Jump to content

சிவன் கோவில் விருந்தில் சிக்கன் பிரியாணி! - உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
chicken-15913-150.jpg

உளுந்தூர்பேட்டை அருகே சிவன் கோவிலில் இன்று காலை நடைபெற்ற திருமண விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து சாமி கும்பிடாமல் திரும்பி சென்றனர். உளுந்தூர்பேட்டை அருகே நெய்வணை கிராமத்தில் சொர்ணகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோவில் பாடல் பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

  

அதுபோல இன்று காலை நெய்வணை கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் (29) என்பவருக்கும், காம்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கமலர் (25) என்பவருக்கும் சொர்ண கடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களுக்கு கோவில் கருங்கல் மண்டபத்தில் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

சிவன் கோவிலில் இறைச்சி விருந்து அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சாமி தரிசனம் செய்யாமல் கோவிலில் இருந்து வெளியேறி சென்றனர். மேலும் கோவிலில் இன்று பல திருமணங்கள் நடைபெற்றதால் அந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்களும் சிக்கன் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டதை பார்த்து முகம் சுளித்துக் கொண்டு சென்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92961&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகர்களுக்கு, கோவில் மண்டபங்களில்... நிகழ்ச்சி வைக்க இடம் கொடுக்கக் கூடாது என்று, சென்ற கிழமை இந்து அறநிலைத்துறை அறிவித்தது சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகர்களுக்கு, கோவில் மண்டபங்களில் இடம் கொடுக்கக்கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அந்தக் கோவில்களுக்குள் தமிழனை அழைத்துக் கொண்டு போய் விட நாத்திகன்தான் வரவேண்டும்

ஏன் அப்படி சொல்லுகின்றீர்கள்   :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அட, இங்க லண்டனில ஈலிங் அம்மன் கோவிலில. ஒரு கலியாணம் சில வருடங்களுக்கு முன்னர்...
 
கோவிலுக்கு அரச்சனை செய்வம் எண்டு போனால், ஐயா மந்திரம் சொல்ல, அங்கால, குத்துப்பாட்டு  நடக்குது.
 
பொறுத்துப் பார்த்த கோவில் நிருவாகி, போய், சொல்லிப் பார்த்தார்.
 
அவர்களோ, காசு வான்கிடீங்க தானே, கமுன்னு கிடங்க, ரகத்தில் கதை. மேலும் வேண்டும் என்றே, சத்தத்தினைக் கூட்ட, பிரச்சனை பெரிதாகி, கரண்டை நிறுத்த, போலீசைக்  கூப்பிடுவோம் என்ற நிலையில் கலியாணப் பாட்டி.
 
பிறகு பெரிசு ஒண்டு போய், மாப்பிளை, பொம்பிளையிடம். அம்மனை கோவிக்க வைக்காதையுங்கோ, இது உங்கள் வாழ்க்கை. தண்ணி போட்டு வந்து சிலர் செய்யும் கூத்தினால், உங்களுக்கு தான் பாதிப்பு என்று சொல்ல, மாப்பிளை, பொம்பிளை கூட்டாக வெகுண்டு, தமது தரப்பில் குழப்பியவர்களை அடக்க, எல்லாம் அடங்கியது.
 
இப்போது கோவில்கள் எல்லாம், ஒப்பந்தம் எழுதி வாங்கி தான் இடம் கொடுக்கின்றனர்.
 
லண்டனில் நடந்த இதற்கும், அங்கே நடந்த அதற்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லையே.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அட, இங்க லண்டனில ஈலிங் அம்மன் கோவிலில. ஒரு கலியாணம் சில வருடங்களுக்கு முன்னர்...
 
கோவிலுக்கு அரச்சனை செய்வம் எண்டு போனால், ஐயா மந்திரம் சொல்ல, அங்கால, குத்துப்பாட்டு  நடக்குது.
 
பொறுத்துப் பார்த்த கோவில் நிருவாகி, போய், சொல்லிப் பார்த்தார்.
 
