Jump to content

புலிப்பாய்ச்சல் அனுபவம்


தயா

Recommended Posts

நல்ல நகைச்சுவை உணர்வு சாந்தி.  புலிப்பாய்ச்சல் சண்டையோ இல்லை இராணுவம் ஊருக்குள் நகர்ந்து ஒருவாரம் போனதின் பின்னர்  யாழ்மாவட்ட தளபதி கரிகாலன்  பஜிரோவில் சுற்றிப்பார்க்க போனாரா.?   

 

காத்து கரிகாலண்ணா ஊரைச்சுத்திப் பாக்க ஊருலா போகேல்ல அவர் ஒரு தளபதியாக துணிச்சல் மிக்க வீரனாக போனார். அதைத்தான் அதே சமரில் பங்கெடுத்த போராளிகள் தங்கடை வாயலை சொல்லீனம். இந்த சண்டையில் நின்றவர்களுக்கு இது தெரியும். ஆனால் பலர் இங்கு வாயை மூடியிருக்கினம். வாணன்கூட கரிகாலண்ணாவின் பஜீரோ அடிபட்டது பற்றி அறிந்திருப்பார் கட்டாயம். ஏன் வம்பெண்டு பேசாமல் இருக்கிறார் என நினைக்கிறேன்.

 

 

காத்தாக வந்து சுனாமிச் சூறாவழியாகி காத்து என்னை கலைக்காதையுங்கோ நான் பாவம். :D

இங்கு தொடர்ந்து புலிப்பாய்ச்சல் புலிகளின் படையணி வேறுபாடுகள் கட்டமைப்புகள் பற்றி எழுதும் காளமேகம் உங்களுக்கு கரிகாலண்ணாவின் பஜீரோ தாக்குதல் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply

காத்து கரிகாலண்ணா ஊரைச்சுத்திப் பாக்க ஊருலா போகேல்ல அவர் ஒரு தளபதியாக துணிச்சல் மிக்க வீரனாக போனார். அதைத்தான் அதே சமரில் பங்கெடுத்த போராளிகள் தங்கடை வாயலை சொல்லீனம். இந்த சண்டையில் நின்றவர்களுக்கு இது தெரியும். ஆனால் பலர் இங்கு வாயை மூடியிருக்கினம். வாணன்கூட கரிகாலண்ணாவின் பஜீரோ அடிபட்டது பற்றி அறிந்திருப்பார் கட்டாயம். ஏன் வம்பெண்டு பேசாமல் இருக்கிறார் என நினைக்கிறேன்.

 

 

கரிகாலன் வண்டி அடிபட்டது புலிப்பாய்ச்சல் சண்டை நடந்த இடத்திலை எண்டா இப்பவும் சொல்கிறீர்கள்.

 

யாழ்மாவட்ட தளபதிக்கு சண்டை தொடங்கி ஒரு வாரம் ஆனதும்,  இராணுவம் அவரின் பகுதிக்கை வந்தது கூடவா தெரிய இல்லை எண்டுறீயள்.   உங்களுக்கு கதை சொன்ன தளபதி உண்மையிலை தளபதி தானா.?    

Link to comment
Share on other sites

கரிகாலன் வண்டி அடிபட்டது புலிப்பாய்ச்சல் சண்டை நடந்த இடத்திலை எண்டா இப்பவும் சொல்கிறீர்கள்.

 

யாழ்மாவட்ட தளபதிக்கு சண்டை தொடங்கி ஒரு வாரம் ஆனதும்,  இராணுவம் அவரின் பகுதிக்கை வந்தது கூடவா தெரிய இல்லை எண்டுறீயள்.   உங்களுக்கு கதை சொன்ன தளபதி உண்மையிலை தளபதி தானா.?    

முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையிலேயே கரிகாலண்ணாவின் சம்பவம் நடந்தது. இங்கு புலிப்பாய்ச்சல் என மாறி எழுதிவிட்டேன். மன்னியுங்கள் உறவுகளே. வாணன் சுட்டிக்காட்டிய போதுதான் ஞாபகம் வந்தது.

 

கரிகாலண்ணாவின் பஜீரோ மீதான சம்பவம் திகதிவாரியாக தெரிந்தவர்களில் வாணனும் ஒருவர். காத்து காத்தாய் வந்து சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையிலேயே கரிகாலண்ணாவின் சம்பவம் நடந்தது. இங்கு புலிப்பாய்ச்சல் என மாறி எழுதிவிட்டேன். மன்னியுங்கள் உறவுகளே. வாணன் சுட்டிக்காட்டிய போதுதான் ஞாபகம் வந்தது.

 

கரிகாலண்ணாவின் பஜீரோ மீதான சம்பவம் திகதிவாரியாக தெரிந்தவர்களில் வாணனும் ஒருவர். காத்து காத்தாய் வந்து சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

 

 

 

சரி பிள்ளை  அதை விட பெரிய ஓட்டை ஒண்டு இருகே. ?  அங்கை கரிகாலன் அண்ணை வந்த  பஜிரோவை நிச்சயமாக RCL  ஆலைதான் அடிச்சவனோ.?   RPG , LAW , B-10  எண்டு வேறை எதாலையும் அடிக்க இல்லை எண்டு உங்கட தளபதிக்கு எப்பிடியாம் தெரியும்.?

 

அடிவிழும் போது எதாலை அடிச்சவன் எண்டு பாத்திட்டு தான் ஓடி வந்தவரோ கரிகாலன் அண்ணை.? 

 

கரிகாலன் பஜிரோ எந்த இடத்திலை அடிபட்டது எண்டு உங்கட தளபதியை கேட்டு பாக்க இல்லையோ.?  இடம் தெரியாது.? 

