Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சியாமளாவுக்கு இப்பொழுதெல்லாம் இதயம் அடிக்கடி வேகாமாக்த் துடிக்கிறது. எத்தனைதான் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவே இல்லை. கண்களை கண்ணீர் மறைக்க, தன்னிலையை எண்ணித் தானே கழிவிரக்கம் கொண்டாள். என்னால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே. யாரிடம் போய் இதைச் சொல்வது. யார் என்றாலும் எனக்குக் காறித் துப்புவார்களே. ஏன் நான் இப்படி ஆனேன் என எண்ணியே மனது குமைந்ததில் தலைவலி இன்னும் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை.

எல்லோரும் போல் என் வாழ்வும் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதனால் இப்படி ஆனதோ என எண்ணியவளின் மனம், தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் எண்ணிப் பார்த்தது. கணவன் தனக்கு என்ன குறை வைத்தார்?. என் விருப்பம் எல்லாம் நிறைவேறியதே அன்றி ஒருநாளாகிலும்  நிறைவேறாது விட்டதில்லையே. இல்லை நிறைவேற்றாது கணவர் விட்டதில்லையே. மற்றைய கணவர்கள் போல் சியாமளாவின்மேல் சந்தேகம் கூட இதுவரை கணவனுக்கு ஏற்படவில்லையே. எத்தனை சிறந்த கணவன். பிள்ளைகள் மட்டும் குறைவா என்ன. மகன் அர்விந்த்,மகள் தட்சா இருவருமே தாய்மேல் கொள்ளை அன்பு கொண்ட சுட்டிகள்.

படுக்கையிலும் கூட கணவன் அவள் விருப்பின்றி எதையும் செய்ததில்லையாயினும், அவனின் சீண்டல்களும், தீண்டல்களும் அவளை நிறைவாகத்தானே வைத்திருந்தன. அப்படியிருந்தும் ஏன் என் மனம் இன்னொருவனை நாடியது. சிலநேரம் அவளது இரசனைகள் சிலவற்றுடன் ஒத்துப்போக முடியாதவனாக தன் கணவன் இருந்ததுதான் காரணமோ? அவள் கணவனின் கதைக்கு உறவினர்கள் எல்லோரும் இரசிகர்களாய் இருந்தனர்.அப்படியிருக்க அவள் மட்டும் இன்னொருவனின் கதையில் மயங்கவேண்டி எப்படி வந்தது என யோசித்ததில் விடைதான் இதுவரை கிடைக்கவில்லை.

முகப் புத்தகம் என்னும் மாய வலையில் சிக்குண்டதனால் அவள் வாழ்வு இன்று சிக்கித் தவிக்கின்றது. எத்தனையோ பேர் முகப்புத்தகத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள்தான். ஆனால் யாரும் அவளுடனோ அல்லது அவள் யாருடனுமோ இதுபோல் பேச்சை வளர்த்ததும் இல்லை.நின்மதியைத் தொலைக்கவும் இல்லை. அவன் தூர தேசத்தில் இருந்தாலும் அவனுடன் அருகில் இருந்து கதைப்பதுபோல் அவள் உணர்ந்து குதூகலித்தாள். கணவன் மாலையில் வேலைக்குச் சென்றுவிட, பிள்ளைகளை பாடசாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபின் அவர்களுக்கு உணவு கொடுத்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருத்திவிட்டு இவள் கணனியே கதியெனக் கிடந்தாள்.

தருண், அவனுடன் கதைக்காது இப்போதெல்லாம் இவளுக்கு விடிவதே இல்லை. இத்தனைக்கும் அவனுக்கும் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் இருக்கின்றனர். ஆனாலும் அவளுக்கு அவன் தந்த மயக்கம் அதை எல்லாம் பெரிதாக எண்ண விடாது செய்தது. எப்போதும் அல்ல இப்போதுகூட கணவனுக்குத் தெரிந்தால் என்று என்னும்போதே நெஞ்சு பதைத்தது. இன்றுவரை அவளுக்குத் தன் கணவன் மேலும் எவ்வித வெறுப்பும் எழவில்லை என்பதே உண்மை. கணவனின் அன்பான பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மனதுள் ஒரு குற்ற உணர்வு ஓடும். ஆனாலும் தருணின் முன்னால் எல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடும்.