அவர்களோ, காசு வான்கிடீங்க தானே, கமுன்னு கிடங்க, ரகத்தில் கதை. மேலும் வேண்டும் என்றே, சத்தத்தினைக் கூட்ட, பிரச்சனை பெரிதாகி, கரண்டை நிறுத்த, போலீசைக்  கூப்பிடுவோம் என்ற நிலையில் கலியாணப் பாட்டி.
 
பிறகு பெரிசு ஒண்டு போய், மாப்பிளை, பொம்பிளையிடம். அம்மனை கோவிக்க வைக்காதையுங்கோ, இது உங்கள் வாழ்க்கை. தண்ணி போட்டு வந்து சிலர் செய்யும் கூத்தினால், உங்களுக்கு தான் பாதிப்பு என்று சொல்ல, மாப்பிளை, பொம்பிளை கூட்டாக வெகுண்டு, தமது தரப்பில் குழப்பியவர்களை அடக்க, எல்லாம் அடங்கியது.
 
இப்போது கோவில்கள் எல்லாம், ஒப்பந்தம் எழுதி வாங்கி தான் இடம் கொடுக்கின்றனர்.
 
லண்டனில் நடந்த இதற்கும், அங்கே நடந்த அதற்கும் வித்தியாசம் இருப்பதாக தெறியவில்லையே.  

 

ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கின்றார்கள் என்று புரியவில்லை ...... இவர்களின் நோக்கம்தான் என்ன ?  :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம்!

 

இதுல தப்பு எதுவும் இருக்கிற மாதிரி தெறியால. பண்டைய தமிழ் மரபு படி சாமிக்கே படைக்கலாம். திருமுருகாற்றுபடையில முருகனுக்கு சேவக் கோழி அருத்து எப்படி படைக்க வேண்டும் என்று இருப்பட்தாக கேள்விப்பட்டு இருக்கின்றேன். தமிழ் நாட்ல

சில முருகன் கோவில்கள்கல் இப்படி படைக்கப்பட்டதும் எனக்கு தெறியும். அங்கேல்லாம் வினாயகர் சிலை வைத்து சேவல் படைக்கின்ற மறபை உடைத்திருஇக்கின்றானர்.

 

முருகனுக்கே இப்படினா , பிள்ளைக் கறி கேட்ட சிவனுக்கு நீங்க ஆடு வெட்டி பிரியானி போடுவதிள் என்ன தவறு?

 

 

 

Link to comment
Share on other sites

வணக்கம்!

 

இதுல தப்பு எதுவும் இருக்கிற மாதிரி தெறியால. பண்டைய தமிழ் மரபு படி சாமிக்கே படைக்கலாம். திருமுருகாற்றுபடையில முருகனுக்கு சேவக் கோழி அருத்து எப்படி படைக்க வேண்டும் என்று இருப்பட்தாக கேள்விப்பட்டு இருக்கின்றேன். தமிழ் நாட்ல

சில முருகன் கோவில்கள்கல் இப்படி படைக்கப்பட்டதும் எனக்கு தெறியும். அங்கேல்லாம் வினாயகர் சிலை வைத்து சேவல் படைக்கின்ற மறபை உடைத்திருஇக்கின்றானர்.

 

முருகனுக்கே இப்படினா , பிள்ளைக் கறி கேட்ட சிவனுக்கு நீங்க ஆடு வெட்டி பிரியானி போடுவத

 

 

தமிழரின் தொன்மையான சமயமான சைவத்திலே கடவுளே இயற்கைச் சக்திகள்தான். அந்த சக்திகளுக்கு வேள்வி என்று பறையடித்து உயிர்களை பலியிட்டு வணங்கினார்கள்.

 

ஆனால் தற்போதுள்ள சைவத்தில் புலால் உண்பதோ பலியிடுவதோ தவறு.

 

ஆலயங்கள் எந்த நெறிமுறைகளின்படி ஒழுகுகின்றன என அறிந்து.. எமக்கு அவைகளை உபயோகிக்க விருப்பமாயின் அவற்றின் ஆச்சாரங்களுக்கு உட்படுவதுதான் நியதி.. எமக்கு விருப்பமில்லாவிடின் எமக்கு அனுகூலமான இடத்தில் எமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே முறை.