 

*** எனக்கு உங்கட கதையிலை மயிர் புடுங்கிற எண்ணம் இல்லை பாருங்கோ ஆனால் நீங்கள் சொல்லுறது கூட பொய் எண்டு யாராலையும் நிறுவ முடியும்.***  விளங்கினால் சரி இல்லை எண்டால் இன்னும் உதாரணங்களை சொல்கிறன். 

 

சண்டை , வேட்டை , கடல் பயணம் மூண்டிலையும் பாத்ததுகளை அதிலை பங்கு பெறும் ஆக்கள் சொல்வதை வைச்சு தான் தகவல்கள் பெறலாம்.  அப்ப நடந்த சம்பவங்கள் திரும்பவும் எப்போதும்  நடப்பதில்லை.  

Link to comment
Share on other sites

தயா நீங்கள் சொல்லுவதை நம்புவது என்பதை விட  ஏற்றுக்கொள்வது  கடினமாக இருக்கிறது.

 

 

 

இது தான் உண்மை நிலமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுசா வாசிச்சதும் தெளிவு வந்ததோ இல்லையோ, கண்ணைக்கட்டினது  தான் மிச்சம்.. :o

 

யாழில் முன்னாள் போராளிகளின் அதிகரிப்பு மட்டும் ஏனோ சந்தேகத்தையே விதைக்குது... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கருணாகரன்,நிலாந்தன்,யோ.கர்ணன் எழுதியதையும் வாசித்தேன்.வவுனியா முகாமில் சகோதரி உட்பட பலருடன் ந்நெரடியாக 2009ல் உரையாடி உள்ளேன். 300 பேர் முள்ளிவாய்க்காலில் இருந்து இங்கு வந்துள்ளார்கள். அவர்களுடனும் உரையாடி உள்ளேன். 
 
புலிகளின் குறிப்பிட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களுக்குள் தான் ரகசியங்கள் காக்கப்படும். வெளியில் உள்ள போராளிகளுக்கு எல்லா விடயங்களும் தெரிய வாய்ப்பில்லை.

 

 

நுணா சுகன் எழுதியதில் இருந்து நான் விளங்கிக் கொண்டது யாழில் எழுதுபவர்கள் ஒருவரது கருத்தின் நம்பகத்தன்மையைப் பார்க்காமல் யார் சொல்கிறார்கள் என்று பார்த்துத் தான் அவர்களுடைய கருத்தை ஏற்கிறார்கள் சுருக்கமாக சொன்னால் உண்மையை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று சுகன் சொல்கிறார்.
 
நீங்கள் அதை ஆமோதித்து பச்சை குத்தினீங்கள்[ஒருவர் இரு ஜடியில் வந்து பச்சை குத்தி இருக்கார் :lol: ]நான் சிலருடைய பெயரைச் சொல்லி அவர்கள் சொல்வதை ஏற்பீர்களாக என்று கேட்டதும் ஊருல தங்கச்சி இருக்கினம் அவை இப்படி சொன்னவை என்று சொல்கிறீர்கள்.அப்படியாயின் எப்படி சுகனின் கருத்தோடு உங்கள் கருத்து ஒத்துப் போகுது என்று எனக்கு விளங்கவில்லை :unsure:
 
தயாண்ணா சொல்கிறது உண்மை என்டால் நிலாந்தன் போன்ற ஆட்கள் சொல்வதும் உண்மையாத் தான் இருக்கும்.எல்லாரும் தாங்கள் கண்ட பக்கத்தை கொஞ்சம் கூட்டித் தான் எழுதுவினம்.எல்லோரும் எல்லாத்தையும் பாத்திருக்க முடியாது அல்லவா. உங்கட தங்கச்சிக்கு தெரிஞ்சது அவர்களுக்கு தெரிந்திருக்காது.அவர்களுக்கு தெரிந்தது உங்கட தங்கச்சிக்கு தெரிந்திருக்காது.எல்லாரும் தாங்கள் பார்த்ததை,நடந்ததை எழுதும் போது அவர்கள் எழுதுவது மட்டும் பொய் என்று உங்களால் எப்படி சொல்ல முடியும்?
 
கனடாவில் 300 பேர் புலியில் இருந்து போட்டு தப்பி வந்திருக்கினமா? அவையிட்ட கேட்டுச் சொல்லுங்கோ எப்படி தலைவரை விட்டுப் போட்டு அவர்களால் மட்டும் தப்பி வர முடிஞ்சது என்று :)  அடுத்ததாக புலி  தான் செய்ததும் பிழை தான் என்று எப்பவாவது ஒத்துக் கொண்டு இருக்கா
 
 
 
வொல்கனோ இன்னும் 30 வருடத்தால பிரபாகரனை துரோகி என்று ஆதாரங்கள் வைச்சுக் கொண்டு எழுதுவினம் அதை அப்படியே பேசாமல் நொட்டை சொல்லாமல் ஏற்றுக் கொள்வோமா?
Link to comment
Share on other sites

தலை சொன்னது உண்மையாக இருக்கலாம். காளமேகம் சொல்வதிலும் உண்மைகள் இருக்கலாம்.

 

விதி, விலக்குகள் எப்போதும் உண்டு. அதேசமயம் பிரமையும் உண்டு.

 

90களில் நாம் கொக்குவிலில் பொற்பதி வீதியில் இருந்தபோது அப்பா ஒருநாள் வந்து தான் பிரபாகரன் ஒரு பஜரோவில் போவதை பார்த்தேன் என்று கூறினார். உண்மையாக இருக்கலாம், பிரமையாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் உருவத்தில் ஒத்த வேறு யாரையும் கண்டு அவ்வாறு எண்ணி இருக்கலாம். உதாரணத்திற்கு பேபி சுப்பிரமணியம் அவர்களிற்கு ஒத்த ஆடைகளை அணிவித்தால் தூரத்தில் பார்க்கும்போது த.வி.பு தலைவர் என யாரும் எண்ணலாம்.

