Jump to content

விழிச் சுற்றலில் வீழ்வது....


Recommended Posts

இப்பொழுதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தேன். கதை புதிதொன்றுமில்லை இருந்தாலும் பார்க்க பிடித்திருந்தது. ஒரு காட்சியில் நாயகி புருவத்தை வளைத்து ஒரு பார்வையை படர விடுவாள்....

மப்படித்த மறுநாள் மண்டை குடைவதைப் போல சில படங்களின் காட்சிகளும் சிலமணி நேரங்களாவது சிந்தையைச் சுழலச் செய்யும்.அந்த தாக்கம் தான் இந்த உளறல் ...கள் போலவே காதல் நினைவுகளும் உளறலை உற்பத்தி செய்கிறது ....

ஊடலுக்கு கூடலுக்கும் கண்களே உரிப்பொருள். சில காவியத்திற்கும் ஓவியத்திற்கும் கண்களே கருப்பொருள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவையே முதற்பொருள்.

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......
மதர்க்கண், மழைக்கண், குவளைக்கண், கழுநீர்க்கண் ....

விழிகளில் இவ்வளவு விந்தை எப்படி முடிகிறதோ இந்தப் பெண்களால் !!??

இதழில் சுழியும், மோகன முறுவலும், கருவிழிகளில் கர்வமும், நுதலில் வளைவுகளையும் நொடிகளில் பிரசவிக்க இவர்களால் மட்டுமே முடியும்.

மனம் ஒரு மாயச் சக்கரம்... விழிச் சுற்றலில் வீழ்வது  விந்தையொன்றுமில்லை.....

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம்பிறையன் ஆர் யூ ஓகே?! :lol:

Link to comment
Share on other sites

இளம்பிறையன் ஆர் யூ ஓகே?! :lol:

 

நினைவோடை  சிந்தும் நீர்த்திவலைகளின் ஈரம் நீடித்திருப்பதில்லை. காலச் சூரியனின் கதிரொளிகளில் கரைந்துவிடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

ஜயோ.. வேண்டாம் அண்ணா.. போதை தெழிந்ததும் மைய்பூசிய விழியின் பொய் பூசிய சுவடுகள் வெளிப்படுகையில் பெருங்குளிரில் காற்று உறைவதைப்போல் உறைந்துவிடும் இதயம் பொய் உறைந்த விழி அறைந்த நெஞ்சறையின் விசும்பலுடன்.. :D

அழகு தமிழ் அண்ணா... நடனமிடுகின்றாள் உங்கள் வரிகளில் எல்லாம்.. ரசிக்கவைக்கின்றன..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மை பூசிய விழிகளைப்பார்த்து மெய் மறந்துவிட்டு பின்னால் குய்யோ முறையோ என்றால் எப்படி? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பல்களின் வரிசையில் புதிய வரவு சுபேஸ் அண்ணாச்சி.. :lol:

 

அதுசரி அந்த இணைப்பைத் தந்தால் நாங்களும் பார்ப்பமெல்லோ ஆதித்த இளைம்பிறை அண்ணா.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பிகருக்கா இந்த படத்தைப் பார்க்கலாம். நல்ல கியூட்டா இருக்கா. நல்ல எளிமையான இளம் பெண்ணிற்கே உரித்தான நளினத்துடன் துடிப்புடன் கூடிய நடிப்பு..! :):lol:


http://youtu.be/QXopq4R_uaY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......
 

இத்தனை விழிகளைப் பார்த்தவன் வாழ்க்கை
எப்படிக் கிழியாமல் இருக்கும் :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

 

இத்தனை விழிகளைப் பார்த்தவன் வாழ்க்கை

எப்படிக் கிழியாமல் இருக்கும் :D  :lol:

இணைப்புக்கு நன்றிகள், ஆதித்த இளம்பிறையன்!

 

அது சரி, எங்களுக்கும் இரண்டு விழிகள் இருக்கே! 

 

அவற்றை ஏன் கவிஞர்கள் சிலாகிப்பதில்லை? :o

 

கோட்டான் முழி, ஆந்தை முழி, என்று முழி என்று தானே சொல்கின்றார்கள்! :wub:

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள், ஆதித்த இளம்பிறையன்!

 

அது சரி, எங்களுக்கும் இரண்டு விழிகள் இருக்கே! 

 

அவற்றை ஏன் கவிஞர்கள் சிலாகிப்பதில்லை? :o

 

கோட்டான் முழி, ஆந்தை முழி, என்று முழி என்று தானே சொல்கின்றார்கள்! :wub:

 

காரணம், பெண் கவிஞர்கள் குறைவு. இருப்பவர்களுக்கும் சுதந்திரம் இல்லை. உங்கடை மனிசி ஒரு கவிஞராக இருந்து அவ ஆண்களின் மயக்கும் கண்களைப் பற்றிக் கவிதை எழுதினால்....... தாங்கிக்கொள்வீர்களா?

------------- என்னதான் இருந்தாலும் பெண்கள் (முக்கியமாகக் கவிஞர்களின் மனைவிகள்) நல்ல அண்டர்ஸ்ராண்டிங் உள்ளவர்கள்தான்.

Link to comment
Share on other sites

இப்பொழுதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தேன். கதை புதிதொன்றுமில்லை இருந்தாலும் பார்க்க பிடித்திருந்தது. ஒரு காட்சியில் நாயகி புருவத்தை வளைத்து ஒரு பார்வையை படர விடுவாள்....

