Jump to content

வில்லியம் வாட்டர் பம்மும் விநாசியரும்.!


Recommended Posts

விநாசியர் வீட்டில இருந்ததை விட தோட்டத்தில் நின்றதுதான் அதிகம் தனது வயதான காலத்தில் ஒய்வை சற்றும் விரும்பாத மனிதர் எப்பபாரு வயல் ..தோட்டக்காணி என்று மாறி மாறி நடந்து திரிவது பிள்ளைகளின் படிப்பு வாழ்க்கை என குடும்ப சுமையை தூக்கி நிக்கிற ஒரு மனிதனா அவரை ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கலகலப்பான பேச்சு சினம் கொள்ளாத முகம் இடம் பெயர்ந்து அவர் கணியில் ஒரு குடில் போட்டு இருந்த எமக்கு அம்மாபச்சை அரிசிக்கு அவரின் கத்தரிக்கா பலமுறை ஒன்றி இருந்தது..இருக்கு.

 

ஒருபக்கம் வெங்காயம் ..ஒருபக்கம் முளகாய் ..தண்ணி ஓடும் பாத்திக்கு இரு கரையும் மேல் கீரை மிகுதி தண்ணி வழிந்து போகும் இடத்தில் பூசணி என மிக நேர்த்தியா திட்டம் இட்டு பயிர் செய்வது அவரின் சிறப்பு.இறைக்கும் தண்ணி போகும் இடம் எல்லாம் ஒரு பயிர் நிக்கும். மண்ணெண்ணை தட்டுபாடு நிலவிய காலம் இரண்டு வாளி கொழுவி கைகளால் நீர் இறைத்து பயிர் செய்யும் அவரை பார்க்கும் போது கவலையா இருக்கும்.

மூனும் பெண்பிள்ளைகள் அப்பாக்கு உதவியா பள்ளி போட்டு வந்து புல்லு புடுங்குறது கிளி பார்ப்பது என பாட புத்தகம் ஒரு கையில் வைத்து படித்த படி இவர்கள் செய்யும் வேலைகள் அதிகம். அப்ப எல்லாம் நாங்க கலெக்டர் வேலை காலையில் எழும்பி மூஞ்சிய ஒரு தேய் தேய்த்து போட்டு சைக்கிள எடுத்து கவட்டில வைச்சா எங்க போறம் எண்டு எங்களுக்கே தெரியாது..போயிட்டு இருப்பம். அதிலும் பாருங்கோ எந்த ரோட்டில பிரச்சாரம் நடக்கு எண்டு தெரிஞ்சு இடையில உள்ள குச்சு ஒழுங்கை எல்லாம் போய் சுற்றி போறதில எங்களுக்கு நாங்கள் தான் கில்லாடிகள்

 

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..

ஆனால் விநாசியர் அப்படி இல்லை அதிகாலை எழும்பி பனி மூட்டம் தலைப்பாகை கட்டிய படி பன்டி வாற நேரம் என்று காணிய சுற்றி வருவார் ஒருநாள் வழமையா பள்ளிக்கூடம் போன பிள்ளை திருப்பி வரவில்லை. மூத்த மகளை காணம் தம்பி என்றபடி வந்தவர் தனது சைக்கிள் காற்று இல்லை சைக்கிளை ஒருக்கா தங்கோ பார்த்து வர என வாங்கி போனார். திரும்பி வந்து சோகமா பத்து பிள்ளைகள் ஒன்றா இயக்கத்துக்கு போனதாம் அதில் என்னுடைய பெண்ணுமாம் என்று வரும் கண்ணீரை துடைத்தபடி படுத்து இருந்து விட்டத்தை பார்த்த படி இருந்த எனக்கு அவரின் உரையாடல் காதில் என் உணர்வுகளை ரோஷ நரம்புகளை சுண்டி விட்டு போனது.

