Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்


Recommended Posts

நாங்கள் எத்தனை குறும்புகள் செய்தாலும் வாத்தியார் கருமமே கண்ணாக இருக்கும் அழகே தனி அழகு.

வாத்தியார், எழுத்துக்கள் உச்சரிக்கப்படும்போது அவைகளின் ஒலி அளவுகள் இத்தனை மாத்திரை என்று கணித்துக் கொள்வதற்கு, கண்ணிமைக்கும் அல்லது கைநொடிக்கும் நேரங்களைச் சீராகக் கையாள்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றதா? அதாவது சங்கீதத்தில் சொற்களின் ஒலியளவைக் கையாள்வதற்கு ஸ்வரங்கள் துணையிருப்பது போல. அப்படி ஒரு துணை இருந்திருக்குமேயானால் சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், இந்தியத்தமிழ், இலங்கைத்தமிழ் என்று ஒரு வேற்றுமை ஏற்பட்டிருக்காதோ?.

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 மகரக்குறுக்கம்

 

சில நேரங்களில் ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து

கால் மாத்திரையாக ஒலிக்கும்.

 

‘ணன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும்’ என்கிறது நன்னூல்.

 

அதாவது, கீழ்க்காணும் சூழ்நிலைகளில் ‘ம’கர எழுத்து குறுகி ஒலிக்கும்:

 

 ண், ன் ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து ‘ம்’ வரவேண்டும்

 

முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ‘வ’ எழுத்து இருக்கவேண்டும்

 

இதில் முதல் வகைக்கு உதாரணம் ‘மருண்ம்’ ‘போன்ம்’.

உங்கள் குழப்பத்தில் நியாயம் உண்டு. மருண்ம், போன்ம் என்றெல்லாம் நாம்  சாதாரணமாக எழுதுவதில்லை, பேசுவதில்லை அவை செய்யுளுக்கே உரிய சொற்கள்.

மருளும் என்ற சொல்லை செய்யுள்களில் மருண்ம் எனவும்

போலும் என்ற சொல்லை செய்யுள்களில் போன்ம் எனவும் எழுதுவார்கள்

 

 

தரும் வளவன் என்று அல்லது பெறும் வணிகண் என்று சத்தமாகச் சொல்லிப் பாருங்கள்.

முதல் சொல்லின் நிறைவில் உள்ள ‘ம்’ என்ற எழுத்து ஒலிப்பதே தெரியாது

 

அதுதான் கால் மாத்திரை மகரக்குறுக்கம்.

முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ‘வ’ என்ற எழுத்து இருந்தால் மகரம் குறுகி ஒலிக்கும்.

 

ஆய்தக் குறுக்கம்

 

 

‘ம்’போலவே, ‘ஃ’ என்ற ஆய்த எழுத்தும் அரை மாத்திரை கொண்டதுதான்.

சில நேரங்களில் அது இன்னும் குறுகி கால் மாத்திரையாக ஒலிக்கும்.

லள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும்

 

அதாவது

 

ஒரு குறில் எழுத்தின் அடுத்து லகர மெய்யோ ளகர மெய்யோ வந்து 

அடுத்த சொல்லின் தொடக்கத்தில் தகரக் குடும்ப எழுத்து வந்து 

அவை புணரும்போது மெய் மறைந்து அங்கே ஆய்தம் தோன்றும் 

அது தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்.

 

உயர்திணை, அஃறிணை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘உயர்திணை’ புரிகிறது, உயர்ந்த திணை.  ‘அஃறிணை’? அஃறிணை என்பது அல் + திணை என்ற இரு சொற்கள் சேர்ந்து உருவானது.

அதாவது உயர்வு அல்லாத திணை.

 

இங்கே ‘அல்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம், தனியே ஒரு குறில் (அ) வருகிறது, அடுத்து லகர மெய் (ல்) வருகிறது.
அடுத்து, ‘திணை’ என்ற சொல், இதன் தொடக்கத்தில், தகரக் குடும்பத்தைச் சேர்ந்த ‘தி’ என்ற எழுத்து வருகிறது.

 

 அல் + திணை சேரும்போது, லகர மெய் (ல்) மறைந்து, ஆய்த எழுத்து (ஃ) தோன்றும்.

