Jump to content

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....


Recommended Posts

தமிழ் தேசிய கூட்டமைப்பயும் சம்பந்தரையும் திட்டிய புலம் பெயர் தமிழரும் விக்னேஷ் வரனை பூனை என்ற சீமானும் இப்ப என்ன சொல்ல போகினம்

 

விலை போன சம்மந்தரும் பூனை விக்கியையும் தோற்கடித்த புலம் பெயர்த்த போராளிகளுக்கு நன்றி .

 

விழுந்தம் மண்ணில் இல்லை தண்ணியில அதால மண் ஒட்டவில்லை எண்டு சொல்லுவாக பொறுங்க அண்ணே :lol:

Link to comment
Share on other sites

  • Replies 392
  • Created
  • Last Reply

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

 

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

 

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

 

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

Link to comment
Share on other sites

இந்த வெற்றியை வழமை போல கூட்டைமைப்பு காத்தில விடாமல் எதாவது ஆக்கபூர்வமா செய்ய வேணும் இந்த மாகாண சபை அதிகாரத்தில் காணி காவல் துறை அதிகாரம் எடுக்கலாம் அதனை செய்ய வேண்டும்

Link to comment
Share on other sites

திரும்பவும் சொல்லுறன்... தேர்தல் விஞ்ஞாபனத்தை பிறேம் போட்டு வைச்சிருங்கோ!

 

பிறகு 77 இலை ஏமாந்த மாதிரி ஏமாற வேண்டியிருக்கும்...

 

திரும்பவும் முதலிலை இருந்து தொடங்கேலாது.....

Link to comment
Share on other sites

மிக நல்ல செய்திகள்....

இனி பதவிக்கு வந்தவர்கள்...பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்...

Link to comment
Share on other sites

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 20,000 வாக்குகள் வேறுபாட்டில் அமோக வெற்றி.!!

த.தே.கூ : 23742

ஜ.ம.சு.கூ :3751

 

 

 

Link to comment
Share on other sites

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

 

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

 

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

 

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

அதுவே யதார்த்தம் நிழலி ........

Link to comment
Share on other sites

தமிழ் தேசியம் என்பது எந்த அடக்குமுறைக்கும் அடிபணியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கு உருப்படயான தீர்வு எதையும் பெற்றுக்கொடுக்க உதவாது என்றாலும் தமிழர்களுடைய உரிமைக்குரல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட வில்லை விதைக்கப்பட்டதென்பதையும் மகிந்த சிந்தனையையும் கோத்தபாய போர்முலாக்களையும் தாண்டி அது வீறுகொண்டு எழும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

 

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

 

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

 

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

உண்மை தான் அண்ணா...

Link to comment
Share on other sites

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

 

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

 

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

 

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

 

100 வீத உண்மை அண்ணா 2009 அடங்கிய புயல் 2013 வடமாகணத்தில் சுழன்றடிக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் முடிவின் மூலம் ஒரு விடயம் தெளிவாகின்றது இரு தேசிய இனங்களும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது என்பதினை மீண்டும் நிரூபித்துள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முடிவுகளை வைத்து, சிங்களவர்களும் அவர்களுடன் சேர்ந்து இயக்குங்குபவர்களும், தமிழ் தலைமைகளும், புலம் பெயர்ந்த  தலைமைகளும் தங்களுடைய "பங்கை" உணர்ந்து அதற்குரிய வகையில் செயற்பட வேண்டும். இதே போல் கிழக்கு மக்களும் இணைந்தால் நாங்கள் ஒரு அங்கீரீகரிக்கபடாத தேசத்தின் புத்திரர்கள் என்று யாபெருக்கும் விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபைத் தேர்தல் 30 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது:-

 

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் பெற்றிருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை நிட்சயமாக பெற்றுக் கொள்ளும் என்ற நிலையில் எஞ்சியுள்ள 1 ஆசனமும் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்து 4 ஆசனங்களாக மாறலம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