 

வெளியில் வர எனக்கே வெட்கமாகிட்டு நாம் என்ன செய்தோம் எம்மால் என் குடுமபத்துக்கு அல்லது நாட்டுக்கு என்ன பிரயோசனம் என யோசிக்கும்போது பூச்சியம். மனதில் ஓடிய நெருடலான விசயங்களை எண்ணிய படி முகத்தை கழுவி விட்டு வந்தது முற்றத்தில் நின்று பார்த்தால் விநாசியர் அந்த மன நிலையிலும் முளகாய் கன்றுக்கு தண்ணி இறைக்க குழாய் போட்டபடி. வழமையா அவரின் மூத்த மகளே அந்த வேலையை செய்வாள் இதுவரை நான் சும்மா தன்னும் என்ன எப்படி எண்டு எட்டி பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் என்ன அண்ணை வெயில் படத்தான் எழும்பிவியல் போல என என்னை நக்கல் பண்ணும் அவளும் இப்ப இல்லை என்கிற மன நிலையில் ஒரு உந்துதல் வர நான் விநாசியர் அருகில் போனேன்.

 

விடுங்கோ நான் இழுக்கிறன் என வாங்க அவர் சொன்னார் இல்லை தம்பி உமக்கு பழக்கம் இல்லை குழாய் கண்டில பட்டுட்டா மரம் ஒடிஞ்சு போடும் என்று. சரி என அவருடன் சேர்ந்து தூக்கி கொடுத்து விட்டு கிணற்றடிக்கு வந்து வாட்டர் பம்மை இழுக்க வேணும் என்று சொன்னார். ஓம் எண்டு அவரோட வந்தன். தம்பி நோஷால் ஊசியை குறை நான் இழுக்கும்போது சொக்கை விடு வில்லியம் பம்முக்கு அப்ப நல்ல மதிப்பு தம்பி 15 வருடம் மேல கிடக்கு நமக்கு சோறு போடுது எனக்கு இதுகும் ஒரு பிள்ளைமாதிரி.

 

சரி அதில போய் சின்னவள் வேல்மூடி சூடாக்கி வைத்து இருப்பால் எடுத்து வா.. பக்கத்தில ஒரு சின்ன சிங்கர் சூப்பி இருக்கும் அதை கவனமா கொண்டுவா.. நான் கிணத்துக்குள் குழாய் இறக்கிறன்... சரி என்று நானும் கிளம்பி போய் எடுத்து வந்து சேர அவரும் தனது வேலை முடிச்சு நின்றார். நான் இழுக்கிறன் வேல்மூடிய காபிறேட்டருக்கு நேர பிடிச்சு ஒரு துளி பெற்றோல் விடு, புகை எழும்பும்போது சொக்கை கையை விடு, சரியா கவனம் பெற்றோல் இவளவுதான் இருக்கு என்று சொல்லி இழுத்தார்..

 

என் மனதில இவளவுனாலும் என்ன எழும்பி குழாய் போட்டு பம்மை இழுக்குறது எல்லாம் ஒரு வேலையா என அசால்ட்ட நினைத்த எனக்கு அவருடன் சேர்ந்து செய்த ஒரு இரண்டு மணித்தியால வேலை நாக்கை தள்ளி நிண்டுது..இவளவு கடினம்..வில்லியம் ஓடினாதான் இந்தமாதம் யூரியா வாங்கலாம் மிளகாய் பழுக்கிற நேரம் என சொன்னபடி சிவனே என்று கடவுளையும் அழைத்தபடி இழுத்தார் ..ஒன்று இரண்டு என போய் ஆறு ஏழு தடவை இழுத்தும் வில்லியம் இயங்க வில்லை.. களைத்து போய் ஒருவாளி தண்ணி அள்ளி குடித்து விட்டு என்ன செய்வது என தெரியாமல் நிக்க நான் கேட்டேன் நான் இழுக்கவா நீங்க பெற்றோல் காட்டுங்க என.. நானும் உள்ள பலம் எல்லாம் சேர்த்து இழுத்து முடியாமல் இருந்திட்டன்..

 

மனதின் ஒரு மூலையில் ஒரு கணம் இவளவு வேலையயும் இவர்கள் தனியத்தானே செய்தார்கள் தோட்டம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அப்பொழுதான் புரிஞ்சுது.. சந்தையில் மரக்கறியை எடுத்து வைத்துக்கொண்டு நக்கல் கதையும் நளின விலையும் கேட்கும் எமக்கு அதன் பின்னால் இருக்கும் வலிகள் புரிவது இல்லைதான்.. சரி செடி வாடுது இவள் சின்னவள் எப்ப பள்ளியால வருவாள் என தெரியாமல் இருக்கு என விநாசியர் ஒழுங்கையை எட்டி பார்த்தார்..

