Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்


Recommended Posts

ரங்கு சிலிப் ஆகிறவை இது தான் முதல்ல படிக்கனும்..உங்க ஆசிரியர் வந்தால் இதில் ஒரு கொப்பி எடுத்து கொடுத்து விடுங்கோ பிள்ளைகள். :lol:

 

 

ல, ழ, ள உச்சரிப்பு சரியாக வராத சில மாணவர்களுக்கு, உச்சரிப்பு சரியாக வருவதற்காக 'அருணாசல புராணம்' என்ற நூலில் உண்ணாமுலை அம்மன் மீதுள்ள துதிப் பாடல் ஒன்றை பலமுறை படிக்கச் சொல்வாராம் கி.வா.ஜ.

காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்

தொழுகும் இரு கடை...க் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக

அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்

தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா

முலையாளைச் சிந்தை செய்வாம்.

நீங்களும் சொல்லிப்பாருங்கள்

 

சின்ன வயதில் வயதில் இந்த தனத்தால்தான்  படிப்பு கெட்டது. இப்பவுமா? :o:D

 

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

பாஞ்ச் வடிவாக இன்னொருமுறை கவனியுங்கள்

சும்மா அடாவடியாக வாத்தியாருக்கு எதிராக அள்ளி வைக்கக் கூடாது. :lol:

நான் நல்ல வாத்தியாராக்கும் :D  :lol:  :lol:

 

மன்னிச்சுக்கொள்ளுங்கோ வாத்தியார். என்னைப்போலவே என்ரை கொம்பியூட்டரும் சரியான பழசு, :(  எல்லாவற்றையும் பிந்தித்தான் விளங்கிக்கொள்ளுது, காட்டுது. இருந்தாலும் அவ, மெசொபொத்தேமியா சுமேரியர் என்னை நல்லாத்தான் உங்களிட்டை போட்டுத்தந்துள்ளா போல் தெரிகிறது. <_<  உங்களுக்கு இப்படிக் கோவம் வந்து நான் பார்த்ததே இல்லை. :blink:  வகுப்பைவிட்டுமட்டும் தூக்கிப்போடாதேங்கோ, இப்போ மெய் எழுத்துக்களைப் படித்துவிட்டேன். என் தவறுக்கு என் மெய்யினால் சட பட என்று எத்தனை தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போடுகிறேன். :huh: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிச்சுக்கொள்ளுங்கோ வாத்தியார். என்னைப்போலவே என்ரை கொம்பியூட்டரும் சரியான பழசு, :(  எல்லாவற்றையும் பிந்தித்தான் விளங்கிக்கொள்ளுது, காட்டுது. இருந்தாலும் அவ, மெசொபொத்தேமியா சுமேரியர் என்னை நல்லாத்தான் உங்களிட்டை போட்டுத்தந்துள்ளா போல் தெரிகிறது. <_<  உங்களுக்கு இப்படிக் கோவம் வந்து நான் பார்த்ததே இல்லை. :blink:  வகுப்பைவிட்டுமட்டும் தூக்கிப்போடாதேங்கோ, இப்போ மெய் எழுத்துக்களைப் படித்துவிட்டேன். என் தவறுக்கு என் மெய்யினால் சட பட என்று எத்தனை தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போடுகிறேன். :huh: 

 

இவ்வளவு சீக்கிரம் மிரண்டு தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தால், ஹும்ம்... நீங்கள் 'பழசு'ன்னு பேர்ல வருகிற 'இளசு' போல தெரியுது...!  assom.gif

 

கருமமே கண்ணாயிருந்த இந்த 'சுந்தரனை' ஒரு கனநேரம் ஏமாற்றப் பார்த்தீர்களே?  why-us.gif

 

Link to comment
Share on other sites

இவ்வளவு சீக்கிரம் மிரண்டு தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தால், ஹும்ம்... நீங்கள் 'பழசு'ன்னு பேர்ல வருகிற 'இளசு' போல தெரியுது...!  assom.gif

