Jump to content

இப்படித்தான் எனக்கு வேலை போச்சுது - நிழலி


Recommended Posts

 

பத்து வருடங்கள் முன்னர் ஒரு பெரும் IT நிறுவனத்தில் நிரந்தர வேலைக்கு சேர்ந்திருந்தேன்.
 
வேலை தந்த முகாமையாளரை இரண்டரை மாதத்தில் தூக்கி விட்டார்கள்.
 
தற்காலிகமாக ஒரு முகாமையாளரை அமெரிக்காவில் இருந்து தலைமையகம் அனுப்பி இருந்தது. 
 
அவர் இருந்த ஐந்து வாரத்தில், எனது மூன்று மாத 'probation period' முடிவுக்கு வர, உன் குறித்த மதிப்பீடுகளை பதிவு செய்யும் முன்னர், உன்னை எடுத்த முகாமையாளரை தூக்கி விட்டதால், எனக்கு விபரங்கள் போதாமையால் முடிவு  எடுக்க கஷ்டமாக உள்ளது.
 
எனினும், உனது 'குழுத்தலைவர்' உடன் பேசி அவர் தந்த விபரத்தினை வைத்து உன்னை நிரந்தரமாக்க சிபார்சு செய்கிறேன் என்றார். சில பத்திரங்களில் கை எழுத்து இட்டு, எனது கை எழுத்தினையினையும் வாங்கி எனக்கும் ஒரு copy தந்து HR மேல் விபரங்களை அனுப்பி வைக்கும் என்று சொல்லி வைத்தார். 
 
அடுத்த வாரமே புது முகாமையாளர் அமெரிக்காவின் இன்னுமொரு பகுதியில் இருந்து வந்து சேர்ந்தார். இவர் ஒரு பிரிட்டிஷ் காரர் ஆகையால் ஊருக்கு திரும்பி வந்து வேலை பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
 
முதல் நாள் அறிமுகத்திலேயே ஆள் சரியில்லையே என மனம் சொல்லியது. அடுத்த வாரம் அளவில் அங்கிருந்த 'ஆசிய' ஊழியர்கள் மத்தியில் புதியவர் 'bit funny' என்ற அபிப்பிராயம் பரவி இருந்தது.
 
இரண்டாவது வாரம் என்னை அழைத்து,நீ புதியவர் எனபது எனக்குத் தெரியும். இங்கே ஒரு கடிதம் வைத்திருக்கிறேன். இதன்படி உனது 'probation period' மூன்று மாதத்தினால் நீடிக்கப் படுகிறது. பின்னர் உனது மதிப்பீட்டினை வைத்து நான் எனது முடிவினை செய்வேன் என்று கூறி தான் சொன்ன கடிதத்தினை எடுத்து, எனக்கு முன் கையெழுத்து வைத்து கையிலேயே தந்து விட்டார்.
 
விடயத்தினை பெரிதாக எடுக்காமல், எனது வேலையில் எனக்கு நம்பிக்கை இருந்ததாலும், பேசாமல் வாங்கி கொண்டு வந்து விட்டேன்.
 
இடையே ஒரு சீக்கியரும், ஒரு சீனரும் வேறு வேலை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர். போகும் போது, புது முகாமை குறித்து எனக்கு எச்சரிக்கை  செய்து தான் போனார்கள். 
 
சரியாக மூன்று மாதம் முடிய 2 நாட்கள் இருக்கையில், ஒரு வியாழன் மாலை எல்லோரும் போய் விட்டார்கள். தனியே ஒரு அறிக்கை தயார் செய்து முடிக்கையில், பின்னே இருவர்.
 
திரும்பிப் பார்த்தால், HR முகாமையாளரும், நம்ம முகாமையும். அதே 'Have you got a sec'?
 
என்ன விடயம் என்றால், நீ 'probation fail' ஆகி விட்டாய். எனவே உன்னை போக விடுகின்றோம். 
 
எனக்கு இருந்த அதிர்ச்சியில் எழுந்து கோபத்துடன் வந்து விட்டேன்.  அன்று இரவு நித்திரை வரவில்லை. தீடீரென எழுந்து என்னைப் பார்த்த  மனைவி ஒரே ,  ஒரு வசனம் சொன்னார்: இந்த வேலையை நினைத்தா இங்கே வந்தீர்கள்?  பேசாமல் படுங்கள். எல்லாம் நன்மைக்கே.
 
