Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்


Recommended Posts

நாங்கள் எத்தனை குறும்புகள் செய்தாலும் வாத்தியார் கருமமே கண்ணாக இருக்கும் அழகே தனி அழகு.

வாத்தியார், எழுத்துக்கள் உச்சரிக்கப்படும்போது அவைகளின் ஒலி அளவுகள் இத்தனை மாத்திரை என்று கணித்துக் கொள்வதற்கு, கண்ணிமைக்கும் அல்லது கைநொடிக்கும் நேரங்களைச் சீராகக் கையாள்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றதா? அதாவது சங்கீதத்தில் சொற்களின் ஒலியளவைக் கையாள்வதற்கு ஸ்வரங்கள் துணையிருப்பது போல. அப்படி ஒரு துணை இருந்திருக்குமேயானால் சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், இந்தியத்தமிழ், இலங்கைத்தமிழ் என்று ஒரு வேற்றுமை ஏற்பட்டிருக்காதோ?.

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 மகரக்குறுக்கம்

 

சில நேரங்களில் ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து

கால் மாத்திரையாக ஒலிக்கும்.

 

‘ணன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும்’ என்கிறது நன்னூல்.

 

அதாவது, கீழ்க்காணும் சூழ்நிலைகளில் ‘ம’கர எழுத்து குறுகி ஒலிக்கும்:

 

 ண், ன் ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து ‘ம்’ வரவேண்டும்

 

முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ‘வ’ எழுத்து இருக்கவேண்டும்

 

இதில் முதல் வகைக்கு உதாரணம் ‘மருண்ம்’ ‘போன்ம்’.

உங்கள் குழப்பத்தில் நியாயம் உண்டு. மருண்ம், போன்ம் என்றெல்லாம் நாம்  சாதாரணமாக எழுதுவதில்லை, பேசுவதில்லை அவை செய்யுளுக்கே உரிய சொற்கள்.

மருளும் என்ற சொல்லை செய்யுள்களில் மருண்ம் எனவும்

போலும் என்ற சொல்லை செய்யுள்களில் போன்ம் எனவும் எழுதுவார்கள்

 

 

தரும் வளவன் என்று அல்லது பெறும் வணிகண் என்று சத்தமாகச் சொல்லிப் பாருங்கள்.

முதல் சொல்லின் நிறைவில் உள்ள ‘ம்’ என்ற எழுத்து ஒலிப்பதே தெரியாது

 

அதுதான் கால் மாத்திரை மகரக்குறுக்கம்.

முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ‘வ’ என்ற எழுத்து இருந்தால் மகரம் குறுகி ஒலிக்கும்.

 

ஆய்தக் குறுக்கம்

 

 

‘ம்’போலவே, ‘ஃ’ என்ற ஆய்த எழுத்தும் அரை மாத்திரை கொண்டதுதான்.

சில நேரங்களில் அது இன்னும் குறுகி கால் மாத்திரையாக ஒலிக்கும்.

லள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும்

 

அதாவது

 

ஒரு குறில் எழுத்தின் அடுத்து லகர மெய்யோ ளகர மெய்யோ வந்து 

அடுத்த சொல்லின் தொடக்கத்தில் தகரக் குடும்ப எழுத்து வந்து 

அவை புணரும்போது மெய் மறைந்து அங்கே ஆய்தம் தோன்றும் 

அது தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்.

 

உயர்திணை, அஃறிணை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘உயர்திணை’ புரிகிறது, உயர்ந்த திணை.  ‘அஃறிணை’? அஃறிணை என்பது அல் + திணை என்ற இரு சொற்கள் சேர்ந்து உருவானது.

அதாவது உயர்வு அல்லாத திணை.

 

இங்கே ‘அல்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம், தனியே ஒரு குறில் (அ) வருகிறது, அடுத்து லகர மெய் (ல்) வருகிறது.
அடுத்து, ‘திணை’ என்ற சொல், இதன் தொடக்கத்தில், தகரக் குடும்பத்தைச் சேர்ந்த ‘தி’ என்ற எழுத்து வருகிறது.

 

 அல் + திணை சேரும்போது, லகர மெய் (ல்) மறைந்து, ஆய்த எழுத்து (ஃ) தோன்றும்.