தருணுடன் கதைக்கும்போதெல்லாம் இருவருமே இதுபற்றி நிறைய விவாதித்தும் இருக்கின்றனர். அவனும் தன் மனைவிமேல் அளவிலா அன்புதான் கொண்டுள்ளான் . ஒரே  நேரத்தில் இருவர்மேலும் அன்பு கொள்வது என்பது இருவர் வாழ்விலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறதுதான் என்றாலும் இது எப்படிச் சாத்தியமாகிறது என தன்னைத் தானே வியந்தும் கேட்டிருக்கிறாள். இன்றுவரை கணவனின் அணைப்பு அவளுக்கு விருப்புள்ளதாகவே இருக்கிறது. கணவனுடன் நிறைவாக இயங்கவும் முடிகிறது. இப்படித்தான் பலரின் வாழ்வும் இருக்கிறதோ?? எனக்குத்தான் தெரியவில்லையோ என்று எல்லாம் தன் மனத்தைக் கேட்டுக் கேட்டு அவளுக்கே சலித்துவிட்டது.

தருணை மறப்பதும் அவனைத் தன் வாழ்வில் இருந்து அகற்றுவதும் அவளால் முடியவே முடியாததாகிவிட்டது. ஒரு நாள் அவன் குரல் கேட்கமுடியாது போனால் அவள் மனம் அன்று முழுதும் எதையோ பெரிதாக இழந்துவிட்டதுபோல் துடிக்கும். மீண்டும்  அவன் குரல் கேட்கும் வரை நின்மதியற்று,  பயித்தியம் பிடித்ததுபோல் ஆகிப்போவாள் அவள்.

நான்கு தடவைகள் அவர்கள் இருவரும் தனியே சந்தித்தனர். வாழ்வில் மறக்க முடியாத அந்த நாட்களை எண்ணி எண்ணி மகிழ்வதாக மிகுதி நாட்கள் கழிந்தன. அந்த இருதடவையும் அவனும் அவள்பால் ஈர்ப்புக் கொண்டவனாகவே இருந்தான். அவள்மேல் தான் எத்தனை அன்பு வைத்துள்ளேன் என்று அவளுக்கு விளங்கவில்லை என்று அவன் கூறிய வார்த்தையில் அவள் மயங்கித்தான் போனாள். அவனுக்குத் தன்மீதான காதல் அப்படியே இருக்கும் என்றும் அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டதும் அப்போதுதான்.

இருந்தாலும் அப்பப்ப அருண் என்னை மறந்துவிடுவானோ என்பதுபோல் அவளுக்குச் சந்தேகம் எழும். என்னை மறந்துவிட மாட்டீர்கள் தானே என்று அப்பாவித்தனமாய் அவனைக் கேட்டு அவன் மறக்க மாட்டேன் என்று கூறும் பதிலில் அவள் மனம் நிறைவு கொள்ளும். எத்ததனை நாள் இது தொடர முடியும் என்பதையோ அவன் அப்படியே மாறாமல் இருப்பானோ என்பதில் எல்லாம் அவளுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

தொடரும் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஒ...கதை அப்படியோ... தொடரட்டும்....தொடரட்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காய் சீ உது என்ன கதை 

 

உலகத்தில நடக்கிற கதைதான் கரன். இனிப்பு மருந்து மட்டும் தான் குடிக்கிறதோ??

 

Link to comment
Share on other sites

மனித வாழ்வின் தேடல்களில் இதுவும் ஒன்று . மேலைத்தேசத்தவர்கள் இந்தத் தேடலைத் தம் வாழ்வில் ஓர் அங்கமாகப் பார்க்க நாமோ அதற்குக் கலாச்சார அரிதாரம் பூசி பேசாப் பொருளாக்கின்றோம் . திருமணத்தின் பின்னான இருபால் கவர்ச்சிகள் மனதளவில் இருந்தால் யாருக்குமே அதனால் பிரச்னைகள் இல்லை .மாறாக அது உடல் ரீதியாகத் தொடருமானால் அதற்கான பின்விளைவுகளை இருபாலாருமே ஏற்றுக்கொள்ளவேண்டும் . ஆனால் எமது சமூகக் கட்டமைப்பைப் பொறுத்த வரையில் இதில் பெண்களே முதலாம் எதிரியாகக் கருதப்பட்டுத் தண்டனையைப் பெறுகின்றனர் . நல்லதொரு விவாதத்துக்குரிய மையப்பொருளை  வைத்துக் கதை சொல்லிய சுமேரியருக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) :) .

 

Link to comment
Share on other sites

கேபியின் படம் மாதிரி போகுது நிஜம்தான் எழுதுங்கோ தொடர்த்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமே வாசிக்க மிக ஆவல்!  :D

 

ஊர் புதினம் உலகப் புதினம் எண்டாக் காணுமே அலைக்கு

 

Link to comment
Share on other sites

இப்பொழுது  இப்பிடியான சம்பவங்கள் நிறைய நடக்குது. அப்படியானதொரு  சம்பவம் ஒன்றைத் தழுவி எழுதுகின்றீர்கள் என்பது புரிகிறது. முழுவதுமாக எழுதிமுடியுங்கள் அக்கா.

