Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான்  கவிதை கொட்டுது. வாத்தியார் தான் காரணமோ ??? :D  நானறியேன். நன்றாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

மயில் இறைச்சியில் 'அது' தேடலா?

தமிழ்மகன் முருகனே இகழ்வாரே!

மயில் இறைச்சியில், வைட்டமின் தேடும் மாணாக்கர் பாஞ்சுவிற்கு சிறிய குட்டு!

 

- வாத்தியார்.

 

குட்டில் கலங்கிய மூளையின் தேடலில் உதித்த மயில் இறைச்சிக்கான பொழிப்புரை, :icon_idea:

 

பெண்ணை மயில் என்று சொல்வர். :(

இறை என்றால் நீர் இறைத்தல் என்றும் பொருளுண்டு.

இச்சி என்றால் இத்தியெனவும், இத்தியென்றால் இஞ்சி எனவும் பொருளுண்டு. :o

அதாவது 'மயில் இறைச்சி' என்றால், பெண் நீர் இறைத்து வளர்த்த இஞ்சி என பொருள் கொள்ளலாம், :)  அதில்தான் எத்தனை வைட்டமின்கள். ஆகவே இதையே நான் தேடிச்சென்றதாக முருகப்பெருமானைப் பொருள்கொள்ள வைக்கலாம். கவலை வேண்டாம் வன்னியரே. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்தி ஒரு தமிழ்மொழிச் சொல் அல்ல. வடமொழிச்சொல்.

சரியான தமிழ்ச்சொல்  பத்தி என வரவேண்டும்) //

 

எனக்கு உள்ள பிரச்சனையே இந்த இடைநிலை மெய்மயக்கந்தான் :D :D . மேலும் பக்தி வடமொழிச் சொல் என்கின்றீர்கள் .  பத்தி என்பதற்குத் தாழ்வாரம் என்ற பொருளும் உண்டல்லவா ??

பக்தி என்பது வடமொழிச்சொல் தான்

பத்தி என்பது  தாழ்வாரத்திற்கு ஒத்த கருத்துள்ள சொல்லேன்றாலும்???

பிரச்சனை இல்லை

சொல்லில் மெய்மயக்கம் சரியாகத்தானே இருக்கின்றது

கோமகன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வினை அடிகளுக்கு உதாரணம் கூறுங்கள் வாத்தியார்.

நடந்து, பறந்து என்பவை வினை எச்சங்கள் இல்லையா???

சுமேரியர் நீங்கள் கூறும் வினை அடிகள் என்பது எவை

என்று கூறுங்கள்.

நடந்து பறந்து என்பவையும் வினை எச்சங்கள் தான்

நடந்தது நடந்தன நடந்தான்

பறந்தது பறந்தன என்பன முழுமையானவை

Link to comment
Share on other sites

வாத்தியார், சகாரா குளப்பிறா படிக்க விடாமல் தனக்கு வாழ்க்கையில் ஒருவருமே காதல் கடிதம் தரேலையாம் எண்டு இன்னும் தனக்கு மனத்தாக்கமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க, உங்கட வீட்டுக்குப் பக்கத்துவீட்டு அருண் இதை உமக்குக் குடுத்துவிடச் சொன்னவன். ஆர்வம் தாங்காமல் உடைச்சுப் படிச்சிட்டன். நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன். என்னெண்டு முடிவைச் சொல்லும்.

 

ஆருயிரே சகாரா!

உன்னைக் காணும் போதெல்லாம் என் நெஞ்சு மிக வேகமாகத் துடிக்கிறது. பயத்தினால் அல்ல. உன்மீதுள்ள காதலால். உன்னையே எந்நேரமும் பார்த்துக்கொண்டிருக்க வேணும் போல் இருக்கிறது. ஆனால் பாழாய்ப்போன வாத்தியாரும் மற்றவர்களும் பார்க்கமுடியாது பயப்படுத்துகின்றனர். நீ வீதியில் எத்தனை பேருடன் சேர்ந்து வந்தாலும் உன் காலடி ஓசையை வைத்தே உன்னை என்னால் அறிய முடிகிறது. காவடிச் சிந்து நீ எனக்கு. எந்த  ஜென்மத்திலும் உன்னை மறவா வரம் வேண்டிக் கடவுளிடம் தினம் போகிறேன். கண்ணே என்னை ஏற்றுக்கொள்வாயா???? உன் சம்மதம் வேண்டி சரணடையக் காத்திருக்கும்

உன் அடிமை அருண்.


