ள ஒவ்வோர் அணுவிலும் பதியப்பட்டுள்ள பதிவுகளும் முழுமையாக அழிந்துவிடுகிறது. பதிவுகள் சிறிதளவாவது எஞ்சி இருக்குமானால் அந்த உடலானது, உயிர்பிரியும் நேரத்திலும் ஏதாவது செய்தியை வெளியிடமுயலும் நிலையைக் கொண்டிருக்கும். இந்த சேடமிழுக்கும் நிலையை அடையுமுன்பே இறக்க நேர்ந்துவிடுபவர்கள் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட பின்பு அவர்கள் உருவம் மறுபடியும் மூலப்பொருட்களாகி மறைந்துவிடும்போது அவை பதிவுகள் அழியாத நிலையிலுள்ள அணுக்களுடனேயே மறைந்து விடுகின்றன. மறுபடியும் இந்த மூலப்பொருட்களால் உருத்தோற்றம் பெறும் ஒரு கர்ப்பத்தில், சரியாக அதன் மூளைப்பகுதியில் பதிவு அழியாத அணு ஒன்று இணைந்துவிடும் சந்தர்ப்பம் ஏற்படலாம். அப்படியான அணுவொன்று மூளையில் இணையப்பெறும் ஒரு குழந்தையால் முந்திய பிறப்பின் ஞாபகங்களை வெளிக்கொண்டுவரும் செயல் சாத்தியமாகிறது எனவும் கொள்ளமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 6

 

சூட்சும உலகம்

 

இறந்தவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தை சூட்சும உலகம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். சூட்சும உலகம் என்பது எமது சட உலகத்தின் செறிமானத்தை (Density) விட பலமடங்கு குறைந்த செறிமானத்தையுடைய நுண்பொருளால் (Astral Matter) உருப்பெற்ற தளம் எனக் கூறலாம். சட உலகத்தின் ஸ்தூல வடிவமாக இருக்கும் சகல பொருட்களையும் நமது கண்களால் பார்க்க முடிகிறது. திண்மமாக, திரவமாக, வாயு வடிவமாக இருப்பவைகளை நாம் காண்கிறோம் அல்லது உணர்கிறோம்.
 
சூட்சுமமாக இருக்கும் காற்றும், மின்சாரமும், காந்தப் புலமும் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவைகளையும் நம்மால் உணர முடிகிறது. அதே நேரம் சூட்சும உலகத்தை நுண்நோக்காற்றல் உடையவர்களைத் தவிர வேறு யாராலும் பார்க்கவோ உணரவோ முடியாது.
 
நமது சட உலகிலுள்ள திண்மமான, திரவமான, வாயுவான வடிவங்கள் பூமியின் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு உலகின் மேற்பரப்பில் படிந்து கிடக்கின்றன. ஆனால் ஆவி பூமியின் ஈர்ப்பு சக்தியின் மிகக் குறைந்த பிடிமானத்துக்கு உட்பட்டது என்பதால் உலகின் மேற்பரப்பின் மேல் தளத்தில் படிந்திருக்கிறது.
 

Irantha-Pin---6.png

 
ஆவியைவிட மிகக்குறைந்த செறிமானமுள்ள நுண்பொருளால் ஆனது தான் சூட்சும உலகம். எனவே அது விண்ணை நோக்கிப் பரந்து கிடக்கின்றது. அதன் காரணமாகவே அதற்கு விண்ணுலகம் என்ற காரணப்பெயரும் உண்டு.
 
சூட்சும உலகம் நமது சட உலகத்தோடு ஊடுருவிக் கொண்டு (Interpenetrating) இணைந்திருக்கின்றது. ஆனால் அது மிக நுட்பமான பரிமாணத்தை உடையதாகையால் சூட்சுமமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சட உலகின் கண்களுக்கு அது தெரிவதில்லை.
 
நம் கண்ணுக்கு தெரியாததாலும் நம்மால் உணரமுடியாததாலும் ஆவிகள் பற்றிய கதைகள் பயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதுடன், நமக்குள் நம்பிக்கை இல்லாத தன்மையையும் தோற்றுவிக்கிறது.
 
இவை பற்றிய சரியான தெளிவுகளே நம்மை ஆவிகள் பற்றிய சரியான முடிவுக்கு கொண்டு செல்லும் என்பதால் இந்த சூட்சும உலகம் பற்றி அடுத்து இன்னும் விரிவாக பார்க்கலாம்.
 
தொடரும்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 7

 

மரணம் என்றால் என்ன?

 

மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள்.
 
மரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் அடிப்பது நின்று விடுவதாலோ அல்லது சுவாசம் தடைப்பட்டு விடுவதாலோ இறப்பு ஏற்பட்டு விடுகிறது என்று கூற முடியாது. ஏனெனில் இருதயம் நின்று விட்ட சில மணி நேரங்களின் பின்னர் கூட பலருக்கு உடலில் உயிர் தரித்திருந்த சம்பவங்கள் மருத்துவ நூல்களில் பதிவுச் சான்றுகளாகக் கூறப்படுகின்றன. இருதயத்தில் சத்திரசிகிச்சை செய்யும் பொழுது இருதயத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள் சத்திரசிகிச்சை நிபுணர்கள். இதயத்தை தங்கள் மனோசக்தியால் சிறிது நேரம் நிறுத்தி வைத்துக் காட்டியிருக்கிறார்கள் யோகிகள். சுவாசம் நீண்ட நேரம் தடைப்பட்ட பின்னரும் உயிர் பிரியாமல் இருந்திருக்கிறது. காற்றுப்புக இயலாத பெட்டிக்குள் வைத்து நிலத்தில் புதைக்கப்பட்டவர்கள் பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் உயிரோடு வெளிவந்ததை பலர் பார்த்திருக்கிறார்கள்.
 