மீண்டும் வருகிறேன்! :)

Link to comment
Share on other sites

நான்கு தரம் தனிமையில் சந்தித்தது எந்த மட்டில் போனது? :rolleyes: அடுத்த பகுதியில் எழுதுங்கோ.. :D

Link to comment
Share on other sites

திருமணத்தின் பின்னான இருபால் கவர்ச்சிகள் மனதளவில் இருந்தால் யாருக்குமே அதனால் பிரச்னைகள் இல்லை .மாறாக அது உடல் ரீதியாகத் தொடருமானால் அதற்கான பின்விளைவுகளை இருபாலாருமே ஏற்றுக்கொள்ளவேண்டும் .

சரியான கருத்து சார்.. :unsure: பின்விளைவு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது..! :D

Link to comment
Share on other sites

தருண், அவனுடன் கதைக்காது இப்போதெல்லாம் இவளுக்கு விடிவதே இல்லை. இத்தனைக்கும் அவனுக்கும் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் இருக்கின்றனர். ஆனாலும் அவளுக்கு அவன் தந்த மயக்கம் அதை எல்லாம் பெரிதாக எண்ண விடாது செய்தது. எப்போதும் அல்ல இப்போதுகூட கணவனுக்குத் தெரிந்தால் என்று என்னும்போதே நெஞ்சு பதைத்தது. இன்றுவரை அவளுக்குத் தன் கணவன் மேலும் எவ்வித வெறுப்பும் எழவில்லை என்பதே உண்மை. கணவனின் அன்பான பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மனதுள் ஒரு குற்ற உணர்வு ஓடும். ஆனாலும் தருணின் முன்னால் எல்லாம் ஒன்றுமில்லை என்

 

இப்படித்தான் பலரின் வாழ்வும் இருக்கிறதோ?? எனக்குத்தான் தெரியவில்லையோ என்று எல்லாம் தன் மனத்தைக் கேட்டுக் கேட்டு அவளுக்கே சலித்துவிட்டது.

தருணை மறப்பதும் அவனைத் தன் வாழ்வில் இருந்து அகற்றுவதும் அவளால் முடியவே முடியாததாகிவிட்டது. ஒரு நாள் அவன் குரல் கேட்கமுடியாது போனால் அவள் மனம் அன்று முழுதும் எதையோ பெரிதாக இழந்துவிட்டதுபோல் துடிக்கும். மீண்டும்  அவன் குரல் கேட்கும் வரை நின்மதியற்று,  பயித்தியம் பிடித்ததுபோல் ஆகிப்போவாள் அவள்.

 

 

தனது குடும்பம் குழந்தைகள் எல்லாவற்றையும் விட இத்தகையதொரு அருவருப்பை அல்லது உறவை வளர்த்துக் கொள்கிறவர்களை ஒருவகை மனவியாதிக்காரராகவே நான் பார்க்கிறேன். காதல் சிறுவயதில் வந்தால் அது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் குடும்பம் குழந்தைகள் என்று ஆகிய பின்னர் இன்னொருவரில் வருவதையும் காதல் என்ற சொல்லில் கோர்த்து காதலையும் தங்கள் இச்சைக்கு அல்லது சலனத்துக்கு பாதுகாப்பு தேடும் மனிதர்களை புனிதர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாட்களாக அவனிடம் மாற்றங்கள் தெரிகின்றன. அதை அவளால் சீரணிக்க முடியவில்லையாயினும் தன்   நிலையை எத்தனையோ தடவைகள் அவனுக்கு எடுத்துரைக்க முயன்றும் அவன் அவற்றைக் காது கொடுத்துக் கேட்காமல் தன் எண்ணப்படியே செய்கிறான். முன்பு காலை மாலை என தொலைபேசியில் சிரித்துப் பேசி மகிழ்ந்தவனுக்கு இப்போதெல்லாம் அவளுடன் பேசுவதற்கு  நேரமே இல்லை என்பதற்குமப்பால் விருப்பம் இல்லை என்றே இவள் கருதவேண்டி இருந்தது. முன்பெல்லாம் மணிக்கணக்காகப் பேசுவார்கள். இப்போது மணி தேய்ந்து நிமிடங்களாகிச் செக்கன்களில் வந்து நிற்கிறது.