 

யாழ் கருத்துக்களத்தில் குத்தி, முறிந்து மனத்தாபப்பட்டு சாதிக்கப்படக்கூடியது என்ன என்றுதான் விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா புலிகளே ஆயுதத்த மௌனிச்சு தங்கள் அமைப்ப கலைச்சு 4 வருஷம் ஆச்சு நீங்கள் இன்னும் சண்டை போட்டுக்கொண்டு...

 

ஆயுதத்தை மெளனிச்சாங்க சரி. அதெப்ப அமைப்பை கலைச்சாங்க. உங்க கிட்ட சொல்லிட்டா??! :)

 

நம்ம மக்கள்.. சில பேருக்கு தாங்கள் பத்திரமா இருக்க.. மற்றவன் போராடிக்கிட்டே இருக்கனுன்னு மட்டுமே தேணுது. அது தான் எப்படின்னே புரியல்ல..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பாய்ச்சல் பற்றி விடுதலைப்புலிகள் ஏடு அன்று மக்களோடு பகிர்ந்து கொண்டதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

 

http://www.eelamhomeland.com/vp_paper/V_P_59.pdf

 

எதுக்கு நான் பெரிசு நீ பெரிசுன்னு அடிபடுறீங்க. கடந்த கால முக்கிய போரியல் நிகழ்வுகளை புலிகளே பதிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்.

 

அதற்கு மேலதிகமாக.. அனுபவப் பகிர்வுகளை எமது போராட்ட விழுமியம் பிசகாமல் சொல்ல விளைபவர்களுக்கு வழிவிடுதலே நாகரிகம்..! :):icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டுக்கு... அருகில் 500 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினர் மீது, தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது...
தலைவர் பிரபாகரனை வீட்டிற்கு முன்னால்... மிக அருகில் கண்டதாக, அப்பா சொன்னவர்.
ஆன படியால்... தயா சொல்வதில் உண்மை உள்ளதை, ஏற்றுக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

 

நுணா சுகன் எழுதியதில் இருந்து நான் விளங்கிக் கொண்டது யாழில் எழுதுபவர்கள் ஒருவரது கருத்தின் நம்பகத்தன்மையைப் பார்க்காமல் யார் சொல்கிறார்கள் என்று பார்த்துத் தான் அவர்களுடைய கருத்தை ஏற்கிறார்கள் சுருக்கமாக சொன்னால் உண்மையை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று சுகன் சொல்கிறார்.
 
நீங்கள் அதை ஆமோதித்து பச்சை குத்தினீங்கள்[ஒருவர் இரு ஜடியில் வந்து பச்சை குத்தி இருக்கார் :lol: ]நான் சிலருடைய பெயரைச் சொல்லி அவர்கள் சொல்வதை ஏற்பீர்களாக என்று கேட்டதும் ஊருல தங்கச்சி இருக்கினம் அவை இப்படி சொன்னவை என்று சொல்கிறீர்கள்.அப்படியாயின் எப்படி சுகனின் கருத்தோடு உங்கள் கருத்து ஒத்துப் போகுது என்று எனக்கு விளங்கவில்லை :unsure:
 
தயாண்ணா சொல்கிறது உண்மை என்டால் நிலாந்தன் போன்ற ஆட்கள் சொல்வதும் உண்மையாத் தான் இருக்கும்.எல்லாரும் தாங்கள் கண்ட பக்கத்தை கொஞ்சம் கூட்டித் தான் எழுதுவினம்.எல்லோரும் எல்லாத்தையும் பாத்திருக்க முடியாது அல்லவா. உங்கட தங்கச்சிக்கு தெரிஞ்சது அவர்களுக்கு தெரிந்திருக்காது.அவர்களுக்கு தெரிந்தது உங்கட தங்கச்சிக்கு தெரிந்திருக்காது.எல்லாரும் தாங்கள் பார்த்ததை,நடந்ததை எழுதும் போது அவர்கள் எழுதுவது மட்டும் பொய் என்று உங்களால் எப்படி சொல்ல முடியும்?
 
கனடாவில் 300 பேர் புலியில் இருந்து போட்டு தப்பி வந்திருக்கினமா? அவையிட்ட கேட்டுச் சொல்லுங்கோ எப்படி தலைவரை விட்டுப் போட்டு அவர்களால் மட்டும் தப்பி வர முடிஞ்சது என்று :)  அடுத்ததாக புலி  தான் செய்ததும் பிழை தான் என்று எப்பவாவது ஒத்துக் கொண்டு இருக்கா
 
 
 
வொல்கனோ இன்னும் 30 வருடத்தால பிரபாகரனை துரோகி என்று ஆதாரங்கள் வைச்சுக் கொண்டு எழுதுவினம் அதை அப்படியே பேசாமல் நொட்டை சொல்லாமல் ஏற்றுக் கொள்வோமா?

 

 

அதென்ன உங்களுக்கு சிலரில் கருத்தோடு ஒத்து
 போகும் போது என்னால் ஒத்துப்போக முடியாதா? அல்லது நீங்கள் சொன்னவற்றை நான்  வேதமந்திரமாக ஏற்க வேண்டுமா? நான் சொன்னது நிலாந்தன் சொன்னதை ஏற்க வேண்டுமென்பதில்லை. எனது சகோதரி சொன்னதை ஏற்க என்னால் முடியும் என்பதே.உங்களுக்கு சிலரின் கருத்தை ஏற்க முடியாத போது எனக்கு ஏற்க முடிகிறது. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.காரணங்கள் இல்லாமல் கூட இருக்கலாம்.
 
எல்லாரும் தாங்கள் கண்ட பக்கத்தை எப்படி கூட்டி எழுதுவினம் என என்ன அடிப்படையில் சொல்கிறீர்கள் என பத்து காரணங்கள் சொல்ல முடியுமா?
 
