Jump to content

"மனிதம் தொலைத்த மனங்கள்"…….


Recommended Posts

கதை இன்னும் வாசிக்கேல்ல.. படம் பாத்தன்.. நல்லாருக்கு... :D

 

எது மஞ்சள் சுடிதாரா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது மஞ்சள் சுடிதாரா??

மஞ்ச கலரு சிங்குஜா... அப்புறம் பச்சை கலரும் சிங்குஜா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தனக்கு ஒன்று என்றால் துடிக்கும்  அவளைப்பார்க்க அவனது அம்மாவின் நினைவுகளே முட்டி மோதின . அவன் குளித்து விட்டு வந்து கொத்தமல்லித் தேநிர் தயாரிக்கும் பொழுது , எங்கிருந்தோ ராசா………………… என்று அம்மா அழைப்பது போல் உணர்ந்தான் குட்டி . அவன் சிறுவயதில் பலமுறை காய்சலாக விழுகின்ற நேரமெல்லாம் அவனை கொத்தமல்லி தேத்தண்ணியாலேயே குணப்படுத்துவாள் மனோரஞ்சிதம் . கொத்தமல்லி தேத்தண்ணியின் கசப்பை தனது இனிமையான கதைகளால் அவனுக்குப் போக்கியவள் அவனது அம்மா . குட்டியின் மனம் வெடித்துவிடும் போல இருந்தது"

 

பலர் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக எழுதமுடியும்

 

Link to comment
Share on other sites

மிச்சத்தையும் போட்டால்தான ஆருக்கு சனி எண்டு தெரியும். :lol:

 

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கதாநாயகன் :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

' தாய்மை' என்பது மிகவும் உன்னதமான ஒன்று!

 

'ரமணனைக்' கூட மன்னித்து விடும் 'மனம்' கூட அதற்கு உண்டு!

 

'ரமணனுக்கு' தனது தாயின் மரணவீட்டுக்குப் போகாமல் விட்டதற்கு, உண்மையான காரணங்கள் சில இருந்திருக்கக் கூடும்!

 

அடுத்தவர்களின் உண்மையான நிலைகளைப் புரிந்து கொள்ளாமல்,மற்றவர்கள் அவர்களுக்காக, தங்கள் முடிவுகளைத் திணிப்பதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை!

 

உங்கள் இந்தத் தொடர், உங்கள் வழமையான பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான பாதையில் செல்கின்றது !

 

தொடருங்கள், கோமகன்! :D

Link to comment
Share on other sites

கதை முடியட்டும்  அதன் பின்னர் கருத்துக்கள் நிறைய வரும்

தற்சமயம் இரண்டாவது பகுதி நன்றாக இருக்கின்றது

முதற்பகுதி எழுதும்போது  சனி உங்க்கள் பக்கம் இருந்திருக்கின்றது . தொடருங்கள் கோமகன்  :)

 

கதை முடிவடைவற்குள் ஏன் சனியைப் பற்றி சன்னி பிடிப்பான்  :D  :D ??  கதையுடன் தொடர்ந்து இருங்கள்  எதிர்பாராத முடிவுடன் நிறைவு பெறும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாத்தியார் :) :) .

 

Link to comment
Share on other sites

ஒரு பந்தி டையறி குறிப்புபோல எழுதி இருக்கிறீங்க.. அது உங்க வேலைப் பளுவால் என்றாலும்... ஆறுதலாக உங்களுக்கான நேரத்தில் காத்திரமானதாகப் பதியுங்கள்.

மற்றும் ஒரு சம்பிரதாயக் குறைபாடு.. காலத்தின் தேவை கருதி சுட்டிக் காட்ட வேண்டியது எனது கடமை..  'பறை அடிப்பவர்கள் வந்து அந்த சுற்றாடலின் சோகநிலையை கூட்டிக்கொண்டிருந்தார்கள்.'  இந்த வசனம் தேவையற்றது. பறை அடித்தால் அன்றைய தினமே சடலமானது அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம்.

பதிவுக்கும் இதற்கான தங்களது நேரத்துக்கும் நன்றிகள்! :)

 

என்னை நல்லாய் தான் உளியாலை செதுக்கிறியள் :lol: :lol: . சிறிய பகுதியாக போட்டது எனது பிழைதான்  . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சோழியன் :) :) .

 

Link to comment
Share on other sites

தொடருங்கள்.. கதை உண்மையின் தரிசனங்களாய் மிகவும் யதார்த்தமாகச் செல்கிறது. பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும்  ஒரு அரசியல் போலும்..........

