Jump to content

ஊடறுப்பு


Recommended Posts

ஊடறுப்பு (ஒருபேப்பருக்காக கோமகன் )

 

 

w1z2.jpg

 

 

அதிகாலை நேரம் ஐந்து மணியை நேரக் கம்பிகள் அடித்துப் பிடித்துத் தொடமுயன்ற வேளையில் , இரவுக்கும் வானத்துக்கும் நடந்த கட்டிபிடி விளையாட்டில் மேகங்கள் வெட்கத்தால் சிலிர்த்து சிவப்படையத் தொடங்கிக் கொண்டு இருந்தன . இந்த ஆல்லோல கல்லோலதால் வெறி கொண்ட கூழைக் கடாக்கள் வானத்தில் சித்திரம் வரைந்து சீறிக்கொண்டு பறந்தன . தூரத்தே ஒலித்த பிள்ளையார் கோயில் மணி ஐயரின் வருகையை அந்த ஊர் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தது .

புல்லுப் பாயில் படுத்திருந்த தம்பையா தனது உள்ளங்கைகளைத் தனது முகத்துக்கு நேராகப் பிடித்து அவை இரண்டையும் சரசரவென்று தேய்த்தவாறே அவற்றில் கண்களைத் திறந்தார் .இததற்கு அவரிடம் ஒரு காரணமும் ஒன்று உண்டு யாரோ ஒரு புண்ணியவான் விடியக்காலையில் உள்ளங்கையில் கண்முளித்தால் காசுபணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று தம்பையாவிற்கு பினாட்டு அடைந்திருந்தான் . அன்றில் இருந்து தம்பையா இப்படியே நித்திரையால் எழும்புவார் . அனால் செல்வலட்சுமி அக்காவோ ஒரளவுக்குதான் தம்பையாவுடன் கூட்டு வைத்திருந்தாள் . ஆனாலும் தம்பையா தனது பழக்கத்தை விடவில்லை .

தம்பையா நித்திரையால் எழும்பி நேராகக் கிணத்தடிக்குப் போய் இளஞ்சூட்டில் இருந்த கிணத்துத் தண்ணியில் குளித்து விட்டு வந்து சாமியறையில் இருந்த திருநூத்துக் குடுவையில் கையை விட்டு திருநீற்றை அள்ளி நெற்றியிலும் , கை , நெஞ்சு எங்கிலும் மூன்று குறிகளாக இழுத்துப் பூசி , நல்லூர் கந்தனே , சந்தியானே என்று யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை முருகனையும் கூபிட்டுத் தன்னையும் மனைவி பறுவதத்தையும் அருமைப் பெடிச்சி செவந்தியையும் காப்பாற்றச் சொல்லி மன்றாடிக் கொண்டே அன்று வந்திருந்த உதயன் பேப்பரை எடுத்துக்கொண்டு முன் வாசலுக்கு வந்து சாய்மனைக் கதிரையில் கால்களை அகட்டிபோட்டவாறே பேப்பரை படிக்கத் தொடங்கினார் .

தம்பையாவின் அசுமாத்தங்களைக் குறிப்பால் அறிந்து கொண்ட பறுவதம் , தான் காலையில் ஊர் மாட்டில் கறந்த பசும்பாலைக் கற்கண்டு போட்டு சுண்டக் காச்சி பழப் புளி போட்டு நன்றாகத் தேய்த்து மினுக்கிய மூக்குப் பேணியில் கொண்டு வந்து தம்பையாவிற்கு குடுத்தாள் . தம்பையாவும் வலு பக்குவமாக வாங்கி சொண்டு படாமல் அண்ணாந்து மெது மெதுவாக குடித்தார் அவ்வளவுக்கு தம்பையா ஆசாரசீலமானவர் . இந்தப் பால் விடையத்தில் கூட யாரோ ஒருவர் கேப்பை மாட்டுப் பாலை விட ஊர் பசுப் பால் அதுவும் அறுகம் புல்லு சாப்பிட்ட ஊர் மாட்டுப் பால் தான் மூளையை மந்தம் பிடிக்காமல் வளரப் பண்ணும் எண்டு சொல்ல , தம்பையா வீட்டிலை நிண்ட கேப்பை மாடு போய் பத்தாயிரம் ரூபாய்க்கு ஊர் மாடு ஒன்று தம்பையா வீட்டிற்கு வந்தது . அன்றில் இருந்து தம்பையா அறுகம் புல்லுச் சாபிட்ட ஊர் மாட்டுப் பாலைத் தான் தொடர்ந்து குடித்துக் கொண்டு வருகின்றார்  .