அசந்து தூங்கிப் போனேன். காலையில் உறுதியுடன் எழுந்தேன். செய்ய வேண்டிய வேலைகள் இரண்டு. வேலை தேடுவது. இரண்டாவது அந்த முகாமைக்கு 'சட்ட ரீதியாக குடைச்சல்' கொடுப்பது. காரணம் அங்கே சட்ட ரீதியான தவறுகள் நடை பெற்று இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததை உணர்ந்திருந்தேன்.
 
இரண்டாவது வாரமே, அதை விட மிகப் பெரிய நிறுவனத்தில் 'contacator' ஆக வேலை எடுத்தேன். (இனிமேல் நிரந்தர வேலை வேண்டாம் என முடிவு எடுத்து இன்று வரை கடைப் பிடிக்கின்றேன்)   
 
ஒரு அரச இலவச சட்ட ஆலோசனை நிறுவனத்தில் ஆலோசனை கேட்கப் போனேன். அங்கு இருந்தவரோ, ஒரு கறுப்பு இனத்தவர். சகலத்தினையும் கேட்டு விட்டு, ஆகா, நல்லா மாட்டுப் பட்டு இருக்கிறார்கள். நான் சொல்வது போல செய். ஒரு சட்ட நிறுவனத்துக்கும் போகாதே. நீயே கடிதம் போடு என சில 'அரிய' ஆலோசனைகள் தந்தார்.
 
அவரது ஆலோசனைப் படி, HR பிரிவு தனியே இருக்கும் நிறுவனத்தில்  அந்த முகாமை, எந்த அதிகாரத்தில் எனது நீடிப்பில் கை எழுத்து போட்டார்? HR அதை ஏன் செய்ய வில்லை.
 
இடையே வந்த முகாமை நிரந்தரமாக்கியது எவ்வாறு? அது குறித்து HR நிலைப்பாடு என்ன?  
 
புதிய முகாமைக்கு 'அனைவருக்கும் சமஉரிமை' குறித்த பயிற்சி வழங்கப் பட்டதா? 
 
ஆம் ஆயின் எப்போது? பயிற்சி அளித்தவர் இவர் குறித்து தனது கருத்தாக எதுவித பதிவும் செய்தாரா? 
 
இல்லையாயின், ஏன் இல்லை.
 
இவர் பதவிக்கு வரும் போது இருந்த ஆசிய ஊழியர்கள் எத்தனை பேர்?
 
இப்போது இருப்பவர்கள் எத்தனை பேர்?
 
காரணம் என்ன?
 
என மொத்தம் 62 கேள்விகள் அனுப்பி இருந்தேன். 
 
மேலும் வழக்கினை பலப் படுத்துவதற்காக 'தொழில் நீதிமன்றில்' ஒரு வழக்கினையும் பதிவு செய்தேன். ஆறு மாதத்துக்கு இடையில் பதவி நீக்கப் படின் unfair dismissal, வழக்கு தள்ளு படி செய்யப் படும் என்பதால்  கறுப்பர் ஆலோசனைப் படி, unfair dismissal basing on race discrimination எனும் பிரிவின் கீழ் இதனை பதிவு செய்து இருந்தேன்.
 
கடிதம் கிடைத்த மூன்றாம் நாள், என்னை தொலை பேசியில் அழைத்த HR, தவறு நிகழ்ந்து விட்டதாயும், மறுபடியும் வேலைக்கு எப்ப வருகின்றாய் என்பதாக கேட்டார்கள்.
 
அட எங்..   கொக்கா மக்கா....
 
கறுப்பரிடம் சொன்னேன். வயிறு குலுங்கச் சிரித்தார். தூண்டில்ல நல்ல மீன் சிக்கி இருக்கிறது. ஏதோ எனக்கு இரண்டு pint வார் என்றார்.
 
போங்கடா, நீங்களும் உங்கட வேலையும் என்று, நியாயமான நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டு வழக்கினை வாபஸ் பெற்றேன்.  
 
இதனை எதற்கு சொல்கிறேன் எனில், ஒரு வழி அடிபட்டால், நிழலி பல வழி திறக்கும். 