இறப்பு போன்ற ஒரு நிலையை மனோசக்தியாலும் ஏற்படுத்தலாம். யோகநிலையில் இருந்து கொண்டு உடலில் எவ்வித உயிரோட்டமும் அற்ற நிலையை யோகிகள் செய்து காட்டுகிறார்கள். சில மிருகங்கள், பூச்சிகள், புழுக்கள் தமக்கு அபாயம் வருகிறது என்பதை உணர்ந்தவுடன் இறந்துவிட்டது போன்ற பாவனையை வெளிக்காட்டிக்கொண்டு கிடப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்நிலையில் அவைகள் உயிரற்ற சடலங்கள் போலவே காணப்படுகின்றன. தமது மனோசக்தியினாலேயே அவைகள் அந்த நிலையை ஏற்படுத்துகின்றன.
Irantha-Pin---7.png
உடலில் உயிர தரித்திருப்பதற்குக் காரணமாயிருப்பது விஞ்ஞானத்தின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி. அதுதான் பிராணன் இந்த சக்தி உடலைவிட்டுப் பிரிவதைத் தான் "பிராணன் போய் விட்டது" என்று மரபு வழியாகச் சொல்லி வந்திருக்கிறோம். பிராணன் உடலில் இருக்கும் வரையில் உடல் இறந்து விடாது. மனித உடலின் எல்லா உணர்வுகளும் அடங்கி விட்டது போல் தோன்றினாலும், பிராணன் உடலை விட்டு வெளியேறும் வரையில் மனிதன் இறந்து விடுவதில்லை.
 
இக்கட்டத்தில் பிராணனைப் பற்றி மேலும் சிறிது விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இயல் உலகை இயக்குவது இரண்டு மூலப்பொருட்கள். ஒன்று ஆகாசம் (ஈதர் - பஞ்சபூதங்களில் ஒன்று). இது இயலுலகு எங்கும் இடையறா நிரம்பி நிற்கும் ஊடுபொருள். இதுவும் நமது கண்களுக்கு வெட்டவெளியாய் தெரிவது. இதை பௌதீக விஞ்ஞானிகள் matter என்பர். ஆகாசம் சூட்சமமான பொருள். அது சூட்சுமமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரிவதில்லை. அது ஸ்தூல வடிவமாகும்பொழுது அதாவது உருவம் பெற்று பொருளாகும் பொழுது கண்களுக்கு தெரிகிறது.
 
இயக்கத்துக்குக் காரணமாயிருக்கும் மற்ற மூலப்பொருள் பிராணன் சிருஷ்டியின் துவக்கத்திலும் பிரளயத்திலும் அண்டத்திலுமுள்ள சக்திகளெல்லாம் ஒடுங்கிப்போய் பிராணன் என்னும் மூலநிலையை அடைகின்றன. பிராணன் அசைவதற்கான வீரியத்தைக் கொடுக்கும் உயிராதாரமான விசை, அதிர்வுகளை (Vibration) ஏற்படுத்தி இயக்கத்தைப் பிறப்பிப்பது பிராணன். ஆகாசத்தை பிரபஞ்சமாக உருவாக்குகின்ற சக்திதான் பிராணன். இதையே பௌதீக விஞ்ஞானிகள் Energy என்பர்.
 
பிரளயத்தின் போது ஸ்தம்பித்த நிலையை அடைகின்ற பிராணன் சிருஷ்டியின் போது ஆகாசத்துடன் ஒன்றிச்செயற்பட்டு அண்டத்தை தோற்றுவிக்கிறது. ஆகாசத்தின் மீது எனைய நான்கு முதன் மூலப்பொருள்கள் (Primordial Elements - பூதங்கள்) ஆகிய மண், நீர், காற்று, நெருப்பு என்பவை செயற்படுவதால் சிருஷ்டிக் காரியங்கள் நடைபெறுகின்றன. இச்செயற்பாடுகளுக்கு வேண்டிய அதிர்வுகளை பிராணனே ஏற்படுத்திக் கொடுக்கிறது.
 
மனித உடலில் கோடானுகோடி ஜீவ அணுக்கள் இருக்கின்றன. இந்த ஜீவ அணுக்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அமைந்து ஒரே நோக்குடன் செயற்படுவதற்குக் காரணம் உடலில் உள்ள பிராணன். உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் இந்த ஜீவ அணுக்கள் ஒன்றிணைந்து இயங்கும் தன்மையை இழந்தவிட்ட நிலையில் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றன.
 
இறப்பின் பின்னும் உயிரணுக்கள் உடலில் இருப்பதால்தான் பிணத்தைப் பேணும் செயல்முறை சாத்தியமாகிறது உடல் அழுகுவதற்கும் அதுவேதான் காரணம்.
 
மரணிக்கும்போதும் பின்னருமான நிலைப் பற்றி அடுத்து பார்க்கலாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 8

 

மரணிக்கும்போதும் பின்னரும்

 

மரணம் நிகழும்பொழுது உடலில் வேதனை எதுவுமே தெரிவதில்லை. ஆழ்ந்த துயில் மெதுமெதுவாக நம்மை அரவணைப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டவர்கள் கூட இறக்கும்பொழுது வேதனையற்ற நிலையிலேயே உயிர் விடுகிறார்கள். இதை இறந்தவுடன் சடலத்தின் முகத்தில் ஏற்படும் அமைதியான, சுகமான பாவத்தை நாம் அவதானிப்பதன் மூலம் உணரலாம்.
 
பிராணன் உடலைவிட்டு வெளியேறியவுடன் ஸ்தூல சரீரத்துக்கும் ஆவி  வடிவத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. இரண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காந்தக் கயிறு (Magnetic Cord) அறுந்து, பட்டம் விடுபட்டதுபோல் ஆவி வடிவம் தன்னை ஸ்தூல சரீரத்திலிருந்து விடுவித்துக்கொள்கிறது. ஸ்தூல சரீரத்திலிருந்து விடுபட்ட உயிரானது சடலத்தின் அருகேயே மிதந்துகொண்டிருக்கும். இப்படி மிதந்துகொண்டிருக்கும் பொழுது இதை ஆவி உரு (Wraith) என்பர்.
 
இது மனிதனின் தூல சரிரம் தவிர்ந்த மற்றைய சரீரங்களின் வடிவம் என்பதால் அதே வடிவத்தில் அல்லது சிதைந்துகொண்டிருக்கும் நிலையில் ஆவி உருவாக சிலருக்குத் தென்படுவதுண்டு. இது செங்கரு நீலநிறத்திலோ அல்லது வெண்மை கலந்த நீல நிறத்திலோ அல்லது பிரகாசமான ஒளியாகவோ பனிப்படலம் போன்று தென்படும். உடலை புதைக்கும் மயானங்களில் இவ்வடிவங்களைப் பலர் கண்டிருக்கிறார்கள். இந்த ஆவி வடிவம் உடலை விட்டு நீங்கும்பொழுது அதை பலர் பார்த்திருக்கிறார்கள். இவ்வடிவத்தை கூர்மையான ஒளி வாங்கிகளால் விஞ்ஞானிகள் பதிவுசெய்திருக்கிறார்கள். இறப்பதற்கும் இறந்தபின்னும் மனிதஉடலை நிறுத்துப்பார்த்து இப்பனிப்படலம் அரை அவுன்சுக்கும் முக்கால் அவுன்சுக்கும் இடைப்பட்ட நிறையுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. 
 
