Jump to content

பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.


Recommended Posts

பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வாண்டு 5ம் தர புலமைபரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைத் தெரிவு செய்து அதிலும் மிகச் சிறப்பு மாணவர்களாக தற்போது 32 மாணவர்களை கொண்டமைந்த  விஷேட சிறப்புக்  கற்கை நெறித்திட்டமாக பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முழுநேர கற்கைநெறி பாசறை  நடாத்தப்பட்டு வருகின்றது.

 

இம் மாணவர்களினை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் அக்கறையை அதிகரிக்கவும் மேற்படி 32மாணவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடனும் 17.08.2013 சனிக்கிழமை பிறைட்பியுச்சர் நேசக்கரத்தின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பானது மேற்படி குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் பயிரிடுவதற்கான விதை நிலக்கடலையும் அதனைப் பயிரிடுவதற்காக நிலத்தைபண்படுத்தும் கருவிகள் பலவும் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு.முருகேசப்பிள்ளை மற்றும் அன்றைய தின பாசறைப்பொறுப்பாளர் புல்லுமலை பாடசாலை அதிபர் திரு.சோமசுந்தரம் அவர்களும் பன்குடாவெளி அதிபர் திரு.நல்லதம்பி மற்றும் பாட ஆசிரியர் திருமதி ரஜனீஸ்வரி ஆசிரியையும் நேசக்கரம் அமைப்பின் இணைப்பாளர் திரு.ஜனனன், உப செயலாளர் திரு.யோன்சன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் திரு.ரொசாந், செயலாளர் திரு.அருணன், பொருலாளர் செல்வி. ரதிக்கா மற்றும் நேசக்கரம் உறுப்பினர்களும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பன்குடாவெளி பாடசாலை பழையமாணவர்களும் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் மாணவர்களுக்கிடையே போட்டிகளும் மாணவர்களுடன் இணைந்து அதிதிகளுடன் மதியபோசனமும் பெற்றோர்களுடன் சிறப்பு கலந்துரையாடலும் இடம்பெற்றது. திரு. முருகேசப்பிள்ளை அவர்கள் சிறப்புரையினை நிகழ்தினார்.

 

அதில் இவ் அமைப்பினருக்கு நன்றியைத் தெரிவித்ததோடு பிள்ளைகளின் கல்வியை பெற்றோர் ஊக்குவிக்கும் வண்ணம் நடைமுறைப்பட்டுதப்பட்ட இத் திட்டமானது அவர் சேவைக்காலத்திலேயே இன்று தான் முதல் முறையாக மாணவர்களுக்கு சமூகம் முன்வந்து அவர்களை ஊக்கப்படுத்தி பெற்றோர்களுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் புதிய திட்டமாக தாம் அறிவதாகவும் இவர்களின் சேவைக்காக தனது பங்களிப்பினையும் ஆதரவினையும் முழுவதும் வழங்கப்போவதாகவும் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து இந்த நிலக்கடலையினை மானியமாக அவர்களுக்கு கொடுத்து விளைச்சலில் 10 கிலோவினை அடுத்துவரும் மாணவர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் பெற்றோருக்கு பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

எமது இத்திட்டம் பற்றி பாடசாலை அதிபரின் கருத்தும் பெற்றோர்கள் சிலரின் கருத்தும் :-

 

மண்முனை மேற்கு வலையத்தக்கு உட்பட்ட உன்னிச்சை , மாவடியோடை , கரடியானாறு , புல்லுமலை , வெலிக்காகண்டி  , கொச்சித்தோட்டம் , கோப்பாவெளி , உறுகாமம்  , கித்துள் , தும்பாளன்சோலை , மாஞ்சோலை , வடிச்சல் , மரப்பாளம் , ராஜபுரம் , முள்ளிச்சேனை , வேப்பவெட்டுவான், பாலர்சேனை , காரைக்காடு , தளவாய் , இலுப்பட்டிச்சேனை , பன்குடாவளி , கொடுவாமடு , காயங்குடா , தம்பாணம்வெளி ஆகிய கிராமங்களில் கல்வித்தகமை மிகவும் கீழ்மட்டத்திலேயே இருந்து வருகிறது. இக்கிராமங்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் குடும்பங்களும் அக்கறையற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

கல்வி இல்லையெனில் எங்கள் இளைய சந்ததிக்கு வேறெந்த தேர்வும் இல்லாத நிலமையை உணராது அடிப்படை வாழ்வாதாரத்தையே தேடும் மேற்படி கிராமங்களில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்தால் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவோமென புதிய அறிவிப்பினை எமது அமைப்பானது கிராமங்கள் தோறும் செய்து வருகிறது.

 

இத்திட்டத்திற்கு 150000.00Rs (ஒன்றரை லட்சரூபா) ஆதரவை நல்கிய கனடாவில் வாழும் நண்பர்கள் றவி , சுரேஷ் ஆகியோர் இணைந்து வழங்கிய உதவியானது பேராதரவாக அமைந்துள்ளது. இவ்வுதவியை வழங்கிய றவி , சுரேஷ் ஆகியோருக்கு  நேசக்கரம் பிறைட்பியூச்சர் சார்பாகவும் பயனடைந்த குடும்பங்கள் மாணவர்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

 

நிகழ்வு படங்கள் :-

DSCF5588-150x150.jpg DSCF5589-150x150.jpg
DSCF5600-150x150.jpg DSCF5601-150x150.jpg
DSCF5606-150x150.jpg DSCF5609-150x150.jpg
DSCF5615-150x150.jpg DSCF5618-150x150.jpg
DSCF5623-150x150.jpg DSCF5624-150x150.jpg
DSCF5626-150x150.jpg DSCF5628-150x150.jpg
DSCF5634-150x150.jpg DSCF5637-150x150.jpg
 

உதவி வழங்கப்பட்ட குடும்பங்கள் விபரம் :-
let-j1-744x1024.jpg
செலவு விபரம் :-
let-j2-744x1024.jpg
உதவி பெற்ற சிலரது கடிதங்கள் :-

021-150x150.jpg 03-150x150.jpg
loganathan-150x150.jpg raveendran-150x150.jpg   http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.