 

Link to comment
Share on other sites

இலக்கணப் பிழையின்றித் தமிழில் காதல்கடிதம் எழுதுவதெப்படி என்று அடுத்து வாத்தியார் படிப்பிக்கப்போவதாகக் கேள்வி. அதுக்குப்பிறகு பாருங்கோ சகாரா, உங்களுக்கு வந்து குவியப்போகும் காதல்கடிதங்களை. அடுப்பு மூட்டப் பேப்பருக்கு பஞ்சமே இல்லாது போகும். ஆனாலும் ஒரு வேண்டுகோள் சகாரா. Old is gold மறக்கவேண்டாம். :wub:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலி

 

சொல்லொன்றின் ஆரம்பத்திலோ அல்லது இடையிலோ
அல்லது முடிவிலோ சேரவேண்டிய எழுத்திற்கு மாறாக வேறு ஒரு எழுத்து

சேர்க்கப்பட்டாலும் அந்தச் சொல்லின் பொருள் மாறாமல்  இருக்கும்
 

சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து

ஒரே பொருளைக் கூறி நிற்பதற்குப் போலி எனப்பெயர்.
 

மஞ்சு  = மைஞ்சு
மயல்  = மையல்
நயம் = ஞயம்
என்பன சொல்லின் முன்னர் எழுத்து மாறுபட்டாலும்
ஒரே பொருளைக்  கொடுப்பதால்  முதற்போலி எனப்படும்.
 

 

ஐந்நூறு  = ஐஞ்நூறு
அரயர்   = அரையர்
அமச்சு  = அமைச்சு
அரசியல்  =அரைசியல்
 என்பன எழுத்து ஒன்றோ பலவோ ஒரு சொல்லின் இடையில்

பிழையாகச் சேர்க்கப்பட்டாலும் சரியான பொருளைத் தருவதால் இடைப்போலி எனப்படும்
 

பந்தல் = பந்தர்
நிலம் = நிலன்
குடல் = குடர்
சாம்பல் = சாம்பர்
என்ற சொற்கள் சொல்லின் இறுதியில் எழுத்து மாறினாலும்

பொருள் மாறாது இருக்கும் கடைப்போலியின் உதாரணங்கள்
 

ஐந்து ( எண்) என்பது சரியாக எழுதப்பட்ட சொல்
அதையே சிலர் அஞ்சு( எண்) எனவும் எழுதுகின்றார்கள்
இங்கே முதல், இடை, கடை, எனப்  போலிகள் அனைத்தும்

ஒரு சொல்லில் வந்து பொருள் மாறாமல் இருக்கின்றது    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நாம் ஒன்றை எழுதும்போது போலிகளையும் பயன்படுத்தித் தாராளமாக எழுதலாம் என்கிறீர்களா??? வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நான் கவிதைகள் எழுதும்போது நிறைய போலிகளைப்பயன்படுத்தியுள்ளேன் :lol:

Link to comment
Share on other sites

ஐயோ நான் படிக்க வந்ததையே மறந்திட்டனேயப்பா இந்தச் சனத்தின் லொள்ளுகளால்  :o  வாத்தியார் கிட்டடியிலை சோதனை ஒண்டும் இல்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்போ நாம் ஒன்றை எழுதும்போது போலிகளையும் பயன்படுத்தித் தாராளமாக எழுதலாம் என்கிறீர்களா??? வாத்தியார்.

 

 

"அ ஐ முதலிடை யொக்குஞ்  சஞயமுன்"

 

"ஐகான் யவ்வழி  நவ்வொடு சில்வழி"

ஞஃகான் உறழும் என்பரும் உளரே

 

"மகர  விறுதி யஃறிணைப்  பெயரின்

 னகரமோ டுறழா  நடப்பன வுளவே "       

 

இதன்படி எழுதலாம் :D

Link to comment
Share on other sites

போலிகள் இலைமறை காயாகவும் உள்ளனவா வாத்தியார்.?? ஆண், பெண், திருநங்கை இவைமூன்றும் போலியா? நிஜமா? என்று தெரியவேண்டும். காரணம், எனக்கு மீண்டும் ஒரு பெண்ணுக்கு காதல்கடிதம் எழுதும் நோக்கமில்லை. :unsure:   எழுதினாலும், அலைமகளுக்கு நிச்சயம் எழுதமாட்டேன். :D  அவர் ஆணா, பெண்ணா, திருநங்கையா என ஒரு ஐயப்பாடு எனக்குள்ளது. ஏனெனில் "Gender:Not Telling" :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் வாத்தியார்.