இற்றை வரை நீங்கள் போட்ட பச்சைகளுக்கு ஏன் எதற்காக போட்டீர்கள் என்பதற்கு பூரண விளக்கங்கள் தேவை.நான் சுகனுக்கு போட்ட பச்சைக்கு விளக்கம் தேவை எனில் நீங்கள் போட்ட அத்தனை பச்சைகளுக்குமான விளங்கங்கள் வரிக்கிரமாக தரப்பட வேண்டும்.
 
கனடாவில் 300 பேர் வந்து நிற்கிறார்கள் என்று எங்கே சொல்லி உள்ளேன் என  கூற முடியுமா?
 
மற்றவர் எந்த ஐடியில் வருகிறார் எங்கிருந்து வருகிறார் நீங்கள் அவரா ? என மற்றவரின் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்?

:mellow:  :mellow:  :mellow:  :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதென்ன உங்களுக்கு சிலரில் கருத்தோடு ஒத்து
 போகும் போது என்னால் ஒத்துப்போக முடியாதா? அல்லது நீங்கள் சொன்னவற்றை நான்  வேதமந்திரமாக ஏற்க வேண்டுமா? நான் சொன்னது நிலாந்தன் சொன்னதை ஏற்க வேண்டுமென்பதில்லை. எனது சகோதரி சொன்னதை ஏற்க என்னால் முடியும் என்பதே.உங்களுக்கு சிலரின் கருத்தை ஏற்க முடியாத போது எனக்கு ஏற்க முடிகிறது. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.காரணங்கள் இல்லாமல் கூட இருக்கலாம்.
 
எல்லாரும் தாங்கள் கண்ட பக்கத்தை எப்படி கூட்டி எழுதுவினம் என என்ன அடிப்படையில் சொல்கிறீர்கள் என பத்து காரணங்கள் சொல்ல முடியுமா?
 
இற்றை வரை நீங்கள் போட்ட பச்சைகளுக்கு ஏன் எதற்காக போட்டீர்கள் என்பதற்கு பூரண விளக்கங்கள் தேவை.நான் சுகனுக்கு போட்ட பச்சைக்கு விளக்கம் தேவை எனில் நீங்கள் போட்ட அத்தனை பச்சைகளுக்குமான விளங்கங்கள் வரிக்கிரமாக தரப்பட வேண்டும்.
 
கனடாவில் 300 பேர் வந்து நிற்கிறார்கள் என்று எங்கே சொல்லி உள்ளேன் என  கூற முடியுமா?
 
மற்றவர் எந்த ஐடியில் வருகிறார் எங்கிருந்து வருகிறார் நீங்கள் அவரா ? என மற்றவரின் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்?

:mellow:  :mellow:  :mellow:  :mellow:

 

நுணா ஒரு கருத்திற்கு பச்சை குத்துவது அந்தக் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்/ஆதரிக்கிறோம் என்பதற்காகத் தான்.நீங்கள் சுகனின் கருத்திற்கு பச்சை குத்தியதன் மூலம் அவர் கருத்தை ஏற்கிறீர்கள் என்று அர்த்தம்.இப்ப வந்து சொல்கிறீர்கள் யாருடைய சொல்லை கேட்பது உங்கள் விருப்பம் என்று நீங்கள் இப்படி எழுதுவதற்கும்,சுகனின் கருத்திற்கு பச்சை குத்தினதிற்கும் முரண்பாடு உள்ளதல்லவா அதைத் தான் எனது 65 வது கருத்தில் சுட்டிக் காட்டினேன்.
 
மற்றப்படி யாருடைய கருத்தை நீங்கள் கேட்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்.நீங்கள் ஒருவருடைய கருத்திற்கு போமாலிட்டிக்காக பச்சை குத்துபவர் என்று உங்கள் கருத்தை வாசித்ததும் விளங்கிக் கொண்டேன்.
 
ஒருவர் இரு ஜடியில் வந்து ஒரே கருத்திற்கு பச்சை குத்துறார்கள் என்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருது? நீங்களும் அப்படியா செய்கிறீர்கள்? அல்லது நீங்கள் எழுதிப் போட்டு இன்னொரு ஜடியில் வந்து பச்சை குத்திறீங்களோ இல்லாட்டில் ஏன் உங்களுக்கு நான் எழுதினது குத்துது
 
 
300 பேர் அங்கு வந்துள்ளனர் என எழுதி உள்ளீர்கள் அங்கென்டால் எங்கு?
 
சிகப்பு வரியில் எழுதினதை வாசிச்சாலே தெரியுது நீங்கள் எவ்வளவு மொக்குத் தனமாய் யோசிக்கிறீர்கள் என்று   :(
 
எழுதும் போது வார்த்தைகளில் கொஞ்சம் நிதானத்தை கடைப் பிடித்தால் நல்லது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்கு மண்சுமந்து அடிபட்ட சிவபெருமான் எங்கன்ட ஆள்....கிழவி சிவபெருமானை கண்டிருக்கா....மணிவாசகர் கண்டிருக்கார்....சம்பந்தன் கண்டிருக்கா.....ஆகவே நானும் கண்டேன் என் தலைவனை......:D

Link to comment
Share on other sites

 
நான் காத்துவாக்கில வர்ற செய்திகளை உள்வாங்கி கையில வர்றத தட்டச்சுப்பண்ணிக் கொண்டிருக்கவில்லை. உண்மை வரலாறு கலப்பில்லாமல் எழுதப்படவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகின்றேன். மிகச்சாதாரணமாக எல்லாப்போராளிகளுக்கும் தெரிந்த விடயத்தை பொருத்தமில்லாமல் மிகைப்படுத்தப்படுவதைச்  சுட்டிக்காட்டும்போது அதை  ‘முட்டையில மயிர் புடுங்குவது’ என்று சொன்னால் அது  அவர்களின்   தகவல் குறைபாடின் வெளிப்பாடு. 
 