Irantha-Pin---8.pngஉடலைவிட்டு உயிர்நீங்கிய பின்னர் அந்த உயிரானது (ஆவிவடிவம்) தனது உணர்வை இழந்துவிடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற "நான் இருக்கிறேன்" என்ற நினைவு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. மரணம் ஏற்பட்டவுடன் சில் நிமிடங்களுக்கு சுய உணர்வு இல்லாத ஒரு நிலை இருக்கக் கூடும். நித்திரையில் இருந்து விழித்துக்கொள்வது போல் சுயநினைவு வந்துவிடுகிறது. சுயநினைவு வந்தவுடன் பலருக்குத் தாம் இறந்துவிட்டோம் என்றுகூடத் தெரிவதில்லை. இறந்தவர் ஆவி வடிவில் இருந்துகொண்டு உறவினர்களையும் நண்பர்களையும் தொட்டுத் தொட்டுப் பார்ப்பார். தான் தொடுவதை அவர்களால் உணர முடியவில்லை என்று தெரிந்ததும், இது கனவல்ல என்று நிச்சயப்படுத்திக்கொண்டு "ஓகோ நான் இறந்துவிட்டேன் போலிருக்கிறது" என்று புரிந்துகொண்டு விடுகிறார்.
 
சிலர் ஆவி வடிவில் இருந்துகொண்டு தங்கள் உடலையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சிந்தனைத்தெளிவு இல்லாதவர்களும் மரணத்தைப்பற்றிப் பயங்கரகமான கற்பனைகளில் ஈடுபட்டவர்களும் இறந்தவுடன் குழப்பமானவொரு நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அப்படிப்பட்வர்களை ஆவியுலகில் இருக்கும் அண்மையில் இறந்த உறவினர்களோ, நண்பர்களோ அல்லது புதிதாக வருபவர்களை நேசக்கரம் நீட்டி வரவேற்பதற்கென்றே ஆவி உலகில் இயங்கிவரும் தொண்டர்களோ வரவேற்று இறப்பினால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்கி ஆசுவாசப்படுத்துவார்கள். ஆன்மீக வளர்ச்சி பெற்றவர்களினதும் சாவைப்பற்றிச் சரியான விளக்கமுள்ளவர்களினதும் ஆத்மாக்கள் ஆவி வடிவங்களை உடனடியாக உதறிவிட்டுப் போய்விடுவர். சாதாரண ஆத்மாக்கள் தங்கள் ஆசைகளுக்கும் பாசங்களுக்கும் ஏற்ப சில மணித்தியாலங்களோ சில நாட்களோ ஆவி வடிவத்தில் தங்கி நிற்பர்.
 
ஆவிவடிவம் உடலைவிட்டு விலகும்பொழுது நாம் வாழ்ந்து முடிந்துவிட்ட வாழ்க்கை முழுவதும் மூலை முடுக்குகள் உட்பட நம் மனக்கண் முன் படக்காட்சி போல் ஒருகணம் தோன்றி மறையும். நாம் பெற்ற அனுபவங்கள் நாம் புரிந்த நல்வினை, தீவினைகள் நாம் அடைந்த வெற்றிகள் தோல்விகள் நமது விருப்புவெறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஆத்மாவின் சூட்சம ஒளியில்  பதிவாகிவிடுகிறது. காரண சரீரத்தில் நிறுத்தி வைக்கப்படும் இப்பதிவின் வினைப்பயனாகவே நமது அடுத்த நிலை நிர்ணயிக்கப்படுகிறது.
 
ஆவிவடிவம் உடலைவிட்டு நீங்கும்பொழுது பக்கத்தில் நிற்பவர்கள் அழுது புலம்பி கூச்சலிடாமல் இறப்பவர்கள் நிம்மதியாக இறக்கவிடவேண்டும். பூரணமான அமைதி நிலவும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இறந்துகொண்டிருப்பவர் கடவுள் நம்பிக்கை உடையவராயின் அவருக்கு விருப்பமான பிரார்த்தனை கீதங்களை தாழ்ந்த குரலில் இசைத்தல் நலம். "சேடம்" இழுக்கும் பொழுது திருப்புகழ் பாடும் வழக்கம் இப்படித்தான் ஏற்பட்டது.
 
இறந்தவரின் நினைவுகள் ஸ்தூல சரீரத்தை விட்டு விலகி முதலில் ஆவி வடிவத்திலும் பின்னர் சூட்சும சரீரத்திலும் தற்காலிகமாகத் தங்கி நிற்கிறது. அங்கிருந்து அது எங்கு செல்கிறது என்பதை பின்னர் பார்ப்போம்.
 
மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் மரணத்தின் பின்னர் மறுஉலகில் தொடரும் நிகழ்ச்சிகளை "நடைபெறவேண்டிய காரியங்கள்" என்ற மனப்பாங்குடன் ஏற்றுக்கெண்டு விடுகிறார்கள். வெகுசிலர் மட்டுமே உடலை உதறிவிட விருப்பமில்லாமலும் சட உலகின் தொடர்புகளை அறுத்துக் கொள்ள இயலாமலும் அவஸ்தைப்படுகிறார்கள். குடியிருந்த வீட்டை (ஸ்தூல சரீரத்தை) விட்டு வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியினாலும் உலகப்பற்று அதிகமாக உள்ள காரணத்தாலும் ஒரு துன்பகரமான மனநிலையில் இருந்துகொண்டு அல்லல்படுகிறார்கள். இவர்களே பலகாலம் ஆவி உருவில் சட உலகில் அலைபவர்கள்.
 

மேலும் பார்க்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

ஆவிகள் உலகம்

 

ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

 

ஆவிகள்:

மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

 

ஆவிகள் உலகம்:

கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்

 

http://ramanans.wordpress.com/2009/08/19/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பு என்பது எப்படியோ இறப்பும் அப்படித்தான். மரணத்தின் பின்னர் அந்த உடல் அழிக்கப்படுவது எதற்காக??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆவிவடிவம் உடலைவிட்டு விலகும்பொழுது நாம் வாழ்ந்து முடிந்துவிட்ட வாழ்க்கை முழுவதும் மூலை முடுக்குகள் உட்பட நம் மனக்கண் முன் படக்காட்சி போல் ஒருகணம் தோன்றி மறையும். நாம் பெற்ற அனுபவங்கள் நாம் புரிந்த நல்வினை, தீவினைகள் நாம் அடைந்த வெற்றிகள் தோல்விகள் நமது விருப்புவெறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஆத்மாவின் சூட்சம ஒளியில்  பதிவாகிவிடுகிறது. காரண சரீரத்தில் நிறுத்தி வைக்கப்படும் இப்பதிவின் வினைப்பயனாகவே நமது அடுத்த நிலை நிர்ணயிக்கப்படுகிறது.