கண்ணாடியை பாத்து தனது தலைமயிரை செற் பண்ணிக்கொண்டு ,
குட்டிக்குறா பவுடரை நளினமாக முகத்தில் பட்டும் படாமல் தடவியவாறே கையில் ரெண்டு கொப்பியுடன் தனது அறையை விட்டு செவ்வந்தி வெளியே வர தம்பையாவின் குரல் எங்கை பிள்ளை போறாய் என்று தடுத்து நிறுத்தியது . தான் பக்கத்தி வீட்டு மாலதியுடன் சேர்ந்து படிக்கப் போறதாக செவ்வந்தி சொன்னாலும் தம்பையாவின் அறுகம்புல்லு பால் மூளை அலேட்டாகி , பாத்துப் பிள்ளை கவனமாக போ காலம் கெட்டுக்கிடக்கு என்று சொன்னது . செவ்வந்தியோ அவர் சொன்னதைக் காதில் விழுத்தாமல் தன் பாட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள் . தம்பையாவின் மனமோ அவளின் கலியாண விடையத்தை எண்ணியே வட்டமிட்டது . இன்று தம்பையாவிடம் புறோக்கர் சவரிமுத்து வருவதாகச் சொல்லியிருந்தான் .

சவரிமுத்து , அந்தச் சுத்துப்பட்டி ஏரியாவுக்கு எல்லாமே அவன்தான் புறோக்கர் . சவரிமுத்துவாலை கரையேறின குமருகள் எக்கச்சக்கம் . கலியாணப்பேச்சில சவரிமுத்து ஒரு விச்சுளியன் . சிலவேளைகளில் முரண்டுபிடிக்கின்ற பகுதிகளைத் தனது பேச்சாலேயே வெட்டியாடிக் கலியாணங்களை ஒப்பேற்றுவதில் சவரிமுத்துவை அடிக்க அந்த இடத்தில் யாரும் இல்லை . எக்காரணம் கொண்டும் பொய்பேசாது சாமர்த்தியமாகத் தனது கொமிசனையும் எடுத்து கலியாணங்களை ஒப்பேற்றுக்கின்ற விண்ணாதி விண்ணனான சவரமுத்துவையே தம்பையா தனது மகள் செவ்வந்தி விடையத்திலும் தெரிவு செய்திருந்தார் .