 

கருமமே கண்ணாயிருந்த இந்த 'சுந்தரனை' ஒரு கனநேரம் ஏமாற்றப் பார்த்தீர்களே?  why-us.gif

 

 

வன்னியரே, என் வயதைச் சொல்லிவிட்டேன். வாத்தியார் என்னை, மார்க்கண்டு வாத்தியாரின் முதியோர் வகுப்புக்கு மாற்றிவிடுவாரோ தெரியாது. ஆனாலும் என் மனசு என்றும் இளசுதான். இளசுகள் என்னிடம் பயமின்றிப் பழகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்

தொழுகும் இரு கடை...க் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக

அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்

தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா

முலையாளைச் சிந்தை செய்வாம்.

நீங்களும் சொல்லிப்பாருங்கள்

 

நானும் பல தடவைகள் முயன்று பார்த்தேன்...

 

ம்ம்.. ஒருமுறைகூட அசுர சுத்தமாக, தடுமாற்றமில்லாமல் வாசிக்க இயலவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியரே, என் வயதைச் சொல்லிவிட்டேன். வாத்தியார் என்னை, மார்க்கண்டு வாத்தியாரின் முதியோர் வகுப்புக்கு மாற்றிவிடுவாரோ தெரியாது. ஆனாலும் என் மனசு என்றும் இளசுதான். இளசுகள் என்னிடம் பயமின்றிப் பழகலாம்.

 

பாஞ்ச், உங்கள் வயதை சொல்லவேயில்லையே.. சொன்னால், வகுப்பில் பக்கத்திலேயே இருக்கை தயார் செய்ய வசதியாக இருக்கும், வாத்தியார் அடிக்க வரும் பட்சத்தில், பாஞ்சு பாஞ்சு அவரை தடுக்கவும் முடியும். :)

தமிழ் வகுப்பிற்கு, இந்தி பெயரில்(பாஞ்ச்) வரக்கூடாது! :lol:

 

நானும் 'ராசவன்னியன்' என உருமாற்றம் செய்ய இருக்கிறேன்

Link to comment
Share on other sites

பாஞ்ச், உங்கள் வயதை சொல்லவேயில்லையே.. சொன்னால், வகுப்பில் பக்கத்திலேயே இருக்கை தயார் செய்ய வசதியாக இருக்கும், வாத்தியார் அடிக்க வரும் பட்சத்தில், பாஞ்சு பாஞ்சு அவரை தடுக்கவும் முடியும். :)

தமிழ் வகுப்பிற்கு, இந்தி பெயரில்(பாஞ்ச்) வரக்கூடாது! :lol:

 

நானும் 'ராசவன்னியன்' என உருமாற்றம் செய்ய இருக்கிறேன்

 

என் வயதை யாழ்களத்தில் தற்போது அனைவரும் அறிவார்கள் நீங்கள் அறியாதிருப்பது ஆச்சரியமே!

 

என்னைப் பஞ்சு என்றுதான் கூப்பிடுவார்கள் அத்தனை மென்மையானவன் நான். :rolleyes:  ஆனால் பஞ்சு என்ற பெயரில் நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, :huh:  ஆகவேதான் கைக்குவந்ததை ரைப் செய்தேன் பாஞ் என்று வந்தபோது ஏற்றுக்கொண்டது. யாழ்களத்திற்கு இந்திமேல் இத்தனை காதல் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. :wub:

 

வன்னியரே யாழ்களத்தில்தான் தமிழ் வகுப்பு இருக்கிறது. நான் வருவதை எந்தக்கொம்பன் வந்து தடுத்தாலும் களம் விடாது. :D

 

சரி சரி வாங்கோ வாத்தியார் வரப்போறார் வகுப்புக்குப் போவம் மற்றதை பிறகு கதைக்கலாம். :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலெழுத்துக்களாகிய உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்துக்கள்
சார்பெழுத்துக்கள் எனப்படும்.
சார்பெழுத்துக்கள் மூன்று எனத் தொல்காப்பியர் கூறினாலும் நன்னூலார் பத்துச் சார்பெழுத்துக்களை கூறுகின்றார்.
 

