Jump to content

புலிப்பாய்ச்சல் அனுபவம்


தயா

Recommended Posts

காளமேகம் இப்போதும் சம்பந்தமே இல்லாது திசை மாற்றுவதும்  தாங்களே.  

 

nkwd.png

இது விடுதலை புலிகள் பத்திரிகையில் வந்த படம் இது.

இரண்டு பகுதிகளாக சண்டை நடந்து இருப்பின் ஒண்றுக்கு பால்ராஜ் இன்னும் ஒண்றுக்கு சொர்ணம் தலைமை தாகினார். கரும்புலிகள் வேவுப்பிரிவினருடன் சேர்ந்து சண்டைக்கு போனதாக காளமேகம் சொன்னவைகளுக்கு ஆதாரங்கள் ஏதும் கிடையாது. அவை புனையப்பட்டவைகளாக இருக்கலாம்.

ஆக பால்ராஜ் சொர்ணம் இரண்டு பேரும் தாக்குதலில் நேரடியாக பங்காற்றினால் தலைமை ஒருங்கிணைப்பு கட்டளையை வளங்கியது யார். Alpha Hotel சங்கேத பெயரில் அந்த சமரில் தொலைத்தொடர்பு ஊடாக சம்பந்த பட்ட தளபதி யார்.?

இவைக்கான பதில்களை காளமேகம் இன்னும் தரவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply

மிக் 27 அடிவாங்கி வந்தவன் எல்லாம் சிவனே எண்டு இருக்க புக்காரக்கரன் கிளித்தட்டு மறிப்பது சிரிப்பை கொண்டுவரும் வரலாறை திரித்து எழுதி என்ன இலாபம் யோசியுங்கோ சீமான் மாதிரி அடிச்சு விடாமல் இப்படி எழுத தொடங்கினா வன்னியில் இருத்து வந்தவன் பக்கம் பக்கமா கதை எழுதலாம் .லைக்கும் ஆதரவும் நீளும் ஆனால் உண்மை செத்து கிடக்கும் .

புக்காரா அடி வாங்கினவன் திரும்ப குடுத்த அடிதான் சிங்களவனை MIG 27 வாங்க திணிச்சது. 2000ம் ஆண்டுக்கு பிறகு அவன் மிக் 27 வாங்கும் வரைக்கும் போராட்டம் விற்பனை தான் செய்யப்பட்டது.

அந்த போராட்டத்தை முள்ளிவாய்க்காலிலை விட்டு போட்டு வந்தது கூட ஒண்டும் வீரம் இல்லை.

அதோடை நீங்கள் சொல்லுறது மட்டுமே வரலாறு ஆகாது தம்பி.

Link to comment
Share on other sites

முன்னாள் போராளிகள் எண்டது ஒண்டும் பெருமை கிடையாது, அது அவமானம். வெளிநாடுகளிலை வந்தும் துணிவாய் நான் போராடினான் எண்டு சொல்லி வாலை ஆட்டுறீயள் எண்டால் சந்தேகம் வராமல் ?

அதே சமயங்களில் புலிகளின் அமைப்போடை சம்பந்தப்பட்டவர்களை. பின் தொடர்கிறார்கள். கைது செய்து விசாரிக்கிறார்கள் பிடிச்சு உள்ளை போடுகிறது ஐரோப்பிய அரசுகள். சிந்திச்சால் எங்கையோ இடிக்குது.

நான் சொல்ல வந்ததை சொல்லீட்டன். இதோடை முடிச்சிடலாம். வணக்கம் .

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புக்காரா அடி வாங்கினவன் திரும்ப குடுத்த அடிதான் சிங்களவனை MIG 27 வாங்க திணிச்சது. 2000ம் ஆண்டுக்கு பிறகு அவன் மிக் 27 வாங்கும் வரைக்கும் போராட்டம் விற்பனை தான் செய்யப்பட்டது.

அந்த போராட்டத்தை முள்ளிவாய்க்காலிலை விட்டு போட்டு வந்தது கூட ஒண்டும் வீரம் இல்லை.

அதோடை நீங்கள் சொல்லுறது மட்டுமே வரலாறு ஆகாது தம்பி.