இப்படிதான் அது ‘அஃறிணை’ என்று மாறுகிறது.

 

‘ஃ’ புரிகின்றது ‘றி’ எப்படி வந்தது என்று யோசிக்க வேண்டாம்.  புணர்ச்சி விதிகளைப்பற்றி இதே தொடரில் பின்னர் விரிவாகப்பார்க்கவிருக்கின்றோம்.
 

தற்சமயம்   ஆய்த எழுத்தைமட்டும் கவனியுங்கள். அது அரை மாத்திரை அளவில் ஒலிக்காமல் கொஞ்சம் குறுகி ஒலிக்கின்றது. அதைத்தான் ஆய்தக் குறுக்கம் என்கின்றோம்.

 

இதேபோல் இன்னும் சில உதாரணங்கள் சொல்லலாம், ஆனால் அவையெல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற சொற்களாக இருக்காது, ஆகவே, இப்போது இந்த விளக்கம் போதும்.

 

மேலே உள்ள சூத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சில இடங்களைத்தவிர,

மற்ற இடங்களிலெல்லாம் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில்

முழுமையாக ஒலிக்கும்.

ஆகவே அதை ‘முற்றாய்தம்’ என்று அழைப்பார்கள்.

அதற்கு எதிர்ப்பதம் குறுகி ஒலிக்கும் ‘ஆய்தக் குறுக்கம்’.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் முதலாம் தவணைப்பரீட்சை இன்னும் எத்தனை வகுப்புகளுக்குப்பின்னால வரும்? மண்டைக்குள்ள ஏறமாட்டன் என்று அடம்பிடிக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் முதலாம் தவணைப்பரீட்சை இன்னும் எத்தனை வகுப்புகளுக்குப்பின்னால வரும்? மண்டைக்குள்ள ஏறமாட்டன் என்று அடம்பிடிக்குது

படிக்கும்போது மண்டை வெடிக்கின்ற அளவிற்கெல்லாம் படிக்கக்கூடாது

சிறிது ஓய்வு சிறிது விளையாட்டு சிறிது படிப்பென இருக்கவேண்டும். :D

மூளையை  இறுக்காமல் இலகுவாக

வைத்திருந்தால் விளையாடி விளையாடிப் படிக்கலாம்

பரீட்சைக்கு நேரமிருக்கின்றது.

வகுப்பிற்கு வந்தவர்களுக்கு நன்றிகள்

ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றிகள்  :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வாத்தியார் விளையாடிக் கொண்டு படிக்கிறது?

 

அங்கால பஞ்ச் நீங்கள் கரும்பலகையில் எழுதும் நேரம் திரும்பி பின்னால இருக்கிற என்னையும் சுமேயையும் முறைச்சு முறைச்சுப்பார்க்கிறார். பார்க்கவே பயமா இருக்கு...... இசை கடதாசி அம்பு விட்டுட்டு அதைக்காட்டி ஏதோ அபிநயம் பிடிச்சு சுமேக்கு எரிச்சலைக்கிளப்பி விடுறார் இதையும் தாண்டி படிப்பம் என்றால் தமிழ்சிறீ இலையான் அடிக்கிறன் என்று சளார்  சளார் என்று எனக்கு அறைஞ்சுபோட்டு நல்ல பிள்ளை மாதிரி நிற்கிறார். எனக்கு அழுகைதான் வருது. :( படிக்க வருதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வாத்தியார் விளையாடிக் கொண்டு படிக்கிறது?

 

அங்கால பஞ்ச் நீங்கள் கரும்பலகையில் எழுதும் நேரம் திரும்பி பின்னால இருக்கிற என்னையும் சுமேயையும் முறைச்சு முறைச்சுப்பார்க்கிறார். பார்க்கவே பயமா இருக்கு...... இசை கடதாசி அம்பு விட்டுட்டு அதைக்காட்டி ஏதோ அபிநயம் பிடிச்சு சுமேக்கு எரிச்சலைக்கிளப்பி விடுறார் இதையும் தாண்டி படிப்பம் என்றால் தமிழ்சிறீ இலையான் அடிக்கிறன் என்று சளார்  சளார் என்று எனக்கு அறைஞ்சுபோட்டு நல்ல பிள்ளை மாதிரி நிற்கிறார். எனக்கு அழுகைதான் வருது. :( படிக்க வருதில்லை