சமையலறைக்குள் மலசலம் கழிக்கலாம் என்றாலும் கழிப்பவனுக்கு இந்த சமூகத்தில் என்ன நிலையோ.. அதைப் போலவே இதுவும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

ஏனுங்கோ..................... இந்தக் கண்ணப்ப நாயனார் என்னவாம் சிவனுக்கு குடுத்தவர் :) :) ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தொன்மையான சமயமான சைவத்திலே கடவுளே இயற்கைச் சக்திகள்தான். அந்த சக்திகளுக்கு வேள்வி என்று பறையடித்து உயிர்களை பலியிட்டு வணங்கினார்கள்.

 

ஆனால் தற்போதுள்ள சைவத்தில் புலால் உண்பதோ பலியிடுவதோ தவறு.

 

ஆலயங்கள் எந்த நெறிமுறைகளின்படி ஒழுகுகின்றன என அறிந்து.. எமக்கு அவைகளை உபயோகிக்க விருப்பமாயின் அவற்றின் ஆச்சாரங்களுக்கு உட்படுவதுதான் நியதி.. எமக்கு விருப்பமில்லாவிடின் எமக்கு அனுகூலமான இடத்தில் எமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே முறை.

சமையலறைக்குள் மலசலம் கழிக்கலாம் என்றாலும் கழிப்பவனுக்கு இந்த சமூகத்தில் என்ன நிலையோ.. அதைப் போலவே இதுவும் என்பது எனது கருத்து.

 

தவறு என்று கருதுகின்றேன், சோழியன்!

 

எமது பூர்வீக மதம், இயற்கையோடு சம்பந்தப்பட்டது என்பது உண்மை தான்!

 

ஆனால், பலியிடுவது என்பது, சைவத்துடன் தொடர்பு பட்டிருக்கவில்லை! மாமிசம் உண்ணுதல், இருந்திருக்கின்றது! ராஜ ராஜ சோழனின் இரவு உணவில், எப்போதும் ஆட்டுத் தொடை ஒரு கட்டாயம் இருக்குமாம்! பின்பு 'பிராமணீயம்' தமிழரின், போர்வலுவை அகற்றும் நோக்கமாக, மாமிசத்தை விலக்கி வைத்திருக்க வேண்டும்!

 

ஆயினும் ஓம குண்டத்தில், விலங்குகளை இடுதல், பலி கொடுத்தல் என்பன, வட இந்தியாவில் இருந்து தான் சைவத்தினுள் ஊடுருவியிருக்க வேண்டும்!

 

நாங்கள் வணங்கும் பிள்ளையாரே, ஒரு தெய்வமில்லை! ஒரு அரண்மனை வாசலில் அழகுக்கு வைக்கப் பட்ட சிலை! அதை 'வடக்கை வென்ற' மன்னனொருவன், தனது வெற்றிச் சின்னமாகத் தூக்கிக்கொண்டு வந்த வெறும் சில என்று சொன்னால், நம்பவா போறீங்கள்? :D

 

இந்தச் செயலை எதிர்த்துத் தான், புத்தர் 'புத்தமதத்தை' உருவாக்க வேண்டியிருந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ..................... இந்தக் கண்ணப்ப நாயனார் என்னவாம் சிவனுக்கு குடுத்தவர் :) :) ??

 

அந்தத் காலத்து படிபறிவில்லா காடு வாழ் வேடர் செயலை, இந்தக் காலத்து அறிவிலிகளுடன் எவ்வாறு ஒப்பிடமுடியும் கோமகனார்?

 

வேடர் கண்ணப்பர் கதை, வீம்புக்காக அல்ல  ஒரு விடயத்தினை புரியவைக்கவே சொல்லப் பட்டது.

Link to comment
Share on other sites

ஏனுங்கோ..................... இந்தக் கண்ணப்ப நாயனார் என்னவாம் சிவனுக்கு குடுத்தவர் :) :) ??

 

கோமகனாரா! கண்ணப்ப நாயனார் மாமிசத்தைப் படைச்சிட்டு கடவுளுக்கு கண்ணிலை இருந்து ரத்தம் வரேக்கை தன்ரை கணணையும் கொடுத்ததாகதான் புராணம் சொல்லுது. மாமிசத்துக் கண்ணப்ப நாயனாரை உதாரணத்துக்கு இழுக்கிறவை அவர் செய்த இரண்டாவது வேலையையும் செய்ய தயாரோ??? :D

Link to comment
Share on other sites

தவறு என்று கருதுகின்றேன், சோழியன்!