நாலு வரி

பெரிதாக நாலு படம்............

அதற்கு பின்னர் அவரவருக்கு  விளக்கம் :(

 

கதை?? முடிய  எப்படியும்

2015...........??? :D

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! இத்துடன் இந்தக் கதை நிறைவுக்கு வருகின்றது . அதிகரித்த வேலைப் பழு அதனால் ஏற்றபட்ட நேரப் பற்றாக்குறை இந்தக் கதை சிறிது தாமதப்பட்டதன் காரணம் . இந்தக் கதையில் மனிதப் பண்புகள் இரத்த உறவுகளுக்கிடையில் விளையாடும் விநோதத்தையும் , ஒரு தாயின் வயிற்றில் அவர்கள் பிறந்திருந்தாலும் புலப் பெயர்வும் அதனால் வந்த மனிதப் பண்புகளில் ஏற்பட்ட வீறல்களை குணாவின் ஊடாகவும் காட்டியுள்ளேன் . உங்கள் விமர்சனங்களையும்  நாடி நிற்கின்றேன் .

நேசமுடன் கோமகன்

 

***********************************
 

4.jpg

 

 

ஆறுமுகம் வாத்தியார் இப்பொழுது ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்தார் . ரமணனும் குட்டியும் வராத செய்தி இப்பொழுது எல்லோரிடமும் பரவிவிட்டிருந்தது . எல்லோரும் காதுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள் . வொயிட்ஹவுஸ் காறர் மனோரஞ்சிதத்தை எம்பாம் பண்ணி நன்றாக அலங்கரித்து பெட்டியினுள் வளர்த்தியிருந்தார்கள் . அவள் நித்திரை கொள்வதுபோலவே படுத்திருந்தாள் . இருவரிடமும் படித்த மாணவர்கள் , ஆசிரியர்கள் என்று வீடே திமிறியது . வீட்டின் முன்னே பறை ஓங்கி ஒலித்து  வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது . ஒழுங்கையின் முகப்பில் முன்னும் பின்னும் இரட்டைக் கொம்பு வைத்து அழகான பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணை ஆறுமுகம் வாத்தியாரிடம்  வந்து யார்கொள்ளி வைப்பது ?? என்று ஒரு கேள்வியைக் கேட்டார் . ஆறுமுகம் வாத்தியார் பதில் சொல்ல வழியின்றி தவித்தபொழுது , எப்பொழுமே அப்பாவை நேரே நின்று கதைக்காத சுகுணாவின் அழுகைக் குரல் வெட்டியது .

 

 « அப்பா அம்மாவுக்கு நான் கொள்ளி வைக்கிறன் «

 

"என்ன பிள்ளை விசர்கதை கதைக்கிறாய் ??"

 

« நானும் உங்கடை பிள்ளைதானே . இந்தியன் ஆமி பிரைச்சனைக்குள்ளை றோட்டிலை கிடந்த எத்தினைபேரை கூட்டி அள்ளி எரிச்சிருப்பம் . நான் அம்மாவுக்கு கொள்ளிவைக்கிறன் என்றாள் சுகுணா « 

 

சுகுணாவின் கதையை ஆறுமுகம் வாத்தியாரால் தட்டமுடியவில்லை . இறுதியில் சுகுணா கொள்ளிக்குடத்தை தூக்க மனோரஞ்சிதம் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள் .

 

எல்லாவற்றிலுமே வறண்ட ஈழத்து  மண்ணிற்கு இப்படியான ஈரமான மனிதர்களே தொடர்ந்தும் அந்த மண்ணை உயிர்ப்பிக்கின்றனர் .

 

முற்றும்.

 

கோமகன்

12 / 09 / 2013

Link to comment
Share on other sites

ம்... இந்தக் கதையின் முடிவை வாசித்தபோது, எனக்கு எனது உறவினர் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. எனது பெரியம்மா முறையில் அமைந்த சொந்தம்.. இளவாலை சித்திரமேழி (சேந்தாங்குளம்) இல் வாழ்ந்தார். பிள்ளைகள் இல்லை. கணவனுக்கு அப்போதே அவர்தான் கொள்ளி வைத்தார்.

நேரம்பற்றாக்குறையையும் வேலைப்பளுவையும்பற்றி முதலிலேயே குறிப்பிட்டதால் விமர்சனத்திலிருந்து தப்பிவிட்டீர்கள்.

