Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்


Recommended Posts

ரங்கு சிலிப் ஆகிறவை இது தான் முதல்ல படிக்கனும்..உங்க ஆசிரியர் வந்தால் இதில் ஒரு கொப்பி எடுத்து கொடுத்து விடுங்கோ பிள்ளைகள். :lol:

 

 

ல, ழ, ள உச்சரிப்பு சரியாக வராத சில மாணவர்களுக்கு, உச்சரிப்பு சரியாக வருவதற்காக 'அருணாசல புராணம்' என்ற நூலில் உண்ணாமுலை அம்மன் மீதுள்ள துதிப் பாடல் ஒன்றை பலமுறை படிக்கச் சொல்வாராம் கி.வா.ஜ.

காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்

தொழுகும் இரு கடை...க் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக

அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்

தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா

முலையாளைச் சிந்தை செய்வாம்.

நீங்களும் சொல்லிப்பாருங்கள்

 

சின்ன வயதில் வயதில் இந்த தனத்தால்தான்  படிப்பு கெட்டது. இப்பவுமா? :o:D

 

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

பாஞ்ச் வடிவாக இன்னொருமுறை கவனியுங்கள்

சும்மா அடாவடியாக வாத்தியாருக்கு எதிராக அள்ளி வைக்கக் கூடாது. :lol:

நான் நல்ல வாத்தியாராக்கும் :D  :lol:  :lol:

 

மன்னிச்சுக்கொள்ளுங்கோ வாத்தியார். என்னைப்போலவே என்ரை கொம்பியூட்டரும் சரியான பழசு, :(  எல்லாவற்றையும் பிந்தித்தான் விளங்கிக்கொள்ளுது, காட்டுது. இருந்தாலும் அவ, மெசொபொத்தேமியா சுமேரியர் என்னை நல்லாத்தான் உங்களிட்டை போட்டுத்தந்துள்ளா போல் தெரிகிறது. <_<  உங்களுக்கு இப்படிக் கோவம் வந்து நான் பார்த்ததே இல்லை. :blink:  வகுப்பைவிட்டுமட்டும் தூக்கிப்போடாதேங்கோ, இப்போ மெய் எழுத்துக்களைப் படித்துவிட்டேன். என் தவறுக்கு என் மெய்யினால் சட பட என்று எத்தனை தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போடுகிறேன். :huh: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிச்சுக்கொள்ளுங்கோ வாத்தியார். என்னைப்போலவே என்ரை கொம்பியூட்டரும் சரியான பழசு, :(  எல்லாவற்றையும் பிந்தித்தான் விளங்கிக்கொள்ளுது, காட்டுது. இருந்தாலும் அவ, மெசொபொத்தேமியா சுமேரியர் என்னை நல்லாத்தான் உங்களிட்டை போட்டுத்தந்துள்ளா போல் தெரிகிறது. <_<  உங்களுக்கு இப்படிக் கோவம் வந்து நான் பார்த்ததே இல்லை. :blink:  வகுப்பைவிட்டுமட்டும் தூக்கிப்போடாதேங்கோ, இப்போ மெய் எழுத்துக்களைப் படித்துவிட்டேன். என் தவறுக்கு என் மெய்யினால் சட பட என்று எத்தனை தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போடுகிறேன். :huh: 

 

இவ்வளவு சீக்கிரம் மிரண்டு தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தால், ஹும்ம்... நீங்கள் 'பழசு'ன்னு பேர்ல வருகிற 'இளசு' போல தெரியுது...!  assom.gif

 

கருமமே கண்ணாயிருந்த இந்த 'சுந்தரனை' ஒரு கனநேரம் ஏமாற்றப் பார்த்தீர்களே?  why-us.gif

 

Link to comment
Share on other sites

இவ்வளவு சீக்கிரம் மிரண்டு தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தால், ஹும்ம்... நீங்கள் 'பழசு'ன்னு பேர்ல வருகிற 'இளசு' போல தெரியுது...!  assom.gif