 

 

இது  backgroud check ஐ பாதிக்காதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவலைப்பட‌ எதுவுமே... இல்லை நிழலி.
நீங்கள் செய்த தவறால், உங்களை வேலையிருந்து நிற்பாட்டவில்லை... எல்லோருக்கும் நடந்தது தான்... உங்களுக்கும் நடந்துள்ளது.
முதலில்... ஒரு கிழமை, மனதை ஆசுவாசப்படுத்த பழைய நிகழ்வுகளை மறந்து விட்டு, உங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்யுங்கள். (ப்ளூ லேபல், குடல்கறி, இரத்தவறை, மூழைப் பொரியல் என்று... வெளுத்து வாங்குங்கோ)
அடுத்த கிழமை உங்கள் அனுபவத்துக்குப் பிடித்தமான வேலைகளை பட்டியல் இட்டு, அந்த நிறுவனங்கள் எங்குள்ளது என்று விலாசங்களை சேகரியுங்கள், முக்கியமாக... பயணத் தூரத்தையும் கவனியுங்கள். இணையத்திலும், ரொறொன்ரோவிலிருந்து வெளிவரும் அனைத்து வேலை  சம்பந்தமான பத்திரிகைகளை வாங்குங்கள், அல்லது அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று... உங்களுக்கு பொருத்தமான வேலைக்கு அழைத்துள்ளார்களா என்று பார்த்து... அழைக்காவிட்டாலும், விண்ணப்பத்தை அனுப்புங்கள். இப்போது... கோடை விடுமுறை முடிந்து வேலை ஆரம்பிக்கும் போது... பல இடங்களில்... வெற்றிடங்கள் ஏற்படுவது வழ‌மை. இந்த நேரம்.. புதிய வேலை தேடுவதற்கு சாத‌கமான நேரம். அத்துடன்... நீங்கள் இதுவரை செய்த வேலைகளில்... சேகரித்த அனுபவங்கள், புதிய வேலை தேடுவதில்... முன்பிருந்ததை விட இலகுவாக இருக்கும். :rolleyes:

 

எனக்கும்... மூன்று தரம் வேலை போனது. ஒவ்வொரு முறை புதிய வேலை எடுக்கும் போதும்... முன்பிருந்ததை விட நன்றான வேலையே... கிடைத்தது.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று... கனநாள் வேலையில்லாமல் இருந்தால்.... மனுசி கூட இளக்கமாய்த்தான் பார்க்கும். அதற்கு முதல், அடுத்த வேலையை.. எடுத்துப் போடுங்கள். :)

Link to comment
Share on other sites

வணக்கம் அண்ணா, கவலையான செய்தி ஆனால் இதுவும் கடந்து போகும். நிலைமையை இலகுவாக எடுக்கும் உங்கள் மனோதிடத்தை மெச்சுகிறேன். நான், இதுவரை வேலையை விட்டு நீக்கப்படாததால் அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. புதிய, நல்ல வேலை கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். (அவுசில IT காரருக்கு ஓரளவுக்கு வேலையல் இருக்காம்  :unsure:  பிளட்ட வித்துப்போட்டு பிளைட் ஏறுற முடிவெடுத்தால் சொல்லுங்கோ :rolleyes: !)

பி கு - ஈசன் அண்ணாவின் கதையைக் கேட்டால் "இப்பிடித்தான் எனக்கு மனிசி அடிச்சது - நிழலி" எண்ட நிலை வந்தாலும் வரும்  :lol:  .

 

 

Link to comment
Share on other sites

கறுவலுக்கும் வேலை போகப்போகுது. இன்னும் திட்டமாகச் சொல்லவில்லை. சூசகமாகச் சொல்லியாயிற்று. ஒக்டோபர் கடைசிக்குள் எல்லா வேலையும் சிங்கப்பூர் போகுது. நாங்கள் இப்ப சிங்கப்பூர்வாலாக்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம். (மாட்டேன் என்று சொன்னால் மாடேறி.. சீ சீ... விடுப்புக் கொடுப்பனவுகள் கிடைக்காது.)

வயசும் வட்டுக்குள் என்பதால் IT இல் இன்னொரு வேலை கிடைக்குமோ தெரியவில்லை. கனடா மாதிரி 60 % கிடைக்காது. 0 % தான் கிடைக்கும்.