செவ்வந்தி வளர்ந்து பெரியவள் ஆனதும் தம்பையா தனது வீட்டுக் கிடுகு வேலிகளையெல்லாம் அச்சறுக்கையாக உயர்த்திக்கட்டியிருந்தார் . பறுவதமும் குறிபறிந்து அவரை ஏன் ஏது என்று கேட்கவில்லை . அவளைப் பொறுத்தவரையில் தம்பையா காரணகாரியம் ஏதுமின்றி எதுவும் செய்ய மாட்டார் என்ற எண்ணப்பாடு அவளின் மனதிலே ஆளமாகவே வேரோடி இருந்தது . இது அவளது பரம்பரையில் வாழையடி வாழையாகவே ஊட்டப்பட்டு வந்திருந்தது . ஆனாலும் தம்பையாவுக்கு தனது பேரைச்சொல்ல ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற கவலையும் இல்லாமல் இல்லை . எல்லாவற்றையுமே வெண்ட தம்பையாவுக்கு இதில் மட்டும் ஒரு சறுக்கல் வந்தது . தம்பையா கடவுள் அருளால் தனக்குக் கிடைத்த மரிக்கொழுந்தை கண்ணுக்குள் எண்ணை ஊற்றியே வளர்த்தார் . அறுகம்புல்லுப் பாலைக் குடித்து முடித்த தம்பையா பறுவதத்திடம் மூக்குப்பேணியைக் கொடுத்வாறே , புறோக்கர் சவரிமுத்து இன்றைக்கு வரும் விடயத்தை அவிட்டு விட்டார் . பறுவதமும் செவ்வந்தியின் கலியாணமே முடிந்த மாதிரி சந்தோசப்ட்டு மகளின் சாதக்கட்டைக் கைகாவலாக எடுத்து வைத்தாள் .

வீட்டு முன்வாசலில் இருந்த தம்பையாவின் கண்களில் ஒழுங்கை மூட்டில் புறோக்கர் சவரிமுத்து சைக்கிளை வலித்துக்கொண்டு வருவது தெரிந்தது . தம்பையா மீண்டும் மனதிற்குள் யாழ்ப்பாணத்து முருகன்களையெல்லாம் உச்சாடனம் செய்யத் தொடங்கி விட்டார் .  சவரிமுத்து வீட்டு வாசலில் தனது சைக்கிளை நிப்பாட்டி விட்டு தலையால் வடியும் வியர்வையைத் தனது சால்வாயால் துடைத்தவாறே தம்பையாவின் முன்பு பௌவியமாக உட்கார்ந்தார் . பறுவதமோ சவரிமுத்துவுக்கு எலுமிச்சம்பழச் சாறு கொண்டுவந்து கொடுத்தாள் . சவரிமுத்துவோ வாயெல்லாம் பல்லாகி பறுவதம் கொடுத்த எலுமிச்சம்பழச் சாறை வாங்கிக் கொண்டு தனது தொண்டையைக் கனைத்தவாறே தம்பையாவைப் பாத்து சொல்லத் தொடங்கினார் ,

ஐயா ஒரு திறமான ஒரு திறமான இடம் வந்திருக்கு . பெடி பிறான்ஸ்சிலை சொந்தமாய் கடை போட்டு வைச்சிருக்கிறான் . தாய்தேப்பனுக்கு ஒரேயொரு பெடி .அதோடை ஃபிறென்ஜ் நாஷனாலிற்றி காறன் . சீதனமும் ஒண்டும் வேண்டாம் நல்ல குடும்ப பிள்ளையாய் இருந்தால் சரி எண்டு தாய்தேப்பன் சொல்லீச்சினம் . சாதிசனத்திலை அவை உங்கடைபகுதிதான் . யாழ்ப்பாண ரவுணுக்கை இருக்கினம் . பெடி நல்ல சங்கையானபெடி . பேசிமுடிப்பமோ ??என்றவாறு தம்பையாவிடம் மாப்பிள்ளையின் படத்தைக் குடுத்தான் சவரிமுத்து . தம்பையா படத்தை வாங்கிக்கொண்டே , எல்லாஞ்சரி பகுதி வெளிநாடெல்லோ ?? யோசனையாக்கிடக்கடாப்பா , பிள்ள்ளையை வெளிநாட்டிலை விட்டுப்போட்டு நாங்கள் என்ன செய்யிறது ?? என்று தம்பையா சொல்லி முடிப்பதற்குள் சவரிமுத்து தம்பையாவை இடைவெட்டினான் . ஐயா உங்களுக்கு இப்பத்தையான் நாட்டு நடப்புகள் தெரியாமல் இல்லை . பெண்பிரசுகளுக்கு எப்ப என்ன நடக்கும் எண்டு தெரியாது .பேந்து ஒருகாலத்தில நீங்களும் மகளோடை பிரான்சிலை போய் இருக்கலாம்தானே என்று தம்பையாவை உருவேத்தினான் . சவரிமுத்துவுக்கு தனது புறோக்கர் கொமிசன் போய் விடுமே என்று பதகளிப்பு வேறு தொற்றிக்கொண்டது . தம்பையா ஒரு முடிவுக்கு வந்தவராக சரியடாப்பா இதை பேசிமுடிப்பம் என்றார் .