 

நீங்கள் 'போலி...போலி' என்றவுடன் எனக்கு 'போளி' ஞாபகமாய் மனதையும், நாவையும் வாட்டுது. அதுவும் கடைப்போலி என்றதும் மதுரை கடைகளில் கிட்டும் கடைப்போளிதான் நினைவிலாடி நாவில் நீர் ஊறுகிறது. :icon_idea:

 

ஆகையால் போளி சாப்பிட்டுவிட்டு பின்னர் வகுப்பிற்கு வருகிறேன்...இரண்டு நாள் விடுப்பு தாங்கோ. :)

 

 

poli-final1.jpg

Link to comment
Share on other sites

போலி என்று ஒட்டகத்தையும் குறிப்பிடுவதாக அறிந்துள்ளேன். 'ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த கதை' என்பதுபோல் போலிக்கு இடம்கொடுத்தால் அதனால் தமிழுக்குப் பாதிப்பு ஏற்படாதா?. :o  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாரியைகள்
 

 

ஒரு எழுத்தையோ சொல்லையோ அல்லது சொற்றொடரையோ நாக்கினால்

உச்சரித்துக் கூறும்போது அந்த உச்சரிப்பு சற்றுக் கடினமாக

இருந்தால் அந்த உச்சரிப்பை எளிமையாக்கவும் மென்மையாக்கவும் அந்த உச்சரிப்புடன்

வேறு ஒரு எழுத்தையோ  அல்லது ஒரு எழுத்துக் கூட்டத்தையோ சேர்த்துக் கொள்கின்றோம்
 

அப்படிச்சேர்த்துக்கொள்ளப்படும் எழுத்திற்கு அல்லது எழுத்துக்கூட்டத்திற்குச் சாரியை எனப்பெயர்.
 

இன் வற்று அத்து அம் ஒன் ஆன் அக்கு இக்கு அன்
 

என்பன சொல் சாரியைகள் ஆகும்

 

மயில் + ஐ = மயிலை
கால் + ஐ = காலை
கால் + ஆல் = காலால்
காலம் + அத்து  = காலத்து
என் + அக்கு = எனக்கு
என்பன சில உதாரணங்கள்
 

இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும்போதும்

சாரியைகள் அந்தச் சொற்களுடன் சேர்ந்து அச்சொற்களுடன் இயைந்து இடையே நிற்கும்.
 

பத்து + ஒன்று = பதினொன்று
(பத்து + ஒன்று,  பத் + ஒன்று, பத் + இன் + ஒன்று =பதினொன்று )
 

இவை சொல் சாரியை எனப்படும்
சொற்களுடன் சேர்ந்து வருவதனால்  சொல் சாரியை எனப்படும்

 

 

தனி எழுத்துக்களான அ ஆ இ ஈ ஐ  க கா ஔ என

எல்லா உயிர், மெய் எழுத்துக்களுக்கும் சாரியை உள்ளது.
 

அதாவது
அ க இ ச போன்ற குறில் எழுத்துக்களிற்கு கரம் என்ற சாரியை சேர்க்கப்பட்டு

அகரம் சகரம்  தகரம் டகரம் எனவும்
 

நெடில் எழுத்துக்களிற்கு காரம் என்ற சாரியையைச் சேர்த்து

ஈகாரம் ஏகாரம் ஊகாரம் எனவும்
 

ஐ ஔ என்ற எழுத்துக்கள் இரண்டிற்கும் கான் என்ற சாரியையைச் சேர்த்து

 

ஐகான் ஔகான் எனவும் அழைப்பர்        

 

இவை எழுத்துச்  சாரியைகள் எனப்படும்.

எழுத்துக்களுடன் சேர்வதனால் எழுத்துச் சாரியை எனப்படும்

அவைதாம் இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென் கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே

என்று கூறுகின்றது   தொல்காப்பியம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் :  சுவி !

 

அடியேன் :   உள்ளேன் ஐயா .