பகிர்வுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

 

ஆறுமுகம் வாத்தியார் இப்பொழுது ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்தார் . ரமணனும் குட்டியும் வராத செய்தி இப்பொழுது எல்லோரிடமும் பரவிவிட்டிருந்தது . எல்லோரும் காதுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள் . வொயிட்ஹவுஸ் காறர் மனோரஞ்சிதத்தை எம்பாம் பண்ணி நன்றாக அலங்கரித்து பெட்டியினுள் வளர்த்தியிருந்தார்கள் . அவள் நித்திரை கொள்வதுபோலவே படுத்திருந்தாள் . இருவரிடமும் படித்த மாணவர்கள் , ஆசிரியர்கள் என்று வீடே திமிறியது . வீட்டின் முன்னே பறை ஓங்கி ஒலித்து  வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது . ஒழுங்கையின் முகப்பில் முன்னும் பின்னும் இரட்டைக் கொம்பு வைத்து அழகான பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணை ஆறுமுகம் வாத்தியாரிடம்  வந்து யார்கொள்ளி வைப்பது ?? என்று ஒரு கேள்வியைக் கேட்டார் . ஆறுமுகம் வாத்தியார் பதில் சொல்ல வழியின்றி தவித்தபொழுது , எப்பொழுமே அப்பாவை நேரே நின்று கதைக்காத சுகுணாவின் அழுகைக் குரல் வெட்டியது .

 

 « அப்பா அம்மாவுக்கு நான் கொள்ளி வைக்கிறன் «

 

"என்ன பிள்ளை விசர்கதை கதைக்கிறாய் ??"

 

« நானும் உங்கடை பிள்ளைதானே . இந்தியன் ஆமி பிரைச்சனைக்குள்ளை றோட்டிலை கிடந்த எத்தினைபேரை கூட்டி அள்ளி எரிச்சிருப்பம் . நான் அம்மாவுக்கு கொள்ளிவைக்கிறன் என்றாள் சுகுணா « 

 

சுகுணாவின் கதையை ஆறுமுகம் வாத்தியாரால் தட்டமுடியவில்லை . இறுதியில் சுகுணா கொள்ளிக்குடத்தை தூக்க மனோரஞ்சிதம் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள் .

 

எல்லாவற்றிலுமே வறண்ட ஈழத்து  மண்ணிற்கு இப்படியான ஈரமான மனிதர்களே தொடர்ந்தும் அந்த மண்ணை உயிர்ப்பிக்கின்றனர் .

 

முற்றும்.

 

கோமகன்

12 / 09 / 2013

 

ஈழ மண்ணில் கொஞ்சம் வறண்ட நிலப்பகுதிகள் இருக்கின்றனதான். ஆனால் 'எல்லாவற்றிலுமே வறண்ட...' என்று நீங்கள் சொல்லவருவது.... ஈழ மண்ணின் ஒட்டுமொத்த வளத்தையும்,செழிப்பையும் அதன் மக்களையும் அவர்களின் நற்பண்புகள் ஆளுமைகள் கல்வியறிவு கலை  கலாச்சார பாரம்பரியங்கள் என  அனைத்தையுமா..????

சில வார்த்தைகளை உபயோகிக்கும்பொழுது கொஞ்சம் அவதானமாக கையாளவேண்டும் கோ..! இல்லாவிட்டால் அது தப்பான எண்ணவோட்டத்தை உருவாக்கிவிடும். உதாரணத்திற்கு.... வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தையொன்று, அல்லது ஈழத்து மண்ணை பார்த்திராத ஒருவர்... உங்களின் கதையைப் படித்தால்.... அந்த வார்த்தைகளிலிருந்து அந்த மண் குறித்து தப்பான  கருத்தை மனதில் பதிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

 

 

வேலைப்பழுவுக்கு மத்தியிலும் உணர்வுகளை வார்த்தைகளில் கோர்த்து அருமையான கதையொன்றை எங்களுடன் பகிர்ந்துகொண்ண்டமைக்கு மிக்க நன்றி..! :)

 

Link to comment
Share on other sites

இதுவும்  ஒரு அரசியல் போலும்..........

நாலு வரி

பெரிதாக நாலு படம்............