தம்பையாவின் வீட்டுக்கு முன்வீட்டில் பறுவதத்தின் அண்ணை வினாசிதம்பியரின் வீடு இருந்தது . இரண்டு குடும்பமுமே மாத்துச்சம்பதத்தால் இணைந்தது . இதனால் தம்பையாவுக்கு வினாசித்தம்பியில் நல்ல பட்சம் . வினாசித்தம்பிக்கும் செவ்வந்தியின் வயது ஒத்த மாதங்கி என்ற மகள் இருந்தாள் . வினாசித்தம்பியர் தனது வீட்டு வேலியை அடைக்கின்றேன் பேர்வளி என்று தம்பையாவீட்டின் குசுகுசுப்புகளை அறியத் தனது காதுகளை எறிந்து விட்டு தான் வேலி அடைப்பதாக பாவனை செய்து கொண்டிருந்தார் . வினாசித்தம்பியரின் மனதிலோ ஒரு சிறியபொறி சன்னதம் ஆடத் தொடங்கிக் கொண்டிருந்தது . பேச்சுக்கால்களை முடித்துக்கொண்டு வெற்றிக்களிப்புடன் சைக்களை வலித்துக்கொண்டிருந்த சவரிமுத்துவை சரியாகத் தவறணையடியில் வினாசித்தம்பியின் சைக்கிள் குறுக்கி வெட்டியது .ஒரு போத்தில் கள்ளுடனேயே சவரிமுத்து எல்லாக் கதைகளையும் வினாசித்தம்பியரிடம் துப்பி விட்டான் .

அன்று மாலை வினாசி தம்பியர் ஒரு அரைப்போத்தல் கள்ளை உள்ளே இறக்கிவிட்டு ஓய்... தம்பையா!!!!!! ஓய் ........தம்பையா!!!!!!!! உமக்கு வினாசிதம்பியன் எண்ட மச்சான் இருக்கிறான் இருக்கிறதை மறந்து போனீரோ ?? உமக்கு எங்டை சாதி எங்கடை சாதிசனம் ஒண்டும்  வேண்டாமோ ?? என்று தம்பையாவீட்டு வாசலில் சன்னதம் ஆடத்தொடங்கினார் . பறுவதமோ என்னவோ ஏதோ என்று பதறியவளாய் , உள்ளுக்கை வா அண்ணை ஏன் வாசலுக்கை நிண்டு சத்தம்போடுறாய் ?? என்று பதமாகச் சொன்னாள் . தம்பையாவும் தனது பங்கிற்குச் சேர்ந்து கொண்டார் . நான் இங்கை ஒண்டும் உங்களோடை கொஞ்சுப்பட வரேலை .  என்ரை மருமோளுக்கு கலியாணம் பேசுறியள் எண்டு அறிஞ்சன் . நான் ஒரு தாய்மாமன் இருக்குறதை தம்பையா நீர் எனக்கு கூட சொல்லேலை . பேந்தென்ன மசிருக்கு நான் இங்க இருப்பான் ?? என்று வினாசித்தம்பி எகிற , தம்பையா இடைவெட்டி , சீச்சீ.....  நான் அப்படியெல்லாம் செய்வனே ?? எல்லாம் முடிய சொல்ல இருந்தனான் என்று சொல்லி வினாசித்தம்பியை சமாதானப்படுத்த முயன்றாலும் , வினாசித்தம்பிக்கு உள்ளே போன கள்ளு அதனது குணத்தைக் காட்டத்தொடங்கியிருந்தது .

