Jump to content

அநாதையாய் வீழ்ந்தவின் அழுகுரல் கேட்கலையோ..?!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Senthilkumaran_Ratnasingam_104621_200.jp

 

ஒற்றைப் பேச்சில்

ஒடிந்தே போனான்..!

இனத்துக்காய் வீழ்ந்தோரை

தூற்ற நீ யார்..??!

கேள்விகள் கேட்க

யாருமற்ற நேரத்தில்

அவனுக்குள்

ஆயிரம் கேள்விகள்..!

 

அகோரமாய்

தேசத்தில் நடந்ததை

தரிசித்தவனுக்கு...

ஊமையாகித் துணை நின்று

அழித்தவனின் செயல் பாராட்டி

சாகடித்துப் பின்...

மனித உயிர்க்கான உரிமைகள் தேடும்

"உண்மையை"க் கண்டறிவோரின்

வேடங்கள் அவனுக்குப் புரியவில்லை..!

வெகுண்டு எழுந்தவன்

வேதனையில் துடித்தான்...!

 

தன்னின மக்களுக்காய்

குண்டு சுமந்த

மண்டேலாவுக்கு

ஒரு நீதி..!!!

"உலக அமைதிக்கென்று"

பசப்பி

உலகை அடிமையாக்க..

ஊரூராய் குண்டு போடும்

ஒபாமாவுக்கு

நோபல் பரிசு..!

சொந்த மண்ணில்

இன அழிப்பை

தடுத்து நின்றவனுக்கு

"பயங்கரவாதிப்" பட்டம்...!

அந்தப் பட்டம்

அவனுக்குப் பட்டது

அநியாயமாய்

கொதித்தான் உணர்வுகளால்

தனிமையில்..!

 

ஊருக்கு

கொலிடே போவோரின்

ஆசைக்குள்

அம்மையாரின் குரல் கேட்டு..

கேள்விகள் முளைக்க

எங்க நேரமிருக்குது..!

புகலிடத்தில்..

குழுச் சண்டைக்குள்

சோர்ந்து போய்

போர்வை விரித்துத்

குரட்டை விடுவோருக்கு..

வேள்வியின் வேளையில்

விடிவுக்காய்

உயிர் தந்து போனோரை

ஈவு இரக்கமற்ற

"பயங்கரவாதிகள்" ஆக்கிய

சாணக்கிய பேச்சு

கேட்டிருக்க நியாமில்லை..!

 

உள்ளக் குமுறலின்

உணர்வை அடக்கி

கும்மாளம் போட

பாவி அவனுக்கு

சுழியத்தனமும் இருக்கவில்லை..!

அப்பாவித்தனமாய்

உலகிற்கு ஓர்

சேதி சொல்ல

உயிர் மூச்சில்

உயில் எழுதப் புறப்பட்டான்..!

தன் உடல் எரித்து

ஜெனிவாவில்..

அநாதையாய் வீழ்ந்து

செந்தில்குமரன்

அதைச் செய்தான்..!

 

இருந்தும்..

அவன் அழுகுரல்

கேட்பாரின்றி..

செவிடராகிப் போனாரே

தமிழர்கள்...!

தமிழினத் தூண்களே

சுயநலப் பிசாசுகளே..

இன்னும் உங்கள்

உறக்கம் தீரலையோ..???!

வீழ்ந்தவன்

அழுகுரல் கேட்கலையோ..??!

எந்த வேளைக்காய்

காத்திருப்பதாய்

எனி கதைவிடப் போகிறீர்கள்..??!

 

உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு

நீங்கள்

உறங்கிவிடுவீர்கள்..!

உல்லாசம் காண

எதிரிக்கு வளைந்துநெளிந்து..

ஊருக்கும் போய் வருவீர்கள்..!

 

உங்கள் இந்த நாடகத்தில்

உண்மையாய்

உணர்வுகள் ஏந்திய

இன்னும் எத்தனை

அப்பாவி உயிர்களை

பலியிடப் போகிறீர்கள்..?!

 

அஞ்சலிகள் கூட இன்றி

அவர் வாழ்வும்

அடங்குவது தான்

விதியாமோ...?!

வீதியில் எரிந்து வீழ்ந்தோருக்கும்

மனித உரிமைகள் உண்டு

உள்ளக் கிடக்கைகள் உண்டு..

"ஈவு இரக்கமுள்ள"

ஐநாவின்

அம்மையாரிடம்

கண்டால்..

எடுத்துச் சொல்லுங்கள்..!

அது போதும்

உங்களை நம்பி

அநியாயமாய் செத்தவற்கு

செந்தில்குமரன்களுக்கு

அஞ்சலி செய்தாய்

அது  இருக்கும்..!!

 

[படம்: தமிழ்நெட்]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..நன்றி கவிதைக்கு அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

 

நன்றி கவிதைக்கு நெடுக்ஸ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவின் தீக்குளிக்க முன்னரான.. இறுதி வேண்டுகோள்.. ஒளி ஒலி வடிவில்.. அவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து.. பெறப்பட்டுள்ளது. அது சுவிஸ் பொலீசாரால் கைப்பற்றப்பட்டு தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

அவர் இரண்டு வேண்டுகோளை வைத்துள்ளார்..

 

1. எல்லோரும் ஒன்றிணைந்து போராடி சுதந்திர தமிழீழ தாயகத்தை அமைக்க பாடுபடும் படியும்.. ஐநா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது கவன ஈர்ப்புக்களில் ஈடுபடும் படியும்..

 

2. தனது குழந்தைகளை உங்களின் குழந்தைகளாகக் கருதி கவனம் எடுக்கும் படியும்.

 

மேலும்.. கீழே உள்ள.. இந்த இணைப்பில் அவரின் குரலிலேயே அவரின் வேண்டுகோளை கேட்கலாம்.

 

https://soundcloud.com/tamilnet/last-message-from

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.