Jump to content

வில்லியம் வாட்டர் பம்மும் விநாசியரும்.!


Recommended Posts

விநாசியர் வீட்டில இருந்ததை விட தோட்டத்தில் நின்றதுதான் அதிகம் தனது வயதான காலத்தில் ஒய்வை சற்றும் விரும்பாத மனிதர் எப்பபாரு வயல் ..தோட்டக்காணி என்று மாறி மாறி நடந்து திரிவது பிள்ளைகளின் படிப்பு வாழ்க்கை என குடும்ப சுமையை தூக்கி நிக்கிற ஒரு மனிதனா அவரை ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கலகலப்பான பேச்சு சினம் கொள்ளாத முகம் இடம் பெயர்ந்து அவர் கணியில் ஒரு குடில் போட்டு இருந்த எமக்கு அம்மாபச்சை அரிசிக்கு அவரின் கத்தரிக்கா பலமுறை ஒன்றி இருந்தது..இருக்கு.

 

ஒருபக்கம் வெங்காயம் ..ஒருபக்கம் முளகாய் ..தண்ணி ஓடும் பாத்திக்கு இரு கரையும் மேல் கீரை மிகுதி தண்ணி வழிந்து போகும் இடத்தில் பூசணி என மிக நேர்த்தியா திட்டம் இட்டு பயிர் செய்வது அவரின் சிறப்பு.இறைக்கும் தண்ணி போகும் இடம் எல்லாம் ஒரு பயிர் நிக்கும். மண்ணெண்ணை தட்டுபாடு நிலவிய காலம் இரண்டு வாளி கொழுவி கைகளால் நீர் இறைத்து பயிர் செய்யும் அவரை பார்க்கும் போது கவலையா இருக்கும்.

மூனும் பெண்பிள்ளைகள் அப்பாக்கு உதவியா பள்ளி போட்டு வந்து புல்லு புடுங்குறது கிளி பார்ப்பது என பாட புத்தகம் ஒரு கையில் வைத்து படித்த படி இவர்கள் செய்யும் வேலைகள் அதிகம். அப்ப எல்லாம் நாங்க கலெக்டர் வேலை காலையில் எழும்பி மூஞ்சிய ஒரு தேய் தேய்த்து போட்டு சைக்கிள எடுத்து கவட்டில வைச்சா எங்க போறம் எண்டு எங்களுக்கே தெரியாது..போயிட்டு இருப்பம். அதிலும் பாருங்கோ எந்த ரோட்டில பிரச்சாரம் நடக்கு எண்டு தெரிஞ்சு இடையில உள்ள குச்சு ஒழுங்கை எல்லாம் போய் சுற்றி போறதில எங்களுக்கு நாங்கள் தான் கில்லாடிகள்

 

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..

ஆனால் விநாசியர் அப்படி இல்லை அதிகாலை எழும்பி பனி மூட்டம் தலைப்பாகை கட்டிய படி பன்டி வாற நேரம் என்று காணிய சுற்றி வருவார் ஒருநாள் வழமையா பள்ளிக்கூடம் போன பிள்ளை திருப்பி வரவில்லை. மூத்த மகளை காணம் தம்பி என்றபடி வந்தவர் தனது சைக்கிள் காற்று இல்லை சைக்கிளை ஒருக்கா தங்கோ பார்த்து வர என வாங்கி போனார். திரும்பி வந்து சோகமா பத்து பிள்ளைகள் ஒன்றா இயக்கத்துக்கு போனதாம் அதில் என்னுடைய பெண்ணுமாம் என்று வரும் கண்ணீரை துடைத்தபடி படுத்து இருந்து விட்டத்தை பார்த்த படி இருந்த எனக்கு அவரின் உரையாடல் காதில் என் உணர்வுகளை ரோஷ நரம்புகளை சுண்டி விட்டு போனது.