இப்படிதான் அது ‘அஃறிணை’ என்று மாறுகிறது.

 

‘ஃ’ புரிகின்றது ‘றி’ எப்படி வந்தது என்று யோசிக்க வேண்டாம்.  புணர்ச்சி விதிகளைப்பற்றி இதே தொடரில் பின்னர் விரிவாகப்பார்க்கவிருக்கின்றோம்.
 

தற்சமயம்   ஆய்த எழுத்தைமட்டும் கவனியுங்கள். அது அரை மாத்திரை அளவில் ஒலிக்காமல் கொஞ்சம் குறுகி ஒலிக்கின்றது. அதைத்தான் ஆய்தக் குறுக்கம் என்கின்றோம்.

 

இதேபோல் இன்னும் சில உதாரணங்கள் சொல்லலாம், ஆனால் அவையெல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற சொற்களாக இருக்காது, ஆகவே, இப்போது இந்த விளக்கம் போதும்.

 

மேலே உள்ள சூத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சில இடங்களைத்தவிர,

மற்ற இடங்களிலெல்லாம் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில்

முழுமையாக ஒலிக்கும்.

ஆகவே அதை ‘முற்றாய்தம்’ என்று அழைப்பார்கள்.

அதற்கு எதிர்ப்பதம் குறுகி ஒலிக்கும் ‘ஆய்தக் குறுக்கம்’.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் முதலாம் தவணைப்பரீட்சை இன்னும் எத்தனை வகுப்புகளுக்குப்பின்னால வரும்? மண்டைக்குள்ள ஏறமாட்டன் என்று அடம்பிடிக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் முதலாம் தவணைப்பரீட்சை இன்னும் எத்தனை வகுப்புகளுக்குப்பின்னால வரும்? மண்டைக்குள்ள ஏறமாட்டன் என்று அடம்பிடிக்குது

படிக்கும்போது மண்டை வெடிக்கின்ற அளவிற்கெல்லாம் படிக்கக்கூடாது

சிறிது ஓய்வு சிறிது விளையாட்டு சிறிது படிப்பென இருக்கவேண்டும். :D

மூளையை  இறுக்காமல் இலகுவாக

வைத்திருந்தால் விளையாடி விளையாடிப் படிக்கலாம்

பரீட்சைக்கு நேரமிருக்கின்றது.

வகுப்பிற்கு வந்தவர்களுக்கு நன்றிகள்

ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றிகள்  :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வாத்தியார் விளையாடிக் கொண்டு படிக்கிறது?

 

அங்கால பஞ்ச் நீங்கள் கரும்பலகையில் எழுதும் நேரம் திரும்பி பின்னால இருக்கிற என்னையும் சுமேயையும் முறைச்சு முறைச்சுப்பார்க்கிறார். பார்க்கவே பயமா இருக்கு...... இசை கடதாசி அம்பு விட்டுட்டு அதைக்காட்டி ஏதோ அபிநயம் பிடிச்சு சுமேக்கு எரிச்சலைக்கிளப்பி விடுறார் இதையும் தாண்டி படிப்பம் என்றால் தமிழ்சிறீ இலையான் அடிக்கிறன் என்று சளார்  சளார் என்று எனக்கு அறைஞ்சுபோட்டு நல்ல பிள்ளை மாதிரி நிற்கிறார். எனக்கு அழுகைதான் வருது. :( படிக்க வருதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வாத்தியார் விளையாடிக் கொண்டு படிக்கிறது?

 

அங்கால பஞ்ச் நீங்கள் கரும்பலகையில் எழுதும் நேரம் திரும்பி பின்னால இருக்கிற என்னையும் சுமேயையும் முறைச்சு முறைச்சுப்பார்க்கிறார். பார்க்கவே பயமா இருக்கு...... இசை கடதாசி அம்பு விட்டுட்டு அதைக்காட்டி ஏதோ அபிநயம் பிடிச்சு சுமேக்கு எரிச்சலைக்கிளப்பி விடுறார் இதையும் தாண்டி படிப்பம் என்றால் தமிழ்சிறீ இலையான் அடிக்கிறன் என்று சளார்  சளார் என்று எனக்கு அறைஞ்சுபோட்டு நல்ல பிள்ளை மாதிரி நிற்கிறார். எனக்கு அழுகைதான் வருது. :( படிக்க வருதில்லை