1. உயிர்மெய்யெழுத்து
2.ஆய்தம் அல்லது அகேனம்
3.உயிரளபெடை
4.ஒற்றளபெடை
5.குற்றியலிகரம்
6.குற்றியலுகரம்
7.ஐகாரக்குறுக்கம்
8.ஒளகாரக்குறுக்கம்
9.மகரக்குறுக்கம்
10.ஆய்தக்குறுக்கம்

 

நன்னூலார் கூறும் இந்தப் பத்துச் சார்பெழுத்துக்களில்
தொல்காப்பியர் கூறுபவை கூற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்பவை மட்டுமே.

 

 

1.உயிர்மெய்யெழுத்து

 

ஒரு மெய்யெழுத்தும் ஒரு  உயிரெழுத்தும் சேருவதனால் பிறக்கும் பிறிதொரு எழுத்திற்கு உயிர்மெய்யெழுத்து என்று பெயர்.
 

உதாரணம் மெய்யெழுத்தாகிய க்  உயிரெழுத்தாகிய வுடன் சேரும்பொழுது  என்ற உயிர்மெய்யெழுத்துப் பிறக்கின்றது.அப்படியே பதினெட்டு மெய்யெழுத்துக்களும் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தனித்தனியாக ஒன்றுடன் ஒன்று சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துக்கள் பிறக்கின்றன.
 

12  உயிரெழுத்துக்கள்
18 மெய்யெழுத்துக்கள்
216 உயிர்மெய்யெழுத்துக்கள்
1 ஆய்த எழுத்து
மொத்தம் தமிழ்மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன.
   

     அ ஆ இ ஈ உ ஊ எ    ஏ   ஐ       ஒ        ஓ             ஔ
 

க்   க கா கி கீ கு கூ கெ கே கை கொ     கோ       கௌ
 

ங்  ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
 

ச்   ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
 

ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
 

ட்  ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
 

ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
 

த்  த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
 

ந்   ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
 

ப்  ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
 

ம்  ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
 

ய்  ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
 

ர்  ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
 

ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
 

வ்  வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
 

ழ்  ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
 

ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
 

ற்  ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
 

ன்  ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
 

 

Link to comment
Share on other sites

 எழுத்துக்களின் விளக்கத்திற்குப் பாராட்டுக்கள் . வாத்தியார் ஐயா " மகரக் குறுக்கம் " என்றால் ?? என்ன விளக்கம் தாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலெழுத்துக்களாகிய உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்துக்கள்

சார்பெழுத்துக்கள் எனப்படும்.

சார்பெழுத்துக்கள் மூன்று எனத் தொல்காப்பியர் கூறினாலும் நன்னூலார் பத்துச் சார்பெழுத்துக்களை கூறுகின்றார்.

 

1. உயிர்மெய்யெழுத்து

2.ஆய்தம் அல்லது அகேனம்

3.உயிரளபெடை

4.ஒற்றளபெடை

5.குற்றியலிகரம்

6.குற்றியலுகரம்

7.ஐகாரக்குறுக்கம்

8.ஒளகாரக்குறுக்கம்

9.மகரக்குறுக்கம்

10.ஆய்தக்குறுக்கம்

 

ரொம்ப வருடங்களாச்சுது... இந்த குறுக்கங்களின் விளக்கங்களைக் கேட்டு.

அடுத்து அரை மாத்திரை, கால் மாத்திரை, முழு மாத்திரை என குழப்பமான சுவாரசியங்கள் வரவுள்ளன போலும்.

 

அரைச்சி சாப்பிடுவோம்!