 

வெளியில் வர எனக்கே வெட்கமாகிட்டு நாம் என்ன செய்தோம் எம்மால் என் குடுமபத்துக்கு அல்லது நாட்டுக்கு என்ன பிரயோசனம் என யோசிக்கும்போது பூச்சியம். மனதில் ஓடிய நெருடலான விசயங்களை எண்ணிய படி முகத்தை கழுவி விட்டு வந்தது முற்றத்தில் நின்று பார்த்தால் விநாசியர் அந்த மன நிலையிலும் முளகாய் கன்றுக்கு தண்ணி இறைக்க குழாய் போட்டபடி. வழமையா அவரின் மூத்த மகளே அந்த வேலையை செய்வாள் இதுவரை நான் சும்மா தன்னும் என்ன எப்படி எண்டு எட்டி பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் என்ன அண்ணை வெயில் படத்தான் எழும்பிவியல் போல என என்னை நக்கல் பண்ணும் அவளும் இப்ப இல்லை என்கிற மன நிலையில் ஒரு உந்துதல் வர நான் விநாசியர் அருகில் போனேன்.

 

விடுங்கோ நான் இழுக்கிறன் என வாங்க அவர் சொன்னார் இல்லை தம்பி உமக்கு பழக்கம் இல்லை குழாய் கண்டில பட்டுட்டா மரம் ஒடிஞ்சு போடும் என்று. சரி என அவருடன் சேர்ந்து தூக்கி கொடுத்து விட்டு கிணற்றடிக்கு வந்து வாட்டர் பம்மை இழுக்க வேணும் என்று சொன்னார். ஓம் எண்டு அவரோட வந்தன். தம்பி நோஷால் ஊசியை குறை நான் இழுக்கும்போது சொக்கை விடு வில்லியம் பம்முக்கு அப்ப நல்ல மதிப்பு தம்பி 15 வருடம் மேல கிடக்கு நமக்கு சோறு போடுது எனக்கு இதுகும் ஒரு பிள்ளைமாதிரி.

 

சரி அதில போய் சின்னவள் வேல்மூடி சூடாக்கி வைத்து இருப்பால் எடுத்து வா.. பக்கத்தில ஒரு சின்ன சிங்கர் சூப்பி இருக்கும் அதை கவனமா கொண்டுவா.. நான் கிணத்துக்குள் குழாய் இறக்கிறன்... சரி என்று நானும் கிளம்பி போய் எடுத்து வந்து சேர அவரும் தனது வேலை முடிச்சு நின்றார். நான் இழுக்கிறன் வேல்மூடிய காபிறேட்டருக்கு நேர பிடிச்சு ஒரு துளி பெற்றோல் விடு, புகை எழும்பும்போது சொக்கை கையை விடு, சரியா கவனம் பெற்றோல் இவளவுதான் இருக்கு என்று சொல்லி இழுத்தார்..

 

என் மனதில இவளவுனாலும் என்ன எழும்பி குழாய் போட்டு பம்மை இழுக்குறது எல்லாம் ஒரு வேலையா என அசால்ட்ட நினைத்த எனக்கு அவருடன் சேர்ந்து செய்த ஒரு இரண்டு மணித்தியால வேலை நாக்கை தள்ளி நிண்டுது..இவளவு கடினம்..வில்லியம் ஓடினாதான் இந்தமாதம் யூரியா வாங்கலாம் மிளகாய் பழுக்கிற நேரம் என சொன்னபடி சிவனே என்று கடவுளையும் அழைத்தபடி இழுத்தார் ..ஒன்று இரண்டு என போய் ஆறு ஏழு தடவை இழுத்தும் வில்லியம் இயங்க வில்லை.. களைத்து போய் ஒருவாளி தண்ணி அள்ளி குடித்து விட்டு என்ன செய்வது என தெரியாமல் நிக்க நான் கேட்டேன் நான் இழுக்கவா நீங்க பெற்றோல் காட்டுங்க என.. நானும் உள்ள பலம் எல்லாம் சேர்த்து இழுத்து முடியாமல் இருந்திட்டன்..

 

மனதின் ஒரு மூலையில் ஒரு கணம் இவளவு வேலையயும் இவர்கள் தனியத்தானே செய்தார்கள் தோட்டம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அப்பொழுதான் புரிஞ்சுது.. சந்தையில் மரக்கறியை எடுத்து வைத்துக்கொண்டு நக்கல் கதையும் நளின விலையும் கேட்கும் எமக்கு அதன் பின்னால் இருக்கும் வலிகள் புரிவது இல்லைதான்.. சரி செடி வாடுது இவள் சின்னவள் எப்ப பள்ளியால வருவாள் என தெரியாமல் இருக்கு என விநாசியர் ஒழுங்கையை எட்டி பார்த்தார்..