அக்கா உது வேலைக்காவது வெளிக்கிடுங்கோ பேசாமல் மதிலாலை குதிச்சு போய் ஆச்சி வழவுக்கை சேலன் மாங்காய் எறிஞ்சு விழுத்தி லைட்போஸ்ற்றில குத்தி சாப்பிடுவம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா உது வேலைக்காவது வெளிக்கிடுங்கோ பேசாமல் மதிலாலை குதிச்சு போய் ஆச்சி வழவுக்கை சேலன் மாங்காய் எறிஞ்சு விழுத்தி லைட்போஸ்ற்றில குத்தி சாப்பிடுவம்... :D

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கும்போது மண்டை வெடிக்கின்ற அளவிற்கெல்லாம் படிக்கக்கூடாது

சிறிது ஓய்வு சிறிது விளையாட்டு சிறிது படிப்பென இருக்கவேண்டும். :D

மூளையை  இறுக்காமல் இலகுவாக

வைத்திருந்தால் விளையாடி விளையாடிப் படிக்கலாம்

பரீட்சைக்கு நேரமிருக்கின்றது.

வகுப்பிற்கு வந்தவர்களுக்கு நன்றிகள்

ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றிகள்  :)  

வாத்தியார்.. பொம்பிளைப்பிள்ளையலும் ஆட்டத்துக்கு வந்தால்தான் நான் விளாட வருவன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

சரிவாத்தியார்..மேற்படி பரீட்சையில் பாத்துகவனியோங்கோ வாத்தியார்.... அடுத்தமுறை பெருசாய் வாத்தியாரை நான் கவனிக்கிறன்...விநாசியற்ற வளவுக்கை நிக்கிற பிலாவில உச்சீல ஒரு பத்துக்கிலோ தேறும் பழம்..கயிறுகட்டி இறக்கி நோப்படாமல் அப்பிடியே உங்கட வீட்டு தாழ்வாரத்துக்க போட்டுட்டு போறன்..அக்காவிட்ட சொல்லுங்கோ அடைக்கோழி ஏதும் தேவை எண்டால்... ஈரச்சாக்கு போட்டாவது கொண்டாறன்... பேப்பறை மாத்தி எண்டாலும் பாசாக்கிவிடுங்கோ வாத்தியார்.. :D

Link to comment
Share on other sites

எங்கே வாத்தியார் விளையாடிக் கொண்டு படிக்கிறது?

 

அங்கால பஞ்ச் நீங்கள் கரும்பலகையில் எழுதும் நேரம் திரும்பி பின்னால இருக்கிற என்னையும் சுமேயையும் முறைச்சு முறைச்சுப்பார்க்கிறார். பார்க்கவே பயமா இருக்கு......

 

மலர் சொரியும் சோலையில் வண்டு பறந்து பறந்து தேன்குடித்தால், கண்ட புலவன் கவிபாடுகிறான். :D  

 

தமிழ் சொரியும் வகுப்பில் பாஞ், பாஞ்சு பாஞ்சு தான்படித்தால்! கண்ணடித்த வல்வை சகாறா, பாலைவனம்போல் சுட்டெரிப்பதும் ஏன் வாத்தியார்?... :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துக்களின் பிறப்பிடம்
 

உயிரெழுத்துக்களான அ ஆ என்பன வாயைத் திறப்பதனால் பிறக்கின்றன.
 

இ ஈ எ  ஏ  ஐ என்பன வாயைத் திறந்த பின் மேல்வாய்ப்பல்லை நாக்கின் அடிப்பகுதியின் ஓரம் தழுவும்போது பிறக்கின்றன.
 

உ ஊ ஒ ஓ ஔ என்பன உதடுகளைக் குவிப்பதனால் பிறக்கின்றன.
 

மெய்யெழுத்துக்களான க ங என்ற இரண்டும் நாக்கின் அடி மேல் வாயின் அடிப்பகுதியைச் சேரும் போது பிறக்கின்றன
 

அதேபோல ச ஞ என்பன நடு நாக்கு மேல்வாய்ப்பகுதியையும்
ட ண என்பன நாக்கின் முன்பகுதி வாயின் முன்பகுதியையும் பொருந்தப் பிறக்கின்றன.
 