 

வரலாறு எவர் இங்கு பேசுகிறார் சொல்லுங்கள் நான் நான் மட்டும் என்பதே இங்கு நடக்கு நான் சொல்வதை கேளு நான் சொல்வது சரி அது அப்படிதான் நடந்தது இப்படி நடக்க வில்லை என்றுதான் கருத்து போகுது தவிர எவரும் இங்க சண்டையின் உண்மை வெளியில் வரவில்லை பல போராளிகளை இழந்த ஒரு வழிமறிப்பு சமரை ஒருவர் நான் செய்தேன் என்று வாதம் நடக்கு அதுக்கு தலைவர் ஒரு கதாபாத்திரம் அவளவுதான் நியாயம் தேடுறம் தியாகங்களை மறந்து வாதிட எதுகும் இல்லை இங்கு .

 

அல்பா ஹோட்டல்  இன்னைக்குதான் இப்படி ஒரு சங்கேத மொழி புலிகளில் இருந்தது எனக்கு தெரியுது பல அரிய தகவல் வருது தொடருங்கோ பொழுது போகுட்டும்  இன்னும் 24 ஆங்கில எழுத்து இருக்கு அதுக்கும் சங்கேத மொழி இருக்கு அடிச்சு விடுங்கோ யாரு கேட்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

 

இந்த திரியில் எழுதுவதில்லை  என  ஒதுங்கியிருந்தாலும்

தயா  பற்றி  எனக்குத்தெரியும் 

தயா பற்றி  யாழ்  களம் அறியும் ஆகையால்....

 

அவர் பற்றிய  அவதூறுகளை  நிறுத்தமாறு யாழ்கள  நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதன்  நான்  எவரையும் குறை  சொல்லவோ

அல்லது குறைத்து மதிப்பிடவோ இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

 

எமக்காக தன்னையே  தந்த ஒரு போராளியை  இதற்கு மேலும் 

அவமதிக்க

அவமானப்படுத்த

இவர்களுக்காகவா என்னை  இழந்தேன் என அவர் மனம்நோகச்செய்வதையாவது நிறுத்துவோம்

எமக்காக  மடிந்த மாவீரர்களை நோகடிப்பதைவிட

தயா போன்றோரை  நோகடிப்பது

உயிரோடு கொல்வதற்கு சமன் ஐயாமார்களே.

நன்றி

 

 

 

Link to comment
Share on other sites

வரலாறு எவர் இங்கு பேசுகிறார் சொல்லுங்கள் நான் நான் மட்டும் என்பதே இங்கு நடக்கு நான் சொல்வதை கேளு நான் சொல்வது சரி அது அப்படிதான் நடந்தது இப்படி நடக்க வில்லை என்றுதான் கருத்து போகுது தவிர எவரும் இங்க சண்டையின் உண்மை வெளியில் வரவில்லை பல போராளிகளை இழந்த ஒரு வழிமறிப்பு சமரை ஒருவர் நான் செய்தேன் என்று வாதம் நடக்கு அதுக்கு தலைவர் ஒரு கதாபாத்திரம் அவளவுதான் நியாயம் தேடுறம் தியாகங்களை மறந்து வாதிட எதுகும் இல்லை இங்கு.

 

அல்பா ஹோட்டல்  இன்னைக்குதான் இப்படி ஒரு சங்கேத மொழி புலிகளில் இருந்தது எனக்கு தெரியுது பல அரிய தகவல் வருது தொடருங்கோ பொழுது போகுட்டும்  இன்னும் 24 ஆங்கில எழுத்து இருக்கு அதுக்கும் சங்கேத மொழி இருக்கு அடிச்சு விடுங்கோ யாரு கேட்கிறது .

உந்த முட்டையிலை மயிர் புடுங்கிறதை தான் நானும் சொல்கிறேன்.

நான் சண்டையிலை நிண்ட இடத்துக்கு எங்களை காப்பத்த தலைவர் வந்தார் எண்டு ஒருத்தர் சொன்னால். போராளிகள் மீதான தலைவரின் பாசமே அங்கே படிக்கும் போது புரிந்தது.

ஆனால் நீங்களும் கொஞ்ச முன்னாள் போராளிகள் எண்று சொல்லிக்கொள்ளும் கூட்டம் என்ன செய்கிறீர்கள் ? அதிலை மயிர் புடுங்குகிறீர்கள். இதை தான் போராட்டமும் தலைமையும் உங்களுக்கு சொல்லித்தந்ததா ? ஒரு போராளி எண்டவன் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு உதாரணமாக நாங்கள் பல போராளிகளை கண்டிருக்கிறோம். அப்போது எல்லாம் போராட்டம் மக்களின் மத்தியில் செல்வாக்கோடு இருந்தது.