ஆரம்ப நாட்களில் அவளுக்காக வீட்டுக்குக் கூடச் செல்லாது  வேலை இடத்திலேயே அதிகநேரம் நின்று மேலதிக வேலை என்று மனைவிக்குப் பொய் சொல்லி மணிக்கணக்காக இவளுடன் கதைத்த நேரங்கள் எல்லாம் நினைவில் மட்டுமேயாகிப் போனதில் இவளுக்கு நினைவே நிந்தனையானது. மனைவி பிள்ளைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே இவளுக்கு செய்திகள் அனுப்பிப் பூரிக்க வைப்பான். இன்று கனவில் கூட அவன் அப்படிச் செய்வதில்லை. அவனின் அலட்சியம் புரிந்தாலும் அவன் மேல் இவள் கொண்ட அளவிலா அன்பின் முன், இவளால் அதை எல்லாம் பெரிதாக எண்ணவிடாது செய்தது. அவனின் அலட்சியத்தை எல்லாம் ஓரம்தள்ளி வைத்து விட்டு அவனிடம் பழி கிடந்தாள்  இவள். அவனின் அலட்சியம் இவளை எதுவும் செய்யவிடாது இவள் நம்பிக்கைகளைத் தகர்த்து இவள் சக்தியை எல்லாம் இழக்க வைத்து 
 

 

இரவில் இவள் தூக்கம் தொலைத்து அருணின் தொலைபேசிச் செய்திக்காய் காத்திருக்க, எல்லாம் மறந்து அவன் இன்பமாகத் தூங்கினான்.காலையில் அவன் தொலைபேசிக்காகக் காத்திருக்க, எனக்கு காலையில் யாருடனாவது கதைப்பதென்றால் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என்று அவன் கூறியதை இவள் மனம் ஏற்க மறுத்தது. ஏனெனில் இத்தனை நாட்கள் பிடித்த விடயம் எப்படித் திடீரெனப் பிடிக்காது போயிற்று என்ற கேள்வி இவள் மனதில் எழுந்து இவள் நின்மதியைத் தொலைத்தது. முன்பெனில் மணிக்கணக்காக எந்தவிதச் சலிப்புமின்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.

இப்பொழுது போனில் கடமைக்கு மூன்று நான்கு நிமிடங்களில் அவசரமான பேச்சுக்களுடன் இவள் பதிலுக்குக் கூடக் காத்திருக்காது முடித்துக்கொள்வது அவன் வழக்கமாகி விட்டிருந்தது. இவள் தன் மனக் கிடக்கையை இவனிடம் கூறினாலும் நீ அப்படி நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, அவளைச் சமாதானப் படுத்தக் கூட ஒரு வார்த்தையும் சொல்லாது சும்மா இருப்பான். அவளுக்கு அப்பொழுதெல்லாம் வனாந்தரத்தில் யாருமற்றுத் தனியாக இருப்பது போன்ற வெறுமை தோன்றும்.

முன்பென்றால் எந்த வேலைப் பளுவிலும் இவளுக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்புவான். அதே அவனுடன் அருகில் இருக்கும் நிறைவைக் கொடுக்கும். தனக்கு வேலை அதிகம் பொறு என்றான். இவளும் பொறுத்துத்தான் போனாள். ஆனால் தொடர்ந்தும் அவன் செயல்கள் இவள்மேல் அவனுக்கு ஈடுபாடு இல்லாமையையே காட்டியது.

இப்பொழுதெல்லாம் இவள் அனுப்பும் சாதாரண குறுஞ்செய்திகளுக்குக் கூட அவனிடமிருந்து பதில் வராது போனதில் இவள் மனம் படும் பாட்டை  அவளாலேயே தாங்க முடியாமல் இருந்தது. அவன் செய்கைகளை இவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததில், இவளுக்கு தன் மனதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் தவிப்பாக இருந்ததில் நண்பி நித்தியாதான் நினைவில் வந்தாள்.

ஒருநாள் நித்தியாவுக்கு தொலைபேசியில் அவள் வீட்டில் நிற்கிறாளா என்று நிட்சயம் செய்துகொண்டு, அவள் வீட்டுக்குச் சென்று தன் நிலையை  அவளுக்குச் சொல்லிவிட்டு, அவள்முன் கூனிக் குறுகி அமர்ந்திருந்தாள். நித்தியாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எவ்வளவு நல்ல பெண் சியாமளா. இப்படியாகி விட்டாளே  என்று இரக்கம் ஏற்பட்டது. அவளுக்கு சியாமளா கூறியதை முதலில் நம்ப முடியவில்லையாயினும் அவளே கண்ணீருடன் தன்முன்னே இருந்து கூறுவதை எப்படி நம்பாது விடுவது.