>கனநாள் வேலையில்லாமல் இருந்தால்.... மனுசி கூட இளக்கமாய்த்தான் பார்க்கும். அதற்கு முதல், அடுத்த வேலையை.. எடுத்துப் போடுங்கள். :)

இப்பவே மனிசி அப்படித்தான் பாக்குது.. அப்ப என் நிலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக ஒரு வேலையில் நிலைத்திருக்க சில சூட்சுமங்களை கையாள வேண்டிவரும்.

 

எந்த வேலைக்குச் சென்றாலும் அந்த வேலையில் முன்பிருந்தவரின் பங்களிப்பு எப்படி இருந்தது? அதனை எந்த விதத்தில் தம்மால் மேலதிகமாக மேம்படுத்த முடியும்? அதனால் நிறுவனதிற்கு எவ்வளவு செலவு மிச்சம் (cost effective)? என நிரூபித்து வேலையில் நிலைக்க வேண்டும்.

நிலைத்தவுடன் உங்களின் தொழில் சூட்சுமங்களை வள்ளல் மாதிரி பறைசாற்றி, அனைவருக்கும் சொல்லிக்கொடுத்துவிடக் கூடாது. (துரோணர் கூட தன்னிடம் வில்வித்தை பயில வருவோர்க்கு அனைத்து வித்தைகளையும் சொல்லிக் கொடுக்கவில்லை) :icon_idea:

ஏதும் தொழிற் நுட்ப பிரச்சனை என்றால் உங்களால் தான் இதனை சரி செய்ய இயலும் என்ற நிலையில் உங்களின் வேலைத் திறனும், உங்களின் பங்களிப்பும் நிச்சயம் அதில் இருக்க வேண்டும்.

பொதுவாக தகவல் தொழிற்நுட்ப வேலைகள், ஒரு கூட்டு முயற்சியாக, குழுவாக செயல்படும்படியே இருக்கும். அம்மாதிரி சமயங்களில் உங்களின் புத்திக்கூர்மையை பயன்படுத்தி, நீங்கள் பங்களிக்கும் பகுதியை மட்டும் தனிப் பிரிவாக (seperate module) எடுத்து வந்துவிட வேண்டும்.. கூட்டதில் 'கோவிந்தா' போட்டால், உங்களுக்கு எப்பவுமே மதிப்பிருக்காது, நிறுவனத்தின் பொருளாதார தேக நிலையின்போது 'கல்தா' முதலில் உங்களுக்கே வரும்.

உங்கள் வேலை போக, அதனை சார்ந்திருக்கும் அல்லது அதனால் பயன்பெறும் மற்ற துறைக்களிலும் சிறிது கவனம் செலுத்தி அதனையும் கற்றுக்கொள்வது நல்லது. சமயத்தில் இந்த பல்துறை நிபுணத்துவத்தால்(Multi skills) நிறுவனத்தில் உங்களின் மதிப்பு மேலும் உயரும்.

உங்கள் நிபுணத்துவத்தில் நிச்சயம் உலக அங்கீகரிப்பு முத்திரை பெற்ற சான்றிதழ்(accredited certificate) வைத்திருப்பது மிக மிக முக்கியம்.

இதைத் தவிர உங்களின் தொழிலில், திட்டவேலைகளில் சரியான ஆளுமை திறனுக்கான( Management certificate ) சான்றிதழ் பெற்றிருந்தால் இன்னமும் நன்று. பதவி உயர்விற்கும் இது வழிகோலும்.

 

நிறுவனங்களும் எங்கள் நிறுவனத்தில் இத்தனை சான்றிதழ் பெற்ற நிபுணர்கள் இருக்கிறார்களென வியாபார போட்டிகளில் சொல்லி வெற்றி பெற ஏதுவாக இருக்கும். இதனால் உங்களை நிறுவனத்தின் முக்கிய புள்ளியாக எப்பொழுதும் வைத்திருப்பர்.

 

(பொறியியல் படிப்பைத் தவிர ஏழு வகை சான்றிதழ் எம்மிடமுண்டு. அந்த அனுபவத்தில் இதனை சொல்கிறேன்)
 

கூடிய விரைவில் உயர்ந்த வேலையில் அமர வாழ்த்துக்கள்!

 

 

சோர்வை அடித்து நொறுக்குங்கள்... ! (மனைவியை அல்ல :lol:..)