 

 

அவளும் சரியா வர என்ன அப்பா இன்னும் தண்ணி இறைக்க வில்லையா என கேட்டபடி கிணத்தடிக்கு வந்தாள்.. இல்லை அம்மா வில்லியம் ஓடுறான் இல்லை என்ன எண்டு பார் என்றபடி விநாசியர் சொல்ல அவனுக்கு நான் இரண்டு தட்டு தட்டுறன் பொறுங்கோ என அந்த சாவி என்று மகள் கேட்க எனக்கு தலை விறைச்சு போச்சு.. என்ன நடக்கு இங்க என நாங்க இரண்டு ஆம்பிளைகள் முடியாமல் நிக்கிறம் இவா எப்படி செய்ய போறா என எனக்குள் கேட்டபடி நிக்க..

 

விறு விறு என சாவியை எடுத்து பிழக்கை கழட்டி நெருப்பில போடுட்டு இருங்க அப்பா உடுப்பை மாற்றி வாறன் எண்டு போனாள் வந்து பிளக்கை தட்டி எடுத்து எதோ ஒரு கம்பியால அப்டி இப்டி தட்டி போட்டு சூட்டோட பூட்டிட்டு வயரை கொளுவிபோட்டு தள்ளுங்க அப்பா என்று விட்டு கயிறை சுற்று ஒரு இழுவை... வில்லியம் ஓலம் எடுத்து கத்த கம்பிலிங்க எடுத்து குழாய் இறுக்கி விடுங்கோ என்றபடி அசால்ட்டா ஓவரு கொமாண்டும் கொடுத்தபடி அவள் மண் வெட்டிய கையில் எடுக்கும் போது எனது மனநிலை குதிச்சிடு நீ கிணத்தில் என்பது போல இருந்துது...

 

என்ன ஒரு அனுபவ முதிர்ச்சி என யோசிச்சு கொண்டு இருக்க விநாசியர் என்ன தம்பி எப்படி அவளுக்கும் வில்லியத்துக்கும் ஒரு வயது அதுதான் அவளுக்கு அவனை பற்றி நல்ல தெரியும் என்று சொல்லி சிரித்த படி போக நாங்கள் வீரவசனம் வெட்டி பேச்சிலும் நாட்கள் கழித்தோம் ஒழிய உருப்படியா ஒரு வேலையும் செய்யவும் இல்லை பழகவும் இல்லை இன்றில இருந்து அதிகாலையில் எழுவது விநாசியர் உடன் தோட்டம் செய்ய பழகுவது மரக்கறி கொண்டுபோய் சந்தையில் கொடுப்பது இனி நான் தான் செய்ய வேணும் என்கிற உறுதியுடன் வில்லியம் பம்மை முறைத்து பார்த்த படி நகர்ந்து போனேன்..

 

என்னுள் ஆயிரம் மாற்றம் தெரிய தொடங்கியது வன்னி மனிதர்களை பக்குவபடுத்தியது அறிவாளிகள் ஆக்கியது சுய சிந்தனையை போர் சூழல் தூண்டியும் விட்டது எமக்கு நாமே என்கிற தத்துவத்தை சொல்லமல் சொல்லி போனது காலம்..

 

Link to comment
Share on other sites

கிராமியத் தமிழில் வில்லியத்திற்கு கார்பன் பிடித்ததை எப்படி சீராகியது என்று சொல்லும் கதையழகு தனியழகு . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் அஞ்சரன் தொடருங்கோ :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிச்சுபடிச்சன் அண்ணா... அருமை...

 

 

. அதிலும் பாருங்கோ எந்த ரோட்டில பிரச்சாரம் நடக்கு எண்டு தெரிஞ்சு இடையில உள்ள குச்சு ஒழுங்கை எல்லாம் போய் சுற்றி போறதில எங்களுக்கு நாங்கள் தான் கில்லாடிகள்

 

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..

 

 

போறபோக்கில இதென்ன நைசாய் .... :D

Link to comment
Share on other sites

ரசிச்சுபடிச்சன் அண்ணா... அருமை...

 

 

 

போறபோக்கில இதென்ன நைசாய் .... :D

 

பயல் கோர்த்து விட்டுட்டு போகுது நன்றி ;)

 

நன்றி கோமகன் அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
இந்தக் கருத்திற்காகவே இந்தக் கதைக்கு ஒரு பச்சை கொடுக்கலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டக் கலையையும் தோட்டம் செய்பவர்களின் ஓர்மத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியமைக்கு நன்றிகள் அஞ்சரன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றிகள் .....நாங்களும் மெசின் போட்டு புல்லுவெட்டிபோட்டுத்தான் சாவுஅடைந்தவர்களுக்கு வணக்கம் போடுகிறோமாக்கும்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 -----

இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்..

