Jump to content

ஊர் கூடி இழுத்த தேர் இருப்பை அடைந்தது.. எனி..??!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

karuppy.jpg?w=464&h=261

 

வெல்ல வையுங்கள்
வெட்டி வீழ்த்துகிறோம்
வீர வசனம் பேசி
இரத்தத் திலமிட்டு
வீடுகள் தோறும்
தன்னாட்சிக்கு உரிமை கேட்டு
உரிமையோடு வர..
மக்களோ
அள்ளிக் கொடுத்து
நம்பிக் கெட்ட
காலம் ஒன்று..
70 களில் வந்து போனது..!
 
மீள அது
மீளாதிருக்க
தம்பி வழியில்
போர்த் தரையில்
இட்ட விதை..
மக்கள் இரத்தம் சொரிந்து
மாவீரர் தியாகத்தால்
உரமிட்டு
வளர்த்து விட்டது
தமிழ் தேசிய விருட்சமாகி
இன்று..
ஊர் கூடி
தேர் இழுக்கும்
தேரடியாகி நிற்குது.
 
மீண்டும்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்”
அண்ணல் திலீபனின்
நோன்பிரு நாளில்
ஓர் வெற்றிச் செய்தி
“கோட்டை வீழ்ந்ததாம்”
என்றது போல் ஆனது
செவிகள் இனிக்க
கடந்து போன
துயரங்கள் நினைவில் ஆட..!
 
பிபிசி.. ராய்டர்
எல்லாம் உற்று நோக்க
நடந்து முடிந்திருக்கு
தேரோட்டம்.
“தன்னாட்சியை விரும்பும்
தமிழர்கள்..”
“அதையே கேட்டனர்
தமிழ் புலிகள்”
செய்திகள்…
நாம் அன்று கத்திச் சொல்ல
கேட்டிராத செவிகளும்
இன்று பேசுது அதையே..!
 
முள்ளிவாய்க்கால் முடிவல்ல..
தம்பி ஒன்றும்
மிச்சம் வைக்காமல் போகல்ல..
உலகம் இன்று
எம்மை உற்று நோக்க
தமிழ் தேசிய விதை விதைத்து
விருட்சமாக்கி விட்டதும்..
தம்பி செய்த காரியமே..!
நாம் – இன்று
பாதகர்
பாதையில் குவிந்து நிற்கவும்
துணிந்து எழுந்து
தேரிழுத்து முடிக்கவும்
தம்பி தந்த..
நம்பிக்கை தான்
துணை நின்றது.
 
தேரிழுத்து
அரோகரோச் சொல்லி ஓட
இது..
அம்மன் கோவில் தேரோட்டம் அல்ல.
மக்கள் எதிர்பார்ப்பு.
மாவீரர் இலக்கு.
வென்று காட்டுங்கள்
அள்ளி வழங்கிய
வாக்குறுதிகளை
சர்வதேசத் துணை வைச்சே..!
 
அண்டையரின்
தொப்புள் கொடி உறவுகளின்
தூர உறவுகளின்
அன்பும் அரவணைப்பும்
எமதானால்
வெற்றி என்பது…
நிச்சயம் ஆகும்..!
புரிந்து நின்று
நிதானமாய் செயற்படுங்கள்..!
மீண்டும் ஒருமுறை..
மக்கள் ஆணையை
ஆற்றில் விட்ட
மண் குதிரை
ஆக்க வேண்டாம்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கரன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பிற்கு நன்றிகள்!

இந்த உண்மையை வெற்றிபெற்றோர் உழைத்தோர் மற்றும் தமிழரால் நிராகரிக்கப்பட்ட தமிழர்களென அனைவரும் இனியாவது புரிந்துகொண்டு ஒரே திசையில் விடியலை நோக்கி நகர உழைப்தே மக்களின் ஆணைக்கான மதிப்பாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நொச்சியார் உங்கள் கருத்திற்கு. :)

Link to comment
Share on other sites

ந்ல்ல கவிதை நெடுக்கால போவான்!