 

இதைதான் பகவத் கீதையும் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றது!

 

ஒருவன் எவ்வளவு தான், தனது வாழ்நாளின், தீய செயல்கள் செய்திருந்தாலும், அவனது மரணம் நிகழும் கணத்தில் உள்ள அவனது மனநிலையே, அவனது அடுத்த பிறப்பைத் தீர்மானிக்கின்றது என்று கூறுகின்றது! இதையே தான் சைவ மதமும், மறைபொருளாகக் கூறுகின்றது!

 

மரணம் ஏற்படும் நேரம், எதிர்வு கூறப்பட முடியாததால், எப்போதும் இறைவனையே நினைத்துக்கொண்டிருக்கும் படி, அது கூறுகின்றது!

'நமசிவாய' அல்லது 'சரவணபவ' அல்லது ' சிவ சிவா' என்பதும், தமது பிள்ளைகளுக்குத் தெய்வங்களின் பெயர்களை வைத்து அழைப்பதுவும், இந்த இறை நினைவை எப்போதுமே மறக்காமல் இருப்பதற்காகவே என நான் கருதுகின்றேன்!

 

விரதங்கள், ஆலயதரிசனங்கள், தீட்சைகள் என்பனவும், இதே நோக்கத்திற்காகவே அனுஸ்டிக்கப்படுகின்றன!

 

ஆனால், இவை எல்லோருக்கும் அவசியமில்லை! ஆசைகளில் தமது மனதை அதிகம் அலைய விடாதவர்களுக்கு (ஜீவன் முத்தர்/ சித்தர்கள்/ ஞானிகள்) மேலுள்ளவை அவசியமில்லை!

 

ஆயினும், எமது ஆலயவழிபாடானது, அதன் உண்மையான நோக்கத்தில் இருந்து விலகி, ஆசைகளையும், ஆணவத்தையும், தனி மனித அகங்காரங்களையும், வளர்க்கும் ஒரு இடமாக மாறி வருகின்றது மிகவும் கவலைக்குரியது!

 

சாதாரண உடைகள் அணிந்து வழிபாடு செய்ய வேண்டிய நாம், இன்று விலையுயர்ந்த சேலைகளும், பட்டு வேட்டிகளும், புலிப் பல்லுச் சங்கிலிகளும், அணிந்து செல்வதோடு மட்டுமன்றி, நாம் வணங்கும் தெய்வங்களுக்கும் அதையே செய்கின்றோம்!

 

இந்த விடயத்தில் புத்த மதமும், இஸ்லாமிய வழிப்பாட்டு முறையின் எளிமையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது! 

 

சவூதி அரேபிய மன்னர், மெக்காவுக்குப் போகும் போது, அவரும் ஒரு வெள்ளைத் துண்டு தான் அணிந்து செல்லவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் மர்மங்கள் அல்லது மரணத்தின் பின் மர்மங்கள்...'கருடபுராணம்' என்ற நூலிலில் நன்றாக விபரித்து எழுதப்பட்டுள்தாக அறிந்துள்ளேன்.
 

Link to comment
Share on other sites

மருத்துவ அறிவியலின் படி மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போனதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம். மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள். அதை நாம் மருத்துவச் சாவு (Clinical death ) என்றும், மூளைச் சாவு (Cerebral death ) என்றும் குறிப்பிடுகின்றோம்.

 

மருத்துவச் சாவு

மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும். அப்போது இதயத் துடிப்பு சிறிதும் இல்லாதிருக்கும். எலெக்ட்ரோ கார்டியோ கிராமில் (electro cardiogram ) பதிவு செய்ய இதயத்தின் இயக்கம் தொடர்பான சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை.

 

மூளைச் சாவு

மனித மரணத்தை ஆய்வு செய்த உடற்கூறு வல்லுனர்கள், இதயம் நின்று விட்டாலும் மூளை இதயத்தோடு நின்று விடுவதில்லை. இதயம் நின்று போய்விட்டாலும், அரை மணியிலிருந்து 2 மணி நேரம் வரை இந்த மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இடைக்காலத்தில் மூளையின் இயக்கத்தை பதிவு செய்யும் எலெக்ட்ரோ என்சிபலோகிராம் (electro encephalogram ) மூளை இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் காட்டியிருக்கிறது. இக் கால வரம்பிற்குப் பிறகு மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுவதால், மூளையிலிருந்து சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை. இதையே மூளைச் சாவு என்கிறோம். மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும். ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது.

 

செய்தி நுகர்வு: விக்கிப்பீடியா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 9

 

மரணத்தின் பின்னர்..

 

சட உலகுக்கே உரித்தான ஆவிப்பொருளை (Etheric Matter) உதறினாலொழிய சூட்சும உலகை அடையமுடியாது. எனவே இவர்கள் சில நாட்களுக்கு ஆவிவடிவத்தை உதற முடியாமலும் தாம் நேசித்துப் பக்குவப்படுத்தி வந்த உடல் அழிந்துவிட்டபடியால் புலணுணர்வுகளைத் திருப்பிப் பெற இயலாமலும் இங்குமின்றி அங்குமின்றி இழுபறிப்பட்ட இடைநடுவே நின்று சஞ்சலப்படுகிறார்கள்.
 
பலவிதமான ஆசைகளையும் கற்பனைகளையும் மனதில் வளர்த்து வைத்துக்கொண்டு தங்கள் உடல்களை ஆசையுடன் அலங்கரித்துப் பேணி வந்த யுவதிகளும் இளைஞர்களும் சடுதி மரணம் அடைய நேரும்பொழுது இத்தகைய பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 
 
Irantha-Pin---9.pngஇறந்தவரின் உடலை எரித்துவிடுவது தான் சிறந்த முறை. ஆவி இரட்டை வடிவமானது தான் இதுவரை காலமும் எந்த உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்ததோ அந்த உடலின்பால் ஈர்க்கப்பட முடியாத நிலையில் அழிந்துவிடுகிறது. உடலை விட்டு உயிர் நீங்கும் தருணத்தில் உடலின் பல்வேறு உறுப்புகளினதும் சக்திகள் யாவும் ஒருமுனையில் ஒன்றுபட்டு நின்றபின் "சுழுமுனை" நாடிவழியே மேலெழுந்து மூளையின் உட்குழிவுப் பள்ளத்தையடைந்து மண்டையோட்டின் உச்சிப்பாகமும் தலையோட்டின் பின் எலும்பும் சந்திக்கும் இணைப்பின் வழியாக (Parietal and Occipital Suture) வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.
 