 

கருமமே கண்ணாயிருந்த இந்த 'சுந்தரனை' ஒரு கனநேரம் ஏமாற்றப் பார்த்தீர்களே?  why-us.gif

 

 

வன்னியரே, என் வயதைச் சொல்லிவிட்டேன். வாத்தியார் என்னை, மார்க்கண்டு வாத்தியாரின் முதியோர் வகுப்புக்கு மாற்றிவிடுவாரோ தெரியாது. ஆனாலும் என் மனசு என்றும் இளசுதான். இளசுகள் என்னிடம் பயமின்றிப் பழகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்

தொழுகும் இரு கடை...க் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக

அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்

தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா

முலையாளைச் சிந்தை செய்வாம்.

நீங்களும் சொல்லிப்பாருங்கள்

 

நானும் பல தடவைகள் முயன்று பார்த்தேன்...

 

ம்ம்.. ஒருமுறைகூட அசுர சுத்தமாக, தடுமாற்றமில்லாமல் வாசிக்க இயலவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியரே, என் வயதைச் சொல்லிவிட்டேன். வாத்தியார் என்னை, மார்க்கண்டு வாத்தியாரின் முதியோர் வகுப்புக்கு மாற்றிவிடுவாரோ தெரியாது. ஆனாலும் என் மனசு என்றும் இளசுதான். இளசுகள் என்னிடம் பயமின்றிப் பழகலாம்.

 

பாஞ்ச், உங்கள் வயதை சொல்லவேயில்லையே.. சொன்னால், வகுப்பில் பக்கத்திலேயே இருக்கை தயார் செய்ய வசதியாக இருக்கும், வாத்தியார் அடிக்க வரும் பட்சத்தில், பாஞ்சு பாஞ்சு அவரை தடுக்கவும் முடியும். :)

தமிழ் வகுப்பிற்கு, இந்தி பெயரில்(பாஞ்ச்) வரக்கூடாது! :lol:

 

நானும் 'ராசவன்னியன்' என உருமாற்றம் செய்ய இருக்கிறேன்

Link to comment
Share on other sites

பாஞ்ச், உங்கள் வயதை சொல்லவேயில்லையே.. சொன்னால், வகுப்பில் பக்கத்திலேயே இருக்கை தயார் செய்ய வசதியாக இருக்கும், வாத்தியார் அடிக்க வரும் பட்சத்தில், பாஞ்சு பாஞ்சு அவரை தடுக்கவும் முடியும். :)

தமிழ் வகுப்பிற்கு, இந்தி பெயரில்(பாஞ்ச்) வரக்கூடாது! :lol:

 

நானும் 'ராசவன்னியன்' என உருமாற்றம் செய்ய இருக்கிறேன்

 

என் வயதை யாழ்களத்தில் தற்போது அனைவரும் அறிவார்கள் நீங்கள் அறியாதிருப்பது ஆச்சரியமே!

 

என்னைப் பஞ்சு என்றுதான் கூப்பிடுவார்கள் அத்தனை மென்மையானவன் நான். :rolleyes:  ஆனால் பஞ்சு என்ற பெயரில் நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, :huh:  ஆகவேதான் கைக்குவந்ததை ரைப் செய்தேன் பாஞ் என்று வந்தபோது ஏற்றுக்கொண்டது. யாழ்களத்திற்கு இந்திமேல் இத்தனை காதல் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. :wub:

 

வன்னியரே யாழ்களத்தில்தான் தமிழ் வகுப்பு இருக்கிறது. நான் வருவதை எந்தக்கொம்பன் வந்து தடுத்தாலும் களம் விடாது. :D

 

சரி சரி வாங்கோ வாத்தியார் வரப்போறார் வகுப்புக்குப் போவம் மற்றதை பிறகு கதைக்கலாம். :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலெழுத்துக்களாகிய உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்துக்கள்
சார்பெழுத்துக்கள் எனப்படும்.
சார்பெழுத்துக்கள் மூன்று எனத் தொல்காப்பியர் கூறினாலும் நன்னூலார் பத்துச் சார்பெழுத்துக்களை கூறுகின்றார்.
 