 

வாத்தியார் :  வாரும், விடுமுறைக் கடிதத்தை  தலைமை ஆசிரியரிடம் கொடுக்கச் சொன்னால்  ஏன்  உப தலைமை ஆசிரியரிடம் கொடுத்தனீர்!

 

சுவி :   அவர்தான்  தலை  மை யோடு   இருந்தவர் , அதுதான் அவரிட்டக் குடுத்தனான்.

 

வாத்தியார் :  ம் ...  எனக்கெண்டு வந்து  வாய்க்குது,   வைரவருக்கு ....  ............ ......... !

 

 

 

ஆகா , நிறைய வகுப்புகளைத் தவறவிட்டு விட்டேன். எல்லா வகுப்புகளும் நல்ல கலகலப்பாகப் போகின்றன ! :D  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நான் படிக்க வந்ததையே மறந்திட்டனேயப்பா இந்தச் சனத்தின் லொள்ளுகளால்  :o  வாத்தியார் கிட்டடியிலை சோதனை ஒண்டும் இல்லைத் தானே?

இங்கபார்ற்றா காமடிய.. படிக்கவந்தவவாம்..  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் எழுத்ததிகாரம் முடிவடைகின்றது
 

அடுத்து நாங்கள் படிக்க இருப்பது சொல்லதிகாரம்
 

அதற்கிடையில் எழுத்ததிகாரத்தில் படித்தவற்றை
ஒரு பரீட்சையின் மூலம் மீளாய்வு செய்யலாம்
 

அடுத்த வாரம் 24 ம் திகதி ஒரு சிறிய பரீட்சை நடத்தலாம் என வாத்தியார் நினைக்கின்றார்
அதுவரை உங்களுக்குப் படிப்பதற்காக விடுமுறை கிடைக்கின்றது.
 

பரீட்சையின் பின்னர் சொல்லதிகாரம் தொடர்வது
கிடைக்கும் பெறுபேறுகளைப் பொறுத்து அமையும்
 

பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மீண்டும் எழுத்ததிகாரம் படிக்க வேண்டும்.
:o  

பரீட்சையில் பங்கு கொள்பவர்கள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல.

வேறு பாடசாலையில்  படித்தவர்களும் பங்கு கொள்ளலாம் :D  :D  :) 
 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் எழுத்ததிகாரம் முடிவடைகின்றது

 

அடுத்து நாங்கள் படிக்க இருப்பது சொல்லதிகாரம்

 

அதற்கிடையில் எழுத்ததிகாரத்தில் படித்தவற்றை

ஒரு பரீட்சையின் மூலம் மீளாய்வு செய்யலாம்

 

அடுத்த வாரம் 24 ம் திகதி ஒரு சிறிய பரீட்சை நடத்தலாம் என வாத்தியார் நினைக்கின்றார்

அதுவரை உங்களுக்குப் படிப்பதற்காக விடுமுறை கிடைக்கின்றது.

 

பரீட்சையின் பின்னர் சொல்லதிகாரம் தொடர்வது

கிடைக்கும் பெறுபேறுகளைப் பொறுத்து அமையும்

 

பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மீண்டும் எழுத்ததிகாரம் படிக்க வேண்டும்.

:o  

பரீட்சையில் பங்கு கொள்பவர்கள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல.

வேறு பாடசாலையில்  படித்தவர்களும் பங்கு கொள்ளலாம் :D  :D  :) 

 

 

வாத்தியார்.. இந்த விடுமுறைக்கு பொம்பிளைப்பிள்ளையளோட பீச்சுக்கு போவமா..? :D

Link to comment
Share on other sites

எனக்கு முக்கியமாக தேவையான ஒன்று biggrin.png தொடருங்கோ வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. இந்த விடுமுறைக்கு பொம்பிளைப்பிள்ளையளோட பீச்சுக்கு போவமா..? :D

பொம்பிளைகளுடன் பீச்சுக்குப் போகலாம்

ஆனால் பிள்ளைகளுடன் வரக்கூடாது

சம்மதமா ??? :D  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளைகளுடன் பீச்சுக்குப் போகலாம்

ஆனால் பிள்ளைகளுடன் வரக்கூடாது

சம்மதமா ??? :D  :lol:  :D

பீச் சுற்றுலா கான்சல் வாத்தியார்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. இந்த விடுமுறைக்கு பொம்பிளைப்பிள்ளையளோட பீச்சுக்கு போவமா..? :D

எங்க ..எங்க ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.