த ந என்ற மெய்யெழுத்துக்கள் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்தும்போது பிறக்கின்றன.
 

ப ம என்ற எழுத்துக்கள் மேலுதடும் கீழுதடும் பொருத்தும் போது பிறக்கின்றன.
 

என்பது நாக்கின் அடிப்பகுதி   மேல்வாயின் அடிப்பகுதியுடம் பொருந்தப்  பிறக்கிறது.
 

ர ழ என்ற இரண்டு சொற்களும் வாயின் மேல் பகுதியை நாக்கின் நுனி தடவும் போது பிறக்கின்றன.
 

என்ற எழுத்து மேல் வாய்ப் பல்லின் அடியில் இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.
 

என்பது நாக்கின் ஓரமானது மேல் வாயை இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

 

என்பது கீழுதடு மேல்வாய்ப் பல்லுடன் பொருந்தும் போது பிறக்கின்றது.
 

ற ன என்பன நாக்கின் நுனி மேல்வாயுடன் பொருந்தும் போது பிறக்கின்றன.

 

ஆய்தம் தலையில் பிறக்கின்றது
ஆய்த எழுத்துத் தவிர்ந்த மற்றைய சார்பெழுத்துக்கள்
ஒன்பதும் மேலே பார்த்த முதலெழுத்துக்களின் பிறப்பினைப் போன்றே பிறக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நான் ற சொல்லேக்குள்ள நாக்கு எதனுடனும் முட்டவே இல்லையே. காத்துத்தான் நாக்கை அசைச்சு அதிரப்பண்ணுது. இது எனக்கு மட்டுமோ அல்லது மற்றவை சொல்லேக்குள்ளும் இப்பிடியோ எண்டு விளங்கேல்லை


வாத்தியார்.. பொம்பிளைப்பிள்ளையலும் ஆட்டத்துக்கு வந்தால்தான் நான் விளாட வருவன்..

 

ஒருத்தரும் உங்களைச் சேர்க்க மாட்டினமாம்

 

Link to comment
Share on other sites

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

 

வாத்தியார்..வாத்தியார்..நல்ல பூவரசம் தடி நான் கொண்டு வாறேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

ஒருத்தரும் உங்களைச் சேர்க்க மாட்டினமாம்

 

 

நானு பொம்பிளைப்பிள்ளையளைதான் ஆட்டத்துக்கு கேட்டன்..  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர் சொரியும் சோலையில் வண்டு பறந்து பறந்து தேன்குடித்தால், கண்ட புலவன் கவிபாடுகிறான். :D  

 

தமிழ் சொரியும் வகுப்பில் பாஞ், பாஞ்சு பாஞ்சு தான்படித்தால்! கண்ணடித்த வல்வை சகாறா, பாலைவனம்போல் சுட்டெரிப்பதும் ஏன் வாத்தியார்?... :( 

கண்ணடித்தால் பதிலுக்கு கண்ணடித்து றொமான்ஸ் பண்ணுவதை விட்டுவிட்டு காஞ்சமாடு வைக்கலை பார்ப்பதுபோல் பார்த்தால் என் கட்சிக்காரரின் கபாலத்தில் கடுப்பேறாதா வாத்தியார்...?

Link to comment
Share on other sites

எழுத்துக்களின் பிறப்பிடம்

 

உயிரெழுத்துக்களான அ ஆ என்பன வாயைத் திறப்பதனால் பிறக்கின்றன.

 

இ ஈ எ  ஏ  ஐ என்பன வாயைத் திறந்த பின் மேல்வாய்ப்பல்லை நாக்கின் அடிப்பகுதியின் ஓரம் தழுவும்போது பிறக்கின்றன.

 

உ ஊ ஒ ஓ ஔ என்பன உதடுகளைக் குவிப்பதனால் பிறக்கின்றன.

 

மெய்யெழுத்துக்களான க ங என்ற இரண்டும் நாக்கின் அடி மேல் வாயின் அடிப்பகுதியைச் சேரும் போது பிறக்கின்றன

 

அதேபோல ச ஞ என்பன நடு நாக்கு மேல்வாய்ப்பகுதியையும்

ட ண என்பன நாக்கின் முன்பகுதி வாயின் முன்பகுதியையும் பொருந்தப் பிறக்கின்றன.