அதற்கு பின்னர் அவரவருக்கு  விளக்கம் :(

 

கதை?? முடிய  எப்படியும்

2015...........??? :D

 

எல்லாம் உங்களிட்டை இருந்துதான் படிச்சன் அண்ணை . இப்ப நீங்கள் கனடா பயணத் தொடர் எழுதேலையே அதுமாதிரிதான் இதுவும் :lol: :lol: :D :D :icon_idea: .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" நிலாவரை கிணத்திலை தேசிக்காயைப் போட்டால் கீரிமலைக் கேணியிலை மிதக்குமாம் " கருத்துக்களத்தில் என்று ஒழியும் இந்த கேடுகெட்ட செயல் ??? மேலும் என்சார்பான நியாயமான   உங்கள் கருத்துக்களுக்கு நான் என்றுமே பதில் தருவதற்க்குப் பின்னிற்பதில்லை , நன்றி . 

 

 

உங்களது

எழுத்து

உங்களுக்காகவே.........

எல்லாம் உங்களிட்டை இருந்துதான் படிச்சன் அண்ணை . இப்ப நீங்கள் கனடா பயணத் தொடர் எழுதேலையே அதுமாதிரிதான் இதுவும் :lol: :lol: :D :D :icon_idea: .

 

 

 

கோ

ஒரே ஒரு முறை  தப்பு செய்தேன்

அதை மட்டும் பிடித்துக்கொண்டுள்ளீர்கள்

அதற்கு மன்னிப்பும் கேட்டேன்

நல்லதை  மட்டும்   எடுத்துக்கொள்ளுங்கள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஏனோ இந்தக்கதை சில அழுத்தங்களுக்காய் அவசரப்பட்டு முடிக்கப்பட்டது  போன்றே உணரமுடிகிறது. ஆவலுடன் படித்து வந்து

இறுதியில் சப்பென்று முடிந்து விட்டது. உங்களுடைய வேலைப்பழுவைக் கவனித்தில் எடுக்கும் அதே வேளை ஆறுதலாகவேனும் நன்றாக முடித்திருக்கலாம். மற்றும்படிக்கு புலப்பெயர்வின் பின் நமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சமூகப்பிரச்சனையை தங்களுக்கேயுரிய பாணியில் அழகாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

உங்களது

எழுத்து

உங்களுக்காகவே.........

 

 

கோ

ஒரே ஒரு முறை  தப்பு செய்தேன்

அதை மட்டும் பிடித்துக்கொண்டுள்ளீர்கள்

அதற்கு மன்னிப்பும் கேட்டேன்

நல்லதை  மட்டும்   எடுத்துக்கொள்ளுங்கள்

 

 

நீங்கள் முதல் சொன்ன கருத்து இதே பதிவிலை நான் போட்ட எட்டாவது பின்னூட்டத்திலை இருக்கு . ஆக நான் வேறை திரியிலை இருந்ததை காவிக் கொண்டு திரியேலை :icon_mrgreen: .  அதாலை உங்கடை முதல் கருதின்ரை லொஜிக் இடிக்குது  . மற்றது நீங்களே பிழையளை  விட்டுக்கொண்டு ஒழுங்காய் சிவனே எண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை  ,  ஏதாவது எழுத வேணும் எண்டதுக்காக எழுதி குழப்பினது நீங்கள் தானே விசுகு ஐயா ??? அதாலைதான் அப்பிடி நான் எழுத வேண்டி வந்தது :lol::D .

 

Link to comment
Share on other sites

ஈழ மண்ணில் கொஞ்சம் வறண்ட நிலப்பகுதிகள் இருக்கின்றனதான். ஆனால் 'எல்லாவற்றிலுமே வறண்ட...' என்று நீங்கள் சொல்லவருவது.... ஈழ மண்ணின் ஒட்டுமொத்த வளத்தையும்,செழிப்பையும் அதன் மக்களையும் அவர்களின் நற்பண்புகள் ஆளுமைகள் கல்வியறிவு கலை  கலாச்சார பாரம்பரியங்கள் என  அனைத்தையுமா..????

சில வார்த்தைகளை உபயோகிக்கும்பொழுது கொஞ்சம் அவதானமாக கையாளவேண்டும் கோ..! இல்லாவிட்டால் அது தப்பான எண்ணவோட்டத்தை உருவாக்கிவிடும். உதாரணத்திற்கு.... வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தையொன்று, அல்லது ஈழத்து மண்ணை பார்த்திராத ஒருவர்... உங்களின் கதையைப் படித்தால்.... அந்த வார்த்தைகளிலிருந்து அந்த மண் குறித்து தப்பான  கருத்தை மனதில் பதிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

 

 

வேலைப்பழுவுக்கு மத்தியிலும் உணர்வுகளை வார்த்தைகளில் கோர்த்து அருமையான கதையொன்றை எங்களுடன் பகிர்ந்துகொண்ண்டமைக்கு மிக்க நன்றி..! :)