1. உயிர்மெய்யெழுத்து
2.ஆய்தம் அல்லது அகேனம்
3.உயிரளபெடை
4.ஒற்றளபெடை
5.குற்றியலிகரம்
6.குற்றியலுகரம்
7.ஐகாரக்குறுக்கம்
8.ஒளகாரக்குறுக்கம்
9.மகரக்குறுக்கம்
10.ஆய்தக்குறுக்கம்

 

நன்னூலார் கூறும் இந்தப் பத்துச் சார்பெழுத்துக்களில்
தொல்காப்பியர் கூறுபவை கூற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்பவை மட்டுமே.

 

 

1.உயிர்மெய்யெழுத்து

 

ஒரு மெய்யெழுத்தும் ஒரு  உயிரெழுத்தும் சேருவதனால் பிறக்கும் பிறிதொரு எழுத்திற்கு உயிர்மெய்யெழுத்து என்று பெயர்.
 

உதாரணம் மெய்யெழுத்தாகிய க்  உயிரெழுத்தாகிய வுடன் சேரும்பொழுது  என்ற உயிர்மெய்யெழுத்துப் பிறக்கின்றது.அப்படியே பதினெட்டு மெய்யெழுத்துக்களும் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தனித்தனியாக ஒன்றுடன் ஒன்று சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துக்கள் பிறக்கின்றன.
 

12  உயிரெழுத்துக்கள்
18 மெய்யெழுத்துக்கள்
216 உயிர்மெய்யெழுத்துக்கள்
1 ஆய்த எழுத்து
மொத்தம் தமிழ்மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன.
   

     அ ஆ இ ஈ உ ஊ எ    ஏ   ஐ       ஒ        ஓ             ஔ
 

க்   க கா கி கீ கு கூ கெ கே கை கொ     கோ       கௌ
 

ங்  ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
 

ச்   ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
 

ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
 

ட்  ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
 

ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
 

த்  த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
 

ந்   ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
 

ப்  ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
 

ம்  ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
 

ய்  ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
 

ர்  ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
 

ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
 

வ்  வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
 

ழ்  ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
 

ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
 

ற்  ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
 

ன்  ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
 

 

Link to comment
Share on other sites

 எழுத்துக்களின் விளக்கத்திற்குப் பாராட்டுக்கள் . வாத்தியார் ஐயா " மகரக் குறுக்கம் " என்றால் ?? என்ன விளக்கம் தாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலெழுத்துக்களாகிய உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்துக்கள்

சார்பெழுத்துக்கள் எனப்படும்.

சார்பெழுத்துக்கள் மூன்று எனத் தொல்காப்பியர் கூறினாலும் நன்னூலார் பத்துச் சார்பெழுத்துக்களை கூறுகின்றார்.

 

1. உயிர்மெய்யெழுத்து

2.ஆய்தம் அல்லது அகேனம்

3.உயிரளபெடை

4.ஒற்றளபெடை

5.குற்றியலிகரம்

6.குற்றியலுகரம்

7.ஐகாரக்குறுக்கம்

8.ஒளகாரக்குறுக்கம்

9.மகரக்குறுக்கம்

10.ஆய்தக்குறுக்கம்

 

ரொம்ப வருடங்களாச்சுது... இந்த குறுக்கங்களின் விளக்கங்களைக் கேட்டு.

அடுத்து அரை மாத்திரை, கால் மாத்திரை, முழு மாத்திரை என குழப்பமான சுவாரசியங்கள் வரவுள்ளன போலும்.

 

அரைச்சி சாப்பிடுவோம்!