 விடுதலைப்போராட்டம் தொடர்பாகவும்  அங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும்  அமைப்பின் உள்விவகாரங்கள், நடைமுறைகள் தொடர்பாகவும்  சரியான புரிதல், தகவல்  இருப்புகள் உள்ளவர்கள்  இலகுவாக இதைப் புரிந்து கொள்வார்கள் அல்லது அவர்களின்  அறிவு,  சம்பவங்களைப் பகுத்தறியத் துாண்டும். யானை பார்த்த குருடன் போல இருக்கும் சிலரின் தகவல் வெற்றிடத்தில் இருந்து உருவாகும் கருத்துக்களுக்கும், பிரம்மைகளில் இருந்து  உருவாகும் கருத்துக்களுக்கும்,  மிகைப்படுத்தல் கருத்துக்களுக்கும், தகவல் இருப்பிலிருந்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்குமிடையில் மோதல்  எழுவது  தவிர்க்க முடியாதது. 
 
இதை உணர்வு ரீதியாக அணுகாமல் தகவல் செழுமை என்ற கோணத்தில் பார்ப்பது தான் பொருத்தமானது. இதன் பெறுபேறானது புலிகளின் வரலாற்றைச் செம்மைப்படுத்தும் நினைவூட்டலைத்தரும்.  இதன் விளைவு மீள்நினைவூட்டலினையும் நல்லபலனையும் தரும் என்றே நினைக்கிறன் (புலிகளின் ஏட்டின் லிங்கைப் போட்டு நெடுக்ஸ் நினைவுபடுத்தியதைப்போல). எனவே இதை உணர்வு வழி அணுகாமல் தகவல் வழியே அணுக வேண்டும். இந்தக் கருத்தாடலை ஒரு ‘தன்முனைப்புச் சிந்தனை’ (EGO CENTRIC) கொண்ட மனோநிலையில் இருந்து முன்வைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
விடுதலைப்புலிகளின் வரலாற்றைப் பேசும் போது  உணர்வுகள் மட்டுமல்ல உண்மைகளே வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்பதன் அடிப்படையில் உண்மைகளின் திரிபுகளை  மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 
 
மேலும் தயா சொன்ன சம்பவத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிய விடயத்திற்கான பதிலை அவர்  கொடுப்பது தான்  இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
 
அத்துடன் ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பதற்கிணங்க சிலர் தங்களது கருத்துக்களை முன்வைப்பது புரிகின்றது அது ஒரு பெரிய விடயமல்ல. மனித குண இயல்பின் யதார்த்தம்.
 
அதேவேளை தமிழ்சிறியின் பின்னூட்டத்தில் ”எங்கள் வீட்டுக்கு... அருகில் 500 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினர் மீது, தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது... தலைவர் பிரபாகரனை வீட்டிற்கு முன்னால்... மிக அருகில் கண்டதாக, அப்பா சொன்னவர். ஆன படியால்... தயா சொல்வதில் உண்மை உள்ளதை, ஏற்றுக் கொள்கின்றேன்.” என்று மொட்டையாக, தான் கேட்ட ஒரு தகவலை போட்டுள்ளார். 
 
விவாதம் ஏற்பட்டது தலைவர் களமுனைக்கு நெருக்கமாக சென்றவரா? இல்லையா? என்பதல்ல. தயா சொன்ன சம்பவத்தின் மீது தான்  விவாதம் முன்வைக்கப்பட்டது. 
 
எனவே விவாதம் ஏற்படக்காரணமாக இருந்த சம்பவத்திலிருந்து விவாதத்தை பிறிதொரு திசைக்குத் பிரித்தெடுத்து அதன் மீது பின்னூட்டங்களைப்பதிந்து சுத்தி நின்று மொட்டை அடிக்கலாம் என்று யாரும் எண்ண வேண்டாம்.
 
தமிழ்சிறி மாதிரி மொட்டையாகச் சொல்லாமல் இலகுவாக நம்பகத்தன்மை மிக்க சம்பவங்களைச் சொல்லலாமே. முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் தலைவர் மிகக்குறுகிய நிலப்பரப்பில் மோசமான செல், துப்பாக்கிச் சூட்டு எல்லைக்குள் இருந்தார் என்றும். யாழ் பல்கலைக்கழகத்தில் இந்திய இராணுவத்தின் பராத்துருப்பினர் தரையிறங்கி தலைவரை சுற்றி வளைக்கும் போது சண்டையிட்டவர்தானே என்றும் திருநெல்வேலித்தாக்குதலில் ஜீ 3 ஆயுதத்துடன் சண்டையிட்டவர்தானே என்றும் இந்திய இராணுவம் மணலாற்றில் தலைவரை சுற்றி வளைத்து அவருக்கு நெருக்கமாக வந்தபோது எத்தனை ஆபத்துக்களைச்சந்தித்தவர் என்றும்  பின்னூட்டங்களைப்போட்டு விவாதத்தை விவாதத்தின் மையத்திலிருந்து வேறு திசைக்கு நகர்த்தி விவாதத்தை நடத்தாமல்,  தயா குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் மையப்படுத்தி பின்னூட்டங்கள் வருவது இந்த விவாதத்திற்கான சரியான தளம். எனவே இப்படியெல்லாம் நடந்ததால் இதுவும் நடந்திருக்கலாம் என்ற நிறுவல்கள் சம்பவம் தொடர்பான கேள்விக்குப் பதிலாகாது. 
 