 

மண்குதிரை ஆகிவிடுவோ என்ற மக்களின் சந்தேகத்தை ஆரம்பத்திலேயே கிளிளியெறியும் விதமான செயற்பாடுகளை முன்வைக்க வேண்டியது  கூட்டமைப்பினரின் முதற்பணியாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரிழுத்து
அரோகரோச் சொல்லி ஓட
இது..
அம்மன் கோவில் தேரோட்டம் அல்ல.
மக்கள் எதிர்பார்ப்பு.
மாவீரர் இலக்கு.
வென்று காட்டுங்கள்
அள்ளி வழங்கிய
வாக்குறுதிகளை
சர்வதேசத் துணை வைச்சே..!$

 

 

எவருமே எழுதுகிறார்கள் இல்லையே என

மனவருத்தத்துடன்  வந்தேன்

நான் கிறுக்கமுதல்

 

நன்றாக எழுதியுள்ளீர்கள்

நன்றி  தம்பி

 

விக்கினேசுவரனும்   உணர்ந்து   சொல்லியுள்ளார்

மாபெரும் பொறுப்பை

மக்கள்  தம்மிடம்  ஒப்படைத்திருப்பதை

மாபெரும் வெற்றி  உணர்த்துவதாக...

தமிழ்மக்கள்   விழிப்பாக உள்ளனர் என்பதும்

மாவீரர் கனவை மறவாதுள்ளனர் என்பதும் அனைவருக்கும் எச்சரிக் கைதரும் செய்தி.

பார்க்கலாம்...

Link to comment
Share on other sites

கூட்டமைப்புக்கு தெரியும் மீண்டும் ஒரு தேர்தல் வரும் என்பதும் மக்கள் கைகளில் தீர்ப்பு இருக்கும் என்பதும் அதனால் அவர்கள் தடம் மாறாமல் இருப்பார்கள் பார்க்கலாம் .

 

நல்ல ஒரு கவிதை அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை அவர்கள் வழியில் செல்ல விட்டாலும் மக்களிடம் அவர்களை கட்டுப்படுத்தும்.. கடிவாளம் இருக்க வேண்டும்...! அதில் புலம்பெயர் மக்களும் தாயக மக்களும் இணைந்திருந்து செயற்படனும். அரசியல்வாதிகளை முற்றாக நம்புவதும் ஆபத்தானது. நம்பாமலும் இருக்க முடியாது. புலம்பெயர் மக்களின் அரசியல் என்பது தொடர்ந்து தன்னாட்சிக்கான தமிழீழத் தாயகத்திற்கான.. சர்வதேச ஆதரவு.. போர்க்குற்ற விசாரணை.. சிங்கள பேரினத் தேசியம் முன்னெடுக்கும்.. இன அழிப்பை இனங்காட்டுதல் என்றிருந்தால்.. அன்றி கூட்டமைப்பு உள்ளூரில்.. அரசியல் செய்வது சவாலான ஒன்றாகவே இருக்கும். கூட்டமைப்பின் அரசியல்.. இயங்கு சக்தியாக மீண்டும் புலம்பெயர் மக்களே தாயக மக்களோடு இணைந்திருக்க வேண்டி உள்ளது. :icon_idea:

 

இத்தலைப்பில்.. கருத்துக்களை, விருப்புக்களை பகிர்ந்து கொண்ட..உறவுகளுக்கு மிக்க நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------ 

அண்டையரின்

தொப்புள் கொடி உறவுகளின்

தூர உறவுகளின்

அன்பும் அரவணைப்பும்

எமதானால்

வெற்றி என்பது…

நிச்சயம் ஆகும்..!

புரிந்து நின்று

நிதானமாய் செயற்படுங்கள்..!

மீண்டும் ஒருமுறை..