சரி.......... அதெல்லாம் கிடக்கட்டும் தம்பையா , உமக்கு எங்கடை சாதிசனம் வேணுமோ வேண்டாமோ ?? தெரியாமல்தான் கேக்கிறன் . மாப்பிளைபகுதி ஆர் எவர் எண்டு விசாரிச்சியளோ ?? என்ற வினாசித்தம்பியை இடைவெட்டிய தம்பையா , நான் நல்லாய்த்தான் விசாரிச்சனான் . என்று சொல்ல , நீ கிளிச்சாய்............. அவங்கள் ஐஞ்சு குடியார் . எங்கடை சாதிசனம் அவங்களிட்டை கையே நனைக்கிறேலை . நான் எல்லம் தறோவாய் விசாரிச்சுப் போட்டுத்தான் ஐசே உம்மோடை கதைக்கிறன் . உமக்கு மண்டை கிண்டை களண்டு போச்சுதோ ??? என்று வானத்துக்கும் பூமிக்கும் எகிறிப்பாய , தம்பையாவுக்கு அப்பொழுதுதான் சவரிமுத்து தனக்குப் பினாட்டு அடைய வெளிக்கிட்டது நினைவில் வந்தது . பொறுத்த நேரத்தில் மச்சான் வினாசித்தம்பி வந்து தடுக்காதிருந்தால் தான் பரிசுகெட்டிருப்பேன் என்று தனக்குள் மருகினார் .

வினாசித்தம்பியரின் மனதில் தனது தங்கைச்சி பறுவதமும் மச்சான் தம்பையாவும் மெதுமெதுவாக மறையத் தொடங்கினார்கள் . இப்பொழுது வினாசித்தம்பியரின் பொழுதுகள் அதிகமாக சவரிமுத்துவுடனேயே தவறணையிலேயே கழிந்தன . யாழ்பாணத்தின் இயற்கையான தெனங்கள்ளு இருவரையுமே நல்ல கூட்டாளியாக்கி இருந்தது . வினாசித்தம்பியரோ எப்படிப்பட்டாவது மாதங்கிக்கு அந்த பிரான்ஸ் சம்பந்தத்தை முடித்துவிடவேண்டும் என்று ஆறாத் தாகத்துடன் இருந்தார் . இதற்காக அவர் இழக்க வேண்டியதெல்லாம் இழக்கவே தயாராக இருந்தார் . வினாசித்தம்பியரின் தொடர்சியான தென்னங்கள்ளு உபயத்தால் சவரிமுத்து மூலம்  மாப்பிள்ளை பகுதி முதலில் சீதனமே வேண்டாம் என்றவர்கள் , எண்பதுலட்சம் சீதனமும் பத்துப்பரப்பு ,  செம்பாட்டுத் தோட்டக்காணியும் சீதனமாய் பேசப்பட்டு கலியாணம் ஒப்பேறியது . சவரிமுத்துவுக்கு கொழுத்த ஆடு அடித்து விருந்துவைத்தார் வினாசித்தம்பியர் . இது நடந்து மூன்று மாதங்களின் பின்பு வினாசித்தம்பியர் மகள் மாதங்கியுடன் தனது பிரான்ஸ் மருமகனை வரவேற்க கொம்படிப் பாதையூடாக ஊடறத்துக் கொழும்புக்குப் பயணமானது அறுகம் புல்லு சாப்பிட்ட ஊர்மாட்டுப் பாலைக் குடித்த தம்பையாவுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்............