இவ்வாறு சக்திகள் ஒன்றுபட்டு வெளியேறும் நேரங்களில் சிலருக்கு நுண்நோக்காற்றல் ஏற்படுவதால் தூர தேசத்தில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு ஆவியுருவாகக் காட்சி கொடுப்பதும் உண்டு. இறக்கும் தறுவாயில் சிலமனிதர்களால் இச்சட உலகுக்குரிய அதிர்வுகளுக்கு (Vibrations) அப்பாற்பட்ட குறைந்த அல்லது கூடிய அதிர்வுகளை ஏற்படுத்தி சிலதோற்றங்களை வெளிப்படுத்தவும் சட உலகிற்குரிய புலனுக்கு அப்பாற்பட்டதை காணவும் கேட்கவும் கூடியதாக இருக்கும்.
 
நமது பார்க்கும் கேட்கும் உணரும் திறன்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மிக நுண்ணிய உயிரணுக்களையே மிகத்தொலைவிலுள்ள பொருட்களையோ வெற்றுக்கண்களால் நம்மால் பார்க்க முடிவதில்லை. உலகம் சுற்றுவதால் ஏற்படும் சத்தத்தையோ நிலத்தில் ஊர்ந்துசெல்லும் ஜந்துக்கள் உண்டாக்கும் ஓசையையோ எம்மால் கேட்க முடிவதில்லை. நமது சூழலிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்ணுயிர்களை நம்மால் உணர முடிவதில்லை. எமது புலனுணர்வுகளை இவ்வாறாக மட்டுப்படுத்தாது விட்டிருந்தால் எத்தனை சிக்கல்கள் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்...
 

இனி இறந்தபின் பின் எங்கு செல்கிறோம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 10

 

பிரக்ஞை

 

மனிதன் இறந்தவுடன் தனது உணர்வை இழந்து விடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற "நான் இருக்கிறேன்" என்ற நினைவு (பிரக்ஞை) தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்படியாகத் தொடர்கின்ற பிரக்ஞையை ஆத்மா (Soul) என்றும் ஆவி (Spirit) என்றும் தன்முனைப்பு (Ego) என்றும் உளம் (Psyche) என்றும் உயிர் என்றும் மனசு என்றும் தத்துவஞானிகள் அவரவரின் சமயத்திருமறைகளின் கண்ணோக்கில் விவரிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் "நான் இருக்கிறேன்" என்ற பிரக்ஞை இருக்கிறது. இங்கு ஐம்புலன்களின் தனித்தனி உணர்வுகளைக் குறிப்பிடவில்லை. நாம் நம்மைப்பற்றி நினைக்கும்பொழுது உடலின் மத்தியில் உணர்வுகளை ஒன்று திரட்டி இதுவே நான் என்று எண்ணவைக்கும் அந்தக் கூர்மையான ஆழமான பிரக்ஞையே பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகிறது.
 
நமது பிரக்ஞையானது ஜாக்கிரதம், சுவப்னம், சுகப்தி, துரியா என்ற நாலு நிலைகளில் வகைப்படுத்தப்படுகிறது. ஜாக்ரதம் என்பது நாம் விழித்திருக்கும் நிலை. சுவப்னம் என்பது பிரக்ஞையானது சூட்சும சரீரத்தில் இருந்து கொண்டு மூளைவழியாக கனவுகள் மூலம் தோற்றங்களை ஏற்படுத்தும் நிலை. சுகப்தி என்பது ஆழ்ந்த நித்திரை நிலை. பிரக்ஞையானது மனோசரீரத்தில் சஞ்சரிக்கும்நிலை. ஆனால் அதன் அனுபவங்கள் மூளையில் பிரதிபலிக்க இயலாதிருப்பது. துரியா என்பது பரவச நிலை. இந்த நிலையில் ஏற்படும் அனுபவங்கள் ஆன்மாவுக்கே உரியது தனித்துவ நிலை.
 
"நனவு நிலை, கனவுநிலை, ஆழ்ந்த தூக்கநிலை, துரித நிலை (அறிவு கடந்த நிலை) என்பனவே ஆத்மாவின் நான்கு பாதங்கள் அல்லது நிலைகள்" 
 
என்கிறது மாண்டூக்கியோபநிஷதம்.
 
Irantha-Pin---10.pngபிரபஞ்சத்தில் ஸ்தூல சலனங்களும் (Vibration) சூட்சும சலனங்களும் இருக்கின்றன. சடஉலகில் ஸ்தூல சலனங்களை உணர்கிறோம். சூட்சும உலகில் பல தளநிலைகளில் இருந்து இன்னொரு நிலைக்கு நாம் நகரும் பொழுது காட்சிகளும் மாறி மாறி அமைகின்றன. சிலர் போதை வஸ்துக்களை உட்கொண்டு இச்சலனங்களை அனுபவித்து அந்நிலையில் காணும் காட்சிகளால் கவரப்படுவதால் தான், அப்பழக்கத்திலிருந்து விடுபட இயலாது பரிதவிக்கின்றனர். அந்த நிலை அவர்களுக்கு தனி உலகமாகத் தெரிவதும் இதனால் தான்.
 
ஸ்தூல சரீரத்தில் உயிர் தரிக்க காரணமாயிருந்த பிராணன் ஸ்தூல சரீரத்திலிருந்து விடுபட்டு அண்டத்தில் பிராணசக்தியுடன் கலந்து விடுகின்ற நிலையையும் - ஸ்தூல சரீரமும் ஆவி இரட்டை வடிவமம் அழிந்து பட்டுப்போகின்ற நிலையையும் கடந்தவுடன் - ஆத்மா சூட்சும சரீரத்தில் புகுந்து கொண்டு உலகில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறது.
 
நமக்கு முன் இறந்தவர்கள் சென்றதும் நாம் செல்லப்போவதும் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் தான். ஏனெனில் நாம் ஒவ்வொரு இரவும் நித்திரையின் போது அங்கு தான் சென்று திரும்புகிறோம். 
 