இப்போ உங்களை போண்றவர்கள் இந்த போராட்டம் ஏன் தோற்று போனது எண்டதற்கு காரணத்தை புரியவைக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

ஆக பால்ராஜ் சொர்ணம் இரண்டு பேரும் தாக்குதலில் நேரடியாக பங்காற்றினால் தலைமை ஒருங்கிணைப்பு கட்டளையை வளங்கியது யார். Alpha Hotel சங்கேத பெயரில் அந்த சமரில் தொலைத்தொடர்பு ஊடாக சம்பந்த பட்ட தளபதி யார்.?

இவைக்கான பதில்களை காளமேகம் இன்னும் தரவில்லை.

 

தயா ”வோக்கியில கேட்ட தகவல்களை வைச்சுக்கொண்டு சம்பந்தமேயில்லாமல் கேள்வி கேக்கிற மாதிரி” நீங்களும் அதைத்தான் செய்யிறீங்கள். 

 

புலிப்பாய்ச்சல் சண்டைபற்றிய அதிகாரபூர்வமான, தேவையான தகவல் வேணுமென்றால் நெடுக்ஸ் இணைத்த இந்த லிங்கில் உள்ளது http://www.eelamhomeland.com/vp_paper/V_P_59.pdf

 

ஐந்தாவது பக்கத்தில், அதாவது நீங்கள் வெட்டி ஒட்டிய படத்துக்கு கீழே உள்ளது. 

 

ஆனால், கீழே இருப்பதுதான் தயா சொன்ன சம்பவம். இந்த சம்பவம்தான் விவாதத்திற்கு வந்தது. 

 

 

 

 சீரணிப்பாலத்துக்கு ஒரு பக்கம் வட்டுக்கோட்டை பக்கமாக  ஒரு நாள் முழு நிலவு எண்டும் பார்க்காமல்  மறு நாள் சண்டைக்காய் சொர்ணம் அண்ணை எங்களை ( விசேட வேவு பிரிவில் இருந்த )வேவுக்காக  விட்டிருந்தார்...    அடுத்த அணியை  சண்டிலிப்பாய் பக்கம்  விட்டிருந்தார்...   நாங்கள் இருந்த சாக்கு எல்லாம் வெட்டி சுத்தி கொண்டு  இரவெல்லாம் தவண்டு திரிஞ்சு இரண்டு சாதகமான பாதையை கண்டிருந்தோம்... 

 

அடுத்தநாள்  கூலாக வந்த  சொர்ணம் அண்ணை உங்கட பாதை வேண்டாம் நாங்கள் மற்ற அணி பாத்த பக்கம் தான் இறங்க போறம் எண்டு சொல்லி போட்டு போட்டார்... 

 

நாங்கள் ஒரு ஐஞ்சு பேர் பிறகு தீவகம் அராலிக்கை வேவுக்காக பொன்னாலையில நிண்ட இன்னும் 5 பேரையும் சேர்ந்து 10  பேரா ஒரு இடத்திலை விட்டிச்சினம்...    

 

சண்டை காலை 5 மணிக்கு ஆரம்பிச்சுது ஒரு 7 மணி அளவிலை எங்களை கூப்பிட்டு  சண்டை பிடிப்பவர்களுக்கு  பக்கவாட்டாக எந்த தாக்குதலும் வராமல் இருக்க  ஒரு கட்டவுட் போட சொன்னதால் மேலை நான் குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேர்ந்தோம்...  ஏற்கனவே இருந்த இராணூவ நிலை இடத்திலை எதிர்பாராமல் ஒரு சின்ன சண்டை எங்களை முன்னாலை எதிர்ப்பார்த்து இருந்து இருபான் நாங்கள் பக்கவாட்டாக போய் ஏறி இருந்தோம்... !  

 

இரவு முதல் சும்மா இருந்ததால் எங்களின் வோக்கிகளின் நடந்த சண்டையின் நெர் முக வர்ணனை கேட்ப்பதுக்காக அணைக்காமல் இருந்ததாலும் , கேட்டு கொண்டு இருந்ததால்  மின் கலன் முடிஞ்சு போச்சு...   பிரதான சண்டையிலை நாங்கள் இல்லாததாலை எங்களுக்கு மேலதிகமாக தரவும் இல்லை... 