கோமகன்

10/08/2013

 

 

******* எழுத்துப் பிழை , கருத்துப் பிழை திருதப்பட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்குது கோ தொடருங்கள்.அடித்த பதிவு அடுத்த பேப்பர் வந்தாப் பிறகுதான் வருமோ :unsure:

Link to comment
Share on other sites

விநாசித்தம்பியரின் ஊடறுப்பு தாக்குதல் சுப்பர். விநாசியருக்கு பாரிசில் ஊடறுப்பு செய்யவும் ஆட்கள் இருப்பினம்.வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பான் என்ற வோமிலா இங்கு பாவிக்கப்பட்டிருக்கு. :) கதையில் வந்த பேச்சு வழக்கு நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா 

 

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கே கரன் .உங்கள் பதிவுகளையும் பார்த்ததுண்டு உங்கள் ஆக்கங்களை அதிகம் எதிர்பார்க்கின்றேன் :) :) .

 

Link to comment
Share on other sites

விநாசித்தம்பியரின் ஊடறுப்பு தாக்குதல் சுப்பர். விநாசியருக்கு பாரிசில் ஊடறுப்பு செய்யவும் ஆட்கள் இருப்பினம்.வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பான் என்ற வோமிலா இங்கு பாவிக்கப்பட்டிருக்கு. :) கதையில் வந்த பேச்சு வழக்கு நன்றாக உள்ளது.

 

 நீங்கள் சொன்ன போர்மிலா சரிதான் . வினாசித்தம்பியருக்கு பாரிசிலை ஒரு ஊடறுப்புச் செய்யத்தான் யோசிக்கிறன் :lol::D  . என்ன கொஞ்சம் நாள் எடுக்கும் . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நுணா :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடறுப்பு அருமை. அழகு தமிழில் ஒன்றிப்போயிருந்தேன். :)

 

இரவுக்கும் வானத்துக்கும் நடந்த கட்டிபிடி விளையாட்டுப் பாக்க எனக்கும் ஆசை! :D

 

செல்வலட்சுமி அக்கா, பறுவதம் மலைபோல இருக்க எப்பிடி தம்பையாவோட கூட்டு வச்சிருப்பா? :D

 

அண்ணை அது  பியூட்டிக்குறா பவுடரா இல்லாட்டி குட்டிக்குறா (Cuticura) பவுடரா?

Link to comment
Share on other sites

கோ... கதை அருமை! பாராட்டுக்கள்!! :)

மிக சுவாரஸ்யமாக சம்பவத்தை தொய்வில்லாத கதையாக ஒருவித அழகுத் தமிழில் சொல்லியிருக்கின்றீர்கள்.

ஊரில இப்பிடி நிறைய ஊடறுப்புக்கள் நடக்கிறது. இப்பிடியான ஊடறுப்புகள் பொம்பிளை விசயத்தில மட்டுமில்ல...

பேய்வீடு... செய்வினைக் காணி...  ராசியில்லாத  வாகனம் எண்ட பெயரில நிறைய விசயங்களில நடக்கிறது. :lol:

எங்கட சனம் இருக்கே.... பேக்காயள்!!! :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்று கோமகன் ஆனாலும் இயல்பாய்  இல்லாது வலிந்து எழுதிய எழுத்துநடையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கோமகன்...சவரிமுத்து பயங்கர சுழியன் போலகிடக்கு... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசல் யாழ்ப்பாணத்துத் தமிழும், கருப்பொருளும்! :D

 

மற்றவனுக்குரியதைத் தட்டிச் சுத்திறதுக்குப் பேர் 'கெட்டித்தனம்' !

 

சரி, விடுங்கோ கோமகன்! கதையத் தொடருங்கோ! :icon_idea: 

எடியே, பறுவதம், உன்ர அண்ணன் வினாசித்தம்பி, இந்த வீட்டில, கால் வைச்சா இஞ்ச ஒரு கொலை விழும்,, சொல்லிப்போட்டன்! 

 

கொடுவாக் கத்தியை, தீட்டித் தீட்டிப் பாதியாய்ப் போன உலக்கையில், கொஞ்ச மண்ணைப் போட்ட படி, தம்பையர் தீட்டிக்கொண்டிருந்தார்!