 

நன்றி.

Link to comment
Share on other sites

சுமே நான் பின்னாலேயே இருக்கிறேன் முன்னுக்கு இருக்கிற ஆட்களைத்தான் வாத்தியார் அடிக்கடி கேள்வி கேட்பார். அதோட முன்னால இருந்தால் கனக்க சங்கடங்கள் வரும் இப்பிடித்தான் போன வருசம் டியூசனில நானும் எனது சிநேகிதியும் முன்னுக்கு அள்ளி அடிச்சு இடம் பிடிச்சு இருந்திட்டம். எங்களுக்கு அண்டைக்கு வகுப்பு எடுக்கிற தமிழ்வாத்தியைப் பெடியளுக்குப்பிடிக்காது என்று எங்களுக்குத் தெரியாது. அவர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று சுந்தர காண்டத்தை படிப்பிக்க பின்னால இருந்த பெடியள் வாத்திக்கு காகித அம்பு எறியத் தொடங்கிடாங்கள் முன்னுக்கு இருந்த எங்களுக்குமேலையும் அம்புகள் விழுந்திச்சு அதில ஒரு அம்பு என்ர சிநேகிதியின் தலையில வந்து செருகி தாழம்பூ மாதிரி நிற்க பெடியளும் சும்மா விட்டாங்களோ கொண்டையிலே தாழம்பூ என்று பாட்டுப்பாடத் தொடங்கிட்டாங்கள்...... அதுக்குப்பிறகு அவளை எங்க கண்டாலும் இவங்கள் தாழம்பூக் கொண்டைக்காரி தமிழுவாத்தி அண்டைகாரி தழுவ வரவா சண்டைக்காரி என்று ஓவராஎல்லாம் பாடுவாங்கள் அதால இப்ப அவள் படிக்கவே வராமல் விட்டுட்டாள். அண்டைக்கு மட்டும் அவளும் நானும் முன்வாங்கிலில இருக்காம விட்டிருந்தா இப்ப அவளும் இங்க படிக்க வந்திருப்பா....முன்னுக்கு இருந்தா  மேடையில இருக்கிற மாதிரி என்னவா இருந்தாலும் எல்லாரும் பாப்பினம். அதால நான் வரேல்லை நீங்கள் இங்க வாங்கோ...... :D

:lol:  :D

Link to comment
Share on other sites

ஊக்கம் அளிக்கும் நுணா, சுவி அண்ணா, சுமேரியர், தமிழரசு, யாழ் அன்பு, கோமகன், களான், பான்ச், மற்றும் புத்தன் அனைவருக்கும் நன்றிகள். நாளைக்கு வகுப்பிற்கு எல்லோரும் கட்டாயம் வரவேண்டும் :D

 

நானும் ஒரு ஊக்கியாகவிருந்து பின்னூட்டமிடுகிறேன். தொடருங்கள் போதனையை. படித்ததெல்லாம் நினைவில்லில்லை, எல்லாவற்றையும் மீழ்நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

Link to comment
Share on other sites

எல்லோருக்குமே பிரையோசனமான தொடர் . பெரும்பகுதியான பிழைகள் வல்லின , மெல்லின , இடையினங்களிலேயே வருவது கண்கூடு .  தொடருங்கள் வாத்தியார் :) :) .

 

மெல்லினங்களைப் புரிந்துகொள்வதே எனக்கு இப்பொது மெத்தச் சிரமமாக இருக்கிறது...

Link to comment
Share on other sites

எ, யா முதலும், ஆ, ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகுமே !

(நன்னூல்)

 

நான் சரியா வாத்தி யார்?

 

இப்ப ஞாபகம் வருகிறதே.... என் தமிழ் வாத்தியார் பத்தாண்டுகளுக்கு முன் செப்பினது.

 

Link to comment
Share on other sites

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம்.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன.

 

இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும்.