 

vil2_bowling.gif

 

 

Good Luck.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுவலுக்கும் வேலை போகப்போகுது. இன்னும் திட்டமாகச் சொல்லவில்லை. சூசகமாகச் சொல்லியாயிற்று. ஒக்டோபர் கடைசிக்குள் எல்லா வேலையும் சிங்கப்பூர் போகுது. நாங்கள் இப்ப சிங்கப்பூர்வாலாக்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம். (மாட்டேன் என்று சொன்னால் மாடேறி.. சீ சீ... விடுப்புக் கொடுப்பனவுகள் கிடைக்காது.)

வயசும் வட்டுக்குள் என்பதால் IT இல் இன்னொரு வேலை கிடைக்குமோ தெரியவில்லை. கனடா மாதிரி 60 % கிடைக்காது. 0 % தான் கிடைக்கும்.

>கனநாள் வேலையில்லாமல் இருந்தால்.... மனுசி கூட இளக்கமாய்த்தான் பார்க்கும். அதற்கு முதல், அடுத்த வேலையை.. எடுத்துப் போடுங்கள். :)

இப்பவே மனிசி அப்படித்தான் பாக்குது.. அப்ப என் நிலை?

 

கறுவலுக்கும், புதிய வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பி கு - ஈசன் அண்ணாவின் கதையைக் கேட்டால் "இப்பிடித்தான் எனக்கு மனிசி அடிச்சது - நிழலி" எண்ட நிலை வந்தாலும் வரும்  :lol:  .

 

 

 

என்னுடைய அந்த லூஸ் பதிவுக்குப்பின்னால் பல சீரியசான விசயங்கள் இருக்கிறது தும்பளையான்.
 
அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பெருந்தொகையான சிக்கல்களுக்கு தீர்வு கண்டு கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் அந்த நிறுவனம் மேல் எழுந்திருக்கிறது. கூடவே எனது நிலையும் உயர்ந்தது தான். தொழில் நுட்ப ரீதியாக "முடியாது" என்று ஒரு நாளும் சொன்னதே கிடையாது.
 
எனக்கு ஒரு பதவி தருவதாகச் சொன்னார்கள். ஒருவருடத்தின் பின் நடுத்தர வயதான ஒருவரைக் கொண்டுவந்து அந்தப் பதவிக்குப் போட்டார்கள். அந்தாளுக்கும் தொழில் நுட்பத்துக்கும் சமப‌ந்தமில்லை. ஆனால் பிரிதொரு பெயர்பெற்ற கம்பனியில் மேல்நிலைப் பதவியில் இருந்தவர்.
 
அவர் மூலம் கம்பனிக்கு மேலும் பெயரும் வருமானமும் வரும் என்று நம்பினார்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால் அந்தாள் எனக்கும் CEO க்கும் நடுவில் புகுந்து விட்டான். ஏனென்றால் அந்தப் பதவியின் பெயர் CTO.
 
அந்தக்கம்பெனிக்காக  நன்றாக வேலை செய்திருக்கிறேன். வீட்டுக்கும் வேலையைக் கொண்டு வந்து செய்திருக்கிறேன். 
 
ஏமாற்றத்தில் நான் எடுத்த உணர்ச்சிகரமான முடிவுதான் அது. 
 
எல்லாம் நன்மைக்கே!! 
Link to comment
Share on other sites

 

இரண்டாவது வாரமே, அதை விட மிகப் பெரிய நிறுவனத்தில் 'contacator' ஆக வேலை எடுத்தேன். (இனிமேல் நிரந்தர வேலை வேண்டாம் என முடிவு எடுத்து இன்று வரை கடைப் பிடிக்கின்றேன்)   
 

 

'நிரந்தர வேலை' என்று பெயர்தான், ஆனால்  வேலைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. சம்பளமும் குறைவு, நிறைய அரசியல், பயம், மன உளைச்சல்தான் மிச்சம். நானும் எலிசபெத் மஹாராணி வந்து கூப்பிட்டாலும் இனி  நிரந்தர வேலைக்கு போவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் உயர்ந்த வேலையில் அமர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 

 
வேலை இல்லாமல் இருக்கும் போது அடுத்த பிள்ளைக்கு தயார் படுத்தல் "முன்னெடுப்புகளை " மேற்கொள்ளலாமே நிழலி. :icon_idea:

 

 

 

என்னுடைய அந்த லூஸ் பதிவுக்குப்பின்னால் பல சீரியசான விசயங்கள் இருக்கிறது தும்பளையான்.
 
அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பெருந்தொகையான சிக்கல்களுக்கு தீர்வு கண்டு கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் அந்த நிறுவனம் மேல் எழுந்திருக்கிறது. கூடவே எனது நிலையும் உயர்ந்தது தான். தொழில் நுட்ப ரீதியாக "முடியாது" என்று ஒரு நாளும் சொன்னதே கிடையாது.
 
எனக்கு ஒரு பதவி தருவதாகச் சொன்னார்கள். ஒருவருடத்தின் பின் நடுத்தர வயதான ஒருவரைக் கொண்டுவந்து அந்தப் பதவிக்குப் போட்டார்கள். அந்தாளுக்கும் தொழில் நுட்பத்துக்கும் சமப‌ந்தமில்லை. ஆனால் பிரிதொரு பெயர்பெற்ற கம்பனியில் மேல்நிலைப் பதவியில் இருந்தவர்.
 
அவர் மூலம் கம்பனிக்கு மேலும் பெயரும் வருமானமும் வரும் என்று நம்பினார்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால் அந்தாள் எனக்கும் CEO க்கும் நடுவில் புகுந்து விட்டான். ஏனென்றால் அந்தப் பதவியின் பெயர் CTO.
 
அந்தக்கம்பெனிக்காக  நன்றாக வேலை செய்திருக்கிறேன். வீட்டுக்கும் வேலையைக் கொண்டு வந்து செய்திருக்கிறேன். 
 
ஏமாற்றத்தில் நான் எடுத்த உணர்ச்சிகரமான முடிவுதான் அது. 
 
எல்லாம் நன்மைக்கே!! 

 

 

பிள்ளை தயார்படுத்தலுக்கு ஏற்ற்பாடு செய்ய சொன்னதுக்குத்தான் உங்கட கதைய கேக்க வேண்டாம் எண்டு சொன்னான் அண்ணா. ஆளப் பத்தி உங்களுக்குத் தெரியும் தானே, நீங்கள் வேற "அந்த" மாதிரியான ஐடியா குடுத்தா, சிங்கம் சிலுப்பிக்கொண்டு வெளிக்கிட சாத்தியம் அதிகம் :wub:

மற்றும்படி நிறுவனங்களுக்காக கடினமாக வேலை செய்பவர்களை அவர்கள் கண்டு கொள்வது இல்லை என்பது மிகவும் உண்மை. முதலாளி மாருக்கு ஜால்ரா போடுபவர்களையே தூக்கிக் கொண்டாடுவார்கள். இவர்களில் அநேகருக்கு தொழில்நுட்ப அறிவு/அனுபவம் பூச்சியம் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40வயது வரை அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது எனது கொள்கைகளில் ஒன்று. 

 

பல துறைகளில், பல நிறுவனங்களை பரிசோதித்துப் பார்த்த பின்னர் ஒரு 40வயதில் இறுதியான முடிவிற்கு வந்து நிரந்தர வேலை தேடுவது தான் எனது நீண்ட நாள் திட்டம். தற்பொழுது அதன்படியே அனைத்தம் நடந்து வருகின்றது. 

 

படிப்பு முடித்து  எங்கும் வேலை கிடைக்கவில்லை. படிப்பில் சுமார் தான். எனவே 6மாதம் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்தேன். அவர்கள் அந்த ஆறு மாதத்தின் பின்னர் எனது வேலையை (படிப்பை பார்த்து அல்ல) பார்த்து அங்கே தொழிற்கல்வி தொடங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்கள். சம்பளம் என்னவோ அடிமாட்டு நிலை தான். அதை விட்டால் வேறு சந்தர்ப்பம் வராது. எனது நல்ல நேரம் அந்த நிறுவனம் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. எனவே எனது படிப்பிற்கு சற்று அதிகமான ஒரு தொழிற்கல்விக்கு சம்மதம் தெரிவித்தனர். இரண்டாண்டுகள் நன்றாக படித்து அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மேல் பூர்த்திசெய்திருந்தேன். 