 

அதுக்கும் மேலை நான் முன்னமே எழுதி இருந்தது தான் நடந்தது...   நாங்கள் இருந்த பகுதிக்கு தலைவர் வந்தார் என்பது மட்டுமே நான் குறிப்பிட்டது...  பிரதான சண்டையில் எங்களின் பங்குகள் இருந்தமை பற்றி கூட சொல்ல வில்லை...  எனது கூற்றை  உறுதிப்படுத்த  விசேட வேவுப்பிரிவில் இருந்தவர்களை நீங்களே விசாரித்து கொள்ளலாம்...  மற்றும் படி தான் முன்னணிக்கு போனதை தலைவர் விளம்பர படுத்தும் அரசியல் வாதி கிடையாது...

 

மாட்டைப்பற்றி எழுதச்சொன்னால், மாட்டைக்கொண்டுபோய் மரத்தில கட்டிப்போட்டு மரத்தில உள்ள நாலாவது கிளையில இருக்கிற இலையில ஒரு எறும்பு இருக்கெண்டு எழுதினால். மாடு என்றால் என்ன என்பதற்கான விடை வராது. மாடு என்றால் என்னென்று தெரியாதவர் அதை வாசித்தால் எறும்பைத்தான் மாடு என்று நினைக்க வேண்டிவரும். 

Link to comment
Share on other sites

இங்கு ஈழத்தில் வாழ்த்த அனைவரும் போராளிகள் தான் ஆயுத பயிற்ச்சி எடுத்தவர்கள் தான் எல்லைப்படை துணைப்படை என அனைவரும் களம் புகுந்தவர்கள் எவரும் நான் செய்தேன் அவர் செய்தார் என மற்றவரை நீ என்ன செய்தாய் எண்டு கேள்வி கேட்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை நான் செய்தது  எனது மண்ணுக்கு எனது மக்களுக்கு எனது வாழ்விற்கு இதில் தனியா பெருமை தேட வேண்டிய அவசியம் இல்லை தவறுகள் திருத்த படவேண்டியது நியாய படுத்த கூடாது என்பது புலிகளின் ஒரு தத்துவம் பெரியவர்களே 

லம்போ என்னும் 25வருட போராளி தற்கொலை செய்தார் அண்மையில் யாரு அவன் எப்படியான போராளி தலைவருடன் எவளவு காலம் நின்றன் என்பது புலிகள் இல்லது போனதால் அவனின் வரலாறு அப்படியே போயிட்டு ஆனால் நாங்கள் இங்க பட்டங்களும் பதவிகளும் இன்னும் கொடுத்த வண்ணம் இருக்குறம் அதுதான் கால கொடுமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். எம் இனம்  இப்படி கேவலமாக வந்துவிட்டது என்பதை நினைக்க எழுதாமல் இருக்க முடியவில்லை. 

 

இந்த திரி பற்றி ஆயுதப்போரட்டத்திலோ அல்லது அது நடந்த இடங்களிற்கோ எந்த விதத்திலும் சம்மந்தப்படாத ஒருவரின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகின்றேன்.தயவுசெய்து யாரையும் மனம் நோகச்செய்வதற்காக நான் எழுதவில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும்.

 

முதலில் தயவுசெய்து "பிரபாகரன்" என்று எழுதுவதை நிறுத்துங்கள். எமக்காக தனது வாழ்நளை அற்பணித்த ஒருவரிற்கு நாம் செய்யும் மரியாதையா இது? ஒரு வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பதையே கேவலமாக நினைக்கும் கலாச்சாரத்தில் பிறந்த நாம் இப்படி செய்வது சரியா? உங்களிற்கு அவரின் கொள்கைகளை பிடிக்காமல் இருக்கலாம். அவரின் வயதிற்கென்றாலும் மரியாதை கொடுங்கள். "தலைவர்" என்றால் அது தமிழினத்தில் எப்பொழுதும் ஒரேயெருவர் தான். வேறு சில இயக்கங்களை சேர்ந்தவர்களுடன் நான் பேசியபோது கூட அவர்கள் "தம்பி" என்ற சொல்லை தான் பாவித்தார்கள். இது எல்லோருக்கும் பொருந்தாது. ஆனால் அவர்களிற்கு இருக்கும் குறைந்தபட்ச நல்லெண்ணம் கூட இங்கே தமிழ் தேசியம் பேசும் நண்பர்களிற்கு இல்லாமல் போனது கவலையளிக்கின்றது. 