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு" - குறள்
 
உறக்க நிலையில் என்ன நடந்தது என்ற நோக்காற்றல் நமக்கு மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அதனால் தான் நாம் உறங்கும் கால அளவில் என்ன நிகழ்ந்தது என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. அந்த நேரத்தை "தூங்கினேன்" என்ற வசனத்தின் மூலம் சாதாரணமாக கடந்து செல்கிறோம். ஆனால் நாம் நித்திரையில் இருக்கும்பொழுது ஆத்மா சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்கிறது. நித்திரையில் இருந்து விழிப்படையும் பொழுது ஸ்தூல சரீரத்துக்கும் சூட்சும சரீரத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தும் காந்தக்கயிறு நம்மை உடனடியாக ஸ்தூல சரீரத்துக்கு இழுத்து வந்து விடுகிறது. ஆனால் நிரந்தரமாக ஸ்தூல உடலை விட்டுப் பிரியும் ஆத்மா கூடிய செறிமானமுள்ள அணுக்களைக்கொண்டு உருவாகிய சட உலகைவிட்டு மிக்ககுறைந்த செறிமானமுள்ள விசும்புருவான (Astral Matter) உலகில் ஆத்மா புகுந்து கொள்ளும் பொழுது பலவித மாறுதல்களுக்கு தன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.
 
மனிதனில் பிரக்ஞையைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் இருந்த அதே நிலையிலேயே மனிதன் இருக்கிறான். இறக்கும்பொழுது எம்மிடம் இருந்த குணாதிசயங்கள், உணர்வுகள், எண்ணங்கள் யாவும் அப்படியே தொடர்கின்றன. அதன் காரணமாக சில சமங்களில் இறந்து போனவர் தான் இறந்துவிட்டதை ஏற்க முடியாத நிலையில் சில நாட்களுக்கு இருப்பதும் உண்டு. ஆனால் சூட்சும உலகின் வினோத இயல்புகளை இறந்தவர் மெல்ல மெல்ல உணர தொடங்குவார். அங்கு வலிகளும் களைப்பும் இருப்பதில்லை. உணவு தேவையில்லை. நித்திரை அவசியமில்லை. வீடுவாசல் இல்லை. போக்குவரத்து சாதனம் இல்லை. எல்லாம் மனோசக்தியாலேயே நடைபெறுகின்றன. மனோசக்தியின் அதிர்வுகளாலேயே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளுகிறார்கள். சூட்சும உலகில் சஞ்சரிப்பது நித்திரையில் இருப்பது போலவும் கனவு உலகின் நிகழ்ச்சிகள் போலவும் தென்படும்.
 
ஸ்தூல சரிரத்தில் இருந்த பொழுது ஏனைய மனிதர்களின் சூட்சும சரீரங்களைக் காணமுடியாதவர், இறந்தபின் அவர்களின் சூட்சும சரிரங்களைக் காணமுடியும். மனிதர்களின் ஆசைகளுக்கும் சிந்தனைகளுக்கும் உருவங்கள் இருப்பதையும் அவர்களின் விருப்பு, வெறுப்பு, பொறாமை போன்ற உணர்வுகள் உருவங்களாக அவர்களுடைய சூட்சும சரீரங்களில் பிரதிபலிக்கப்படுவதையும் காணமுடியும். எனவே ஒரு நண்பர் அல்லது உறவினர் இவ்வுலகத்தில் இறந்தவருடன் எப்படியான தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவராயிருந்தாலும் அவரின் உண்மையான சிந்தனைகள் எத்தகையன என்பதை இறந்தவர் சூட்சும உலகில் இருந்து கொண்டு அவருடைய சூட்சும சரிரத்தைப் பார்த்து அறிந்து கொண்டு விடுவார்.
 
Communication.pngஇறந்தவர்கள் நம்மை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. நமக்கு வெகு அருகிலேயே "வாழ்ந்து" கொண்டிருக்கிறார்கள். சாதாரண முறையில் நம்மால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் நமது சூட்சும சரீரம் இறந்தவரின் சூட்சும சரீரத்துடன் தொடர்பு கொள்ளவே முயற்சிக்கும்.
 
அது எப்படி? 
 
அடுத்து பார்க்கலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 11

 

இறந்தவரும்.. அவர் நினைவும்.. !

 

இயற்கை அன்புப் பிணைப்புக்கு முதலிடம் கொடுக்கின்றது. நாம் வெகுவாக நேசித்த ஒருவர் இறந்து விட்டால் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் நித்திரையின் போது நமது சூட்சும சரீரம் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை உணரலாம். நாம் அவருடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வுகள் ஸ்தூல சரீரத்தில் ஓரளவு பிரதிபலிக்கின்ற போதிலும் கண் விழித்தவுடன் எல்லாமே மறந்து விடுகின்றன. பக்கத்தில் படுத்திருப்பவர்கள் இதை அவதானிக்கக் கூடியதாயிருக்கும். இறந்தவரைப் பற்றிய நினைவுடன் நாம் இருப்பதால் அடிக்கடி அவரைப் பற்றிய கனவுகள் தோன்றுவது இயல்பு. அதே நேரத்தில் இறந்தவர் நமது மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தி தனது எண்ணங்களை கனவுகள் மூலம் வெளிப்படுத்தவது சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்.

 

இறந்தவர்களை அன்புடன் நினைப்பதும் அவர்களுக்கு மறுவுலகில் நற்கதி கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுவதும் அதற்கான கிரியைகள், சடங்குகள் செய்வதும் இறந்தவரின் சூட்சும சரீரத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இறந்தவர்களை நினைந்து நினைந்து அழுது புலம்புவதால் அவர்களின் சூட்சும சரீரங்களில் பாதகமான அதிர்வுகள் ஏற்பட்டு அவர்களுக்கு அமைதியின்மை உண்டாகும் என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். இறந்தவருக்கு நாம் மட்டும் தான் உறவினர்கள் நண்பர்கள் என்று நினைத்து விடுகின்றோம். மறு உலகில் நம்மைப் போலவே அவர் மீது அன்பு கொண்ட முற்பிறப்புத் தொடர்புகளாக நிறையப் பேர் இருப்பார்கள். இவ்வுலகிலகிலும் நாம் அறியாமலே பலர் இருப்பார்கள். சில மனிதரை நாம் சந்திக்கும் பொழுது அவர்கள் மீது காந்தக் கவர்ச்சி ஏற்படுவதற்கு முற்பிறப்பின் தொடர்பும் ஒரு காரணம்.