-----

 

25 - 30 விருப்பப் புள்ளிகள் பெற்று யாழ்களப் பதிவுகளில் முன்னணியில் இருந்திருக்க வேண்டிய பதிவு, மேற் கூறிய ஒற்றை வரியால்... இழந்து போய் நிற்கிறது.

 

Link to comment
Share on other sites

அண்ணா நல்லாய் எழுதியிருக்கிறீர்கள்.
நான் அறியவே இதில் பல சம்பவங்கள் உண்மை அண்ணா 
Link to comment
Share on other sites

25 - 30 விருப்பப் புள்ளிகள் பெற்று யாழ்களப் பதிவுகளில் முன்னணியில் இருந்திருக்க வேண்டிய பதிவு, மேற் கூறிய ஒற்றை வரியால்... இழந்து போய் நிற்கிறது.

 

 

புள்ளிகள் விருப்பிக்கள் முக்கியம் இல்லை அண்ணா நாம் காணும் உண்மை இருக்கு அது போதும் இணையங்கள் இல்லாவிட்டால் எவருக்கும் எண்ணிக்கை தெரியாது என்பது புரிந்தால் சரி .

Link to comment
Share on other sites

நல்ல ஒரு பதிவு ஒன்று. நடிக்காமல் நீங்கள் நீங்களாகவே வாழ்கிறவர் என்பது தெரிகிறது. இதூதூதூ பல பொய்விழம்பிகளும் வேடாதாரிகளும் நிறைந்த இடம். இந்த பொய்விழம்பிகளுக்கும் வேடாதாரிகளுக்கும் மசிந்துபோய் உங்கள் த்னிதன்மைகலை தொலைக்காமல் நீங்கள் நீங்களாகவே இருக்கவேணும். நெஞ்சில் துணிவும் இன்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய் சொல்லில் வீரரடி. புரிந்தால் சரி அஞ்சரன்.

Link to comment
Share on other sites

நல்ல ஒரு பதிவு ஒன்று. நடிக்காமல் நீங்கள் நீங்களாகவே வாழ்கிறவர் என்பது தெரிகிறது. இதூதூதூ பல பொய்விழம்பிகளும் வேடாதாரிகளும் நிறைந்த இடம். இந்த பொய்விழம்பிகளுக்கும் வேடாதாரிகளுக்கும் மசிந்துபோய் உங்கள் த்னிதன்மைகலை தொலைக்காமல் நீங்கள் நீங்களாகவே இருக்கவேணும். நெஞ்சில் துணிவும் இன்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய் சொல்லில் வீரரடி. புரிந்தால் சரி அஞ்சரன்.

 

என் சுயத்தை எவருக்கும் இழக்கேன் அவ்வாறு இழந்தால் நான் அன்று இறத்து இருப்பேன் .தமிழ் தேசியவாதிகளுக்குதான் மதிப்பு என்றால் நான் துரோகியா வாழ்த்திட்டு போகிறேன் தலைவரை முன்னிறுத்தி பிழைக்கும் அவசியம் எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் பிச்சை எடுப்பேன் எவருக்கும் செம்புதுக்கேன் ஜால்ரா போடமாட்டேன் .

நன்றி அண்ணா .

Link to comment
Share on other sites

என் சுயத்தை எவருக்கும் இழக்கேன் அவ்வாறு இழந்தால் நான் அன்று இறத்து இருப்பேன் .தமிழ் தேசியவாதிகளுக்குதான் மதிப்பு என்றால் நான் துரோகியா வாழ்த்திட்டு போகிறேன் தலைவரை முன்னிறுத்தி பிழைக்கும் அவசியம் எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் பிச்சை எடுப்பேன் எவருக்கும் செம்புதுக்கேன் ஜால்ரா போடமாட்டேன் .

நன்றி அண்ணா .