 

 

அவளும் சரியா வர என்ன அப்பா இன்னும் தண்ணி இறைக்க வில்லையா என கேட்டபடி கிணத்தடிக்கு வந்தாள்.. இல்லை அம்மா வில்லியம் ஓடுறான் இல்லை என்ன எண்டு பார் என்றபடி விநாசியர் சொல்ல அவனுக்கு நான் இரண்டு தட்டு தட்டுறன் பொறுங்கோ என அந்த சாவி என்று மகள் கேட்க எனக்கு தலை விறைச்சு போச்சு.. என்ன நடக்கு இங்க என நாங்க இரண்டு ஆம்பிளைகள் முடியாமல் நிக்கிறம் இவா எப்படி செய்ய போறா என எனக்குள் கேட்டபடி நிக்க..

 

விறு விறு என சாவியை எடுத்து பிழக்கை கழட்டி நெருப்பில போடுட்டு இருங்க அப்பா உடுப்பை மாற்றி வாறன் எண்டு போனாள் வந்து பிளக்கை தட்டி எடுத்து எதோ ஒரு கம்பியால அப்டி இப்டி தட்டி போட்டு சூட்டோட பூட்டிட்டு வயரை கொளுவிபோட்டு தள்ளுங்க அப்பா என்று விட்டு கயிறை சுற்று ஒரு இழுவை... வில்லியம் ஓலம் எடுத்து கத்த கம்பிலிங்க எடுத்து குழாய் இறுக்கி விடுங்கோ என்றபடி அசால்ட்டா ஓவரு கொமாண்டும் கொடுத்தபடி அவள் மண் வெட்டிய கையில் எடுக்கும் போது எனது மனநிலை குதிச்சிடு நீ கிணத்தில் என்பது போல இருந்துது...

 

என்ன ஒரு அனுபவ முதிர்ச்சி என யோசிச்சு கொண்டு இருக்க விநாசியர் என்ன தம்பி எப்படி அவளுக்கும் வில்லியத்துக்கும் ஒரு வயது அதுதான் அவளுக்கு அவனை பற்றி நல்ல தெரியும் என்று சொல்லி சிரித்த படி போக நாங்கள் வீரவசனம் வெட்டி பேச்சிலும் நாட்கள் கழித்தோம் ஒழிய உருப்படியா ஒரு வேலையும் செய்யவும் இல்லை பழகவும் இல்லை இன்றில இருந்து அதிகாலையில் எழுவது விநாசியர் உடன் தோட்டம் செய்ய பழகுவது மரக்கறி கொண்டுபோய் சந்தையில் கொடுப்பது இனி நான் தான் செய்ய வேணும் என்கிற உறுதியுடன் வில்லியம் பம்மை முறைத்து பார்த்த படி நகர்ந்து போனேன்..

 

என்னுள் ஆயிரம் மாற்றம் தெரிய தொடங்கியது வன்னி மனிதர்களை பக்குவபடுத்தியது அறிவாளிகள் ஆக்கியது சுய சிந்தனையை போர் சூழல் தூண்டியும் விட்டது எமக்கு நாமே என்கிற தத்துவத்தை சொல்லமல் சொல்லி போனது காலம்..

 

Link to comment
Share on other sites

கிராமியத் தமிழில் வில்லியத்திற்கு கார்பன் பிடித்ததை எப்படி சீராகியது என்று சொல்லும் கதையழகு தனியழகு . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் அஞ்சரன் தொடருங்கோ :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிச்சுபடிச்சன் அண்ணா... அருமை...

 

 

. அதிலும் பாருங்கோ எந்த ரோட்டில பிரச்சாரம் நடக்கு எண்டு தெரிஞ்சு இடையில உள்ள குச்சு ஒழுங்கை எல்லாம் போய் சுற்றி போறதில எங்களுக்கு நாங்கள் தான் கில்லாடிகள்

 

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..

 

 

போறபோக்கில இதென்ன நைசாய் .... :D

Link to comment
Share on other sites

ரசிச்சுபடிச்சன் அண்ணா... அருமை...

 

 

 

போறபோக்கில இதென்ன நைசாய் .... :D

 

பயல் கோர்த்து விட்டுட்டு போகுது நன்றி ;)

 

நன்றி கோமகன் அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
இந்தக் கருத்திற்காகவே இந்தக் கதைக்கு ஒரு பச்சை கொடுக்கலாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டக் கலையையும் தோட்டம் செய்பவர்களின் ஓர்மத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியமைக்கு நன்றிகள் அஞ்சரன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றிகள் .....நாங்களும் மெசின் போட்டு புல்லுவெட்டிபோட்டுத்தான் சாவுஅடைந்தவர்களுக்கு வணக்கம் போடுகிறோமாக்கும்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 -----

இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்..