அக்கா உது வேலைக்காவது வெளிக்கிடுங்கோ பேசாமல் மதிலாலை குதிச்சு போய் ஆச்சி வழவுக்கை சேலன் மாங்காய் எறிஞ்சு விழுத்தி லைட்போஸ்ற்றில குத்தி சாப்பிடுவம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா உது வேலைக்காவது வெளிக்கிடுங்கோ பேசாமல் மதிலாலை குதிச்சு போய் ஆச்சி வழவுக்கை சேலன் மாங்காய் எறிஞ்சு விழுத்தி லைட்போஸ்ற்றில குத்தி சாப்பிடுவம்... :D

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கும்போது மண்டை வெடிக்கின்ற அளவிற்கெல்லாம் படிக்கக்கூடாது

சிறிது ஓய்வு சிறிது விளையாட்டு சிறிது படிப்பென இருக்கவேண்டும். :D

மூளையை  இறுக்காமல் இலகுவாக

வைத்திருந்தால் விளையாடி விளையாடிப் படிக்கலாம்

பரீட்சைக்கு நேரமிருக்கின்றது.

வகுப்பிற்கு வந்தவர்களுக்கு நன்றிகள்

ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றிகள்  :)  

வாத்தியார்.. பொம்பிளைப்பிள்ளையலும் ஆட்டத்துக்கு வந்தால்தான் நான் விளாட வருவன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

சரிவாத்தியார்..மேற்படி பரீட்சையில் பாத்துகவனியோங்கோ வாத்தியார்.... அடுத்தமுறை பெருசாய் வாத்தியாரை நான் கவனிக்கிறன்...விநாசியற்ற வளவுக்கை நிக்கிற பிலாவில உச்சீல ஒரு பத்துக்கிலோ தேறும் பழம்..கயிறுகட்டி இறக்கி நோப்படாமல் அப்பிடியே உங்கட வீட்டு தாழ்வாரத்துக்க போட்டுட்டு போறன்..அக்காவிட்ட சொல்லுங்கோ அடைக்கோழி ஏதும் தேவை எண்டால்... ஈரச்சாக்கு போட்டாவது கொண்டாறன்... பேப்பறை மாத்தி எண்டாலும் பாசாக்கிவிடுங்கோ வாத்தியார்.. :D

Link to comment
Share on other sites

எங்கே வாத்தியார் விளையாடிக் கொண்டு படிக்கிறது?

 

அங்கால பஞ்ச் நீங்கள் கரும்பலகையில் எழுதும் நேரம் திரும்பி பின்னால இருக்கிற என்னையும் சுமேயையும் முறைச்சு முறைச்சுப்பார்க்கிறார். பார்க்கவே பயமா இருக்கு......

 

மலர் சொரியும் சோலையில் வண்டு பறந்து பறந்து தேன்குடித்தால், கண்ட புலவன் கவிபாடுகிறான். :D  

 

தமிழ் சொரியும் வகுப்பில் பாஞ், பாஞ்சு பாஞ்சு தான்படித்தால்! கண்ணடித்த வல்வை சகாறா, பாலைவனம்போல் சுட்டெரிப்பதும் ஏன் வாத்தியார்?... :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துக்களின் பிறப்பிடம்
 

உயிரெழுத்துக்களான அ ஆ என்பன வாயைத் திறப்பதனால் பிறக்கின்றன.
 

இ ஈ எ  ஏ  ஐ என்பன வாயைத் திறந்த பின் மேல்வாய்ப்பல்லை நாக்கின் அடிப்பகுதியின் ஓரம் தழுவும்போது பிறக்கின்றன.
 

உ ஊ ஒ ஓ ஔ என்பன உதடுகளைக் குவிப்பதனால் பிறக்கின்றன.
 

மெய்யெழுத்துக்களான க ங என்ற இரண்டும் நாக்கின் அடி மேல் வாயின் அடிப்பகுதியைச் சேரும் போது பிறக்கின்றன
 

அதேபோல ச ஞ என்பன நடு நாக்கு மேல்வாய்ப்பகுதியையும்
ட ண என்பன நாக்கின் முன்பகுதி வாயின் முன்பகுதியையும் பொருந்தப் பிறக்கின்றன.
 