 

இங்கே விவாதிக்கப்படும் சண்டைகளில் யாழ்களத்தில் பலர் பங்குபற்றியிருக்கிறீர்கள் என்பதை அறியமுடிகிறது. ஒரு சண்டை என்பது ஆயிரக்கணக்கான போராளிகள் பங்குபற்றியது. இந்த ஆயிரம் பேரும் வெவ்வேறு இடங்களில் நின்று சண்டை பிடித்திருப்பார்கள். ஒவ்வொருவரிற்கும் ஒரு அனுபவம் இருந்திருக்கும். ஒருவர் கண்டதை இன்னொருவர் கண்டிருக்கமுடியாது. எனவே ஒவ்வொருவரும் அடுத்தவர் சொல்வது பிழை என்பதற்கு ரெம்ப நேரம் ஆகாது. 

 

இங்கே யார் சொல்வது சரியென்ற விவாதத்தை தவிர்த்துவிட்டு பார்ப்போம்.  

 

இதில் அனுபவங்களை பகிர்கின்றவர்களை ஆதராங்கள் காட்டச்சொல்வது கடலிற்குள் ஆணியை தேடுவது போன்றது. முடியாத விடயம் அல்ல. ஆனால் நடைமுறை சாத்தியமற்றது. 

 

இங்கே அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர்களை ஒருவர் மட்டுமே கேள்வி கேட்டமுடியும். அது அவர்களின் மனசாட்சி மட்டுமே.  :icon_idea:

 

"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்...." என்பது இங்கேயும் பொருந்தும். அனுபவங்களை பகிர்ந்துகொள்பவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் எது உண்மை பொய் என்று. எனவே அவர்களாய் திருந்தாவிட்டால் நாம் எதுவும் செய்யமுடியாது (இது இரு தரப்பினர்க்கும் பொருந்தும்).

 

இப்படியான திரியை தொடங்குபவர்களும் சற்று சிந்தித்துப்பாருங்கள். இப்படியான கேள்விகள் எப்படியும் வரும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 2009ற்கு பின்னர் இதுவே யதார்த்தம். 

 

போராளிகள் மீது ஒரு உன்னதமான மரியாதை உள்ளது. அதை சிதைக்கும் வேலையை தான் இங்கே பலரும் செய்கின்றீர்கள். ஒரு காலத்தில் மக்களிற்குள் ஒற்றுமையில்லை என்று குற்றம் சாட்டினோம். இப்பொழுது அது போராளிகளிற்குள்ளும் வந்துவிட்டது என்பது வேதனையான விடயம். 

 

"புலி பசி பொறுக்கும்

துன்பங்கள் தாங்கும்

தனித்து நிற்கும்

எத்தனை காலமானாலும் பதுங்கியே இருக்கும்

காலம் வரும் போது ஒரே அடியில் வீழ்த்தும்"

 

என்றாவது ஒரு நாள் அந்த காலம் வரும். அது வரை காத்திருங்கள் தலைவர் வளர்த்த போராளிகளே.

 

இதில் விவாதிப்பதில் பலனில்லை எனவே போராளிகளின் மேல் இருக்கும்  மதிப்பை கொஞ்சம் என்றாலும் காப்பாற்றுவோம் என ஒதுங்கி நிற்கும் போராளிகளிற்கு நன்றி. 

 

மைன்ட் வாய்ஸ்: ஒரு பத்து பேர் சேர்தாலே ஒற்றுமையா இருக்க முடியேலையே. தலைவர் எப்படி தான் இத்தனை ஆயிரம் பேரை சமாளிச்சாரோ. தலைவணங்குகிறேன் தலைவா! :wub: 

Link to comment
Share on other sites

தலைவரின் பாசறைக்குள்தான் புலி.. வெளியே வந்தவிட்டால்..??

அவர்களும் சாதாரண மனிதர்தான்..!

Link to comment
Share on other sites

புலி நக்கினால் கூட  சாகிற ஆக்கள்  கூட  புலி இல்லை என்றவுடன் புலி என்று கத்தினால்  வாற  பிரச்சனை  இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

 

இந்த திரியில் எழுதுவதில்லை  என  ஒதுங்கியிருந்தாலும்

தயா  பற்றி  எனக்குத்தெரியும் 

தயா பற்றி  யாழ்  களம் அறியும் ஆகையால்....

