Jump to content

நான் பழகிய யாழ் உறவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து  இன்று வர நான் யாழில் பழகிய உறவுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கானநேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்...

 


n1ux.jpg

 

 

(1)

மச்சான்  கரும்பு  மாப்பிளை கலைஞன்  :)  

 

யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பலஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன்  இரண்டு  நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒரு தருனம்...எந்த எந்த வீரருக்கு நல்ல எதிர் காலம் இருக்கு என்று கணிப்பிடுவதில் மச்சான் கிள்ளாடி..தொலை பேசியில் கதைக்கேக்க கூட புத்திமதி தான் கூட சொல்லிட்டு இருப்பார். வார வருடம் கனடா போர ஜடியா இருக்கு அப்படி போனால் மச்சானை கண்டிப்பாய் சந்திச்சிட்டு தான் வருவேன்...

 

 

(2)

 

சுண்டல்

 

மூன்று வருடத்துக்கு முதல் என்ற தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திச்சு யார் என்று பார்த்தால் நம்ம சுண்டல்..மச்சி நான் சுண்டல் கதைக்கிறேன்டா நீஎனக்கு ஒரு உதவி செய்யனும் என்று சொன்னான்..சரி சொல்லு மச்சி என்ன உதவி நான் உனக்கு செய்யனும் என்று கேட்டேன் ( சுண்டலும் உதவியை சொன்னான் நீ இதை தான் செய்யனும் என்று..அவன் சொல்ல என்ற வீடு ஒருக்கா  நில நடக்கம் வந்தது நடுங்கினபோல உனந்தேன்.அந்த கதையோடை சுண்டலுக்கு இன்னொரு பெயரும் வைச்சாச்சு முட்டை என்று  :D அதிலை இருந்து இரண்டு பேரும் அலட்ட வெளிக்கிட்டது தான் இன்று வர தொடருது எங்கள் நற்பு இடைக்கிடை  ஸ்கைப்பில கதைப்போம் சுகம் விசாரிப்போம்...சுண்டல் பார்த்தது கேட்டது ரசித்தது என்ற திரியில் ஒரு   வசனம் எழுதியிருந்தார் அதை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை அந்த வசனம் இதோ ( டாக்டர் டாக்டர்  என்ற கணவர் பத்து லீற்றர் பெற்றோல் குடித்து விட்டார் டாக்டர் இப்ப  என்ன செய்யலாம் டாக்டர் என்று..அப்ப டாக்கடர் சொல்லுவார் உங்கட கணவர பத்து கிலோ மீற்றர் ஓட சொல்லுங்கோ எல்லாம் சரியா வரும் என்று )சுண்டல் மச்சியிடமும் கதை கவிதை என்று எழுதுற திறமைகள் அதிகம் இருக்கு வாழ்த்துக்கள் மச்சி

 

 

(3)

 

ஜமுனா

 

ஜமுனா என்றால் யாழில் தெரியாத் ஆட்கள் இருக்க மாட்டினம்...ஜம்மு பேபி யாழிழ் எழுதினது ஏராளம்...கவிதை படக் கதை நாங்களும் கிரிக்கெட் விளையாடப் போறோம் என்று நகைச்சுவையாய் எழுதி யாழ் உறவுகளை சிரிக்க வைச்ச பெருமை ஜமுனாவையே சேரும்...நான் யாழில் இணைந்த காலத்தில் ஜமுனா கூட‌  ஜொல்லு விட்டு ஆளை ஆள் கிண்டல் அடிச்சசு பழகினது மறக்க முடியாத தருனம் அது..ஏதோ தெரியல இரண்டு பேருக்கும் எல்லா விசயத்திலும் நல்லா ஒத்துப் போக்கும்..யாழுக்கு வெளியில் நாங்கள் இரண்டு பெரும் நல்ல நண்பர்கள்...ஜமுனா கூட சேர்ந்து செய்த குழப்படி ஏராளம் அந்த நாட்களில் ...நான் யாழிழ் மனம் விட்டு பழகிய உறவுகளில் ஜமுனாவும் ஒரு ஆள்.... அப்ப நான் வரட்டா  :lol: 

 

(4)

குமாரசாமி தாத்தா

 

குமாரசாமி தாத்தா யாழில் இருக்கும் நல்ல உறவுகளில் தாத்தவும் ஒரு ஆள்...குமாரசாமி தாத்தாவிடம் இருந்து தான் நிறைய பஞ்சு டையிலாக் கற்றுக் கொண்ட்டேன்...எதையும் பயப்பிடாமல் துனிந்து எழுதக் கூடிய ஒரு உறவு.....நானும் ஜமுனாவும் ஒரு திரியில் சும்மா அலட்டி புலம்பி எழுதி கொண்டு இருக்க..தாத்தா வந்து எழுதினார் வைரவருக்கு நாய் வாய்த்த மாதிரி நீங்களும் வந்து வாச்சியல் என்று...அதிலை ஆரம்பிச்ச எங்கள் நற்பு இன்றும் தொடருது....கால் பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்..நான் சந்திக்க விரும்பும் உறவுகளில் தாத்தாவும் ஒரு ஆள்..அடுத்த முறை ஜெர்மன் வரும் போது உங்களை கண்டிப்பாய் சந்திப்பேன் தாத்தா......