 

இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல்  எழுதி  வ ரவும்  கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும்.

அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம்.

 

பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் மொழிக்கு இலக்கணமும் துணையாக இருக்கின்றது. 

 

இலக்கணத்தைப் பற்றி விரிவாகப் படிப்பதற்கு இந்த ஆக்கம் எல்லோருக்கும் உதவியாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

 

ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி கள உறவுகளை வேண்டிக்கொள்கின்றேன்  

 

கனம் தமிழ் ஆசான் அவர்கட்கு,

தமிழை மேலும் படித்து இன்னும் பல குசும்புகளைத் தமிழில் செய்யவேண்டுமென்ற ஆர்வக்கோளாறினால் தங்களின் அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுளைந்து இதுவரையில் நிகழ்த்திய அனைத்துப் பாடங்களையும் மென்று சுவைத்துத் தின்றுவிட்டேன். மேலும் சுவைக்க ஆவல்லாயுள்ளேன், தயைகூர்ந்து என்னையும் தங்கள் மாணாக்கர்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்ளும்படி இத்தால் வேண்டிக்கொள்கிறேன்.

இங்ஙனம்,

சுயசீர்திருத்தமடைந்த மாணவன்.

 

Link to comment
Share on other sites

வாத்தியார் உங்கள் வகுப்புக்கு இனி நான் வரேலை. சுமேரியர் பழைய காதல் கடிதங்களைக் கொண்டு வாறபடியால் எனக்கு மூட் அவுட்டாகுது அதாலை படிக்க முடியலை.  :(  :unsure:  ^_^  :huh:  :mellow:  :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்மெய்யெழுத்தாகிய  யா என்ற எழுத்தும் வினாவெழுத்தாகும். யா என்ற வினாவெழுத்து
ஒரு சொல்லின் முதலாக மட்டுமே வரும். சொல்லின் இறுதியில் வராது.
 

உதாரணம் யாது அல்லது யாவன என்பன
 

வந்தாயா என்பது ஒரு வினாச்சொல். இங்கே இறுதியில் யா என்ற வினாவெழுத்து வந்திருக்கின்றதே எனக்கருதக்கூடாது.
 

ஏனெனில் வந்தாயா என்ற சொல்லைப் பிரித்துப் பார்த்தால் வந்தாய் + ஆ என வரும். ஆகவே இங்கு வினாவெழுத்து ஆ என்பதே ஒழிய யா அல்ல.

 

 

சார்பெழுத்த்க்களில் அடுத்து நாங்கள் பார்க்க இருப்பது
 

ஆய்தம்

 

இது  மூன்று புள்ளிகளைக்கொண்ட ஒரு வடிவம். ஒரு கத்தியையும் அதன் பிடியையும் இணைக்கும்போது மூன்று ஆணிகளை அடித்து இணைப்பார்கள். அப்படி அடிக்கப்படும் ஆணிகளின் வடிவத்தில் இருப்பதனால் இந்த எழுத்துக்கும் ஆய்த எழுத்து எனப் பெயர் வந்ததாகக் கருதுகின்றனர்.
 

இந்த எழுத்திற்கு தனி நிலை, புள்ளியெழுத்து, அடுப்பெழுத்து (அடுப்பின் வடிவத்தில் இருப்பதனால்)
எனவும் பெயர்கள் உண்டு.
ஆய்தம் எப்போதும் ஒரு சொல்லின் இடையிலேயே வரும்.ஆய்த எழுத்தைக் கொண்ட ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ஒரு குறில் எழுத்தும் அடுத்து ஆய்தமும் அதற்கடுத்ததாக ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்துமே இருக்கும்.
 

உதாரணம் அஃது அல்லது  எஃகு, அஃதும் என்ற சொற்களாகும்.
 