 

சுகம் வரும் ஆள் தப்பாது :lol::D:icon_idea: .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே ஒரு நீண்ட நினைவுச் சுழலில் சிக்கவைத்துள்ளீர்கள். வீட்டில் உள்ள எல்லாருமே ஆண்,பெண் பேதம் பாராமல் தோட்டத்தில் வேலை செய்வதாலோ என்னவோ, தோட்டத்தில் விளைவது போலவே வீட்டிலும் மகிழ்ச்சிப்பூக்களை அறுவடை செய்யலாம் அந்தளவுக்கு தோட்டமும் எம் வாழ்வில் நிலைத்து நீடித்த ஒன்று. வீட்டில் இப்பவும் ஒரு வில்லியர்ஸ் மெசின் நிக்கிது.

 

பொருளாதாரத்தடை நிலவிய நேரம் பெற்றோல் எல்லாம் இல்லை. சூட்டுக்கோல் தான் காய்ச்சவேனும். பனிக்கு காலமை விறகெல்லாம் ஈரலிப்பா இருக்கும் நான் போய் நல்ல காய்ந்த தடிக்குச்சியள், பன்னாடை இல்லாட்டி காஞ்ச புல்லுகளை எல்லாம் எடுத்து  சூட்டுக்கோல் காய்ச்ச அண்ணா வந்து மெசினைப் பூட்டுவான், 1998ம் ஆண்டு அண்ணா வெளிநாடு போக என்று கொழும்புக்கு வந்தாப் போலை நானும் அப்பாவும் தான் தோட்டம். வயராலை தண்ணி போச்சுது என்றால் சாணகத்தை உருண்டையாக்கி வயறுக்குள்ளை போட்டிட்டு பேந்து தண்ணிவிட ஒழுகாமல் நிக்கும். அப்படியும் ஒழுகினால் கார் ரியூப்பிலை வாசர் வெட்டி வைக்க சரி ..

 

கோடைக்காய்,மாரிக்காய் இடையிலை பொயிலைக்கன்று,மிளகாய், கத்தரி என்று தோட்டத்திலை கால் வைக்காத நாள் இருக்காது. தோட்டம் இல்லாட்டி கூட மாடு மேய்க்க போய்விடுவேன். மாட்டை தறையிலை கட்டிப்போட்டு பொடியள் வருவாங்கள் காட்ஸ் அடிக்கிறதும். கள்ளக்கோழி பிடிச்சு  கோழிப்புக்கை போடுறதும் என்று வார்த்தைகளில் சொல்ல முடியாதளவு பசுமையான நாட்கள் அவை. ஓ/எல் பாஸ் பண்ணி ஏ/ல் போகும் வரைக்கும் தோட்டம் தான். பிறகு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்பாவை தனிய விடவும் விருப்பம் இல்லை அதன் பிறகு தறையைக் குத்தகைக்குக் குடுத்தோம் இப்ப கொஞ்சம் சும்மா கிடக்கு.

பழைய நினைவுகளைக் கிழறிச் சென்ற பதிவு.

 

இடையிடையே நகைச்சுவை இழையோட நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ப்றோ.. :)


என் சுயத்தை எவருக்கும் இழக்கேன் அவ்வாறு இழந்தால் நான் அன்று இறத்து இருப்பேன் .தமிழ் தேசியவாதிகளுக்குதான் மதிப்பு என்றால் நான் துரோகியா வாழ்த்திட்டு போகிறேன் தலைவரை முன்னிறுத்தி பிழைக்கும் அவசியம் எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் பிச்சை எடுப்பேன் எவருக்கும் செம்புதுக்கேன் ஜால்ரா போடமாட்டேன் .

நன்றி அண்ணா .

 

கூல் ப்றோ.. இப்ப எதுக்கு தலைவர்,புலிகள் எல்லாம்? பாவம் அந்தாள், அவரை விட்டிடுங்கப்பா ... :lol::icon_mrgreen::icon_idea:


MARK12FRONT.JPG

 

வில்லியம் ஆ? வில்லியர்ஸ் ஆ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு கதை!

 

இரை மீட்டும் மாடொன்றின் நிலையில் நின்று, மீண்டும், மீண்டும் உள்ளே சென்ற இரையை மீட்டெடுத்து, அசை போட்டுப் பார்ப்பது தானே, புலம் பெயர்ந்தவனின் வாழ்க்கை!