 

எமது பூர்வீக மதம், இயற்கையோடு சம்பந்தப்பட்டது என்பது உண்மை தான்!

 

ஆனால், பலியிடுவது என்பது, சைவத்துடன் தொடர்பு பட்டிருக்கவில்லை! மாமிசம் உண்ணுதல், இருந்திருக்கின்றது! ராஜ ராஜ சோழனின் இரவு உணவில், எப்போதும் ஆட்டுத் தொடை ஒரு கட்டாயம் இருக்குமாம்! பின்பு 'பிராமணீயம்' தமிழரின், போர்வலுவை அகற்றும் நோக்கமாக, மாமிசத்தை விலக்கி வைத்திருக்க வேண்டும்!

 

ஆயினும் ஓம குண்டத்தில், விலங்குகளை இடுதல், பலி கொடுத்தல் என்பன, வட இந்தியாவில் இருந்து தான் சைவத்தினுள் ஊடுருவியிருக்க வேண்டும்!

 

நாங்கள் வணங்கும் பிள்ளையாரே, ஒரு தெய்வமில்லை! ஒரு அரண்மனை வாசலில் அழகுக்கு வைக்கப் பட்ட சிலை! அதை 'வடக்கை வென்ற' மன்னனொருவன், தனது வெற்றிச் சின்னமாகத் தூக்கிக்கொண்டு வந்த வெறும் சில என்று சொன்னால், நம்பவா போறீங்கள்? :D

 

இந்தச் செயலை எதிர்த்துத் தான், புத்தர் 'புத்தமதத்தை' உருவாக்க வேண்டியிருந்தது

 

காளி வைரவர் கோயில்கள் உருவமில்லாத வீடுகளில் வழிபடும் கடவுள்கள்.. இக் கோயில்களின் பூசகர்கள் சைவக் குருக்கள் அல்லது பண்டாரக் குருக்களாக இருப்பார்கள். இவர்களுக்கும் பிராமணர்களுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் பூசகர்களாக உள்ள கோயில்களில் வேள்வி இடம்பெறும். பறைமேளம் ஒலிப்பார்கள். இக் கோயில்களில் நாதசுரம் தவில் போன்றன ஒலிப்பதை நான் பார்த்ததில்லை. இங்கு இடம்பெறும் வேள்விகளில் பறவைகள் விலங்குகள் என்பன பலியிடப்படும். மீன் முட்டை அவித்து படையலிடுவார்கள். சர்க்கரையற்ற புக்கையும் நீர்ச் சோறும் பொங்குவார்கள்.

இந்த சைவ அல்லது பண்டாரக் குருக்கள்மார்தான் தமிழர்களது தகனக் கிரியைகளையும் செய்வார்கள்.. (சுண்ணம் இடிப்பது போன்றன.) காடாத்து முடிந்து வீடு வாசல் கழுவி தோய்ந்து தோய்த்து துடக்கு கழித்த பின்னர்தான் பிராமணக் குருக்கள்மார் வீட்டுக்கு ஏனைய கிரியைகளுக்காக வருவார்கள். ஆனால் ஐரோப்பாவில் பிராமணக் குருக்கள்மாரே பிணத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து தகனக் கிரியைகள் செய்கிறார்கள்.. இது பணம் படுத்தும் பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவேளை சிவன் குடும்பத்தோடு .............
பூலோகத்திற்கு விஜயம் செய்தால் ???
 
அவர்களுக்கு என்ன உணவு கொடுப்பது என்று யோசிக்கிறேன்.
கோவிலில் படைக்காவிட்டாலும் .............
நல்ல சிக்கன் மட்டன் என்று நாங்கள் போட்டு பிடித்துவிட்டு அவருக்கு சும்மா காய் கறியை அவிச்சு வைத்தால் கோவிக்க மாட்டாரா?
 
இன்னொரு உயிரை உணவுக்காக கொல்வது தவிர்க்க பட  வேண்டும். என்பதில் மனிதர்கள் இடையே நல்ல சிந்தனையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்து சைவர்கள் இடையே மேலோங்கி இருக்கிறது.
 