 

அளபெடை
 

பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை
மிகைப்படுத்துவார்கள். இது அளபெடை எனப்படும்
அளபெடை இரண்டு வகைப்படும்.
1. உயிரளபெடை
2.ஒற்றளபெடை

என்பன அவையிரண்டுமாகும்.
 

 

உயிரளபெடை
 

ஒரு பாடலில் ஓசை குறையும்போது
சொல்லின் முதலிலும் நடுவிலும் இறுதியிலும் வரும் உயிர் நெடில்  எழுத்துக்கள் ஏழும்

அந்த ஓசையின் அளவை நிறைவுசெய்ய அந்த எழுத்துக்களின்
சாதாரண அளவைவிட மிகையாக ஒலிக்கப்படும்
 

அந்த இடத்தில் எழுத்தின் ஓசை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதனை அறியச்செய்ய அந்த இடத்தில் வரும் நெடில் எழுத்துக்கு அடுத்ததாக அந்த நெடில் எழுத்தின் இனமாகிய குறில் எழுத்தினை இணைப்பர்.
 

இவ்வாறு ஒரு சொல்லில் உயிர் நெடில் எழுத்தினை அடுத்து அந்த எழுத்தின் உயிர்க்குறில் சேர்க்கப்பட்டு
அங்கு வரும் ஒலியின் அளவினைக் குறித்துக் காட்டுவதற்கு உயிரளபெடை எனப்பெயர்.
 

பகை நட்பாம் காலம் வருங்கால் முக நாட்டு
அகநட்பு   ஒரீஇ விடல்
 

என்ற திருக்குறளின் சீராகிய ஒரீ(இ) என்பதன் ஒலி நீண்டு ஒலிக்க வேண்டும் என்பதற்காக வள்ளுவர்
ர +ஈ என்ற ரீ யுடன் ஈ யின் குறிலாகிய இ யைச் சேர்த்துள்ளார்  
 

 

ஒற்றளபெடை
 

 

பாடலின் ஒலி அல்லது ஓசை குறையும்போது சொல்லின் நடுவிலும் இறுதியிலும் வரும் ங,ஞ,ண ,ந,ம,  ன,வ,ய,ல,ள என்ற  ஒற்றையெழுத்துக்கள் பத்தும் ஆய்த எழுத்து ஒன்றுமாக பதினொரு எழுத்துக்களும் அந்த இடத்தில் வரும் ஒலியை நிறைவடையச் செய்ய அந்த எழுத்துக்களின் சாதாரண ஒலியைவிட மிகையாக ஒலிக்கும் அதனை அறியச்செய்வதற்கு அந்த எழுத்துக்ளுக்கு அடுத்ததாக

இன்னொருமுறை அந்த எழுத்தை இணைத்து விடல் வேண்டும்.

இவ்வாறு சொல்லில் வரும் ஒற்றெழுத்தே மீண்டும் இணைந்து இணையொற்றாக வந்து அந்த இடத்தில் வரும் ஒலி மிகையைக் குறிப்பதையே ஒற்றளபெடை என்பர்
 

 

கண்(ண்) கருவிளை கார்முல்லை கூரெயிறு
பொன்(ன் )பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ
மின்(ன்) னுழைமருங்கு மேதகு சாயலாள்
என்(ன் )பிறமகளா மாறு
 

இங்கே ஒவ்வொரு வரிசைகளிலும் முதற் சீர்களில்
வரும் அதாவது முதற்சொல்லின் எழுத்துக்களாகிய  ண், ன் என்ற எழுத்துக்களின் ஒலிகள் நீட்டி ஒலிக்கப்படல்வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?
வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.
த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.
வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! நாங்கள்தான் நெடுக முன்வாங்கில இருக்கிறனாங்கள். இண்டைக்கு தமிழ்ச்சிறியும் வதாவும் வந்தியும் வந்து இருந்திட்டினம். நாங்கள் என்ன செய்யிறது ???எனக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு பின்னால இருந்தால் ஒண்டும் தெரியாது.


students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?
வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.
த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.
வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

 

பணிசும் குடுகிறவையே. எந்தப் பள்ளிக்கூடத்தில.
 