மப்படித்த மறுநாள் மண்டை குடைவதைப் போல சில படங்களின் காட்சிகளும் சிலமணி நேரங்களாவது சிந்தையைச் சுழலச் செய்யும்.அந்த தாக்கம் தான் இந்த உளறல் ...கள் போலவே காதல் நினைவுகளும் உளறலை உற்பத்தி செய்கிறது ....

ஊடலுக்கு கூடலுக்கும் கண்களே உரிப்பொருள். சில காவியத்திற்கும் ஓவியத்திற்கும் கண்களே கருப்பொருள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவையே முதற்பொருள்.

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

மதர்க்கண், மழைக்கண், குவளைக்கண், கழுநீர்க்கண் ....

விழிகளில் இவ்வளவு விந்தை எப்படி முடிகிறதோ இந்தப் பெண்களால் !!??

இதழில் சுழியும், மோகன முறுவலும், கருவிழிகளில் கர்வமும், நுதலில் வளைவுகளையும் நொடிகளில் பிரசவிக்க இவர்களால் மட்டுமே முடியும்.

மனம் ஒரு மாயச் சக்கரம்... விழிச் சுற்றலில் வீழ்வது  விந்தையொன்றுமில்லை.....

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

 

பாரதியே அன்று பாடினான்..'சுற்றும் விழிச்சுடரரே கண்ணம்மா...',  

இப்போ ஒருவன் பாடினான் 'சுற்றும் விழிச் சுடரே... சுற்றும் விழிச் சுடரே... என் உலகம் உன்னைச்சுற்றுதே.. "

இப்பிடியும் ஒருவன் பாடினான்...

http://www.youtube.com/watch?v=QCqG3tXF4k4

Link to comment
Share on other sites

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

 

அங்கு அவள் விழியோ நர்த்தனம் ஆடுகையில் இங்கு

இவன் விழியோ புத்தியிருந்தும் சித்தமிருந்தும்

இரண்டும்கெட்டு திண்டாடுகிறது, தன்னிலை

மறந்து தடுமாறுகிறது...

அன்று மலர்ந்த செந்தாமரையோவென பறந்துவந்த

வண்டு தடுமாறுகிறதாம்...

ஐந்தறிவுகொண்டதுக்கு இந்நிலை

ஆற்றிவுகொண்டோனுக்கும் அந்நிலை அது

பெண்ணைப் பருகியபோதை இயற்க்கையின்

பாதை அது "விழியில் விழுந்து (அதுதான் விதி)

இதயம் நுளைந்து உயிரில் கலந்த(து) உறவே(வு)"

Link to comment
Share on other sites

ஜயோ.. வேண்டாம் அண்ணா.. போதை தெழிந்ததும் மைய்பூசிய விழியின் பொய் பூசிய சுவடுகள் வெளிப்படுகையில் பெருங்குளிரில் காற்று உறைவதைப்போல் உறைந்துவிடும் இதயம் பொய் உறைந்த விழி அறைந்த நெஞ்சறையின் விசும்பலுடன்.. :D

 

காதல் கனிந்து விட்டால் காவியம் பாட முடியுமா?  :)

 

 

அதுசரி அந்த இணைப்பைத் தந்தால் நாங்களும் பார்ப்பமெல்லோ ஆதித்த இளைம்பிறை அண்ணா.. :rolleyes:

 
இங்கே (uyirvani.com) இந்தப் படத்தின் டாரென்ட் இருக்கும்... தியேட்டர் பிரிண்ட் தான்...தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 
குறிப்பு: திருட்டு டிவிடி படம் பார்ப்பது உடலுக்கு கேடு... :)
 
 

 

இந்த பிகருக்கா இந்த படத்தைப் பார்க்கலாம். நல்ல கியூட்டா இருக்கா. நல்ல எளிமையான இளம் பெண்ணிற்கே உரித்தான நளினத்துடன் துடிப்புடன் கூடிய நடிப்பு..! :) :lol:

 

அதுவே....

 

 

 

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

 

இத்தனை விழிகளைப் பார்த்தவன் வாழ்க்கை

எப்படிக் கிழியாமல் இருக்கும் :D  :lol:

 

பருவக் காற்று பட்டாள்தானே பயிர்களுக்கு சுகந்தம்....

 

 

 

இணைப்புக்கு நன்றிகள், ஆதித்த இளம்பிறையன்!

 

அது சரி, எங்களுக்கும் இரண்டு விழிகள் இருக்கே! 

 

அவற்றை ஏன் கவிஞர்கள் சிலாகிப்பதில்லை? :o

 

கோட்டான் முழி, ஆந்தை முழி, என்று முழி என்று தானே சொல்கின்றார்கள்! :wub:

 

உவமையை கொடுப்போம் உருவ(க)த்தைப் பெறுவோம்... நாணத்தைக் காண நாம்தானே நாண் தொடுக்க வேண்டும்... 

அங்கு அவள் விழியோ நர்த்தனம் ஆடுகையில் இங்கு

இவன் விழியோ புத்தியிருந்தும் சித்தமிருந்தும்

இரண்டும்கெட்டு திண்டாடுகிறது, தன்னிலை

மறந்து தடுமாறுகிறது...

அன்று மலர்ந்த செந்தாமரையோவென பறந்துவந்த

வண்டு தடுமாறுகிறதாம்...

ஐந்தறிவுகொண்டதுக்கு இந்நிலை

ஆற்றிவுகொண்டோனுக்கும் அந்நிலை அது

பெண்ணைப் பருகியபோதை இயற்க்கையின்

பாதை அது "விழியில் விழுந்து (அதுதான் விதி)

இதயம் நுளைந்து உயிரில் கலந்த(து) உறவே(வு)"

 

நன்று வதா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.