 

இறக்கும் பொழுது நாம் எப்படிப்பட்ட குணாம்சங்களுடன் மனநிலையுடன் வாழ்ந்தோமோ அவைகளின் பிரதிபலிப்பாகவே நமது மறு உலகம் அமைகின்றது. நாம் இறந்த பின் வாழ வேண்டிய வாழ்க்கைக்கு நாம் இங்கிருந்து கொண்டே வித்திடுகிறோம். இங்கு நாம் வாழும் பொழுது நமது சிந்தனைகள், செயல்கள், நோக்கங்கள் எல்லாம் தூய்மை உடையவையாக இருப்பின் மறு உலகம் இன்பகரமானதாக அமையும்.


Irantha-Pin---11.png

 

அண்டத்தில் நிகழ்வுகள் அனைத்தும் பலவித சலனங்களுக்குக் கட்டுப்பட்டே நடைபெறுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரியதான அதிர்வுகள் (சலனங்கள்) உண்டு. அவனுடைய முற்பிறப்புக் கர்மவினைகள், சிந்தனைகள், செயல்களுக்கேற்ப அவனுடைய சலனங்கள் உருவகம் அடைகின்றன. எனவே, அவனுடைய ஆத்மா உடலை விட்டுச் செல்லும் பொழுது தனக்கே உரியதான சலனங்களுடனேயே செல்கின்றன.

 

மறு உலகைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருப்பது இயல்பு. ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்தே அவரவருடைய மறுவுலக அனுபவங்கள் அமையும். மரணத்தின் மர்மங்களைப் பூரணமாக ஆய்வு செய்ய எவராலும் இயலாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட முயற்சி இது.

 

எவ்வாறாயினும் எல்லா ஆய்வுகளிலும் அடிப்படைக் கருத்துக்களில் ஒற்றுமை காணப்படுகிறது. நாம் இறந்தபின் நமது ஆத்மா ஒரு சூட்சும தளத்தில் சஞ்சரிக்கின்றது. நாம் இவ்வுலகில் எத்தகைய குணாம்சங்களை உடையவர்களாக இருந்தோமோ அதற்கேற்பவே நமது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. நமது விருப்பு வெறுப்புக்களுக்குத் தொடர்பிசைவாக மறுபடியும் நாம் இவ்வுலகில் வந்து பிறக்கிறோம். இத்தத்துவங்கள் பெரும்பான்மையான ஆய்வுகளுக்கு அடிப்படையாக உள்ளன.

 

இறப்பின் பின்னான வாழ்வு பற்றி ஞானிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றி அடுத்துப் பார்க்கலாம்.

 

http://ithutamil.com/content.aspx?type=2&postid=98bff8ba-c390-4349-866a-c32111b68e2c#.UjCxC3-KxEK

 

Link to comment
Share on other sites

இறப்புப்பற்றிய அறிவியல் உலகத்தின் ஆராச்சிகளை அறிந்து பகிர்ந்துகொள்வதே மரணத்தின் மர்மங்களை ஆதாரத்துடன் அறிவதற்கான வழிகளை வகுக்கும். அதுவே அடுத்த தலைமுறைக்கும் முரண்பாடற்ற செய்திகளை வழங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 12

 

நரகம்

 

பிரம்மஞானிகள் (Theosophists) சூட்சும உலகின் முற்பகுதி காமலோகம் ஒன்றும் அதைக் கடந்தபின்னரே சாந்தி நிறைந்த சூட்சும உலகின் இறுதிப்பகுதிக்கு மனிதனால் செல்ல மடியும் என்றும் கூறுகிறார்கள். காமலோகத்தையே நால்வேதங்களும் "பிதிர்லோகம்" என்றும் பிரேதலோகம் என்றும் குறிப்பிடுவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். காமலோகம் ஏழுபடி நிலைகளைக் கொண்டதெனக் கூறப்படுகிறது.
 
காமலோகத்திலிருந்து விடுபட்டவுடன் மனிதன் சூட்சும உலகின் இறுதிநிலையாகிய "தேவஸ்தான்" என்னும் சூட்சும தளத்துக்குச் சென்று அங்கு சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறான் என்பது அவர்கள் கருத்து. இந்துவேதங்கள் "பிரம்மலோகம்" என்றும் "ஹிரண்யலோகம்" என்றும் குறிப்பிடுவது தேவஸ்தானையே.
 
காமலோக தத்துவத்தையெ கிரேக்கபுராண வழக்கில் பாதாளம் (Hades) என்றும் கத்தோலிக்க சமய மரபில் பாபத்தைப் போக்குமிடம் (Purgatory) என்றும் வர்ணிக்கப்படுகிறது.
 
மனிதன் ஏழு அம்சங்களைக் கொண்டவனாகக் கருதப்படுகிறான்.
 
அவையாவன்..
 
ஆத்மா - Will
புத்தி - Intuition
மனசு - Intellect
கிழ்மனசும் காமரூபமும் - Lower manas and desire body
ஆவி இரட்டை வடிவம் - Etheric Double 
பிராணன் - Life Force
ஸ்தூல சரீரம் - Physical body
 
(ஸ்ரீசங்கரர் மனதை அந்தக் கரணம் என்று விபரிக்கின்றார். அந்தக் கரணமானது அகங்காரம், புத்தி, மனசு, சித்தம் என்னும் அம்சங்களை உள்ளடக்கியதாகும்)
 
இவைகளின் கீழ் மூன்று அம்சங்களும் சட உலகில் அழிந்து விடுகின்றன. ஏனைய நாலு அம்சங்களுடனேயே காமலோகத்தில் மனிதன் காலடி எடுத்து வைக்கிறான்.
 
காமலோகத்தில் அவன் தங்கியிருக்கவேண்டிய காலம் அவனுடைய காமரூபம் எத்தகையதோ அதைப்பொறுத்திருக்கிறது. கீழ்த்தரமான இச்சைகளும் அசைகளும் கீழ் மனதில் உதித்து அவனுடைய காமரூபத்தை உருவாக்குகிறது. அவனுடைய ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் ஏற்பவே அவனுடைய காமலோக அனுபவங்கள் அமையும்.
 
ஆன்மீக உயர்வு பெற்றவர்களும் பூவுலகில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவர்களும் இந்நிலையை மிக விரைவாகக் கடந்து விடுவார்கள். பலவித ஆசைகளுக்கும் இச்சைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்களும் கொடிய பாபங்களைப் பரிந்தவர்களும் இங்கு நிண்டகாலம் தங்கிவிடுகிறார்கள்.
 
ஒவ்வொருவரும் காமலோகத்தின் ஏழுபடி நிலைகளையும் கடந்தேயாக வேண்டும். விரைவில் கடந்து செல்வதும் அங்கு தாமதித்துச் செல்வதும் அவரவர் இங்கிருந்த பொழுது அடைந்த பெறுபேறுகளைப் பொறுத்திருக்கிறது.
 