ஆனால் இந்த அகிலத்தை படைத்த இறைவனிடம் இருக்கிறதா?? புலியும் சிங்கமும் மரசெடி கொடிகளை திரும்பியும் பாரா. பெரிய மீன்கள் உணவுக்காக சிசிய மீன்களை உண்பதை தவிர வேறு வழியில்லை. கடலுக்குள் சில நிலத்தடி தாவரம் இருப்பினும் திமிங்கலம்  உண்ண என்று ஏதும் இல்லை.
இதை படைத்தவர் ஏன் இதை பற்றி கொஞ்சமும் யோசிக்கவில்லை ??? 
Link to comment
Share on other sites

கண்ணப்பர்  இறைச்சி  படைத்தது தான்  முத்தி  அடைந்தார் அதுவும் தான் சாப்பிட்டு பாத்து ...........     விடுங்க   இது கண்ணப்பர்  காலம் போல இருக்கு

Link to comment
Share on other sites

 

ஒருவேளை சிவன் குடும்பத்தோடு .............
பூலோகத்திற்கு விஜயம் செய்தால் ???
 
அவர்களுக்கு என்ன உணவு கொடுப்பது என்று யோசிக்கிறேன்.
கோவிலில் படைக்காவிட்டாலும் .............
நல்ல சிக்கன் மட்டன் என்று நாங்கள் போட்டு பிடித்துவிட்டு அவருக்கு சும்மா காய் கறியை அவிச்சு வைத்தால் கோவிக்க மாட்டாரா?
 
இன்னொரு உயிரை உணவுக்காக கொல்வது தவிர்க்க பட  வேண்டும். என்பதில் மனிதர்கள் இடையே நல்ல சிந்தனையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்து சைவர்கள் இடையே மேலோங்கி இருக்கிறது.
 
ஆனால் இந்த அகிலத்தை படைத்த இறைவனிடம் இருக்கிறதா?? புலியும் சிங்கமும் மரசெடி கொடிகளை திரும்பியும் பாரா. பெரிய மீன்கள் உணவுக்காக சிசிய மீன்களை உண்பதை தவிர வேறு வழியில்லை. கடலுக்குள் சில நிலத்தடி தாவரம் இருப்பினும் திமிங்கலம்  உண்ண என்று ஏதும் இல்லை.
இதை படைத்தவர் ஏன் இதை பற்றி கொஞ்சமும் யோசிக்கவில்லை ??? 

 

சகலதையும் இறைவன் மனிதருக்காகவே படைத்தார் என விவிலியம் கூறுகிறது.

 

Link to comment
Share on other sites

கோமகனாரா! கண்ணப்ப நாயனார் மாமிசத்தைப் படைச்சிட்டு கடவுளுக்கு கண்ணிலை இருந்து ரத்தம் வரேக்கை தன்ரை கணணையும் கொடுத்ததாகதான் புராணம் சொல்லுது. மாமிசத்துக் கண்ணப்ப நாயனாரை உதாரணத்துக்கு இழுக்கிறவை அவர் செய்த இரண்டாவது வேலையையும் செய்ய தயாரோ??? :D

 

நாதமுனி எழுதிய இறுதிப் பதில்தான் மயூரனுக்கு . கண்ணப்பர் வேடரோ படிபறிவில்லா தவரோ இல்லைப் பிரச்னை , இறைவனுக்கு பரிபூரண அன்புடன் படைக்கப்படும் எதுவுமே  இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் :) :) .

 

Link to comment
Share on other sites

நாதமுனி எழுதிய இறுதிப் பதில்தான் மயூரனுக்கு . கண்ணப்பர் வேடரோ படிபறிவில்லா தவரோ இல்லைப் பிரச்னை , இறைவனுக்கு பரிபூரண அன்புடன் படைக்கப்படும் எதுவுமே  இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் :) :) .

 

உண்மை இறைவன் அன்பும் ,நீதியும் ,சாந்தமும் கொண்டவரானால்...... நிச்ச்யம் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் ................. :)
 
மீண்டும் வருவேன், 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.