-----

 

25 - 30 விருப்பப் புள்ளிகள் பெற்று யாழ்களப் பதிவுகளில் முன்னணியில் இருந்திருக்க வேண்டிய பதிவு, மேற் கூறிய ஒற்றை வரியால்... இழந்து போய் நிற்கிறது.

 

Link to comment
Share on other sites

அண்ணா நல்லாய் எழுதியிருக்கிறீர்கள்.
நான் அறியவே இதில் பல சம்பவங்கள் உண்மை அண்ணா 
Link to comment
Share on other sites

25 - 30 விருப்பப் புள்ளிகள் பெற்று யாழ்களப் பதிவுகளில் முன்னணியில் இருந்திருக்க வேண்டிய பதிவு, மேற் கூறிய ஒற்றை வரியால்... இழந்து போய் நிற்கிறது.

 

 

புள்ளிகள் விருப்பிக்கள் முக்கியம் இல்லை அண்ணா நாம் காணும் உண்மை இருக்கு அது போதும் இணையங்கள் இல்லாவிட்டால் எவருக்கும் எண்ணிக்கை தெரியாது என்பது புரிந்தால் சரி .

Link to comment
Share on other sites

நல்ல ஒரு பதிவு ஒன்று. நடிக்காமல் நீங்கள் நீங்களாகவே வாழ்கிறவர் என்பது தெரிகிறது. இதூதூதூ பல பொய்விழம்பிகளும் வேடாதாரிகளும் நிறைந்த இடம். இந்த பொய்விழம்பிகளுக்கும் வேடாதாரிகளுக்கும் மசிந்துபோய் உங்கள் த்னிதன்மைகலை தொலைக்காமல் நீங்கள் நீங்களாகவே இருக்கவேணும். நெஞ்சில் துணிவும் இன்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய் சொல்லில் வீரரடி. புரிந்தால் சரி அஞ்சரன்.

Link to comment
Share on other sites

நல்ல ஒரு பதிவு ஒன்று. நடிக்காமல் நீங்கள் நீங்களாகவே வாழ்கிறவர் என்பது தெரிகிறது. இதூதூதூ பல பொய்விழம்பிகளும் வேடாதாரிகளும் நிறைந்த இடம். இந்த பொய்விழம்பிகளுக்கும் வேடாதாரிகளுக்கும் மசிந்துபோய் உங்கள் த்னிதன்மைகலை தொலைக்காமல் நீங்கள் நீங்களாகவே இருக்கவேணும். நெஞ்சில் துணிவும் இன்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய் சொல்லில் வீரரடி. புரிந்தால் சரி அஞ்சரன்.

 

என் சுயத்தை எவருக்கும் இழக்கேன் அவ்வாறு இழந்தால் நான் அன்று இறத்து இருப்பேன் .தமிழ் தேசியவாதிகளுக்குதான் மதிப்பு என்றால் நான் துரோகியா வாழ்த்திட்டு போகிறேன் தலைவரை முன்னிறுத்தி பிழைக்கும் அவசியம் எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் பிச்சை எடுப்பேன் எவருக்கும் செம்புதுக்கேன் ஜால்ரா போடமாட்டேன் .

நன்றி அண்ணா .

Link to comment
Share on other sites

என் சுயத்தை எவருக்கும் இழக்கேன் அவ்வாறு இழந்தால் நான் அன்று இறத்து இருப்பேன் .தமிழ் தேசியவாதிகளுக்குதான் மதிப்பு என்றால் நான் துரோகியா வாழ்த்திட்டு போகிறேன் தலைவரை முன்னிறுத்தி பிழைக்கும் அவசியம் எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் பிச்சை எடுப்பேன் எவருக்கும் செம்புதுக்கேன் ஜால்ரா போடமாட்டேன் .

நன்றி அண்ணா .