எனக்கும் விவாதத்தந்திரோபாயங்கள் தெரியும். ஒரு பிரச்சினை அந்த இடத்தில் கையாள்வதற்கு கடினம் எனில் பிறிதொரு  வாய்ப்பான தளத்திற்குள் இழுத்து கொண்டு சென்று விவாதிப்பதும், விவாதத்தின் மீது  தொடர்பற்ற பல செய்திகளைப்பதிந்து சந்தேகத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்துவதும், பொய்யை திருப்பத்திருப்ப பலகோணங்களில் இருந்து சொல்லி உண்மையாக்க முயல்வதும்,  பொய்க்கு மேல் பொய்களைக்கட்டி உண்மையாக்க முயல்வதும், இது போன்ற வகையைச்சார்ந்த பின்னூட்டங்கள் விவாதிப்பவர்களின் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றது அத்துடன் அவர்களின் நடுநிலை மீதும் கேள்விகளை உருவாக்குகின்றது.
 
ஒரு பழைய சம்பவத்தை பதியும் போது ஏற்படும் தகவல் வழு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் அதை  பிரம்மை அல்லது கற்பனை மனோநிலையில இருந்து உருவாக்கும் போது விவாதத்துள்ளாகின்றது. சம்பவத்தை எழுதும்போது, சம்பவத்திற்கு வெளியே சிறிதளவிலான கற்பனையை சுவாரசியத்திற்காக கலக்கும் போது சகித்துக்கொள்ளலாம் ஆனால் சம்பவமே மிகை நிரம்பிய கலப்படமாக இருக்கும் போது அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கின்ற அக முரண்பாடு தான் விவாதமாக பரிணமித்தது என்பது தான் இங்கிருக்கும் உண்மை.
 
பிறகு நான் மேல சொன்ன கருத்துக்களிலிருந்தும் புதிதாக ஒரு திரியை இழுத்து விவாதைத்தை திசை திருப்பாதைங்கோப்பா வேணுமென்றால் இதுக்கென்று புதுத்திரியை உருவாக்கி விவாதிப்பம் அதுக்கு முதல்ல தொடங்கின விவாதத்திற்கு முடிவு வரட்டும்.
 
- உண்மையை எழுதுங்கோ எண்டுதானே கேட்டனான்...... ஏம்பா, அது நான் சண்டை பிடிக்கிற மாதிரியாவா இருக்கு :huh:  :o
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறையவே திண்ணைப்பேச்சு மன்னர்கள் அதிகரித்துவிட்டார்கள். தவிர ஒருத்தரது கருத்தை இன்னுமொருத்தர் விமர்சனம்செய்து மற்றவரைச் சீண்டிப்பார்த்து இன்பமடைகிறார்கள். ஆனால் பாவம் மக்கள். தயாவினது கருத்து ஒருசிலருக்குத் தவறானதாக இருக்கலாம் அதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனும் ஒற்றைவரி விமர்சனத்தின்மூலம் நாணையமாக வெளிப்படுத்தலாம். தவிர்த்து விவாதிப்பதில் பயனில்லை. இங்கு நாம் எல்லோருமே தமிழீழவிடுதலைப்புலிகளது, களச்சண்டைகளது பரிணாமத்தையும், திட்டமிடலையும், அவை எப்படி நடந்தது என்ற விபரங்களையும் யானையைப்பார்த்த குருடர்கள்போலவே அறிந்திருக்கிறோம். எதற்காக  அருமையான களவுறவுகள் ஒருத்தரோடொருவர் வாதுபுரிகிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவு / தீர்ப்பு என்ன??

போங்கப்பா போய் ஏதாவது உருப்படியாய் செய்யுங்கள்!

 

 ஆனானப்பட்ட அலையையே பயப்பிடித்திப் போட்டினம் :D

 

Link to comment
Share on other sites

இந்த சண்டை நடந்த போது தலைவர் அரியாலை உள்ள ஒரு இடத்தில் இருத்து கட்டளை வழங்கினார் அதுக்கா பிரத்தியோகமா அண்டனாக்கள் இரவுடன் இரவா உயர்த்த பட்டு அப்பகுதி தீவிர கண்காணிப்பில் இருந்தது எல்லாம் முடிந்த பின்னர்தான் சொன்னார்கள் தலைவர் இங்கதான் இரண்டு நாள் நிண்டவர் எண்டு காது வழி செய்தி உண்மை பொய் தெரியாது ஆனால் நிங்கள் சொல்வது 1990ஆம் ஆண்டுக்கு முன் வெளிநாடு வந்தவர்கள் நம்புவார்கள் இப்ப இப்படியான கதை விட முடியாது பாருங்கோ .

 

தலைவரின் பொட்டம்மான் பற்றி

தன்னுடன் வருவது தன் நிழல்தான் என உறுதிப்படித்தி விட்டதுதான் பொட்டு என்னை விட்டு விலகி போகும் இதுகும் போராளிகளிடம் தலைவர் சொன்னது தானாம்

 

இதுகும் எனக்கு காது வழி செய்தி

 

உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டை என்பர் இங்க ஒன்பது முழம் கட்டையா நிக்கு தலைவா :(

Link to comment
Share on other sites

இங்கு காளமேகம் தரப்பினர் சொல்வது போல தலைவருக்கு அதிமேன்மையான பாதுக்காப்பு கொடுக்க பட்டு இருக்குமா எண்று ஆராய்ந்து பார்த்தால் இல்லை எண்று சொல்லவே தோண்றுகிறது.  தலைவர் ஈழத்திலும் பாதுகாப்பு குறைபாடுகளோடு  தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தலைமறைவு வாழ்க்கையையே நடத்தி இருக்கிறார். 

 

மகிந்த இராஜபக்ஸவுக்கு வளங்கப்படுவது போண்ற ஒரு பாதுகாப்பு தலைவர் பிரபாகரனுக்கு வளங்கப்பட்டு இருந்ததா என்பதை பார்த்தால் உண்மை நிலை இல்லவே இல்லை என்பதுதான்.  தான் போகும் இடங்கள், பொதுக்கூட்டங்கள்,  இருப்பிடம் எதையும் வெளிப்படையாக வைத்துக்கொள்ளும் பாதுகாப்பு வலை அமைப்பு இருந்தும் இருக்கவில்லை.    இந்தியா இலைங்கை எனும் இரு நாட்டில் இருந்து வந்த தொழில் நுட்பவலை அமைப்பு அவரை வெளிப்படையாக நடமாட அனுமதிக்கவும் இல்லை.   எந்த தளபதிக்கும் இல்லாத பெரும் பாதுகாப்பு கெடு பிடிகள் அவரின் இருப்பிடத்தை காட்டவே செய்வன. 

