Jump to content

நாசாவின் Voyager -1 விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிச் சாதனை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_66509267_r2620085-voyager_spacecraft-sp

 

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் (1977 இல்) விண்ணுக்கு அனுப்பிய Voyager விண்கலம் நீண்ட பயணத்தின் பின்னர் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி எமது பால்வீதி அகிலத்தின் இன்னொரு பகுதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக நாசா அறியத்தந்துள்ளது.

 

மனிதன் உருவாக்கிய ஒரு பொருள் விண்வெளியில் இத்தனை தூரம் பயணித்தமை இதுவே முதற்தடவையும் ஆகும்.

 

Voyager இப்பொழுது பூமியில் இருந்து சுமார் 19 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதாகவும் அதில் இருந்து சமிக்ஞைகளைப் பெற 17 மணி நேரங்கள் ஆவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சில சந்தர்ப்பங்களில் Voyager இல் உள்ள உணரிகள் அதன் உள்ளக சூழ்நிலை மாற்றமடைவதை இனங்காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

_69806156_2a196dfb-fba1-4851-8c8d-22945b

 

Voyager இன்னும் 40,000 ஆண்டுகள் தற்போதைய அதன் வேகத்தில் (45 கிலோமீற்றர்கள்/செக்கன்) பயணித்தால் மட்டுமே இன்னொரு நட்சத்திர மண்டலத்தை அடைய முடியும் என்றும் நாசா விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

 

_69809416_dot.jpg

 

[Voyager எமது பூமியை படம் பிடித்த போது பூமி மங்கலான வெளிர் நீல புள்ளியாகத் தோன்றும் காட்சி.]

 

 

http://kuruvikal.blogspot.co.uk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவியாரே1 விஞ்ஞானசெய்திக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

36 வருடமாக... எந்தப் பழுதும் இல்லாமல், 19 பில்லியன் கிலோ மீற்றர்கள் இந்த விண்கலம் பயணித்ததே.... ஆச்சரியம்.
நல்ல பயனுள்ள தகவல் நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

நன்றி நெடுக்ஸ். 
 
யான் அறிந்த இன்னும் சில தகவல்கள்...
 
Voyagerஇல் தங்கத்தட்டில் (ஒரு ரெக்கோடர்) பதிவு செய்து அனுப்பியுள்ளார்கள். அதில் பூமியில் உள்ள பல்லின மக்களிடமிருந்து 55 மொழிகளில் பதிவு செய்யப்பட்ட வாழ்த்து ஒலிகளையும் 70களில் பிரபல்யமானவர்களின் இசையினையும் வேற்றுகிரகவாசிகள் கேட்பதற்க்காக பொருத்தியுள்ளார்கள். திரவிட மொழிகளில் தெலுங்கும் கன்னடத்திலும் மட்டும் வாழ்த்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமக்கென்றொரு நாடு இல்லாதவர்கள் தமிழர்கள், ஒரு கிரகத்தை சொந்தமாக எப்படி வைத்திருப்பார்கள் என்றோர் அலட்சியமா? அல்லது தமிழன் எங்கிருந்தாலும் வேறு மொழிகளில் ஆர்வமுள்ளவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையா?
 
golden_rec_sidebar.gif
 
இவற்றின் ஆரம்ப இலக்கு வியாழன், சனி, யூரெனஸ் போன்ற அந்நேரத்தில் அதிகம் அறியப்படாத கிரகங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்க்காக. .Voyager 2,  செப்டம்பர் 5, 1977இலும், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்   ஆகஸ்ட் 20, 1977 இல் Voyager 1ம் அனுப்ப‌ப்பட்டது. இரண்டும் வெவ்வேறு பாதைத் தெரிவுகளில் ஒன்றன் பின் ஒன்றாக‌ பயணித்தாலும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பயணிக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம் மைக்கேல் மினோவிச் என்ற கணித மேதைதான். மணிக்கு பத்தாயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிகொண்டு சூரியனயும் வலம் வரும் கிரகங்களின் வேகத்தை இந்த விண்கலங்களுக்கு பெற்றுக்கொடுத்த அவரது கணிப்பு 40 வருட கால பயணத்தை 10 வருடங்களாக சுருக்கியதோடல்லாது இன்று வெவ்வேறு திசைகளில் இரண்டு விண்கலங்களும் சூரிய ஆதிக்கத்திலிருந்து விலகி பயணித்துக் கொண்டிருக்கின்றன.
 
http://www.youtube.com/watch?v=7BP4a5uyV1M
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி சிமால் பொயிண்ட். :)

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கென்றுதான் ஆங்கிலம் இருக்கிறதே என்று விட்டிருப்பார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கென்றுதான் ஆங்கிலம் இருக்கிறதே என்று விட்டிருப்பார்கள்..

 

கவலை வேண்டாம் இசை. தமிழனைப் புறக்கணித்த இவர்களின் வாழ்த்தை ஏலியன்கள் படிக்கவோ.. பதில் தகவல் அனுப்பவோ மாட்டார்கள். அனுப்பியவர் செத்துத் தொலைஞ்சாலும் உது நடக்காது. உந்த ரோவரை விட வானலையில் மிதக்கும் தமிழின் ஒலி பிரபஞ்சத்தில் அதிகம் ஊடுருவி பரவி இருக்கும் இப்போது..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கென்றுதான் ஆங்கிலம் இருக்கிறதே என்று விட்டிருப்பார்கள்..