 

யாழ்ப்பாணப் பழிவாங்கலில், இன்னுமொரு கதை ஆரம்பமாகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதைக்கு ஏற்ப படமும் வரைந்திருக்கிறார்கள்.

 

நல்ல இயல்பான எழுத்துநடை, இதைத்தால் ஊரிலை கல்லுக்குத்துறது என்றும் சொல்லுவார்கள்.

இப்படி பல பக்கத்து வீடுகளிலும்  நடந்துள்ளன, இந்தக் கல்லுக்குத்துற வேலையைச் செய்வது நல்ல நெருங்கியவர்களாக இல்லை சொந்தக்காரராக இருப்பது தான் வேடிக்கையான உண்மை. :o

 

 

Link to comment
Share on other sites

ஊடறுப்பு அருமை. அழகு தமிழில் ஒன்றிப்போயிருந்தேன். :)

 

இரவுக்கும் வானத்துக்கும் நடந்த கட்டிபிடி விளையாட்டுப் பாக்க எனக்கும் ஆசை! :D

 

செல்வலட்சுமி அக்கா, பறுவதம் மலைபோல இருக்க எப்பிடி தம்பையாவோட கூட்டு வச்சிருப்பா? :D

 

அண்ணை அது  பியூட்டிக்குறா பவுடரா இல்லாட்டி குட்டிக்குறா (Cuticura) பவுடரா?

 

தவறைச் சுட்டிக் காடியமைக்கு மிக்க நன்றி யாழ் வாலி . திருத்தம் செய்துள்ளேன் குட்டிக்குரா பவுடர் தான் சரி . அப்பொழுது எம்மவர் மத்தியில் பிரபல்யமானதொன்றாக இருந்தது . கதையுடனான உங்கள் ஈடுபாட்டிற்குப் பாராடுக்கள்  . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

cuticura-talcum-powder-400gm-220.jpg

Link to comment
Share on other sites

ஐயா உண்மையான சம்பவங்களை எழுதுகிறீர்கள் 
இப்படியே தொடர்ந்து தாங்கோ. 
சும்மா கற்பனை கதைகளை படித்து புளித்து போய் விட்டது.
Link to comment
Share on other sites

ஊடறுப்பு எண்டதும்  கருணாவின்ரை  கதையாக்கும் எண்டு நினைச்சு வந்து பாத்தன் இது வேறை நாசமறுப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலமாச்சு இப்படி பேச்சுதமிழ் கேட்டு... நல்ல உரை நடை.. லயித்து வாசித்தேன்... இனிமை... வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

ஊடறுப்பு அருமை. அழகு தமிழில் ஒன்றிப்போயிருந்தேன். smile.png

Link to comment
Share on other sites

கோ... கதை அருமை! பாராட்டுக்கள்!! :)

மிக சுவாரஸ்யமாக சம்பவத்தை தொய்வில்லாத கதையாக ஒருவித அழகுத் தமிழில் சொல்லியிருக்கின்றீர்கள்.

ஊரில இப்பிடி நிறைய ஊடறுப்புக்கள் நடக்கிறது. இப்பிடியான ஊடறுப்புகள் பொம்பிளை விசயத்தில மட்டுமில்ல...

பேய்வீடு... செய்வினைக் காணி...  ராசியில்லாத  வாகனம் எண்ட பெயரில நிறைய விசயங்களில நடக்கிறது. :lol:

எங்கட சனம் இருக்கே.... பேக்காயள்!!! :lol:

 

அறப் படிச்ச பல்லி கூள் பானைக்குள்ளை விழுந்தமாதிரி எண்டு சொல்லுறியள் :lol: :lol: :icon_idea: . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை :) :) .

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கோமகன்.

 

என்ன மொட்டையா சொலிப்போட் டியள் :( ??  நல்லது கெட்டதைச் சொன்னால் நானும் திருந்தலாமெல்லோ  :D  ?? உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாந்தி  :)  :) .

