Jump to content

விழிச் சுற்றலில் வீழ்வது....


Recommended Posts

இப்பொழுதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தேன். கதை புதிதொன்றுமில்லை இருந்தாலும் பார்க்க பிடித்திருந்தது. ஒரு காட்சியில் நாயகி புருவத்தை வளைத்து ஒரு பார்வையை படர விடுவாள்....

மப்படித்த மறுநாள் மண்டை குடைவதைப் போல சில படங்களின் காட்சிகளும் சிலமணி நேரங்களாவது சிந்தையைச் சுழலச் செய்யும்.அந்த தாக்கம் தான் இந்த உளறல் ...கள் போலவே காதல் நினைவுகளும் உளறலை உற்பத்தி செய்கிறது ....

ஊடலுக்கு கூடலுக்கும் கண்களே உரிப்பொருள். சில காவியத்திற்கும் ஓவியத்திற்கும் கண்களே கருப்பொருள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவையே முதற்பொருள்.

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......
மதர்க்கண், மழைக்கண், குவளைக்கண், கழுநீர்க்கண் ....

விழிகளில் இவ்வளவு விந்தை எப்படி முடிகிறதோ இந்தப் பெண்களால் !!??

இதழில் சுழியும், மோகன முறுவலும், கருவிழிகளில் கர்வமும், நுதலில் வளைவுகளையும் நொடிகளில் பிரசவிக்க இவர்களால் மட்டுமே முடியும்.

மனம் ஒரு மாயச் சக்கரம்... விழிச் சுற்றலில் வீழ்வது  விந்தையொன்றுமில்லை.....

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம்பிறையன் ஆர் யூ ஓகே?! :lol:

Link to comment
Share on other sites

இளம்பிறையன் ஆர் யூ ஓகே?! :lol:

 

நினைவோடை  சிந்தும் நீர்த்திவலைகளின் ஈரம் நீடித்திருப்பதில்லை. காலச் சூரியனின் கதிரொளிகளில் கரைந்துவிடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

ஜயோ.. வேண்டாம் அண்ணா.. போதை தெழிந்ததும் மைய்பூசிய விழியின் பொய் பூசிய சுவடுகள் வெளிப்படுகையில் பெருங்குளிரில் காற்று உறைவதைப்போல் உறைந்துவிடும் இதயம் பொய் உறைந்த விழி அறைந்த நெஞ்சறையின் விசும்பலுடன்.. :D

அழகு தமிழ் அண்ணா... நடனமிடுகின்றாள் உங்கள் வரிகளில் எல்லாம்.. ரசிக்கவைக்கின்றன..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மை பூசிய விழிகளைப்பார்த்து மெய் மறந்துவிட்டு பின்னால் குய்யோ முறையோ என்றால் எப்படி? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பல்களின் வரிசையில் புதிய வரவு சுபேஸ் அண்ணாச்சி.. :lol:

 

அதுசரி அந்த இணைப்பைத் தந்தால் நாங்களும் பார்ப்பமெல்லோ ஆதித்த இளைம்பிறை அண்ணா.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பிகருக்கா இந்த படத்தைப் பார்க்கலாம். நல்ல கியூட்டா இருக்கா. நல்ல எளிமையான இளம் பெண்ணிற்கே உரித்தான நளினத்துடன் துடிப்புடன் கூடிய நடிப்பு..! :):lol:


http://youtu.be/QXopq4R_uaY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......
 

இத்தனை விழிகளைப் பார்த்தவன் வாழ்க்கை
எப்படிக் கிழியாமல் இருக்கும் :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

 

இத்தனை விழிகளைப் பார்த்தவன் வாழ்க்கை

எப்படிக் கிழியாமல் இருக்கும் :D  :lol:

இணைப்புக்கு நன்றிகள், ஆதித்த இளம்பிறையன்!

 

அது சரி, எங்களுக்கும் இரண்டு விழிகள் இருக்கே! 

 

அவற்றை ஏன் கவிஞர்கள் சிலாகிப்பதில்லை? :o

 

கோட்டான் முழி, ஆந்தை முழி, என்று முழி என்று தானே சொல்கின்றார்கள்! :wub:

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள், ஆதித்த இளம்பிறையன்!

 

அது சரி, எங்களுக்கும் இரண்டு விழிகள் இருக்கே! 

 

அவற்றை ஏன் கவிஞர்கள் சிலாகிப்பதில்லை? :o

 

கோட்டான் முழி, ஆந்தை முழி, என்று முழி என்று தானே சொல்கின்றார்கள்! :wub:

 

காரணம், பெண் கவிஞர்கள் குறைவு. இருப்பவர்களுக்கும் சுதந்திரம் இல்லை. உங்கடை மனிசி ஒரு கவிஞராக இருந்து அவ ஆண்களின் மயக்கும் கண்களைப் பற்றிக் கவிதை எழுதினால்....... தாங்கிக்கொள்வீர்களா?

------------- என்னதான் இருந்தாலும் பெண்கள் (முக்கியமாகக் கவிஞர்களின் மனைவிகள்) நல்ல அண்டர்ஸ்ராண்டிங் உள்ளவர்கள்தான்.

Link to comment
Share on other sites

இப்பொழுதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தேன். கதை புதிதொன்றுமில்லை இருந்தாலும் பார்க்க பிடித்திருந்தது. ஒரு காட்சியில் நாயகி புருவத்தை வளைத்து ஒரு பார்வையை படர விடுவாள்....

