Jump to content

ஒரு போராளியின் குறிப்பேடு ..!


Recommended Posts

ஊரை உறங்க செய்து

நாய்களுக்கு தெரியாமல் நடந்து

வெள்ளி பார்த்து திசை பிடித்து

அவன் எல்லையை தொடும்போது

ஆந்தைகள் முழித்து இருக்கும்

 

அவன் மட்டும் விடிகாலை பொழுதில்

குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க

அவன் கால் அருகில் அரவம்போல் நகர்ந்து

அவனை கடந்து போகும்போது

உள்ளம் மகிழ்ந்து இருக்கும் உள்ளுக்குள்

 

உள்ளே வந்துவிட்டோம் என இறுமாந்து நிமிர்ந்து

நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும்

யாரு நீ எங்க போறா .....பதில் யோசிக்க முன்

சுடும் விசை கீழ் நோக்கி போகும் அதன் டிக் ஒலி

அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும்

ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும்

 

சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு

வலம் இடமா பாய்ந்து வேட்டுக்களை தீர்த்து

எம்மை காப்பற்றி விட்டு மறுநொடி மனது சொல்லும்

இவன் மாட்டிட்டானோ இல்லை இருக்காது

போய் இருப்பான்

இல்லை எதுக்கும் ஒருமுறை பார்த்து வருவம்

 

என மீண்டும் அவன் நிலைக்கு மெதுவா வந்து

உற்று நோக்கி ஓகே போயிட்டான் என

மனது ஒரு முடிவுக்கு வர முனகல் சத்தம்

பக்கத்தில் மச்சான் என இருளில் தடவி

என்ன ஆச்சு என சைகையில் கேட்டு

அவன் கைகளை இறுக்க பற்றி

 

நீ போயிடு நான் முடிவு எடுத்துட்டன் என

சொல்லி எம்மை அனுப்ப அவன் தன்னை

அழிக்க நினைத்து நான் கவர் கொடுக்குறன் நீங்க

வேலிய தாண்டுங்கோ என்று பிடிவாதம் பிடிப்பவனை

இல்லை மச்சி அடிச்சு பிரிச்சு போவம் வாறது வரட்டும்

அது ஒண்டும் பெரிய சிக்கல் இல்லை

என சகதோழன் கூறி

 

இவனை நான் தோளில் போடுறன்

நீ குண்டை கழட்டி கையில வைச்சு இரு

நிலைமை மோசம் எண்டா அடி அல்லது

போயிடுவம் விடிய முதல் ஓகே என

ரகசியம் பேசி அவன் கம்பி வேலியை வெட்டி

கடந்து வந்தவுடன் ஒரு துள்ளல் வரும்

உலகில் அப்பொழுது போல் ஒரு ஆனந்தம்

இல்லை நட்பை மீட்டு வருவது

 

ஒரு போராளியின் குறிப்பேடு ..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உரைநடைக் கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்தும் பகிருங்கள்.

Link to comment
Share on other sites

அஞ்சரன்,

ஒரு போராளியின் குறிப்பேடு இன்னும் கவிதையை மெருகுபடுத்தலாம். உணர்வு வெளிப்பாடு ஆளமாக கூறக்கூடிய கருத்தாளம் கவிதைக்குள் இருக்கிறது. அவசரத்தில் எழுதி முடித்தமாதிரியிருக்கு.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனை நான் தோளில் போடுறன்

நீ குண்டை கழட்டி கையில வைச்சு இரு

நிலைமை மோசம் எண்டா அடி அல்லது

போயிடுவம் விடிய முதல் ஓகே என

ரகசியம் பேசி அவன் கம்பி வேலியை வெட்டி

கடந்து வந்தவுடன் ஒரு துள்ளல் வரும்

உலகில் அப்பொழுது போல் ஒரு ஆனந்தம்

இல்லை நட்பை மீட்டு வருவது

 

அவர்களின் தியாகங்கள் கதைகள் பாசங்கள் ஒரு பாயில் படுத்து ஒரு தட்டில் உன்று ஒன்றாகவே மரணித்த கதைகள் காலமும் கண்ணீர்வடிக்கும் காவியங்கள்... நன்றி அண்ணா கவிதைக்கு..

Link to comment
Share on other sites

சாந்தினி அக்கா எழுத வரும் இலக்கியம் வராது நமக்கு முயற்சி செய்கிறன் நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.