த ந என்ற மெய்யெழுத்துக்கள் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்தும்போது பிறக்கின்றன.
 

ப ம என்ற எழுத்துக்கள் மேலுதடும் கீழுதடும் பொருத்தும் போது பிறக்கின்றன.
 

என்பது நாக்கின் அடிப்பகுதி   மேல்வாயின் அடிப்பகுதியுடம் பொருந்தப்  பிறக்கிறது.
 

ர ழ என்ற இரண்டு சொற்களும் வாயின் மேல் பகுதியை நாக்கின் நுனி தடவும் போது பிறக்கின்றன.
 

என்ற எழுத்து மேல் வாய்ப் பல்லின் அடியில் இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.
 

என்பது நாக்கின் ஓரமானது மேல் வாயை இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

 

என்பது கீழுதடு மேல்வாய்ப் பல்லுடன் பொருந்தும் போது பிறக்கின்றது.
 

ற ன என்பன நாக்கின் நுனி மேல்வாயுடன் பொருந்தும் போது பிறக்கின்றன.

 

ஆய்தம் தலையில் பிறக்கின்றது
ஆய்த எழுத்துத் தவிர்ந்த மற்றைய சார்பெழுத்துக்கள்
ஒன்பதும் மேலே பார்த்த முதலெழுத்துக்களின் பிறப்பினைப் போன்றே பிறக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நான் ற சொல்லேக்குள்ள நாக்கு எதனுடனும் முட்டவே இல்லையே. காத்துத்தான் நாக்கை அசைச்சு அதிரப்பண்ணுது. இது எனக்கு மட்டுமோ அல்லது மற்றவை சொல்லேக்குள்ளும் இப்பிடியோ எண்டு விளங்கேல்லை


வாத்தியார்.. பொம்பிளைப்பிள்ளையலும் ஆட்டத்துக்கு வந்தால்தான் நான் விளாட வருவன்..

 

ஒருத்தரும் உங்களைச் சேர்க்க மாட்டினமாம்

 

Link to comment
Share on other sites

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

 

வாத்தியார்..வாத்தியார்..நல்ல பூவரசம் தடி நான் கொண்டு வாறேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

ஒருத்தரும் உங்களைச் சேர்க்க மாட்டினமாம்

 

 

நானு பொம்பிளைப்பிள்ளையளைதான் ஆட்டத்துக்கு கேட்டன்..  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர் சொரியும் சோலையில் வண்டு பறந்து பறந்து தேன்குடித்தால், கண்ட புலவன் கவிபாடுகிறான். :D  

 

தமிழ் சொரியும் வகுப்பில் பாஞ், பாஞ்சு பாஞ்சு தான்படித்தால்! கண்ணடித்த வல்வை சகாறா, பாலைவனம்போல் சுட்டெரிப்பதும் ஏன் வாத்தியார்?... :( 

கண்ணடித்தால் பதிலுக்கு கண்ணடித்து றொமான்ஸ் பண்ணுவதை விட்டுவிட்டு காஞ்சமாடு வைக்கலை பார்ப்பதுபோல் பார்த்தால் என் கட்சிக்காரரின் கபாலத்தில் கடுப்பேறாதா வாத்தியார்...?

Link to comment
Share on other sites

எழுத்துக்களின் பிறப்பிடம்

 

உயிரெழுத்துக்களான அ ஆ என்பன வாயைத் திறப்பதனால் பிறக்கின்றன.

 

இ ஈ எ  ஏ  ஐ என்பன வாயைத் திறந்த பின் மேல்வாய்ப்பல்லை நாக்கின் அடிப்பகுதியின் ஓரம் தழுவும்போது பிறக்கின்றன.

 

உ ஊ ஒ ஓ ஔ என்பன உதடுகளைக் குவிப்பதனால் பிறக்கின்றன.

 

மெய்யெழுத்துக்களான க ங என்ற இரண்டும் நாக்கின் அடி மேல் வாயின் அடிப்பகுதியைச் சேரும் போது பிறக்கின்றன

 

அதேபோல ச ஞ என்பன நடு நாக்கு மேல்வாய்ப்பகுதியையும்

ட ண என்பன நாக்கின் முன்பகுதி வாயின் முன்பகுதியையும் பொருந்தப் பிறக்கின்றன.