முதலாவது எலிசபெத் மகாராணியார் தனது நாட்டை அபரிமிதமாக நேசித்த காரணத்தால் காமலோகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து நாட்டின் நலனுக்காக தான் வரித்த திட்டங்களை தனக்குப் பின் அட்சியில் இருந்தவர்களின் மனதில் பதியவைக்க முனைந்து கொண்டிருந்தார் என்றும் நீண்டகாலம் காமலோகத்தில் தங்கிய காரணத்தால் அவருடைய எண்ணங்கள் மெல்ல மெல்ல மறக்கப்பட்ட நிலையில் தனது எண்ணங்களை நிறைவேற்ற முடியாத நிலையிலேயே காமலோகத்தைக் கடந்து சென்றார் என்றும் கூறப்படுகிறது.
 
இதற்கு எதிர்மாறாகவிருந்தது விக்ரோறியா மகாராணியாரின் நிலை. இந்த அம்மையார் மனச்சுத்தமுடையவராய் இருந்த காரணத்தாலும் அவர் இறந்தபின் அவருடைய தேசமக்கள் அவரை அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூர்ந்தபடியாலும் அவருடைய சூட்சும சரிரத்தில் மக்களின் அன்புநிறைந்த சிந்தனை அலைகள் நல்விளைலுகளை ஏற்படுத்தியதன் பயனாகவும் அவர் வெகுவிரைவில் காமலோகத்தைக் கடந்து சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
 
சூட்சும உலகில் நேரக்கணிப்பு உணர்வை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவது உதாரணமாக நித்திரையில் இருந்து கண்விழிக்கும் பொழுது நாம் நித்திரையில் இருந்தது நீண்டநேரமோ அல்லது குறுகிய நேரமோ என்பதை எமது உணர்வு எமக்குத் தெரியப்படுத்தி விடுகிறது. அதைப்போலவே சூட்சும உலகில் கழியும் காலம் உணர்த்தப்படுகிறது.
 
மனஅடக்கமின்றி இழுத்தபக்கமெல்லாம் இழுபறிப்படடுக் கொண்டு இங்கு வாழக்கை நடத்தியவர்கள் மறுவுலுகிலும் தமது ஆசைகளுக்கு வடிகால் தேடிக்கொண்டு சடஉலகுக்கு அண்மையிலேயே இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களை எல்லையில் வாழ்பவர்கள் (Denizens of the border) என்று தத்துவஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தமது ஆசைகளை துறக்கமுடியாமலும் ஸ்தூல சரீரம் இல்லாதபடியால் அவைகளை அடைய முடியாமலும் மிகத்துன்பப்டுவார்கள். காலக்கிரமத்தில் இயற்கையின் தூண்டுதல் அவர்களை மெல்ல மெல்ல மேலே தூக்கி விட்டு விடுகிறது. தங்கள் ஆசைகளை மறந்து அவைகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இயற்கையின் நடைமுறை ஏதுவாகிவிடுகிறது. ஆனால் இதற்கு நீண்டகாலம் செல்கிறது.
 
மனோதிடம் (will power) உள்ளவர்கள் ஆசைகளை இலகுவில் களைந்து எறிந்துவிட்டு மேல்படிக்குச் சென்று விடுகிறார்கள். சடவுலகில் என்றாலென்ன, சூட்சும உலகில் என்றாலென்ன, மனோதிடம் மனிதனை நிச்சயமாக முன்னேற்றுகிறது. ஆன்மீக உயர்ச்சிபெற்ற சுயநலமற்ற சுத்த ஆத்மாக்கள் இந்த நிலையைக் கடக்கும்பொழுது அவர்களுக்கு பூரணமான விழிப்பு நிலை ஏற்படுவதில்லை. கனவுக்கும் நித்திரைக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்துகொண்டு கடந்துவிடுகிறார்கள்.
 
Irantha-Pin---12.png
 
காமலோகம் மனிதனின் கர்மவினைகளுக்கேற்ப ஏழுபடிநிலைகளாக வகுத்துக்கூறப்படுகிறது. கீழ்ப்படி நிலை தான் நரகம் எனப்படுகிறது. கொடிய பாபங்களைச் செய்தவர்கள் இந்நிலையிலிருந்து விவரிக்கமுடியாத துன்பநிலையை உணர்வினால் அனுபவித்துக் கொண்டிருப்பர். நரகத்தில் "நெருப்பில் இட்டுப் பொசுக்கவார்கள்" என்றும் "கழுவில் ஏற்றுவார்கள்" என்றும் கூறப்படும் காரியங்கள் எல்லாம் இந்நிலையில் உள்ளவர்களின் மனோநிலையை விபரிப்பதற்காகக் கூறப்பட்ட வர்ணனைகள். இந்நிலையானது தாங்கொணாத் துன்பத்தையும் வேதனையையும் அணுபவித்துக்கொண்டிருப்பதுபோன்ற ஒரு உணர்வு நிலையே ஒழிய வேறெதுவுமில்லை.
 
கிரேக்க புராணக் கதைகளில் தாந்தலஸ் (Tantalus) என்ற மன்னன் தனது மக்களுக்குப் பல கொடுமைகளை இழைத்த காணத்தால் நரகத்தில் உழன்றான் என்று கூறப்படுகிறது. நரகத்தில் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்ற இடததில் தான் தாந்தலஸ் நீருக்கு அருகில் நிறுத்தப்படுவான். தாகமேலீட்டால் அவன் நீரை அள்ள எத்தனிக்கும் பொழுது நீர் கைக்கு எட்டாமல் போய்விடுமாம். கனிகள் நிறைந்த மரங்களின் கீழ் நின்றவாறு பழங்களைப் பிடுங்க முற்படும்பொழுது மரக்கிளைகள் விலகிவிடுமாம்.
 
இதேபோல் சிசிவஸ் (Sisyphus) என்ற பெயருடைய கொறிந்த் மாகாணத்தை ஆண்டமன்னன் தான்புரிந்த பாபங்களுக்காக மலையின் உச்சியை நோக்கிப் பெரிய பாறையை உருட்டிக் கொண்டுபோவதும் அது கீழே உருண்டு வந்துகொண்டேயிருக்கும் என்றும், அதைத் தொடர்ந்தும் மலை உச்சிக்கு உருட்டிக் கொண்டேயிருக்கும் படியான தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தான் என்றும் கிரேக்க புராணங்கள் கூறுகின்றன.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.