 

த ந என்ற மெய்யெழுத்துக்கள் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்தும்போது பிறக்கின்றன.

 

ப ம என்ற எழுத்துக்கள் மேலுதடும் கீழுதடும் பொருத்தும் போது பிறக்கின்றன.

 

என்பது நாக்கின் அடிப்பகுதி   மேல்வாயின் அடிப்பகுதியுடம் பொருந்தப்  பிறக்கிறது.

 

ர ழ என்ற இரண்டு சொற்களும் வாயின் மேல் பகுதியை நாக்கின் நுனி தடவும் போது பிறக்கின்றன.

 

என்ற எழுத்து மேல் வாய்ப் பல்லின் அடியில் இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

 

என்பது நாக்கின் ஓரமானது மேல் வாயை இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

 

என்பது கீழுதடு மேல்வாய்ப் பல்லுடன் பொருந்தும் போது பிறக்கின்றது.

 

ற ன என்பன நாக்கின் நுனி மேல்வாயுடன் பொருந்தும் போது பிறக்கின்றன.

 

ஆய்தம் தலையில் பிறக்கின்றது

ஆய்த எழுத்துத் தவிர்ந்த மற்றைய சார்பெழுத்துக்கள்

ஒன்பதும் மேலே பார்த்த முதலெழுத்துக்களின் பிறப்பினைப் போன்றே பிறக்கின்றன.

 

பிறப்பிடத்தை birth place என்று சொல்லலாமோ வாத்தியார்...?

 

Link to comment
Share on other sites

மாத்திரை

 

எழுத்துக்கள்  ஒலிக்கப்பட வேண்டிய நேரத்தை அளக்கும் முறையே மாத்திரை எனப்படும்

முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்கும் நேரம் ஆகியவற்றை வைத்தே அளந்தனர்.

ஒரு முறை கை நொடிக்கும் நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் எழுத்துக்கள் ஒலிக்கப்பட்டால் அந்த நேரத்தை ஒரு ஒலி அளவு எனக்கொண்டார்கள்.

அதையே அன்றைய கால இலக்கண நூல்களை எழுதியவர்கள் மாத்திரை என்றார்கள்.

 

ஒரு ஒலி அளவில் ஒரு எழுத்து ஒலிக்கப்பட்டால் அதனை ஒரு மாத்திரை என்றனர்.

இரண்டு ஒலியளவில் ஒலிக்கப்படும் போது இரண்டு மாத்திரை என்றனர்.

அதாவது இரண்டுமுறை கண்ணிமைக்கும் நேரத்தின் அளவிற்கு அல்லது இரண்டு கைநொடிகளின் நேரத்திற்கு  ஒலிக்கப்பட்டால் இரண்டு மாத்திரை என்றனர்.

 

உயிரளபெடை 3 மாத்திரை (சில இடத்தில் 4 மாத்திரை வருவதும் உண்டு)

 

நெடில்  2 மாத்திரை

 

குறில் ,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,ஒற்றளபெடை  1 மாத்திரை

 

மெய்,குற்றியலிகரம்,குற்றியலுகரம்,ஆய்தம்  1/2 மாத்திரை

 

மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம்   1/4 மாத்திரை

 

இவையே எழுத்துக்களின் ஒலி அளவுகளாகும்

 

நல்லவேளை.. தூக்கமாத்திரை இல்லாமற்போனது, இல்லையென்றால் தமிழே தூங்கியிருக்கும்.

வாத்தியார், தமிழை நன்றாகப் படிக்க ஏதும் ஊக்க மாத்திரை கிடைக்குமோ..?

பாடங்கள் எல்லாமே நன்றாகப் போகிறது, ஆனால் மனதில் சேமிக்கத்தான் கடினமாக இருக்கிறது. எதாவது அறிவுரை சொல்லுங்கள் சார்........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடங்கள் எல்லாமே நன்றாகப் போகிறது, ஆனால் மனதில் சேமிக்கத்தான் கடினமாக இருக்கிறது. எதாவது அறிவுரை சொல்லுங்கள் சார்........

