Jump to content

நானும் கணணியும் நாடும் ..!


Recommended Posts

நாட்டில் இருந்து வெளிக்கிட்டு ஐரோப்பா வந்து ஒரு ஆறுமாதம் வெளிஉலகம் தெரியாது இருந்தன். அங்க போகாத இங்க போகாத அவனோட சேராத இவனோட சேராத அவங்கள் குறுப் பெடியள் இவனுகள் இவங்களுக்கு எதிர் பெடியள் எண்டு என்னை வெருட்டி வீட்டில இருத்தி போடுவாங்க. வீசா போடு அப்புறம் போய் வரலாம் எண்டு சொல்லி டிகெட் காசு போயிடும் எண்டு என்னை கூட்டி போறது இல்லை. சரி எண்டு வேலைக்கு போறவங்களுக்கு சமைச்சு கொடுப்பன். நல்லா தூள் அள்ளி போட்டு கறி வைப்பன். யாருக்கு தெரியும் அளவு.. என்ன சிவக்கவில்லை எண்டு போட்டு போட்டு கடைசியா கூடி போடும் பாவம் பேசி பேசி சாப்பிட்டு போவாங்கள் பெடியள்..

 

படமும் நான் பெரிதா பார்ப்பது இல்லை. அதோட இருந்த வீட்டில் தமிழ் சனல் வராது. வீட்டில் இருந்த ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய மடிக்கணணி வைத்து இருந்தான். மற்றவர்கள் எதிலும் பெரிய ஆர்வம் இல்லை. வேலை வீடு நித்தா என ஓடியபடி இருப்பார். இந்த சின்ன கணணி வைத்து இருந்த அண்ணணும் இரவுதான் வருவார். வந்து சாப்பிட்டு ஒரு கொஞ்ச நேரம் இணையங்கள் பார்ப்பார். நானும் வந்த புதுசு அவர் பார்க்கும் போது எட்டி எட்டி பார்க்குறது என்ன செய்திகள் எண்டு. அவர் எவருக்கும் தனது கணணி கொடுக்க மாட்டார் (அவர் தந்தாலும் அதை இயக்கி பார்க்கும் அறிவு நமக்கு இல்லை .) பிறகு பேஸ்புக் ...டுவிட்டர்...ஜிமெயில் ...யாகூ ..எண்டு எல்லாம் கதைப்பார். தானே படங்களை பார்த்து சிரிப்பார். இந்த ஸ்கைப் எப்பபாரு நொன நொன எண்டு அடிக்கும். அதிலும் கதைப்பார். ..போனிலும் கதைப்பார். கடும் அலுவலா இருப்பார்.. நமக்கு கடுப்பாகும் பயல் போடுற சீனை பார்த்து .

 

இரடி மகனே வேலைக்கு போக கணனிக்கு ஒரு வேலை வைக்கிறன் எண்டு நினைப்பான். ஆனால் ஒன்றும் செய்வது இல்லை. காதால இரத்தம் வர கதை நடக்கும். சிலவேளை அரசியல் அத்துப்படி. இப்பவும் யாழ் மாவட்ட தளபதி கிட்டு தான் இருக்குறார் என்று எல்லாம் நடக்கும். நானும் பல்லை கடிச்சுட்டு கிடப்பன். ஏன் வம்பு.. திருப்பி கேள்வி கேட்டா வீட்டால இறங்கு எண்டுவான் என்கிற பயம். எங்க போறது ஆக்களையும் பெரிசா தெரியாது.. கொண்டுவந்து விட்டவன் சொல்லிட்டு போனது உனக்கு வாயில சனி வெளிநாடு விளங்கும் வரை சும்மா மூடிட்டு இரு என்றுதான்... அதுக்கா இவனின் அரசியல் அறிவை கண்டு நான் வியந்து கதைப்பேன்.. அவரும் எடுத்து விடுவர் எப்படா நமக்கு வீசா கிடைச்சு இவன் மாதிரி சீன் போடுறது எண்டு நமக்கு மனதில ஒரு ஏக்கம் .