 

 

(5)

தமிழ் சிறி அண்ணா

 

 

யாழில் புதியவர் முதல் பழையவர் வர தமிழ் சிறி அண்ணாவை தெரியாத ஆட்கள் இருக்க மாட்டினம்...யாழின் தூண் என்று கூட சொல்லலாம் இவர‌ .....கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு ஆள்...யாழிழ் அறிமுகம் ஆகும் உறவுகளை அன்பாய் வர வேற்பார்.....கருணாநிதியை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேணும் என்றால் தமிழ் சிறி அண்ணாவை தொடர்பு கொண்டால் விளக்கமாய் அந்த மாதிரி சொல்லுவார்...ஒரு திரியில் கருணாநிதியை பற்றி எழுதி இருந்தார் அதை வாசித்து வியந்து போனேன்...தமிழ் சிறி அண்ணாவும் கால் பந்து விளையாட்டு மேல் தீவீர ஆர்வம் கொண்டவர்...2010 பீபா உலக கோப்பை கால் பந்து போட்டியில் சிறி அண்ணா கூட விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒன்று....யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் தமிழ் சிறி அண்ணாவும் ஒரு ஆள்

 

 

(6)

 

வாத்தியார்

 

வாத்தியார் அண்ணா கூட விளையாட்டு திரியில் தான் என் கருத்தாடல் ஆரம்பம் மானது..வாத்தியார் மிகவும் அமைதியான ஒரு உறவு.....கூட அலட்டி எழுத மாட்டார்..மற்றவர்களை சீன்டி பார்ப்பதும் இல்லை.....எப்பவும் வெளிப்படை பேச்சு..மற்ற உறவுகளை கவனிப்பதிலும் வாத்தியார் அந்த மாதிரி..உறவுகள் 5000 அல்லது 10000 ஆயிரம் கருத்து எழுதி முடித்தால்..அவர்களுக்கு புது திரி திறந்து வாழ்த்து சொல்லி மற்றவர்களையும் வாழ்த்த செய்பவர்....வாத்தியாரும் ஒரு சில ஆக்கங்களை யாழிழ் எழுதி இருந்தார்..அதிலும் கோயில் சம்மந்தமாக்க எழுதி இருந்தார்....அடுத்த வருடம் நடக்க இருக்கும் பீபா உலக கோப்பை விளையாட்டில் யாழிழ் வாத்தியின் ஆதீக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்....மற்ற உறவுகளைப் போல் வாத்தியும் நல்ல ஒரு உறவு

 

 

(7)

 

டங்கு இசைக்கலைஞன்

 

இசைக்கலைஞன் அண்ணா..யாழில்யார் தன்னும் இவருடன் சீன்டி பார்த்தால் கூட கோவப் படமாட்டார்..பொறுமையா பதில் அளிப்பார்...நான் கவனித்த மட்டில் இவர சீன்டிப் பார்க்கிற ஆக்கள் எல்லாம் 50 கருத்துக்கு உள்ளை எழுதின ஆட்கள் தான் இவர கூட சீன்டி பார்ப்பது :D ...இசைக்கலைஞன் அண்ணாவுக்கு யாழ்ழுக்கு வெளியிலும் ஒரு சில ரசிகர்கள் இருக்கினம் இவரின் எழுத்தை விரும்பி வாசிக்க...என்ர நெருங்கிய உறவு சொன்னது இது தான் இசைக்கலைஞன் அண்ணா நல்ல ஒரு கருத்தாளர் என்று (வாழ்த்துக்கள் அண்ணா... ) யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் இசைக்கலைஞன் அண்ணாவும் ஒரு ஆள்.....