 

தனது சொந்த இடத்திலேயே அவர் இருக்கிறாரா இல்லையா எண்று தெரியாமல் மறைந்து வாழ்வதை உயர் பாதுகாப்பு எனும் குறிக்குள் கொண்டு வர முடியாது.  தலைவர் இந்த வீட்டில் இருக்கிறாரா இல்லையா எண்று தெரியாமலே பல மக்களும் போராளிகளும் அந்த வீட்டுக்கு அருகில் வாழ்ந்தும் போய் வந்தும் கொண்டு இருந்தமையை பாதுகாப்பு எண்று சொல்வது முட்டாள் தனமானது. 

 

யாழ் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் உலகஉலா எனும் மாதாந்த சஞ்சிகையின் ஆண்டு நிறைவை கொண்டாடிய போது அதற்கு போய் இருந்த எனது நண்பர் சொன்னது யாதெனில்.  பிரபாகரன் வருவார் என்பது யாருக்கும் அங்கு தெரிந்து இருக்கவில்லை, அங்கு அவர் வந்த போது அதிர்ச்சியே அனைவருக்கும் இருந்தது.  அவர் வந்ததின் பிறகு யாரும் அந்தக்கூட்டத்தில் வெளியேற அவருடன் வந்த சில போராளிகள் அனுமதிக்க வில்லை.  வெளியில் இருந்த மக்களுக்கோ, வீதியால் போய் வந்த மக்களுக்கோ பிரபாகரன் அங்கு ஒரு சந்திப்பை நடத்துகிறார் என்பது தெரிந்து இருக்கவில்லை.  

 

இதுதான் தலைவருக்கு வளங்கப்பட்ட உயர் பாதுகாப்பு என்கிறார்கள். 

 

தலைவர் எங்கு போகுறார் வருகிறார் எண்று தெரியாத தலைமறைவு நிலையில் தலைவர் இந்த இடத்துக்கு வந்ததே இல்லை எண்று ஒருவர்  சொல்வாராக இருந்தால் புலிகளை அவருக்கு சரியாக தெரியவில்லை என்பதே  உண்மை.   தாங்களாக ஒரு கற்பனையை வளர்த்து விட்டு அதை நிறுவுவதையும் அதுதான் வரலாறு எண்று அடம் பிடிக்கும் முட்டாள்தனமானவர்களை விலக்கி விட்டு பயணம் செய்வதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும். 

 

 

Link to comment
Share on other sites

காத்து....................................................... வடிவேலு பாத்த மாதிரி ” வா..ம்மா....... மின்னலு.....” எண்டு போனால் இப்பிடித்தான். நிண்டு நிதானமாக வாசிக்கவேணும். 

 

 

 

 

 
நான் காத்துவாக்கில வர்ற செய்திகளை உள்வாங்கி கையில வர்றத தட்டச்சுப்பண்ணிக் கொண்டிருக்கவில்லை. உண்மை வரலாறு கலப்பில்லாமல் எழுதப்படவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகின்றோம். 
 
யானை பார்த்த குருடன் போல இருக்கும் சிலரின் தகவல் வெற்றிடத்தில் இருந்து உருவாகும் கருத்துக்களுக்கும், பிரம்மைகளில் இருந்து  உருவாகும் கருத்துக்களுக்கும்,  மிகைப்படுத்தல் கருத்துக்களுக்கும், தகவல் இருப்பிலிருந்து முன்வைக்கப்படும் கருத்துக்குமிடையில் மோதல்  எழுவது  தவிர்க்க முடியாதது. 
 
தயா குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் மையப்படுத்தி பின்னூட்டங்கள் வருவது இந்த விவாதத்திற்கான சரியான தளம். எனவே இப்படியெல்லாம் நடந்ததால் இதுவும் நடந்திருக்கலாம் என்ற நிறுவல்கள் சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதிலாகாது. 
 
 

 

வாசிக்க சிரமம் என்றால், அஞ்சரன் சொன்னதை அஞ்சுமுறை (ஐந்துமுறை) எழுதிப்பாருங்கோ........

 

 நிங்கள் சொல்வது 1990ஆம் ஆண்டுக்கு முன் வெளிநாடு வந்தவர்கள் நம்புவார்கள் இப்ப இப்படியான கதை விட முடியாது பாருங்கோ .

 

 

உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டை என்பர் இங்க ஒன்பது முழம் கட்டையா நிக்கு தலைவா :(

 

காத்து...... ஈழதேசக்காத்தாக இருந்தால் அதில் மாவீரரின் மூச்சுக்காற்று கலந்திருக்க வாய்ப்பிருக்கும்  :unsure:  :unsure:  :unsure:  :unsure:  :unsure:  :unsure:

 

Link to comment
Share on other sites

இப்ப முடிவு / தீர்ப்பு என்ன??

போங்கப்பா போய் ஏதாவது உருப்படியாய் செய்யுங்கள்!

 

வாம்மா. மின்னலு. :D

Link to comment
Share on other sites

காத்து....................................................... வடிவேலு பாத்த மாதிரி ” வா..ம்மா....... மின்னலு.....” எண்டு போனால் இப்பிடித்தான். நிண்டு நிதானமாக வாசிக்கவேணும். 

 

 

 

 

வாசிக்க சிரமம் என்றால், அஞ்சரன் சொன்னதை அஞ்சுமுறை (ஐந்துமுறை) எழுதிப்பாருங்கோ........