 

 

இல்லை நான் அவ்வாறு நினைத்து எழுதவில்லை . பொதுவாகக்  கதை சொல்லும்பொழுது அதன் பின்னணி ,அது சொல்கின்ற செய்திகளின் தன்மை , முக்கியமாக அது நடைபெற்ற காலகட்டம் என்பன சொல்லாடல்களைத் தெரிவு செய்கின்றன . அதுபோலவே நீங்கள் குறிப்பிட்ட சொல்லாடலையும் தெரிவு செய்தேன்.  முன்பு எல்லாவற்றிலும் வளமாயிருந்த நாங்கள் கதையோட்டதின் காலப்படி வரட்சியாகவே இருந்தோம் . அந்த நேரத்தில் ஒரு பெண் தனது தாயிற்கு இறுதிகிரியைகளைச் செய்ய முன்வருகின்றாள் . இதற்காகவே " எல்லாவற்றிலுமே வரண்ட" என்ற சொல்லாடல் எனக்குத் தேவைப்பட்டது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை  :)  :)  .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முதல் சொன்ன கருத்து இதே பதிவிலை நான் போட்ட எட்டாவது பின்னூட்டத்திலை இருக்கு . ஆக நான் வேறை திரியிலை இருந்ததை காவிக் கொண்டு திரியேலை :icon_mrgreen: .  அதாலை உங்கடை முதல் கருதின்ரை லொஜிக் இடிக்குது  . மற்றது நீங்களே பிழையளை  விட்டுக்கொண்டு ஒழுங்காய் சிவனே எண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை  ,  ஏதாவது எழுத வேணும் எண்டதுக்காக எழுதி குழப்பினது நீங்கள் தானே விசுகு ஐயா ??? அதாலைதான் அப்பிடி நான் எழுத வேண்டி வந்தது :lol::D .

 

நான்  என்ன  எழுதினாலும்  நீங்கள்   ஒத்துக்கொள்ளப்போவதில்லை

அதனால்  எழுதாமல் விட்டிருந்தேன்

இருந்தாலும்

தப்பு  நடக்கும்போது பார்த்துக்கொண்டு எல்லோரம் போலிருக்க என்னால் முடியவில்லை

ஒரு கதை

அல்லது கட்டுரை

அல்லது கவிதை என்பது பதிவுக்கு வெளியில்  வருமட்டுமே அதனை வடித்தவருக்கு  உரிமையானது

எப்போ

பாய் விரிச்சாச்சோ

அப்போ

அது வாசிப்பவனால்

பதிவு இடுபவனால் புடம்போடப்படுகிறது

 

அந்தவகையில்

இந்தக்கதையை  ஆரம்பத்தில் நீங்கள் ஆரம்பித்தபோது  ஏற்படுத்தப்பட்ட

விறுவிறுப்பும் 

அல்லது அப்படி ஒரு பாவனையும்

கதையை  முடித்ததிலோ

முடிக்க எத்தனித்ததிலோ

கதையின் முடிவிலோ

அல்லது

கதையிலேயோ இல்லை

 

அந்தளவுக்கு அது உருமாறிவிட்டது

காரணம்

தங்களது தழும்பல் நிலை.

கதை எதைச்சொல்லப்போகிறது என்ற மாயையை ஏற்படுத்தியதோ

அல்லது சொல்லும் என்று வாசகராகிய எம்மிடம் ஏற்படுத்திய விம்பத்தையோ  தொட்டே பார்க்கவில்லை.

அல்லது மாற்றாக எதிர்பாராத

எதையும் அது  சொல்லவும் இல்லை

 

இது பலரது எழுத்தில் மறைமுகமாகத்தெரிந்தாலும்

இங்கு பலரும் ஆமாம் போடுவதால்

சொல்லி  புரியவைக்க ஏதோ  தடுத்துள்ளது தெரிந்ததால் மட்டுமே  எழுதணும் என்று தோன்றியது

அதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள்

அது தங்களது விருப்பம்

ஆனால் இதன் மூலம் உங்களுக்கும் அவர்கள்   தீங்கு புரிகின்றனர்   என்பதே எனது கவலை.

Link to comment
Share on other sites

இன்றுதான் வாசிக்க முடிந்தது. 

 

வாழ்த்துக்கள். வேலைபளுக்களுக்கும் இடையில் ஒரு தொடரை எழுதி முடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள். 