 

 

 

(8)

 

தமிழ் அரசு

 

தமிழ் அரசு அண்ணா...யாழின் புயல் என்று கூட இவர சொல்லலாம்...தீவிர ஈழ ஆதரவாளர்..ஒரு தருடனும் முரன் படுவது இல்லை தானும் தன்ர பாடும்...இவர் யாழிற்கு ஆற்றும் பணி பெரியது...உறவுகளை காணாட்டி கூட..காணவில்லை திரிக்கு சென்றும் ஆக்களை தேடுவார்..தெரியாததை கேட்டால் பொருமையா சொல்லியும் குடுப்பார்....

 

 

 

(9)

 

நிலாமதி

 

 

நிலாமதி அக்கா...இந்த அக்காவை பற்றி கூட எழுதலாம்...எல்லாருடனும் நல்ல மாதிரி பழகும் ஒரு உறவு...ஆரம்ப காலத்தில் தனி மடலில் சுகம் விசாரிப்பா...நான் எழுத்துப் பிழை விட்டு எழுதும் தமிழை பார்த்து கவலைப் பட்ட ஆட்களில் நிலா அக்காவும் ஒரு ஆள்....ஒழுங்காய் எழுதனும் என்று ஊக்கம் தருவா.நான் அவாக்கு வைச்ச பெயர் டீச்சர் ….நிலா அக்காவை இப்ப பெரிதாக்க யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...யாழிழ் நான் எழுதின கதையை அடிக்கடி ஆரம்பத்தில் நினைவு படுத்துவா...நிலாக்க கூட கருத்தாடின அந்த நாட்கள் மிகவும் சந்தோசமான நாட்கள்.....

 

 

 

(10)

 

நெடுங்கால போவான்

 

நெடுங்ஸ் அண்ணா...யாழின் அறிவாளி என்று கூட இவர சொல்லலாம்...நெடுங்ஸ் அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கு...இவரும் தீவிர ஈழ ஆதரவாளர்...இவருடன் எதிர் அணியினர் கருத்து எழுதி ஜெயிக்கிறது ரொம்ப கஸ்ரம்....நல்ல ஒரு எழுத்தாளர்..யாழிழ் நான் அதிக பச்சை குத்தினது என்றால் அது நெடுங்ஸ் அண்ணாவின் கருத்துக்கு தான்...ஈழ விசயத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் நல்லா ஒத்துப் போக்கும்...நெடுங்ஸ் அண்ணாவுக்கு விஞ்ஞான ரீதியிலா பலவிடையங்கள் தெரியும் அதிலும் நாசா சம்மந்தமாய்.. உங்களுக்கு நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்.... :)  :icon_idea: 

 

 

தொடரும்

 
 
 
எழுத்துப் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்  :D 
 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரிதான் பையன். நான் வரும்போது யமுனா இல்லை. தெரியாதவர்களைப் பற்றிய உங்கள் வரிகள் வாசிக்கும்போது அவர்கள் மீண்டும் யாழில் வந்து எழுத மாட்டார்களா?? என்னும் ஆதங்கம் எழுகிறது. தொடருங்கள் பையா. :D
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா பபா.. கலைஞன் மற்றும் சில கள உறவுகள்.. வரிசையில்.. நீங்களும் இதனைத் தொடர்வதில்.. வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  பதிவு தம்பி

எனக்கு சிலவற்றை  யாழைவிட்டு நான் போகுமுன் யாழில் செய்யணும்  என்ற விருப்பங்களில்  இதுவும்  ஒன்று.

அதை  தம்பிகள்  செய்வது மகிழ்ச்சி  தருகிறது.

 

அதுவும் பையன்  செய்யத்தொடங்கியிருப்பது மேலும   மகிழ்ச்சி  தருகிறது

காரணம்

தமிழில்  எழுத அவர்   சிரமப்படுபவர்

ஆனால் இதை தேர்ந்தெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது

வாழ்த்துக்கள்  தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26 , வாழ்த்துக்கள் பையா !  நல்ல விடயங்களை  எழுதுகின்றீர்கள்  தொடர்ந்து எழுதுங்கோ !! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், பையா!

 

உங்கள் தமிழ் நடை, பேச்சுத் தமிழ் போல, அழகாக உள்ளது!  :D

 

தமிழ் எழுதுவதில், நீங்கள் நீண்ட தூரம் வந்து விட்டீர்கள்! தொடருங்கள்!