முல்லைத் தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 4 ஆசனத்தையும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

மன்னாரில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 1 ஆசனம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், 1 ஆசனம் முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் 6 ஆசனங்களில் 4 ஆசனத்தை தமிழரசுக் கட்சி கைப்பற்றும் எனவும் இது 5 ஆசனமாக மாற்றமடைய வாய்ப்பு உண்டு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி போனஸ் ஆசனத்துடன் 30 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

 

 

 

Link to comment
Share on other sites

சிங்களப் பகுதிகளில் மகிந்த பெருவெற்றியும் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி பெரு வெற்றியும் பெற்றுள்ளன.

 

சிங்களம் எவ்வளவு பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சனநாயக மறுப்புகள் என்று நிலைமை மோசமானாலும், சிங்கள பேரினவாதத்தினை உயர்த்திப் பிடிக்கும் கட்சிக்கே தன் ஆதரவை மீண்டும் மீண்டும் கொடுக்கும் என்ற உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

 

தமிழர்கள்  தமக்கெதிராக எத்தனை சவால்கள், அச்சுறுத்தல்கள்,  இழப்புகள் வந்தாலும் வெறுமனே வசதிக்கும், பணத்துக்கும் சோரம் போகாமல் தன் உரிமைகள் விடயத்தில் என்றும் விழிப்புணர்வுடன் தான் இருக்கும் என்பதை மீண்டும் காட்டியுள்ளன.

 

ஒரு தேசத்தில் இரண்டு தேசியங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளன.

 

இனி கூட்டமைப்பு இந்தியாவை கேட்கலாம் இலங்கையை நெருக்குமாறு....

சம்பந்தர் இந்தியாவை சுத்தியதும் நல்லதா போச்சு...

சம்பந்தர் தமிழ்நாடு அரசோடு கூடிய நட்பைப்பேணுவது...நல்லது...அதுவே மத்திய அரசை கட்டுப்படுத்தும் வழி (எனது 2 அணா) :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுப்பிட்டி தொகுதியை கைப்பற்றியது தமிரசுக்கட்சி

 

வட மாகாண சபை தேர்தலின் உடுப்பிட்டி தேர்தல்;தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசுக்கட்சி 18855

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2424

ஐக்கிய தேசியக்கட்சி  - 57

கோப்பாய் தொகுதியை கைப்பற்றியது தமிரசுக்கட்சி

 

வட மாகாண சபை தேர்தலின் கோப்பாய் தேர்தல்; தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசுக்கட்சி 20779

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4386

ஐக்கிய தேசியக்கட்சி  - 127

Link to comment
Share on other sites

கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்கால் இல்  ரசாயனக் குண்டு போட்டு வெற்றிய தங்கள் பக்கம் திருப்பியது போன்று அரசு கேபி யின் பேட்டி என்ற கூட்டமைப்புக்கு  எதிரா நச்சு குண்டை போட்டார்கள் ஆனால் நம்ம மக்கள் நம்பவில்லை . இனியாவது கேபிய  தூக்கி பிடிக்கும் புலன் பெயர்ந்த குறுகிய மக்கள் தங்கள் தொடர்புகளை துண்டிக்க வேண்டும்  :lol:

Link to comment
Share on other sites

காங்கேசன்துறைத் தொகுதியில் விரிவான முடிவுகள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி    19,596    81.83%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    4,048    16.90%
Independent Group 7    62    0.26%
Independent Group 6    42    0.18%
Democratic Unity Alliance    41    0.17%
United National Party    35    0.15%
Independent Group 1    24    0.10%
United Socialist Party    20    0.08%
Sri Lanka Mahajana Pakshaya    19    0.08%
Independent Group 3    17    0.07%
Independent Group 8    11    0.05%
Independent Group 9    10    0.04%
Socialist Equality Party    7    0.03%
Democratic Party    5    0.02%
People's Liberation Front    4    0.02%
Jana Setha Peramuna    2    0.01%
Independent Group 2    2    0.01%
Independent Group 4    1    0.00%
Independent Group 5    1    0.00%
Sri Lanka Labour Party    0    0.00%
செல்லுபடியான வாக்குகள்    23,947    92.03%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,074    7.97%
அளிக்கப்பட்ட வாக்குகள்    26,021    42.52%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    61,196*    
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மாத்தளை மாவட்டம் றத்தோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள்