 

காத்திருக்கிறேன் அடுத்த கதைக்காக.

 

Link to comment
Share on other sites

நான்  என்ன  எழுதினாலும்  நீங்கள்   ஒத்துக்கொள்ளப்போவதில்லை

அதனால்  எழுதாமல் விட்டிருந்தேன்

இருந்தாலும்

தப்பு  நடக்கும்போது பார்த்துக்கொண்டு எல்லோரம் போலிருக்க என்னால் முடியவில்லை

ஒரு கதை

அல்லது கட்டுரை

அல்லது கவிதை என்பது பதிவுக்கு வெளியில்  வருமட்டுமே அதனை வடித்தவருக்கு  உரிமையானது

எப்போ

பாய் விரிச்சாச்சோ

அப்போ

அது வாசிப்பவனால்

பதிவு இடுபவனால் புடம்போடப்படுகிறது

 

அந்தவகையில்

இந்தக்கதையை  ஆரம்பத்தில் நீங்கள் ஆரம்பித்தபோது  ஏற்படுத்தப்பட்ட

விறுவிறுப்பும் 

அல்லது அப்படி ஒரு பாவனையும்

கதையை  முடித்ததிலோ

முடிக்க எத்தனித்ததிலோ

கதையின் முடிவிலோ

அல்லது

கதையிலேயோ இல்லை

 

அந்தளவுக்கு அது உருமாறிவிட்டது

காரணம்

தங்களது தழும்பல் நிலை.

கதை எதைச்சொல்லப்போகிறது என்ற மாயையை ஏற்படுத்தியதோ

அல்லது சொல்லும் என்று வாசகராகிய எம்மிடம் ஏற்படுத்திய விம்பத்தையோ  தொட்டே பார்க்கவில்லை.

அல்லது மாற்றாக எதிர்பாராத

எதையும் அது  சொல்லவும் இல்லை

 

இது பலரது எழுத்தில் மறைமுகமாகத்தெரிந்தாலும் இங்கு பலரும் ஆமாம் போடுவதால் சொல்லி  புரியவைக்க ஏதோ  தடுத்துள்ளது தெரிந்ததால் மட்டுமே  எழுதணும் என்று தோன்றியது அதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் அது தங்களது விருப்பம்

ஆனால் இதன் மூலம் உங்களுக்கும் அவர்கள்   தீங்கு புரிகின்றனர்   என்பதே எனது கவலை.

 

என்னைப் பொறுத்தவரையில் நேர் எதிர் விமர்சனங்களை ஒரே தட்டில் வைத்துப் பார்பவனே ஒரு நல்ல எழுத்தாளனாக வரமுடியும் . நீங்களாக உங்கள் மனதில் என்னையிட்டு ஒரு கற்பிதத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் ?? ஆனாலும் உங்கள் விமர்சனதைக் வருங்காலத்தில் கவனத்தில் எடுகின்றேன் விசுகு ஐயா . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்றுதான் வாசிக்க முடிந்தது. 

 

வாழ்த்துக்கள். வேலைபளுக்களுக்கும் இடையில் ஒரு தொடரை எழுதி முடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள். 

 

காத்திருக்கிறேன் அடுத்த கதைக்காக.

 

தயாராகிக் கொண்டிருக்கின்றது . அனால் சிறிது காலம் எடுக்கும் . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நெற்கொழுவன் :) :) .

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"தனக்கு ஒன்று என்றால் துடிக்கும்  அவளைப்பார்க்க அவனது அம்மாவின் நினைவுகளே முட்டி மோதின . அவன் குளித்து விட்டு வந்து கொத்தமல்லித் தேநிர் தயாரிக்கும் பொழுது , எங்கிருந்தோ ராசா………………… என்று அம்மா அழைப்பது போல் உணர்ந்தான் குட்டி . அவன் சிறுவயதில் பலமுறை காய்சலாக விழுகின்ற நேரமெல்லாம் அவனை கொத்தமல்லி தேத்தண்ணியாலேயே குணப்படுத்துவாள் மனோரஞ்சிதம் . கொத்தமல்லி தேத்தண்ணியின் கசப்பை தனது இனிமையான கதைகளால் அவனுக்குப் போக்கியவள் அவனது அம்மா . குட்டியின் மனம் வெடித்துவிடும் போல இருந்தது"

 

பலர் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக எழுதமுடியும்

 

எல்லாமே உங்கள் போன்றோரின் ஆசீர்வாதம்தான் வாத்தியார் என்னில் எதுவுமே இல்லை . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.