Link to comment
Share on other sites

உண்மையில் இங்கு எனக்கு பலரை தெரியாது நீங்க எழுதுவதால் அவர்களை அவர் குணங்களை அறிய முடிகிறது தொடருங்கள் பையா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(11)

தமிழ் சூரியன்

 

தமிழ் சூரியன் அண்ணா...எல்லாருக்கும் தெரியுமே இவரின் திறமையை...2007ம் ஆண்டு தமிழ் சூரியன் அண்ணா இசை அமைத்து ஒரு பாடல் பாடி இருந்தார் தமிழ்செல்வன் அண்ணாவுக்கு காவியமாய் வீர காவியமாய் என்ற பாடல்...அந்த பாடலை பல தடவை கேட்டு இருந்தேன்...போன வருடம் தான் தெரிய வந்தது அந்த பாடலை இசை அமைத்து பாடியது நம்ம தமிழ் சூரியன் அண்ணா என்று... தமிழ் ஈழம் மேல்  நல்ல‌ பிரியம் கொண்டவர்...ஈழ விடையத்தில் எங்க இரண்டு பேருக்கும் நல்ல ஒத்துப் போக்கும்.... மற்ற உறவுகளை போல் தமிழ் சூரியன் அண்ணாம் நல்ல ஒரு உறவு......

 

 

(12)

 

விசுகு குகதாசன்

 

விசுகு அண்ணா யாழில் மூத்த ஒரு உறவு....தேசிய தலைவர் மேலும் அந்த போராட்டம் மேலும் நல்ல ஒரு பற்று கொண்ட ஒரு உறவு...நம்மல மாதிரி சின்ன பஸ்சங்களுக்கு நல்ல ஒரு வழி காட்டி என்று கூட சொல்லலாம்....போன மாதம் டென்மார்க் வந்து நின்ற பொழுது சந்திக்க கேட்டு இருந்தார்...ஓம் அண்ணா சந்திப்போம் என்று சொன்னேன்..பிறக்கு கலியாண வீடு போய் வந்து உடல் நிலையும் கொஞ்சம் சரி இல்லை அடுத்த முறை சந்திப்போம் என்று சொல்லி விட்டேன்....கருத்து களத்தில் மற்றவர்களுடன் சின்ன சின்ன முரன் பாடு இருந்தாலும் அதை மனதில் வைத்து கொள்ளாமல் பழக கூடிய ஒரு உறவு......

 

 

(13)

புங்கையூரன்

 

புங்கையூரன் அண்ணா.....இந்த அண்ணாவோடை என்ற ஆரம்ப கருத்து சண்டையில் தான் தொடங்கிச்சு...நான் காண வில்லை திரியில் மச்சானை தேடினேன்..புங்கையூரன் அண்ணா வந்து கேட்டு எழுதினார் என்ன பையா கிட்டடில ஏதாவது கிரிக்கெட் சீசன் வரப் போக்குதோ என்று....இவர் என்ன கிண்டல் அடிக்கிறாரோ என்று நினைத்து.. நானும் இப்படியே எழுதி விட்டேன் ஓம்டா அதுக்கு தான் அவர தேடுறேன் என்று..பிறக்கு தான் தெரிந்தது அவர் வயதில் மூத்தவர் அவர் கூடஅப்படி எழுதி இருக்க கூடாது என்று...புங்கையூரன் அண்ணா அதை மறந்து இருப்பார் என்று நினைக்கிறேன்....ஊருக்கு போய் விட்டு வந்து ஒரு ஆக்கம் எழுதி இருந்தார் வாசிக்க நல்லா இருந்திச்சு....யாழிழ் பம்புக்கு போக்கமல் வஞ்சகம் இல்லாமல் பழகும் ஒரு நல்லஉறவு

 

 

(14)

ராஜா முத்து

 

முத்து அண்ணா...இவர இசை மன்னன் என்று கூட சொல்லலாம்  :D ...எந்தப் பாடைலைக் கேட்டாலும் தேடி எடுத்து தருவார்...நல்ல ஒரு உறவு..தனி மடலிலும் சுகம் விசாரிப்போம்...2009ம் ஆண்டுக்கு முதல் அதிகம் யாழிழ் ராஜா அண்ணாவை காணலாம் அதுக்குப் பிறக்கு ராஜா அண்ணாவின் வருகை கொஞ்சம் குறைந்து விட்டது....மீண்டும் பழைய படி யாழுக்கு வருவார் என்று எதிர் பாப்போம்......