 

காலம் கூடி வந்துது போலிஸ் கூப்பிட்டு விசாரணை.. எழுதி கொடுத்தது ஒன்றும் விடாமல் சொன்னேன்.. சொல்லிட்டு வீட்டுக்கு வந்தா இங்க இவங்க விசாரணை என்ன கேட்டன், எத்தின கேள்வி, விசாரிச்சது பெட்டையா பெடியா கிழவனா கிழவியா..? இதை அறிஞ்சு இவங்க என்ன செய்ய போறாங்க எண்டு எனக்கு தெரியா.. ஆனாலும் சொன்னான் எல்லாம் ..அப்ப கணணி பார்த்தபடி அரசியல் அண்ணை சொன்னார் செய்திகள் இப்ப நல்லமாதிரி போடுறாங்கள் நாடு பிரச்சினை முடிஞ்சுது என்று.. கஷ்டம் தான் கிடைப்பது என்று.. எனக்கு கடுப்பாகிட்டு.. கள்ளக்கோழி பிடிக்க கம்பி வேலி புகுந்தவன் கீறின காயத்தை காட்டி ஆமி அடிச்சது எண்டு வீசா எடுக்குறான் எனக்கு காயம் எல்லாம் இருக்கு முதுகில் பீஸ் வேற இருக்கு எனக்கு தருவான் நீங்க இருங்க என பேசிட்டு இருக்க இன்னொரு குண்டு போட்டான்.. காயம் பீஸ் இருந்தா உங்களை தீவிரவாதியா பார்ப்பான் உடனும் வீசா மறுத்து பதில் வரும் என்று.. அட நாதாரி பயலே நல்ல வார்த்தை உனக்கு வராதா வெங்காயம் எண்டு மனசில நினைச்சுட்டு போயிட்டன் .

 

இரண்டு கிழமை கழிந்து வீசா கிடைச்சுது கடிதம் வந்துது.. நேர வேலையால வந்தவருக்கு பாருங்க மாஸ்டர் நாங்க எவ்வளவு கதை சொல்லி இருக்குறம் எங்க ஆக்களுக்கு வெள்ளை தோளுக்கு சொல்லாமல் இருப்பமா என்று ஒரு வாய் சவடல் விட்டுட்டு வேலை இருந்தா சொல்லுங்க இப்ப வீசா இருக்கு எனக்கு எண்டு அவரின் தன்மானத்தை ஒருக்கா சுரண்டி விட்டு பார்த்தன்.. மனுஷன் நாலாம் நாள் வேலை எடுத்து தந்துது.. முதல் மாத சம்பளம் வாங்கி முதல் வேலையா மடிக்கணணி வாங்கினான்.. வாங்கி வந்து எப்படி அதை இயக்குறது எண்டு தெரியாது உடனும் பெரியம்மாவின் மகன் ஒருத்தன் இத்தாலியில் இருக்குறான் அவன் அங்கயே சரியான கெட்டிக்காரன் யப்புனா ஹிந்துவில படிச்சவன் பாருங்கோ.. அவனின் நம்பர் இல்லை.. உடனும் யாழ்ப்பாணம் பெரியம்மாக்கு ஒரு பேனை போட்டு நம்பர் வாங்கி இவனுக்கு போனை போட்டேன்.. அவன் ஓம் எப்படி இருக்குறியல் கனகாலம் கதைச்சு அம்மா சொன்னவா வெளிநாடு வந்திட்டியள் எண்டு வீசா எல்லாம் ஓகே யா என குசலம் விசாரிச்சு போட்டு கேட்டான் உங்களிட்ட ஸ்கைப் இல்லையா அதில கதைக்க ப்ரீ அண்ணா என்று.. ஓமடா அதுதான் இண்டைக்கு ஒரு மடிக்கணணி வாங்கினனான் எனக்கு துப்பரவா ஒன்றும் தெரியாது உன்னட்ட கேட்பம் எண்டு எடுத்தனான் என்று சொல்ல.. அவன் ஓகே அண்ணா நல்லம் அது ஒன்றும் பிளேன் ஓடுற வேலை இல்லை நான் சொல்ல சொல்ல செய்யுங்கோ கையிலையா இருக்கு கணணி..? ஓம் சரி ஒன் பண்ணுங்கோ

நான் .பொறு

 

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..

அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..

சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..

சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?

போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..

சரி சரி கோவப்படாத சொல்லு..

ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?

ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..

ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........

ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....

சரி..

கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...

ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..

அதில en கிளிக் பண்ணுங்க .

ஓகே..

இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...

நான் என் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...

அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க

ஓம் வருது ம்ம் ..

அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு

ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....

ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ

ம்ம் பச்சையா ஓடுது .

சரி விடுங்க அதுதானா வரும் ..

வந்திட்டு..

இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..

ஓம் எழுத்து எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..

அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..

சரி பேஸ்புக் முதல் வேணும் ...

 

ஓகே ஒரு பெயர் சொல்லுங்க பேஸ்புக் திறக்க உண்மையான பெயரா அல்லது வேற பெயரா எண்டான்

நான் ஏன் வேறு பெயர் என் உண்மை பெயரை போடு என்றேன் அதுக்கு அவன் இல்லை கணனியில் நாடு பிடிக்கிறது எண்டால் எதாவது தமிழ் மறவன் ....ஈழ புதல்வன் இப்படி பெயர் போட்டா காண லைக் விழும் உங்களுக்கு அதுக்குதான் கேட்டேன் என்றான் .

அட பாவி இது வேறையா வேணாம் நீ நோமலா திற..

ஓகே அண்ணா இது உங்க ஐடி இது உங்க பாதுகாப்பு எண் என தந்தான் நானும் இருந்து உள்ள நாட்டு பெயருகள் எல்லாம் அடிச்சு தேடுறது ஆக்களை.. மூனாவது நாள் தம்பி ஸ்கைப்பில் கால் பண்ணுறான் எங்க உங்க பேஸ்புக்கில கானம் என்று.. வாங்கோ எதாவது பதிவு போடுங்கோ தமிழில கூகள் போய் எழுதுங்க அப்புறம் கொப்பி பண்ணி கொண்டுவந்து இங்க போடுங்க என விளக்கம் தந்தான்.. நானும் ஆத்திசூடி ..திருக்குறள் ..தத்துவம் கண்னதாஷன் எண்டு போடுவன்.. ஒருநாள் அவன் எனக்கு செம பேச்சு என்ன உங்களுக்கு பிரபலம் ஆக்கி வாரா பிளான் இல்லையோ எதாவது போராட்டம் பற்றி எழுதுங்க நீங்க வன்னியில் பார்த்த நிகழ்வுகள் எல்லாம் எழுதலாம் .. அப்படியா இனி எழுதுறன் எண்டு அடுத்த நாள் தொடங்கி போராட்ட பதிவுகள் தலைவரின் படம் ஊர்வலம் எண்டு எல்லாம் போட்டு எழுத லைக்கும் கொமன்சும் குவியுது எனக்கு தலைகால் புரியா சந்தோசம் பாருங்கோ...

 

நான் அந்தசண்டையில் நிண்டன் அங்க ஆமியை பிடிச்சான் இங்க காயப்பட்டன் எண்டு எழுத எழுத நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டு போகுது.. ஒருநாள் காணாட்டி உள் பெட்டியில் தேடி செய்திகள் என்ன ஆச்சு எங்க போட்டியல் என்ன நடந்தது எண்டு.. ஒரு பெரிய அளவில நாமக்கு கவனிப்பு பாருங்கோ.. நாம இரண்டு வேலை அதால இருப்பது குறைவு எண்டு சொல்ல முடியுமா.. அடிச்சு விடுறது ஒரு முக்கிய சந்திப்பு அதுதான் வரவில்லை அப்படி இப்படி கதையா விடுறது.. அவனுகளும் அதை நம்பி நம்ம பெரிய ஆள் போல அண்ணை எண்டு நினைக்குறது.. நாள் போக போக பேஸ்புக் சலிச்சு போக நமக்கு நாமே கேள்விகேட்டு எதுக்கு இந்த பிழைப்பு ஏன் ஊரை ஏமாற்றுவான் எமக்காக மடிந்தவர் தியாகங்களில் நான் ஏன் சினிமா காட்டவேணும் நாலு லைக்குக்கு ஆக அவர்கள் சாதனைகளை எனது என சொல்வது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம்...