இருதலைக் கொல்லி ஏறும்பானாள்  நித்தியா. இருந்தாலும் தன்னை நம்பி அவள் வந்து தன் மனக் கிடக்கையைக் கூறும்போது சரியான ஒரு பதிலையும் வலுகாட்டளையும் அவளுக்குச் சொல்லி அவள் புரிந்துகொள்ள வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதனால், சரி பிரச்சனை இல்லை. முதல்ல என்ன குடிக்கிறீர். குடித்துவிட்டு ஆறுதலாகக் கதைப்பம் என்றுவிட்டு தேநீர் தயாரிக்க ஆரம்பித்தாள்.

மற்றும் நேரம் எனில் சியாமளாவும் குசினிக்கே வந்து இவளுடன் விடாது கதைத்துக்கொண்டு இருப்பாள். இன்று அவள் எழுந்து வரவுமில்லை. இவளும் கூப்பிடவும் இல்லை. தேநீர் தயாரித்து முடித்து முதல் நாள் செய்த ரோள்சும்  கொண்டுபோய் அவள்முன் வைக்க, சியாமளா நித்தியாவை நிமிர்ந்து பார்த்த பார்வையில் என்னை நீ கேவலமாக எண்ணவில்லைத்தானே என்னும் எதிர்பார்ப்புடனான கேள்வி தெரிந்தது.

நித்தியாவும் அதைப் புரிந்துகொண்டு, முதல்ல சாப்பிட்டுத் தேத்தண்ணியைக் குடியும். நாங்கள் வடிவாக் கதைப்பம் என்று அவளை இலகுவாக்க முயன்றாள். ஒருவாறு அவளின் பதட்டம் குறைந்துவிட்டது என்று அறிந்ததும், சியாமளா எதோ நடந்தது நடந்துவிட்டுது. நீர் செய்தது சரி பிழை என்பதுக்கும் அப்பால் இனியாவது நீர் உம்பாட்டில் இருப்பதுதான் நல்லது என்று கூறு முன்னரே, அதுதான் என்னால் முடியவில்லையே. என்னை தருண் ஓரம் கட்டுவதை என்னால் தாங்கவே முடியவில்லை. எப்பிடி எல்லாம்  என்னோட கதைச்சவர். இப்ப இப்பிடி இடை நடுவில விட்டா நான் செய்யிறது. எனக்கு ஒரு வேலையும் ஓடுதே இல்லை. விடிஞ்சாப் பொழுதுபட்டா இதே நினைப்பாக் கிடக்கு. இப்ப கணவர் கூட ஏன் ஒருமாதிரியா இருக்கிறாய் என்று கேட்கத் தொடங்கீட்டார். எனக்கு என்ன செய்யிறது எண்டே தெரியவில்லை என்று அழத்தொடங்கினாள்.

சியாமளா நீர் ஒண்டை வடிவா விளங்க வேணும். அவனும் ஏற்கனவே கலியாணம் கட்டி இரண்டு பிள்ளை இருக்கு எண்டு சொல்லுறீர். மனைவி பிள்ளையில அன்பும் இருக்கெண்டு சொல்லுறீர். இப்ப அவனுக்குத் தான் செய்யிறது பிழை  எண்டு  படுதோ தெரியாது. அதுக்குப் பிறகு நீர் அவனை போஸ் பண்ணுறது நல்லதில்லை.

நான் என்ன அவரை மனிசி பிள்ளையளை விட்டுவிட்டு வாங்கோ என்றா சொல்லிறன். என்னோட கதைச்சதுபோல தொடர்ந்தும் கதையுங்கோ அன்பு செலுத்துங்கோ எண்டுதானே. உப்பிடிப் பட்டவர் ஆரம்பிக்க முதல் எல்லோ யோசிச்சிருக்க வேணும்.என்னால அருணை மறக்க முடியேல்லை. எனக்கு உதவி செய் நித்தியா என்று கெஞ்சு  பவளுக்கு  எப்படிப் புரியவைப்பது என்று நித்தியாவுக்குப் புரியவில்லை.