 

கதை சொல்லியால், ஸ்ரார்ட் பண்ண முடியாத இயந்திரத்தை, ஒரு பெண் ஸ்ரார்ட் பண்ணியதை, கதை சொல்லிக்கு நோகாத விதத்தில், வினாசியர் 'கையாண்ட விதம்' எமது மண்ணின் விழுமியத்தைக் காட்டி நிற்கின்றது!

 

மற்றது மாவீரர்களுக்கு வணக்கம் சொல்வது 'ஒவ்வொருவரது' தனிப்பட்ட விருப்பம்! அவர்களுக்குத் தனிப்பட்ட காரணங்களும் இருக்கும்! எனது உறவுகள், என்னுடன் ஒன்றாகப் படித்தவர்கள், எனது நட்புகளின் சொந்தங்கள் எனப் பலரின் பெயர்களை, இந்தத் திரியில் காண்கிறேன்!

 

தனது வாகனம் செல்லும் பாதையில், ஒரு கோவில் வரும்போது, தனது 'கண்ணைக்' கையினால் தொட்டு ஒற்றிக்கொள்ளும் சாரதியில் நிலையில் தான் நான் உள்ளேன்!

 

அவன் ஏன் அதைச் செய்கிறான் என்று நான் காரணம் தேடியதில்லை! அதில் அவனுக்கு ஒரு திருப்தி! அதே போலவே, இதில் எனக்கும் ஒரு திருப்தி!

 

தொடர்ந்து எழுதுங்கள்! ஒரு நல்ல கதை சொல்லி உங்களுக்குள் மறைந்திருக்கிறான்!

 

Link to comment
Share on other sites

அப்படியே ஒரு நீண்ட நினைவுச் சுழலில் சிக்கவைத்துள்ளீர்கள். வீட்டில் உள்ள எல்லாருமே ஆண்,பெண் பேதம் பாராமல் தோட்டத்தில் வேலை செய்வதாலோ என்னவோ, தோட்டத்தில் விளைவது போலவே வீட்டிலும் மகிழ்ச்சிப்பூக்களை அறுவடை செய்யலாம் அந்தளவுக்கு தோட்டமும் எம் வாழ்வில் நிலைத்து நீடித்த ஒன்று. வீட்டில் இப்பவும் ஒரு வில்லியர்ஸ் மெசின் நிக்கிது.

 

பொருளாதாரத்தடை நிலவிய நேரம் பெற்றோல் எல்லாம் இல்லை. சூட்டுக்கோல் தான் காய்ச்சவேனும். பனிக்கு காலமை விறகெல்லாம் ஈரலிப்பா இருக்கும் நான் போய் நல்ல காய்ந்த தடிக்குச்சியள், பன்னாடை இல்லாட்டி காஞ்ச புல்லுகளை எல்லாம் எடுத்து  சூட்டுக்கோல் காய்ச்ச அண்ணா வந்து மெசினைப் பூட்டுவான், 1998ம் ஆண்டு அண்ணா வெளிநாடு போக என்று கொழும்புக்கு வந்தாப் போலை நானும் அப்பாவும் தான் தோட்டம். வயராலை தண்ணி போச்சுது என்றால் சாணகத்தை உருண்டையாக்கி வயறுக்குள்ளை போட்டிட்டு பேந்து தண்ணிவிட ஒழுகாமல் நிக்கும். அப்படியும் ஒழுகினால் கார் ரியூப்பிலை வாசர் வெட்டி வைக்க சரி ..

 

கோடைக்காய்,மாரிக்காய் இடையிலை பொயிலைக்கன்று,மிளகாய், கத்தரி என்று தோட்டத்திலை கால் வைக்காத நாள் இருக்காது. தோட்டம் இல்லாட்டி கூட மாடு மேய்க்க போய்விடுவேன். மாட்டை தறையிலை கட்டிப்போட்டு பொடியள் வருவாங்கள் காட்ஸ் அடிக்கிறதும். கள்ளக்கோழி பிடிச்சு  கோழிப்புக்கை போடுறதும் என்று வார்த்தைகளில் சொல்ல முடியாதளவு பசுமையான நாட்கள் அவை. ஓ/எல் பாஸ் பண்ணி ஏ/ல் போகும் வரைக்கும் தோட்டம் தான். பிறகு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்பாவை தனிய விடவும் விருப்பம் இல்லை அதன் பிறகு தறையைக் குத்தகைக்குக் குடுத்தோம் இப்ப கொஞ்சம் சும்மா கிடக்கு.