 

bhindi.jpg

தினமும் பச்சை வெண்டிக்காய் சாப்பிட்டால்.... பாடங்கள் இலகுவில் மனதில் பதியும்.

எங்களுக்கும் முன்பு.... பாடங்கள் மூளையில் பதிய கடினமாக இருந்தது, இப்போ ஓகே....

 

Link to comment
Share on other sites

bhindi.jpg

தினமும் பச்சை வெண்டிக்காய் சாப்பிட்டால்.... பாடங்கள் இலகுவில் மனதில் பதியும்.

எங்களுக்கும் முன்பு.... பாடங்கள் மூளையில் பதிய கடினமாக இருந்தது, இப்போ ஓகே....

 

 

முயற்சி செய்துபார்க்கிறேன், நன்றி அண்ணா. உண்மையாத்தானே சொன்னீங்கள்?? :)

 

Link to comment
Share on other sites

 

 

நானு பொம்பிளைப்பிள்ளையளைதான் ஆட்டத்துக்கு கேட்டன்..  :D

 

 

கண்ணடித்தால் பதிலுக்கு கண்ணடித்து றொமான்ஸ் பண்ணுவதை விட்டுவிட்டு காஞ்சமாடு வைக்கலை பார்ப்பதுபோல் பார்த்தால் என் கட்சிக்காரரின் கபாலத்தில் கடுப்பேறாதா வாத்தியார்...?

 

பெண்ணென்றும் பாராது எள்ளிநகையாடிவிட்டு பின், என் கட்சிக்காரர் என பந்தா காட்டுவதிலும் நீங்கள் சூரர்தான். சபாஸ் சுபேஸ்!.

 

எனக்குத் தங்கைப் பாக்கியம் இல்லை. அதனால் இளநங்கைகள் எல்லாம் என் பாசமலர்கள். அவர்களோடு எப்படி நான் கண்ணடித்து றொமான்ஸ் பண்ணமுடியும்! மெசொபொத்தேமியா சுமேரியர் என் பாசமலர்களில் ஒருவர். அவர் கண்ணடித்தார்! என்று நான் தெரிவித்ததை தவறாக விளங்கிக்கொண்டீர்கள் போல் தெரிகிறது. பிரம்பால் அடித்து, கையால் அடித்து ஒருவரை படிய வைப்பதுபோல் கண்ணாலும் அடித்துப் படியச் செய்யலாம். நீங்கள் கேள்விப்பட்டதில்லையா! பசிலின் ஒரு கண்பார்வையில் டக்ளஸ் தேவானந்தா அடங்கிப்போனதாக!....

 

சுபேஸ் எங்கடை கதையிலை நாங்கள் வாத்தியின் பாடத்தைக் கவனிக்கேல்லை. பாருங்கோ அவருக்கு கடுப்பேறிவிட்டது. ஏதாவது மாங்காய், தேங்காய் கதையை அவிழ்த்து விடுங்கோ, உப்பும், மிளகாய்த்தூளும் தேடுவதில் அவர் கவனத்தைத் திருப்பிவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நிலை எழுத்துக்கள்
 

ஒரு சொல்லை அமைக்கும்போது எல்லா எழுத்துக்களும் அந்தச் சொல்லின்  முதல் எழுத்துக்களாக
வரமாட்டாது.
உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் க ச த நப ம வ ய ஞ ங என்னும் பத்து உயிர் மெய்யெழுத்துக்கள் மற்றும் அந்த பத்து உயிர் மெய்யெழுத்துக்களின் வர்க்க எழுத்துக்கள் என்பனவே சொல்லின் முதல் எழுத்தாக இருக்கும்

 

அவை தவிர்ந்த ட ண ர ல ழ ள ற ன என்ற உயிர் மெய்யெழுத்துக்கள் சொற்களின் முதல் எழுத்தாகாது.
 