 

பின்னர் தொடர்ந்து இன்னும் இரண்டாண்டுகள் அதே நிறுவனத்தில் மீண்டுமொரு உயர் தொழிற்கல்வி தொடங்கினேன். அதுவும் நன்றாக இரண்டாண்டுகளின் பின்னர் முடித்துவிட்டேன். படிப்பில் கொஞ்சம் ஈடுபாடு வந்ததும் இந்த காலகட்டத்தில் தான்.  

 

எனது முதலாளி அவரது நிறுவனம் உள்ள பிராந்தியத்தின் வலது சாரி கட்சியின் (அந்த கட்சி வெளிநாட்டவர்களின் விடயத்தில் கண்டிப்பானது) நிதிப்பொறுப்பாளர். இது எனக்கு பின்னர் தான் தெரியவந்தது. ஆனால் எனது முதலாளி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னை வேறுவிதமாக நடத்தியது இல்லை (நல்லவங்களும் இருக்காங்கய்யா).

 

பல எம்.பி. மார்கள் எனது முதலாளியுடன் வேலை முடிந்து பீர் குடிக்க வருவார்கள். பார்ப்பதற்கு அழுக்குச்சட்டை அணிந்திருப்பார்கள் (அவர்கள் செய்யும் வேலை அப்படி). அவர்கள் எம்.பி. என்பதே பல வருடங்களிற்கு பின்னர் தான் நான் கண்டு பிடிததேன். தொழிற்கல்வி முடிந்ததும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது அவர்கள் கடைபிடிக்கும் ஒரு முறை (அங்கேயே இருந்தால் சம்பளம் அதிகமாக கொடுக்கவேண்டும் என்பது தான் காரணம்). 

 

இறுதியாக அங்கு வேலை செய்த நாளில் எனது முதலாளி எனக்கு சொன்ன ஒரு விடயத்தை நான் இன்றும் கடைபிடித்துக்கொண்டு இருக்கின்றேன். 

 

"எந்த நிறுவனமும் தனக்கு ஒரு பிரச்சனை என வரும்போது நிறுவனத்தின் நலனை தான் பார்ப்பார்கள். அதே போல் நீயும் உனது நலனில் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இரு. நீ வெளியேறுவதால் நிறுவனத்திற்கு நஷ்ரம் என்று சிந்திக்காதே.நிறுவனத்திற்கு பிரச்சனை வரும்போது அவர்கள் முதலில் உன்னை தான் வெளியே அனுப்புவார்கள். எனவே நீயும் அவர்களை போல் முதலில் உனது நலன் பற்றியே சிந்திக்கப்பழகு" என்று இறுதியாக ஒரு சென்ரிமென்ட் டச் கொடுத்து வழி அனுப்பிவைத்தார்.

 

அதன் பின்னர் நான் வேறு வேலை தேடத்தொடங்கினேன். வேலை கிடைக்கும் வரை அரசாங்கத்தில் பணம் பெறுவதற்காக பதிவு செய்திருந்தேன். 3 வாரங்களின் பின்னர் ஒரு வேலை கிடைத்தது. இந்த மூன்று வாரத்திற்கும் அரசாங்கம் ஏதாவது பணம் தரும் என்று எதிர்பார்த்தேன். இறுதியில் அவர்கள் எனக்கு தருவதாக இருந்த பணத்தில் அந்த கழிவு இந்த கழிவு என்று கை வைத்து எனக்கு வந்து சேர்ந்தது என்னவோ ஒரு மணத்தியாலத்திற்கான சம்பளம் கூட இல்லை (என்னமா ஏமாத்திறாங்கள்). 

 

புதிய வேலை நேர்முகத்தேர்வுக்கு போக முதல் மொட்டை அடித்திருந்தேன். வேலை வெட்டி இல்லை என்பதால் இப்படியான கிறுக்குத்தனங்கள் செய்தேன். அவர்கள் கேட்டதற்கு நண்பருடன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டேன் என்று ஒரு பொய்யை சொன்னேன். என்னை எடுத்ததற்கு முக்கிய காரணம் எனது முன்னைய முதலாழி என்னை பற்றி நன்றாக சொன்னது தான் காரணம் என்றார்கள். ஆனால் இந்த வேலையிலும் அடிமாட்டு சம்பளம் தான். அனுபவம் இல்லாதவர்கள் வேலையில் அனுபவத்தை பெறுவதற்காகவே இப்படியான வேலைகளை அவர்கள் கொடுத்தார்கள் (இங்கே தொழிற்கல்வி என்பது அனுபவமாக பார்க்கப்கடமாட்டாது).