 

 

(15 )

புத்தன்

 

புத்தன் அங்கில்...இவர்ட எழுத்தை பார்த்து நான் ஆரம்பத்தில் அதிர்ந்து போனேன்...புத்தன் அங்கில் வைக்கிற கருத்து இடியும் மின்னலைப் போன்று..நல்லா எழுதுவார் அந்த நாட்களில்..இப்ப எழுதுவதை கொஞ்சம் குறைத்து விட்டார்...ஜமுனாவின் மாமா...ஒரு நாள் ஜமுனா கூட கதைத்து கொண்டு இருக்கும் போது புத்தன் அங்கில் எப்படி இருப்பார் கந்தப்பு எப்படி இருப்பார் என்று கேட்டேன்..அப்ப ஜமுனா ஒரு படம் அனுப்பினார் இது தான் புத்தன் அங்கில் என்று அந்தப் படத்தில் கந்தப்பு அங்கிலும் வேர ஒரு ஆளும் நின்டார் சரி என்று படத்தை பார்த்ததும் அழித்து விட்டேன்.....மீண்டும் பழைய புத்தன் அங்கிலை நாங்கள் யாழில் பார்க்கனும்.... :D 

 

 

(16)

அரவிந்தன் கந்தப்பு

 

கந்தப்பு அண்ணா...ஈழ போராட்டத்தில் நாடு விட்டு நாடு போய் கலந்து கொள்ளும் ஒரு உறவு....உலக கால்பந்து போட்டி உலக கிரிக்கெட் போட்டியை யாழிழ் திறம்பட நடத்துவார்...சின்ன சின்ன பரிசுகளையும் அனுப்பி வைப்பார்....ஈழ போராட்டத்துக்கு நல்ல ஒத்துழைப்பு ழங்கிய ஒரு உறவு...ஜமுனாவின் நெருங்கிய சொந்தம்....கந்தப்புவை ஆரம்ப காலத்தில் யாழிழ் அடிக்கடி காணலாம்..பிறக்கு கந்தப்புவின் வருகையும் கொஞ்சம் குறைந்து போய் விட்டது...மீண்டும் பழைய படி யாழுக்கு வருவார் என்று எதிர் பாப்போம்.....

 

தொடரும் :) 
 

Link to comment
Share on other sites

அருமையான பதிவு பையா..

பையனிடம் எனக்குப் பிடித்த பண்பு வெ ளிப்படையான தேசப்பற்று. பலர் (நான் உட்பட) சில கருத்துக்களை மறைமுகமாக அல்லது தவிர்த்தே எழுதுவோம். பையன் அப்படியல்ல.. மனதில் பட்டதை அப்படியே எழுதுவார். சீமானைப் போல. :D

வாழ்த்துக்கள் பையா..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் திரி. ஏன் சிலர் யாழ் பக்கம் வருவதில்லை என்று கேட்டு எழுதுங்கள்!

பொண்ணுங்களோட பழகுவதில் ஆர்வம் இருப்பதால் பையனோடு பழக்கம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(17)

குறுக்கால போவான்

 

குறுக்கால போவான் அண்ணா.....தீவிர ஈழ ஆதராவாளர் ஆனால் மற்ற ஈழ ஆதரவாளர்களை போட்டு வாங்குவதில் கிள்ளாடி...2009க்கு பிறக்கு இவரின் வருகையும் இல்லாமல் போச்சு....மீண்டும் அவர் யாழ் தளத்துக்கு வரனும் ....ஒரு திரியில் மின்னல் அண்ணாவை நல்லா போட்டு வாங்கினார்..அதே திரியில் கோவமும் பட்டு விட்டார்..மற்ற யாழ் உறவுகள் அவர சமாதானப் படுத்தினார்கள்....இவர் யாழிழ் இருந்த போது ஒவ்வரு திரியிலும் கருத்தாடல் நடத்து கொண்டு தான் இருக்கும்.......

 

 

 

(18)

 

மின்னல்

 

மின்னல் அண்ணா..ஈழத்தில் ஏதாவது தாக்குதல் நடந்தால் அந்த செய்தியை  யாழில் இணைக்கிற முதல் ஆள் மின்னல் அண்ணாவாய் தான் இருக்கும்...நல்ல ஒரு கருத்தாளர்..ஆயுதங்களை பற்றிய விபரம் நல்லா தெரிந்தவர்..அவர்ட்ட பெயருக்கு ஏப்ப போல தான் அவரின் கருத்தும் இருக்கும்.......2009க்குப் பிறக்கு இவரின் வருகையும் குறைந்து விட்டது... மின்னல் அண்ணா மீண்டும் யாழுக்கு வரனும்...

 

 

(19)

உமை

 

உமை அண்ணா.....தன்னை ஒரு நாளும் யாழில் விளம்பரப் படுத்திய தில்லை ...ஒரு சிலருக்கு இவர கருத்தாளரா மட்டும் தான் தெரியும்...ஆனால் ஈழத்துக்கு இவர் செய்த சேவை மிகப் பெரியது..2009ம்பது இறுதிக் கட்டப் போரில் இவரின் நண்பர்கள் போராளிகள் வீரச்சாவை தழுவி கொண்டு இருக்கையில் மற்றவர்கள் மனம் உடைந்து போனது போல் இவரும் மனம் உடைந்து போய் விட்டார்......இப்ப ஆளை யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...தனி மடலில் தம்பி என்று அன்பாய் எழுதுவார்..