மப்படித்த மறுநாள் மண்டை குடைவதைப் போல சில படங்களின் காட்சிகளும் சிலமணி நேரங்களாவது சிந்தையைச் சுழலச் செய்யும்.அந்த தாக்கம் தான் இந்த உளறல் ...கள் போலவே காதல் நினைவுகளும் உளறலை உற்பத்தி செய்கிறது ....

ஊடலுக்கு கூடலுக்கும் கண்களே உரிப்பொருள். சில காவியத்திற்கும் ஓவியத்திற்கும் கண்களே கருப்பொருள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவையே முதற்பொருள்.

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

மதர்க்கண், மழைக்கண், குவளைக்கண், கழுநீர்க்கண் ....

விழிகளில் இவ்வளவு விந்தை எப்படி முடிகிறதோ இந்தப் பெண்களால் !!??

இதழில் சுழியும், மோகன முறுவலும், கருவிழிகளில் கர்வமும், நுதலில் வளைவுகளையும் நொடிகளில் பிரசவிக்க இவர்களால் மட்டுமே முடியும்.

மனம் ஒரு மாயச் சக்கரம்... விழிச் சுற்றலில் வீழ்வது  விந்தையொன்றுமில்லை.....

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

 

பாரதியே அன்று பாடினான்..'சுற்றும் விழிச்சுடரரே கண்ணம்மா...',  

இப்போ ஒருவன் பாடினான் 'சுற்றும் விழிச் சுடரே... சுற்றும் விழிச் சுடரே... என் உலகம் உன்னைச்சுற்றுதே.. "

இப்பிடியும் ஒருவன் பாடினான்...

http://www.youtube.com/watch?v=QCqG3tXF4k4

Link to comment
Share on other sites

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

 

அங்கு அவள் விழியோ நர்த்தனம் ஆடுகையில் இங்கு

இவன் விழியோ புத்தியிருந்தும் சித்தமிருந்தும்

இரண்டும்கெட்டு திண்டாடுகிறது, தன்னிலை

மறந்து தடுமாறுகிறது...

அன்று மலர்ந்த செந்தாமரையோவென பறந்துவந்த

வண்டு தடுமாறுகிறதாம்...

ஐந்தறிவுகொண்டதுக்கு இந்நிலை

ஆற்றிவுகொண்டோனுக்கும் அந்நிலை அது

பெண்ணைப் பருகியபோதை இயற்க்கையின்

பாதை அது "விழியில் விழுந்து (அதுதான் விதி)

இதயம் நுளைந்து உயிரில் கலந்த(து) உறவே(வு)"

Link to comment
Share on other sites

ஜயோ.. வேண்டாம் அண்ணா.. போதை தெழிந்ததும் மைய்பூசிய விழியின் பொய் பூசிய சுவடுகள் வெளிப்படுகையில் பெருங்குளிரில் காற்று உறைவதைப்போல் உறைந்துவிடும் இதயம் பொய் உறைந்த விழி அறைந்த நெஞ்சறையின் விசும்பலுடன்.. :D

 

காதல் கனிந்து விட்டால் காவியம் பாட முடியுமா?  :)

 

 

அதுசரி அந்த இணைப்பைத் தந்தால் நாங்களும் பார்ப்பமெல்லோ ஆதித்த இளைம்பிறை அண்ணா.. :rolleyes:

 
இங்கே (uyirvani.com) இந்தப் படத்தின் டாரென்ட் இருக்கும்... தியேட்டர் பிரிண்ட் தான்...தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 
குறிப்பு: திருட்டு டிவிடி படம் பார்ப்பது உடலுக்கு கேடு... :)
 
 

 

இந்த பிகருக்கா இந்த படத்தைப் பார்க்கலாம். நல்ல கியூட்டா இருக்கா. நல்ல எளிமையான இளம் பெண்ணிற்கே உரித்தான நளினத்துடன் துடிப்புடன் கூடிய நடிப்பு..! :) :lol:

 

அதுவே....

 

 

 

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

 

இத்தனை விழிகளைப் பார்த்தவன் வாழ்க்கை

எப்படிக் கிழியாமல் இருக்கும் :D  :lol:

 

பருவக் காற்று பட்டாள்தானே பயிர்களுக்கு சுகந்தம்....

 

 

 

இணைப்புக்கு நன்றிகள், ஆதித்த இளம்பிறையன்!

 

அது சரி, எங்களுக்கும் இரண்டு விழிகள் இருக்கே! 

 

அவற்றை ஏன் கவிஞர்கள் சிலாகிப்பதில்லை? :o

 

கோட்டான் முழி, ஆந்தை முழி, என்று முழி என்று தானே சொல்கின்றார்கள்! :wub:

 

உவமையை கொடுப்போம் உருவ(க)த்தைப் பெறுவோம்... நாணத்தைக் காண நாம்தானே நாண் தொடுக்க வேண்டும்... 

அங்கு அவள் விழியோ நர்த்தனம் ஆடுகையில் இங்கு

இவன் விழியோ புத்தியிருந்தும் சித்தமிருந்தும்

இரண்டும்கெட்டு திண்டாடுகிறது, தன்னிலை

மறந்து தடுமாறுகிறது...

அன்று மலர்ந்த செந்தாமரையோவென பறந்துவந்த

வண்டு தடுமாறுகிறதாம்...

ஐந்தறிவுகொண்டதுக்கு இந்நிலை

ஆற்றிவுகொண்டோனுக்கும் அந்நிலை அது

பெண்ணைப் பருகியபோதை இயற்க்கையின்

பாதை அது "விழியில் விழுந்து (அதுதான் விதி)

இதயம் நுளைந்து உயிரில் கலந்த(து) உறவே(வு)"

 

நன்று வதா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM   ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM   யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது  அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.