 

த ந என்ற மெய்யெழுத்துக்கள் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்தும்போது பிறக்கின்றன.

 

ப ம என்ற எழுத்துக்கள் மேலுதடும் கீழுதடும் பொருத்தும் போது பிறக்கின்றன.

 

என்பது நாக்கின் அடிப்பகுதி   மேல்வாயின் அடிப்பகுதியுடம் பொருந்தப்  பிறக்கிறது.

 

ர ழ என்ற இரண்டு சொற்களும் வாயின் மேல் பகுதியை நாக்கின் நுனி தடவும் போது பிறக்கின்றன.

 

என்ற எழுத்து மேல் வாய்ப் பல்லின் அடியில் இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

 

என்பது நாக்கின் ஓரமானது மேல் வாயை இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

 

என்பது கீழுதடு மேல்வாய்ப் பல்லுடன் பொருந்தும் போது பிறக்கின்றது.

 

ற ன என்பன நாக்கின் நுனி மேல்வாயுடன் பொருந்தும் போது பிறக்கின்றன.

 

ஆய்தம் தலையில் பிறக்கின்றது

ஆய்த எழுத்துத் தவிர்ந்த மற்றைய சார்பெழுத்துக்கள்

ஒன்பதும் மேலே பார்த்த முதலெழுத்துக்களின் பிறப்பினைப் போன்றே பிறக்கின்றன.

 

பிறப்பிடத்தை birth place என்று சொல்லலாமோ வாத்தியார்...?

 

Link to comment
Share on other sites

மாத்திரை

 

எழுத்துக்கள்  ஒலிக்கப்பட வேண்டிய நேரத்தை அளக்கும் முறையே மாத்திரை எனப்படும்

முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்கும் நேரம் ஆகியவற்றை வைத்தே அளந்தனர்.

ஒரு முறை கை நொடிக்கும் நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் எழுத்துக்கள் ஒலிக்கப்பட்டால் அந்த நேரத்தை ஒரு ஒலி அளவு எனக்கொண்டார்கள்.

அதையே அன்றைய கால இலக்கண நூல்களை எழுதியவர்கள் மாத்திரை என்றார்கள்.

 

ஒரு ஒலி அளவில் ஒரு எழுத்து ஒலிக்கப்பட்டால் அதனை ஒரு மாத்திரை என்றனர்.

இரண்டு ஒலியளவில் ஒலிக்கப்படும் போது இரண்டு மாத்திரை என்றனர்.

அதாவது இரண்டுமுறை கண்ணிமைக்கும் நேரத்தின் அளவிற்கு அல்லது இரண்டு கைநொடிகளின் நேரத்திற்கு  ஒலிக்கப்பட்டால் இரண்டு மாத்திரை என்றனர்.

 

உயிரளபெடை 3 மாத்திரை (சில இடத்தில் 4 மாத்திரை வருவதும் உண்டு)

 

நெடில்  2 மாத்திரை

 

குறில் ,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,ஒற்றளபெடை  1 மாத்திரை

 

மெய்,குற்றியலிகரம்,குற்றியலுகரம்,ஆய்தம்  1/2 மாத்திரை

 

மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம்   1/4 மாத்திரை

 

இவையே எழுத்துக்களின் ஒலி அளவுகளாகும்

 

நல்லவேளை.. தூக்கமாத்திரை இல்லாமற்போனது, இல்லையென்றால் தமிழே தூங்கியிருக்கும்.

வாத்தியார், தமிழை நன்றாகப் படிக்க ஏதும் ஊக்க மாத்திரை கிடைக்குமோ..?

பாடங்கள் எல்லாமே நன்றாகப் போகிறது, ஆனால் மனதில் சேமிக்கத்தான் கடினமாக இருக்கிறது. எதாவது அறிவுரை சொல்லுங்கள் சார்........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடங்கள் எல்லாமே நன்றாகப் போகிறது, ஆனால் மனதில் சேமிக்கத்தான் கடினமாக இருக்கிறது. எதாவது அறிவுரை சொல்லுங்கள் சார்........