 

அன்று முடிவு எடுத்தேன் இனி பேஸ்புக் போவது இல்லை கணக்கை செயல் இழக்க பண்ணிட்டு நிமிந்த போது என்னும் ஒரு மன நிறைவு எதோ ஒரு பாரம் குறைந்த மாதிரி இருந்துது பின்னர் புத்தகங்கள் வாசிக்க என்னை பழக்கி கொண்டேன் பொழுதை வேறு வழிகளில் செலவு செய்வது எப்படி என என்னை தயார் படுத்தி கொண்டு வந்து இருந்த தேசத்தின் மொழியை படிக்க கிளம்பினேன்...

Link to comment
Share on other sites

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..

அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..

சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..

சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?

போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..

சரி சரி கோவப்படாத சொல்லு..

ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?

ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..

ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........

ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....

சரி..

கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...

ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..

அதில en கிளிக் பண்ணுங்க .

ஓகே..

இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...

நான் என் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...

அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க

ஓம் வருது ம்ம் ..

அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு

ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....

ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ

ம்ம் பச்சையா ஓடுது .

சரி விடுங்க அதுதானா வரும் ..

வந்திட்டு..

இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..

ஓம் எழுத்து எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..

அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..

சரி பேஸ்புக் முதல் வேணும் ... /////

 

இங்கை நிக்கிறியள் அஞ்சரன் :D :D . அனுபவக் கதைகள் எழுதுவதானால் நாடு அடிபட்டு எழும்பினால்தான் எழுதலாம் . அது உங்களிடம் சிறிது தூக்கலாக இருகின்றது என நினைகின்றேன் . புலப் பெயர்வின் ஆரம்பக் காலகட்டங்களில் உங்கள் அறை நண்பரைப் போன்ற  பார்ட்டியள்   ஊரில் வந்து பிளைட் ஒட தாங்களும் அதோடை ஓடி சூட்கேசைப் போட்டுவிட்டு எறினதாகப் பீலா விட , நாங்களும் அதை உண்மை என்று நம்பிய காலம் ஒன்று உண்டு :lol: :lol: . அதை மீளக் கொண்டுவந்ததிற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .தொடருங்கோ :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 முதல் மாத சம்பளம் வாங்கி முதல் வேலையா மடிக்கணணி வாங்கினான்.. வாங்கி வந்து எப்படி அதை இயக்குறது எண்டு தெரியாது உடனும் பெரியம்மாவின் மகன் ஒருத்தன் இத்தாலியில் இருக்குறான் அவன் அங்கயே சரியான கெட்டிக்காரன் யப்புனா ஹிந்துவில படிச்சவன் பாருங்கோ.. அவனின் நம்பர் இல்லை.. உடனும் யாழ்ப்பாணம் பெரியம்மாக்கு ஒரு பேனை போட்டு நம்பர் வாங்கி இவனுக்கு போனை போட்டேன்.. அவன் ஓம் எப்படி இருக்குறியல் கனகாலம் கதைச்சு அம்மா சொன்னவா வெளிநாடு வந்திட்டியள் எண்டு வீசா எல்லாம் ஓகே யா என குசலம் விசாரிச்சு போட்டு கேட்டான் உங்களிட்ட ஸ்கைப் இல்லையா அதில கதைக்க ப்ரீ அண்ணா என்று.. ஓமடா அதுதான் இண்டைக்கு ஒரு மடிக்கணணி வாங்கினனான் எனக்கு துப்பரவா ஒன்றும் தெரியாது உன்னட்ட கேட்பம் எண்டு எடுத்தனான் என்று சொல்ல.. அவன் ஓகே அண்ணா நல்லம் அது ஒன்றும் பிளேன் ஓடுற வேலை இல்லை நான் சொல்ல சொல்ல செய்யுங்கோ கையிலையா இருக்கு கணணி..?