நான் ஒன்று சொன்னால் அது உமது நன்மைக்கே என்று நினைத்து நான் சொல்லுறதை வடிவாக் கேளும் சியாமளா. நீர் தருணை மறக்கிறதுதான் நல்லது. உமக்கு ரண்டு பிள்ளைகள் இருக்கினம். அவர்கள் பாவம். நீர் உவனை நினைச்சு அதுகளைத் தண்டிக்கப் போறீரோ?? நித்தியா நிறுத்தமுதல் மீண்டும் அழுகையுடன் அவனை மறக்கவே என்னால் முடியாது அதைவிடச் செத்துப் போகலாம் என்றவளை, என்ன விசர்க் கதை எல்லாம் கதைக்கிறீர். கடவுள் உமக்கொரு நல்ல வாழ்க்கையைத் தந்திருக்கிறார். அதைக் காப்பாற்றிக்கொள்ளும். எனக்குத் தெரிஞ்ச ஒரு இந்தியப் பெண் இருக்கிறார். நன்றாகக் கவுன்சிலிங் செய்வார். நீர் அவனை முற்றாக மறக்க கட்டாயம் முடியும். நானே உம்மை அவவிடம் கூட்டிக் கொண்டு போறான். என் கணவருக்குக் கூட இந்த விசயத்தைச் சொல்ல மாட்டன் என்றதும் எனக்குச் சத்தியம் செய்யும் என்று சிறு பெண்போல் கையை நீட்டினாள். அவள் நம்பிக்கையைக் கெடுப்பான் எனென நித்தியாவும் சத்தியம் செய்து கொடுத்தது மட்டுமன்றி, அவள் மேல் அக்கறை கொண்டு அவளைக் கவுன்சிலிங்குக்கும்  கூட்டிக் கொண்டு போனாள்.

 

 

தொடரும் ..........

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி கரன். நான் தொடரும் போட மறந்துவிட்டேன் தொடர் இன்னும் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

 

 

இரவில் இவள் தூக்கம் தொலைத்து அருணின் தொலைபேசிச் செய்திக்காய் காத்திருக்க, எல்லாம் மறந்து அவன் இன்பமாகத் தூங்கினான்.காலையில் அவன் தொலைபேசிக்காகக் காத்திருக்க, எனக்கு காலையில் யாருடனாவது கதைப்பதென்றால் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என்று அவன் கூறியதை இவள் மனம் ஏற்க மறுத்தது. ஏனெனில் இத்தனை நாட்கள் பிடித்த விடயம் எப்படித் திடீரெனப் பிடிக்காது போயிற்று என்ற கேள்வி இவள் மனதில் எழுந்து இவள் நின்மதியைத் தொலைத்தது. முன்பெனில் மணிக்கணக்காக எந்தவிதச் சலிப்புமின்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.

நித்தியாவும் அதைப் புரிந்துகொண்டு, முதல்ல சாப்பிட்டுத் தேத்தண்ணியைக் குடியும். நாங்கள் வடிவாக் கதைப்பம் என்று அவளை இலகுவாக்க முயன்றாள். ஒருவாறு அவளின் பதட்டம் குறைந்துவிட்டது என்று அறிந்ததும், சியாமளா எதோ நடந்தது நடந்துவிட்டுது. நீர் செய்தது சரி பிழை என்பதுக்கும் அப்பால் இனியாவது நீர் உம்பாட்டில் இருப்பதுதான் நல்லது என்று கூறு முன்னரே, அதுதான் என்னால் முடியவில்லையே. என்னை தருண் ஓரம் கட்டுவதை என்னால் தாங்கவே முடியவில்லை. எப்பிடி எல்லாம்  என்னோட கதைச்சவர். இப்ப இப்பிடி இடை நடுவில விட்டா நான் செய்யிறது. எனக்கு ஒரு வேலையும் ஓடுதே இல்லை. விடிஞ்சாப் பொழுதுபட்டா இதே நினைப்பாக் கிடக்கு. இப்ப கணவர் கூட ஏன் ஒருமாதிரியா இருக்கிறாய் என்று கேட்கத் தொடங்கீட்டார். எனக்கு என்ன செய்யிறது எண்டே தெரியவில்லை என்று அழத்தொடங்கினாள்.

 

 

 

அருணோ தருணோ வடிவாய் ஒரு பெயரை செலக் பண்ணுங்கோ நண்பி, இரண்டும் நல்ல பெயர் தான்  :D தொடருங்கோ பிள்ளை!

 

 

 

Link to comment
Share on other sites

நித்தியா கணவருக்கு சொல்லமாட்டன் எண்டுபோட்டு யாழ்களத்தில் சொல்லுவது தவறில்லையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியா கணவருக்கு சொல்லமாட்டன் எண்டுபோட்டு யாழ்களத்தில் சொல்லுவது தவறில்லையா? :D

 

வருகைக்கு நன்றி இசை . கதையை முழுதும் வாசிச்சிட்டு சொல்லுங்கோ. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்க் கொசிப் முழுக்க சுமோவுக்கு தெரியும் போல :lol: கவனம் :( கதை சுவாரசியமாகப் போகுது :) தொடருங்கள்