 

bhindi.jpg

தினமும் பச்சை வெண்டிக்காய் சாப்பிட்டால்.... பாடங்கள் இலகுவில் மனதில் பதியும்.

எங்களுக்கும் முன்பு.... பாடங்கள் மூளையில் பதிய கடினமாக இருந்தது, இப்போ ஓகே....

 

Link to comment
Share on other sites

bhindi.jpg

தினமும் பச்சை வெண்டிக்காய் சாப்பிட்டால்.... பாடங்கள் இலகுவில் மனதில் பதியும்.

எங்களுக்கும் முன்பு.... பாடங்கள் மூளையில் பதிய கடினமாக இருந்தது, இப்போ ஓகே....

 

 

முயற்சி செய்துபார்க்கிறேன், நன்றி அண்ணா. உண்மையாத்தானே சொன்னீங்கள்?? :)

 

Link to comment
Share on other sites

 

 

நானு பொம்பிளைப்பிள்ளையளைதான் ஆட்டத்துக்கு கேட்டன்..  :D

 

 

கண்ணடித்தால் பதிலுக்கு கண்ணடித்து றொமான்ஸ் பண்ணுவதை விட்டுவிட்டு காஞ்சமாடு வைக்கலை பார்ப்பதுபோல் பார்த்தால் என் கட்சிக்காரரின் கபாலத்தில் கடுப்பேறாதா வாத்தியார்...?

 

பெண்ணென்றும் பாராது எள்ளிநகையாடிவிட்டு பின், என் கட்சிக்காரர் என பந்தா காட்டுவதிலும் நீங்கள் சூரர்தான். சபாஸ் சுபேஸ்!.

 

எனக்குத் தங்கைப் பாக்கியம் இல்லை. அதனால் இளநங்கைகள் எல்லாம் என் பாசமலர்கள். அவர்களோடு எப்படி நான் கண்ணடித்து றொமான்ஸ் பண்ணமுடியும்! மெசொபொத்தேமியா சுமேரியர் என் பாசமலர்களில் ஒருவர். அவர் கண்ணடித்தார்! என்று நான் தெரிவித்ததை தவறாக விளங்கிக்கொண்டீர்கள் போல் தெரிகிறது. பிரம்பால் அடித்து, கையால் அடித்து ஒருவரை படிய வைப்பதுபோல் கண்ணாலும் அடித்துப் படியச் செய்யலாம். நீங்கள் கேள்விப்பட்டதில்லையா! பசிலின் ஒரு கண்பார்வையில் டக்ளஸ் தேவானந்தா அடங்கிப்போனதாக!....

 

சுபேஸ் எங்கடை கதையிலை நாங்கள் வாத்தியின் பாடத்தைக் கவனிக்கேல்லை. பாருங்கோ அவருக்கு கடுப்பேறிவிட்டது. ஏதாவது மாங்காய், தேங்காய் கதையை அவிழ்த்து விடுங்கோ, உப்பும், மிளகாய்த்தூளும் தேடுவதில் அவர் கவனத்தைத் திருப்பிவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நிலை எழுத்துக்கள்
 

ஒரு சொல்லை அமைக்கும்போது எல்லா எழுத்துக்களும் அந்தச் சொல்லின்  முதல் எழுத்துக்களாக
வரமாட்டாது.
உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் க ச த நப ம வ ய ஞ ங என்னும் பத்து உயிர் மெய்யெழுத்துக்கள் மற்றும் அந்த பத்து உயிர் மெய்யெழுத்துக்களின் வர்க்க எழுத்துக்கள் என்பனவே சொல்லின் முதல் எழுத்தாக இருக்கும்

 

அவை தவிர்ந்த ட ண ர ல ழ ள ற ன என்ற உயிர் மெய்யெழுத்துக்கள் சொற்களின் முதல் எழுத்தாகாது.
 