 

நன்றி.

Link to comment
Share on other sites

சுமே நான் பின்னாலேயே இருக்கிறேன் முன்னுக்கு இருக்கிற ஆட்களைத்தான் வாத்தியார் அடிக்கடி கேள்வி கேட்பார். அதோட முன்னால இருந்தால் கனக்க சங்கடங்கள் வரும் இப்பிடித்தான் போன வருசம் டியூசனில நானும் எனது சிநேகிதியும் முன்னுக்கு அள்ளி அடிச்சு இடம் பிடிச்சு இருந்திட்டம். எங்களுக்கு அண்டைக்கு வகுப்பு எடுக்கிற தமிழ்வாத்தியைப் பெடியளுக்குப்பிடிக்காது என்று எங்களுக்குத் தெரியாது. அவர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று சுந்தர காண்டத்தை படிப்பிக்க பின்னால இருந்த பெடியள் வாத்திக்கு காகித அம்பு எறியத் தொடங்கிடாங்கள் முன்னுக்கு இருந்த எங்களுக்குமேலையும் அம்புகள் விழுந்திச்சு அதில ஒரு அம்பு என்ர சிநேகிதியின் தலையில வந்து செருகி தாழம்பூ மாதிரி நிற்க பெடியளும் சும்மா விட்டாங்களோ கொண்டையிலே தாழம்பூ என்று பாட்டுப்பாடத் தொடங்கிட்டாங்கள்...... அதுக்குப்பிறகு அவளை எங்க கண்டாலும் இவங்கள் தாழம்பூக் கொண்டைக்காரி தமிழுவாத்தி அண்டைகாரி தழுவ வரவா சண்டைக்காரி என்று ஓவராஎல்லாம் பாடுவாங்கள் அதால இப்ப அவள் படிக்கவே வராமல் விட்டுட்டாள். அண்டைக்கு மட்டும் அவளும் நானும் முன்வாங்கிலில இருக்காம விட்டிருந்தா இப்ப அவளும் இங்க படிக்க வந்திருப்பா....முன்னுக்கு இருந்தா  மேடையில இருக்கிற மாதிரி என்னவா இருந்தாலும் எல்லாரும் பாப்பினம். அதால நான் வரேல்லை நீங்கள் இங்க வாங்கோ...... :D

:lol:  :D

Link to comment
Share on other sites

ஊக்கம் அளிக்கும் நுணா, சுவி அண்ணா, சுமேரியர், தமிழரசு, யாழ் அன்பு, கோமகன், களான், பான்ச், மற்றும் புத்தன் அனைவருக்கும் நன்றிகள். நாளைக்கு வகுப்பிற்கு எல்லோரும் கட்டாயம் வரவேண்டும் :D

 

நானும் ஒரு ஊக்கியாகவிருந்து பின்னூட்டமிடுகிறேன். தொடருங்கள் போதனையை. படித்ததெல்லாம் நினைவில்லில்லை, எல்லாவற்றையும் மீழ்நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

Link to comment
Share on other sites

எல்லோருக்குமே பிரையோசனமான தொடர் . பெரும்பகுதியான பிழைகள் வல்லின , மெல்லின , இடையினங்களிலேயே வருவது கண்கூடு .  தொடருங்கள் வாத்தியார் :) :) .

 

மெல்லினங்களைப் புரிந்துகொள்வதே எனக்கு இப்பொது மெத்தச் சிரமமாக இருக்கிறது...

Link to comment
Share on other sites

எ, யா முதலும், ஆ, ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகுமே !

(நன்னூல்)

 

நான் சரியா வாத்தி யார்?

 

இப்ப ஞாபகம் வருகிறதே.... என் தமிழ் வாத்தியார் பத்தாண்டுகளுக்கு முன் செப்பினது.

 

Link to comment
Share on other sites

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம்.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன.

 

இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும்.