Link to comment
Share on other sites

நான்கு தரம் தனிமையில் சந்தித்தது எந்த மட்டில் போனது? :rolleyes: அடுத்த பகுதியில் எழுதுங்கோ.. :D

 

இதுக்கு 2ம் பகுதியில் விடை இருக்கு. அந்த மட்டில் போன படியால் அருண்/தருண் இப்ப கதைக்கிறார் இல்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு 2ம் பகுதியில் விடை இருக்கு. அந்த மட்டில் போன படியால் அருண்/தருண் இப்ப கதைக்கிறார் இல்லை. :D

 

அப்ப அந்த மட்டில் போனா ஆண்கள் பிறகு கதைக்க மாட்டினம் எண்டு நீங்கள் சொல்லத்தான் தெரியுது. :lol:

 

Link to comment
Share on other sites

அப்ப அந்த மட்டில் போனா ஆண்கள் பிறகு கதைக்க மாட்டினம் எண்டு நீங்கள் சொல்லத்தான் தெரியுது. :lol:

இதிலென்ன சந்தேகம்? இப்படி உறவு வைத்தால் அதுக்கு தானே. பின்னே என்ன தெய்வீக காதல் என்று சொல்றீங்களா? :D 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஒரு மாதம் சென்றிருக்கும். சியாமளா விபத்தில்  இறந்துபோயிருந்தாள். கேட்டவுடன் இவளுக்கு என்ன செய்வதெனத் தெரியாது கண்ணீர்தான் எட்டிப் பார்த்தது.
சியாமளாவின் கணவனை நினைக்கவே நித்தியாவுக்குப் பரிதாபமாக இருந்தது. அவள் வீட்டுக்குச் சென்றபோது கணவன்  இருந்த நிலையைப்  பார்க்க இவளுக்கு அடிவயிறு பிசைந்தது. பிள்ளைகள் இருவரும் முழுதாக எதுவும் விளங்காது தந்தைக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். கணவனுக்கு இவள் ஏதாவது கூறியிருப்பாளா???இவள் தனக்குள் தானே எண்ணிக் குழம்பிக்கொண்டு இருந்தபோதுதான் மூன்றாம் நாள் இவளுக்கு ஒரு கடிதம் வந்தது. பின் விலாசம் இடாது யாராயிருக்கும் என்று யோசனையுடன் கடிதத்தைப் பிரித்தவளுக்கு படபடப்பு ஏற்பட்டு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

சியாமளா தான் எழுதியிருந்தாள். நித்தியா எனக்கு இப்ப நம்பிக்கையான ஒரே ஆள் நீர்தான். தருணை என்னால மறக்கவே முடியவில்லை நித்தியா. என் நினைவு முழுவதும் அவன்தான் ஆக்கிரமித்து இருந்தான். விடிய கண் முழிச்சு இரவு நித்திரை கொண்டபின்னும் கூட அவனையே நினைத்துக்கொண்டிருந்தேன். என் நிலை உமக்குச் சொல்லி விளங்காது. அவன் என்னை வெறுத்ததைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடிந்திருக்கும். ஆனால் அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருந்ததை தற்செயலாக நான் அறிய நேர்ந்தது. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படி நான் அதை அறிந்தேன் என்று எண்ணுகிறாய் என்று தெரிகின்றது.

அவனது வீட்டுத் தொலைபேசி இலக்கம் தந்திருந்தான். அவனது மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எக்காரணம் கொண்டும் எதுவும் கூற மாட்டேன் என சத்தியம் செய்த பின் அவன் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவனுடன் அந்த இலக்கத்தில் கதைப்பேன். அவன் என் தொலைபேசிக்கு பதில் தராது விட்டபின் நானும் முகப்புத்தகம், skype என்று எதிலாவது அவனுடன் தொடர்புகொள்ளப் பார்த்தால், அதையும் தடைசெய்துவிட்டான். மெயில் ஐ வேறு புளோக் செய்துவிட்டான்.

எனக்கு வேறு வழியின்றி அவனது வீட்டு எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன்.என் குரலைக் கேட்டதும் உடனே நிறுத்திவிட்டான். மீண்டும் மீண்டும் நானும் போனை எடுத்தேன். இனிமேல் எடுக்காதை என்று எத்தினைதரம் சொல்லுறது என்றபடி போனைக் கட் செய்துவிட்டான். மீண்டும் நான் எடுத்தபோது கோவத்தில் அவன் மாறி வேறு பட்டினை அழுத்திவிட்டு நிற்பாட்டியதாக எண்ணிக்கொண்டு யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தான். அது ஒரு பெண். என்னைப் பற்றி மிகக் கேவலமாக அந்தப் பெண்ணுக்குக் கூறிக்கொண்டிருந்தான்.