இறுதி நிலை எழுத்துக்கள்

 

சொல்லுக்கு  முதல் இந்த எழுத்துக்கள் தான்  வரவேண்டும் என்பதைப்போல சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும் வகுத்துள்ளனர். இவற்றிற்கு இறுதி நிலை எழுத்துக்கள் எனப்பெயர்.
பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள எனும் உயிர்மெய்யெழுத்துக்களும் அதன் வர்க்கங்களும் சொல்லின் இறுதியில் வரும்
 

க ங  ச ட த ப ற என்பன சொல்லின் இறுதியில் வராது.
சொல்லின் இறுதியில் க் ச் என்ற வரிசையில் வரும் ஆறு வல்லின மெய்யெழுத்துக்கள் வரமாட்டாது
 

அவ்வாறான சொற்கள் குற்றியலுகரத்துடன் முடியும்
பாக்க் = பாக்கு
பாட்ட் = பாட்டு
இதைப்போன்றே ங என்ற சொல் இறுதியில் வாரா
குரங்ங் = குரங்கு  

 

‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.

தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள்.

அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.

        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

 

வாத்தியார் இங்குள்ள சொற்கள் பற்றி கொஞ்சம் விளக்கம் தாங்கோ...


பற என்பது சொல் இல்லையா?

 

நட என்றால் சொல் ஆகாதா? குழப்பமா இருக்கு வாத்தியார் விளக்கம் தாங்கோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணென்றும் பாராது எள்ளிநகையாடிவிட்டு பின், என் கட்சிக்காரர் என பந்தா காட்டுவதிலும் நீங்கள் சூரர்தான். சபாஸ் சுபேஸ்!.

 

 

 

பாஞ் .. நான் விளாட்டுக்கு அறைகூவல் விடுத்தது பொம்பிளைப்பிள்ளைகளை.. பொம்பிளைஅம்மாக்களை அல்ல.. :D

 

 

 

எனக்குத் தங்கைப் பாக்கியம் இல்லை. அதனால் இளநங்கைகள் எல்லாம் என் பாசமலர்கள். 

இப்படிக்கு அண்ணண் உத்தமன்... :D

 

 

 

சுபேஸ் எங்கடை கதையிலை நாங்கள் வாத்தியின் பாடத்தைக் கவனிக்கேல்லை. பாருங்கோ அவருக்கு கடுப்பேறிவிட்டது. ஏதாவது மாங்காய், தேங்காய் கதையை அவிழ்த்து விடுங்கோ, உப்பும், மிளகாய்த்தூளும் தேடுவதில் அவர் கவனத்தைத் திருப்பிவிடலாம்.

 

 

வாத்தியாருக்கு மாங்காய் எண்டதும்..பல்லெல்லாம் கரகரத்து வாயூறுது...நான் என்ன செய்ய பாஞ்..? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

 

வாத்தியார் இங்குள்ள சொற்கள் பற்றி கொஞ்சம் விளக்கம் தாங்கோ...

பற என்பது சொல் இல்லையா?

 

நட என்றால் சொல் ஆகாதா? குழப்பமா இருக்கு வாத்தியார் விளக்கம் தாங்கோ :unsure:

 

"அடியிரண்டும் தொடுத்தல் முதலாயின தொடையே"

 

 

செய்யுளில் பல அடிகளிலும்  அல்லது பல சீர்களிலும்

எழுத்துக்கள் ஒன்றாக வர அமைக்கப்படுவது தொடை எனப்படும்.

 

பொருளுக்கும் இடத்திற்கும் தக்கவாறு ஒத்திசை கூடிய ஓசைகளை அல்லது எழுத்துக்களைக் கொண்டு அமைந்த சொற்களால் செய்யுள்களைப் புலவர்கள் அமைப்பார்கள் .

 

தொடை எனப்படுவது ஐந்து வகைப்படும்

 

 

நீங்கள் கூறிய குறள்

 

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

 

மோனைத்தொடை ஆகும்

இவற்றை யாப்பதிகாரத்தில் காணலாம்  

 

அடுத்தது நட என்பது இலக்கணப் பிழையானதாக இருக்கும்

நட என்பதற்குப் பதிலாக செல் எனக் கூறலாம்

 

பற என்பதற்குப் பதிலாகப் பறந்து செல் எனவும் கூறலாம்

 

பேச்சு வழக்குத் தமிழிற்கும் இலக்கணத் தமிழிற்கும்

வித்தியாசங்கள் உண்டு  :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட, பற  என்பவை வினை அடிகள் என்று கூற முடியாதா???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.