 

சுகம் வரும் ஆள் தப்பாது :lol::D:icon_idea: .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே ஒரு நீண்ட நினைவுச் சுழலில் சிக்கவைத்துள்ளீர்கள். வீட்டில் உள்ள எல்லாருமே ஆண்,பெண் பேதம் பாராமல் தோட்டத்தில் வேலை செய்வதாலோ என்னவோ, தோட்டத்தில் விளைவது போலவே வீட்டிலும் மகிழ்ச்சிப்பூக்களை அறுவடை செய்யலாம் அந்தளவுக்கு தோட்டமும் எம் வாழ்வில் நிலைத்து நீடித்த ஒன்று. வீட்டில் இப்பவும் ஒரு வில்லியர்ஸ் மெசின் நிக்கிது.

 

பொருளாதாரத்தடை நிலவிய நேரம் பெற்றோல் எல்லாம் இல்லை. சூட்டுக்கோல் தான் காய்ச்சவேனும். பனிக்கு காலமை விறகெல்லாம் ஈரலிப்பா இருக்கும் நான் போய் நல்ல காய்ந்த தடிக்குச்சியள், பன்னாடை இல்லாட்டி காஞ்ச புல்லுகளை எல்லாம் எடுத்து  சூட்டுக்கோல் காய்ச்ச அண்ணா வந்து மெசினைப் பூட்டுவான், 1998ம் ஆண்டு அண்ணா வெளிநாடு போக என்று கொழும்புக்கு வந்தாப் போலை நானும் அப்பாவும் தான் தோட்டம். வயராலை தண்ணி போச்சுது என்றால் சாணகத்தை உருண்டையாக்கி வயறுக்குள்ளை போட்டிட்டு பேந்து தண்ணிவிட ஒழுகாமல் நிக்கும். அப்படியும் ஒழுகினால் கார் ரியூப்பிலை வாசர் வெட்டி வைக்க சரி ..

 

கோடைக்காய்,மாரிக்காய் இடையிலை பொயிலைக்கன்று,மிளகாய், கத்தரி என்று தோட்டத்திலை கால் வைக்காத நாள் இருக்காது. தோட்டம் இல்லாட்டி கூட மாடு மேய்க்க போய்விடுவேன். மாட்டை தறையிலை கட்டிப்போட்டு பொடியள் வருவாங்கள் காட்ஸ் அடிக்கிறதும். கள்ளக்கோழி பிடிச்சு  கோழிப்புக்கை போடுறதும் என்று வார்த்தைகளில் சொல்ல முடியாதளவு பசுமையான நாட்கள் அவை. ஓ/எல் பாஸ் பண்ணி ஏ/ல் போகும் வரைக்கும் தோட்டம் தான். பிறகு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்பாவை தனிய விடவும் விருப்பம் இல்லை அதன் பிறகு தறையைக் குத்தகைக்குக் குடுத்தோம் இப்ப கொஞ்சம் சும்மா கிடக்கு.

பழைய நினைவுகளைக் கிழறிச் சென்ற பதிவு.

 

இடையிடையே நகைச்சுவை இழையோட நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ப்றோ.. :)


என் சுயத்தை எவருக்கும் இழக்கேன் அவ்வாறு இழந்தால் நான் அன்று இறத்து இருப்பேன் .தமிழ் தேசியவாதிகளுக்குதான் மதிப்பு என்றால் நான் துரோகியா வாழ்த்திட்டு போகிறேன் தலைவரை முன்னிறுத்தி பிழைக்கும் அவசியம் எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் பிச்சை எடுப்பேன் எவருக்கும் செம்புதுக்கேன் ஜால்ரா போடமாட்டேன் .

நன்றி அண்ணா .

 

கூல் ப்றோ.. இப்ப எதுக்கு தலைவர்,புலிகள் எல்லாம்? பாவம் அந்தாள், அவரை விட்டிடுங்கப்பா ... :lol::icon_mrgreen::icon_idea:


MARK12FRONT.JPG

 

வில்லியம் ஆ? வில்லியர்ஸ் ஆ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு கதை!

 

இரை மீட்டும் மாடொன்றின் நிலையில் நின்று, மீண்டும், மீண்டும் உள்ளே சென்ற இரையை மீட்டெடுத்து, அசை போட்டுப் பார்ப்பது தானே, புலம் பெயர்ந்தவனின் வாழ்க்கை!