 

இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல்  எழுதி  வ ரவும்  கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும்.

அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம்.

 

பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் மொழிக்கு இலக்கணமும் துணையாக இருக்கின்றது. 

 

இலக்கணத்தைப் பற்றி விரிவாகப் படிப்பதற்கு இந்த ஆக்கம் எல்லோருக்கும் உதவியாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

 

ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி கள உறவுகளை வேண்டிக்கொள்கின்றேன்  

 

கனம் தமிழ் ஆசான் அவர்கட்கு,

தமிழை மேலும் படித்து இன்னும் பல குசும்புகளைத் தமிழில் செய்யவேண்டுமென்ற ஆர்வக்கோளாறினால் தங்களின் அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுளைந்து இதுவரையில் நிகழ்த்திய அனைத்துப் பாடங்களையும் மென்று சுவைத்துத் தின்றுவிட்டேன். மேலும் சுவைக்க ஆவல்லாயுள்ளேன், தயைகூர்ந்து என்னையும் தங்கள் மாணாக்கர்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்ளும்படி இத்தால் வேண்டிக்கொள்கிறேன்.

இங்ஙனம்,

சுயசீர்திருத்தமடைந்த மாணவன்.

 

Link to comment
Share on other sites

வாத்தியார் உங்கள் வகுப்புக்கு இனி நான் வரேலை. சுமேரியர் பழைய காதல் கடிதங்களைக் கொண்டு வாறபடியால் எனக்கு மூட் அவுட்டாகுது அதாலை படிக்க முடியலை.  :(  :unsure:  ^_^  :huh:  :mellow:  :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்மெய்யெழுத்தாகிய  யா என்ற எழுத்தும் வினாவெழுத்தாகும். யா என்ற வினாவெழுத்து
ஒரு சொல்லின் முதலாக மட்டுமே வரும். சொல்லின் இறுதியில் வராது.
 

உதாரணம் யாது அல்லது யாவன என்பன
 

வந்தாயா என்பது ஒரு வினாச்சொல். இங்கே இறுதியில் யா என்ற வினாவெழுத்து வந்திருக்கின்றதே எனக்கருதக்கூடாது.
 

ஏனெனில் வந்தாயா என்ற சொல்லைப் பிரித்துப் பார்த்தால் வந்தாய் + ஆ என வரும். ஆகவே இங்கு வினாவெழுத்து ஆ என்பதே ஒழிய யா அல்ல.

 

 

சார்பெழுத்த்க்களில் அடுத்து நாங்கள் பார்க்க இருப்பது
 

ஆய்தம்

 

இது  மூன்று புள்ளிகளைக்கொண்ட ஒரு வடிவம். ஒரு கத்தியையும் அதன் பிடியையும் இணைக்கும்போது மூன்று ஆணிகளை அடித்து இணைப்பார்கள். அப்படி அடிக்கப்படும் ஆணிகளின் வடிவத்தில் இருப்பதனால் இந்த எழுத்துக்கும் ஆய்த எழுத்து எனப் பெயர் வந்ததாகக் கருதுகின்றனர்.
 

இந்த எழுத்திற்கு தனி நிலை, புள்ளியெழுத்து, அடுப்பெழுத்து (அடுப்பின் வடிவத்தில் இருப்பதனால்)
எனவும் பெயர்கள் உண்டு.
ஆய்தம் எப்போதும் ஒரு சொல்லின் இடையிலேயே வரும்.ஆய்த எழுத்தைக் கொண்ட ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ஒரு குறில் எழுத்தும் அடுத்து ஆய்தமும் அதற்கடுத்ததாக ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்துமே இருக்கும்.
 

உதாரணம் அஃது அல்லது  எஃகு, அஃதும் என்ற சொற்களாகும்.
 