சுமேரியை வகுப்பாலை நிப்பாட்டினால் தான் ...............

 

பிறகு உம்மட கதையையும் எல்லாருக்கும் சொல்லிப்போடுவன் அலை :D
 

Link to comment
Share on other sites

பிறகு உம்மட கதையையும் எல்லாருக்கும் சொல்லிப்போடுவன் அலை :D

 

 

 எனக்குத் தெரியாமல் என்னுடைய கதையா  :o 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?

வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.

த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.

வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

 

த‌.சி.: பெண் மாடு தானே?

 

    தனியாகவா?

    கன்றுடனா? :D

Link to comment
Share on other sites

தமிழுக்கும் அமுதென்று பேர். அந்த அமுதை அன்பான வாத்தியார் உங்களிடம் இருந்து பருகியபோது! ஏற்பட்ட ஆனந்த மிகுதியால், :) நீங்கள் சொல்லித்தந்த பாடங்களை சந்தை மடத்தடியிலிருந்து சத்தம்போட்டுப் படித்தேன். :D உயிரளபெடை, ஒற்றளபெடை என்று படித்தபோது! சந்தையிலை குந்தியிருந்த ஒரு மனிசி எனக்கு அடிக்கவந்திட்டா வாத்தியார். :( கட்டையில போற உனக்குப் பெட்டை கேக்குதா! எண்டு அவவுக்கு வந்த கோவம். <_<    

Link to comment
Share on other sites

த‌.சி.: பெண் மாடு தானே?

 

விசுகு அவர்களே! நீங்கள் பூனூல் போட்டவரா? அக்கிரகாரத்துத் பழக்க வழக்கங்கள் உங்களிடம் அத்துப்படியாக வெளிப்படுகிறதே! அங்குதான் பெண்ணுக்கும் மாட்டுக்கும் சிறப்பான ஒற்றுமை உள்ளதாகப் படித்துள்ளேன். மருமகளை, மாட்டுப்பெண் என்று அன்பாக அழைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்திரை
 

எழுத்துக்கள்  ஒலிக்கப்பட வேண்டிய நேரத்தை அளக்கும் முறையே மாத்திரை எனப்படும்

முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்கும் நேரம் ஆகியவற்றை வைத்தே அளந்தனர்.
ஒரு முறை கை நொடிக்கும் நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் எழுத்துக்கள் ஒலிக்கப்பட்டால் அந்த நேரத்தை ஒரு ஒலி அளவு எனக்கொண்டார்கள்.

அதையே அன்றைய கால இலக்கண நூல்களை எழுதியவர்கள் மாத்திரை என்றார்கள்.

 

ஒரு ஒலி அளவில் ஒரு எழுத்து ஒலிக்கப்பட்டால் அதனை ஒரு மாத்திரை என்றனர்.
இரண்டு ஒலியளவில் ஒலிக்கப்படும் போது இரண்டு மாத்திரை என்றனர்.

அதாவது இரண்டுமுறை கண்ணிமைக்கும் நேரத்தின் அளவிற்கு அல்லது இரண்டு கைநொடிகளின் நேரத்திற்கு  ஒலிக்கப்பட்டால் இரண்டு மாத்திரை என்றனர்.
 

உயிரளபெடை 3 மாத்திரை (சில இடத்தில் 4 மாத்திரை வருவதும் உண்டு)
 

நெடில்  2 மாத்திரை
 

குறில் ,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,ஒற்றளபெடை  1 மாத்திரை

 

மெய்,குற்றியலிகரம்,குற்றியலுகரம்,ஆய்தம்  1/2 மாத்திரை
 

மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம்   1/4 மாத்திரை
 

இவையே எழுத்துக்களின் ஒலி அளவுகளாகும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.