 

 

(19)

சுப்பன்னை

 

சுப்பன்னை..இந்த மனிஷன் ரொம்ப ஜாலியான மனிஷன்...எல்லாருடனும் நல்லா பழகுவார்..இவர் சூறாவளி காற்று மாதிரி எப்ப எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது..யாழுக்கு வரும் போது தனி மடல் போடுவார் இங்கா பக்கம் வரலாம் தானே என்று.. சரி என்று நானும் வந்தால் பிறக்கு ஆளைக் காணக் கிடைக்காது....சுப்பன்னை கூட கருத்தாடிய அந்த நாட்கள் இனிமை.....மீண்டும் சுப்பன்னை யாழுக்கு வரனும்....

 

 

(20)

முனிவர் ஜீ

 

முனிவர் ஜீ இவரும் எங்கட வைச் தான்...நல்ல ஒரு உறவு ..நல்ல நண்பன்...இவரும் இருந்து இருந்துட்டு நல்லா நகைச்சுவையா ஏதாவது கதை எழுதுவார் யாழில்...அப்படி எழுதின ஒரு கதை தான் இது ( முனிவர் ஜீ தற்போது சீனாவில் என்ற கதை...எல்லாரும் சிரிச்சு வாசிச்சு மகிழ்ந்தினம் அந்த நாட்களில்...நல்ல உள்ளம் கொண்டவர்...இட சுகம் தனி மடலும் போடுவார்...இவரும் யாழ் வாரது குறைவு....முனிவர் ஜீ மீண்டும் யாழ் வரனும்......

 

 

(21)

தயா தலை

 

தயா அண்ணா...ஈழத்துக்கு எதிரா யார் கருத்து எழுதுவினமோ அவர்களுக்கு தயா அண்ணாவிடம் நல்ல மருந்து இருக்கு...தயா அண்ணாவின் கருத்தையும் ஆரம்ப காலத்தில் விரும்பி வாசிப்பேன்...தமிழ் ஈழத்துக்கும் அந்த போராட்டத்துக்கும் நல்லா உதவின ஒரு உறவு...கொஞ்சக் காலம் யாழ் வராமல் இருந்தார்..இப்ப முந்தின போல யாழ்  தளத்துக்கு வந்து போவார் கருத்தாடலில் எதிர் அணியினர போட்டும் தாக்குவார்...ஈழம் சம்மந்தமாய் தயா அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கு....தயா அண்ணா அன்றில் இருந்து  இன்று வரஒரு கொள்கையில் தான் இருக்கிறார் அது ஈழம்...

 

(22)

 

ஈழவன்85

 

ஈழவன் 85 தீவிர ஈழ ஆதரவாளர்...நான் யாழிழ் இணைந்த காலத்தில் இவர அதிகம் யாழில்காணலாம்..2009 தோடை இவரும் யாழ் வருவதை குறைத்து விட்டார்..ஜமுனாவிம் நெருங்கிய நண்பன்...ஈழம் மேலும் அந்த போராட்டத்தின் மேலும் அதிக பற்றுக் கொண்ட ஒரு உறவு..

 

(23)

 

இளங்கவி

 

இளங்கவி அண்ணா...கவிதை என்றால் நல்லா எழுதுவார்..கூட ஈழம் சம்மந்தப் பட்ட கவிதைகள் எழுதி இருந்தார்...இப்ப யாழில் அதிகம் காணக் கிடைப்பது இல்லை இவர ...எல்லாருடனும் அன்பாய் பழக கூடிய ஒரு உறவு...மீண்டும் இளங்கவி அண்ணா யாழ் வரனும்..முந்தின போல கவிதைகள் கதை என்று எழுதனும்.....

தொடரும் 

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்.... எல்லாரைப் பற்றியும் மிக நன்றாக புரிந்துவைத்து எழுதுகின்றீர்கள். இதில் நீங்கள் சுப்பண்ணை பற்றி எழுதியிருந்தீர்கள். என்னை யாழுக்குள் இழுத்து வந்ததே  சுப்பண்ணைதான். ஆனால் "கவிதை"  என்ற பெயரில் இல்லை.... வேறொரு பெயரில்...! :rolleyes:  சுப்பண்ணை என் நெருங்கிய நண்பனும் கூட! :)

தொடருங்கள்... பையன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழை அலங்கரித்த பழையவர்களைப் பற்றி அறிய உதவும் பதிவு. தொடரட்டும் உங்கள் படைப்பு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிர்வாகம்

 

(24)

 

மோகன்

 

மோகண் அண்ணா..இந்த அண்ணா கூட போட்ட அன்பு சண்டை அதிகம் அந்த நாட்களில்...மோகன் அண்ணா என்ற படியால் பொறுத்துக் கொண்டு இருந்தார்....நல்ல  பொருப்புள்ள கருத்துக்கள பொறுப்பாளர்...