 

சரி கிடைத்ததை செய்வோம் என்று சம்மதித்தேன். அடுத்த வாரம் எனது பழைய முதலாழிக்கு ஒரு பாகிஸ்தான் மாம்பழப்பெட்டி பறந்தது (எல்லாம் ஒரு நன்றிக்கடன் தான்).

 

புதிய நிறுவனத்திலும் ஒரு இரண்டாண்டுகள் குப்பை கொட்டியாகிவிட்டது. அடுத்து என்ன? அந்த நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவர்களின் கணணியில் இருந்து வேறு வேலை தேடினேன். அடுத்த வேலை கிடைத்ததும் அவர்களிடமிருந்து விடைபெற்றேன். 

 

இங்கேயும் எனக்கு கிடைத்தது ஒரு அருமையான இளைமையான மேலாளர் தான். அருவம் தனது பங்கிற்கு போகும் வழியில் ஒரு சென்டிமென்ட் பஞ்ச் தந்துவிட்டார். 

 

"எப்பொழுதுமே தொடர்ந்து ஏதாவது கற்றுக்கொள். கல்வி தான் அதி சிறந்த மூலதானம். பின்பொரு காலத்தில் அந்த மூலதானம் உனக்கு பல மடங்காக திரும்பிவரும்". 

 

உடனே புதிய வேலையுடன் ஒரு பட்டப்படிப்பயும் சேர்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 4ஆண்டுகள் படிப்பு முடியும் வரை அந்த நிறுவனத்தில் வேலை செய்தேன். படிப்பும் நன்றாக முடிந்தது. உனது தகுதிக்கு இந்த வேலை சரிவராது, உன்னுடைய படிப்பிற்கு எங்களால் சம்பளமும் தர முடியாது என்றனர். அதன் பின்னர் அங்கிருந்து நானாகவே விடைபெற்றேன். எனது வேலைக்கான சான்றிதழையும் என்னையே எழுதச்சொன்னார்கள். அப்படியொரு நற்பெயர் எனக்கு. எனது HR பொறுப்பாளர் என்னிடம் வந்து சான்றிதழ்கள் எழுதும் புத்தகம் ஒன்றை தந்து "இதில் உள்ள எந்த வசனங்களை வேண்டுமென்றாலும் இனி கொப்பி பண்ணி போடலாம்" என்றார். 

 

அதன் பின்னர் தற்பொழுது வேலை செய்தும் நிறுவனத்தில் சேர்ந்தேன். எனது சான்றிதழும் முன்னைய நிறுவனத்திடம் இருந்த நற்பெயரும் வேலை வாங்கிதந்தது. 

 

தற்பொழுது இங்கும் இரண்டு வருடங்கள் குப்பைகொட்டியாகிவிட்டது. 

 

இனி நான் என்ன சொய்வேன் என்று உங்களுக்கு நான் எழுதித்தான் தெரியனும் என்று இல்லை....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மளுக்கெல்லாம் இப்படியான திரியளுக்குள்ளை வேலையே இல்ல...  :o  :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மனதுக்குப் பிடித்தமான வேலையும், நிறைய சம்பளமும் கிடைக்க வாழ்த்துக்கள் !

 

கருவலுக்கும் அதே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் நிழலி ஒரு வாசல் மூடினால் ஒன்பது வாசல்கள் திறக்கும் என்பார்கள். இதைவிட நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  backgroud check ஐ பாதிக்காதா?

 

 

நீங்கள் சட்ட ரீதியாக செய்யும் செயல்களினால் எவ்வித பாதிப்பும்  வராது. இது background search செய்கையில் வராமல் சட்டம் தடை செய்கிறது.

 

இதே வேலைக்கு நான் திரும்பி போய் இருந்தால், மறந்து, சட்டைப் பையில் கொண்டு வரக் கூடிய பேனா கூட, திருட்டுக் குற்றம் சுமத்தப் போதுமானது.
 
அவ்வாறு வெளியே அனுப்பினால், background search செய்கையில் வரும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.