 

அளபெடை
 

பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை
மிகைப்படுத்துவார்கள். இது அளபெடை எனப்படும்
அளபெடை இரண்டு வகைப்படும்.
1. உயிரளபெடை
2.ஒற்றளபெடை

என்பன அவையிரண்டுமாகும்.
 

 

உயிரளபெடை
 

ஒரு பாடலில் ஓசை குறையும்போது
சொல்லின் முதலிலும் நடுவிலும் இறுதியிலும் வரும் உயிர் நெடில்  எழுத்துக்கள் ஏழும்

அந்த ஓசையின் அளவை நிறைவுசெய்ய அந்த எழுத்துக்களின்
சாதாரண அளவைவிட மிகையாக ஒலிக்கப்படும்
 

அந்த இடத்தில் எழுத்தின் ஓசை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதனை அறியச்செய்ய அந்த இடத்தில் வரும் நெடில் எழுத்துக்கு அடுத்ததாக அந்த நெடில் எழுத்தின் இனமாகிய குறில் எழுத்தினை இணைப்பர்.
 

இவ்வாறு ஒரு சொல்லில் உயிர் நெடில் எழுத்தினை அடுத்து அந்த எழுத்தின் உயிர்க்குறில் சேர்க்கப்பட்டு
அங்கு வரும் ஒலியின் அளவினைக் குறித்துக் காட்டுவதற்கு உயிரளபெடை எனப்பெயர்.
 

பகை நட்பாம் காலம் வருங்கால் முக நாட்டு
அகநட்பு   ஒரீஇ விடல்
 

என்ற திருக்குறளின் சீராகிய ஒரீ(இ) என்பதன் ஒலி நீண்டு ஒலிக்க வேண்டும் என்பதற்காக வள்ளுவர்
ர +ஈ என்ற ரீ யுடன் ஈ யின் குறிலாகிய இ யைச் சேர்த்துள்ளார்  
 

 

ஒற்றளபெடை
 

 

பாடலின் ஒலி அல்லது ஓசை குறையும்போது சொல்லின் நடுவிலும் இறுதியிலும் வரும் ங,ஞ,ண ,ந,ம,  ன,வ,ய,ல,ள என்ற  ஒற்றையெழுத்துக்கள் பத்தும் ஆய்த எழுத்து ஒன்றுமாக பதினொரு எழுத்துக்களும் அந்த இடத்தில் வரும் ஒலியை நிறைவடையச் செய்ய அந்த எழுத்துக்களின் சாதாரண ஒலியைவிட மிகையாக ஒலிக்கும் அதனை அறியச்செய்வதற்கு அந்த எழுத்துக்ளுக்கு அடுத்ததாக

இன்னொருமுறை அந்த எழுத்தை இணைத்து விடல் வேண்டும்.

இவ்வாறு சொல்லில் வரும் ஒற்றெழுத்தே மீண்டும் இணைந்து இணையொற்றாக வந்து அந்த இடத்தில் வரும் ஒலி மிகையைக் குறிப்பதையே ஒற்றளபெடை என்பர்
 

 

கண்(ண்) கருவிளை கார்முல்லை கூரெயிறு
பொன்(ன் )பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ
மின்(ன்) னுழைமருங்கு மேதகு சாயலாள்
என்(ன் )பிறமகளா மாறு
 

இங்கே ஒவ்வொரு வரிசைகளிலும் முதற் சீர்களில்
வரும் அதாவது முதற்சொல்லின் எழுத்துக்களாகிய  ண், ன் என்ற எழுத்துக்களின் ஒலிகள் நீட்டி ஒலிக்கப்படல்வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?
வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.
த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.
வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! நாங்கள்தான் நெடுக முன்வாங்கில இருக்கிறனாங்கள். இண்டைக்கு தமிழ்ச்சிறியும் வதாவும் வந்தியும் வந்து இருந்திட்டினம். நாங்கள் என்ன செய்யிறது ???எனக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு பின்னால இருந்தால் ஒண்டும் தெரியாது.


students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?
வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.
த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.
வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

 

பணிசும் குடுகிறவையே. எந்தப் பள்ளிக்கூடத்தில.
 