 

கதை சொல்லியால், ஸ்ரார்ட் பண்ண முடியாத இயந்திரத்தை, ஒரு பெண் ஸ்ரார்ட் பண்ணியதை, கதை சொல்லிக்கு நோகாத விதத்தில், வினாசியர் 'கையாண்ட விதம்' எமது மண்ணின் விழுமியத்தைக் காட்டி நிற்கின்றது!

 

மற்றது மாவீரர்களுக்கு வணக்கம் சொல்வது 'ஒவ்வொருவரது' தனிப்பட்ட விருப்பம்! அவர்களுக்குத் தனிப்பட்ட காரணங்களும் இருக்கும்! எனது உறவுகள், என்னுடன் ஒன்றாகப் படித்தவர்கள், எனது நட்புகளின் சொந்தங்கள் எனப் பலரின் பெயர்களை, இந்தத் திரியில் காண்கிறேன்!

 

தனது வாகனம் செல்லும் பாதையில், ஒரு கோவில் வரும்போது, தனது 'கண்ணைக்' கையினால் தொட்டு ஒற்றிக்கொள்ளும் சாரதியில் நிலையில் தான் நான் உள்ளேன்!

 

அவன் ஏன் அதைச் செய்கிறான் என்று நான் காரணம் தேடியதில்லை! அதில் அவனுக்கு ஒரு திருப்தி! அதே போலவே, இதில் எனக்கும் ஒரு திருப்தி!

 

தொடர்ந்து எழுதுங்கள்! ஒரு நல்ல கதை சொல்லி உங்களுக்குள் மறைந்திருக்கிறான்!

 

Link to comment
Share on other sites

அப்படியே ஒரு நீண்ட நினைவுச் சுழலில் சிக்கவைத்துள்ளீர்கள். வீட்டில் உள்ள எல்லாருமே ஆண்,பெண் பேதம் பாராமல் தோட்டத்தில் வேலை செய்வதாலோ என்னவோ, தோட்டத்தில் விளைவது போலவே வீட்டிலும் மகிழ்ச்சிப்பூக்களை அறுவடை செய்யலாம் அந்தளவுக்கு தோட்டமும் எம் வாழ்வில் நிலைத்து நீடித்த ஒன்று. வீட்டில் இப்பவும் ஒரு வில்லியர்ஸ் மெசின் நிக்கிது.

 

பொருளாதாரத்தடை நிலவிய நேரம் பெற்றோல் எல்லாம் இல்லை. சூட்டுக்கோல் தான் காய்ச்சவேனும். பனிக்கு காலமை விறகெல்லாம் ஈரலிப்பா இருக்கும் நான் போய் நல்ல காய்ந்த தடிக்குச்சியள், பன்னாடை இல்லாட்டி காஞ்ச புல்லுகளை எல்லாம் எடுத்து  சூட்டுக்கோல் காய்ச்ச அண்ணா வந்து மெசினைப் பூட்டுவான், 1998ம் ஆண்டு அண்ணா வெளிநாடு போக என்று கொழும்புக்கு வந்தாப் போலை நானும் அப்பாவும் தான் தோட்டம். வயராலை தண்ணி போச்சுது என்றால் சாணகத்தை உருண்டையாக்கி வயறுக்குள்ளை போட்டிட்டு பேந்து தண்ணிவிட ஒழுகாமல் நிக்கும். அப்படியும் ஒழுகினால் கார் ரியூப்பிலை வாசர் வெட்டி வைக்க சரி ..

 

கோடைக்காய்,மாரிக்காய் இடையிலை பொயிலைக்கன்று,மிளகாய், கத்தரி என்று தோட்டத்திலை கால் வைக்காத நாள் இருக்காது. தோட்டம் இல்லாட்டி கூட மாடு மேய்க்க போய்விடுவேன். மாட்டை தறையிலை கட்டிப்போட்டு பொடியள் வருவாங்கள் காட்ஸ் அடிக்கிறதும். கள்ளக்கோழி பிடிச்சு  கோழிப்புக்கை போடுறதும் என்று வார்த்தைகளில் சொல்ல முடியாதளவு பசுமையான நாட்கள் அவை. ஓ/எல் பாஸ் பண்ணி ஏ/ல் போகும் வரைக்கும் தோட்டம் தான். பிறகு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்பாவை தனிய விடவும் விருப்பம் இல்லை அதன் பிறகு தறையைக் குத்தகைக்குக் குடுத்தோம் இப்ப கொஞ்சம் சும்மா கிடக்கு.