 

 

(25)

 

இணையவன்

 

 

இணையவன் அண்ணா...நான் யாழிழ் இணைந்த ஆரம்ப காலத்தில் எனக்கு பெரிசா தமிழ் எழுத வராது..அப்ப ஒரு சில யாழ் உறவுகள் என்னை கிண்டல் அடிச்சினம்..அப்ப இணையவன் அண்ணா என்னை தனி மடலில் தொடர்வு கொண்டு நீங்கள் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கவலைப் பட வேண்டாம் கொஞ்சம் முயற்சி செய்து தமிழை எழுதுங்கோ என்று ஊக்கம் தந்தார்....கொஞ்ச நாளுக்கு முதல் மீண்டும் தொடர்வு கொண்டார் தம்பி நீங்களும் சுண்டலும் நல்ல நண்பர்கள் இரண்டு பேரும் தளத்தில் நாகரிகமாய் எழுதுங்கோ என்று சொன்னார்!!

 

 

(26)

 

நிழலி

 

நிழலி அண்ணா...நிழலி அண்ணை எப்பவும் வெளிப்படை பேச்சு...இவரும் யாழிழ் ஒரு சில ஆக்கங்கள் பதிவுட்டு இருக்கிறார்....நிழலி அண்ணாவுக்கு என்னை 2010ம் ஆண்டு முகப் புத்தகத்தில் அறிமுகம் செய்து வைச்சேன்...ஒரு சில உறவுகளுடன் கருத்துக் களத்தில் முரன் பட்டாலும் அதே உறவுகள் யாழ் வர வில்லை என்றாலும் தேடுவார்..இதை தான் சொல்லுறது மனம் சுத்தமாய் இருக்கனும் என்று அது நிழலி அண்ணாவிடம் இருக்கு...

 

 

(27)

 

நுனாவிலன்

 

நுனாவிலன் அண்ணா..இவரும் என்ன மாதிரி தான் கிரிக்கெட் ரசிகன்.. விளையாட்டு திரியில் இவரும் நானும் நிறைய தரம் கருத்தாடி இருக்கிறோம்...ஈழப் பாடல்கள் என்றால் இவருக்கும் நல்லா பிடிக்கும்...  

 

(28)

 
நியானி
 
நியானி அண்ணா அல்லது அக்கா...இவங்கள் கொஞ்ச நாளுக்கு முதல் தான் வந்தாங்க‌ இவங்களும் இணையவன் அண்ணா மாதிரி  நாகரிகமாய் கருத்து எழுதுங்கோ என்று சொல்வாங்கள்....எனக்கு இவங் இடம் இருந்து தனி மடல் வந்தால் அதில் நாகரிகமாய் எழுதுங்கள் என்று தான் வரும்... :)  :icon_idea: 
 
தொடரும்

 

 

 

Link to comment
Share on other sites

 

(19)

உமை

 

உமை அண்ணா.....தன்னை ஒரு நாளும் யாழிழ் விளம்பரப் படுத்திய தில்லை ...ஒரு சிலருக்கு இவர கருத்தாளரா மட்டும் தான் தெரியும்...ஆனால் ஈழத்துக்கு இவர் செய்த சேவை மிகப் பெரியது..2009ம்பது இறுதிக் கட்டப் போரில் இவரின் நண்பர்கள் போராளிகள் வீரச்சாவை தழுவி கொண்டு இருக்கையில் மற்றவர்கள் மனம் உடைந்து போனது போல் இவரும் மனம் உடைந்து போய் விட்டார்......இப்ப ஆளை யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...தனி மடலில் தம்பி என்று அன்பாய் எழுவார்...

 

நினைவூட்டலுக்கு நண்றி பையன்...   என் பங்குக்கும் சிலதை சொல்ல ஆசைப்படுகிறேன்.... 

 

உண்மையாக சொன்னால் உமையை போல ஊரில் உள்ள மக்களுக்காக  புலம்பெயர்ந்த நாட்டிலை அப்படி வேலை செய்தவர்கள் மிக குறைவு...  அப்படி இருந்தாலும் அதில் முக்கியமான ஆக்களில் உமையும் ஒருவர்...  அவருடன் நான் தொட்ர்பில் இல்லை எண்டாலும் மதிப்புக்கு குறைவில்லை... 