 

அவர் பற்றிய  அவதூறுகளை  நிறுத்தமாறு யாழ்கள  நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதன்  நான்  எவரையும் குறை  சொல்லவோ

அல்லது குறைத்து மதிப்பிடவோ இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

 

எமக்காக தன்னையே  தந்த ஒரு போராளியை  இதற்கு மேலும் 

அவமதிக்க

அவமானப்படுத்த

இவர்களுக்காகவா என்னை  இழந்தேன் என அவர் மனம்நோகச்செய்வதையாவது நிறுத்துவோம்

எமக்காக  மடிந்த மாவீரர்களை நோகடிப்பதைவிட

தயா போன்றோரை  நோகடிப்பது

உயிரோடு கொல்வதற்கு சமன் ஐயாமார்களே.

நன்றி

 

விசுகு, குறிப்பிட்ட மாதிரி... இந்தத் தலைப்பு ஆரோக்கிய விவாதமாக இருக்கப் போவதில்லை.

சிலர்... பல்லைத் தோண்டி, மணந்து பார்க்கத்தான்... ஆசைப் படுகின்றார்கள் என்று தெரிகின்றது.

அந்த மணத்தை... அவர்களின், வீட்டிற்குள் வைத்துக் கொள்ளட்டும்.

இனியும்... இதில், நிர்வாகம் வேடிக்கை... பார்த்துக் கொண்டிருக்காமல், திரியை பூட்டி விடுவதே... யாழ்களத்திற்கு அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகத்துக்கு எனது அன்பான வேண்டுகோள் இவ்விடையத்தை மேலும் நீட்டிக்கொண்டுபோக அனுமதிக்கவேண்டாம் இவ்விடுகையை முற்றாக எடுத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

போராட்டம் சம்மந்தமாக ஒரு விடயத்தை சொல்பவரும் முன்னாள் போராளி அதை மறுப்பவரும் முன்னாள் போராளி. இது ஒரு போட்டிநிலையாக மாறுகின்றது. அன்றய காலச் சூழலில் தாயகத்தில் இருந்து அறிந்த வியடங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு முன்னாள் போராளி சொல்வது சாத்தியமானது என்ற கருத்தை முன்வைத்தேன். அக் கருத்துக்கு ஒரு மதிப்பையும் கொடுக்கவேண்டும் காரணம் அவர் களத்தில் இருந்திருக்கின்றார். புலிகள் தலைவர் சண்டை நடக்கும் ஒரு இடத்திற்கு வந்தார் என்று அச் சண்டையில் பங்குபற்றிய ஒருவர் சொல்கின்றார் அவ்வளவுதான் இது ஒரு பெரியவிசயமில்லை. அதை மறுதலிப்பவர்களும் அதற்கான கட்டமைப்பு நிர்வாக அலகுகள் அது இது என்று முன்வைப்பவர்களும் அதனால் என்னத்தை சாதிக்கமுடியும்? தலைவர் அப்படி ஒரு இடத்துக்கு வந்தார் என்றால் அதில் என்ன கெட்டது இருக்கின்றது? முன்னாள் புலிகளே புலிகள் வரலாற்றில் நடந்த சம்பவங்களை நம்பமுடியாதபடி செய்கின்றார்கள். எந்தவிதத்திலும் மக்கள் விடுதலைக்குப் பயன்படாத இந்த திரி மற்றும் இப்படியான திரிகள் முற்றாக நீக்கப்படுதலே ஆரோக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவிதத்திலும் மக்கள் விடுதலைக்குப் பயன்படாத இந்த திரி மற்றும் இப்படியான திரிகள் முற்றாக நீக்கப்படுதலே ஆரோக்கியமானது.

 

இதைத்தான் ஆரம்பத்திலேயே (சுண்டலால்)சொல்லப்பட்டது.  யாரும் செவி மடுக்கவில்லையே..! எவ்வளவு காலம் தான் காயங்களையே சுரண்டி மேலும் மேலும் புண்ணாக்கிக் கொண்டிருப்பீர்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை மறுதலிப்பவர்களும் அதற்கான கட்டமைப்பு நிர்வாக அலகுகள் அது இது என்று முன்வைப்பவர்களும் அதனால் என்னத்தை சாதிக்கமுடியும்? தலைவர் அப்படி ஒரு இடத்துக்கு வந்தார் என்றால் அதில் என்ன கெட்டது இருக்கின்றது?

 

முன்னாள் புலிகளே புலிகள் வரலாற்றில் நடந்த சம்பவங்களை நம்பமுடியாதபடி செய்கின்றார்கள்.

எந்தவிதத்திலும் மக்கள் விடுதலைக்குப் பயன்படாத இந்த திரி மற்றும் இப்படியான திரிகள் முற்றாக நீக்கப்படுதலே ஆரோக்கியமானது.

 

நன்றி  ஐயா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.