மக்கள் ஆணையை

ஆற்றில் விட்ட

மண் குதிரை

ஆக்க வேண்டாம்..!

 

 

நல்லதொரு கவிதை நெடுக்ஸ்.

மக்கள் கொடுத்த ஆணையை... கூட்டமைப்பு உதாசீனம் செய்யப்படாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தொடர்ந்து நாம் ஆதரவு கொடுப்போம் கவிதைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கவிதை நெடுக்ஸ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்து மற்றும் சுவி அண்ணா. தங்கள் வருகைகளுக்கும் கருத்திற்கும். :)

Link to comment
Share on other sites

 

karuppy.jpg?w=464&h=261

 

வெல்ல வையுங்கள்

வெட்டி வீழ்த்துகிறோம்

வீர வசனம் பேசி

இரத்தத் திலமிட்டு

வீடுகள் தோறும்

தன்னாட்சிக்கு உரிமை கேட்டு

உரிமையோடு வர..

மக்களோ

அள்ளிக் கொடுத்து

நம்பிக் கெட்ட

காலம் ஒன்று..

70 களில் வந்து போனது..!

 

மீள அது

மீளாதிருக்க

தம்பி வழியில்

போர்த் தரையில்

இட்ட விதை..

மக்கள் இரத்தம் சொரிந்து

மாவீரர் தியாகத்தால்

உரமிட்டு

வளர்த்து விட்டது

தமிழ் தேசிய விருட்சமாகி

இன்று..

ஊர் கூடி

தேர் இழுக்கும்

தேரடியாகி நிற்குது.

 

மீண்டும்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்”

அண்ணல் திலீபனின்

நோன்பிரு நாளில்

ஓர் வெற்றிச் செய்தி

“கோட்டை வீழ்ந்ததாம்”

என்றது போல் ஆனது

செவிகள் இனிக்க

கடந்து போன

துயரங்கள் நினைவில் ஆட..!

 

பிபிசி.. ராய்டர்

எல்லாம் உற்று நோக்க

நடந்து முடிந்திருக்கு

தேரோட்டம்.

“தன்னாட்சியை விரும்பும்

தமிழர்கள்..”

“அதையே கேட்டனர்

தமிழ் புலிகள்”

செய்திகள்…

நாம் அன்று கத்திச் சொல்ல

கேட்டிராத செவிகளும்

இன்று பேசுது அதையே..!

 

முள்ளிவாய்க்கால் முடிவல்ல..

தம்பி ஒன்றும்

மிச்சம் வைக்காமல் போகல்ல..

உலகம் இன்று

எம்மை உற்று நோக்க

தமிழ் தேசிய விதை விதைத்து

விருட்சமாக்கி விட்டதும்..

தம்பி செய்த காரியமே..!

நாம் – இன்று

பாதகர்

பாதையில் குவிந்து நிற்கவும்

துணிந்து எழுந்து

தேரிழுத்து முடிக்கவும்

தம்பி தந்த..

நம்பிக்கை தான்

துணை நின்றது.

 

தேரிழுத்து

அரோகரோச் சொல்லி ஓட

இது..

அம்மன் கோவில் தேரோட்டம் அல்ல.

மக்கள் எதிர்பார்ப்பு.

மாவீரர் இலக்கு.

வென்று காட்டுங்கள்

அள்ளி வழங்கிய

வாக்குறுதிகளை

சர்வதேசத் துணை வைச்சே..!

 

அண்டையரின்

தொப்புள் கொடி உறவுகளின்

தூர உறவுகளின்

அன்பும் அரவணைப்பும்

எமதானால்

வெற்றி என்பது…

நிச்சயம் ஆகும்..!

புரிந்து நின்று

நிதானமாய் செயற்படுங்கள்..!

மீண்டும் ஒருமுறை..

மக்கள் ஆணையை

ஆற்றில் விட்ட

மண் குதிரை

ஆக்க வேண்டாம்..!

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.