 

வணங்காமண் கப்பல் பொருட்கள் சேகரிக்கும் காலத்தில் தான் நான் உமையை பார்த்தேன்...(   என் வீட்டிலை என்னை தவிர எல்லாருக்கும் சின்னம்மை போட்டிருந்ததால் அவர்களோடை இணைய என்னால் அப்போது முடியவில்லை...நானாக கழண்டு கொண்டேன்)

 

ஆளை போலவே பெயரும் மிக சின்னது...  ஆனால் வேகம் குறையாமல் எல்லா வேலையையும் ஓடி ஓடி செய்து கொண்டு இருந்தார்...  கவியோடை சேர்ந்து  தாயகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளும் கோர்வை ஆக்கி சர்வதேச ஊடகங்களுக்கு குடுக்கிற பணியையும் சேர்த்து செய்து கொண்டு இருந்தார்...  கையறு நிலையிலையும் விடாமுயற்சியை கைவிடாமல் இருந்தார்கள்... 

 

பின்னரான காலங்களில் கவிராஜ் நாடுகடந்த அரசில் வேட்ப்பாளராக போட்டி போட்டார் அதே குழுவில் உமையின் சொந்த பெயரை கண்டு மகிழ்வாக இருந்தது...  அது தான் இல்லை எண்று பின்னை எழுதி இருந்தார் ...  அதை நான் இரசிக்கவில்லை...  

 

பிறகும் ஈழநாதம் இணையப்பக்கத்தை கொண்டு வந்து யாழில் இணைப்பார்...  பின்னராக காலங்களில் அதுவும் நிண்டு போனது... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் உங்கள் வாஞ்சையான பதிவுகளுக்கு நன்றிகள்
நல்ல பையன் கோபம் வந்தால் கட்டுப்படுத்துவது நல்லது.

 

அரசியல் என்றால் எதிர் விமர்சனங்கள் அதிகம் எதிர்பார்க்க வேண்டும்.

எந்தக் கருத்திலிருந்தும்  நாங்களும்  ஏதாவது கற்றுக் கொள்ளலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சகோ, உங்களின் பாணியே தனி ....... !
 எதனைச் செய்தாலும்  அதில் ஒரு வித்தியாசம் இருக்கும் ......!!
 பழக மிக இனிமையானவர் தேசியத்தின்மீது அதி தீவிர அக்கறை கொண்டவர் இப்படி சகோவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் ........
 
தொடர்ந்து எழுதுங்கள் ........ வாழ்த்துக்கள் சகோ ..!  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது பையா தொடருங்கள்.பையனுக்கு பிடிக்காத கருத்தளார்களில் முதலாவது ஆளாக நான் இருப்பேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிபையா . நல்ல முயற்சி .வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

அருமையான பதிவு பையா..

பையனிடம் எனக்குப் பிடித்த பண்பு வெ ளிப்படையான தேசப்பற்று. பலர் (நான் உட்பட) சில கருத்துக்களை மறைமுகமாக அல்லது தவிர்த்தே எழுதுவோம். பையன் அப்படியல்ல.. மனதில் பட்டதை அப்படியே எழுதுவார். சீமானைப் போல.

வாழ்த்துக்கள் பையா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பதிவு, கடந்த நான்கைந்து வருடங்களாக களத்தில் பதியப்படாத குறையை நீக்கிய பையனுக்கு நன்றி. :) 
அதுகும் ஒரே நாளில்.... 28 உறவுகளைப் பற்றி, பையன் எழுதியது ஆச்சரியப் பட வைத்தது.
 

பையன் யாழில் நிற்கிறான் என்றால்.... கிரிக்கெட், உதைபந்தாட்டம் சம்பந்தமான உரையாடலாக‌ இருக்கும்.
அல்லது... ஒட்டுக்குழுக்களுக்கு சம்பல் பேச்சு விழுந்து கொண்டிருக்குது என்று அர்த்தம். :D 
பல தடவை அவன் நித்திரை முழித்து தனக்கே.. உரிய பாணியில், ஒட்டுக்குழுக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்ததை நானறிவேன்.
 

அவனின் மழலைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். முன்பு இருந்ததை விட... இப்போ நன்றாக எழுதுகின்றார்.
வாத்தியாரின் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு வந்தால்... அவர் தமிழில் இன்னும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நினைக்கின்றேன். :lol: 
காலத்திற்குத் தேவையான பதிவை இட்ட பையனுக்கு, மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா எனக்கு தெரியாத பலரை அறிமுகப்படுத்தியதற்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.