 

எங்கடை சனத்துக்கு பாசை பெரிய முக்கியமில்லை எண்டது பெரியபெரிய விஞ்ஞானிகளுக்கும் தெரிஞ்சுபோச்சுது.
 
வெளிநாட்டுக்கு வந்து முப்பது நாப்பது வருசமெண்டாலும் கைப்பாசையாலையும் கண்ணாலை கதைச்சும் அலுவலை கொண்டுபோறவன் இந்த வீரத்தமிழன் எண்டு அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சுது......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எங்கடை சனத்துக்கு பாசை பெரிய முக்கியமில்லை எண்டது பெரியபெரிய விஞ்ஞானிகளுக்கும் தெரிஞ்சுபோச்சுது.
 
வெளிநாட்டுக்கு வந்து முப்பது நாப்பது வருசமெண்டாலும் கைப்பாசையாலையும் கண்ணாலை கதைச்சும் அலுவலை கொண்டுபோறவன் இந்த வீரத்தமிழன் எண்டு அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சுது......

 

எங்களை விட மோசமான கூட்டங்கள் லண்டனில் இருக்குது உ+ம் சிங்குகள் வெஸ்ரண் மார்கட் (இரவு மரகறி சந்தை) அந்த பக்கம் போனால் ஊரிலை துண்டுபோட்டு விலை பேச்சு தோத்திடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை விட மோசமான கூட்டங்கள் லண்டனில் இருக்குது உ+ம் சிங்குகள் வெஸ்ரண் மார்கட் (இரவு மரகறி சந்தை) அந்த பக்கம் போனால் ஊரிலை துண்டுபோட்டு விலை பேச்சு தோத்திடும் .

சரி....அவங்கள்ளை ஆரெண்டாலும் கை வைக்கட்டும் பாப்பம்??????...அவ்வளவுதான் சாருக்கான் தொடக்கம் சந்தானம் வரைக்கும் அந்தமாதிரி வோய்ஸ் குடுப்பாங்கள்.

ஆனா எங்களுக்கு??????? கூட இருக்கிறவனே நக்கலடிச்சு ஓரம் கட்டுவாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி நெடுக்ஸ். 
 
யான் அறிந்த இன்னும் சில தகவல்கள்...
 
Voyagerஇல் தங்கத்தட்டில் (ஒரு ரெக்கோடர்) பதிவு செய்து அனுப்பியுள்ளார்கள். அதில் பூமியில் உள்ள பல்லின மக்களிடமிருந்து 55 மொழிகளில் பதிவு செய்யப்பட்ட வாழ்த்து ஒலிகளையும் 70களில் பிரபல்யமானவர்களின் இசையினையும் வேற்றுகிரகவாசிகள் கேட்பதற்க்காக பொருத்தியுள்ளார்கள். திரவிட மொழிகளில் தெலுங்கும் கன்னடத்திலும் மட்டும் வாழ்த்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமக்கென்றொரு நாடு இல்லாதவர்கள் தமிழர்கள், ஒரு கிரகத்தை சொந்தமாக எப்படி வைத்திருப்பார்கள் என்றோர் அலட்சியமா? அல்லது தமிழன் எங்கிருந்தாலும் வேறு மொழிகளில் ஆர்வமுள்ளவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையா?
-----

 

உலகத்தில் வாழும்... எட்டுக் கோடித் தமிழனின் தலைவன், என்று... கட்டைக் குரலில் பேசும்... "டெட் பாடி" செத்துப் போயிட்டதா?

ராஸ்கெல்ஸ்... உங்களுக்கு, பணம் சேர்க்கத் தான்... தெரியுமா? தமிழையும்.... வளருங்களேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தொழில் நுட்ப வளர்சியுடன், 36 வருடங்களுக்கு முந்திய தொழில் நுட்பம், எவ்வாறு ஒத்துப் போகிறது என்பது ஆச்சரியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது, 46,000 வருசமா?

புராணக்கதைகளிள், முனிவர்கள், தேவர்கள், நினைத்தவுடன் அங்க, இங்க என்று போய் வந்தார்களே.

விஞ்ஞானம் இன்று சொல்வதை, அவர்கள் அன்றே, சொன்னதெப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது, 46,000 வருசமா?

புராணக்கதைகளிள், முனிவர்கள், தேவர்கள், நினைத்தவுடன் அங்க, இங்க என்று போய் வந்தார்களே.

விஞ்ஞானம் இன்று சொல்வதை, அவர்கள் அன்றே, சொன்னதெப்படி?

 

மெய்ஞானத்தை விஞ்ஞானம் களவாடி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Voyager 2, செப்டம்பர் 5, 1977இலும், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஆகஸ்ட் 20, 1977 இல் Voyager 1ம் அனுப்ப‌ப்பட்டது" இங்கு திகதி மாறியுள்ளது: Voyager-2 முன்பாகவும்(20.08.1977) Voyager-1 பின்பாகவும்(05.09.1977) விண்ணில் ஏவப்பட்டது என்பதே சரி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.