 

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் றத்தோட்டை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29,568
 
ஐக்கிய தேசியக் கட்சி - 14,103
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5, 040
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட துருவம் விழித்திருக்கும் வேளையில், தென் துருவம் உறங்குகின்றது!

 

உதயன் பத்திரிகை, போலியாக வெளியிடப்பட்டதைக் கண்டு, சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கென மிஞ்சியிருந்த சனநாயகமும் செத்து விட்டது, என்ற சோர்வோடு படுக்கைக்குச் சென்றேன்!

 

விடிகாலையில், யாழைத் திறந்து பார்த்தால், நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது!

 

ஊர்காவற்துறை முடிவுகளை வாசித்து விட்டு, என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொள்கின்றேன்!

 

இந்த தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்கிய அனைத்துக் கள உறவுகளுக்கும். ஆனந்தக் கண்ணீருடன் நன்றிகள்! 

 

Link to comment
Share on other sites

வடக்கு மாகாணசபையின் 36 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் (யாழ்ப்பாணம் - 14, கிளிநொச்சி - 03, முல்லைத்தீவு - 04, வவுனியா - 04, மன்னார் - 03, போனஸ் ஆசனங்கள் - 02) பெற்றுள்ளது. 6 ஆசனங்களை மட்டும் பெற்று மண்டியிட்டது மஹிந்த அரசு....

Link to comment
Share on other sites

வட துருவம் விழித்திருக்கும் வேளையில், தென் துருவம் உறங்குகின்றது!

 

உதயன் பத்திரிகை, போலியாக வெளியிடப்பட்டதைக் கண்டு, சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கென மிஞ்சியிருந்த சனநாயகமும் செத்து விட்டது, என்ற சோர்வோடு படுக்கைக்குச் சென்றேன்!

 

விடிகாலையில், யாழைத் திறந்து பார்த்தால், நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது!

 

ஊர்காவற்துறை முடிவுகளை வாசித்து விட்டு, என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொள்கின்றேன்!

 

இந்த தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்கிய அனைத்துக் கள உறவுகளுக்கும். ஆனந்தக் கண்ணீருடன் நன்றிகள்! 

 

புங்கையூரான் நீங்கள் எப்படி தூங்கப்  போக முடியும். தமிழின வரலாற்றிலை நீங்கள் செய்த மாபெரும் துரோகத்தை வரலாறு மன்னிக்காது. :D  :D  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்கால் இல்  ரசாயனக் குண்டு போட்டு வெற்றிய தங்கள் பக்கம் திருப்பியது போன்று அரசு கேபி யின் பேட்டி என்ற கூட்டமைப்புக்கு  எதிரா நச்சு குண்டை போட்டார்கள் ஆனால் நம்ம மக்கள் நம்பவில்லை . இனியாவது கேபிய  தூக்கி பிடிக்கும் புலன் பெயர்ந்த குறுகிய மக்கள் தங்கள் தொடர்புகளை துண்டிக்க வேண்டும்  :lol:

கேபிய‌ தமிழ் மக்கள் கணக்கில் எடுப்பது இல்லை இப்ப ....ஒரு சில அரசியல் வாதிகளின் நினைப்பு மக்கள்  1960தில் வாழுகிறார்கள்  என்று..அவங்களுக்கு தெரியாது இது விஞ்ஞான உலகம் என்று...SMS...facebook இதே போதும் உவங்கட நாத்தத்தை வெளியில் கொண்டு வர‌ :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.