பழைய நினைவுகளைக் கிழறிச் சென்ற பதிவு.

 

இடையிடையே நகைச்சுவை இழையோட நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ப்றோ.. :)

 

கூல் ப்றோ.. இப்ப எதுக்கு தலைவர்,புலிகள் எல்லாம்? பாவம் அந்தாள், அவரை விட்டிடுங்கப்பா ... :lol::icon_mrgreen::icon_idea:

MARK12FRONT.JPG

 

வில்லியம் ஆ? வில்லியர்ஸ் ஆ????

 

வில்லியர்ஸ் தான் சரி அண்ணா நன்றி ஜீவா அண்ணே .

அருமையான ஒரு கதை!

 

இரை மீட்டும் மாடொன்றின் நிலையில் நின்று, மீண்டும், மீண்டும் உள்ளே சென்ற இரையை மீட்டெடுத்து, அசை போட்டுப் பார்ப்பது தானே, புலம் பெயர்ந்தவனின் வாழ்க்கை!

 

கதை சொல்லியால், ஸ்ரார்ட் பண்ண முடியாத இயந்திரத்தை, ஒரு பெண் ஸ்ரார்ட் பண்ணியதை, கதை சொல்லிக்கு நோகாத விதத்தில், வினாசியர் 'கையாண்ட விதம்' எமது மண்ணின் விழுமியத்தைக் காட்டி நிற்கின்றது!

 

மற்றது மாவீரர்களுக்கு வணக்கம் சொல்வது 'ஒவ்வொருவரது' தனிப்பட்ட விருப்பம்! அவர்களுக்குத் தனிப்பட்ட காரணங்களும் இருக்கும்! எனது உறவுகள், என்னுடன் ஒன்றாகப் படித்தவர்கள், எனது நட்புகளின் சொந்தங்கள் எனப் பலரின் பெயர்களை, இந்தத் திரியில் காண்கிறேன்!

 

தனது வாகனம் செல்லும் பாதையில், ஒரு கோவில் வரும்போது, தனது 'கண்ணைக்' கையினால் தொட்டு ஒற்றிக்கொள்ளும் சாரதியில் நிலையில் தான் நான் உள்ளேன்!

 

அவன் ஏன் அதைச் செய்கிறான் என்று நான் காரணம் தேடியதில்லை! அதில் அவனுக்கு ஒரு திருப்தி! அதே போலவே, இதில் எனக்கும் ஒரு திருப்தி!

 

தொடர்ந்து எழுதுங்கள்! ஒரு நல்ல கதை சொல்லி உங்களுக்குள் மறைந்திருக்கிறான்!

 

ஒரு உதாரணம் ஆக சொல்லபட்டது அவ்வளவுதான் நன்றி அண்ணா .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வில்லியர்ஸ் தான் சரி அண்ணா நன்றி ஜீவா அண்ணே .

 

என்னையும் அண்ணாவாக்கிப்போட்டிங்களா? நான் சின்னப்பொடியனப்பா ... :o:icon_idea:

Link to comment
Share on other sites

25 - 30 விருப்பப் புள்ளிகள் பெற்று யாழ்களப் பதிவுகளில் முன்னணியில் இருந்திருக்க வேண்டிய பதிவு, மேற் கூறிய ஒற்றை வரியால்... இழந்து போய் நிற்கிறது.

 

யாழில் இணைந்த ஒரு புதிய பதிவாளர் மிக குறுகிய நாளிலேயே பலரின் பாராட்டையும் பலபார்வைகளையும் பதினாலு விருப்ப புள்ளிகளையும் பெற்று முன்னணி பதிவாளர் ஆகி உள்ளீர்கள் அஞ்சரன். வாழ்த்துக்கள்.இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வாசகர்கள் நல்ல பதிவுகளையும் உண்மைகளையும் மாரித்தவக்கைபோல் கத்தாமல் அமைதியாக அறிந்துவைத்துள்ளார்கள் என்பதே. :icon_idea:  :)

Link to comment
Share on other sites

நன்றி கதாநாயகன் :(

Link to comment
Share on other sites

நல்ல கதை அண்ணா. விவசாயிகளின் பிரயாசத்தை எம்மில் பலரும் கண்டுகொள்வதில்லை என்பதை கூறியவிதம் அழகு. உங்களிடம் இருந்து இன்னும் அதிக ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நன்றி தும்பளையான் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.