Jump to content

ஒருக்கா வாழ்த்தணும்.. ஒரு பேப்பருக்காக!!


Recommended Posts

இன்றைய ஒரு பேப்பரில் கள உறவுகளான கவிதையின் கவிதையும் , அஞ்சரனின் கவிதையும் , இன்னுமொருவனின் ஊரைப் பற்றிய பயணக் கட்டுரையும் வெளியாகியுள்ளன . மூவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் . மிக்க நன்றி ஒரு பேப்பருக்கு.. ;)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மூவருக்கும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூவேந்தரையும் வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

உண்மையில் சந்தோசமாக இருகின்றது . ஒரே நாளில் மூன்று கள உறவுகளின் ஆக்கங்களை ஒருபேப்பர் வெளியிட்டது யாழ் இணையத்திற்குக் கிடைத்த பெருமையே .  மிக்க நன்றி ஒருபேப்பருக்கு :) :) .

Link to comment
Share on other sites

உண்மையில் சந்தோசமாக இருகின்றது . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே..! :)

Link to comment
Share on other sites

உண்மையில் சந்தோசமாக இருகின்றது . ஒரே நாளில் மூன்று கள உறவுகளின் ஆக்கங்களை ஒருபேப்பர் வெளியிட்டது யாழ் இணையத்திற்குக் கிடைத்த பெருமையே .  மிக்க நன்றி ஒருபேப்பருக்கு :) :) .

 

இதில இருந்து என்ன தெரியுதெண்டா... ஒரு பேப்பர்காரங்கள் யாழுக்க ஊடுருவிட்டாங்களப்பா ஊடுருவிட்டாங்க.. ஒன்றா ரண்டா.. மூண்டை உருவிட்டாங்க... :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூவருக்கும் வாழ்த்துக்கள்!

 

ஒரு பேப்பர், இனித் தனிய மினக்கடாமல், யாழோடு இணைந்து விடுவதே, காலத்தின் கட்டாயம்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சியின் கவிதையும் வந்துள்ளதே. எப்படி அவர் விடுபட்டார்..??????????!

 

ஒரு பேப்பர் காலம் காலமாகவே யாழ் உறவுகளின் கருத்துக்களை ஆக்கங்களை அச்சில் ஏற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதற்கு காரணம் யாழோடு அவர்கள் கொண்டிருக்கும் கள உறவுகள் என்ற அந்த ஈடுபாடுமாக இருக்கலாம்.

 

இலத்திரனியல் வடிவில் யாழில் உள்ள ஆக்கங்கள் சிலவாவது அச்சேறுவது நல்லதே.

 

காரணம்.. முன்னர் யாழ்.நெட் வழங்கிய வலைப்பூவில் எழுதப்பட்ட இன்னோரென்ன யாழ் கள உறவுகளின் ஆக்கங்கள்.. இன்று வரை மீட்கப்பட முடியாத அளவிற்கு தொலைந்துவிட்டன. அந்த நிலை வரக்கூடாது என்றால் காத்திரமான படைப்புக்கள் அச்சேறுவது யாழுக்கும் தமிழிற்கும் தமிழினத்திற்கும் நல்லதே. :icon_idea::)

Link to comment
Share on other sites

யார் சார்  நொச்சி?
என்ரை தொடர்கதை ஒன்றும் முந்தி போட்டவை.. அது யாழ்ல வரேல.. அதால அதை எடுத்து யாழ்ல போடுவமோண்டு யோசிக்கிறன்..!! :unsure::D

Link to comment
Share on other sites

யார் சார் நொச்சி?

என்ரை தொடர்கதை ஒன்றும் முந்தி போட்டவை.. அது யாழ்ல வரேல.. அதால அதை எடுத்து யாழ்ல போடுவமோண்டு யோசிக்கிறன்..!! :unsure::D

சார்.. திரும்ப யாழ் பக்கமா வந்திருக்கிறீங்க.. முகநூலில் தோட்டம் எல்லாம் அலுத்துப்போசசா?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சார்  நொச்சி?

என்ரை தொடர்கதை ஒன்றும் முந்தி போட்டவை.. அது யாழ்ல வரேல.. அதால அதை எடுத்து யாழ்ல போடுவமோண்டு யோசிக்கிறன்..!! :unsure::D

 

அட.. எங்க கள உறவு நொச்சியைப் பார்த்து யாருன்னு கேட்டுட்டீங்களே..??! :rolleyes::D

 

இவர் தான் நொச்சி.. இந்தக் கவிதைதான் பேப்பரில வந்திருக்குது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127446

 

இணையத்தில் குறித்த  பேப்பரை பார்க்க....

 

https://docs.google.com/viewer?url=http://www.orupaper.com/Uploads/epaper/200_225/Issue_201.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பேப்பருக்கு ஆட்கள் ஒருத்தரும் சொந்த ஆக்கம் எழுதிப் போடுவதில்லை :) பின்னர் எப்படி பக்கத்தை நிரப்புவது :D யாழில் இருந்து திருடித் தான் போட வேண்டும் :lol:
 
Link to comment
Share on other sites

சார்.. திரும்ப யாழ் பக்கமா வந்திருக்கிறீங்க.. முகநூலில் தோட்டம் எல்லாம் அலுத்துப்போசசா?? :D

 

அலுக்கேல சார்.. கொஞ்சம் இந்தப் பக்கம் எட்டிப் பாக்கலாம் எண்டு வந்தால்.. நம்ம கரக்டரே இப்பிடித்தான்.. போற வாற இடத்தில சக்கைப்பணியக் கிடக்கிறது.. :lol::D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.