இறுதி நிலை எழுத்துக்கள்

 

சொல்லுக்கு  முதல் இந்த எழுத்துக்கள் தான்  வரவேண்டும் என்பதைப்போல சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும் வகுத்துள்ளனர். இவற்றிற்கு இறுதி நிலை எழுத்துக்கள் எனப்பெயர்.
பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள எனும் உயிர்மெய்யெழுத்துக்களும் அதன் வர்க்கங்களும் சொல்லின் இறுதியில் வரும்
 

க ங  ச ட த ப ற என்பன சொல்லின் இறுதியில் வராது.
சொல்லின் இறுதியில் க் ச் என்ற வரிசையில் வரும் ஆறு வல்லின மெய்யெழுத்துக்கள் வரமாட்டாது
 

அவ்வாறான சொற்கள் குற்றியலுகரத்துடன் முடியும்
பாக்க் = பாக்கு
பாட்ட் = பாட்டு
இதைப்போன்றே ங என்ற சொல் இறுதியில் வாரா
குரங்ங் = குரங்கு  

 

‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.

தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள்.

அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.

        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

 

வாத்தியார் இங்குள்ள சொற்கள் பற்றி கொஞ்சம் விளக்கம் தாங்கோ...


பற என்பது சொல் இல்லையா?

 

நட என்றால் சொல் ஆகாதா? குழப்பமா இருக்கு வாத்தியார் விளக்கம் தாங்கோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணென்றும் பாராது எள்ளிநகையாடிவிட்டு பின், என் கட்சிக்காரர் என பந்தா காட்டுவதிலும் நீங்கள் சூரர்தான். சபாஸ் சுபேஸ்!.

 

 

 

பாஞ் .. நான் விளாட்டுக்கு அறைகூவல் விடுத்தது பொம்பிளைப்பிள்ளைகளை.. பொம்பிளைஅம்மாக்களை அல்ல.. :D

 

 

 

எனக்குத் தங்கைப் பாக்கியம் இல்லை. அதனால் இளநங்கைகள் எல்லாம் என் பாசமலர்கள். 

இப்படிக்கு அண்ணண் உத்தமன்... :D

 

 

 

சுபேஸ் எங்கடை கதையிலை நாங்கள் வாத்தியின் பாடத்தைக் கவனிக்கேல்லை. பாருங்கோ அவருக்கு கடுப்பேறிவிட்டது. ஏதாவது மாங்காய், தேங்காய் கதையை அவிழ்த்து விடுங்கோ, உப்பும், மிளகாய்த்தூளும் தேடுவதில் அவர் கவனத்தைத் திருப்பிவிடலாம்.

 

 

வாத்தியாருக்கு மாங்காய் எண்டதும்..பல்லெல்லாம் கரகரத்து வாயூறுது...நான் என்ன செய்ய பாஞ்..? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

 

வாத்தியார் இங்குள்ள சொற்கள் பற்றி கொஞ்சம் விளக்கம் தாங்கோ...

பற என்பது சொல் இல்லையா?

 

நட என்றால் சொல் ஆகாதா? குழப்பமா இருக்கு வாத்தியார் விளக்கம் தாங்கோ :unsure:

 

"அடியிரண்டும் தொடுத்தல் முதலாயின தொடையே"

 

 

செய்யுளில் பல அடிகளிலும்  அல்லது பல சீர்களிலும்

எழுத்துக்கள் ஒன்றாக வர அமைக்கப்படுவது தொடை எனப்படும்.

 

பொருளுக்கும் இடத்திற்கும் தக்கவாறு ஒத்திசை கூடிய ஓசைகளை அல்லது எழுத்துக்களைக் கொண்டு அமைந்த சொற்களால் செய்யுள்களைப் புலவர்கள் அமைப்பார்கள் .

 

தொடை எனப்படுவது ஐந்து வகைப்படும்

 

 

நீங்கள் கூறிய குறள்

 

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

 

மோனைத்தொடை ஆகும்

இவற்றை யாப்பதிகாரத்தில் காணலாம்  

 

அடுத்தது நட என்பது இலக்கணப் பிழையானதாக இருக்கும்

நட என்பதற்குப் பதிலாக செல் எனக் கூறலாம்

 

பற என்பதற்குப் பதிலாகப் பறந்து செல் எனவும் கூறலாம்

 

பேச்சு வழக்குத் தமிழிற்கும் இலக்கணத் தமிழிற்கும்

வித்தியாசங்கள் உண்டு  :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட, பற  என்பவை வினை அடிகள் என்று கூற முடியாதா???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.