 

Link to comment
Share on other sites

கதை நன்று கோமகன் ஆனாலும் இயல்பாய்  இல்லாது வலிந்து எழுதிய எழுத்துநடையாக இருக்கிறது.

 

பொதுவாகக் கதை சொல்லும்பொழுது வித்தியாசமான எழுத்துநடைகளைக் கையாண்டால் வாசகர்கள் மனம் சலிக்க மாட்டார்கள் என்பது அடியேனின் கருத்து . இந்தக் கதையைப் பொறுத்தவரையில் கிராமிய வட்டார வழக்கையும் , பொதுவான கதை சொல்லும்  முறையையும் சரிசமனாகக் கலந்து விட்டிருக்கின்றேன் . உங்கள் விமர்சனத்தையும் கவனத்தில் எடுக்கின்றேன் . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுமே  :)  :) .

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கோமகன்...சவரிமுத்து பயங்கர சுழியன் போலகிடக்கு... :D

 

சவரி முத்துவைப் போலை ஆக்கள் இல்லாடில் எப்பிடி குமருகள் கரை சேர்றது புத்தா  :lol:  :lol: ?  வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்து தமிழ் ஓகே..  ஆனால் அவசரப்படுறமாதிரி இருக்கிறது.. ஏனென்றால் இன்னும் கொஞ்சம் பொறுமை தேவை.. பாத்திரங்களின் விபரிப்பு போதாது.. அத்துடன் கதை நிகழும் தளத்தையும் விபரிக்கலாம்.. கதை மனதில் நின்றால்மாத்திரம் போதாது.. தளமும் கதை மாந்தரும் நிற்கணும்னா இன்னும் பொறுமையான எழுத்து தேவை.. வாழ்த்துகள்! :)

Link to comment
Share on other sites

அசல் யாழ்ப்பாணத்துத் தமிழும், கருப்பொருளும்! :D

 

மற்றவனுக்குரியதைத் தட்டிச் சுத்திறதுக்குப் பேர் 'கெட்டித்தனம்' !

 

சரி, விடுங்கோ கோமகன்! கதையத் தொடருங்கோ! :icon_idea:

எடியே, பறுவதம், உன்ர அண்ணன் வினாசித்தம்பி, இந்த வீட்டில, கால் வைச்சா இஞ்ச ஒரு கொலை விழும்,, சொல்லிப்போட்டன்! 

 

கொடுவாக் கத்தியை, தீட்டித் தீட்டிப் பாதியாய்ப் போன உலக்கையில், கொஞ்ச மண்ணைப் போட்ட படி, தம்பையர் தீட்டிக்கொண்டிருந்தார்!

 

யாழ்ப்பாணப் பழிவாங்கலில், இன்னுமொரு கதை ஆரம்பமாகின்றது!

 

ஆகா.............  செய்தால் போச்சு :D :D . வினாசியருக்கும் ஒருக்கால் தீத்தினால்த்  தான்  எனக்கு பத்தியப்படும்  :lol:  :lol: .  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் புன்கையூரன் :) :) .

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

யாழ்ப்பாணத்து தமிழ் ஓகே..  ஆனால் அவசரப்படுறமாதிரி இருக்கிறது.. ஏனென்றால் இன்னும் கொஞ்சம் பொறுமை தேவை.. பாத்திரங்களின் விபரிப்பு போதாது.. அத்துடன் கதை நிகழும் தளத்தையும் விபரிக்கலாம்.. கதை மனதில் நின்றால்மாத்திரம் போதாது.. தளமும் கதை மாந்தரும் நிற்கணும்னா இன்னும் பொறுமையான எழுத்து தேவை.. வாழ்த்துகள்! :)

 

உங்கள் விமர்சனத்தையும்  வருங்காலங்களில் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றேன் . வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.