ஓம்

 

சரி ஒன் பண்ணுங்கோ

 

நான் .பொறு

 

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..

 

அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..

 

சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..

 

சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?

 

போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..

 

சரி சரி கோவப்படாத சொல்லு..

 

ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?

 

ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..

 

ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........

 

ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....

 

சரி..

 

கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...

 

ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..

 

அதில en கிளிக் பண்ணுங்க .

 

ஓகே..

 

இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...

 

நான் ன் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...

 

அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க

 

ஓம் வருது ம்ம் ..

 

அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு

 

ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....

 

ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ

 

ம்ம் பச்சையா ஓடுது .

 

சரி விடுங்க அதுதானா வரும் ..

 

வந்திட்டு..

 

இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..

 

ஓம் எழுது எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..

 

அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..

 

சரி பேஸ்புக் முதல் வேணும் ...

 

ஓகே ஒரு பெயர் சொல்லுங்க பேஸ்புக் திறக்க உண்மையான பெயரா அல்லது வேற பெயரா எண்டான்

நான் ஏன் வேறு பெயர் என் உண்மை பெயரை போடு என்றேன் அதுக்கு அவன் இல்லை கணனியில் நாடு பிடிக்கிறது எண்டால் எதாவது தமிழ் மறவன் ....ஈழ புதல்வன் இப்படி பெயர் போட்டா காண லைக் விழும் உங்களுக்கு அதுக்குதான் கேட்டேன் என்றான் .

அட பாவி இது வேறையா வேணாம் நீ நோமலா திற..

ஓகே அண்ணா இது உங்க ஐடி இது உங்க பாதுகாப்பு எண் என தந்தான் நானும் இருந்து உள்ள நாட்டு பெயருகள் எல்லாம் அடிச்சு தேடுறது ஆக்களை.. மூனாவது நாள் தம்பி ஸ்கைப்பில் கால் பண்ணுறான் எங்க உங்க பேஸ்புக்கில கானம் என்று.. வாங்கோ எதாவது பதிவு போடுங்கோ தமிழில கூகள் போய் எழுதுங்க அப்புறம் கொப்பி பண்ணி கொண்டுவந்து இங்க போடுங்க என விளக்கம் தந்தான்.. நானும் ஆத்திசூடி ..திருக்குறள் ..தத்துவம் கண்னதாஷன் எண்டு போடுவன்.. 

 

:lol: எனக்கு சிரிச்சு வயிறு நோவுது அஞ்சரன் அண்ணா.. செம காமடிதான்.. கிகிகி.. நல்ல கதை.. நன்றி அண்ணா பகிர்விற்கு..

Link to comment
Share on other sites

கலக்கல்.. :lol: :lol:

 

மிக்க நன்றி அண்ணா உங்களிடம் கருத்து பொறுவது மிக்க மகிழ்ச்சி :)

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..

அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..

சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..

சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?

போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..

சரி சரி கோவப்படாத சொல்லு..

ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?

ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..

ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........

ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....

சரி..

கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...

ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..

அதில en கிளிக் பண்ணுங்க .

ஓகே..

இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...

நான் என் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...

அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க

ஓம் வருது ம்ம் ..

அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு

ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....

ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ

ம்ம் பச்சையா ஓடுது .

சரி விடுங்க அதுதானா வரும் ..

வந்திட்டு..

இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..

ஓம் எழுத்து எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..

அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..