அப்பெண்ணும் என்னைப் போலவே பயித்தியம் பிடித்து இவனுக்குப் பிதற்றிக் கொடிருப்பதை கேட்டதுமுதல் என் மனம் என்னிடம் இல்லை. எத்தனை பெரிய நம்பிக்கையுடன் அவனுடன் பழகினேன். கோபம் ஆறியவுடன் மீண்டும் என்னுடன் கதைப்பான் என்று இருந்த நம்பிக்கையும் தகர்ந்து போனது. அவனை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்னும் வெறிதான் எனக்கு எழுந்தது. ஆனாலும் அதனால் என் கணவரோ பிள்ளைகளோ பாதிக்கக் கூடாது என்பதாலேயே எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போகாது வீதியைக் கடக்கும்போது விபத்துப் போல் வீதியில் பாய்ந்தேன்.  அவனிடம் நீர்தான் கூறவேண்டும். உன்னால் ஒருத்தி தற்கொலை செய்து  கொண்டாள் என்று.  அவன் இனிமேலும் இன்னொரு பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது. இந்த உதவியை நீர் எனக்குச் செய்தாலே என் ஆத்தமா இவ்வுலகை விட்டுப் போகும் என்று முடித்திருந்தாள்.

 தான் மடை வேலை செய்ததும் அல்லாது என்னையும் தேவை இல்லாமல் மாட்டி விடுகிறாளே என்று நித்தியாவுக்கு அவள் மேல் கோபம்தான் வந்தது. அவள்தான் இறந்துவிட்டாளே அவள் எழுதியதை பெரிதாக எடுக்கக் கூடாது என எண்ணி
பேசாதிருந்தவளுக்கு, கனவில் சியாமளா வந்து வெருட்டுவது போல் இருந்தது. தன் மனப் பயம் தான் இப்படி என்ன வைக்கிறதோ என்று எண்ணியவள், பிறகும் எதற்கும் அவனுடன் கதைத்துப் பார்ப்போம் என்று எண்ணி சியாமளா எழுதியிருந்த தொலைபேசி எண்ணுக்கு அவனுடன் கதைக்க அழுத்தினாள்.

இவள் சியாமளாவின் நண்பி என்றதும் மூன்று தடவைகள் போனை கட் பண்ணியவன், உங்கள் விலாசம் எனக்குத் தெரியும் என்று கூறியதும் தொய்ந்துபோன குரலில் என்ன என்றான். நித்தியாவும், சியாமளா போலீசுக்குக் குடுக்கச் சொல்லி எனக்கு ஒரு கடிதம் எழுதித் தந்திருக்கிறாள் என்று கொஞ்சம் மிகைப்படுத்தி அவனைத் திட்டித் தீர்த்தாள். அவனோ நான் என்ன செய்ய விருப்பமில்லாட்டி எப்பிடிக் கதைக்கிறது என்றான். அதை அவளோட கதைக்க முதலே யோசிச்சிருக்க வேணும். பெண்கள் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர்கள்.எல்லாப் பெண்களாலும் ஏமாற்றங்களை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாது. கணவன் இருக்க அவள் உங்களுடன் கதைத்தது தவறுதான். ஆனால் அதற்கு நீங்களும் ஒரு காரணம்தானே. ஒரேயடியா அவளை ஒதுக்காமல் கொஞ்சம் கொஞ்சமா குறைத்திருக்கலாம். அவளைப் போல இன்னொருத்தியையும் ஆக்கிப் போடாதேங்கோ தயவுசெய்து. உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கினம். இனிமேலாவது திருந்தி வாழுங்கோ. உப்பிடியான தவறுகள் ஏற்படாமல் இருக்கத்தான் எங்கட சமூகத்தில கட்டுப்பாடுகளை வச்சிருக்கினம். அது எல்லாருக்கும் நன்மைக்கே என்று தன் பிரசங்கத்தை முடித்தவள், இனியாவது உங்கள் குடும்பத்தை மட்டும் பாருங்கோ என்று கூறி வைத்துவிட்டாள். அவன் எதுவும் பேசாது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தான். அவன் திருந்துவானா மாட்டான என்பதற்குமப்பால் சியாமளா சொன்னதை அவனுக்குத் தெரியப்படுத்தியதால் நித்தியாவின்  மனதில் ஒரு நின்மதி பரவியது.

முடிந்தது

Link to comment
Share on other sites

ஏன் காவல்துறைக்கு தெரியப்படுத்தவில்லை நித்யா?? அதைவிடடிட்டு பெண்மை, மென்மை, வன்மை என்றிட்டு.. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.