பழைய நினைவுகளைக் கிழறிச் சென்ற பதிவு.

 

இடையிடையே நகைச்சுவை இழையோட நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ப்றோ.. :)

 

கூல் ப்றோ.. இப்ப எதுக்கு தலைவர்,புலிகள் எல்லாம்? பாவம் அந்தாள், அவரை விட்டிடுங்கப்பா ... :lol::icon_mrgreen::icon_idea:

MARK12FRONT.JPG

 

வில்லியம் ஆ? வில்லியர்ஸ் ஆ????

 

வில்லியர்ஸ் தான் சரி அண்ணா நன்றி ஜீவா அண்ணே .

அருமையான ஒரு கதை!

 

இரை மீட்டும் மாடொன்றின் நிலையில் நின்று, மீண்டும், மீண்டும் உள்ளே சென்ற இரையை மீட்டெடுத்து, அசை போட்டுப் பார்ப்பது தானே, புலம் பெயர்ந்தவனின் வாழ்க்கை!

 

கதை சொல்லியால், ஸ்ரார்ட் பண்ண முடியாத இயந்திரத்தை, ஒரு பெண் ஸ்ரார்ட் பண்ணியதை, கதை சொல்லிக்கு நோகாத விதத்தில், வினாசியர் 'கையாண்ட விதம்' எமது மண்ணின் விழுமியத்தைக் காட்டி நிற்கின்றது!

 

மற்றது மாவீரர்களுக்கு வணக்கம் சொல்வது 'ஒவ்வொருவரது' தனிப்பட்ட விருப்பம்! அவர்களுக்குத் தனிப்பட்ட காரணங்களும் இருக்கும்! எனது உறவுகள், என்னுடன் ஒன்றாகப் படித்தவர்கள், எனது நட்புகளின் சொந்தங்கள் எனப் பலரின் பெயர்களை, இந்தத் திரியில் காண்கிறேன்!

 

தனது வாகனம் செல்லும் பாதையில், ஒரு கோவில் வரும்போது, தனது 'கண்ணைக்' கையினால் தொட்டு ஒற்றிக்கொள்ளும் சாரதியில் நிலையில் தான் நான் உள்ளேன்!

 

அவன் ஏன் அதைச் செய்கிறான் என்று நான் காரணம் தேடியதில்லை! அதில் அவனுக்கு ஒரு திருப்தி! அதே போலவே, இதில் எனக்கும் ஒரு திருப்தி!

 

தொடர்ந்து எழுதுங்கள்! ஒரு நல்ல கதை சொல்லி உங்களுக்குள் மறைந்திருக்கிறான்!

 

ஒரு உதாரணம் ஆக சொல்லபட்டது அவ்வளவுதான் நன்றி அண்ணா .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வில்லியர்ஸ் தான் சரி அண்ணா நன்றி ஜீவா அண்ணே .

 

என்னையும் அண்ணாவாக்கிப்போட்டிங்களா? நான் சின்னப்பொடியனப்பா ... :o:icon_idea:

Link to comment
Share on other sites

25 - 30 விருப்பப் புள்ளிகள் பெற்று யாழ்களப் பதிவுகளில் முன்னணியில் இருந்திருக்க வேண்டிய பதிவு, மேற் கூறிய ஒற்றை வரியால்... இழந்து போய் நிற்கிறது.

 

யாழில் இணைந்த ஒரு புதிய பதிவாளர் மிக குறுகிய நாளிலேயே பலரின் பாராட்டையும் பலபார்வைகளையும் பதினாலு விருப்ப புள்ளிகளையும் பெற்று முன்னணி பதிவாளர் ஆகி உள்ளீர்கள் அஞ்சரன். வாழ்த்துக்கள்.இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வாசகர்கள் நல்ல பதிவுகளையும் உண்மைகளையும் மாரித்தவக்கைபோல் கத்தாமல் அமைதியாக அறிந்துவைத்துள்ளார்கள் என்பதே. :icon_idea:  :)

Link to comment
Share on other sites

நன்றி கதாநாயகன் :(

Link to comment
Share on other sites

நல்ல கதை அண்ணா. விவசாயிகளின் பிரயாசத்தை எம்மில் பலரும் கண்டுகொள்வதில்லை என்பதை கூறியவிதம் அழகு. உங்களிடம் இருந்து இன்னும் அதிக ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நன்றி தும்பளையான் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.