Jump to content

படு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பயிற்ச்சி நெறி விபரம்


Recommended Posts

படு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பயிற்ச்சி நெறி விபரம் .

சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கு இங்கே வலுச் சேர்க்கும் சாககடைகளே பதில் சொல்லுங்கள்.இவர்களுக்கு தலமைத்துவ பண்புகள் பற்றி பயிற்ச்சி வழங்குவது தவறா? இதைத் தான் நீங்கள் புலி ஆயுதப் பயிற்ச்சி குடுக்கிறது குழந்தைகளுக்கு என்று எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதுவதில் என்ன உண்மை இருக்கிறது?எமது சந்ததி வளமாக வாழ பயிர்ச்சி குடுக்கும் தமிழ் ஈழ கல்விச் சேவை செய்த குற்றம் என்ன? வருங்கால வாழ்விற்காக பயிற்ச்சி எடுக்க வந்த பின்சுகள் செய்த குற்றம் என்ன? உங்கள் குற்றங்களை எங்கே கழுவப்போகிறீர்கள், நீங்கள் கால் கழுவும் சிறிலங்கா அரசின் கோர முகம் உங்களுக்குத் தெரிய வில்லயா? இணயத்தில் நீங்கள் சுற்றும் பொய்மைகள எங்கள் பின்சுகளைப் படு கொலை செய்வதற்கான துணிவை சிங்க பேரின வெறியருக்கு வழங்கி இருக்கிறது என்பதை உணர ஏன் மறுக்கிறீர்கள்.

உங்களுக்கு இருக்கும் வெறியின் உச்சம் தான் இது.இந்த வெறியரின் வெறி என்று தான் அடங்கும்?

140806purpose01ak6.jpg

140806timetable02ep1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறைகளாலும், மனிதப் படகொலைகளாலும் தமிழினத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள பேரினவாதச் சிந்தனைகள் குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை.

ஆனால் பெறப்போகும் தண்டணைகள் அதிகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

புலிகள் பயிற்ச்சி அளிக்கவில்லை.... ஆனாலும் ஆயுதப்பயிற்ச்சி அளிக்கப்பட்டதாக அரசாங்கம் எப்படி சொன்னது...??? இந்த கேள்வி வேண்டாம் என்பவர்கள் இதுக்காவது பதில் சொல்லுங்கள்.... அந்த பகுதியில் இளையவர்கள் கூடுகிறார்கள் எனபது விமானப்படைக்கு எப்படி தெரியும்...??? (மாணவர்கள் பதுங்குகுழிகளுக்கு போக முடியாத வேகத்தில் வந்த விமானங்கள் குண்டு வீசாமல் இவ்வளவு எண்ணிக்கையில் கொண்டிருக்க முடியாது.) அப்படியானால் இந்த உளவு தகவல் எப்படி அரசாங்கத்துக்கு போய் சேர்ந்தது....????

அரசாங்கம் உண்மையில் புலிகளின் பயிற்ச்சி முகாம் எண்றுதான் குண்டு போட்டது எண்று சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்... அது பயிற்ச்சி முகாம் எண்று தவறான தகவல் கொடுத்த தமிழ் கொலைகாறனை என்ன செய்யலாம்... அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படவேண்டும்....???

என்னைப்பொறுத்த வரை இந்த பாதகர்களுக்கு இலகுவான மரணதண்டனை கூட குறைவுதான்....!

Link to comment
Share on other sites

தல இதில தகவல் குடுக்க என்ன இருக்கிறது, அந்தப் பயிற்ச்சி பற்ற விபரங்கள் உள்ளூர் தினசரிகளில் வந்திருந்தது.அரசு தெரிந்தே இந்தத் தாக்குதலை மேற் கொண்டது.

Link to comment
Share on other sites

இங்கு பாவிக்கப்பட்ட குண்டும் அதி நவீன ரகத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகின்றது. அதாவது இக்குண்டானது நிலத்தில் விழ முன்னரே ஒரு குறிப்பிட்ட உயரத்திலேயே வெடிக்கும். அதனால் ஏற்படும் சேதம் மிகவும் அதிகமாக இருக்கும். இங்கும் அவ்வகைக்குண்டினாலேயே சேதாரம் அதிகம்.

Link to comment
Share on other sites

தல இதில தகவல் குடுக்க என்ன இருக்கிறது, அந்தப் பயிற்ச்சி பற்ற விபரங்கள் உள்ளூர் தினசரிகளில் வந்திருந்தது.அரசு தெரிந்தே இந்தத் தாக்குதலை மேற் கொண்டது.

அப்படிப்பார்த்தாலும் அந்த பத்திரிகைகள் இராணுவத்தினரின் புலனாய்வுப்பிரிவுக்கு போனது எப்படி எண்றும் பார்க்க வேண்டும்..... சும்மா எல்லைகாவலில் மக்களை பரிசோதிக்கும் படையினரின் தகவல்கள் கட்டளை தலமைக்கு போய் குண்டு வீச சொல்ல முடியாது அப்படி தகவல் வந்தாலும் ஆள் அனுப்பி தகவலை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பானவர்கள் புலனாய்வாளர்கள்...!

அதையும் தாண்டி புலிகளின் முகாம்கள் நேரடியாக மனிதர்களால் கண்காணிக்க பட முடியாதபடி உள்ளவை... புலிகளின் முகாம்களுக்கு அண்மையில் சந்தேகத்துக்கிடமாய் நடமாடியவர்கள் ஊர் மக்களாலேயே வீசாரிக்கப்பட்ட சம்பங்கள் ஏராளமாக நடப்பவை...!

பொது இடங்களில் இருக்கும், நேரடியாக தெரிந்த தகவல்கள்தான் இந்த செஞ்சோலை போண்ற பொது இடங்கள்... பணத்துக்காக சலுகைகளுக்காக காட்டி கொடுப்பவர்களின் செயலாகத்தான் இது இருக்கிறது....! வேவு விமானங்களால் இப்படியான நடமாட்டங்களை கண்காணித்து தாக்கும் சாத்தியம் அற்றவை....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.