சுமேரியை வகுப்பாலை நிப்பாட்டினால் தான் ...............

 

பிறகு உம்மட கதையையும் எல்லாருக்கும் சொல்லிப்போடுவன் அலை :D
 

Link to comment
Share on other sites

பிறகு உம்மட கதையையும் எல்லாருக்கும் சொல்லிப்போடுவன் அலை :D

 

 

 எனக்குத் தெரியாமல் என்னுடைய கதையா  :o 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?

வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.

த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.

வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

 

த‌.சி.: பெண் மாடு தானே?

 

    தனியாகவா?

    கன்றுடனா? :D

Link to comment
Share on other sites

தமிழுக்கும் அமுதென்று பேர். அந்த அமுதை அன்பான வாத்தியார் உங்களிடம் இருந்து பருகியபோது! ஏற்பட்ட ஆனந்த மிகுதியால், :) நீங்கள் சொல்லித்தந்த பாடங்களை சந்தை மடத்தடியிலிருந்து சத்தம்போட்டுப் படித்தேன். :D உயிரளபெடை, ஒற்றளபெடை என்று படித்தபோது! சந்தையிலை குந்தியிருந்த ஒரு மனிசி எனக்கு அடிக்கவந்திட்டா வாத்தியார். :( கட்டையில போற உனக்குப் பெட்டை கேக்குதா! எண்டு அவவுக்கு வந்த கோவம். <_<    

Link to comment
Share on other sites

த‌.சி.: பெண் மாடு தானே?

 

விசுகு அவர்களே! நீங்கள் பூனூல் போட்டவரா? அக்கிரகாரத்துத் பழக்க வழக்கங்கள் உங்களிடம் அத்துப்படியாக வெளிப்படுகிறதே! அங்குதான் பெண்ணுக்கும் மாட்டுக்கும் சிறப்பான ஒற்றுமை உள்ளதாகப் படித்துள்ளேன். மருமகளை, மாட்டுப்பெண் என்று அன்பாக அழைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்திரை
 

எழுத்துக்கள்  ஒலிக்கப்பட வேண்டிய நேரத்தை அளக்கும் முறையே மாத்திரை எனப்படும்

முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்கும் நேரம் ஆகியவற்றை வைத்தே அளந்தனர்.
ஒரு முறை கை நொடிக்கும் நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் எழுத்துக்கள் ஒலிக்கப்பட்டால் அந்த நேரத்தை ஒரு ஒலி அளவு எனக்கொண்டார்கள்.

அதையே அன்றைய கால இலக்கண நூல்களை எழுதியவர்கள் மாத்திரை என்றார்கள்.

 

ஒரு ஒலி அளவில் ஒரு எழுத்து ஒலிக்கப்பட்டால் அதனை ஒரு மாத்திரை என்றனர்.
இரண்டு ஒலியளவில் ஒலிக்கப்படும் போது இரண்டு மாத்திரை என்றனர்.

அதாவது இரண்டுமுறை கண்ணிமைக்கும் நேரத்தின் அளவிற்கு அல்லது இரண்டு கைநொடிகளின் நேரத்திற்கு  ஒலிக்கப்பட்டால் இரண்டு மாத்திரை என்றனர்.
 

உயிரளபெடை 3 மாத்திரை (சில இடத்தில் 4 மாத்திரை வருவதும் உண்டு)
 

நெடில்  2 மாத்திரை
 

குறில் ,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,ஒற்றளபெடை  1 மாத்திரை

 

மெய்,குற்றியலிகரம்,குற்றியலுகரம்,ஆய்தம்  1/2 மாத்திரை
 

மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம்   1/4 மாத்திரை
 

இவையே எழுத்துக்களின் ஒலி அளவுகளாகும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.