 

 

காத்து...... ஈழதேசக்காத்தாக இருந்தால் அதில் மாவீரரின் மூச்சுக்காற்று கலந்திருக்க வாய்ப்பிருக்கும்  :unsure:  :unsure:  :unsure:  :unsure:  :unsure:  :unsure:

 

 

தயா சொன்னவை சரி பிழை எண்வைகளுக்கு அப்பால் பார்த்தால், காளமேகமாகிய  நீங்கள் சொல்வது மட்டுமே சரி உங்களுக்கு மட்டுமே உண்மைகள் தெரியும் எனும் குழப்ப வாதம் மட்டுமே இங்கே தெக்கி நிக்கிறது. 

 

அப்படி நீங்கள் மட்டுமே வரலாற்றை அறிந்தவர்கள் தலைவரின் அனைத்து நகர்வையும் புரிந்தவர்கள் எனும் தொனிப்படும் சொற்கோவைகள் உங்கள் மீதான நம்பிக்கையை இங்கே கேள்விக்கு உள்ளாக்கிறது. 

 

தவிரவும்  புலிப்பாய்ச்சல் சண்டையில் தலைவர் எந்த பாத்திரமும் வகிக்கவில்லை என்பதுக்கு உங்கள் பக்கம் இருந்தும் கூட எந்த ஆதாரங்களும் வைக்கப்படவில்லை.  வெறும் பொய் வரலாற்றில் தலைவர் அப்படி வந்ததாக இல்லை எனும் கூச்சல்கள் மட்டும் தான் கேக்கின்றது. 

 

தவிரவும் சந்தேகம் வரும் இன்னும் ஒரு பகுதி என்ன எண்றால் உங்களின் குழு நிலைவாதம்.  ஒரு குழுவாக சேர்ந்து நிண்று ( பிரான்சில் இருந்து இயக்கப்படும் குழுவாக  இருக்கவேண்டும்.)  எவர் மீதாவது அவதூறுகளை அள்ளி வீசும் பொதுத்தன்மை உங்களிலும் பிரதிபலிக்கிறது.  

Link to comment
Share on other sites

தவிரவும்  புலிப்பாய்ச்சல் சண்டையில் தலைவர் எந்த பாத்திரமும் வகிக்கவில்லை என்பதுக்கு உங்கள் பக்கம் இருந்தும் கூட எந்த ஆதாரங்களும் வைக்கப்படவில்லை.  வெறும் பொய் வரலாற்றில் தலைவர் அப்படி வந்ததாக இல்லை எனும் கூச்சல்கள் மட்டும் தான் கேக்கின்றது. 

 

 

 

ஸப்பா............... முடியலை..................... ஒருவேளை தெலுங்கில எழுதிட்டனோ.... :(  :(  :(  இது தமிழெண்டுதானே சொன்னாங்கள் :unsure:  :unsure:  :unsure:  :unsure:

மற்றும் ஒரு சண்டை தலைவரால் கட்டமைக்கப்படும் முறையை புலிப்பாய்ச்சல் சண்டைக்கூடாகவே பார்க்கலாம். திட்டமிட்ட தாக்குதலின் பிரதான திட்டத்தை வகுத்த தலைவர், புலிப்பாய்ச்சல் சண்டைக்கட்டமைப்பில் தரை நடவடிக்கைக்கு பிரதான தளபதிகளாக சொர்ணம், பால்ராஜ்  ஆகியோரையும், காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு திசைதிருப்புத்தாக்குதல் நடவடிக்கைக்கு கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களையும்  நியமித்திருந்தார். அதேநேரம், அளவெட்டிப்பகுதிக்குள்ளால் கரும்புலிகள் மற்றும் விசேடவேவுப்பிரிவு உள்ளடங்கலாக ஒரு அணியை உள்ளனுப்பி இராணுவத்தின் உள் செயற்பாட்டைக் குழப்பும் நடவடிக்கைக்கான ஒரு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் விமான எதிர்ப்பு ஏவுகணைப்பிரிவும் உள்வாங்கப்பட்டிருந்தது.

 
இது தவிர தகவல் ரீதியாக பிரதான மொனிற்றறிங்  மற்றும் புலனாய்வுத்துறை பொட்டம்மானால் வழங்கப்படும் இராணுவ நகர்வு தொடர்பான தகவல்கள் தலைவருக்கு நேரடியாகச் செல்லும். அத்துடன்,  சண்டைப்பின் களத்திற்கான பிரதான ஒழுங்குகள் தலைவர் சரிபார்ப்பார். தேவைப்படின் மேலதிக அணிகளையும் சிறப்பு அணிகளையும் அனுப்பி வைப்பார். தரைப்படை,கடற்புலிகள், கரும்புலிகள், விமான எதிர்ப்பு, இராணுவ தகவல் பரிமாற்றம், சண்டைக்கான பிற ஒழுங்குகள் போன்ற தனித்தனி நடவடிக்கைகளை தலைவர் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்து ஒழுங்கு படுத்துவதைத்தான் தலைவரின் நேரடி வழிநடத்தலில் என்று சொல்வது.  
 
 

 

Link to comment
Share on other sites

மிக் 27 அடிவாங்கி வந்தவன் எல்லாம் சிவனே எண்டு இருக்க புக்காரக்கரன் கிளித்தட்டு மறிப்பது சிரிப்பை கொண்டுவரும் வரலாறை திரித்து எழுதி என்ன இலாபம் யோசியுங்கோ சீமான் மாதிரி அடிச்சு விடாமல் இப்படி எழுத தொடங்கினா வன்னியில் இருத்து வந்தவன் பக்கம் பக்கமா கதை எழுதலாம் .லைக்கும் ஆதரவும் நீளும் ஆனால் உண்மை செத்து கிடக்கும் .

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.