சரி பேஸ்புக் முதல் வேணும் ... /////

 

இங்கை நிக்கிறியள் அஞ்சரன் :D :D . அனுபவக் கதைகள் எழுதுவதானால் நாடு அடிபட்டு எழும்பினால்தான் எழுதலாம் . அது உங்களிடம் சிறிது தூக்கலாக இருகின்றது என நினைகின்றேன் . புலப் பெயர்வின் ஆரம்பக் காலகட்டங்களில் உங்கள் அறை நண்பரைப் போன்ற  பார்ட்டியள்   ஊரில் வந்து பிளைட் ஒட தாங்களும் அதோடை ஓடி சூட்கேசைப் போட்டுவிட்டு எறினதாகப் பீலா விட , நாங்களும் அதை உண்மை என்று நம்பிய காலம் ஒன்று உண்டு :lol: :lol: . அதை மீளக் கொண்டுவந்ததிற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .தொடருங்கோ :) :)

 

 

உங்களை போன்றோரின் ஊக்கமே எனது எழுத்து வளர்வதுக்கு முக்கியம் நன்றி அண்ணா :)

Link to comment
Share on other sites

அஞ்சரன், கணணியை வாங்கிய ஆரம்பத்தில் நம்மளை கணணி வித்துவான்கள் படுத்திய பாடு...யப்பா தாங்க முடியாக் கொடுமை. அவ்வளத்தையும் பிள்ளை எங்கள் சார்பிலும் எழுதியிருக்கிறீங்கள். மிக்க நன்றி தம்பி.

 

13வருடம் முதல் இந்த கணணி வல்லுனர்களால் பாதிக்கப்பட்ட தன்பத்தை ஒரு நகைச்சுவை நாடகமாக நானும் எனது பிள்ளைகள் கணவரும் சில நண்பர்களும் சேர்ந்து ஒலிப்பதிவு செய்து இணையத்தில் உலவவிட்டோம். அதன் ஒலிப்பதிவையும் விரைவில் இதில் இணைக்கலாமென இருக்கிறேன். நீங்களும் ஒருக்கா கொம்பியூட்டர் கோதண்டபிள்ளையின் அனியாயத்தை கேட்டுப்பாருங்கோ. நாளைக்கு நாடகம் கொண்டு வாறன்.

அனுபவத்தை அப்பிடியே நகைச்சுவையோடு தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நன்றி கே கரன் ..சுபேஸ் ..சாந்தி அக்கா . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வு அருமை. இன்னும் இருப்பதை எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

அனுபவப் பகிர்வு அருமை. இன்னும் இருப்பதை எழுதுங்கோ.

 

நன்றி அக்கா உங்கள் வரவுக்கு .

 

Link to comment
Share on other sites

அஞ்சரன்.... கலகலப்பாக, இரசித்து படிக்கும்வகையில் எழுதியிருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்...!

கொஞ்சம் எழுத்துப்பிழை, வாங்கினான்~ வாங்கினேன் என்பதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களில் வாசிக்கும்போதுசட்டென்று ஒரு குழப்பம் வருது - இவைகளைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும்படி... பேச்சு வழக்கினைக் கலந்து பாவிப்பது எல்லாம் மிக நன்றாகவே இருக்கு! :)

தொடர்ந்து எழுதுங்கள்...! :)

Link to comment
Share on other sites

அஞ்சரன்.... கலகலப்பாக, இரசித்து படிக்கும்வகையில் எழுதியிருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்...!

கொஞ்சம் எழுத்துப்பிழை, வாங்கினான்~ வாங்கினேன் என்பதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களில் வாசிக்கும்போதுசட்டென்று ஒரு குழப்பம் வருது - இவைகளைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும்படி... பேச்சு வழக்கினைக் கலந்து பாவிப்பது எல்லாம் மிக நன்றாகவே இருக்கு! :)

தொடர்ந்து எழுதுங்கள்...! :)

 

நன்றி கவிதை கவனத்தில் எடுக்கிறேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.